Monday, March 18, 2019

ருத்ரம் எனும் அரு மருந்து


பொங்கல் முடிந்து விட்டால் , இனி வறட்சியான காலம் , பண்டிகைகள் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து விட்டன என தோன்றும்

ஆனால்  நம் மக்கள் வாழ்க்கையை கொண்டாடுபவர்கள்.. அர்த்தமற்ற கேளிக்கைகள் என இல்லாமல் அனைவருடன் அன்பை பகிர்ந்து கொள்ளும்வண்னம் கொண்ட்டாட்டம் , விழா , பண்டிகை இருக்கும்

சிவராத்திரி அன்று இரவு முழுக்க உணவையும் அறிவையும் ஞானத்தையும் பரிமாறினார்கள்

பிரதோஷம் அன்று ஒவ்வொரு கோயிலும் விழாக்கோலம் பூண்டு இருந்தது

 நான் கூட்டம் குறைவாக இருந்த , ஒரு புராதான ஆலயம் சென்றேன்... அதிர்வு மிக்க ஆலயம்..

ருத்ரம் அந்த அமைதியான சூழலில் அற்புதமாக இருந்தது

வேதங்களின் இதயம் ருத்ரம் என சொல்லப்படுகிறது
வேதம் என்பது இறை சக்தியை ஒலி வடிவாக்கி உணர முயல்தல்...  உச்சரிப்பு முக்கியம் ..   வேதம் இரண்டு காண்டங்களை கொண்டது... கர்ம காண்டம்.. ஞான காண்டம்

உப நிஷத் என்பது ஞான காண்டம்..

வேதத்தில் நான்கு பாகங்கள் இருக்கும்.. சம்ஹிதை , பிரம்மாணம் , ஆரன்யகம் கடைசியாக உபனிஷத்

ருத்ரம் என்பது ஞானத்தை சொல்லும் உப நிஷத்துவில் இல்லை... கர்ம காண்டத்தில் உள்ளது.. ஆனால் ருத்ரோபனிஷத் என அழைக்கப்படுகிறது

அதாவது ஞானத்துக்கும் கர்மத்துக்கும் பாலமாக இருப்பது ருத்ரம் மட்டுமே

பல் வேறு அரிய மந்திரங்களில் தொகுப்புதான் ருத்ரம்.. எதை எதை எப்படி எதற்கு எப்போது எங்கு சொல்ல வேண்டும் என முறை இருக்கிறது.

அதை போக போக பார்ப்போம்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா