Showing posts with label சமூக நீதி. Show all posts
Showing posts with label சமூக நீதி. Show all posts

Sunday, June 9, 2019

அண்ணல் அம்பேத்கரின் வெற்றி - ஜெயமோகன் சிலிர்ப்பூட்டும் விளக்கம்

2019 ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது கவிஞர் ச.துரைக்கு வழங்கப்பட்டது .. இதற்கான விழா இன்று சீரும் சிறப்பும் இலக்கியமும் இனிமையுமாய் இளமையும் புதுமையாய் நடந்தது


இந்த விருது வழங்கு விழாவில் கூடுதல் அம்சமாக ஒரு சிறப்பு அமர்வு உண்டு. விழாவுக்கு முன்பு சிறுகதைகள் குறித்த ஒரு விவாத அரங்கு

விருது விழா மாலையில் என்றால் , இந்த விவாத அரங்கு மதியம் ஆரம்பிக்கும்..

கொளுத்தும் வெயிலிலும் அரங்கு நிறைந்து இருந்தது மகிழ்ச்சி அளித்தது/


சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய  –வெளிச்சமும் வெயிலும் 

அனோஜன் பாலகிருஷ்ணனின்   பச்சைநரம்பு 
சுரேஷ் எழுதிய  பாகேஸ்ரீ 



ஆகியவை குறித்து முறையே காளிபிரசாத் , சுனில் கிருஷ்ணன் , விஷால் ராஜா பேசினார்கள்

பேசினார்கள் என்பதை விட ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினர் எனலாம்
பலரும் ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேட்டனர்.. ஜெயமோகனும் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கேள்விகள் கேட்டார்..
சிறுகதைக்கும் நாவலுக்கும் இடையேயான வேறுபாடு , என்னதான் அசோகமித்திரன் மேதை என்றாலும் அவர் எழுத்தை அளவீடாக கொண்டு பிறர் கதையை மதிப்பிடக்கூடாது என்ற கருத்தாக்கம் , கதையின் அழகியல் , அழகியலே கதைக்கு எதிராக மாறும் சூழல் என பல விஷ்யங்கள் விவாதிக்கப்பட்டன

விஷால் ராஜா , அசோகமித்திரன் குறித்து ஆர்வமாக பேசி முடித்ததும் பலர் கேள்விகள் கேட்டனர்.

அப்போது மைக்’ கை வாங்கிய  வழக்கறிஞரும் , சமூக ஆர்வலருமான கிருபா முனுசாமி  தன் சார்பில் ஒரு கேள்வியை கேட்டார்
ஒடுக்கப்பட்டோர்கள் , விளிம்பு நிலை மக்கள் ஆயுதமாக நாவல் பயன்பட முடியாது என்று சிலர் சொல்வது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்றார்.அதாவது நாவல்கள் மூலம் சமூக நீதி ஏற்படும் சூழல் உள்ளதா என்பது அவர் கேள்வி
இலக்கியம் பேசிக்கொண்டு இருக்கும் ஒரு பச்சைக்குழந்தையிடம் இப்படி ஒரு அரசியல் கேள்வியா என அரங்கம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது..  இன்னும் சொல்லப்போனால் அவர் அருகில் இருந்த கவிதாமுமே சற்று திகைத்தார்
ஆனாலும் விஷால் ராஜா சளைக்காமல் பதில் சொன்னார்..

 நீங்கள் மேற்கோள் காட்டுவது போல யாரும் சொன்னதாக தெரியவில்லை.. ஆனாலும் , இலக்கியம் ஒரு பிரச்சார ஆயுதம் இல்லை என்றாலும் சமூக மாற்றங்களுக்கு மறைமுகமாக பணியாற்றி வருகிறது என்றார்

உண்மையில் நானேகூட , சிறுகதை குறித்தான அரங்கில் இந்த கேள்வி தேவை இல்லையோ என நினைத்தேன்

ஆனால் இந்த் கேள்வி ஆழமான விவாதங்களை உருவாக்கியது.. அந்த அரங்கு முடிந்த பின் கொடுக்கப்பட்ட தே நீர் இடைவேளையில் ஆங்காங்கு இது குறித்த விவாதங்கள் நடந்தன
ஜெயமோகனிடமே கிருபா அந்த கேள்வி
யை கேட்டார்.. கவிதாவும் அவரும் ஜெயமோகனுடன் தே நீர் அருந்தியபடி உரையாடிய ஒவ்வொரு விஷ்யமுமே மேடையில் பேசி ஆவணப்படுத்தப்பட வேண்டியவை.. 
அந்த காலத்தில் இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதை போட்டி போட்டுக்கொண்டு வலைப்பதிவேற்றம் செய்வதில் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவியது. அதன் பின் எல்லா நிகழ்ச்சிகளுமே ஒளிப்பதிவு செய்யப்பட்டு யூட்யூபில் கிடைப்பதால் , வலைப்பதிவுக்கு தேவை இல்லாமல் போய் விட்டது.. ஆனாலும் மேடைக்கு அப்பாற்பட்டு நிகழும் இது போன்ற விவாதங்களும் முக்கியமானவையே

கதை என்பதன்  வலிமை குறித்தும் அதன் ஆற்றல் குறித்தும் ஜெயமோகன் விரிவாக பேசினார்
கதை சொல்லல் என்பதன் மூலம்தான் மனித இனமே பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிர்களை வெல்ல முடிந்தது... மனிதனை விட உடல் ரீதியாக அறிவு ரீதியாக சிறப்பான மற்ற உயிரிகள் இருந்தன. ஆனால் அவற்றுக்கெல்லாம் தன் அனுபவங்களை கற்பனை கலந்து கதையாக தன் சகாக்களுக்கு சொல்லும் திறன் இல்லை.. கற்பனைகளாலும் கதைகளாலும் மட்டுமே மனிதன் உலகை வென்றான் என்கின்றன ஆய்வுகள்

இதை ஒட்டி இலக்கிய ரீதியாக ஜெயமோகன் சொன்னார்.. ஒரு விஷயத்தை கதையாக சொல்லும்போது அது எப்படி விரைவாக பரவுகிறது என்பதை , யாரோ டீச்சர் சொன்னதாக , தன்னிடமே யானை டாக்டர் கதை ஒரு குழந்தை மூலம் வந்தடைந்ததை சொன்னார்

அண்ணல் அம்பேத்கர் எப்படி ஆதிக்க சக்தியினரின் மொழியான சமஸ்கிருதம் மூலமாகவே அவர்களை வெல்ல முடிந்தது என்பதை விளக்கியது ஆச்சர்யமாக இருந்தது
ஆதிக்க சக்தியினர் வேறு ,, நாம் வேறு என எல்லை வகுத்துக்கொண்டு ஒதுங்கிப்போகாமல் , அவர்கள் கோட்டைக்குள் ஊடுருவி வெல்வதுதான் சவால்.. அந்த சவாலில் வென்று காட்டியவர் அண்ணல் அம்பேத்கர் என அவர் சொன்னது சிலிர்ப்பாக இருந்தது

கண் பார்வை அற்ற ஒரு,நண்பர் நாவல்கள் படித்து டாக்டர் பட்டம் வாங்கும் சவாலை ஏற்று அதில் வென்றதை ஒரு ரொமாண்டிக் ட்விஸ்ட்டோடு சொல்லி முடித்தார்.
வரலாறு , காதல் , சினிமா  , நவீன மூட நம்பிக்கை , என பல புதிய விஷயங்களை  சொல்லிக்கொண்டே இருந்தார்

அதன் பின் மாலை ஆறு மணிக்கு விருது விழா.
அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசி கைதட்டல் வாங்குவது வட நாட்டு அரசியல்வாதிகள் ஸ்டைல்
அப்படி இல்லாமல் , குறுந்தொகை , ஞானக்கூத்தன் , அக நானூறு , கல்யாண்ஜி , விருது பெறும் துரை உட்பட பலர் கவிதைகளை ஆழமாக விவாதித்து ஆச்சர்யம் அளித்தார் மலயாளக்கவிஞர் ராமன்..
புத்தகம் படிக்க நேரம் கூடி வரவில்லை என சொல்லி விட்டு , குத்து மதிப்பாக பேசுபவர்களை பார்த்துள்ளோம்.. ஒரு மலையாளக்கவிஞர் இவ்வளவு தூரம் நம் தமிழை கவனித்து , அலசி ஆராய்ந்து பேசியது வியப்பளித்தது என்றால் , அப்போது அங்கே நுழைந்த மனுஷ்ய புத்திரனுக்கு வணக்கம் சொல்லி விட்டு ,  அவர் கவிதை ஒன்றையும் எடுத்து சொல்லி சிலாகித்துப்பேசினார்
 நம்மை விட அதிகமாக தமிழை நேசிப்பவர் போல என நினைத்துக்கொண்டேன்
 நமது புகழ் பெற்ற கவிதைகள் சிலவற்றை மலையாளத்தில் மொழி பெயர்த்து மலையாள பாணியில் ஓசை நயத்துடன் பேசி ( பாடிக் ) காட்டினார்
மொழி என்ற வகையில் இரு மொழிகளுக்கும் இடையேயான ஓசை வேறு பாடுகளை உணர முடிந்தது..அரிய அனுபவம்
துரை எந்த விதத்தில் முக்கியமான கவிஞர் ஆகிறார் என்பதை வெகு அழகாக பேசினார் அவர்...
அதன் பின் பேசிய தேவ தேவன் வெகு சுருக்கமாக பேசி அமர்ந்தார்.. முழு நாள் கருத்தரங்கில் பேசுபதற்கு விஷ்யம் அவரிடம் இருந்தாலும் சுருக்கமாக பேசினார்

வாழ்த்துரை வழங்கிய அருணாச்சலம் ஒரு முழுமையான பார்வையை அளித்தார்.. அவர் சொன்னதும்தான் , துரையின் பல நல்ல கவிதைகள் மேலும் தெளிவாகின
 ’
தன் துறை சார்ந்த உதாரணம் சொல்லி , இலக்கிய செயல்பாடுக்ளை விளக்கியது நச் என இருந்தது

கடைசியில் ஜெமோ பேசினார்
ஒரு சிறுமி இயல்பாக நடந்து செல்வதை கட்டுப்படுத்தி , நடப்பதற்கு ஒரு இலக்கண வரையறை கொண்டு வருவது போல , கவிதை என்பதன் இயல்பு தன்மை மாற்றப்பட்டதையும் அதன் பின் அந்த வரையறைகள் உடைக்கப்பட்டதையும் அதை தொடர்ந்து அடைந்து வரும் வளர்ச்சிகளையும் பேசினார்..
படிமம் , மைக்ரோ நேரேஷன் என வெகு எளிமையாக ஆனால் ஆழமாக பேசினார்

படிமம் என்பது ஆரம்பத்தில்  கவனத்தை ஈர்த்தாலும் போக போக , உற்பத்தி சாலையில் உற்பத்தி செய்யப்படுவது போல , சரமாரியாக படிமங்கள் உருவாக ஆரம்பமானதும் அடுத்த கட்டம் தேவைப்பட்டது.. மைக்ரோ நேரேஷன் உருவானது

அதுவுமே மலினமான சூழலில்தான் , இன்றைய கவிஞர்கள் சிலர் கவிதையை , இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் மாபெரும் பணியை செய்கின்றனர் என்றார்
இளம் கவிஞர்களை ஊக்கப்படுத்தும் விருது என்றுதான் பொதுவாக நினைப்போம்

ஆனால் இது ஊக்கப்படுத்தும் விழா அல்ல.. சாதனையாளர்களை , திருப்பு முனை நாயகர்களை அடையாளம் காட்டும் விழா என்று சொல்லி , துரை எந்த விதத்தில் திருப்பு முனை நாயகராகிறார் என விளக்கியது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக இருந்தது
கடைசியில் துரை ஏற்புரை வழங்கினார்

ஆழமான விழாவாக மட்டும் அல்ல.. சூடும் சுவையுமான விழாவாகவும் அமைந்தது














Wednesday, May 29, 2019

சாதி ரீதியாக கிருஷ்ணசாமியை அசிங்கப்படுத்திய நிருபர்- தேவை திராவிட மறுமலர்ச்சி


புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் , தேர்தல் தனக்கு நிறைவு அளிப்பதாக சொன்னார்

முன்பெல்லாம் தான் சார்ந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரிடம் மட்டுமே வாக்கு கேட்க முடியும்.. அவர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள்

ஆனால் கொஞ்சம் கொஞ்சமான நிலை மாறி வருகிறது.. திமுக கூட்டணியில் போட்டியிட்டபோது பல மாறுதல்களை பார்த்தேன்

இன்று முழுக்கவே நிலை மாறி விட்டது...  அனைத்து சமூகத்தினரும் என்னை மரியாதையுடன் பார்க்கிறார்கள்.. அனைவரும் என்னை ஏற்கிறார்கள்...இந்த மாற்றம் ஆரோக்கியமானது.. நல்லதொரு சமூக மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றார்

அப்போது ஒரு நிருபர். அதெல்லாம் இல்லை..  உங்களை ** , **** ( சில சாதிகளை சொன்னார் ) ஏற்கவில்லை.. அதனால்தான் தோற்றீர்கள் என்றார்

 நான் மட்டும் தோற்றிருந்தால் , அப்படி சொல்லலாம்.. ஆனால் ஒட்டு மொத்தமாக எங்கள் அணி தோற்றுள்ளது/ ஆகவே இது சாதி ரீதியான தோல்வி அல்ல..  என்றார் கிருஷ்ணசாமி

அந்த நிருபர் விடாமல் , சாதி ரீதியாக கேட்டு கிருஷ்ணசாமியை அவமானப்படுத்தினார்
கிருஷ்ண சாஇ டென்ஷனாகி , சாதி ரீதியாக தாக்குதல் நடத்தும் உன் உள் நோக்கம் புரிகிறது.. நீ என்ன சாதி என்றார்


பார்க்கும் நமக்கே வருத்தமாக இருந்தது

வளர்ந்து வரும் ஒரு சமூகம்.. அதன் தலைவரை இப்படி அசிங்கபடுத்தும் தைரியம் எப்படி வருகிறது

உட்கட்சி பூசல்களால் , திராவிட இயக்கம் சற்று சோர்ந்துள்ளதால் நடக்கும் விளைவுகள் இவை

ஓர் அண்ணாவோ , எம் ஜீ ஆரோ இருந்திருந்தால் , கண்டிப்பாக இது நடந்திருக்காது

திராவிடம் மீண்டும் உயிர்க்கட்டும்.. சாதி திமிர் ஒழியட்டும்



Wednesday, April 24, 2019

திராவிட இயக்க கொள்கை விளக்கம் ( திக வெர்ஷன் )


 அண்ணாயிசம் என்பது திராவிட கொள்கைகளை சிறப்பாக வரையறுப்பது ஆகும்

ஆனாலும் மற்ற வரையறைகளும் முக்கியமே//

அந்த வகையில் திராவிடர் கழகம் பார்வையில் திராவிட கொள்கைகளை காண்போம்

1, அனைவரும் சமம்’

2 பாலின சமத்துவம்

3சமூக நீதி

4 கடவுள் மறுப்பு

5 எதையும் கேள்வி கேட்டல்

6இந்துத்துவா எதிர்ப்பு

7 அறிவியலை ஏற்றல்

8 தீண்டாமை ஒழிப்பு

9 தனியார் துறை உட்பட அனைத்திலும் ஒடுக்கப்படோருக்கான உரிமை

10 ஆண் பெண் நிகர்

11 அனைத்து மத வழிபாடுகளிலும் பெண்களுக்கு அர்ச்சனை உரிமை

12 ஓரினச் சேர்க்கை உரிமை

13 கிராம நகர பேதமின்மை

14 ,மத பேதமினமை

15 அனைத்தும் ஆட்சி மொழிகள் ,ஆங்கிலம் தொடர்பு மொழி

16பொருளாதார சமத்துவம்

17 தன்னாட்சி

18 உண்மையான மதச்சார்பினமை

19 விகிதாச்சார பிர நிதித்துவம்

20கல்வியை அடிப்படை உரிமை ஆக்கல்

21 நாத்திக ஆத்திக பிரச்சார உரிமை

22 குழந்தை நலம்

23முதியோர் நலம்

24சுற்றுச்சூழல் பாதுகாப்பு

25திருமண உரிமை ஆண் பெண் சார்ந்ததை உறுதி செய்தல்
பிள்ளைப்பேறு பெண் உரிமை

26 மரண தண்டனை நீக்கம்

27 சிக்கனம்

28 சுயமரியாதை

Sunday, June 17, 2018

ரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம்

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் வழங்கியபேட்டி

----

ரஜினி அரசியல்  நுழைவுக்கான படமாக காலாவை கருதலமா 

-காலா மக்கள் பிரனைளைப்பேசும் படம்... இந்த பட விவாதத்தின்பே ாது  ரஜினி அரசயல் நுழைவை அறிவிக்கவில்லை. செ ால்லப்   ே பானால் தேர்தல் அரசியலை  களமாக  கெ ாண்ட  கதை ஒன்று  அவர்க்கு பிடித்திருந்த பே ாதும் அதில் நடிக்க விரும்பவில்லை


அரசியல் அறிவிப்பை  ெ வளியிட்டதும் திரைக்கதையில்  மாற்றங்கள் ஏதும் செய்ய செ ான்னாரா

-இல்லை...இயக்குனர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பவர் ரஜினி சார்.. இது மக்கள் பிரச்சனைகளைப்பேசும் மக்கள் படம்..  குடும்பம் குறித்தான படமும் கூட...இந்த தீம் அனைவர்க்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை  அவருக்கு இருந்தது

நிலம் என்பதை  கதைக்களமாக ஏன்தேர்ந்தெடுத்தீர்கள்

தாராவி என்பது  பல பிரிவினர் வசிக்கும் ஒரு மினி இந்தியா.. இருப்பவர்கள் இல்லாதவர்கள் பிரச் னை எங்கும் உள்ளது..  இதைத்தான் படம்பேசுகிறது..   இதை  இயக்கியவன் நான  என்பதால் சாதிய முத்திரை  குத்துகிறார்கள்

காலாவில் ரஜினி ரஞ்சிதை பயன்படுத்தி கெ ாண்டாரா அல்லது ரஞ்சித் ரஜினியை யா ?

இரண்டும் இல்லை..  எனக்குப்பிடித்த நான் ஈடுபாடு  ெ காண்டுள்ள அரசியலையும்  மக்கள் மீது ரஜினி   ெ காண்டுள்ள அக்கறையையும் கலந்து உருவான படம் காலா

ரஜினியின ஆன்மிக அரசியல் குறித்து ?

சம நீதி மற்றும் மக்கள் நல் வாழ்வு இவை தான் அவர் செ ால்லும் ஆன்மிக அரசியல்.  படப்பிடிப்பு இடைவேளைகளில் சாதாரணமாகபேசும் பே ாதும் மக்கள் குறித்தும்  அவர்களுக்கு  ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும்தான்  விவாதிப்பார்

காலா கதை தங்களுடையது என சிலர்செ ால்கிறார்களே

வெங்கல் கிராமத்தில் பஞ்சாயத்து  தலைவராக இருந்த என் தாத்தாவின் வாழக்கையை அடிப்படையாக வைத்து நான் உருவாக்கிய கதைதான் இது

Thursday, June 14, 2018

காலாவுககு வரவேற்பு எப்படி - ஓர் அலசல்

 சிங்கப்பூர்/மலேசியா
சிங்கப்பூரில் ஒரு இந்தியத் திரைப்படம் 17 அரங்குகளில் திரையிடப்பட்டது இதுவே முதல் முறை. பிரீமியர் என்று சொல்லப்படும் சிறப்புக் காட்சிகள் அனைத்து சிங்கப்பூர் அரங்குகளிலும் இந்திய ரிலீசுக்கு முதல் நாள், அதாவது (6ம் தேதி, புதன் கிழமை) அன்றே திரையிடப்பட்டது.  வெளியானது வார நாள் என்றாலும், சிங்கப்பூரில் மாபெரும் ஓப்பனிங்கைப் பெற்று சாதனை படைத்தது.
மலேசியா தலைவர் கோட்டை என்பதை கபாலிக்குப் பின் காலா மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. மலேசியா-வில் "Hot Movie Checks"-ல் முதல் இடத்தைப் பிடித்து மக்களிடம் இருக்கும் வரவேற்பை உறுதிப்படுத்தியது காலா.

2. ஆஸ்திரேலியா
முதல் இரெண்டு நாட்களின் வசூல் 1 கோடி. இது, ஆஸ்திரேலியாவில் 2018-ல் வெளியான அனைத்து தமிழ்ப்படங்களை விட மிக மிக அதிகம். ஓப்பனிங் A$105,672, வெள்ளிக்கிழமை அன்று A$100,662, சனிக்கிழமை A$110,616, ஞாயிற்றுக்கிழமை A$85,263 என்று வசூலித்து, ஆஸ்திரேலியாவின் டாப் 5 வரிசையில், பத்மாவதிற்கு அடுத்து, இரண்டாம் இடத்தில் (A$402,213) இருக்கிறது.  

3. USA
- இதுவரை வெளியான தலைவரின் படங்களிலேயே மிக பிரம்மாண்டமாக, நிறைய திரையரங்குகளில் வெளியான படம் காலா மட்டுமே.
- காலா, 1 மில்லியன் டாலர் வசூல் செய்திருக்கும் தலைவரின் 4வது படமாகும். (கபாலி, எந்திரன் மற்றும் லிங்கா மற்ற படங்கள்). இந்த வார இறுதியில் 2 மில்லியன் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2018-ன் தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்து சாதனை. அமெரிக்காவில் இன்னும் படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
- முதல் வார இறுதியில் திரையிடப்பட்ட 324 இடங்களில், வார இறுதியில் மட்டும்  $1,625,614 வசூலித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது. முதல் இடம் எது? நம்ம "கபாலி" தான்! கபாலியின் இமாலய சாதனையான $3,616,002-ஐ வேறு எந்த படங்களும் நெருங்குவதற்கு சில வருடங்கள் ஆகும்.

4. இந்தியா
- சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான ஒரு நாள் வசூல் செய்து சாதனை படைத்தது காலா  - 1.76 கோடி
- காலாவின் 15 கோடி ஓப்பனிங், 2018-ல் வெளிவந்த அனைத்து படங்களை விட அதிகம்.
- தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் 15.4 கோடி.
- காலாவின் இரண்டாம் நாள் வசூல் 10.5 கோடி...இது சாதாரண விஷயமல்ல! பொதுவாக, படத்தைப் பற்றிய விமர்சனங்கள் நன்றாக இருந்தாலும் கூட, இரண்டாம் நாள் வசூல், முதல் நாளை விட, 50% குறைந்துவிடும்.
- சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் 85% அரங்கு நிறைந்த காட்சிகள். விடுமுறை வாரம், பண்டிகை வாரம் என்று எதுவுமே இல்லாமல் இவ்வளவு கூட்டம் வருவது பெரிய விஷயம்.
- சனிக்கிழமை (9ம் தேதி) அன்றும், ஞாயிற்றுக்கிழமை (10ம் தேதி) அன்றும் முறையே  8.4 கோடி மற்றும் 9.3 கோடி வசூல் செய்தது. ஆக மொத்தம், முதல் 4 நாட்களில் 43.6 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.
- சென்னையைப் பொறுத்த வரை, இதுவரை கிட்டதட்ட 6.6 கோடி வசூலித்துள்ளது.
- சென்னை சத்யம் திரையரங்கில், நேற்று (12ம் தேதி) மேட்னி காட்சி house full என்ற செய்தி கிடைத்துள்ளது. வார நாளான நேற்று பகல் காட்சி house-full ஆவது படத்தின் வெற்றியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
- சென்னையை அடுத்து, கோவை, வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு மாவட்டங்களில் சிறப்பான வசூல் செய்கிறது.
- பொதுவாக, எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும், தென் மாவட்டங்களில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இலாபம் கொடுக்கும் அளவிற்கு படம் ஓடுவது அரிதாகி விட்டது. இப்போது, சேலம் சினிப்ளெக்ஸ் ட்விட்டர் பதிவின் படி, அவர்களின் முதலீட்டை மீட்டு விட்டதாகவும், இனிமேல் வரும் வசூல் அனைத்தும் இலாபம் தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர். வார நாட்களிலும் 95% அரங்கு நிறைந்த காட்சிகளாக, வெற்றி நடை போடுவதாக அறிவித்துள்ளனர்.
- இதே போல், புதுக்கோட்டை சினிமாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 34 ஷோக்களில் அனைத்து காட்சிகளும் house-full ஆக மொத்தம் 22.6 லட்சம் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒரு படத்தின் உண்மையான வெற்றியை, அப்படம் தென் மாவட்டங்களில் பெறும் வசூல் தான் முடிவு செய்யும். அவ்வகையில், காலா மாபெரும் வெற்றி கண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று!

5. சவுதி அரேபியா
- சவுதியில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை "காலா" பெற்றுள்ளது. மற்றும், சவுதியில் வெளியான 2வது படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது.  இதற்கு முன், ஹாலிவுட் தயாரிப்பான "Black Panther" வெளியானது.


6. மற்ற நாடுகள்:
- நைஜிரியாவில் காலாவைக் கொண்டாடுகிறார்கள், தென் ஆப்ரிக்காவில் படம் செம ஹிட் என்று கண்டம் தாண்டி தலைவர், தனது ஆளுமையை மீண்டும் நிலைநாட்டியிருக்கிறார்.
- தமிழர்கள் அதிகம் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும்  காலாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய இடங்களில் தினசரி காட்சிகளாக வெற்றி நடை போட்டு வருகிறது.
- வளைகுடா நாடுகளில் இதுவரை 7 கோடி வசூல் என்று தகவல் கிடைத்துள்ளது. ரமலான் நோன்பு முடிந்தவுடன் வரும் வார இறுதியிலிருந்து இன்னும் சிறப்பான வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவிலும் வரும் வார இறுதி ரமலான் விடுமுறையை ஒட்டி வருகிறது  என்பதால், மேலும் ஒரு சில வசூல் சாதனைகளை எதிர்ப்பார்க்கலாம்.
- ரஷ்யாவில், மாஸ்கோ நகரில் படம் வெளியாகி, கடந்த வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
- ஜப்பானைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? வழக்கம் போல், அங்கிருக்கும் தலைவரின் ரசிகர்களின் பேராதரவால் படம் சக்கைப் போடு போடுகிறது



Tuesday, June 12, 2018

நான்தான் காலா - படத்தைகெ ாண்டாடும் அரசியல் தலைவர்கள்

பாட்ஷா அண்ணாலை பே ான்ற படங்களை பே ான்ற படஙகளை   பார்க்கும் சிறுவர்கள்  தம்மை அந்த பட  நாயகன்க ளாக நி னைப்பது வழக்கம்..
காலா படத்தை பெ ாருத்தவரை  தலைவர்களும் இப்படி கெ ாண்டாடி வருகின்றனர்

கலைஞர் தான் காலா என திமுகவினரும்  சீமான் தான் காலாவில் வரும் ராவணன் என்றும் அந்தந்த கட்சியினர் கூறுகின்றனர்...  இன்னும் பல கட்சியினரும் காலா என்பது தாங்கள்தான்  என செ ால்லி படத்தை கெ ாண்டாடி வருகின்றனர்..

இதற்கெல் லாம் உச்சமாக குஜராத் எம் எல் ஏவான ஜினேஷ்மேவானியும் இப்படி கூறியிருக்கிறார்

காலா படம் பார் தேன்  என்னையே பார்ப்பது ோல  இருந்தது...  சமூக நீதியை  கமர்சியல் அம்சத்துடன் தந்த ரஞ்சித்துக்கு பாராட்டுகள்..

இப்படி அவர்ட்வீட்செய்துள

Sunday, June 10, 2018

காலா ரஜினி படமா ரஞ்சித் படமா ? -ரஞ்சித்பேட்டி

கீழ்த்தரமான அவதூறுளையும் தடைகளையும் மீறி காலா சாதனை படைக்கும் நிலையில் இயக்குனர் ரஞ்சித் அளித்தபேட்டி

------
ரஜியை வித்தியாசமாக காட்ட எப்படி தே ான்றியது

- கபாலி ஷுட்டிங் இடைவேளைகளில் சாதாரணமாக ரஜினி சாரிடம் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. சினி மா ரஜினியை விட இயல்பான ரஜினி பவர்புல்லாக இருந்ததை கண்டேன்...  அதை காட்சிப்படுத்தினேன்..  அதுதான் காலா

- காலா உயிதெழும் காட்சி எதன் குறியீடு

-சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகழை யாரும் தெ ாடக்கூட முடியாது.. அது ஒன்று...  காலா எனும் தத்துவத்துக்கு என்றும் அழிவில்லை   இவற்றத்தை தான் அந்த காட்சி காட்டுகிறது

-காலா ரஜினி படமா ரஞ்சித் படமா ?

கண்டிப்பாக இது சூப்பர் ஸ்டார் படம்தான்... அவர் அனுமதியின்றி ஒரு காட்சியும் வசனமும் இடம்பெறவில்லை
அவர் வழிகாட்டுதலுடன் என் கருத்துளை படத்தில் வைதேன்..  சமூக நீதி கருத்துகள் இதன் மூலம் உலக அளவில்சென்றுசேர்ந்துள்ளது




Wednesday, August 14, 2013

பெண்களை ஊருக்கு நேர்ந்து விடும் தமிழக கிராமம்- வெட்கம் கெட்டு சுதந்திரம் கொண்டாடும் ”படித்தவர்கள்”


 அந்த காலத்தில் சுதந்திர தினம் என்றால் மிட்டாய் வாங்குவதற்காக பள்ளி சென்ற அனுபவம் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது
வீட்டுப்பாடமோ, படிப்போ இல்லாமல் சும்மா பள்ளிக்கு செல்வது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்

அதன் பின் கொஞ்ச  நாள் உண்மையிலேயே நாட்டுப் பற்று எல்லாம் இருந்தது. தேச விடுதலை வரலாறு , தேசத்தலைவர்கள் பற்றியெல்லாம் தேடி தேடி படித்தேன்.

ஆனால் யதார்த்த வாழ்வை சந்தித்த பின் , சுதந்திர நாள் மீது வெறுப்போ விருப்போ இல்லாமல் போய்விட்டது
என்னை பொறுத்தவரை அது ஒரு விடுமுறை தினம்  மட்டுமே.

இன்றும் ஒரு விடுமுறை தினமாக சாதாரணமாக போய் இருக்கும். ஆனால் காலையில் பார்த்த சுகி சிவம் பேச்சு என்னை எரிச்சல் அடைய வைத்து விட்டது.  ஒரு மிடில் கிளாஸ் மன நிலையை அவர் பிரதிபலித்தார். நம் நாட்டில் நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தை வேறு பல நாடுகளில் மக்கள் அனுபவிப்பதில்லை என பேசினார்.
இவர் சொல்லும் “ நாம் “ யார் என புரிந்து கொள்வது இன்றைய தேவை.

இவரைப் போலத்தான் நானும் நினைத்து வந்தேன்.

ஆனால் சமீப காலமாக நான் சந்தித்த மனிதர்கள், பார்த்த படங்கள் , சென்ற ஊர்கள் , விவாதங்கள் எல்லாம் என் மனதை மாற்றி விட்டன.

அந்த காலத்தில் நம் அறிவு ஜீவிகள் சில நாடுகளுக்கு போய் விட்டு வந்து அந்த நாடு பூலோக சொர்க்கம் என எழுதுவார்கள். அப்படி சொல்பவர்கள் யாரும் பொய் சொல்வதில்லை. அங்கு சந்தித்த சிலருடன் பேசி அப்படி எழுதுவார்கள்.

ஆனால் சில ஆண்டுகளில் அந்த நாடுகளில் புரட்சி ஏற்பட்டு ஆட்சியாளர்கள்
தூக்கி எறியப்பட்டதை பார்த்தோம். அந்த நாடுகளில் நிலவிய அவலம் பிறகுதான் தெரிய வந்தது

 நம் ஆட்களும் பொய் சொல்லவில்லை. அவர்கள் சந்தித்தவர்களும் பொய் சொல்லவில்லை. பின் ஏன் உண்மை நிலையை அவர்களால் எழுத முடியாமல் போயிற்று ?

அந்த நாடுகளில் உயர் பதவியில் இருந்தவர்களை இவர்களால் சந்திக்க முடியவில்லை. ஏழைகளுடன் உரையாடும் மொழியோ தெரியவில்லை.

எனவே குமாஸ்தாவாக இருந்த மிடில் கிளாஸ் மக்களையே சந்தித்து பேசினார்கள். அந்த நாட்டு கொடுங்கோல் ஆட்சியின் கொடுமைகளை அவர்கள் அனுபவிக்காததால் அல்லது தெரியாததால், அந்த நாட்டு ஆட்சியாளர்களை பாராட்டி பேட்டி கொடுத்தனர். நம் ஆட்கள் அதை நம்பி இங்கே எழுதி விட்டார்கள்.

அதன் பின் மக்கள் புரட்சி ஏற்பட்ட பின் தான், அந்த நாட்டின் கொடுமைகள் அந்த குமாஸ்தாக்களுக்கே தெரிய வந்தது.

சுகி சிவம் சொல்லும் நாம் என்பது இந்த குமாஸ்தாக்க்ளைத்தான்,

என்ன வேண்டுமானாலும் ஃபேஸ் புக்கில் எழுத முடிகிறது. எங்கு வேண்டிமானாலும் ஊர் சுற்ற முடிகிறது..எந்த இடத்துக்கும் வேலை தேடி செல்ல முடிகிறது என்பதையே நம் குமாஸ்தாக்கள் சுதந்திரம் என நினைத்து கொள்கிறார்கள்.

இந்த வசதி எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்பது இவர்களுக்கு தெரியாது. இன்னும் பல ஊர்களில் சிலர் கோயில்களுக்கு போக முடியவில்லை/ டீக்கடைகளில் எல்லொரும் போல டீ சாப்பிட முடியவில்லை.
அவர்கள் எப்படி போனால் என்ன ,, நான் சுதந்திரமாக இருக்கிறேனே என சொலவ்து அற ரீதியாக மட்டும் தவறல்ல.. சுய நல ரீதியாக பார்த்தாலும் , தவறுதான்.

பொறுமை இழந்து அவர்கள் போராட தொடங்கினால் நமக்கும் சேர்த்துதான் அடி விழும்.

சமீபத்தில் லீனா மணிமேகலையின் மாத்தம்மா என்ற ஆவணப்படம் ஒன்று பார்த்தேன்.

தமிழ கிராமம் ஒன்றில் ஒரு கொடூரமான பழக்கம். ஏதாவது பிரச்சினை என்றால் அவர்கள் வீட்டு பெண் குழந்தையை மாத்தம்மா எனும் கடவுளுக்கு நேர்ந்து விட்டு விடுவார்கள் , ஒரு வேண்டுதலாக.

அதன் பின் அந்த பெண் குழந்தை ஊருக்கு பொது சொத்தாகி விடும். நடனம் ஆடி மக்களை மகிழ்வித்து தன் காலத்தை ஓட்ட வேண்டும்.

பருவம் அடைந்ததும் திருமணம் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. அவள் ஊருக்கு பொது சொத்து .திருமணம் இன்றி யாருடனாவது சேர்ந்து குடும்பம் நடத்தலாம். ஆனால் எந்த சட்ட பாதுகாப்பும் இல்லை.  கூட வாழ்பவன் எப்போது வேண்டுமானாலும் போய் விடுவான்.

அவளுக்கு என்ன சுதந்திரம் கிடைத்து விட்டது..இப்படி ஓர் ஊர் இருப்பது நம் அதிகாரிகளுக்கு தெரியாதா?

இப்படி நம்மை சுற்றி ஆயிரம் பேர் இருக்கையில் நாம் ஆனந்த சுதந்திரம் கொண்டாடினால் நம்மை வருங்கால சமுதாயம் காறித்துப்பி விடும்.

படிக்காத மக்கள் யாரும் ஆனந்த சுதந்திரம் கொண்டாடுவதில்லை. பெரும் பணக்காரர்களும் கொண்டாடுவது இல்லை
மற்றவர்களுக்கு நல்ல கருத்துகளை எடுத்து போய் சேர்க்க வேண்டிய படித்தவர்கள்தான் இந்த குழந்தைத்தனமான செயலை செய்து வருகிறார்கள்.

அனைவருக்கும் வெட்கம் கெட்ட சுரணை கெட்ட அற்பத்தனமான சுதந்திர தின வாழ்த்துகள்
ஜெய் ஹிந்த்



Wednesday, October 24, 2012

பிரமணாள் கஃபே , ஜனனி அய்யருக்கு எதிர்ப்பு சரியா ?

பிரமணாள் கஃபே என்ற உணவு விடுதியை எதிர்த்து பேர் மாற்ற சொல்லி போராட்டம் நடந்ததாக செய்தி வந்தது . அதே போல ஜனனி அய்யர் என்ற பெயரில் இருக்கும் ஜாதி அடையாளத்தை நீக்க சொல்லி ஓர் இயக்குனர் அட்வைஸ் கொடுத்ததாகவும் இன்னொரு செய்தி.


ஜாதி வெறி ஒழிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் மேற்கண்ட இரு விஷ்யங்கள் ஜாதி வெறிக்கு எதிரானதா ?

சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் போர் உக்கிரமாக நடந்த கால கட்டம். அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கு இருக்கும் தமிழர்களுக்கு உதவ வேண்டிய நிலையில், சிலர் கோயில் கருவறைக்குள் நுழையும் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்துக்கு அதுவா உரிய நேரம்?

இலங்கையில் மொழி ரீதியாக , இன ரீதியாக தாக்குதல் நடந்தது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு மத ரீதியாகவும் தாக்குதல் நடந்தது , நடந்து வருகிறது. இந்த விஷ்யத்தை சரியானபடி ஃபோக்கஸ் செய்து இருந்தால் , வட இந்தியர்களும் இந்த பிரச்சினையில் ஈடுபாடு காட்டி இருப்பார்கள். இலங்கை வரலாறே மாறி இருக்க கூடும்.,

சமீபத்தில் இந்த விஷ்யத்தை புரிந்து கொண்ட வைக்கோ , பிஜேபி கோட்டையான மத்திய பிரதேசத்தில் , இலங்கையில் நடக்கும் மத ரீதியான அத்துமீறல்களை பேசி அங்குள்ளவர்களின் ஆதரவை அள்ளியதை மறந்து விட முடியாது.

தமிழ் உணர்வு , ஜாதி எதிர்ப்பு போன்றவை உன்னதமானவை என்றாலும் , அதை வெளிப்படுத்துவதில் நிதானம் தேவை.

ஜனனி அய்யர் என்ற நடிகை மட்டுமா ஜாதி அடையாளத்தை வைத்து இருக்கிறார். சினிமா துறையில் பலர் இந்த பாணியில் பெயர் வைத்து இருக்கிறார்கள் , இவருக்கு மட்டும் அட்வைஸ் கொடுத்தால் , ஒட்டு மொத்தமாகவே ஜாதி ஒழிப்பின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுமே?

சைவ உணவு விடுதி என்பதை சொல்ல பிரமணாள் விடுதி என்கிறார்கள் . மற்றபடி அங்கு சாப்பிட வேண்டுமானால் , ஜாதி சான்றிதழ் காட்ட வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. வியாபாரம் ஆனால் போதும் என்றுதான் அவர்கள் நினைப்பார்களே தவிர , ஜாதியைக்காட்டி வாடிக்கையாளர்களை தடுத்து , வியாபாரத்தை பாழாக்க மாட்டார்கள். ஒவ்வொருவரின் ஜாதியை கண்டுபிடித்து அனுமதிப்பது சாத்தியம் அற்றது.


பல்வேறு ஜாதிப்பெயர்களிலும் உணவகங்கள் உள்ளன. அந்தந்த ஜாதியினர்தான் அங்கு சாப்பிட முடியும் என்ற நிலை கிடையாது. இதெல்லாம் பிராண்ட் மட்டும்தான். ஓர் அடையாளம்தான். இதையெல்லாம் எதிர்ப்பது ஜாதி ஆதிக்க எதிர்ப்பு என்ற நோக்கத்தை திசை திருப்பவே செய்யும்.

இது போன்ற தேவையற்ற விஷ்யங்களில் கவனம் செலுத்துவதால் , உண்மையாக ஜாதி வெறி ஆதிக்கம் செலுத்தும் இடங்களை காணாமல் போகிறோம்.

பணியிடங்கள் , சினிமா , பத்திரிக்கைகள் போன்றவற்றில் எல்லாம் ஜாதி வெறி தலை விரித்து ஆடுகிறது. இது எத்தனை பேருக்கு தெரியும்?

புயலிலே ஒரு தோணி என்று ஓர் உலகத்தரமான நாவல் .  இது அந்த காலத்தில் ஆனந்த விகடனுக்கு அனுப்பப்பட்டது , நாவல் போட்டிக்காக. உன்னதமான நாவலாக இருந்தாலும் ,  நடுவர் குழுவினர் இந்த நாவலை விரும்பினாலும் , அந்த நாவலுக்கு பரிசு கிடைக்கவில்லை. காரணம் அதை எழுதிய ப சிங்காரம் , பிரமணர் இல்லை.


எம் ஜி ஆர் , ரஜினி , கமல் என பலருடன் இணைந்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர் ஏ ஜெகனானாதன் , அவ்ரே வாய்ப்பு கேட்டும் கூட விகடனில் அவருக்கு அனுபவ கட்டுரை எழுத வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. காரணம் அவர் பிராமணர் இல்லை.


சந்திரமுகியும் , மும்பை எக்ஸ்பிரசும் ஒரே நேரத்தில் வெளியாகின. இதில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது , ப்லரின் பாராட்டுகளை பெற்றது சந்திர முகி.  கமலே விரும்பாத படம் மும்பை எக்ஸ்பிரஸ் பெரும் தோல்வியை சந்தித்தது. ஆனால் விகடனில் , மும்பை எக்ஸ்பிரசுக்குத்தான் அதிக மதிப்பெண் கொடுத்தார்கள். காரணம் கமல் பிராமணர்.

இது ஓர் உதாரணம்தான் . சக்தி வாய்ந்த ஊடகங்கள் ,  நிறுவனங்கள் ஜாதி வெறியுடன் நடந்து கொள்வதை கவனிக்க தவறி விட்டு,  அபாயம் இல்லாத உண்வகங்களையும் , நடிகைகளையும் எதிர்ப்பது கேலிக்கூத்து.


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா