Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Wednesday, August 19, 2020

இனக்கலவரத்தில் சித்துவின் உயிர் காத்த வீரன் - சேத்தன் சவுகான் நினைவலைகள்



 

 வரலாற்று நாயகர்களாக வாழ்வது கெத்து என்றாலும் அதற்கான விலையும் அதிகம்    ப்ரவைசி இருக்காது    இமேஜ் என்ற சிறையை மீறி எதுவும் செய்ய முடியாது அவதூறுகள்  பொறாமைகள் என் வாழ் நாள் முழுக்க அவதிதான்

  சத்தமில்லாமல் சாதனைகள் செய்து விட்டு சுதந்திரமாக உற்சாகமாக தான் நினைத்தபடி வாழ்வது ஒரு வகை


சில பாடல்களைக் கேட்டு கண்ணதாசன் பாடல் என நினைத்துக்கொண்டு இருப்போம் கடைசியில் பார்த்தால் அதிகம் பிரபலமாகாத ஒரு மேதை அதை எழுதி இருப்பார்

உதாரணமாக எல்லா இசை நிகழ்ச்சிகளிலும் பாடப்படும் “ நந்தா நீ என் நிலா நிலா “ என்ற பாடல் கண்ணதாசன் எழுதியதன்று

அதேபோல கிரிக்கெட்டில் பலர் இருக்கிறார்கள்   சமீபத்தில் காலமான சேட்டன் சவுகான் இப்படிப்பட்ட அமைதியான சாதனையாளர்களில் ஒருவர்


கவாஸ்கர் _ ஸ்ரீகாந்த்  கார்னிட்ஜ் _ ஹெயின்ஸ்     டேவிட் பூன் _ மார்ஷ்   போன்ற துவக்க ஆட்ட ஜோடிகள் உலகப்புகழ் பெற்றவை

அவற்றுக்கிணையான ஜோடிதான் கவாஸ்கர் _ சேட்டன் சவுகான் ஜோடி

இருவரும் இணைந்து பல ஆட்டங்கள் ஆடி இருக்கின்றனர் இந்த இணை பல சாதனைகள் செய்துள்ளது

ஆனால் கவாஸ்கருக்கு கிடைத்த பெயர் இவருக்கு கிடைக்கவில்லை   அதை இவர் விரும்பவும் இல்லை

தன்  எல்லைகளை உணர்ந்தவர் இவர்


சர்வதேசப்போட்டிகளில் ஒரு செஞ்சுரி கூட அடிக்காதவர் இவர்  ஒரு செஞ்சுரிகூட அடிக்காமல் ஓப்பனிங் ஆட்டக்காரராக பல ஆண்டுகள் நீடிக்க முடிந்ததை வைத்து இவர் அணிக்க்கு எவ்வளவு முக்கியமாக இருந்தார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்


அவரது பண்பு நலன் களுக்கு இரு உதாரணங்கள்


ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு போட்டியின்போது அணித்தலைவர் கவாஸ்கருக்கு அவுட் கொடுக்கப்பட்டது   அது தவறு என நினைத்த கவாஸ்கர் எதிர்முனையில் இருந்த சவுகானைப்பார்த்து இந்த ஆட்டத்தை புறக்கணிப்போம்   என்னுடன் நீங்களும் வெளியேறுங்கள் எனச்சொல்லி விட்டு கிளம்பினார்


சவுகானுக்கு தர்ம சங்கடம்  அணிதலைவர் பேச்சுக்கு கட்டுப்பட வேண்டும் ஆனால் தானும் வெளியேறினால் இந்திய அணி தோற்றதாக அறிவிக்கப்படும் ஒரு களங்கமாக வரலாற்றில் பதிவாகி விடும்

அமைதியாக கவாஸ்கரிடம் சொன்னார்  உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டவன் நான்  இதோ நானும்  வருகிறேன் என சொல்லி விட்டு நடக்கலானார்

ஆனால் அணி நிர்வாகத்துக்கு யோசிக்க நேரம் கொடுக்கும் பொருட்டு மிக மெதுவாக நடந்தார்     அதற்குள்   அணி நிர்வாகம் பேசி முடித்து ஆட்டத்தை தொடருமாறு சைகை செய்தனர்   ஒரு தவறான முன்னுதாரணம் தவிர்க்கப்பட்டது


அணியில் சேர்ந்த ஆரம்ப கால கட்டங்களில் அவ்வப்போது அணியை விட்டு நீக்கப்பட்டார் மீண்டும் கடும் முயற்சி செய்து உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக ஆடி அணியில் இடம் பெற்றவர் இவர்

ஓய்வு பெற்றபின் அணியின் மேனேஜராக பணியாற்றியபோதும் இவரது பண்பு நலன் பளிச்சிட்டடது


இந்திய வீரர் ஹர்பஜன் சிங் இன துவேஷமாக நடந்து கொண்டார் என்பது குற்ற்ச்சாட்டு   2008ல் ல்   டெண்டுல்கர் தலைமையில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று இருந்தது..    ஒரு போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமன்ஸை   குரங்கு எனத் திட்டி விட்டதாக பஞ்சாயத்து

அப்போது மேனேஜர் என்ற முறையில் சேட்டன் சவுகான் ரிக்கி பாண்டிங் உடன் பேசினார்

குரங்கு என்பது உங்கள் சூழலில் இன துவேஷ வார்த்தையாக இருக்கலாம். இந்தியர்களுக்கு அது கடவுள் என அனுமான் ஆலயங்கள் , அனுமன் சிலைகள் போன்ற படங்களைக்காட்டி விளக்கினார். ஹர்பஜன் அப்படிப்பேச  வாய்ப்பில்லை என புரிய வைத்தார். இவற்றை எல்லாம் விளக்கும் அளவுக்கு ஹர்பஜனுக்கு ஆங்கிலம் தெரியாது என சாமர்த்தியமாகப்பேசி ஹர்பஜன் சார்பில் தானே பேசி பஞ்சாயத்தை சுமுகமாக முடித்து வைத்தார்

இந்த தன்மை அவருக்கு அரசியலில் உதவியது.   உத்தர்பிரதேஷத்தின் லோக் சபா எம் பி யாக இருந்து இருக்கிறார். மறையும்போது அமைச்சராக மறைந்து இருக்கிறார்

உள்ளூர்ப்போட்டிகளில் தனது கடைசி ஆட்டம் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.  ஒரு முறை தனது தாடை உடைந்தபோதும்கூட களத்தில் நின்று ஆடியவர் இவர்..   அடுத்தடுத்து இரு போட்டிகளில் இரட்டைச்சதம் ,  தொடக்க ஜோடியாக 400 ரன்களுக்கு மேல் குவித்தது என இவரது சாதனைகள் ஏராளம் 

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் 438 ரன் எடுத்தால் வெற்றி என இமாலய இலக்குடன் ஆடத்தொடங்கிய இந்தியா கிட்டத்தட்ட அந்த இலக்கை எட்டிய நிலையில் நேரமின்மை காரணமாக ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்தியா எடுத்த ரன்கள் ( 429- 8)   இந்தப்போட்டியில் கவாஸ்கர் - சேட்டன் சவுகான் ஜோடி மிக அபாரமாக ஆடி 200 ரன்களுக்கு மேல் குவித்தது


1984ல் உள்ளூர் போட்டி ஒன்றை முடித்து விட்டு ரயிலில் தன் அணித்தோழர்களுடன் வந்து கொண்டு இருந்தார்.


அப்போது இந்திரா காந்தி படுகொலை நடந்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது.


நவ்ஜோத் சித்து , ரஜீந்தர் கய் ஆகிய சீக்கிய வீரர்கள் அவருடன் பயணித்தனர். அவர்களைத்தாக்க  முயன்ற கூட்டத்தை அரண்போல நின்று காத்தவர் இவர்தான்


இவரைப்பற்றி கவாஸ்கர் உருக்கமாக கூறுவதாவது


” அவன் என் உயிர் நண்பன்  அவன் செஞ்சுரி அடிக்காமல் போனதற்கு நானும் ஒரு காரணம் என நினைக்கிறேன்..  ஒரு போட்டியில் 97 ரன்கள் எடுத்து இருந்தான்.  டீவியில் பார்த்துக்கொண்டு இருந்தேன்.  அவர் செஞ்சுரி அடிக்கப்போகிறார்.. எழுந்து வந்து பால்கனியில் நின்று பாருங்கள் என சக வீரர்கள் அழைத்தனர். நான் நேரில் பார்த்தால் அவுட் ஆகி விடுவார் என்றொரு  நம்பிக்கை எனக்கு இருந்தது.. ஆனால் வற்புறுத்தலால் பால்கனியில் நின்று பார்த்தேன்.  என்ன கொடுமை.. நான் பார்த்த நேரம், அவன் அவுட் ஆகி விட்டார்.  இன்னொரு போட்டியில் அம்பயருடன் நான் போட்ட சண்டை காரணமாக அவுட் ஆகி விட்டான்


கடைசி ஆண்டுகளில் நாங்கள் அவ்வப்போது சந்திப்போம். வாழ்க்கை எனும் விளையாட்டின் கடைசி ஓவர்களில் இருக்கிறோம். எப்படியாவது செஞ்சுரி அடிக்க வேண்டும் என்பேன். அவன்சிரிப்பான்..  நீதான் செஞ்சுரி அடிப்பதில் வல்லவன்.  எனக்கும் செஞ்சுரிக்கும் ஒத்து வந்ததே இல்லை என்பான்.. அவன் சொன்னதுபோலவே சீக்கிரமே கிளம்பி விட்டான்.. என் துயரத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை

Wednesday, May 29, 2019

ஆடாமல் ஜெயித்த கிரிக்கெட் வீரர் - கிரிக்கெட் உலக கொடுமைகள்



1983 உலக கோப்பை வெற்றியில் கபில் தேவின் ஃபைனல் கேட்ச்சை ( விவியன் ரிச்சர்ட்ஸ் விக்கெட் ) , மொஹிந்தர் அமர் நாத்தின் கடைசி ஓவர்களை யாரும் மறக்க முடியாது

அதேபோல சுனில் வால்சனுக்கும் அவரது நண்பர்கள் உறவினர்களுக்கு 1983 உ கோப்பையை மறக்க முடியாது

காரணம் அந்த போட்டியில் வென்று கோப்பையுடன் புகைப்படத்தில் காட்சி அளிப்பவர்களுள் அவரும் ஒருவர்..

ஆம்..அந்த அணியில் இடம் பெற்றிருந்த வீர்களில் இவரும் ஒருவர். ஆனால் ஒரு மேட்ச் சில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை

ரோஜர் பின்னி , மதன்லால் , கபில்தேவ் போன்ற சீனியர்கள் இருக்கும்போது சின்ன பையனான எனக்கு வாய்ப்பு கிடைக்காததில் வருத்தம் இல்லை.. இப்போது நான் சீனியர் சிட்டிசனாகி விட்டேன் என்பதால் இப்போதும்கூட வருத்தம் இல்லை என்கிறார் இவர்

ஆந்திராவை சேர்ந்த வீரரான இவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியின் மேனேஜராக இருக்கிறார்

அதேபோல தமிழக வீரர் வி வி குமார்.. திறமைசாலிதான்.. ஆனாலும் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை

வாய்ப்பு கிடைத்த முதல் தொடரில் அருமையாக பந்து வீசினார்

அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான தொடர்

முதல் இன்னின்க்சில் சிறப்பாக பந்து வீசினார்

இரண்டாம் இன்னின்க்சில் ஒரு ஓவர் கூட வீசவில்லை

அடுத்த டெஸ்ட்டில் வாய்ப்பு தருவதாகவும் , பந்து வீசும் ஸ்டைல் ரகசியமாக இருந்தால்தால் அடுத்த டெஸ்ட்டில் எதிராளிகளை அச்சுறுத்த முடியும் என்றும் கூறி பந்து வீச வேண்டாம் என்றார் அணித்தலைவர்

ஆனால் என்ன கொடுமை என்றால் , அவர் வாழ்க்கையில் அடுத்த வாய்ப்பு என ஒன்று வரவே இல்லை

அதேபோல மதுரை வீரர் வெங்கட்ரமணா..

திறமையான பந்து வீச்சாளர்

கிரிக்கெட் உலக அரசியலால் இவருக்கும் வாய்ப்புகள் அமையவில்லை

இப்படி வாய்ப்புகள் அமையாமல் ,  காணாமல் போனோர் எண்ணிக்கை கிரிக்கெட்டில் அதிகம்.. வாழ்க்கையிலும்கூட

Sunday, May 12, 2019

சோற்றால் அடித்த பிண்டங்கள்- ரசிகர்களுக்கு தோனி கடிதம்

ஐபிஎல் ஃபைனலில் சென்னை அணி தோல்வி அடைந்தது தெரிந்ததே...

ஆனால் இது குறித்து தோனி எழுதிய கடிதம் பலருக்கு தெரியாது ..

அவர் கடிதம் பின்வருமாறு

---------------------------

உடன் பிறப்பே

இன்றைய தினம்
ஆரிய அணியான மும்பை அவர்க்ளாக ஒரு போட்டி நடத்தி அவர்களாகவே அம்பயரிங் செய்து அவர்களாகவே முடிவை அறிவித்த கேலிக்கூத்தை பார்த்திருப்பாய்.
148 ரன்கள் எடுத்த அந்த அணிக்கு 20 கோடி பரிசாம்.. ஒரு ரன் குறைவாக எடுத்த நம் அணிக்கு ஒரு ரூபாய் -அல்லது ஒரு லட்ச ரூபாய்- குறைத்து கொடுப்பதுதானே சரியாக இருக்க முடியும்... ஆனால் நமக்கு அதில் பாதி ரூபாய்தான் கொடுத்துள்ளனர்..

ஒட்டு மொத்த போட்டிகளை கணக்கில் கொண்டால் , நம் அணிதான் அதிக ரன்களை பெற்றுள்ளது

சென்ற ஆண்டு போட்டிகளை விட , சற்றொப்ப 3% அதிக ரன்களை பெற்றுள்ளது

அஃதன்னியில் அதிக விக்கெட்டுகளும் கைப்பற்றியது நம் அணிதான்..

ஸ்கோர் போர்டுகளை முன்பு போல கைகளால் எழுதும் முறையும் , எடுக்கும் ரன்களுக்கேற்ப விகிதாச்சார பரிசு பகிர்வும் நடை முறைக்கு வந்தால் சென்னை அணிதான் வெல்லும் என நாம் சொல்லாவிட்டாலும் நடு நிலையாளர்கள் சொல்ல மாட்டார்களா

இது போன்ற அபத்தமான விதிகள் இருக்கும் வரை இனியும் போட்டிகளில் கலந்து கொளவ்தா என்பதை பொதுக்குழு விவாதிக்கும்

இதை தட்டிக்கேட்காத ஹைதரபாத் டெல்லி அணிகள் இப்படி சோற்றால் அடித்த பிண்டங்கள் ஆகி விட்டார்களே அன வருந்தத்தான் முடியும்

அன்புடன்

தோனி

Friday, March 22, 2019

ஆல்வின் காளிச்சரண் சொன்ன அற்புத நிகழ்ச்சி


கிரிக்கெட் உலக வரலாற்று நாயகர்களில் ஒருவரான ஆல்வின் காளிச்சரண் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றை ஹிந்து  நாளிதழ் ஏற்பாடு செய்திருந்தது

அவர் எழுதி வெளியாக இருக்கும் கலர் ப்ளைண்ட் ( நிறக் குருடு ) நூலுக்கான முன்னோட்ட நிகழ்ச்சி இது

 பெரிய விளம்பரங்களோ அறிவுப்புகளோ இன்றி  நூல் முன்னோட்ட நிகழ்ச்சிக்கு தமிழ் நாட்டில் இவ்வளவு கூட்டமா என ஆச்சர்யமாக இருந்தது’

கேள்விகள் நிகழ்ச்சியின்போது  , பார்வையாளர்கள் ஷார்ப்பாக சுருக்கமாக கேள்விகள் கேட்டது ஆச்ச்ரயமாக இருந்தது

குறித்த நேரத்தில் ஷார்ப்பாக நிகழ்ச்சியை ஆரம்பித்தது  குறித்த நேரத்தில் பார்வையாளர்கள் அனைவரும் வந்திருந்து அரங்கை நிரப்பியது , அப்புறம்டா மச்சி என போனில் மொக்கை போடாதது என அதிசயத்து அமர்ந்து இருந்தேன்..

அதே தமிழ் நாடு.. அதே தமிழக மக்கள் ,   ஆனால் தமிழ் நூல் நிகழ்ச்சிகளில் இவர்களது வேறு விதமாகவும் ஆங்கில நூல் நிகழ்ச்சிகளில் வேறு விதமாகவும் இருப்பது ஏன் என  காரணம் தெரியவில்லை


கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய மற்ற பணிகளுக்காக தமிழ் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தோர் ஏராளம் .. புலம்பெயர்ந்து கஷ்டப்பட்டு அவமானங்களை சந்தித்து மரணங்க்ளை சந்தித்து அந்தந்த நாடுகளின் குடிமகன்களாக மாறிப்போனவர்கள் பலர்.. மனதில் ஆழத்தில் தமிழ் என்ற உணர்வு அவர்களுக்கு இருக்கும்.. அந்த உணர்வை நாம் புரிந்து கொள்வது கடினம்


ஆல்வின் காளிச்சரண் பல சுவையான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்,... அவை எல்லாம் நூலில் வெளி வரக்கூடும்.. வராவிட்டால்  நான் எழுதுவேன்..


நிகழ்ச்சியில் என் ராம் அவருடன் உரையாடியது அழகு என்றால் விவி குமாரின் பேச்சும் அவர் நினைவுகூர்ந்த தகவல்களும் அருமை..

காளிச்சரண் குறிப்பிட்ட ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று

ஒரு முறை தென் ஆப்ரிக்காவில் சிலரால் கடத்தப்பட்டார் அவர்.. அப்ப்படி கடத்தப்படுபவர்கள் உயிருடன் மீள்வது அரிது... அவரிடம் இருந்த பணத்தை எடுக்க சொன்னார்கள்..  அவர் தலை மீது துப்பாக்கியை வைத்து இருந்தனர்

சங்கிலியை கழட்ட சொன்னார்களாம்.. அது சத்ய சாய் பாபா அளித்த சங்கிலி அது... பார்த்து விட்டு கொடுத்து விட்டார்கள்...என்ன தோன்றியதோ...அவரை அப்படியே விட்டு விட்டு , எதையும் திருடாமல் விட்டு விட்டனர்


பிறகு இந்தியா வந்தபோது சாய் பாபாவை சந்த்தித்தார்...

ஸ்வாமி...என் உயிரை காத்தமைக்கு நன்றி என்றார்

பாபா சொன்னாராம்... “ எந்த சம்பவத்தை சொல்கிறாய்..தலை மீது துப்பாக்கி வைத்தார்களே..அதுவா ? “ என்றாராம்

நம்மை சுற்றி எத்தனையோ அற்புதங்கள்..ஆனால் நன்றியுடன் வாழ்பவர்கள் சிலரே...

Friday, February 22, 2019

வாசிம் ஜாஃபர்- கிரிக்கெட் உலகின் ஃபீனிக்ஸ் பறவை


 உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்... 
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்  நிழலும் கூட மிதிக்கும்....

என்பார் கவியரசர் கண்ணதாசன்..

இதை நம் வாழ்வில் அனுபவித்து இருப்போம்... பிரபலங்களும் இந்த அனுபவத்துக்கு ஆளாவது உண்டு

ரஞ்சிகோப்பையை அடுத்தடுத்து இரு முறை வென்று சரித்திரம் படைத்துள்ளது விதர்ப்பா அணி.. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் அந்த அணி வீரர் வாசிம் ஜாஃபர்

இதற்கு முன்பு மும்பை அணிக்காக விளையாடி அந்த அணியின் ரஞ்சி வெற்றிக்கும் உதவி இருக்கிறார் இவர்..

இந்திய அணிக்காகவும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்

அவர் பிரபலமாக இருந்த கால கட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் இவருக்கு பணி வழங்கியது.. அவர் தம்முடன் இருப்பது ஒரு பெருமை என நினைத்ததால் இந்த கவுரவ பதவி..

ஒரு கட்டத்தில் காயம் காரணமாக மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்... மற்ற அணிகளும் சேர்த்துக்கொள்ளவில்லை... எனக்கு காசெல்லாம் வேண்டாம்.. சும்மா ஆடுகிறேன் என சொன்னதை யாரும் மதிக்கவில்லை

இவர் நிலையை உணர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் , இனி கிரிக்கெட்டல்லாம் வேண்டாம்... ஒழுங்காக நிறுவனத்துக்கு ஒன்பது மணிக்கு எல்லோரையும் போல வேலை செய்யுங்கள்... ஐந்து மணிக்கு வீட்டுக்குப்போய் மெகா சிரியல் பாருங்கள் என்றது

ஒரு கிரிக்கெட் வீரராக இந்த அவமானம் அவரை காயப்படுத்தியது.. இந்த சூழலில் மும்பை பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த பண்டிட் விதர்ப்பா அணியின் பொறுப்பை ஏற்றார்.. ஜாஃபரின் திறமையை அறிந்திருந்த அவர் விதர்பா அணியில் அவரை சேர்த்தார்

அதன் பின் நடந்ததெல்லாம் பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டிய வரலாறு

அவமானங்கள் நிரந்தரம் அல்ல

Sunday, January 27, 2019

பிச்சைஃபைட் என்றால் என்ன ? எடுத்துக்காட்டுடன் விளக்குக



பிச்சைஃபைட்... (pichaified)

பன்னாட்டு நிறுவனத்தில்   மேலதிகரியாக பணி புரியும் ஒரு நண்பனை சந்தித்தேன்.,., இணைய நண்பர்களையே அதிகம் சந்திக்கும் சூழலில் , ” நேரடி “ நண்பனை இப்படி சந்தித்து வெகு நாட்கள் ஆகி விட்டன


இல்லத்தில் சந்திப்பதோ ஹோட்டல் அறையில் சந்திப்பதோ உவப்பாக இல்லை... பேசுவதற்காகவே ஒரு ரயில் பயணம் மேற்கொண்டோம்... பிளாட்ஃபாரத்தில் தேநீர் அருந்தியபடி பல விஷயங்களை விவாதித்தோம்..

ஸ்டார் ஹோட்டலில் செமினார் தலைமை ஏற்று நடத்துவதற்காக சென்னை வந்துள்ள அவன் , பிளாட்ஃபார்ம் விவாதத்திலும் உற்சாகமாக கலந்து கொண்டது மகிழ்வளித்தது...

இலக்கியம் , கிரிக்கெட், சினிமா என பல திசைகளில் விவாதம் சிறகடித்தது


  • இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்வளிப்பது
  • ஆஸ்திரேலியாவை இந்தியா வெல்ல முக்கிய காரணம் புஜாரா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின் அபார ஆட்டமாகும்... சுவாரஸ்ய நிகழ்வாக இவர்கள் இருவரும் எதிரெதிர் அணிகளில் ஆடும் சூழல் உருவானது.. ரஞ்சிக்கோப்பையின் முக்கியமான ஆட்டம் ஒன்றில் கர்னாடக சௌராஷ்ட்ர அணிகள் மோதின,, ஆட்டம் சூடு பறந்தது....  முடிவை கடைசி வரை கணிக்க முடியவில்லை... அகர்வால் , புஜாரா என இருவருமே அவரவர் அணிகளுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.. 20 -20 போன்ற தமாஷ்களை விட இது போன்ற ஆடடங்களில்தான் வீரர்களின் கேரக்டர் வெளிப்படுகிறது

  • அபூர்வ ஆலயங்கள் குறித்த நூல் ஒன்று கிடைத்தது... அதை அடிப்படையாக கொண்டு கிராமங்களுக்கு சென்றேன்.... பண்டைய சிவாலயம் ஒன்றைக் கண்டு மகிழ்ந்தேன்...பூட்டப்பட்டு இருந்தது..அக்கம்பக்கத்தார் என் மீது பரிவு கொண்டு பூசாரியை வரவழைத்து , கோயிலை திறந்து சாமி தரிசனம் செய்ய வைத்தனர்... அவர்கள் அன்பில் ஆண்டவனைக் கண்டேன் 


  • கண்ணில் கட்டி வந்து செம வலி.. வலியை மறக்க நிம்மதியாக தூங்கினேன்... காஃபி அருந்த சென்ற போது , கருவாட்டு கூடைக்கார பெண்மணி , கண்ணில் என்னப்பா தம்பி என்றார்... அவர் என் சம வயதினராக இருக்கலாம்... சின்னவராக இருக்கலாம்.. பெரியவராக இருக்கலாம்... அவர் தம்பி என்பது சார் என அழைப்பது போல ஒரு வழ்க்குச்சொல் என நினைத்துக்கொண்டேன்... அல்லது அந்தச்சொல் பரிவை , ஒரு விலகலுடன் கூடிய அன்பை , உரிமையை , தன் உயர்வை காட்டுவதாகவும் இருக்கலாம்...  கண்கட்டி, நாமக்க்ட்டியை அரைத்து பூசி இருக்கிறேன் என்றேன்.. அது சரிப்படாது என சொல்லி விட்டு , ஒரு மருத்துவ டிப்ஸ் கொடுத்தார்... இரவில் அதை செய்தேன்..காலையில். அறவே குணமாகி விட்டது
அவருக்கு நன்றி சொல்ல தேடுகிறேன்.., நாம் நன்றி சொல்ல நினைக்கும் பலரை பார்க்கவே முடிவதில்லை... அவர்கள் நமக்கு செய்தது பிறர்க்கு நாம் செய்வதுதான் நன்றிக்கடன் என நினைத்துக்கொண்டேன்


 

Friday, February 27, 2015

விறுவிறுப்பற்ற உலக கோப்பையும் ஒலவையாரும்


மயிலைப்பார்த்த வான் கோழி டான்ஸ் ஆட ஆசைப்பட்டது போல் , கால் பந்து உலக கோப்பை பாணியில் கிரிக்கெட் நடத்த முயன்று அசிங்கப்பட்டு விட்டார்கள்.

கால் பந்தில் கால் இறுதிக்கு எந்த எட்டு அணிகள் வரும் என்பதில் ஒரு பரபரப்பு இருக்கும்... ஆனால் கிரிக்கெட் ஆடுவதே எட்டு நாடுகள் என்பதால் , கால் இறுதிக்கு வரும் அணிகள் எவை என்பதில் பெரிய சஸ்பென்ஸ் இல்லை...

ஆனால் இந்த அளவுக்கு விளம்பரம் இல்லாமல் நடந்து வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

தமிழகம் - மகாராஷ்ட்ரா... மும்பை- கர்னாடகா அணிகள் அரை இறுதியில் மோதுகின்றன..

பல முறை இறுதி வரை வந்து கோப்பையை தவற விட்ட தமிழகம் இம்முறையாவது வெல்லுமா என பார்க்க வேண்டும்..

காலிறுத்க்கு வரும் எட்டு என்ற எண்ணிக்கை சித்தர் பாடல்களில் முக்கிய இடம் வகிப்பதை பார்த்திருக்கலாம்...

எட்டு எட்டாய் மனித வாழ்க்கையை பிரிச்சுக்கோ என பாட்ஷாவில் ரஜினி பாடுவாரே.. அது சித்தர் பாட தாக்கம்தான்..

ஒரு முறை ஒட்டக்கூத்தர் ஔவையாரை கிண்டலாக பேசி ஒரு விடுகதை போட்டார்.

அவ்வையும் சளைக்கவில்லை..கேலியாக பதில் சொன்னார்

எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது




எட்டு என்பது தமிழில் அ என்ற எழுத்தையும் கால் என்பது வ என்ற எழுத்தையும் குறிக்கும்...


அதாவது அவ லட்சணமே..



எமனின் பரி என்பது எருமை..




பெரியம்மை எனும் மூதேவியின் வாகனம் கழுதை..

அவலட்சணமே,, எருமையே. கழுதையே..குட்டிச்சுவரே... யாரைப்பார்த்து என்ன பேச்சு பேசி விட்டாய்... என கேட்டார்.

அல்லது ஆரை என்பதே நீ கேட்டதுக்கு பதில் என சொன்னதாகவும் எடுத்துக்கொள்ளலாம்///



இந்த பாடலில் இருக்கும் சுவாரஸ்யம்கூட உலக கோப்பையில் இல்லை

Tuesday, December 16, 2014

லிங்கா படத்தை முதல் நாளே பார்த்த கிரிக்கெட் அணி - எல் பாலாஜி ருசிகர பேட்டி

நூறு ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் ஆடிய பெருமையை பெற்றுள்ளார் எல் பாலாஜி.. இவர் சர்வதேச போட்டிகளிலும் கலக்கியவர்.( 8 டெஸ்ட் , 30 ஒரு நாள் ) காயம் காரணமாக அதில் தொடர முடியவில்லை. ஐ பி எல் போட்டிகளிலும் அசத்தினார் அவர். ஹாட் ட்ரிக் எடுத்தவர்.

அவரது நூறாவது போட்டியை முன்னிட்டு அவர் பேட்டி.
 -______________________________________________________________________
2001ல் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தபோது உங்கள் இலக்கு என்னவாக இருந்தது /?

அனைவருக்குமே இந்திய அணியில் ஆட வேண்டும் என்பதே கனவாக இருக்கும். உள்ளூர் போட்டிகளில் சாதிக்கும் கனவும் இருக்கும். இரண்டையும் சாதித்ததில் மகிழ்கிறேன்.

ரஞ்சி போட்டிக்கு முன் கொழும்பு அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் ஆடினேன். தில்ஷான் , முபாரக் ஆகியோருடன் ஆடியது நல்ல அனுபவம்.
அப்போது வலுவாக இருந்த தமிழக அணியில் இடம்பெறுவது ரொம்ப கஷ்டம். ஆனாலும் இடம் பிடித்தேன். முதலில் ஆடும்போது நெர்வசாக இருந்தது. கேப்டன் ராபின்சிங் ஆதரவாக இருந்தார்

உள்ளூர் போட்டிகளில் கலக்கிய நீங்கள் , உங்கள் முதல் சர்வதேச போட்டியில் ரன்களை விட்டுக்கொடுத்தீர்களே. அப்போது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன/?

உள்ளூர் போட்டியில் ஜொலிக்க காரணமாக இருந்த திறமைகள் மட்டும் போதாது என உணர்ந்தேன்.. மன ரீதியாகவும் பேட்ஸ் மேனை திணறடிக்க வேண்டும். இதற்காக மன ரீதியாக என்னை தயார் படுத்திக்கொண்டேன். ஒரு வருடம் கழித்து மீண்டும் வந்தபோது மன ரீதியாக வலுவாக இருந்தேன். சாதித்தேன்

காயம் இல்லாவிட்டால் இன்னும் அதிகம் ஆடி இருப்பீர்கள் அல்லவா

கண்டிப்பாக. 2005ல் காயம் காரணமாக பல போட்டிகளில் ஆட முடியவில்லை. இனி ஆட முடியாது என்றே நினைத்தேன். ஆனால் கடின உழைப்பால் மீண்டு வந்தேன்

அந்த கால கட்டத்தில் யாராவது பேசினார்களா.

ஆமாம்.. ஜாகிர் கான் , ஆசிஷ் நெஹ்ரா போன்றோர் அடிக்கடி பேசுவார்கள். டபுள்யூ வீ ராமன் , ராபின் சிங் கிரிக்கெட் வாரிய தலைவர்கள் உட்பட பலர் என்னை ஊக்கிவித்தபடி இருந்தனர். அவர்கள் இன்றி என்னால் மீண்டு வந்திருக்க முடியாது

இப்போது உங்கள் இலக்கு என்ன

தமிழகத்துக்கு ரஞ்சிக்கோப்பை வாங்கித்தர வேண்டும் என்பதே என் இலக்கு. பலமுறை இறுதிக்கு வந்தாலும் எங்களால் ஜெயிக்க முடியவில்லை. அனைத்து தகுதிகளும் எங்களுக்கு உண்டு. கண்டிப்பாக வெல்வோம்

 நீங்கள் ஆடியதில் உங்களுக்கு பிடித்த மேட்ச், பிடிக்காத மேட்ச் /?

2002- 2003, செமிஃபைனலில் பெற்ற வெற்றி வெகு இனிதான மேட்ச். கடந்த முறை என் தலைமையிலான தமிழக அணி வெல்லும் நிலையில் இருந்தபோதிலும் பெங்காலிடம் தோற்று விட்டது. கண்ணீர் விட வைத்த மேட்ச் அது


நீங்கள் ரஜினி ஃபேன் என்பது தெரியும். அவரிடம் என்ன பிடிக்கும்

அவரிடம் எல்லாமே பிடிக்கும். அவரது ஒவ்வொரு செய்கையுமே ரசிக்கத்தக்க ஒன்றுதான். அவர் படங்கள் எல்லாவற்றையுமே முதல் நாளே பார்த்து விடுவேன். லிங்கா ரிலீசின்போது திண்டுக்கல்லில் இருந்தேன். ஒட்டு மொத்த கிரிக்கெட் அணியும் , கோச் உட்பட , முதல் நாளே லிங்கா பார்த்தோம்.

( அதனால் கிடைத்த ஊக்கத்தினால்தான் , ஜம்மு காஷ்மீருக்கு எதிரான மேட்ச்சில் கலக்குதா..சூப்பர்.. நல் வாழ்த்துகள் )


Thursday, March 22, 2012

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரித்தால் தேச துரோகியா? இஸ்லாமிய நண்பனின் மவுனமும் , எனது அதிர்ச்சியும்


சற்று முன் ஓர் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தேன் , பாகிஸ்தான் பங்ளாதேஷ் மோதும் இறுதி ஆட்டம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது


பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழக்கு. போதெல்லாம் பெரும் கரகோஷம் கிளம்பியது.  எதிர் அணி இந்தியா இல்லைஎனற போதும் , ஏன் இந்த ஆர்வம் ?

பாகிஸ்தானை எதிர்ப்பது  தேசத்துக்கு நாம் ஆற்றும் பெரும் தொண்டு என்பது , சிறுவயதிலேயே நம் மனதில் பதிய வைக்கப்பட்டதே இதற்கு காரணம்..

*************************

எனக்கு இந்த அனுபவம் சிறு வயதில் கிடைத்தது... கபில் தேவ், ரிச்சர்ட் ஹாட்லீ மற்றும் இம்ரான் ஆகியோர் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஆல் ரவுன்டர்கள்... இவர்கள் சம்காலத்வர் என்பதால் , ஒப்பீடு தவிர்க்க இய்லாதது...

மூவரில் சிறந்த்வர் யார் என் சொல்வது கஷ்டம்.. மற்ற இருவரை விட பேட்டிங்க்கில் விஞ்சி நிற்பது ஹாட்லீ என்ற போதும் ,அவர் பவுலிங்க் மற்ற இருவரைவிட சுமார் என்பது என் கருத்து...  கபில் சிறந்த  வீரர் என்றாலும், இம்ரான் கானின் ஆவேசம் ,ஆக்ரோஷம் கபிலுக்கு வராது என்பது என் கருத்து,, என்வே இந்த மூவரில் சிறந்தவர் இம்ரான் கான் என்பது என் தனிப்ப்பட்ட கருத்த். பெரும்பாலான நண்பர்கள் இதை ஏற்கவில்லை..


ஒரே ஒரு  நண்பன் அப்துல் காதர் என்னை ஆதரித்தான்,.

ஒரு நாள் அனைத்து நண்பர்களும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம்.. அப்போது இந்த டாபிக் விவாதத்துக்கு வந்தது. இம்ரான் கானின் பெருமைகளை நான் அடுக்கினேன்..  ஆனால் பெரும்பாலானோர் கபிலை ஆதர்த்தனர்.. என் தரப்பு வலு சேர்க்க யாரும் இல்லை.. அப்துல் காதர் எனக்கு ஆதரவாக பேசுவான் என எதிர் பார்த்து அவன் முகம் பார்த்தேன். அவன் , விவாத்தையே கவனிக்காதவன் போல் முக பாவம் காட்டிக்கொண்டு இருந்தான்,, அவன் ஏன் இம்ரான் கானுக்கு ஆதரவளிக்க்க வில்லை என்பது அந்த சம்ப்வம் நடந்து சிலஆ ண்டுகள் கழித்துதான் புரிந்தது...

**************************************************************

சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் க்ரிக்கெட் போட்டி நடந்தது அல்லவா,, அதை  நண்பர்களுடன் சேர்ந்து தொலை காட்சியில் பார்த்தேன்.. போட்டி முடிந்து அனைவரும் சென்ற பின் நானும் சேகர் என்ற நண்பனும் தனியாக பல விஷ்யங்கள் பேசி கொண்டுஇ ருந்தோம்...   அப்போது அவன் " ரஹீம் உண்மையிலேயே கிரேட் டா " என்றான்..

" ஏன்டா "

" அவன் முஸ்லீமாக இருந்தால் கூட பாகிஸ்தானை ஆதரிக்காமல் , இந்தியாவை ஆதரித்த்து கை தட்டினானே " என்றான்   


எனக்கு அதிர்ச்சியாக இருந்தது... கிரிக்கெட் அணியை ஆதரிப்பதில் மதம் எங்கிருந்து வந்தது ?  முஸ்லீமாக இருந்தால் பாகிஸ்தானை ஆதரிக்க கூடாதா ? இந்திய அணியை ஆதரித்து நாட்டு பற்றை நிரூபிக்க வேண்டுமா ?

 நாட்டு பற்றை அளக்கும் மீட்டர் கிரிக்கெட்டா ?

அபத்தம்...



ஒருவர் பாகிஸ்தான் அணியை ரசித்தால் அது அவர் தனிப்பட்ட விருப்பம்...  எந்த மதத்தவராக இருந்தாலும், இதை வெளிப்படையாக சொல்லும் நிலை வேண்டும். இந்த் சிறிய விஷ்யம் கூட நம் நாட்டில் சாத்தியம் இல்லை என்பது கேவலம்...


 

Friday, March 9, 2012

ராகுல் திராவிட்- மறக்கப்பட்ட கேப்டன் சாதனைகள்

ராகுல் திராவிட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். பெருமைமிகு சகாப்தம் நிறைவு அடைந்து இருக்கிறது. தென் இந்தியர் என்பதால் , அவருக்கு உரிய மரியாதையோ , புகழோ கிடைக்கவில்லை..

ஆனாலும் கூட , அவர் ந்ல்ல பேட்ஸ்மேன் என்பதை மறைக்க நினைத்தாலும் , மறைக்க முடியவில்லை..
ஆனால் அவர் நல்ல கேப்டனும்கூட என்பது பலருக்கு நினைவு இருக்காது. தோனி போன்ற பலரை , அவர் தலைமையின் கீழ்தான் உருவாக்கினார். அவர் கேப்டன்ஷிப் சாதனைகள் சில...


  • அவர் தலைமையில்தான், இந்திய அணி தர வரிசைப்பட்டியலில் , ஏழாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது (  04/16/06)
  • பின் வரிசை ஆட்டக்காரர்களான தோனி , இர்ஃபான் பதான் போன்றோரை டாப் ஆர்டரில் இறக்கி பரிசோதனை செய்தார். அணிக்கும் வெற்றி கிடைத்தது. வீரர்களின் திறமையும் வெளிச்சத்துக்கு வந்தது
  • தொடர்ந்து எட்டு போட்டிகளில் வென்றது முன்பு சாதனையாக இருந்தது. இவரது அணி அந்த சாதனையை சமன் செய்தது
  • தொடர்ந்து  14 போட்டிகளில் வென்று வெஸ்ட் இண்டீஸ் செய்த சாத்னையை இவர் அணி முறியடித்தது
  • ஒரு நாள் போட்டிகளில் அதிக அளவு சராசரி வெற்றி விகிதம் வைத்துள்ள இந்திய கேப்டன் இவர்தான் .( 62.16% ) 

Saturday, March 5, 2011

உயிரை (உண்மையிலேயே ) கொடுத்த வீரர் – மறக்க முடியாத கிரிக்கெட் சம்பவங்கள்- 1



கிரிக்கெட் இன்றைய அவசர காலத்துக்கு ஏற்ப வெகுவாக மாற்றம் அடைந்து விட்டது.
இது நல்லதுதான் என்றாலும், இதில் ஒரு முக்கிய இழப்பு ஏற்பட்டுள்ளதை நீண்ட நாள் ரசிகர்கள் மறுக்க முடியாது.
ராஜஸ்தான் ராயல் அணி சென்னையை , ட்வெண்டி ட்வெண்டி ஃபைனலில் , முன்பொரு ஃபைனலில் வீழ்த்தியது அல்லவா? அப்போது சென்னைக்கு பாதகமாக என்ன நிக்ழந்தது? அந்த போட்டியிம் டர்னின்ங் பாயிண்ட் என்ன?
இப்போது யாருக்கும் நினைவு இருக்காது… காரணம் அடுத்தத்து நடக்கும் பந்தயங்கள்.. அடுத்தடுத்த நிகழ்வுகள்…அதற்கு பின், சென்னை வென்றது…
அதில் கடைசி கட்டத்தில் அமைத்த ஃபீல்டிங் வியூகம் , வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது..
முன்பெல்லாம் இது போன்ற சம்பவங்கள் வெகுகாலம் மனதில் நிற்கும்.. இப்போது அப்படி இருக்க வாய்ப்பில்லை…
அந்த வகையில், நினைவில் நிற்கும் சில பழைய சம்பவங்களை யோசித்து பார்த்தால் , கிரிக்கெட் எவ்வளவு தூரம் கடந்து வந்து இருக்கிறது என்பது புரியும்…
இதோ சில சுவையாக சம்பவங்கள் உங்கள் பார்வைக்கு…

இப்படி ஓர் ஐடியா
  • இங்கிலாந்தும் , மேற்கு இந்திய தீவுகளும் ஒரு போட்டியில் கடுமையாக மோதின.. பரபரப்பான கட்டம்.. மே.இ. தீவுகளுக்கு மூன்று ரன் தேவை… கடைசி பந்து.. இங்கிலாந்து கேப்டன் மைக் பிரர்லீ ஓர் ஐடியா செய்தார்.. அனைத்து ஃபீல்டர்களையும் – விக்கட் கீப்பர் உட்பட- எல்லை கோட்டுக்கு அனுப்பினார்…. பத்து பேரும் எல்லை கோட்டில்… ஆகவே ஃபோர் அடிக்க வாய்ப்பே இல்லை… சிக்ஸ் அடித்தால்தான் உண்டு… அந்த வியூகம் இங்லாந்துக்கு வெற்றி தேடி தந்தது… ( ஆனால் இது போல அனைவைரையும் , எல்லை கோட்டுக்கு அனுப்ப கூடாது என பிறகு விதி முறை கொண்டு வரப்பட்டது. )
திருட்டு வெற்றி அல்ல,,, உருட்டு வெற்றி
  • ஆஸ்திரேலியா – நியூசிலாந்து போட்டி. இறுதி ஆட்டம்… நியூசிலாந்துக்கு ஆறு ரன் தேவை, கடைசி பந்தில்.. ஆஸ்திரேலியா கேப்டன் கிரக் சேப்பல் , அப்போது பந்து வீசிய தன்  தம்பிக்கு ஐடியா கொடுத்தார்..
        என்ன ஐடியா?
         பந்தை உருட்டி விடு..அவர்கள் எப்படி சிக்ஸ் அடிக்கிறார்கள் பார்க்கலாம்..
இந்த ஐடியா வேலை செய்தது… ஆஸி அணி வென்றது ( இந்த கொடுமையை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்கவே, இப்படி உருட்ட கூடாது என பிறகு விதி முறை கொண்டு வரப்பட்டது )

 

    image
போட்டி வேண்டாம்.. கோப்பை வேண்டும்
  • மூன்றில் இரண்டு போட்டிகளில் வெல்லும் அணிக்கு கோப்பை என்ற நிலை. முதல் ஆட்டத்தில் மே.இ. தீ அணி வென்றது . பரபரப்பான இரண்டாம் ஆட்டம்… கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெல்லலாம் என்ற நிலையில், மே இ அணி இருந்தது.. ஆனால் வெற்றி ரன் எடுக்க முடியவில்லை… அதாவது மேட்ச் டை ஆகி விட்டது . இரண்டு ஆட்டங்கள் முடிந்த நிலையில், மே இ அணி 1-0 என்ற நிலையில் முன்னணியில் இருந்தது… “ நாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம். கடைசி ஆட்டத்தில் நாங்கள் தோற்றாலும், தொடரை இழக்க மாட்டோம்..  எனவே மூன்றாம் ஆட்டம் வேண்டாம்.. கோப்பையையும், கன்வேயன்சையும் கொடுங்கள் ..கிளம்புகிறோம் “ என்று அடம் பிடித்தனர் மே இ அணியினர்.. ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது… தொடர் சமன் ஆனாலும் பரவாயில்லை என கடைசி ஆட்டத்தை நடத்தினர்… நல்லவேளையாக அதில் வென்று 2-0 என்ற கணக்கில் மே இ அணி கோப்பையை கைப்பற்றியது…
கிரிக்கெட் விளையாட்டில் ஜெயித்தேன்.. விதியின் விளையாட்டில் ?
  •     கவாஸ்கர் ஓய்வு பெற்று விட்ட நிலையில், நல்ல ஓப்பனர் இல்லாமல் இந்தியா தடுமாறியது.. அப்போது File:Ramanlambadelhi1.jpgவந்து அணியில் சேர்ந்தவர்தான் ராமன் லம்பா… டெஸ்டை விட, ஒரு நாள் போட்டியில் அசத்தினார்…. ஒரு ரவுண்ட் வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அப்போது நடந்த உள்ளூர் ஆட்டம் அனைத்தையும் மாற்றும் என யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது..
துலீப் டிராப்பி ஆட்டத்தில் மேற்கு மண்டலமும் , வடக்கு மண்டலமும் மோதின.. அப்போது இரு அணியினருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்தது… கடைசி நாள் ஆட்டத்தில், ரஷீத் பட்டேலுக்கும் ( இவர் ஒரு போட்டியில் இந்தியாவுக்கு ஆடியுள்ளார் ) , ராமன் லம்பாவுக்கும் கடும் சண்டை ஏற்பட்டு , கைகலப்பில் முடிந்தது…இதனால் இருவரது கிரிக்கட் வாழ்வும் முடிவுக்கு வந்தது..
இந்திய அணியில் இடம் இல்லை என்ற நிலையில், வங்க தேச கிளப் ஆட்டங்களில் ஆட தொடங்கினார் லம்பா.
ஓர் ஆட்டத்தில், ஷார்ட் லெக்கில் , பேட்ஸ்மேனுக்கு அருகில், நின்று ஃபீல்ட் செய்தார் லம்பா.. ஹெல்மட் அணியவில்லை.. அப்போது பேட்ஸ் மேன் அடித்த ஒரு பந்து அவர் தலையை கடுமையை தாக்கியது… பதறிபோன அனைவரும், அவர் அருகில் சென்றனர்.. “ என்ன ஆச்சு ? “ என்றார் விக்கட் கீப்பர் .. “ நான் சாக போகிறேன் “ வேதனையில் முனகினார் லம்பா…
அதன் பின் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் அவர்…

( தொடரும் )

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா