Tuesday, March 12, 2019

சாருவின் மயான கொள்ளை நாடகம் - என் பார்வையில்


சிவராத்திரி என்பது ஒரு தனித்துவமான இரவு...

ஆலயங்களில் ஆகம முறைப்படி இறைவனை வழிபடுவது ஒரு விதம் என்றால் , மயானங்களில் சிற்றாலயங்களில் நடக்கும் சிவபூஜை வேறு விதம்

உண்மையான பக்தியுடன் ஒரு புறம் , உக்கிரமான பக்தியுடன் ஒரு புறம் என இரண்டுமே நடக்கின்றன

( சினிமா பார்த்து சிவராத்திரி அனுசரிக்கும் விளையாட்டுத்தனத்தை இதில் சேர்க்கவில்லை )

சிவ ராத்திரிக்கு பக்திபூர்வமான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும்  திரு நங்கைகளுக்கும் சிவராத்திரிக்குமான தொடர்பை விளக்கும் கதை சற்றே வித்தியாசமானது

அந்த காலத்தில் வல்லாளன் என்றொரு அரசன் இருந்தான்.. பேராசை மிக்கவன்..பதவி வெறி தவிர எதுவும் அறியாதவன்

கடும் தவம் இயற்றி சிவனே தன் மகனாக பிறக்க வேண்டும் என்ற வரத்தை பெற்று விட்டான்

கொஞ்ச நாட்களில் அவன் மனைவி கர்ப்பம் தரித்தாள்..

அவளைப்பார்க்க ஒரு குறி சொல்லும் பெண் வந்தாள்...

அரசனே.. உன் மனைவியின் வயிற்றில் இருப்பது அழிக்கும் கடவுள் சிவன்,,, அவன் பிறந்ததும் முதலில் அழிக்கப்போவது உன்னைத்தான் என்றாள் அந்த குறி சொல்லும் பெண்

பயந்த அரசன் , அரசியை சிறைவைத்தான்... குறிசொல்லும் பெண் தன் உருவத்தை பணியாள் போல மாற்றிக்கொண்டு அரசியின் சிறைக்கு சென்றாள்.

அரசியின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்தாள்

அந்த குழந்தை சிவனாக மாறி அரசனை அழித்தது... அந்த ஊரை அழித்தது,,, அந்த ஊரே ஒரு சுடுகாடாக மாறியது

அந்த குழந்தை சிவ வடிவம் எடுத்தது,, பணிப்பெண் பார்வதி ஆனாள்.. இருவரும் ஓருடல் ஆகினர்,,, ஆண் பாதி பெண் பாதி என திரு நங்கை எனும் குலம் உருவானது

ஆணும் பெண்ணும் கலந்தவர்கள்தான் நாம் ஒவ்வொருவரும்... இதை மறந்து பெண்களுக்கு எதிராக செயல்பட ஆண்கள் ஆரம்பித்தால் ஊரே சுடுகாடு  ஆவதை யாரும் தடுக்க முடியாது... ஒரு பெண் பாதிக்கபடுகிறாள் என்றால் அவள் மீது அன்பு கொண்ட  ஆணும்தான் அழுகிறான்...

பாதிக்கப்படாத சிலர் இருக்கலாம்... பிரச்சனைகளை எப்படி அரசியலாக்கலாம்,,, வக்கிரமாக செய்திகளை பரப்பி கிளுகிளுப்பு அடையலாம் என நினைப்போரும் அக்கிரமக்காரர்களின் இன்னொரு வடிவம்தான்

அனைவரும் சேர்ந்து அழிவார்கள் என்பது இயற்கை விதி

இதைத்தான் மயான கொள்ளை கதை சொல்கிறது


இந்த தொன்மத்தை வெகு அழகாக மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் சாரு

 பின் நவீனத்துவம் என்பது நாடக வடிவில் தமிழில் வந்ததில்லை.. நம் ஊரில் நாடகம் என்றால் நகைச்சுவை தோரணங்கள் அல்லது ஏதாவது ஒரு பிரச்சாரம்...

கலை வடிவில்  ஒரு தமிழ் நாடகத்தை பார்ப்பது புதிய அனுபவம்

 கல்பனா என்ற பெண் திரு நங்கையர் மீது பரிவு கொண்டு அவர்களை பேட்டி காண வருகிறாள்

எங்கள் மீது பரிவு காட்டுவது நல்லதுதான்... ஆனால் உன் நிலை எப்படி இருக்கிறது என்பதை யோசித்து இருக்கிறாயா என அவளை அவளுக்கே காட்டுகின்றனர் அவர்கள்

கடைசியில் அவள் எப்படி மாறுகிறாள்...என்ன முடிவு எடுக்கிறாள் என்பது ஒரு அற்புதமான சிறுகதையில் நிகழும் உச்ச வெடிப்பு போல இந்த நாடகத்தில் நிகழ்கிறது

சாரு என்ற எழுத்தாளனை கடுமையாக தண்டிங்கள் என ஆணை இடுகிறான் அர்சன்

முடியாது அரசே..அவன் இப்போது தமிழ் நாட்டில் இருக்கிறான் என்கிறார் அமைச்சார்

அப்படியா,, அதை விட கொடிய தண்டனையை நம்மால் கொடுக்க முடியாது என்கிறான் அரசன்

பொதுவாக இந்த வரிகள் நம்மை சிரிக்க வைக்கும்,, ஆனால் இன்று நடக்கும் சம்பவங்களை - பெண்களுக்கு எதிரான குற்றங்களை காணும்போது இந்த வரிகள் கண் கலங்க வைக்கின்றன


 திரு நங்கையரின் வலி , அவர்கள் சந்திக்கும் துன்பங்கள் என திருங்கையர் குறித்த படைப்பாக தோன்றினாலும் இது மானுட மனசாட்சியை நோக்கி பேசும் படைப்பு

அனைவரும் படிக்க வேண்டிய நாடகம் - மயான கொள்ளை -

எழுதியவர் சாரு நிவேதிதா




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா