Thursday, April 9, 2020

சுஜாதா மாணவரின் சிறுகதை தொகுப்பு


தமிழ் எழுத்துலகில் மகத்தான சாதனையாளர் சுஜாதா.

அவர் என்னவெல்லாம் யோசித்தார் , அவரை எழுத்தாளராக செதுக்கிய நிகழ்வுகள் யாவை போன்றவற்றையெல்லாம் சொல்லத்தக்க நபராக நம்மிடம் இருப்பவர் சுஜாதா தேசிகன். இப்படி தன்,வாழ்வு ஆவணமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் சுஜாதா இவரிடம் நிறையப் பேசியிருக்கிறார்.

சுஜாதாவுடன் இப்படி நேரம் செலவிட வைண்டும் என்பதற்காகவே , வளமான வெளிநாட்டு வாழ்க்கையை துறந்தவர் இவர் . சுஜாதாவும் இவரை மட்டுமே அணுக்கத் தோழராக அங்கீகரித்து இருந்தார்

சுஜாதா மறைவுக்குப்பின் இவரை வைத்து சுஜாதா பற்றிய அரிய ஆவண நூல்களைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் ஜாதிய வன்மங்கள் , குறுகிய மனம் , அரசியல் போன்ற காரணங்களால் அது நடக்கவில்லை. சில அரசியல்வாதிகள் தமது தொடர்புகளை வைத்து தம்மை சுஜாதாவின் ஏஜெண்டுகளாக முன்நிறுத்தி ஊரை ஏமாற்றுகிறார்கள்

சுஜாதா பற்றிய கட்டுரைகள் மட்டுமல்ல , தேசிகனது எல்லா அபுனைவுகளுமே அருமையாக இருக்கும்.

குமுதம் , கல்கி , விகடன் போன்ற பிரபல இதழ்களில் வெளியாகும் இவரது கதைகள் நன்றாக இருந்தாலும் , ஒட்டுமொத்த தொகுப்பாக இவரது கதைகளை படித்தால்தான் இவரை மதிப்பிட முடியும்

எனவே அப்பாவின் ரேடியோ என்ற சிறுகதை தொகுப்பை படித்தேன்

படிக்க ஆரம்பித்தால் முழு தொகுப்பையும் ஒரே மூச்சில் படித்து விடலாம். அந்த அளவுக்கு சுவாரஸ்யம் , வார்த்தைச் சிக்கனம் , சூழலின் சித்தரிப்பு , பாத்திரமாக்கல் என சுஜாதாவின் நேரடி மாணவன் என்பதை நிரூபிக்கிறார்

இந்த நல்ல தன்மைகளை வலுவற்ற கதைக்கருவில் வீணாக்குவதும் நடந்திருக்கிறது. இறுதி திருப்பத்தை மட்டுமே நம்பி எழுதுவதால் இந்த விபத்து நிகழ்கிறது

23 கதைகளில் மூன்று கதைகள் இந்த வகையில் வருகின்றன. சுஜாதா இருந்திருந்தால் அந்த கதைகளை தொகுப்பிலிருந்து நீக்க சொல்லியிருப்பார்

வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட கணத்தை"கணத்தின் ஒரு துளியை மட்டும் சொல்வது சிறுகதைகளுக்கே உரிய சிறப்பம்சம். அந்த பாணியிலான நல்ல கதைகள் சில இருக்கின்றன.

படிமங்களை , குறியீடுகளை செயற்கையாக உருவாக்குவது நல்லதல்ல. இயல்வாக எழுதும்போது பல்லாயிரம் ஆண்டுகளாக நம் ஜீனில் உறைந்துள்ள மனப்பதிவுகள் குறியீடுகளாக வெளிவரும்
அந்த வகையில் அப்பாவின் ரேடியோ , தோசை , பெருங்காயம் , பிப்ரவரி மழை , துக்கடா ஆகிய கதைகளை இலக்கிய ரீதியாக வெற்றிபெற்ற கதைகள் எனலாம்

குறிப்பாக பெருங்காயம் என்ற கதையை இன்றைய சூழலில் அனைவருமே படிக்க வேண்டும்

வெளிநாட்டில் வசதியாக வாழும் பிராமண இளைஞன் தன் தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவரது பூர்விக வீட்டை தேடிக் கண்டுபிடித்து வாங்கும் பொருட்டு தமிழகம் வருகிறான்

பேருந்தில் பக்கத்து சீட்டில் ஓர் இஸ்லாமியர். ஏதோ ஒரு ஒவ்வாமை. வேண்டா வெறுப்பாக அமர்ந்துள்ளான். அவர் பேச்சுக் கொடுத்தும் பேசுவதில்லை

கடைசியில் அவாவரும் அதே கிராமம்தான் என தெரிகிறது. அவர் உபசரிப்புக்கிணங்கி அவர் வீட்டிலேயே குளித்து தயாராகிறான். கோயில் திறக்கும் நேரம் சாமி கும்பிட்டு வாங்க என,அனுப்புகிறார்

இது எங்க ஊர்  கோயில் திறப்பு, பிரசாதம் , உற்சவம் எல்லாம் தனக்கு தெரியும் என அந்த ஊர்க்காரன் என்பதை பெருமையாக சொல்கிறார்

அவன் தேடி வந்த வீடு அவரது தம்பியின் வீடுதான் என தெரிய வருகிறது.
தீ
எவ்வளவு காசு ஆனாலும் தந்து வாங்கி கொள்கிறேன் என கேட்கிறான்

ஆலயத்தில் எழுதியிருக்கே..ஆழ்வார் பாசுரம்  திருவுக்கும் திருவாகிய செல்வா
அதுபோல இந்த ஊருக்கு எந்த காசும் ஈடாகாது.  இந்த ஊர் , சூழல் , கோயில் இதையெல்லாம் விட்டு போக முடியாது. நீங்க எப்ப வேணும்னாலும் விருந்தாளியா வாங்க . நம்ம வீட்லயே தங்கிக்கோங்க என இன்முகத்துடன் சொல்லி அனுப்புகிறார் இஸ்லாமியர்

இயல்பாக மனித இயல்பை சொன்ன கதை .

கடைசியாக அவரது தாயார் ஒன்று சொல்வார். அதுதான் கதையின் சிகரம்

இவற்றைத்தவிர பூவா தலையா என்ற யதார்த்தவாத கதையும் சிறப்பு

சுஜாதாவை பெருமையடைச் செய்யும் தொகுப்பு
சுஜாதாவின் சகோதரின் முன்னுரை கூடுதல் சிறப்பு



No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா