Tuesday, March 19, 2019

என் ஆர் தாசன் - எழுத்துகள்


 தமிழில் நல்ல எழுத்துகள் எத்தனையோ உண்டு... பலர் எதையுமே படிப்பதில்லை...

நமக்கு முன்னால் என்னவெல்லாம் எழுதி இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டால்தான் அதை விட மேலே சென்று அடுத்த கட்டத்துக்கு பயணிக்க முடியும்.. மீண்டும் மீண்டும் எழுதியவற்றையே எழுதுதல் தேவை இல்லாதது.. நமக்கு அது புதிதாக இருக்கலாம்.. ஆனால் இலக்கிய உலகுக்கு அது பழையதாக இருக்கும் என்பதால் புறக்கணித்து விடும்..

எழுத்தாளர் என் ஆர் தாசன் குறித்தும் அவரது சிறுகதைகள் குறித்தும் முன்னரே குறிப்பிட்டு இருக்கிறேன்,,,

அவரது கவிதைகள் , உருவக கதைகள் அடங்கிய நூலில் இருந்து சில பகுதிகள்

-----

என் கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லை

மீண்டும் கேட்கிறேன்

எங்கிருந்து வந்தாய்

புன்னகை செய்கிறாய்

நட்சத்திரங்கள் பார்க்கிறாய்

பதில் மட்டும் இல்லை

மீண்டும் கேட்கிறேன்

எங்கிருந்து வருகிறாய்

வெகு நேரம் கழித்து பதில் வருகிறது

எங்கு இருந்தேன் ? வருவதற்கு ?

--------


உன் வீணையில் மட்டும் ஏன்
இவ்வளவு இனிய இசை?
பலா மரத்தாலான வீணை என்கிறாய்..

உன் பேச்சிலும் அசைவிலும் அமுத ஸ்வரங்கள்

எந்த மரத்தாலான வீணை நீ

------

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா