Saturday, March 30, 2019

சொற்களை சேர்த்து எழுதுதலில் இலக்கண நூல்கள் காட்டும் நெறி


சொற்களை சேர்த்து எழுதுவது...பிரித்து எழுதுவது குறித்து தமிழில் முறையான இலக்கண வரையறைகள் உண்டு,,, ஆனால் பலர் இதை முறையாக பின்பற்றுவது இல்லை

நல்ல பெண் , நல்ல வேலை , நல்ல வெயில் என்பதில் இரண்டு சொற்கள் உள்ளன,,, இதை இப்படியும் சொல்லலாம்.. பண்பான பெண் , கவுரவமான வேலை , கொடூரமான வெயில்... இப்படி வெவ்வேறு விதமாக வார்த்தைகளை சேர்த்து , வெவ்வேறு காம்பினேஷன் களில் எழுதுவது நெகிழுந்த்தன்மையுடனான சொற்சேர்க்கை ஆகும்

ஆனால் சிலவற்றை அப்படி மாற்ற முடியாது,,, நல்லபாம்பு , பல்கலைக்கழகம், இளங்கலை , கணிப்பொறி , எழுதுகோல்

இவற்றை பிரித்து எழுதினாலும் தனிச்சொற்களின் அர்த்தம் மாறாது எனினும் இவற்றை சேர்த்துதான் எழுத வேண்டும்...

இவை உறுதியான சொற்சேர்க்கைகள் ஆகும்

திருச்சிராப்பள்ளி , கேட்டுப்பார் , சொல்லித்தா,,, என்பது மேலும் சில உதாரணங்கள் ஆகும்

ஒன்பது வகையான கூட்டுச்சொற்கள் குறித்தும் அவற்றின் இயல்பு குறித்தும் நம் இலக்கண நூல்கள் அழகாக விவரித்து உள்ளன

மேலும் சில சொற்சேர்க்கைகளை மட்டும் பார்ப்போம்

கூட்டு வினையெச்சங்கள்

செய்யாதிருந்து,, ( செய்யா திருந்து அல்ல,,,, செய்யாது இருந்தும் அல்ல,,, செய்யாதிருந்து ) செய்யாமலிருக்க , செய்யாவிட்டால் , சொன்னபடி , பேசியவண்ணம் என்றே எழுத வேண்டும்

( தொடரும் )

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா