Friday, March 15, 2019

ராஜம் கிருஷ்ணன் படைப்புலகம்


இலக்கிய மதிப்பால் , கலை நேர்த்தியால் கவனம் பெறும் படைப்புகள் உண்டு..

சுவாரஸ்யத்தை வைத்து கவனம் பெறும் படைப்பாளிகள் உண்டு

சில எழுத்தாளர்களின் முதன்மை அடையாளம் என்பது செயல்பாட்டார்கள் என்பதும் போராளிகள் என்பதும்தான்.. இவர்கள் எழுத்துகளுக்கு ஆவண மதிப்பு உண்டு...

இதில் ராஜம் கிருஷ்ணன் அவர்களை எப்படி வகைப்படுத்துவது?

ஒரு கடையில் ஒரு பெண் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு இருந்தார்.. ரமணி சந்திரன் , முத்துலட்சுமி ராகவன் என பெண் எழுத்தாளர்கள் புத்தகங்களை பார்த்து பார்த்து செலக்ட் செய்தார்.. ராஜம் கிருஷ்ணன் நூல்களை லாகவமாக தவிர்த்து விட்டார்

அவரை பெண்ணிய எழுத்தாளர் என்று நினைத்து பல ஆண்களும் படிப்பதில்லை

எனவேதான் அவர் எழுத்தாளர்களால் மதிக்கப்பட்ட , தலைவர்களால் நேசிக்கப்பட்ட , இயக்கங்களால் சக போராளியாக கருதப்பட்ட ஆளுமையாக அவர் இருந்தாலும் , சராசரி வாசகனிடம் புகழ் பெற்ற வெகு ஜன எழுத்தாளராக அவர் இல்லை..


அவர் எழுத்துலகை அலச வேண்டுமானால் நிறைய எழுதியாக வேண்டும்.. காரணம் ஏராளம் எழுதிக்குவித்தவர் அவர்

எனவே அனைத்தையும் அலசாமல் ஒரே ஒரு சிறு கதை தொகுதியை மட்டும் அலசுவோம்.. அதை வைத்து அவர் எழுத்து பாணியின் டிரண்டை புரிந்து கொள்ளலாம்


கனவு என்ற சிறுகதை தொகுப்பை பார்ப்போம்..    ( தாகம் பதிப்பகம் )

இதில் கனவு , பசுமை , வந்த காரியம் , மின்னி மறையும் வைரங்கள் , காட்டுக் கோழி , ஆற்றோட்டம் , சேதப்பட்டபோது , கூண்டுக்கடிகாரம் , மல்லிகைப்பூ , மழை , ஒளிரும் நுண்ணிழை , பங்கி , பணம் வேண்டுமா, வேர்கள் ,பவுடர்


ஆகிய கதைகள் இதில் உள்ளன

வறுமை , உறவுச்சிக்கல்கள் , ஆன்மிக தேடல் , இளமை வேகம் , மனிதம் அடையும் உச்சங்கள் வீழ்ச்சிகள் , காதல் என பேசு பொருட்கள் பலவாக உள்ளன

எந்த விறுவிறுப்போ , கலை அம்சமோ இல்லாமல் நேரடியாக இருக்கும் “ சேதப்பட்டபோது “ கதை முதல் , பூடகமான கதை சொல்லல் முறையில் அமைந்துள்ள வேர்கள் வரை கதைகள் பல தளங்களில் அமைந்துள்ளன

பவுடர் என்று ஒரு கதை.. ஒரு இளம் பெண் குடும்ப விழா ஒன்றுக்கு செல்ல வேண்டும்.. வறுமையில் வாழும் அவள் ஓரளவு நல்ல ஆடை அணிந்து செல்லும் நிலையில் இருக்கிறாள்.. ஆனால் பவுடர் போடாமல் வெற்று முகத்தோடு செல்ல விரும்பவில்லை... அது அநாகரிகமாக தோன்றும்.. இது போன்ற சிக்கல்களை கடந்த காலத்தில் பல விதங்களில் சமாளித்து இருக்கிறாள்,,,// கேஷுவலாக அண்டை வீட்டுக்குப்போய் பேசுவது போல பேசி , தற்செயலாகவோ தெரியமலோ கொஞ்சம் பவுடரை எடுத்துக்கொள்வது , நேரடியா கேட்டு வாங்குவது என பல வழிகள்.. ஆனால் இன்று எதுவும் செல்லுபடியாகவில்லை

காரணம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை.. கடைசியாக தோழி ஒருவள் வீட்டுக்கு போகிறாள்..அவள் கணவன் மட்டுமே இருக்கிறான்.. அவள் இல்லாதபோது , அவள் வீட்டுக்குபோவது தவறு என்றாலும் பவுடர் வெறி அவள் கண்ணை மறைக்கிறது என்பது கதையின் சாரம்

இன்று நம்மிடம் அந்த அளவு வறுமை இல்லாது இருக்கலாம்.. பவுடர் என்பது வழக்கொழிந்து போய் இருக்கலாம்

ஆனால் பவுடர் என்ற இடத்தை எத்தனையோ விஷ்யங்கள் பிடித்து வைத்துள்ளன என்பதை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம்.. மனம் கசிந்து கண்ணீர் விடுகிறோம்..

ஆக , அந்த கதை அன்றைய கதை மாந்தரை வைத்து புனையப்பட்டாலும் என்றைக்கும் உரிய கதையாக மிளிர்கிறது... அதுதான்  எழுத்தின் வெற்றி

காட்டுக்கோழி கூண்டுக்கடிகாரம் போன்றவை அழகான குறியீட்டுக்கதைகள்

மல்லிகைப்பூ என்றொரு கதை

மலம் அள்ளும் தொழில் ஒழிந்து அதை இயந்திரமயமாக்க வேண்டும் என்ற விருப்பத்தை சமூக உணர்வோடு பதிவு செய்துள்ளார்

ஆனால் இப்போதைய சூழல் , அந்த தொழிலும் எளிது அல்ல.. அதிலும் போட்டிகள் உண்டு... இது பலருக்கு தெரியாது...

இதை கதை பதிவு செய்தாலும் கதையின் சாராம்சம் அது அல்ல... அந்த தொழிலில் இருப்பவனின் வாசம் சார்ந்த உயர் ரசனைதான் கதை

இப்படி பல்வேறு பார்வைகள்... அணை கட்டுதல் , தனி ஊசல் ஃபார்முலா என பெண் எழுத்தாளர்கள் என்று அல்ல.. பல ஆண் எழுத்தாளர்களே தொடாத விஷ்யங்கள் என மிளிர்கிறது தொகுப்பு

இலக்கிய கூட்டங்களில் இவர் குறித்த விவாதங்கள் நடத்தி மீள் வாசிப்பு செய்யவேண்டியது நம் கடமை

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா