Wednesday, March 13, 2019

ராஜம் கிருஷ்ணன் - அன்பு சூழ் உலகில் வாழ்ந்த அற்புதம்


ராஜம் கிருஷ்ணன் அவர்கள் ஒரு நாவலாசிரியாக அறியப்பட்டு இருந்தாலும் அவர் நல்ல சிறு கதை எழுத்தாளரும்கூட

எழுத்து என்பதை மானுடத்தை உயர்த்தும் ஒரு கருவியாக நினைத்தவர் அவர்.. அகச்சிக்கல்கள் , மன சிடுக்குகள் போன்றவற்றை விட புறக்காரணிகளை அதிகம் அலசியவர் அவர்

ஆனால் நாவல் , சிறுகதை ஆகியவற்றை விட அவரது கட்டுரைகளில்தான் இலக்கிய அம்சம் கூடுதலாக புலப்படுகிறது

மதம் , சமூகம் , பண்பாடு என்ற பெயரில் பெண்களை அடிமைகளாக வைத்திருக்க முயலும் மனப்பாங்கை அழகாக அவர் எழுத்து சொல்கிறது -ஆதாரப்பூர்வ தரவுகளுடன்

இன்று அறிவியலும் தொழில் நுட்ப வளர்ச்சியும் அதையே செய்ய முனைவது மாபெரும் துன்பவியல் நிகழ்வாகும்

எழுத்து சமூகத்தை மாற்றுமா என்பது ஒரு நிலையான கேள்வி

இவரைப்பொறுத்தவரை , சமூகம் இவரை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது

பாரம்பரிய குடும்ப சிந்தனைகளோடு லட்சியவாத சிந்தனைகளோடு ஆரம்பித்த இவர் எழுத்துப்பயணம் விளிம்பு நிலை மக்களுடனான பழக்கம் , சோவியத் யூனியன் பயணம் போன்றவைகளால் நிறைய மாறியது... கம்யூனிட் மண்ணில் பெண்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பும் , உரிமையும் இவரை நிறையவே மாற்றியது

அனைத்து தரப்பினருனே இவர் மீது மரியாதை வைத்து இருந்தனர்... உயிருடன் இருந்தபோதே இவர் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன,,,

இவர் உடல் நலம் குன்றி சுய நினைவு இழக்கத்தொடங்கிய கடைசி நாட்களில் எழுத்தாளர்கள் சிலர் சேர்ந்து அவரை வரவழைத்து ஒரு பாராட்டுக்கூட்டம் நடத்தினர்,, நாற்காலியில் அமர்ந்தபடி அவர் ஆழ் உள்ளம் அதைக்கண்டு மகிழ்ந்தது... ஓர் எழுத்தாளருக்கு இப்படிப்பட்ட அன்பான சுற்றம் அமைவது அரிது

தன் செல்வங்களை எல்லாம் பிறருக்கே செலவிட்ட்டவர் இவர்... ஏழைச்சிறுவர்கள் , குடிசைவாசிகள் பலரை தன் காசில் படிக்க வைத்தவர்.. அதற்கு அவர் கணவரும் ஆதரவாக இருந்தார்


இந்த தர்மம் அவரை கை விடவில்லை.. கடைசி வரை அவர் பிறரால் பேணப்பட்டவராக இருந்தார்,., ராமச்சந்திரா மருத்துவமனையில் நல்ல மதிப்புடன் கடைசிக்காலத்தில் கவனிக்கப்பட்டார்

உறவினர்கள் யாருடைய ஆதரவும் இல்லாமல் முழுக்க முழுக்க நண்பர்களால் , சக எழுத்தாளர்களால் ஆதரவுடன் ஒரு பெண் வாழ்ந்தார் என்றால் அதற்கு காரணம் அவரது எழுத்து ... அவரைச்சுற்றி இருந்த நல் உள்ளங்கள்

இருக்கும்போது தன் உழைப்பை  , செல்வத்தை பிறருக்காக செலவிட்ட இவர் இறந்த பின்ன்னும் தன் உடலை ராமச்சந்திரா மருத்துவமனை ஆராய்ச்சிக்காக கொடுத்து விட்டே சென்றார்

மீள் வாசிப்பு செய்து அடிக்கடி நினைவுகூரப்பட வேண்டிய எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

1 comment:

  1. //நாற்காலியில் அமர்ந்தபடி அவர் ஆழ் உள்ளம் அதைக்கண்டு மகிழ்ந்தது... ஓர் எழுத்தாளருக்கு இப்படிப்பட்ட அன்பான சுற்றம் அமைவது அரிது
    ​//

    நெகிழ்ச்சி.

    என் தந்தை சில பத்திரிகைகளில் அந்தக் காலத்தில் சிறுகதைகள் எழுதி இருக்கிறார். நீங்கள் சொல்லும் இந்த நிகழ்வு அவருக்கும் தந்தார் எழுத்தாளர் திரு கர்ணன். ​

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா