Friday, March 22, 2019

ஆல்வின் காளிச்சரண் சொன்ன அற்புத நிகழ்ச்சி


கிரிக்கெட் உலக வரலாற்று நாயகர்களில் ஒருவரான ஆல்வின் காளிச்சரண் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றை ஹிந்து  நாளிதழ் ஏற்பாடு செய்திருந்தது

அவர் எழுதி வெளியாக இருக்கும் கலர் ப்ளைண்ட் ( நிறக் குருடு ) நூலுக்கான முன்னோட்ட நிகழ்ச்சி இது

 பெரிய விளம்பரங்களோ அறிவுப்புகளோ இன்றி  நூல் முன்னோட்ட நிகழ்ச்சிக்கு தமிழ் நாட்டில் இவ்வளவு கூட்டமா என ஆச்சர்யமாக இருந்தது’

கேள்விகள் நிகழ்ச்சியின்போது  , பார்வையாளர்கள் ஷார்ப்பாக சுருக்கமாக கேள்விகள் கேட்டது ஆச்ச்ரயமாக இருந்தது

குறித்த நேரத்தில் ஷார்ப்பாக நிகழ்ச்சியை ஆரம்பித்தது  குறித்த நேரத்தில் பார்வையாளர்கள் அனைவரும் வந்திருந்து அரங்கை நிரப்பியது , அப்புறம்டா மச்சி என போனில் மொக்கை போடாதது என அதிசயத்து அமர்ந்து இருந்தேன்..

அதே தமிழ் நாடு.. அதே தமிழக மக்கள் ,   ஆனால் தமிழ் நூல் நிகழ்ச்சிகளில் இவர்களது வேறு விதமாகவும் ஆங்கில நூல் நிகழ்ச்சிகளில் வேறு விதமாகவும் இருப்பது ஏன் என  காரணம் தெரியவில்லை


கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய மற்ற பணிகளுக்காக தமிழ் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தோர் ஏராளம் .. புலம்பெயர்ந்து கஷ்டப்பட்டு அவமானங்களை சந்தித்து மரணங்க்ளை சந்தித்து அந்தந்த நாடுகளின் குடிமகன்களாக மாறிப்போனவர்கள் பலர்.. மனதில் ஆழத்தில் தமிழ் என்ற உணர்வு அவர்களுக்கு இருக்கும்.. அந்த உணர்வை நாம் புரிந்து கொள்வது கடினம்


ஆல்வின் காளிச்சரண் பல சுவையான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்,... அவை எல்லாம் நூலில் வெளி வரக்கூடும்.. வராவிட்டால்  நான் எழுதுவேன்..


நிகழ்ச்சியில் என் ராம் அவருடன் உரையாடியது அழகு என்றால் விவி குமாரின் பேச்சும் அவர் நினைவுகூர்ந்த தகவல்களும் அருமை..

காளிச்சரண் குறிப்பிட்ட ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று

ஒரு முறை தென் ஆப்ரிக்காவில் சிலரால் கடத்தப்பட்டார் அவர்.. அப்ப்படி கடத்தப்படுபவர்கள் உயிருடன் மீள்வது அரிது... அவரிடம் இருந்த பணத்தை எடுக்க சொன்னார்கள்..  அவர் தலை மீது துப்பாக்கியை வைத்து இருந்தனர்

சங்கிலியை கழட்ட சொன்னார்களாம்.. அது சத்ய சாய் பாபா அளித்த சங்கிலி அது... பார்த்து விட்டு கொடுத்து விட்டார்கள்...என்ன தோன்றியதோ...அவரை அப்படியே விட்டு விட்டு , எதையும் திருடாமல் விட்டு விட்டனர்


பிறகு இந்தியா வந்தபோது சாய் பாபாவை சந்த்தித்தார்...

ஸ்வாமி...என் உயிரை காத்தமைக்கு நன்றி என்றார்

பாபா சொன்னாராம்... “ எந்த சம்பவத்தை சொல்கிறாய்..தலை மீது துப்பாக்கி வைத்தார்களே..அதுவா ? “ என்றாராம்

நம்மை சுற்றி எத்தனையோ அற்புதங்கள்..ஆனால் நன்றியுடன் வாழ்பவர்கள் சிலரே...

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா