Sunday, April 26, 2020

எழுகதிர் சூரியனை நோக்கிய பயணம்

ஜெயமோகனின் எழுகதிர் சிறுகதை ஒரு நாவலுக்கான சாத்தியங்களைக் கொண்டது.  பிற்பாடு நாவலாக எழுதப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

வசதியான குடும்பத்தில் மரியாதைக்குரிய ஒரு தந்தைக்கு மகனாக பிறந்தவன். வசதியான வாழ்க்கையும் வசதிகளும் அவனை ஊதாரி ஆக்கிவிடுகின்றன. குற்றச்செயகளில் ஈடுபடுகிறான். அதைக்க்கண்டிக்க தந்தையையே அடித்து , கொல்ல முயன்று , கடைசி கணத்தில் விட்டுவிடுகிறான்
அவரை காயப்படுத்திய குற்றவுணர்வு அவனை வாழ்நாள் முழுக்க துரத்துகிறது

முழு நேரமாக குற்றச்செயல்களில் ஈடுபடுகிறான்

அப்போது ஶ்ரீகண்டன் என்ற இன்னொரு குற்றவாளியின் சிநேகிதம் கிடைக்கிறது. அவனது ஆளுமையில் மயங்கி நண்பனாகிறான். அவனை ஆராதிக்கிறான்
கோயில் புதையலை கொள்ளையடித்து விட்டு வெளிநாடு தப்பிச் செல்கின்றனர் . வெகு அபூர்வமான வைரம் , தங்கம் என"கிடைத்துள்ளது. அதில் அருணபிந்து என்ற ஒளிமிக்க வைரத்தில்தான் ஶ்ரீக்கு முழு ஆர்வம். பிற,அனைத்தையும் கூட்டாளிக்கு தந்து விட சித்தமாக இருக்கிறான்
ஒரு கட்டத்தில் இருவரும் எதிரிகள் வலையில் சிக்குகின்றனர். இவனை பிடித்து விடுகின்றனர். அருணபிந்து வைரத்துடன் தப்ப முயன்ற ஶ்ரீயை கொன்று விட்டார்கள் என தெரிய வருகிறது

அதன் பின் பல போராட்டங்களுக்குப்பிறகு இந்தியா வந்த விடுகிறான்

சில ஆண்டுகள் கழித்து தற்செயலாக டிவி பார்க்கும்போது கீழ்திசை நாட்டின் தெருவொன்றில் ஶ்ரீ நடந்து செல்வதை காண்கிறான்
ஶ்ரீக்கு மரணமில்லை. வைரத்தின் ஒளி அவனுள் துலங்குவதைப் பார்க்க முடிகிறது

கதை இப்படி முடிகிறது

"அவனிடம் அந்த மணி இருக்கிறது. அருணபிந்து. அல்லது அதன் ஒளி மட்டுமாவது அவனிடம் இருக்கிறது"

அவன் கிழக்குநோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறான். இதோ ஐம்பதாண்டுகள் ஆகிவிட்டன. ஒருவேளை அவன் இன்னும் சென்றுகொண்டேதான் இருப்பான்."

கதை எனக்கு ஜேகிருஷ்ணமூர்த்தியை நினைவுபடுத்தியது

அவர் கேட்பார் " ஐயன்மீர். ஏன் நம்மில் சிலர் மட்டுமே செயல்புரிவராக இருக்கிறோம். பலர் பார்வையாளர்களாக இருப்பதிலேயே மகிழ்வதன் அபத்தம் ஏன் புரியவில்லை. வாழ்க்கை எனும் அசாதாரண விஷயத்தை தவறாக பயன்படுத்துவதை ஏன் உணர மறுக்கிறோம் "என்று கேட்பார் அவர்

சற்றோப்ப ஒரேமாதிரியான இரண்டு பாத்திரங்கள் கதையில் வருகின்றன. ஒருவன் சூரியனாய் சுடர்விடுகிறான். இன்னொருவன் நரகத்தில் உழல்கிறான்

இருவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.  பெரிய குற்றச்செயல் ஒன்றால் திசை மாறியவர்கள். முழுநேர குற்றவாளிகள். 

ஆனால் அவர்கள் இருவரையும் ஓர் அம்சம் பிரிக்கிறது

அது என்ன அம்சம் என்பதை இணைய மொண்ணைகளை , இணைய போராளிகளைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்

சிலரது முகநூல் பதிவு இப்படி இருக்கும்

பேருந்தில் நல்ல கூட்டம். அனைவருக்கும் கஷ்டம் என்றாலும் பெண்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். அதைப் பார்த்தும் பார்க்கமலும் சில ஆண்கள் லேடீஸ் சீட்டை ஆக்ரமித்திருந்தனர். அவர்களுக்குதான் அறிவில்லை.  வேறு யாராவது அதைக் கண்டிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். யாருமே உதவவில்லை. மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது

  இப்படி ஒரு போஸ்ட் போடுவார்கள். லைக்குகள் குவியும்.  உங்கள் உணர்வு புரிகிறது நண்பா என பலர் உருகுவார்கள்

சார் கொஞ்சம் எந்திரிங்க லேடீஸ் உட்காரட்டும் என ஒரு வார்த்தை சொன்லால் போதும். பிரச்சனை முடிந்து விடும். அதை செய்ய மனமில்லாமல் , தான் மனரீதியாக கஷ்டப்பட்டேன் என்பதை ஒரு சாதனையாக எழுதுவதை அடிக்கடி பார்க்கலாம்

 தெருவில் ஓடும் சாக்கடைப்பிரச்சனையை கவுன்சிலர் பார்வைக்கு கொண்டு செல்லும் முனைப்பு இருக்காது. கிழக்கு ஆப்ரிக்க குழந்தைகளை எண்ணி மனம் துடிதுடிப்பதாக எழுதுவார்கள்

இது பெரும்பாலானோர் மனநிலை. அடுத்த கட்டத்தினர் ஒரளவு உழைப்பாரககள். ஆனால் முழுமையாக தம்மை ஒரு செயலுக்கு ஒப்புக்கொடுக்க முடியாதவர்கள்

 வெகு வெகு சிலர்தான் முழுமையாக தமது செயலில் கரைந்து அதுவாகவே மாறுபவர்கள். இவர்கள் இந்த இரண்டாம் கட்டத்தினர் மீது பரிவு கொண்டிருப்பார்கள்.  இரண்டாம் கட்டத்தினர் இவர்கள் மீது மரியாதை வைத்திருப்பார்கள்.

எனவே இந்த உறவு எப்போதுமே சுவாரஸ்யமானதுதான்

இந்தக்கதை இப்படிப்பட்ட, உறவைத்தான் பேசுகிறது

கதை சொல்லியின் கெத்து என்பதே , தன் அப்பாவுக்காக எப்படியெல்லாம் வருந்துகிறேன் தெரியுமா என்ற குற்றஉணர்ச்சிதான். அப்படி வருந்துவதையே தனது மேன்மை என நினைத்துக் கொள்கிறான்

இதே போன்ற தவறை செய்திருக்க வாய்ப்புள்ள ஶ்ரீ , அவனது ஒவ்வொரு செயலுக்கும் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்துக்கும் பொறுப்பேற்று சூரியனை நோக்கி பயணிக்கிறான்














No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா