Thursday, May 19, 2011

செய்தி துளிகள்

1 . சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய ஊழல் என்ற பெருமையை 2 ஜி ஸ்பெக்ட்ரம் பெற்றுள்ளது. பதவியை தவறாக பயன்படுதியவ்ர்கள் பட்டியலில் ஏ ராசா முக்கிய இடம் பிடித்துள்ளார்..

டைம் பத்திரிக்கை இந்த “ பெருமையை “ தமிழ் நாட்டுக்கு வழங்கியுள்ளது...

2 58 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன..  இதில் ப்ளூ பிலிம் இயக்குனர் படங்களுக்கு விருது கிடைக்காதது மகிழ்ச்சி ஏற்படுத்தியது... காப்பி அடித்தல், தமிழ் இலக்கியத்தை படிக்காமல் இருப்பதை பெருமையாக  நினைத்தல் போன்றவற்றை இனிமேலாவது இவர் கை விட்டால் நல்லது...

3 பாண்டிச்சேரியில் , தனித்து ஆட்சி அமைக்க முடிவு செய்தது மூலம் அதிமுகவுக்கு துரோகம் செய்து விட்டதாக ரங்கசாமி மீது ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.. ஜெவை விரைவில் சந்திக்கப்போவதாக ரங்கசாமி கூறினார்

4 கர்னாடக முதல்வர்- கவர்னர் பிரச்சினை முடிந்தது போல  நேற்று தோன்றியது.. ஆனால் கவர்னர் மீண்டும் பிரச்சினையை துவக்கி விட்டார்... சட்டசபை கூட்ட தொடருக்கு இப்போது அனுமதி இல்லை...  டிஸ்மிஸ் குறித்து மத்திய அரசு ஒரு முடிவுக்கு வ்ரும் வரை பொறுத்து இருக்கலாம் என சொல்லி விட்டார்... இதனால் வெறுத்துப்போன எடியூரப்பா ஜம்மு காஷ்மீரில் இருக்கும் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு புனித யாத்திரை புறப்பட்டு சென்று விட்டார்


4 comments:

  1. செய்தி துளிகளில் - அரசியல் வெள்ளம்..... இனிமையான செய்திகளையும் கலந்து தந்து இருக்கலாமே. :-)

    ReplyDelete
  2. ". காப்பி அடித்தல், தமிழ் இலக்கியத்தை படிக்காமல் இருப்பதை பெருமையாக நினைத்தல் போன்றவற்றை இனிமேலாவது இவர் கை விட்டால் நல்லது..."

    யாருன்னு தெரியலியே??

    ReplyDelete
  3. அரசியல் செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அப்பப்ப அப்டேட்ஸ்?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா