Tuesday, April 7, 2020

சோப்பின் நட்பால் பிழைக்கும் நம் உயிர்


சோப் குறித்தும் அது எப்படி வேலை செய்கிறது என்பதையும் பள்ளியில் படித்திருப்போம். மறந்திருப்போம்

சோப் போட்டு கை கழுவுஙககள் என்கிறாரகள்..  சும்மா கை கழுவினால் போதாதா ? போதாது

ஏன் ?

எண்ணெயும் தண்ணீரும் ஒன்றுடன் ஒன்று கலக்காதல்லவா

ஒரு குடுவையில் இரண்டையும் ஊற்றினால் தண்ணீர் மீது அடுக்கி வைத்ததுபோல எண்ணைய் மிதக்கும்.

சோப்புக்கரைசலை ஊற்றினால் இரண்டும் கலந்து விடும்

எப்படி நடக்கிறது



சோப்பின் மூலக்கூறை ஒரு சின்ன புழுவாக உருவகித்துக கொள்ளுங்கள். அதன் தலைப்பகுதி தண்ணீரை நேசிக்கும். வால்ப்பகுதி தண்ணீரை வெறுக்கும்

தண்ணீரை வெறுக்கும்பகுதி எண்ணெயுடனும் நேசிக்கும்பகுதி தண்ணீருடனும் சேரும். இப்படியாக இரண்டையும் சோப்புக்கரைசல் இணைக்கிறது

எண்ணெய் படிந்த கையை தண்ணீரில் கழுவினால் எண்ணெய் போகாது. காரணம் அவற்றின் மூலக்கூறுகளுக்கு தண்ணீரைப் பிடிக்காது. எனவே தண்ணீரில் கரைந்து வெளியேறாது. கையில் மண் இருந்தால் தண்ணீரில் கழுவினால் போய் விடும். மண் மூலக்கூறுகள் தண்ணீரின் நண்பர்கள்

எண்ணெய் படிந்த கரத்தை சோப்பில் கழுவும்போது , சோப் மூலக்கூறின் தலை எணணையைப் பிடித்துக கொள்கிறது..  இப்போது தண்ணீரால் கழுவினால் வால்ப்பகுதி தண்ணீருடன் அடித்துச் செல்லப்படும்போது , தலையையும் அது,கவ்வியுள்ள எண்ணெயையும் இழுத்துச் செல்கிறது. கை சுத்தமாகிறது

இதனால்தான் சோப்பு போட்டு கை கழுவச் சொல்கிறார்கள்

இரு தரப்பினருடனும் நட்பு பாராட்டும் சோப்பின் தன்மை  நம் உயிர் காக்கிறது

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா