Friday, July 30, 2010

தேடினேன் வந்தது

”சார்.. இந்த தங்க காசை வச்சுக்கிட்டு , நூறு ரூபா குடுங்க “

கேட்ட அவன் புத்தனா அல்லது புத்திசாலியா அல்லது சித்தனா என யோசிக்க முடியவில்லை...அவன் பெயர் குப்பன்... ஆனால் அவன் கேரக்டர் எப்படி- தெரியவில்லை...

அது உண்மையான தங்கம்தான் என தெரிந்தது...இதை நூறு ரூபாய்க்கு ஏன் விற்கிறான்?

அவனிடமே கேட்டு விட்டேன்..

“ சார்.. இந்த புதையலுக்கு சொந்தக்காரன் ஒரு பைத்தியக்காரன்.. தன் சொத்து நல்ல ஆளுங்க கைக்கு போய் சேரணும்ங்றது அவன் ஆசை.. பேராசைப்பட்டு வித்தா , நான் ரத்தம் கக்கி செத்துடுவேன் ..அந்த மாதிரி மந்திர வசியம் செஞ்சு வச்சுட்டான் “ சோகமாக சொன்னான்,

“ பேசாம நல்லவங்க கைய்ல புதையல ஒப்படைச்சுட்டு, பங்கு வாங்கிக்க ..” ஐடியா கொடுத்தேன்...

“ நல்லவஙனு எப்படி கண்டு பிடிக்றது ? அதுக்கு ஒரு கண்டிஷன் போட்டு இருக்காரு.. ஆனால் அந்த கண்டிஷனை இது வரை யாரும் நிறைவேத்தல... நிறைவெத்த முடியலைனா அவன் கண்னு பறி போய்டும்..இனீகு ஒருத்தன் வரான்.. என்ன ஆக போகுதா “ புலம்பினான் அவன்


என்ன கண்டிஷன் ? - கேட்டேன்..

“ அவனை நல்லவன் நு நூறு சதவிகிதம் யாராச்சும் நம்பனும்... அப்படி ஒரு ஆளை கூட்டி வரனும்... அந்த ஆள் அதை சாமி முன்னாடி சொல்லணும்... அவன் மனசாட்சிப்படி உண்மையலேயே அவன் நல்லவன் நு சொன்னா புதையல்..இல்லைனா, கண் போய்டும்”

எனக்கு ஆச்சர்ய்மாக இருந்தது...

சரி.. நானும் உன் கூட வர்ரேன்.. நடப்பதை பார்க்கலாம்... கிளம்பினேன்... அந்த புதையல் மேல் எனக்கும் ஆசை வந்து விட்டது ..

**************************************************************************************************************************

சாமி சிலை முன் வந்தவனை உட்கார வைத்து இருந்தார்கள் ...

“ பாருப்பா..தைரியமா சொல்லு..உண்மையா சொல்லு..இவரை நல்லவர்னு முழுசா நம்புறியா ? “

“ ஆமா .. இவரை ரொம்ப நாளா தெரியும்.. நன்பர்.. நல்லவர்... “

“ சாமியை நல்லா பார்த்து சொல்லு..பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது “

“ சத்தியமா ந்ல்லவர்.. குறை சொல்லவே முடியாது “

அழைத்து வந்தவன் பரவசத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்..

குப்பன் உடுக்கையை அடிக்க ஆரம்பித்தான்...
ஒரு வித அமானுஷ்ய த்னமை நிலவியது...

திடீரென , அழைத்து வந்தவன் முகத்தை பொத்தி கொண்டு கதற ஆரம்பித்தான்....

குப்பன் பதறினான்..

“ தப்பா எதாச்சும் நினைச்சியா ? “

உட்கார்ந்து இருந்தவன் பயந்து விட்டான்.. முகத்தில் வியர்வை பொங்கி வழிந்தது.
” இப்ப நல்லவ்னா இருக்கான்..புதையல் கிடைத்ததும் என்னை ஏமாத்திடுவான் நு சந்தேக்கப்பட்டுட்டேன் “

குப்பன் தலையில் கை வைத்து கொண்டான்..

“ உன் சந்தேகம் இவன் கண்ணை பறிச்சுடுச்சே “

பச்சலை வைது கட்டினான...

“ நாந்தான் சொன்னேன்ல... முழுசும் நம்புற ஆளை கூட்டிட்டு வான்னு .இப்ப பாரு “

***********************************************************************************************************************

அனால் என்னை கொஞ்சம் கூட வெறுக்காத ஆயிரம் பேர் உண்டு.. புதையல் எனக்குத்தான்..வீட்டில் உட்கார்ந்து யோசித்தேன்..

யாரை அழைத்து போகலாம்..

ரெண்டு வருஷமா காதலிக்கும் காஞ்சனா ?

வேண்டாம்... அவள் சாதரணமாக பிறருடன் பேசினாலும் சண்டை போட்டு அவளை காயப்படுதி இருக்கிறேன்..அந்த கோபம் அவளுக்கு இருக்கும்

நிறுவன மேலாளர்? என் அருமை அவருக்கு நன்றாக தெரியுமே?

வேண்டாம்..ஊதிய உயர்வு பிரச்சினையில் பழைய மனஸ்தாபம் உண்டு. நேரங்கெட்ட வேளையில் நினைவு வந்து தொலைக்க போகிறது..


அவரை மறந்து விட்டேனே.. பதிவர் நண்பர்.. என் மேல் எந்த வருத்தமும் இருக்க வாய்ப்பில்லை.. அவருக்கு போன் செய்ய எத்தனித்தேன்..

ஒஹ் . நோ.. சில நாட்களுக்கு முன் நகைச்சுவை என நினைத்து ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தேன்.. அது அவரை காயப்படுத்தி விட்டது... அந்த கோபம் இருக்க கூடும்


என் அம்மா ?

அம்மா என்றால் அன்புதான். ஆனால் என் காதல் அவளுக்கு பிடிக்கவில்லையே..

அப்பா?

பணத்தகறாறு...

அட ஆண்டவா.. உயிர் நண்பன் மாடசாமி...

அவன் தங்கைகல்யாணத்துக்கு உதவவில்லை என கோபம்..

யோசித்து பார்த்தால், இவ்வளவு பெரிய உலகில் என்னை நேசிப்பவர் யாரும் இல்லை...எல்லோரையும் ஒரு விதத்தில் காயப்படுத்தி இருக்கிரேன்..

மயக்கம் வரும் போல இருந்தது... புதையலை விட, இந்த உண்மை மனதை பாத்திதி விட்டது...


“ மாமா..இந்த கணக்கை எப்படி போடணும்... “ ஹோம் வொர்க் சந்தேகத்துடன் பக்கத்து வீட்டு சிறுமி சீதா வந்தாள்..

அவளுக்கு பாடம் சொல்லி கொடுத்து முதல் ரேங்க் வாங்க வைத்தவன் நான்.. என் மேல் அலாதி பிரியம்..

“ வா ..உட்கார் . என்றேன் “

“ எனக்கு பிறந்த நாள்..ஆசிர்வாதம் பண்ணுங்க” காலில் விழுந்தாள்..

கூச்சமாக இருந்தது நான் என்ன பெரிய மனுஷனா?

“ சாரி,,,விஷ் பண்ண மறந்துட்டேன் “

“ பரவாயில்லை மாமா.. லேட்டா விஷ் பண்ணாலும் உங்க வாழ்துதான் என் பேரண்ட்ஸ் ஆசியை விட பெருசு “

நெகிழ்ந்தேன்...

இவளை அழைத்து செல்லலாமா.. யோசித்தபோது போன் வந்தது..

“ குப்பன் பேசுறேன்.. புதையல் விஷயமா... “

பணத்தை எப்படியும் சம்பாதிக்கலாம்..அன்பை பெறுவது , அதை காப்பாற்ருவது கஷ்டம்..

“ வேண்டாம் ..குப்பா..எனக்கு வேற புதையல் கிடைச்சுடுச்சு”

சீதாவை பார்த்தபடி உறுதியான குரலில் சொன்னேன்

நாமெல்லாம் கிரிமினல்களா ? கன்னியாகுமரி பார்வை


சினிமாவில், எப்போதும் பணக்கார பெண் திமிர் பிடித்தவலாகவும் , அவளை ஏழை கதாநாயகன் அடக்குவதாகவும் காட்டுவது ஏன்?இதை மக்கள் ரசிப்பதன் உளவியல் பார்வை என்ன ?

இரு ஆண்க ளுக்கிடையே சண்டை நடந்தாலும், பெண்களை இழிவு படுத்தும் வசவுகளை பயன்படுத்துவது ஏன் ?

காதலிக்கும்போது இனியவளாக தோன்றும் பெண் , திருமணத்துக்கு பின் சுவை இழந்தவளாக தெரிவது ஏன் ?

காதலித்த பெண்ணையே கொலை செய்தல், போட்டோ எடுத்து மிரட்டுதல் என தினமும் பேப்பரில் படிக்கிறோம்.. காதல் எப்படி கொடுமை செய்ய முடியும் ?

அலெக்சா வெப் சைட்டில் சென்று பார்த்தால் தெரியும்... பாலுணர்வு வெப்சைட்டுகள் உலகத்திலேயே அதிகம் பார்க்கப்படுவது இந்தியாவில்தான்... ஆனால் இதைப்பற்றி இலக்கியவாதிகள் எழுதினால் , இந்தியா புனிதமாக இருப்பது போலவும், அவர்கள் ஆபாச இலக்கியம் படைத்து சமூகத்தை கெடுப்பது போலவும் சிலர் போலியாக விமர்சிப்பது ஏன் ? ( கன்னியாகுமரி நாவலை ஆபாச களஞ்சியம் என ஒருவர் திண்ணையில் எழுதி இருந்தார் )

************************************************************************************************************

ஒழுக்கம் என்பது சமூகத்துடன் ஒத்து போதல் .. பெரும்பாலானோர் என்ன செய்கிறார்களோ அதை செயவதுதான் ஒழுக்கமான வாழ்க்கை...

ஒருவனுக்கு ஒருத்தி என எல்லோரும் இருந்தால் நாமும் அப்படி இருப்பது நல்லது... காலம் மாறும்போது, இது மாறலாம்... துணையை மாற்றுவது என்பது இயல்பாகலாம்... ஆனால் அதில் ஏமாற்றுதல் என்பது ஒழுக்கமின்மை என்றாகி விடும்... நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ..உலகம் இதை நோக்கித்தான் நகர்கிறது...

கற்பு , காதல் என்பதெல்லாம் கூட கர்பிதம்தானோ என தோன்றுகிறது...

ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவல் படிக்கும் வாய்ப்பு அமைந்தது..சிறிய நாவல் எளிதான கதை அமைப்பு என்பதால் படிக்க தூண்டியது.... அவரது மற்ற நாவல்களுடன் ஒப்பிடும் பொது இது மசாலா நாவல் என சொல்லலாம்...

மேலேட்டாமாக வாசிப்பவர்கள், இதில் பாலுணர்வு அதிகம் இருப்பதாக கருதலாம்...

ஒரு காலத்தில் கற்பு என கருதப்பட்ட விஷயத்திருக்கு இன்று அர்த்தம் மாறிவிட்டது..ஒழுக்கம் சார்ந்த மதிப்பிடுகள் மாறிவிட்டன... ஒழுக்கம் என்பது இன்றும் இருக்கிறது அனால், முன்பு நாம் ஒழுக்கம் என்று சொன்னதற்கு இப்போது அர்த்தம் இல்லை..இன்று ஒருவரை துன்புறுத்தாமல், நமக்கு பிடித்தபடி வாழ்வதுதான் ஒழுக்கம் என நாவல் சொல்கிறது என சிலர் நினைக்கலாம்..
அதுவும் சொல்லப்பட்டாலும், அதை தவிர நுணுக்கமாக பிரச்சினையை தொட்டுள்ளது கன்னியாகுமரி..

ஓர் ஆண் பெண்ணை பார்த்து பயப்படுதல், ஒரு வித தாழ்வுணர்ச்சி, அவளை வெல்ல முயலுதல், காமம் குறித்த தவறான புரிதல்கள் - இவைதான் பல பிரச்சினைகளுக்கு காரணம்..பெண்ணின் துன்பங்களுக்கு, வலிகளுக்கு , அவலங்களுக்கு இதுவே காரணம்..

இந்த முக்கியமான விஷயத்தை தொட்டு இருக்கிறார் ஜெயமோகன்..

ஓர் ஆணின் பார்வையில் பெண் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறாள்.. ஆனால் அது எவ்வளவு தவறான புரிதல்... என்பதை கேஸ் ஸ்டடி போல , ஒரு கதபாத்திரத்த்கை வைத்து அருமையாக அலசி இருக்கிறார்...

" உங்களுக்கும் அந்த கிரிமினளக்கும் எந்த வித்தியாசமும் இல்லை... குற்றம் செய்ய உங்களுக்கு தைரியம் இல்லை ..அவ்வளவுதான்" என ஒரு பெண் சீறும்போது, ஒட்டு மொத்த சமுதாயத்தை நோக்கியே அவள் சீறுகிறாள் என தோன்றுகிறது..

நாம் யாரையும் வான் பு ணர்ச்சி செய்யாமல் இருக்கலாம்.. அதற்கு காரணம் நாம் நல்லவர்கள் என்பதா..அதற்கான தைரியமோ , வாய்ப்போ இல்லாததாலா... நல்லவர்கள் என்றால், ஏன் கற்பழிப்பு காட்சிகள் விரும்பப்படுகின்றன.. ? பார்வையால், வார்த்தையால் எத்ததனை பேரை வன்புணர்ச்சி செய்து இருப்போம்...

ஒரு திரைப்பட இயக்குநர்தான் கதை நாயகன்... ஒரு பெண்ணை காதலிக்றான்.. கோழைத்தனமாக கைவிடுகிறான்... ( அந்த காதல் என்பதே கூட , பெண்ணை வீழ்த்தும் ஆயுதாமாகத்தன் அவன் நினைத்தான் என தோன்றுகிறது ) ..

பெரிய இயக்குமார் ஆகிறான்.. மாபெரும் வெற்றி படம் எடுக்கிறான்... அதந பின் பல படங்கள் தோல்வி அடைகின்றன.. வெற்றி படம் எடுக்க முயல்கிறான் என்ற பின்னணியில் கதை நகர்கிறது...

வேறு ஒரு நடிகையுடன் சுற்றுகிறான்.. அவளை பார்த்தும் பொறாமை... கொடுரமாக வெளிப்படிதியவாறு இருக்கிறான்.. தாழ்வு மனப்பான்மை தான், பெண்ணை வெல்ல வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்துக்கிறது. , பெண் அறிவாளியாக இருந்தாலும் , அவளை உடல் என்பதற்குள் அடக்கிவிட ஆண் முயல்கிறான் என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார்...

இந்தய நிலையில், முன்னாள் காதலியை எதிர்பாராமல் பார்க்கிறான்...

அவனை பார்த்த்கும் அவள் கதறுவாள்... உருகுவாள்... என்னை ஏன் கை விட்டீர்கள் என இறைஞ்சுவாள்.. திருமணம் ஆகி இருந்தால், கணவனுக்கு தெரியாமல் ரகசிய பார்வை பார்ப்பாள் என்றெல்லாம் நினைக்கும் அவனுக்கு அதிர்ச்சி...

அவள் அவனை விட பெரிய நிலையில் இருக்கிறாள்.. இவன் திரைப்பட இயக்குனர் என்பதெல்லாம் அவளுக்கு பொருட்டே அல்ல.. தன் ஆண் நண்பனை, ஒரு வெளிநாட்டவனை அறிமுகம் செய்து வைத்து, அவனை தொரகடித்தவாறே இருக்கிறாள் ..அவள் இயல்பாக இருந்தாலும் இது எல்லாம் அவனுக்கு தோல்வி என அவனே நினைத்து கொள்கிறான்... பழைய பாணியிலான ஆண் பார்வை இப்போது வேலைக்காகது என்பதை புரிந்து கொள்ளவில்லை..

கடைசி ஆயுயதமாக கீழ்த்தரமான ஓர் ஆயுதத்தை பயன் படுத்தி பார்த்து , அதிலும் தோற்கடிக்கப்படுகிறான்.....

அந்த நடிகையும் அவனை கைவிடுகிறாள்... கலையும் அவனை கைவிடுகிறது...

ஆணாதிக்க பார்வைக்கு எதிரான நல்ல நாவல்.. நமக்குள் இருக்கும் ஆணாதிக்கத்தை அடையாளம் காட்டுகிறது...

இது பலருக்கு பிடிக்காமல் போகலாம்... சங்கடபடுத்தலாம்.. ஆனால் உண்மையை சந்தித்துதான் ஆக வேண்டும்..

மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது... வலிகள் தவிர்க்க முடியாததது..

இதை தவிர ஜெயமோகனின் தத்துவ விளக்க்கங்க்ள, வாழ்வில் அடைய வேண்டிய யுன்னத நிலை பற்றய விளக்கம், கன்னியாகுமரியின் ஐதீகம் சார்ந்த பார்வை, கதைக்குள் வரும் சினிமா கதை, கதாநயகன் பயன்படுத்தும் கீழ்த்தரமான ஆயுதம் என்ன போன்றவைகளை புத்தகம் படித்து தெரிந்து கொள்ளுங்கள...

ஆண்கள் தங்களை சுய பரிசோதனை செய்யவும், பெண்கள் ஆணின் சிந்தனையை அறிந்து கொள்ளவும் படிக்க வேண்டிய புத்தகம் இது... மென் ஆர் பிரம் மார்ஸ் , விமன் பிரம் வீனஸ் போன்ற புத்தகம் இது...

சிறுவர்களுக்கும்.,சிறுவர்களின் மனநிலை கொண்ட பெரியவர்களுக்கும் ஏற்றதில்லை... தவிர்த்து விடுவது நலம்...

குறை என்று சொன்னால், ஜெயமோ கனுக்கு உரிய நகைச்சுவை , இதில் சற்றும் இல்லை..

பல கோணங்களில் கதை சொல்லும் இவர், இந்த நாவல் முழுதும் ஒரே ஆள் பார்வையில் கதையை நகர்த்தி செல்வது வியப்பான ஒன்று...

பெண்களை மிகவும் அறிவாளியாக காட்டி இருப்பது சற்று செயற்கையாக இருக்கிறது...

கன்னியாகுமரி- கருத்தை கவரும் குமரி...

Thursday, July 29, 2010

ஜாதியும் வர்ணமும் ஒன்றா ??

பாரதியார் பற்றி பேசும் பொது அவர் வர்ணாசிரம கொள்கையை தூக்கி பிடிக்கிறார் என குற்றம் சாட்டுவது சிலரது வழக்கம்..

வர்ணம் என்றால் என்ன என அறிந்து கொள்ளும் ஆவலை இது ஏற்படுத்தியது...

ஆதரிப்பது எதிர்ப்பது என்பது வேறு..ஆனால் அது என்ன தெரிந்து கொள்வதும் அவசியம்...

நான்கு வர்ணக்களை படைத்தது நான்தான் என்கிறார் கிருஷ்ணர்.. கீதையில்...

படித்தும் நமக்கு என்ன தோன்றுகிறது... ? ஜாதிகளை கடவுள்தான் படைத்தார்.... ஜாதி அமைப்பை கடவுள் ஏற்கயார் என நினைக்கிறோம்.. அவர் உயர்ந்த ஜாதி, இவர் ஜாதி என்பதை கீதை வலியுறுத்துகிறது என் தோன்றும்..

ஆனால், சற்று கவனித்து பார்த்தல் அதில் சொல்லப்படுவது ஜாதி அல்ல... நான்கு வித தொழில்கள் அடிப்படையில் உலகம் பிரிக்கப்பட்டு இருக்கிறது... நான்குமே உலக இயக்கத்துக்கு அவசியம்..

நடை முறையில் பார்த்தால், நான்கில் ஒரு இயல்பு மட்டுமே இருந்தால் வேலைக்கு ஆகாது... நான்கும் கலந்துதான் இருக்கும்.. அனால் சில வேளைகளில், சில இயல்புகள் மேலோங்கி இருக்கும்...

மென்பொருள் பணி, எழுத்து, வடிவமைப்பு போன்றவற்றில் மூளை வேலை அதிகளவு இருக்கும்..

ராணுவம், காவல் துறை போன்றவை துணிச்சல், சண்டை என்ற வகையில் இருக்கும்..

சந்தை படுத்தும் வேலை, சேல்ஸ் மார்கெட்டிங் போன்றவை வியாபார அடிப்படையில் உள்ளவை...

பிளம்பிங், இயந்திரவியல், கட்டுமானம் , வாகன இயக்கம், போன்றவை உடல் உழைப்பு சார்ந்தது...


நான்கில் இது உயன்ர்ந்தது தாழ்ந்து என்பது இல்லை...

ஆனால், பிறப்பின் அடிப்படையில் இந்த தொழில்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதுதான் தவறு....
பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு என கீதை சொன்னதாக தெரியவில்லை..
அதே போல, திருநெல்வேலி பிள்ளை, நாகர்கோயில் பிள்ளை என ஜாதிகளை படித்தேன் என சொன்னதாகவும் தெரியவில்லை..
நான்கு வித இயல்புகள்தான் சொல்லபடுகின்றன
வர்ணாசிரம தர்மா என்பது நாம் எந்த தொழிலில் ஈடுபட்டு இருக்கிறோமோ அதை உருப்படியாகவும், பெருமித உணர்வோடு செய்வதுதான்...

இந்த அடிப்படையில்தான் பாரதியார் , நான்கு வகுப்பும் இங்கு ஒன்றே என பாடி இருப்பார் என தோன்றுகிறது..

என்றாலும், இதை பற்றி விரிவாக படித்து விட்டு , பகிர்ந்து கொள்வேன்...

அவளுடன் , அவள் குளியறையில் , ஹ்ம்ம்

" என்னை இந்த பூனை குட்டியா மாத்திடுங்க "

சாமியார் சற்றே ஆச்சர்யத்துடன் என்னை பார்த்தார்... என்ன வேண்டுமோ கேள் என்று சொன்னவர் , இப்படி நான் கேட்பேன் என எதிர்பார்க்கவில்லை...

நான் அப்படி கேட்டதில் ஒரு காரணம் இருக்கிறது..

நான் உண்டு ,,என் படிப்பு உண்டு என இருக்கும் பையன் நான்... நல்லவன்..நாணயமானவன்.. நன்றாக படிக்க கூடியவன்.. என் வகுப்பில் எல்லா தேர்வுகளிலும் முதல் ரேங் நான்தான்...

பக்கத்து வீட்டுக்கு , ஷைலஜா குடி வந்ததில் இருந்துதான் எனக்குள் பல ரசாயான மாற்றங்கள்... அவள் பேச்சும், ஸ்டைலும், அவள் நடையும், இடையும்.ஹ்ம்ம்.... என்னால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை... என்னை விட பெரியவள்... கல்லூரி மாணவி..

காதலித்து திருமணம் செய்யும் சாத்தியம் இல்லாமல் போனது வருத்தம்தான்..

ஒரு நாள் அவள் வீட்டுக்கு போய் இருந்தேன்... வீட்டில் யாரும் இல்லை...

" வெய்ட் பண்ணு ரவி..இதோ வந்துடறேன் " ருமில் இருந்து குரல் கேட்டது..

சற்று நேரத்தில் வெளியே வந்தாள்.. அப்போதுதான் குளித்து விட்டு , புதிய ஆடை அணிந்து இருந்தாள்.
இந்த டிரச்லையே இப்படி இருக்காளே.. இது இல்லாட்டி... எனக்குள் சிந்தனை தறி கேட்டு ஓடியது..

அப்போதுதான் என் கண்கள் அவளது வளர்ப்பு பிராணியான பூனை மேல் படிந்தது..

பொதுவாக பூனையை யாரும் வளர்க்க மாட்டார்கள்... அது சொன்ன பேச்சு கேட்காது... சுதந்திரமான போக்கு கொண்டது..

இவள் வித்தியாசமக இருக்கிறாள்... பூனை மேல் எனக்கு பொறாமை ஏற்பட்டது..

இவ்வளவு நேரம் பூனையும் உள்ளேதான் இருந்தது... அதாவது அவள் டிரஸ் மாற்றும் போது அந்த பூனை பார்த்து இருக்கும்..
ஹ்ம்ம்...
அந்த பூனையாக நான் இருந்திருக்க கூடாதா...

" அப்பாவை பார்க்க வந்தேன் " நான்..

" கொஞ்சம் வெய்ட் பண்ணு ,. வந்துடுவார்... " சொல்லிவிட்டு டிவி பார்த்ததில் எனக்கு வருத்தம் இல்லை... ஆனால் அப்போது அவள் மடியில் இருந்த பூனை மேல்தான் எனக்கு வருத்தம்..அதுவும் அவள் அதை அன்போடு கட்டி பிடித்தபோது, அதன் முகம் உராய்ந்த இடங்கள்... எனக்கு வயிறு எரிந்தது...


****************************
எப்போதும் பைக்கில் செல்லும் நான் அன்று நடந்து சென்றேன்... சாலை ஓரத்தில் ஒரு பெரியவர் மயங்கி கிடந்தார்... ஏதோ தானி பார்ட்டி என யாரும் கண்டு கொள்ள வில்லை..
எனக்கு பாவமாக இருந்தது...தண்ணிர் கொடுத்து எழ செய்தேன்...

மெதுவாக கண் திறந்தார்... கையில் இருந்த பிஸ்கட்டை கொடுத்தேன்.. நல்ல பசி போல...

சாப்பிட்டார்...

"உண்டி கொடுத்தவர்கள், உயிர் கொடுத்தவர்கள் போல... தம்பி உனக்கு நன்றி... நான் இமயமலைல இருந்து வர்றேன்... உனக்கு என்ன வேணுமோ கேளு தர்றேன் "என்றார்..

" சாபாட்டுகீ வழி இல்ல்லதவர் என்ன தர முடியும் " நினைத்து கொண்டேன்..

என் நினைப்பை புரிந்து கொண்டது போல பேசினார் " என் சக்தி எனக்கு பயன்படாது.. என்ன வேணுமோ கேள் ..என்னால் தர முடியும்..மந்திர சக்திகள் என்னுள் நிரம்பி உள்ளன " என்றார்...

எனக்குள் நம்பிக்கை வந்தது..சரி கேட்டு பார்ப்போம்... கிடைத்தல் நல்லது..இல்லைனா நஷ்டம் ஒன்னும் இல்லை...

" சாமி .என்னை பக்கத்து வீட்டு பூனையா ஒரு நாள் மட்டும் மாத்துங்க " என்றேன்..

அப்படியே ஆகட்டும்... ஒரு நாள் நீ பூனை ஆவாய்.. அந்த பூனை உன் உருவில் ஒரு நாள் இருக்கும் " என்றார்..

***************************************************************
திடீரென சிறிய உருவம் ஆனது சற்று சங்கடமாக இருந்தது..ஆனால் பழகி விட்டது... தாவி குதித்து ஓடுவது உற்சாகமாக இருந்தது... பழக்க தோஷத்தில் என் வீட்டுக்குள் நுழைய இருந்தேன்... பூனை வடிவில் இருக்கும் வரை எனக்கு வீடு எதுவும் இல்லை... ஷைலஜா வீட்டில்தான் ஓரளவுக்கு உரிமை உண்டு என புரிந்தது.. அவள் வீட்டுக்குள் பாய்ந்தேன்......

என்னை வாரி தூக்கியவள், என் மூக்கை திருகி கொஞ்சினாள்.. எனக்கு கஷ்டமாக இருந்தது... சீலம்..இந்த பிள்ட்ல பால் இருக்கு ,,.,"குடிசுகிட்டு இரு... நான் குளிச்சுட்டு வர்றேன்... "

அறைகதவை சாத்தி விட்டு , அட்டாச்ட் பாத் ரூமுக்குள் நுழைந்தாள்.. பாத்ரும் கதவை சாத்தவில்லை... அனாலும் உள்ளே பார்க்க முடியவில்லை

ஒவ்வொரு ஆடையாக கழட்டி ஹன்கரில் மாட்டுவதை பார்க்க முடிந்தது..... ஆனாலும் அவளை பார்க்க முடியவில்லை.. குளிக்க ஆரம்பித்தாள்..

திடீரென உள்ளே புகுந்தேன்...

"இங்கே ஏன் வந்தாய் " இவள பேச்சை கேட்க எனக்கு நேரம் இல்லை... அங்கிருந்த எலியை கவ்வி கொண்டு வெளியே வந்தேன்...

சிறிது நேரத்தில் வெளியே வந்த அவள், எலியை எடுத்து வெளியே தூக்கி எறிந்தாள்... எனக்கு பயங்கர கோபம்...

அவள் ஆடை மாற்ற ஆரம்பித்தாள்.. என் கவலை முழுதும், எலி மேலேதான் இருந்தது...

சற்று நேரத்தில் என்னை தூக்கி கொண்டு வெளியே வந்தாள்...

எதிர் வீட்டு பையன் ரவி காத்து இருந்தான்.. அப்பாவை பார்க்கணும் என்றான்...

கொஞ்சம் வெய்ட் பண்ணு என்றாவாறு டி வீ யை ஆன் செய்தாள்..

ரவியை பார்த்த நான் அதிர்ச்சி அடைந்தேன்... அவன் கையில் அழகான பெண் பூனை.. எனக்கு ஜிவ் என ஏறியது... என் உணர்ச்சியை புரிந்து கொள்ளாத ஷைலஜா , என்னை தன மடியில் வைத்து கட்டி பிடித்து கொண்டாள்..
எனக்கு பயங்கர எரிச்சல்.. சரியான வில்லி என தோன்றியது...இவளிடம் இருந்து தப்பி ஓடி அந்த பூனையுடன் ஓடி பிடித்து விளையாட என் ஆன்மா துடித்தது..

ரவிப்பயல் என்னை ஏன் பொறாமையோடு முறைக்கிறான் என எனக்கு சற்றும் புரியவில்லை....

Tuesday, July 27, 2010

அவன் அவள் அது U/A

அவன்

பச்சை ஆடை அணிந்த அவன் சட்டை பாக்கெட்டில் இருந்து வெண்புகை கிளம்புவதையும், அவன் குழப்பமாக அங்கிருந்து நகர்வதையும் பேருந்து நிலையத்தில் பார்த்த வினோத்துக்கு வினோதமாக இருந்த்து. சில நாட்களாகவே இது போன்ற சம்பவங்களை பார்க்கிறான். திடீரென சிலர் மேல் இருந்து மெல்லிய வெண் புகை கிளம்புவதும், அவர்கள் குழப்பத்துடன் செல்வதயும் பார்க்கிறான். ஏதேனும் விளையாட்டாக இருக்குமோ என நினைத்து கொண்டான். ஊருக்கு புதுசு என்பதால் யாரிடமும் கேட்கமுடியவில்லை.
தற்செயலாக நிமிர்ந்து பார்த்தவன், அவளை கவனித்து விட்டான். அட.. எதிர்பாராத சந்திப்பு...
சாவித்திரி !!!!!
ஃபோட்டோவில் பார்த்த்தை விட அழகாக இருந்தாள். இண்டர்னெட் மூலம் தான் பழக்கம் என்றாலும் ஆழமான நட்பு. தற்செயலாக ஆரம்பித்த நட்பு, சிறிதுசிறிதாக நட்ப்புக்கு மேல் சென்றது.இத்தனைக்கும் ஒருவரை ஒருவர் பார்த்த்தில்லை. கடைசியில் போன வாரம்தான் அவள் ஃபோட்டோ அனுப்பி இருந்தாள். இவனை இன்னும் அவள் பார்த்த்தில்லை.
தான் யார் என்பதை உடனடியாக காட்டிக்கொள்ள வேண்டாம். கொஞ்ச நேரம் விளையாடலாம் என முடிவு செய்தான். அவள் வேறு திசையில் நகர தொடங்கினாள். அவள் கைப்பையில் இருந்து செல் ஃபோன் விழுந்த்தை அவள் கவனிக்கவில்லை.

அவள் ..

சாவித்திரி கிளம்பும்போதே அறைதோழி கமலா பிடித்து கொண்டாள். ”என்னடி செல் ஃபோன்களை எடுத்துகிட்டு கிளம்பிட்டியா? இதை எப்படி நிறுத்தபோறோம் ”
“ இல்லடி.. இதை நிறுத்தகூடாது.. நாம செய்றது பொது சேவை.. தப்பு செய்றவங்களுக்கு உடனடியா தண்டனை வழங்குறோம். காலபோக்குல யாரும் தப்பு செய்ய மாட்டாங்க..ஒரு பயம் வரும் “
சாவித்திரி கெமிக்கல் துறையில் கில்லாடி. கமலா எலக்டானிக்ஸ் மேதை. ஒரு முறை கமலாவின் செல் ஃபோனை யாரோ திருடிவிட்டார்கள். ஃபோன் போனது கூட பரவாயில்லை. முக்கியமான எண்கள் , தொடர்புகள் விட்டுபோனதை தாங்க முடியவில்லை. செல்போன் திருட்டு பஸ்ஸில் அடிக்கடி நடப்பதை புரிந்து கொண்ட அவர்கள், திட்டம் தீட்டினர்.

மலிவான ஃபோன் வாங்கி அதில் சில கெமிக்கலை அடைத்தனர். அதை வேண்டுமென்றே பொது இடங்களில் தவறவிடுவார்கள்.அல்லது அல்ட்சியமாக வைது இருப்பார்கள். எடுத்தவர்கள் உடனடியாக திருப்பிகொடுத்தால் தப்பிப்பார்கள். இல்லை என்றால், பொது இட்த்தில் இருப்பவர் தன் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுப்பார். கண்ட்ரோல் ரூமில் இருந்து ஒரு பட்டனை அழுத்தினால் போதும்.
செல்ஃபொன் சத்தம் இன்றி வெடிக்கும். வலிக்காது. கெமிக்கல் மட்டும் டெபாசிட் ஆகிவிடும். ஒரு வாரத்தில், அது எந்த இட்த்தில் டெபாசிட் ஆனதோ அந்த பகுதியை அரித்து அழித்து விடும்.
எந்த சிகிச்சையும் பயனளிக்காது.
ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்த கமலா , போக போக பயப்பட ஆரம்பித்தாள். “ பலர் பாதிக்கப்பட்ராங்க. ஆனால் யாரும் கம்ப்ளைண்ட் கொடுப்பதில்லை... போலீசுக்கும் சந்தேகம் வர ஆரம்பிசிடுச்சு.. இதை நிறுத்திக்கலாம் டீ “
“ பயப்படாதே... பொண்ணுங்க இதை செய்வாங்கனு யாரும் சந்தேகப்பட மாட்டாங்க.. “
“ சரிடீ... நாம செய்ரது நல்லவர்கள் யாரையும் பாதிச்சிட்டா, அந்த பாவம் சும்மா விடாது டீ”
“ நல்லவன் ஏண்டி , மத்தவங்க சொத்துக்கு ஆசை பட போறாங்க... சரி , இதை விடுடீ.. நான் ரொமாண்டிக் மூட்ல இருக்கேன்.. என் மனதுக்கு பிடித்தவர் இன்னிக்கு வர்ரார்..காதலை அவர் சொல்ல போறாரா, நான் சொல்லணுமா..ஒரே டென்ஷன் ..” வெட்கதுடன் சாவித்திரி..
பூகம்ப பெண்ணிடமும் ஒரு பூ இருப்பதை கமலா ஆச்சர்யத்துடன் பார்த்தாள்

அது


கீழே கிடந்த செல்ஃபோனை எடுத்தான் வினோத். இதை அவள் நினைவாக வைத்து கொள்வோம்.. கல்யானத்துக்கு அப்புறம் அவளிடம் காட்டி ஆச்சர்யபடுத்தலாம்” சட்டை , பேண்டில் பாக்கெட் இல்லை... பனியனுக்குள் அதை போட்டுகொன்டான்... அது மெல்ல கீழே இறங்கியது, அவளெ வருடி கொடுப்பது போல இருந்த்து..ஷ்ஷ்.
நெஞ்சு,,வயிறு..சீ..அதையெல்லாம் தொட்டு பார்க்கிறாளே..ம்ம்ம்..சரி,,அவள் சொத்து..தொட்டு கொள்ளட்டும்..
அவன் செல்ஃபோனை பதுக்குவதை பார்த்த அவள், கன்ட்ரொல் ரூமுக்கு தகவல் கொடுக்க, கமலா தயங்கினாள். “ யோசிச்சு சொல்லுடீ... இதை எல்ம் ஸ்டாப் செஞ்சுடலாம். “
சாவிதிரி ஒத்துகொள்ளவில்லை...

அவனையே வெறியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். திடீரென அவள் பார்வை மாறியது. அவன் கையில் அணிந்திருக்கும் மோதிரம், அவள் பரிசாக வினோத்துக்கு அனுப்பியது போல் இருக்கிறதெ...

அவனை அழைத்தாள்..:எக்ஸ்கியூஸ் மீ சார் ..உங்க பேர் வினோத்தா? “ பதட்டமாக கேட்டாள்..
“ஆமா..ஏன் ..” அவன் அழகாக புன்னகைத்தான்...

அவள் எதுவும் செய்வதற்குள், வெண்புகை பரவியது...

இருவர் பேசி கொண்டு சென்றனர்..”கார் ஆக்சிடண்ட் மச்சான். காருக்கு சேதம் எதுவும் இல்லை...பல்பு ரெண்டும் உடைஞ்சு போச்சு”

அசினின் அதிரடி காமெடி..- சங்கத்துக்கு கட்டுபடுவாராம்


தன அழகாலும் , கவர்ச்சியாலும் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை அசின், தனக்கு நகைச்சுவு உணர்வும் உண்டு என்பதை நிருபித்து இருக்கிறார்.

இலங்கை செல்ல கூடாது என பலரும் தடுத்த போது, போயே தீருவேன் என்று சொல்லி விட்டு போய் விட்டு ராஜபக்ஷே மனைவியுடன் போட்டோ எடுத்து கொண்டார்,,,..

நடிகர்கள் போவதை எதிர்த்தவர்கள் கூட, நம் கிரிக்கட் அணி அங்கு போவதை எதிர்க்கவும் இல்லை... அட்லீஸ்ட் அந்த மேட்ச்களை பார்க்காமலும் இல்லை... நன்றாக பார்த்து ரசித்தார்கள்.. அது வேறு பிரச்சினை..அதை விடுங்கள்..

இந்த நிலையில், அசின் நடிகர் சங்க முடிவுக்கு கட்டுபடுவேன் என பேட்டி கொடுத்து இருந்தார்,, எனக்கு பயங்கர ஆச்சர்யம்... நடிகர் சங்கம் இனியல் இலங்கை செல்ல கூடாது என சொல்லி விட்டால், கிடைக்கும் பணத்தை புறக்கணித்து விட்டு போகாமல் இருந்து விடுவாரா என்று தெரிந்து கொள்ள ஆவல்.

நடிகர் சங்கம் என்ன சொன்னது..எதற்கு இவர் கட்டுப்பட போகிறார் என பார்த்ததும்தான், அவரது நகைசுவை உணர்ச்சி புரிந்தது..

இலங்கை செல்லும் நடிகர்களை மிரட்ட கூடாது என நடிகர் சங்கம் சொல்லி இருக்கிறது..இதற்குதான் இவர் கட்டுப்பட போகிறார்,,,..

அதாவது இனிமேல் யாரவது இலங்கை சென்றால், அசின் அவர்களை மிரட்ட மாட்டார்... ( அவரையும் யாரும் மிரட்ட கூடாது )

அட ஆண்டவா... ( அட இயற்கையே ... அட அருட்பெருன்ஜோதியே.. அட அருட்பெராற்றலே )

Monday, July 26, 2010

போபால் கொடுரமும், போராட்டமும்

போபால் விபத்து நடந்த பொது இந்தியாவே அதிர்ந்து நின்றது...

எந்த பாவமும் அறியாதவர்கள், பூச்சிகள் போல இறந்து விழுந்ததை , யாராலும் ஜீரணிக்க முடிவில்லை..

ஆனாலும் என்ன ..விரைவிலேயே அது மறக்கப்பட்டது...

இன்றும் அதை நினிவைல் வைத்து போராடுபாவ்ர்கள் அதனால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான்.. வெகு சிலரே அவர்களுக்கு ஆதராவாக போராடுகிறார்கள்...

பதிவர் வெண்ணிற இரவுகள் சொன்னதற்காக புதிய ஜனநாயகம் வாங்கி படித்தேன்... கண்டிப்பாக மற்றவர்களும் படிக்க வேண்டும்...
அந்த இயக்கத்தினர் பேருந்தில் பிரச்சாரபணி செய்த போது வாங்கினேன்... அந்த பேருந்தில் எனக்கு வேலை இல்லை என்றாலும் , அவர்கள் என்ன பேசுகிறார்கள் , மக்கள் ரியாக்ஷன் எப்படி என பார்ப்பதற்காக அந்த பேருந்தில் ஏறினேன்...

கணீர் என பேசினார் அவர்.. தோழர்கள் சிலர் உடன் இருந்தனர்.. அந்த பேருந்தை பொறுத்தவரை பலரும் ஆர்வமாக கவனித்தனர்... கிராமத்தினர் போன்ற தொர்ரமளிதவரும் ஆதரவளித்தனர்..படித்தவர்களும் ஆதரவளித்தனர்.. பரவலான ஆதரவு இருந்ததை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது...

ஆனால் தோழர்கள் இது போன்ற ஆதரவை சரியாக பயன்படுத்துவதில்லை...

போபால் சம்பவத்தை அவர்களாவது நினவு வைத்து போராடுவது வரவேற்க தக்கதுதான்..

ஆனால், அதை படுகொலை என சொல்வது, அதன் தலைவருக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என சொல்வது எல்லாம் அதீதமாக தோன்றுகிறது...

இப்படி சொன்னால், யதார்த்தாமாக கிடைக்கும் நீதி கூட கிடைக்காமல் போய் விட கூடும்...

ஆனால் அவர்கள் சொல்லும் கருத்து ஒரு தவறான கருத்தை உடைக்கிறது...

யூனியன் கார்பைட் நிறுவனத்தை நடத்தியவர்கள் இந்தியர்கள்... ஆண்டர்சன் என்பவருக்கு ( CEO) இங்கு நடக்கும் அன்றாட செயல் முறைகள் தெரியாது.அது அவர் கட்டுப்பாட்டிலும் இல்லை... எப்ப்தவது விருந்தில் கலந்து கொள்வார்...ஷேர் பணம் கிடைத்தால் வாங்கி வைத்து கொள்வார் ..அவரை போய் ஏன் தண்டிக்க வேண்டும் என்றே பலரும் நினைக்கிறார்கள்..

பாமரர்கள் இப்படி நினைத்தால் பரவாயில்லை... அரசே இப்படித்தான் நினைக்கிறது....

அமெரிக்காவில் செயல்படும் நிறுவனம் போதிய பாதுக்ப்புடன் செயல்படும் போது இந்தியாவில் அலட்சியம் காட்டப்பட்டு இருப்பது நம்மை எவ்வளவு இளக்காரமாக நினைக்கிறார்கள் என்று காட்டுகிறது..

நான் கடவுள் படத்தில், பிச்சைக்காரர்களை மனிதர்களாக நினைக்காமல், பணம் சம்பாத்திக்க பயன்படும் ஒரு பொருள்கா , உருப்படியாக நினைப்பான் வில்லன்..

நம் அனைவரையும் வெறும் உருப்படிகளாக நினைத்த அந்த நிறுவன அதிபர் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்..

அவரை துன்புறுத்த வேண்டும் என்பதற்காக அல்ல.. நிறுவனம் தவறு செய்தால் அதன் தலைவர் பொறுப்பேற்க வேண்டும் என்ற நியாய அடிப்படையில்..

இந்தியா இதற்காக எந்த முயற்சியும் செய்யவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை..

ஆகஸ்ட் 15 ல் , சென்னையில் உள்ள , டௌ கெமிக்கல் நிறுவனம் முன் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளர்கள்..ஆனால் இதற்கு , அந்த இயக்கத்தின் ஆதரவு பதிவர்கள் கூட போதிய முக்கியத்துவம கொடுக்காதது என் என தெரியவில்லை..

இருந்தாலும், ஒரு பார்வையாளன் என்ற முறையில் அதை பற்றிய செய்தியை பகிர்ந்து கொள்வேன்...


அவர்களும், நாளையே இந்தியாவில் புரட்சி ஏற்பட்டு விடும், குற்றாவாளிக்கு மரண தண்டனை வழங்கி விடலாம் என்றெல்லாம் நினைக்காமல் , நடைமுறைக்கு ஏற்றவாறு போராட்டதை நடத்தினால் நல்லது...

துப்பார்க்கு துப்பாக்கி....

நேற்று மாலை, பேருந்து நிறுத்தத்தில் சண்டை..என்ன வென்று பார்த்தால், பேருந்து ஜன்னல் வழியாக யாரோ எச்ஹில் துப்பியது ஒருவர் மேல் பட்டுவிட்டது... அதுதான் பிரச்சினை...

படித்தார், ப்னபானவர் போன்ற தோற்றம் உடைய ஒருவரும், அழுக்காடை அணிந்த பாமரர் போன்ற ஒருவருக்கும் சண்டை..

பாவம்... விலை உயர்ந்த ஆடை அணிந்து ஏதோ முக்கியமான வேலைக்கு செல்பவர் மேல் வெற்றிலை எச்சிலை துப்பி விட்டார் என நினைத்தேன்..அனால் கறை ஏதும் தெரியவில்லை..பிறகுதான் தெரிந்தது... துப்பியவர் , படித்த கனவான் என்று..

ஆனால் அவர் மேல் எனக்கு வருத்தம் இல்லை.. அவரது ஆசிரியர்கள் மீதும் , பெற்றோர்கள் மீதும்தான் வருத்தம்...

ஜிட்டு கிரூஷ்ணமூர்த்தி சொல்வார் ... நமது பிரச்சினை மாணவர்களும் குழந்தைகளும் அல்ல... பெற்றோகளும் ஆசிரியர்களும்தான் ...

நான் படித்தது ஒரு கிறிஸ்தவ பள்ளி... சின்ன வயதிலே பண்பை கற்று தருவார்கள்.. கண்ட இடத்தில் எச்சில் துப்ப கூடாது, சாபஈடும்போது கை முழுக்க பட கூடாது, விசில் ல் அடிக்க கூடாது போல பலவற்றை சொல்வார்கள்..

அங்கு பணியாற்றிய சிஸ்டர்கள் , மாதர் ஆகியோர் கல்வியுடன் , பண்பையும், அனுபடன் சேர்த்து போதித்தார்கள்..... அவர்கள் நினைத்து இறந்தால், அன்பாலே என்னை மத மாற்றம் செய்து இருக்க முடியும்... ஆனால் ஒரு போதும் அப்படி செய்தது இல்லை..

அதானேலேயே எனக்கு பைபிள் மீது ஈடுபாடு ஏற்பட்டது... என் கிறிஸ்தவ நண்பர்களை விட இன்று பைபிள் நன்றாக தெரியும்....

இன்றும் கூட என்னால் பொது இடத்தில் எச்சில் துப்ப முடியாது.... மற்றவர்களை மரியாதை குறைவாக பேச முடியாது என்பதற்கு அவர்களுடன் கற்ற பாடம்தான் காரணம்...

அன்று அவர்கள் கண்டிப்பாக இருந்ததை நினைத்து இன்று பெருமையாக இருக்கிறது..இன்றும் கூட பழைய ஆசிரியர்களை பார்த்தால் , உரிய மரியாதை கொடுப்பது என் வழக்கம்...

ஆகவே, ஒழுக்க குறைவான செயல்களை பார்த்தால் எனக்கு தோன்றுவது, ஆசியர்கள் சரியில்லை என்பதே...

ஒழுக்கம் என்றால், நம் தமிழ் மக்களுக்கு ஆண்-பெண் உறவு பற்றி மட்டுமே ஞாபகம் வரும்..

அது மட்டும் ஒழுக்கம் அல்ல... கண்ட இடத்தில் குப்பை போடாமல் இருப்பது, எச்சில் துப்பாமல் இருப்பது, தண்ணி அடித்து விட்டு வண்டி ஒட்டாமல் இருப்பது, செல் போனில் பேசிக்கொண்டே பைக் ஒட்டாமல் இருப்பது என நிறைய இருக்கிறது..

பாதிக்கப்பட்டதை பார்த்தால், இதை எழுத தோன்றியது...

Thursday, July 22, 2010

பாரதியும் மாற்று பார்வைகளும்

பாரதி பற்றிய என் கருத்துக்கு , பெயர் சொல்லாத அனானி நண்பர்கள் நல்ல ஹோம் வொர்க் செய்து விளக்கங்கள் கொடுத்து உள்ளனர்... உண்மையிலேயே இதைப்பற்றி அவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதும் , நல்ல படிப்பாளிகள் என்பதும், உழைப்பாளிகள் என்பதும் , சமுக்க அக்கறை உள்ளவர்கள் என்பதும் தெரிகிறது .. அந்த அளவில் அவர்களுக்கு தலை வணங்கலாம்,. பின்னூட்டத்தை சிலர் படிப்பதில்லை என்பதால், அவர்கள் விளக்கத்தை அப்படியே இந்த பதிவில் தருகிறேன்...( கடைசியில் )..அவர்களது பார்வை என்ன என்பதையும் அனைவரும் அறிவது அவசியம்...

அதற்கு முன் என் விளக்கத்தை சொல்லி விடுகிறேன்.. இல்லை என்றால் அவர்கள் கருத்தை அப்படியே ஏற்றுகொள்ளும் அபாயம் உண்டு..

1 "சின்னமருது எளியவர்; செழிப்பான நாட்டின் உண்மையான மக்கள் தலைவர்;.....கொஞ்சம் பாரதி உடன் சின்ன மருதுவை திப்புவை ஒப்பிட்டு பாருங்களேன்..

திப்பு போலவோ, மறுத்து போலவோ பாரதி நடந்து கொண்டு இருந்தால், இன்று அவரை கவிஞாக நினைவு வைத்து இருக்க மாட்டோம்.. பாரதி என்ற மாபெரும் மக்கள் தலைவர் இருந்தார் .. அவருக்கு கவிதையும் எழுத தெரியும் என்று ஒரு தலைவராக போற்றபட்டு இருப்பார்...
ஓங்கு பண்பு , ஒடுங்கு பண்பு என இருக்கிறது... எல்லோருக்கும் பல பண்புகள் உண்டு .. அதில் எது ஆதிக்கம் செலுத்தும் பண்பாக இருக்கிறதா அந்த அளவில் அவர் பெயர் நிலைக்கும்...
பாரதி தேச பக்தர், ஆவேசமாக பேசினார் என்பதை விட கவிதைக்காகத்தான் அவர் நினைவு கூறப்படுகிறார்.. கவிதைதான் அவர் முதல் தகுதி..எனவேதான் அவர் மக கவி பாரதி என அழைக்க படுகிறார்...
புரட்சி வீரர் என்றோ, மக்கள் தலைவர் என்றோ அழைக்க படுவதில்லை...

2 "தன் எழுத்தை படித்தவன் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற நோக்கமும், தான் மட்டும் தெரியாமல் எதிரி காலில் விழுந்து கிடக்கலாம் என்பதும் காரியவாதிகளின் செயல் அல்லவா.. "

ஓர் ஆங்கில எழுத்தாளர், கவலை படாமல் இருப்பது எப்படி என்ற புகழ் பெற்ற புத்தகம் எழுதினர்.. கடைசியில் கவலையால் தான் இறந்தார்... சுயநலத்தின் மேன்மை என கொள்கை விளக்கம் கொடுத்த ஆங்கில பெண் எழுத்தாளர், கடைசி காலத்தில் அன்புக்காக ஏங்கினார் ...

in search of excellence என்று ஒரு உதகம் வந்தது... உலகில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களை ஆராய்ந்து, அவர்கள் வழிமுறைகளை சொல்லி கொடுத்தது புத்தகம்... இந்த வழி முறையை பயன் படுத்துங்கள்,, நீங்களும் வெல்லலாம் என்றது...

ஒரு வருடம் கழித்து, பிரபல பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வெளியானது... ஒரே வருடத்தில் , அந்த புத்தகம் சிலாகித்த பல நிறுவனகள் நாடு தெருவுக்கு வந்து விட்டன என சொன்னது கட்டுரை...

இதனால் எல்லாம, அந்த புத்தகத்தை எழுதியவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதில்லை... அந்த புத்தகங்கள் இன்னும் பரபரப்பாக விற்பனை ஆகின்றன... உண்மை என நினைத்துதான் எழுதிகிறார்கள்.. அதை சந்தேக பட முடியாது... அந்த புத்தகங்கள், பலருக்கு பயன் அளித்து வருகின்றன என்பதுதான் முக்கியம்....

இன்னும் தெளிவாக சொன்னால், அச்சமில்லை என்று பாடிய பாரதியார் இருட்டில் செல்ல பயப்படும் தன்மை கொண்டவர்...அதானால் என்ன்ன.. அந்த பாடல் நமக்கு தைரியம் அளிக்க்றதே.. அந்த சொல்லின் வீர்யம் , மொழி ஆற்றல் இவைதான் அவரை மகா கவி ஆக்குகிறது...

3 அடுத்து பூணூல் விவகாரம்...

பெரியார் சொன்ன விளக்கம் சரியாக இருக்கலாம்.. அது வேறு பிரச்சினை.,... ஆனால் இப்போது பூணுல் போடுபவர்கள் அப்படி நினைத்தா போடுகிறார்கள் என்பதை அவாளிடம்தான் கேட்க வேண்டும்...எனக்கு தெரிந்த அளவில் ஒரு சம்பிராதாயதக்காக போடுகிறார்கள் என்றே நினைகிறேன். ( அப்படி போட்டு பயன் இருக்கிறதா என அவாள் தான் சொல்ல முடியும்.. எனக்கு தெரிந்து பல வீடுகளில், பிராமணர்களுக்கு வீடு தருவதில்லை... )
அனானி நண்பர்கள் சொல்வதை போல, பாரதி சம்பிரதாயங்களில் ஈடுபாடு மிக்கவர்.. பூணூலை பெருமையாக நினைத்தவர்... அந்த பெருமையை , பிராமண ஜாதி இல்லாத ஒருவருக்கு அணிவித்தது , அவர் அளவில் புரட்சிதானே...
உதாரணமாக இந்த அனானி நண்பர்கள் யார் என தெரியவில்லை... பதில் மட்டுமே பழக்கம்.. பதவில் மட்டும் எ தொடர்பு என்ற நிலையில், அவர்களுக்கு நான் கொடுக்க முடிந்த அதிக பட்ச கவுரவம் , அவர்கள் பின்னூட்டத்துக்கு முக்கியத்த்குவம் கொடுப்பது மட்டும்தான்...
( அவர்களுடன் நேரடி தொடர்பு இருந்தால் அது வேறு விஷயம் )

அதே போல , பாரதியார் பெரிய பணக்காரரகவோ , அமைசராகவோ இருந்து , சும்மா பூணூல் மாட்டி விட்டு இருந்தால் அது போலி தனம்...
அன்று அவர் இருந்த நிலையில், அவரால் கொடுக்க முடிந்த அதிக பட்ச கவுரம் பூணூல் மாட்டி விடுவதுதான்...

****************************************************************************************

சரி,,, இனி வருவது அனானி நண்பர்களின் பார்வை...



************************************************************************

Anonymous said...
"தாம் உயர்வாக நினைக்கும் விஷயம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அவரது என்னத்தைதான் இதில் பார்க்க வேண்டும்'

ஏன் பாரதியார் பூணுலைப்போடுவதை உயர்வாக நினைத்தார்?

”பாரதியை போன்ற கவி உள்ளம் கொண்டவர்களால் அல்ல...”

பாரதியாருக்கு வெறும் கவி உள்ளம் மட்டுமே இருந்ததா? அவர் வெறும் கவிஞரா? அவர் கட்டுரைகளும் வரைந்தார். அவை இலக்கியக்கட்டுரைகள் அல்ல. அனல் பறக்கும் பிரச்சாரப்பீரங்கிகள். வெள்ளைக்க்காரனுக்கு எதிராக இருந்த போது அவன் அவரைத் தேடு தண்டிக்க ஆசைப்பட்டான். மற்ற கட்டுரைகள் இந்துத்வா கட்டுரைகள். படித்துப்பார்த்து விட்டு எழுதவும். அன்று முசுலிம்களும் கிருத்துவர்களும் எதிர்க்கவில்லை. இன்று பாரதி அப்படியெழுதினால், எதிர்ப்பு பலமாக இருந்திருக்கும்!

“உயிருடன் இல்லாத ஒருவர், திட்டினாலும் ஆதரவு கரம் நீட்ட ஆள் இல்லாத ஒருவருடன் மோதுவது நமக்கு எந்த பெருமையும் அளிக்காது”

நமக்கு பெருமை, சிறுமையென்றெல்லாம் இல்லை. பாரதியைப்பற்றி பலரும் பேசுகிறார்கள். உங்களை மாதிரி அவரைத் தூக்கி வைத்து. எனவே உங்களுக்கு பதில் சொல்லும்வண்ணமாக மற்றவர்கள் பேசுகிறார்கள்.

பார்தியார் ஒரு சாதாரணமான் ஆள் அல்ல. அவர் ஒரு வி.ஐ.பி அன்றும் இன்றும். இல்லாவிட்டால் அவரைப்பற்றி இன்று நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?

பொதுமனிதர்கள் இறந்தும் ஊரைக்கெடுப்பார்கள்; அல்லது வளர்ப்பார்கள். எனவே அவர்களைப்பற்றி பேசுவது ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று.

“கவிதை , எழுத்து என்பதுதான் பாரதிக்கு தெரிந்த விஷயம்... அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர் நடந்து கொண்டதை வைத்து அவரை தவறாக சித்தரிப்பது தவறு... ”

தப்பான கணிப்பு. பாரதியார் அப்பாவிக்கவிஞர் என்று சொல்லி அவரை இழிவுபடுத்துகிறீர்கள். அவர் அக்கால பொதுவாழ்க்கையில் நடைபெற்ற அனைத்து விசயங்களையும் ஆழ்ந்து பார்த்தார்; பொது மேடைகளிலும், தன் இதழ்களிலும் பேசினார்; எழுதினார்.

கொஞ்சம் அவரைப்பற்றி நன்கு தெரிந்து விட்டு எழுதுங்கள்.

”அவரை மகா கவி என போற்றுவது பிடிக்கவில்லை என்றால், அவர் கவிதையில், இன்னென்ன தவறு இருக்கிறது என்று சொல்வதுதான் நியாயமே தவிர...”

மீண்டும் தப்பு. மகா கவி என்று சொல்வது வெறும் இலக்கியத்திற்காக அல்ல. மேலும் பலவிசயங்களுக்காக. பாரதியாரை அதற்காகத்தான் மகா கவியென்கிறார்கள் அவர் பக்தர்கள்.

அந்த விசயங்கள் பிடிக்காத்வர்கள், அவரை ஏன் மகா கவி என்று சொல்ல்வேண்டும் எனக்கேட்கிறார்கள்.

July 22, 2010 1:00 AM

*****************************************************************

Anonymous said...
”வறுமையில் வாடினார் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பது அவரை அசிங்க படுத்துவது ஆகாது... அவரை அந்த நிலையில் வைத்து இருந்த சமூகம்தான் வெட்கப்பட வேண்டும்...


பாரதியாரின் வாழ்க்கைபற்றி தெரியாமல் எழுதும்போது இப்படித்தான் தப்பு போடுவீர்கள்.

வறுமை பலவகைப்பட்டது. இளமையில் வறுமை. முதுமையில் வறுமை. கல்வி கல்லாமல் வேலை கிடைக்காமல் வறுமை. உடல் தாளாமல் வேலை செய்ய முடியாமல் வறுமை. அளவுக்கு அதிகமாக பிள்ளைகளப்பெற்று அவர்களை வளர்க்க போதிய வருமானம் இல்லாமல் வறுமை.

இதில் எந்த வறுமை பாரதியாருக்கு? அதை நீங்கள் ஆராயின், சமூகத்தின் தவறா/ இல்லை, பாரதியாரின் கொழுப்பா எனத் தெரியவரும்.

கொஞ்சம் படிச்சுட்டு வாரேளா ?

July 22, 2010 1:04 AM

*******************************************************************

Anonymous said...
அய்யா... நான் எழுதிய மறுமொழியில் பகத் ஐயும் வறுமையில் வாழ்ந்த ஒருவராகத்தான் சித்தரித்திருக்கிறேன். ஒருவர் வறுமையில் பிச்சை எடுத்தார் என்பதற்காக ஒருவர் மாற்று குறைந்து விடுவாரா அல்லது திருடினால் மாற்று குறைந்து விடுவாரா.
அப்படி திருடுவதற்கு ஒப்பான செயல்தான் பாரதி இழைத்த தவறு. மக்களை போராட தூண்டி விடும் எழுத்தை எழுதி விட்டு தான் மட்டும் எதிரிக்கு முதுகுசொறியும் வேலை செய்பவனை எப்படி எடை போட வேண்டும். சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இருப்பவர்களைத்தான் மக்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த சாதாரண மனித பண்பு கூட இல்லாத ஒருவரை எப்படி மகாகவி என்றெல்லாம் சொல்ல முடியும்.

சின்னமருது பற்றி ....""சின்னமருது எளியவர்; செழிப்பான நாட்டின் உண்மையான மக்கள் தலைவர்; அனைவரிடமும் வேறுபாடின்றி பழகும் இயல்பினர்; அவரது தலையசைப்பையே சட்டமாகக் கருதி அதற்குக் கீழ்ப்படிய மக்கள் தயாராக இருந்தனர்; தனக்கென ஒரு மெய்க்காப்பாளனைக் கூட வைத்துக் கொள்ளாத அவரை 1795 இல் அவரது சிறுவயல் அரண்மனையில் சந்திக்கச் சென்றேன். எளிதில் மக்கள் சென்று வரும் வகையில் அமைந்திருந்தது அவ்வரண்மனை. அவருக்குக் கடவுளின் அருள் கிட்டவேண்டும் என மக்கள் வேண்டியதையும் கேட்டறிந்தேன்... மருதிருவர் நினைத்திருந்தால் வெள்ளையர்களுடன் சமரசமாகப் போயிருக்கலாம். அவர்களுக்கு நாங்கள் எந்தக்குறையும் வைக்கவில்லை, எதனால் அவர்கள் எங்கள் மீது சினங்கொண்டு போர் தொடுத்தார்கள் என்பதும் எனக்கு விளங்கவில்லை'' என்று ஆங்கிலேயத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் தனது நூலில் குறிப்பிடுகின்றான். பாவம் அவனுக்கு மருதிருவரின் திருச்சி பிரகடனத்தின் ஆங்கில மொழியாக்கம் கிடைத்திருக்காது. அதில் வெல்ஷ் துரையின் கேள்விக்கு தனது அரசியலால் பதில் சொல்லியிருப்பான் சின்ன மருது. சரண்டையலாம் எனச் சொன்ன உதவியாளனின் முகத்தில் காறி உமிழ்வான் போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த திப்பு.

கொஞ்சம் பாரதி உடன் சின்ன மருதுவை திப்புவை ஒப்பிட்டு பாருங்களேன். அதோடு பாரதியின் படித்தவன் பாதகம் செய்தால் ஐயோ... என்ற வரிகளையும் ஒப்பிட்டு பாருங்களேன். அப்புறம் வழிமுறைதான் கொள்கையை தீர்மானிக்கிறதா... கொள்கை வழிமுறையை தீர்மானிக்கிறதா...

வேறுபட்ட ஆயுதம் என்ற வழிமுறையை விட ஒன்றுபட வேண்டிய அரசியல் முதன்மையானது இல்லையா..

தன் எழுத்தை படித்தவன் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற நோக்கமும், தான் மட்டும் தெரியாமல் எதிரி காலில் விழுந்து கிடக்கலாம் என்பதும் காரியவாதிகளின் செயல் அல்லவா.. அதாவுது நீங்கள் சொல்லும் அரசியல்வாதிகள் செயல் போல பாரதியின் செயல் உள்ளதே..

கவிஞன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவனை வறுமையில் வாட விட்ட சமூகம் வெட்கப்பட வேண்டும் என்பதும், அவனது கவிதையால் புரட்சியாளனாக மாறியவன் மாத்திரம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதும் ஜனநாயகம் போல தெரியவில்லையே..

பூணூல் பற்றி பெரியார் சொன்னது உங்களுக்கு புரியவில்லையா... அதாவது பூணூல் போடுவது எதற்கு சம்ம் என்றால், தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாத்திரம் கதவில் <>இது பத்தினிகள் வாழும் வீடு<>என எழுதி வைப்பதற்கு சம்ம் என்பார் பெரியார். பாரதி அந்தப் பையனுக்கு பூணூல் மாட்டியதன் மூலம் மற்ற சிறுவர்களின் தாயின் ஒழுக்கத்தை மனுவின் பெயரால் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்.

அதெல்லாம் இருக்கட்டும். கட்ட பொம்மனை பாடாத பாரதி, மருதுவை பாடாத பாரதி எட்டப்பன் குல வம்ச வரலாறு எழுத முன்வந்த ரகசியம் என்ன•. அதற்காக அவர் எழுதிய கடிதம் படித்து விட்டு வந்து பேசவும்.

அப்புறம் அவரு கவிஞரு மட்டும்தான் என சொல்வது தவறு. காங்கிரசு இயக்கத்தில் தீவிரவாதிகள் பிரிவின் சார்பாக மாநாட்டுக்கு போனவர்தான் அவர். தாம்ப்ராஸ் மாநாட்டுக்கும் போனவர் என்பது வேறு விசயம். ஒரு கவிஞருக்கு பூணூல் மாட்டுவதும், தாம்ப்ராஸ் மாநாட்டுக்கு போவதும் தனிமனித உரிமை என்றே எடுத்து கொள்வோம்.

மென்ஷ்விக் புரட்சியை ஆதரித்து ரசிய சோசலிச புரட்சியை எதிர்த்தும் தனது கவிதையில் எழுதியவன் பாரதி என்பதை முற்போக்காளர்கள் தமது அணிகளுக்கு எடுத்து ஆதாரம் தருவது இல்லையா..

?

July 22, 2010 3:11 AM

*****************************************************************

Anonymous said...
நான் அனானி 1 AM.

மேலும் ஒன்றைக்குறிப்பிடலாம்.

பாரதியின் இந்துத்வா கொள்கைகளின் ஒன்று வருணாஷ்ரம். அதை அவர் கடுமையாக ஆதரித்து எழுதினார். அது இந்துமதக் கொள்கையின் தூண்களுள் ஒன்று என்றார். அது நாட்டுக்கு நன்மை. அதன்படி பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) மூன்று முறை தவறாமல் வேதமோதினால், மாதம் மும்மாரி பெய்யும் என்றார்.

ஜாதிகள் வேறு; வருணங்கள் வேறு. என்றார். பூனைக்கதையில் வருணாசிரமக்கொள்கையை வெளிப்படுத்தி, மக்களும் வெவ்வேறாகத்தான் பிறக்கிறார்கள்; ஆனால் சண்டை போடாமல் வாழ்வோம் என்றார். அவர் சொல்வது யாதெனில், பிராமணன் பிராமணாகவிருந்து வேதமோதவேண்டும், செட்டி வியாபாரம்; சத்திரன் போர்க்குணம், சூத்திரன் மற்றவருக்கு ஏவல் செய்பவன் என்னும் வருணக்கொளகையை வைத்தே பூனைக்கவிதை எழுதினார்.

இவ்வளவும் செய்து விட்டு:

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றார்.

ஒரு தலித்துக்கு பூணுல் போடுகிறேன் என்று செய்து, பாப்பாவுக்கு சாதிகள் இல்லையென்று சொல்லிவிட்டு,

தான் தன் மகளுக்கு சுத்தமான ஆச்சார பிராமணக்குடும்பத்திலிருந்து மாப்பிள்ளை பார்த்துக் கட்டிவைத்தார்.

பெண்ணடிமைத்தனத்தை வெறுப்பது போல எழுதி, பெண்கள் ஆண்கள் சொற்கேட்டு நடக்கவேண்டும் என்னும் இந்து மரபைப் போற்றினார்.

போலீஸ் தேடிவந்த போது புதுச்சேரிக்கு சென்று விட்டார் (ஓடிவிட்டார் என்று நான் எழுதவில்லை. நீங்கள் கோபப்ப்டுவீர்கள்). அப்பத்திரிக்கையின் பங்குதாரை பிடித்து அரசு தண்டனை வழங்கியது. தன் குற்றத்திற்காக ஒரு அப்பாவி தண்டனை வாங்குகிறானே என்று மனசாட்சி குத்தவில்லை. சவுகரியமாக புதுச்சேரி வாழ்க்கை. அங்கே குயில் பாட்டும், பாஞசாலி சபதமும் எழுத, இங்கே அவரிடத்தில் இன்னொருவன் சிறைத்தண்டனை அனுபவிக்கிறான். இவர் ‘அச்சமில்லை..அச்சமில்லை’ என்றும் பாட்டெழுதினார்.

தன் மனைவியையும் மக்களையும் தவிக்கவிட்டுவிட்டு காசிக்கு யாரிடமும் சொல்லாமல் போய்விட்டார். கிடைத்த வேலைகளை எல்லாம் தூக்கியெறிந்து விட்டு, தான் தோன்றித்தனாமாக வாழ்ந்த கட்டிய மனைவியையும் பெற்ற மக்களையும் பட்டினி போட்டார்.

பாரதி ஒரு நல்ல மனிதன் அல்ல. நல்ல கவிஞன் என்று சொன்னால் போதும்.

Wednesday, July 21, 2010

ஏழாம் உலகம் - என்ன இருக்கிறது இதில் ?


நான் கடவுள் படம் பார்த்த யாரும் அந்த விளிம்பு நிலை மனிதர்களை , பிச்சை எடுக்க வைக்கப்படும் ஜீவன்களை மறந்து இருக்க முடியாது...

அந்த மனிதர்களை பற்றி இன்னும் விரிவாக சொல்லும் நாவல்தான் , ஜெயமோகனின் ஏழாவது உலகம்..

இந்த நாவலை படிக்க எனக்கு ஒரு சோம்பல் இருந்தது..அதுதான் படம் பார்த்து விட்டோமே.. அதே கதைதானே ,எதற்கு படிக்க வேண்டும் என தோன்றியது....

ஆனால் அப்படி அல்ல,,,

இது சொல்லும் விஷயம் வேறு... இதில் சிறு பகுதியயை படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்..

உணமையில் இதை சினிமாவாக அப்படியே எடுக்க முடியாது... அவ்வளவு உக்கிரம்.... வலி வேதனை..அதில் ஊடுருவி இருக்கும் மனிதம், அன்பு , நகைசுவை...

மனிதர்களை தனக்கு பணம் சம்பாதித்து தரும் மெஷினாக நினைக்கும் "தொழில் " அதிபர் அதை தவறான செயலாக நினைப்பதில்லை... நாம் யாருக்கும் கெடுதல் செய்யவில்லையே . நமக்கு ஏன் கடவுள் இப்படி சோதனை தருகிறார் என அந்த தொழில் அதிபர் குடும்பம் புலம்பும்போது, எல்லோருக்கும் நியாங்கள் உண்டு, கடவுள் உண்டு என்ற உண்மை நன்றாக காட்டபடிகிறது...

எல்லோருமே, நம்மை நல்லவர்கள் என்றுதான் நினைத்து கொள்கிறோம்.... அப்படி என்றால் உலகம் மட்டும் எப்படி கெட்டதாக இருக்க முடியும்... நீதான் உலகம் என ஜே கே சொன்னதை இதை விடதெளிவாக சொல்ல முடியாது....

கடவுள் என்பதையெல்லாம் மறந்து விடுங்கள்... நாம் தவறு மேல் தவறு செய்து விட்டு , நமக்கு மட்டும் நல்லது நடக்க வேண்டும் என நினைப்பது எவ்வளவு பெரிய அபத்தம்...

உடல் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தையை பார்த்தும் கடவுலுக்கு நன்றி சொல்லும் தொழில் அதிபர், அதை பெற்று தரும் பரிதாபத்துகுரிய பெண் , செலவத்தை வாரி வழங்கும் கற்பக விருடமாக போற்ற படுத்தல், ஆன்ம இல்லாத ஜீவன்கல் என அழைக்கப்படும் ஜீவன்கள், தம் முதலாளி மேல் காட்டும் அக்கறை ,என ஒவ்வொன்றையும் அருமையாக படைத்துள்ளார் ஜெய மோகன்..

கதை சொல்லும் பாணி, சம்பவங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது...

இன்ஸ்பெக்டரை பார்த்தும் , மரியாதையாக எழுவது போன்ற பாவனை காட்டினார் , தும்மாமல் தும்முவது போன்ற முக பாவம் மட்டும் காட்டினார் போன்று பல வரிகள் , சிறிய விஷயங்களை கூட மனதில் பதிய வைக்கின்றன...

மலை ஏறும் மக்கள் கூட்டத்தை, மேலே ஏறும் ஆறு என வர்ணிப்பது அருமை...

பிள்ளை பெற்று தருவது மட்டுமே ஒரு பெண்ணின் வேலை... அந்த பிள்ளைகள் அவளிடம் இருந்து பிரிக்கப்பட்டு விடிக்ன்றன.. ஆனாலும், தன குழந்தைகளை தன்னால அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்கிறாள் அவள்... கண்டிப்பாக தன குழந்தைகளில் ஒருவனை காண்பேன் என உறுதியாக சொல்கிறாள்..

அதே போல , அவள் தன் மகனை காணும் வாய்ப்பு வருகிறது... ஆனால், மகிழ்வதற்கு பதில் கதறுகிறாள்... நம் இதயத்துடிப்பை நிற்க வைக்கும் இடம் எது....


இந்த தொழிலில் பயன்படுத்தபடுபவர்களை, உருப்படி என்றுதான் அழைக்கிறார்கள்.. ஒரு பொருளை போல பயன்படுத்துகிறார்கள்...

இதே தொழிலில் இருக்கும் இன்னொருவர், தான் யாரையும் உருப்படி என அழைப்பதில்லை என்றும், எல்லோரும் சகாக்கள் எனவும் சொல்கிறார்..

ஒரு சகா , தன் சகாவை விற்கலாம என்ற கேள்விக்கு அவர் அளிக்கும் தத்துவ விளக்கம்... சரியான கிண்டல்,,,,,

அதே போல , ஆஸ்பத்திரியில் இருக்கும் உருப்படியை கடத்துவதற்காக , அவளுக்கு சும்மாவசும் தாலி கட்டுகிறான் உருப்படியின் சூப்பர்வைசர்..

அதன் பின், அந்த உருப்படி அவனை கணவானகவே நினைப்பதும், அவனுக்கு உருகுவதும், அவன் ஆத்திரப்படுவதும் அருமையான காட்சி அமைப்பு....

ஒரு கட்டத்தில், தொழில் அதிபருக்கு அவரது உருப்படிகளில் சிலரே தன்னம்பிக்கை அளிப்பது, ஐடியா கொடுப்பதும் - அசத்தல்...
ஆன்மா இல்ல்லாதவர்கல் என அழைக்க படும் அவர்களிடம் மட்டும் தான், மனிதம் இருக்கிறதோ என நினைக்க வைக்கும் அளவுக்கு பல காட்சி அமைப்புகள்...

அகமது என்ற கதாபாத்திரம் அருமை.. அவனும் உருப்படிகளில் ஒருவன்தான்.. ஆனால் ஆங்கிலம் பேச தெரிந்தவன்... பேப்பர் படிப்பவதை வழக்கமாக கொண்டவன்...

வழியில் வரும் போலிஸ் காரரை மடக்கி , ஆங்கிலத்தில் பேசுவதும்,போலிஸ் காரர் திகைப்பதும் மூத்த உருப்படி அதை பெருமிதத்துடனும் பரவசத்துடனும் பார்த்து ரசிப்பதும்... அடடா - இந்த காட்சிக்கு மனதில் கை தட்டினேன்..

ஆனால், என்னை கண் கலங்க வைத்த இடம் வேறு...

குய்யன் என்ற உருப்படி , நல்ல ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என ஆசைப்படுகிராரன்... அதை கிண்டல் செய்யும் நண்பர்கள், பிறகு அஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு அவனை ஹோட்டலுக்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள்...
காசுடன் அவன் தனியாக போனால், அவனை ஏமாற்றி விடுவார்கள் என அக்கறையாக யோசித்து, தாணு பிள்ளை என்பவரை வீடு அவனை அழைத்து போக செய்கிறார்கள்..
ஆனாலும் பத்து ரூபாய் குறைகிறது... அப்போது தான் ஆர்வாமாக சேர்த்து வைத்து இருக்கும் பேப்பர்களை , எடைக்கு போட்டு அந்த காசை எடுத்து கொள்ளுமாறு கூறுகிறான் அஹமது... சக ஜீவனின் ஆசையை நிறைவேற்றி வைக்க அந்த எளியவர்கள் காட்டும் அக்கறை கண்ணீர் வர செய்து விட்டது.. தான் அளவுக்கு மீறி ஆசை படுகிறோமோ என நினைத்து, சாப்பாடு வேண்டாம் என அவன் சொல்வதும், மற்றவர்கள் அவனை உரிமையுடன் திட்டி, சாப்பிட அனுப்புவதும், - படித்து பாருங்கள்

இந்த பகுதி மிக அருமையாக உள்ளது....

நான் படிக்கும் காலத்தில், நாகர்கோயில் நண்பர்கள் அமைந்தனர்... அவர்கள் பேச்சை கேட்பதே இனிமையாக இருக்கும்... அந்த ஓசை நயம், தாள நயம், இசை நயம், வித்தியாசமான வார்த்தைகள் , நேசம் , நட்பு இதை எல்லாம் மறக்க முடியாது...

இந்த நாவலில் வரும் வட்டார பேச்சை மிக மிக ரசித்தேன்.... ஆனால் , இந்த பேச்சு வழக்கு பழக்கம் இல்லாத வாசகர்கள், இதன் முழு அழகையும் உள் வாங்குவது கொஞ்சம் கஷ்டம்.. அர்த்தம் புரியும்.. ஆனால் அந்த அழகு புரிபடுவது கஷ்டம்...

மொத்தத்தில், அனைவரும் படிக்க கூடிய வகையில், ஜெயமோகன் எழுதிய ஒரே புத்தகம் இது என தோன்றுகிறது...

சிறிய புத்தகம்... யார் வேண்டுமானாலும் படிக்கலாம்... படித்து விட்டால், மறக்க முடியாது...

ஏழாம் உலகம் - ஏற்ற உலகம்..

**********************************************************

பின் குறிப்பு - என்னுடன் படித்த , நாகர்கோயில் நண்பர்கள் இதை பார்க்க நேர்ந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்... மக்கா, உங்களைத்தான் தேடிகிட்டு இருக்கேன்...

பாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்ல

பாரதியை விமர்சிப்பவர்கள் இரு வகை...

அவரை பற்றி எந்த அபிப்ராயமும் இல்லை.. சும்மா அ ரசியல் லாபத்துக்காக விமர்சிப்பவர்கள்...

இவர்களை பொருட்படுத்த வேண்டியதில்லை..

ஆனால், பதிவுலக நண்பர்கள் விமர்சிப்பது வேறு எந்த சுய லாபத்துக்கவும் இருக்க முடியாது... தங்களுக்கு சொல்லி தரப்பட்ட விஷயங்களை நம்பி, தன்கள் மனசாட்சி ப்படி விமர்சிக்கிறார்கள்...அதிலும் நாகரிகமான வார்த்தைகளியே பயன் படுத்துகிறார்கள் என்பதால், பதில் அளிப்பது நம் கடமை... மற்றபடி அவர்களின் சமுக அக்கறை குறை சொல்ல முடியாததது....தாம் உண்மை என நினைப்பத்தைத்தான் பேசுகிறார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை...

1 ஒரு நண்பன் பெரிய தொழிலதிபராக இருக்கிறான்... உழைத்தால் முன்னேறலாம்... யாரிடம் கை எந்த வில்லை என பேசுகிறான் என வைத்து கொள்வோம்.... நாம் அதல் பார்த்து மகிழ்ச்சி அடைவோம்... வேலை இல்லாமல் கஷ்டப்பட்ட காலத்தில் , நம்மிடம் கடன் கேட்டு எழுதிய கடிதத்தை வெளியிட்டு அவனை அசிங்க படுத்த முயல மாட்டோம்... அதுவும் அவன் உயிருடன் இல்லை என்ற நிலையில் , அப்படி வெளியிடுவது அவனை அசிங்க படுத்துவது ஆகாது.. நம்மை நாமே அசிங்க படுத்துவதுதான் ....

ஆனால், ஒருவர் வறுமையை வெளியிட்டாவது , அவரை அசிங்க படுத்த முயல்கிறோம் என்றால் , அந்த அளவுக்கு அரசியல்வாதிகள் நம் மனித உணர்வை மழுங்கடிக்க செய்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்...

2 மன்னிப்பு கடிதம் கொடுக்காமல் உயிர் விட்ட பகத் சிங்கை யும் பாரதியாரையும் ஒப்பிட்டு ஒரு நண்பர் கேள்வி எழுப்பிகிறார்... நியாயமான கேள்விதான்...

ஆனால், நண்பரே ..ஒரு வித்தியாசம் இருக்கிறது... இருவரும் தேச பக்தி மிக்கவர்கள் என்றாலும், இருவரின் போராட்ட முறை வேறு. போராட்ட ஆயுதம் வேறு...

கவிதை , எழுத்து என்பதுதான் பாரதிக்கு தெரிந்த விஷயம்... அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர் நடந்து கொண்டதை வைத்து அவரை தவறாக சித்தரிப்பது தவறு...

பாரதியை ஒரு தனி மனிதர் .. அவர் ஒரு புரட்சி கூட்டத்துக்கு தலைவர் , தீவிரவாத தலைவர் என்ற நிலையில் இருந்து , பணிந்து போய் இருந்தால் தவறுதான்.. ஆனால் நிலை அப்படி அல்ல..

அவரை மகா கவி என போற்றுவது பிடிக்கவில்லை என்றால், அவர் கவிதையில், இன்னென்ன தவறு இருக்கிறது என்று சொல்வதுதான் நியாயமே தவிர, அச்சமில்லை அச்சமில்லை என்று பாடிய அவர், பாம்பை பார்த்து பயந்தார் என நிருபிப்பது தேவை இல்லாத வேலை மட்டுமல்ல, நியாயம் இல்லாத செயலும் கூட ..

3 நல்லதோர் வீணை செய்தே , அதை நலம் கெட புழிதில் எறிவதுண்டோ , என திறமைகள் இரூந்தும், வசதி இல்லாத பல கோடி மக்களின் குராலக வர ஒலித்து இருக்கிறார். எனவே அவர் வறுமையில் வாடினார் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பது அவரை அசிங்க படுத்துவது ஆகாது... அவரை அந்த நிலையில் வைத்து இருந்த சமூகம்தான் வெட்கப்பட வேண்டும்...

இன்னும் அந்த நிலை மாறவில்லை... ஒரு பத்திரிக்கையை விமர்சிக்கும் சாரு நிவேதிதா போன்றவர்கள், அதே பத்திரிகையில் எழுதிதான் தம் கருத்தை சொல்ல வேண்டி இருக்கிறது.. தமிழ் நாட்டில் எழுத்தாளர்களுக்கு வேறு வழி இல்லை...

4 ஒரு சிறுவனுக்கு பூணூல் போட்டு விட்டால் சாதி ஒழிந்து விடுமா என்பது கேள்வி...

தாம் உயர்வாக நினைக்கும் விஷயம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அவரது என்னத்தைதான் இதில் பார்க்க வேண்டும்..

நானோ, நீங்களோ, போநோஒல் போட்டு விட்டால் அது போலித்தனமாக இருக்கும்... ஏன் என்றால் , நாம் பூணூலை கவுர அடையாளமாக பார்ப்பதில்லை...


அரசு பதவியில் இருக்கும் பலர் பல தவறுகளை செய்கிறார்கள்... அதுதான் நாட்டுக்கு தீங்கே தவிர, பாரதியை போன்ற கவி உள்ளம் கொண்டவர்களால் அல்ல...

உயிருடன் இல்லாத ஒருவர், திட்டினாலும் ஆதரவு கரம் நீட்ட ஆள் இல்லாத ஒருவருடன் மோதுவது நமக்கு எந்த பெருமையும் அளிக்காது....

Tuesday, July 20, 2010

ஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா


சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி நாவல் அற்புதமான நூலா அல்லது அற்பமான என பலருக்கு சந்தேகம்...

இதில் பெரும்பாலானோர் இதை படித்ததில்லை என்பதே உண்மை..

லேசாக சில பக்கங்களை பார்த்து விட்டு , ஆபாச குப்பை என சொல்பவர்கள் ஒரு புறம்...

சாருவை நேசிப்பவர்கள், அவர் எழுதினால் நன்றாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் , படிக்காமலேயே , இது அறபுதமான நூல் என் சொல்லும் நிலை ஒரு புறம். ..

இலக்கியம் தெரிந்தவர்கள் இதை பார்க்கும் முறை வேறு...

எல்லா புத்தகங்களையும், விருப்பு வெறுப்பு இன்றி படிக்கும் , ஒரு பார்வையாளன் இதை எப்படி பார்க்கிறான்.. பின் நவீனத்துவனம் வரையறை, நான் லீனியர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆராயாமல், இந்த நூல் எப்படி ஒருவரை பாதிக்கும் என எளிய தமிழில் சொல்வதே இந்த பதிவின் நோக்கம்...

ஓர் ஆபாச புத்தகத்தையோ , ஆபாச சினிமாவையோ பார்த்தால், அனைவரையும் ஆபாசமாக நினைக்கவே தோன்றும்.. ஆபாச எண்ணங்களை மனதில் எழுந்தவாறு இருக்கும்..

ஸீரோ டிகிரியை படித்து முடித்தால், கண்டிப்பாக ஆபாச எண்ணம் தோன்றாது... எனவே இது ஆபாச குப்பை என சிலர் சொல்வது தவறு...

வழக்கமான நடையில் இருந்து மாறுபட்டு வித்தியாசமாக இருப்பது படிப்பதை எளிமை ஆக்குகிறது...

அனால், மற்ற புத்தகங்களை போல, விரைவாக படிக்காமல், ஒவ்வொரு வரியையும் , ஒவ்வொரு எழுத்தையும் கூர்மையாக படிக்க வேண்டிய இருக்கிறது...

சில நாவல்களை, ஒரு பத்தியை விட்டு விட்டு படித்தாலும் , தொடர்ச்சி இழக்கப்பாமல், அதை புரிந்து கொள்ள முடியும்..

ஆனால், தொடர்ச்சி இல்லாமல் எழுதப்பட்டுள்ள இந்த நாவலை , ஒரு வரியை விட்டு விட்டாலும், புரிந்து கொள்ள முடியாமல் போய் விட கூடும்...

தியானத்தில் ஒரு வகை உண்டு.. மனதை கவனித்தல் என்பது எல்லோரும் சொல்லும் தியானம்..இதில் சற்று மேம்ப்பட்ட நிலைதான், மனதை யார் கவனி க்கிறான் என்பதையே கவனிப்பது..

இந்த நிலை நாவலை படிக்கும்போது ஏற்படுகிறது....

படித்து முடித்ததும், மனம் உறைந்து விட்ட நிலை ஏற்படுகிறது... சற்று நேரம் மனம் அசையவே இல்லை....

கண்ணீர், நகைச்சுவை, அன்பு என எல்லாமே உண்டு...

அனைவரும் படிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.. தமிழில் தான் இதை நாம் ரசிக்க முடியும்... வேறு மொழியில் இது போன்ற நாவலை ரசிப்பது கடினம்...

தமிழ் அவர் இழுத்த இழுப்புக்கு வருவது ஆசார்யமாக இருக்கிறது..

கொடூரம், நேசம் எல்லாமே நெஞ்சை தொடுகின்றன..

ஆனாலும், இதை அனைவரும் படிக்க முடியாது என்பதே என் கருத்து.. அனைவரும் படிக்க தேவையும் இல்லை...

வாழ்க்கையின் கொடூரங்களை அறியாத இனிய வாழ்வு சிலருக்கு ஆசிர்வத்திக்கப்பட்டு இருக்கலாம்.. அவர்கள் வலி , வன்முறை யை எல்லாம் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும்...

அதே போல ஓரளவுக்கு மன முதிர்ச்சியும் தேவை... இல்லை என்றால், ஆபாச கதை போல தோன்ற கூடும்... ஆபாச கதை எல்லாம் படித்து முடித்தவர்களுக்குத்தான், இதில் சொல்ல வரும் விஷயம் புரியும்...

இந்த நாவலின் தேவை இல்லாதவர்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும்...

அதாவது இந்த நாவலை படித்து விட்டு, என்னக்கு இது அன்னியமாக இருக்கிறது என்று ஒருவர் சொன்னால், அவர் ஓர் உன்னத வாழ்க்கை, (கவலைகள், வலி எல்லாம் இல்லாத வாழ்க்கை) வாழ்கிறார் என பொருள்..

********************************************************

இந்த நாவல் என்னில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்திய , மறக்க முடியாத நாவல்...


Monday, July 19, 2010

பாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்


பள்ளிக்கஊட காலத்தல் ஒரு நாள், நடிப்பில் சிறந்தவர் ரஜினியா கமலா என பரபரப்பாக விவாதம் செய்து கொண்டு இருந்தோம்..

கமல்தான் சிறந்த நடிகர் என் பல உலக படங்களை ஆதாரம் காட்டி , தெளிவாக பேசினான் ஒரு நண்பன். ரஜினி ரசிகனான ஒரு நண்பனுக்கு பதில் அளிக்க முடியவில்லை.. டெண்ஷான் ஆகிய நிலையில், அரிசி வாங்க என் கிட்ட கடன் வங்கி சாப்பிட்ட நாய், உலக திரைப்படத்தை பேசுறன் பாரு என எரிச்சலுடன் சொன்னான்.. உண்மையில் உதவி இருக்கிறான்.. நல்லவன் என்பது உண்மைதான்.. அனால், நாலு பேர் இருக்கிடம் இடத்தில் வறுமையை கிண்டல் செய்ததும், அந்த ஏழை நண்பன் முகம சுண்டி பொய் விட்டது. அவ்வளவு நேரம் ஆவேசமாக பேசியவன் அடங்கி போனது , அபோது அவனது முகபாவம் ஆகியவை என்னால் என்றும் மறக்க முடியாது..

இதே பாணியைத்தான், பாரதியாரை விமர்சிப்பவர்கள் கையாளுகிறார்கள்...

அவர் நீதி கட்சியை எதிர்ஹ்தார், அவரது ஜாதிய பார்வை என்பதெல்லாம் வேறு விஷயம்.

ஆனால், வறுமைக்காக , கடிதம் எழுதினர் என்பதை சொல்லி காட்டுவது, வறுமை என்பதை நாம் யாரும் உணர்ந்து பார்த்தில்லை என்பதையே காட்டுகிறது...

அடுத்த வேலை சோறு கிடைக்குமா, நாம் கூட பசியை தாங்கி விடலாம், அனால் நம்மை நம்பி இருப்பவர்களை காப்பாற்ற வேண்டுமே என்ற ஏக்கம், அது முடியாத பொது ஏற்படும் கழிவிரக்கம் என்றெல்லாம் , வறுமையின் கொடூரங்கள் அநேகம்..

இரண்டு நல சாபிடாமல் இருந்து விட்டு, அடுத்த நாள் சாபிட்டால், வாந்தி வரும்..சாப்பிட முடியாது....

பசி , பட்டினி எல்லாம் இல்லாத உலகம் வேண்டும்.. அது வரை அவர்களுக்கு உதாவ விதாலும், அதை கிண்டல் செய்யாமலாவது இருக்க வேண்டும்...

இப்படி பாட நிலையிலும் கூட, எத்ததனை கோடி இன்பம் வைத்தாய் இறைவ என்று பாடிஎதுதான் , பாரதியாரின் தனி தன்மை...


நல்ல சிந்தனை கொண்டவர்கள் கூட தம்மை அறியாமல் , வறுமையை கிண்டல் செய்வது , வருந்ததக்கது...


என்னை பொறுத்தவரை , யாரை வேண்டுமானாலும் விமர்சியுங்கள்...

ஆனால், வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்... இன்டர்நெட் பிச்சைகாரன் என்று இப்போதும் கிண்டல் தொடர்கிறது...

நாம் காசு இல்லாதா நாட்டிம்ன் சூழலில் வாழ்வத்டால்தான், வறுமையை கிண்டல் செய்வது நம் இயல்பாக மாறிவிட்டது என தோன்றுகிறது...

Thursday, July 15, 2010

பதவி வெறி அரசியல்வாதிகள், பாலகுமாரன் - பரிதாப பட வேண்டியது யாருக்கு

" அம்மா... ஸ்கூல , இங்க்லீஷ் கிளாஸ்ல எங்க டீச்சர் எ பி சி சொல்ல சொன்னங்க... யாருக்கும் தெரியல... நான் மட்டும் சரியா சொன்னேன்...
இதுக்கு காரணம் என்னம்மா ? நான் பிறவி மேதையா "

" இல்லை பா.. அதுக்கு காரணம் அவுங்க எல்லாம் சின்ன பசங்க..உனக்கு பதினைஞ்சு வயசு !!! "


முழுமையான வாழ்வு என்பது அந்தந்த வயதுக்கு ஏற்ப வாழ்வது... சின்ன வயதில் சைக்கிள் ஓட்டுவதே சாதனையாக இருந்தது... வாலிப வயதில் விமானம் ஓட்டுவத்துதான் சாதனையாக இருக்க முடியும்... சைக்கில் ஒட்டிய பெருமையை பேசி பயனில்லை..

ஆனால், தமிழ்நாட்டில் இப்படி பட்ட ஆரோகியமான வளர்ச்சி இல்லை..

ஒருவர் அரசியலில் இறங்கி, பதவியில் இருந்து விட்டால், அதே பதவிதான் அவர் வாழ்நாள் லட்சியம் ஆகி விடுகிறது... சாகும் வரை அவர் வாழ்வு பதவியை சுற்றித்தான்...

அமெரிக்க போன்ற நாடுகளில் இந்த நிலை கிடையாது... குறிப்பிட்ட வயத்தில் அரசியலில் இருந்து ஒய்வு பெற்று வேருதுரையில் திறமையை காட்டுபவர்கள் அநேகம்...

தொழில் துறையில் சாதித்து விட்டு, ஒய்வு பெறுவதும் அங்கெல்லாம் சகஜம்...
இந்தியாவில், ஓய்வு பெறும் அரசியல் வாதியை பார்க்க முடியுமா?

கடைசி மூச்சு வரை பதவி வெறி இருப்பதைத்தான் , ஒரு மனிதனின் மாபெரும் குணமாக தமிழ்நாட்டில் நினைக்கிறோம்.

இந்த மனநிலை இருப்பதால் தான், பாலகுமாரன் போன்ற ஒரு மாபெரும் எழுத்தாளர் , எழுத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருப்பதை , அவரது தோல்வி என சிலர் பார்க்கிறார்கள்..

அவர் நினைத்தால், பழைய மாதிரி கதைகளை இன்றும் எழுத முடியும்.. ஆனால் அது அவருக்கு பெருமை அளிக்காது...

அந்தா கால கட்டத்தில் அவை சிறப்பானைவைதான்.. ஆனால் , இன்றும் அதையே அவர் எழுத தேவையில்லை...

உடையார் போன்ற நாவலுக்கு அவர் அளித்திருக்கும் உழைப்பு , அந்த நாவல் அடைந்த வெற்றி அவருக்கு அளித்து இருக்கும் நிறைவே அவருக்கு போதுமானதாக இருக்கும்... இனி அவர் எழுதவே தேவை இல்லை.... அவர் வாழ்க்கையே ஒரு அழகிய நாவல்தான்...

ஆனாலும் அவர் எழுதினால் நல்லதுதான்... அது உடையாரை விட சிறப்பனதாக இருக்க வேண்டும்...

அவர் அடைந்த முழ்மையை , நிறைவை, சாகும் வரை பதவிக்காக அலையும் அரசியல் வாதிகள் அடைய முடியாது..

இந்த அரசியல் வாழ்க்கைதான் ( பணம் சம்பாத்தித்தாலும் ) தோல்வியே தவிர, பாலகுமாரன் எழுத்துக்கலுக்கு என்றும் தோல்வி இல்லை
பாலகுமாரனை பாராட்டுவோம்...பதவி வெறி அரசியல்வாதிகளை நினைத்து பரிதபபடுவோம்

Wednesday, July 14, 2010

அறிவியல் ஆண்டவன் ஆக்டோபஸ் - பி எஸ் எல் வி ராக்கெட்டும் , புட்பாலும்


அனந்த புரத்து வீடு படம் ரிலீசுக்கு கிடைத்த கவனம கூட , பி எஸ் எல் வி ராக்கெட் ஏவப்படதுக்கு கிடைக்கவில்லை...

ராக்கெட் என்பது விஞ்ஞானிகள் சம்பந்தப்பட்டது ..இதனால் நமக்கு என்ன பலன் என்றே பெரும்பாலோநூர் நினைன்றனர் ( வலை பதிவர்கள் இப்படி நினைக்க வாய்ப்பில்லை )

செயற்கைகோளின் பலன் என்ன, பி எஸ் எல் வி, ஜி எஸ் எல் வி என்றால் என, அதில் இருக்கும் சுவையான தகவல்கள் என்ன, நுணுக்கங்கள் என்ன என்பதையெல்லாம் இன்னொரு முறை பார்க்கலாம்...

என் கவனத்தை கவர்ந்தது, கால் பந்தாட்ட போட்டியில், ஆக்டோபஸ் பெற்ற கவனமும், ராக்கெட் ஏவப்பட்டபோது, ஆலய வழிபாடு செய்யப்பட்டது போதிய கவனம் பெறாததும்தான்...

எப்போதுமே , மனிதனுக்கு தன்னை விட மேலான சக்தியை நம்புவது பிடித்தமான ஒன்று...
( john grey யின் இந்திய சாமியார் பக்தி குறித்து நான் எழுதியதை படித்து இருப்பீர்கள் )

இது போன்ற நம்பிக்கை, இந்தியாவுக்கு மட்டுமே சொந்தம் அல்ல... உலகம் முழுதும் இப்படி நம்பிக்கை இருக்கிறது..

பாமரன் முதல் விஞ்ஞானிகள் வரை அனைவரிடமும் ஒரு வித நம்பிக்கை இருப்பதை பார்க்கலாம் ( குறிப்பிட்ட பேனாவைத்தான் , சிலர் தேர்வுகளுக்கு எடுத்து செல்வார்கள் )

ஆக்டோபஸ் நம்பிக்கையும், ஆண்டவன் நம்பிக்கையும் ஒன்றா என்பது கேள்வி...

இல்லை... ஆக்டோபஸ் என்பது , சம்பவத்தில் தொடர்பு இல்லாதவர்கள், சும்மா ஆருடம் கணிப்பது...

ஆண்டவன் நம்பிக்கை என்பது , சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள், வெற்றிக்காக வேண்டி கொள்வது...

அறிவியலை நம்பாமல் , ஆண்டவனை நம்பலாமா? இது தவறில்லையா ? அடுத்த கேள்வி....

தவறுதான் ....


அறிவியலை நம்பாமல், ஆலய வழிபாடு மட்டும் போதும் .. ராக்கெட் பறந்து விடும் என நினைத்தால் தவறுதான்...
ஆனால், அவர்கள் அப்படி இருந்தது போல தெரியவில்லை... அறிவியலை முழுதும் நம்பி, உழைத்து, பல கணகீ டுகளை செய்து, தயார் நிலையை எட்டியதும், ஆலய வழிப்பட்டு செய்து இருகக ர்கள்..
நமது விஞ்ஞானிகள் , ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட வேண்டுமென்பதற்காக திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபட்டிருக்கின்றனர். இஸ்ரோவின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் உட்பட பல விஞ்ஞானிகள் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்திருக்கின்றனர். ராக்கெட்டின் மாதிரி வடிவத்தை ஏழுமலையானின் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடும் நடத்தியிருக்கின்றனர்

ஆலய வழிபாடு செய்ததால்தான் வெற்றி கிடைத்ததா , என நமக்கு தெரியாது... ஆனால், எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற அவர்கள் ஆர்வம் இதில் தெரிகிறது...

ஆலய வழிபாடு செய்தும் தோல்வி அடைந்து இருந்தால், எவ்வளவு கேலிகள் கிண்டல்கள் எழுந்து இருக்கும் என்பதை கணிப்பது சுலபம்தான்..

ஆலய வழிபாது என இல்லாவிட்டாலும், தனக்கு மீறிய ஒரு சக்தியை எல்லோரும் நம்புவதை பார்க்க முடியும்..

அவர் நீண்ட ஆயுள் பெற , இயற்கையை பிரார்த்திக்கிறேன் என ஆசி வழங்கும் நாத்திக தலைவர்கள்,

அருபேராற்றல், நலத்தை வழங்கட்டும் என கூறும், ஆன்மிக வாதிகள்,

குரு அருள், யாகம் வளர்த்தல் என எத்தனையோ இருந்தாலும், எதையும் கேலி செய்து பயன் இல்லை.

மக்களுக்கு நலம் விளைந்தால் சரிதான்...

ஒருவர் எதை நம்புகிறார், எதை நம்பவில்லை என்பது முக்கியம் இல்லை...

என்ன செய்கிறார் என்பதே முக்கியம்..

அந்த வகையில் நமது விஞ்ஞானிகளை பாராட்ட விரும்புகிறேன்

ஸ்பெயின் அணிக்கும் வாழ்த்துக்கள்....

குறைந்த கோல், நிறைந்த வெற்றி என்ற அவர்கள் ஆட்டம் பற்றி நிறைய பேசலாம்...
விரிவாக பிறகு பார்க்கலாம்

காதல் பிசாசே..காதல் பிசாசே..

நான் குமாரை பார்த்து இருக்க கூடாது...

அவன் தான் காதலிக்கும் பெண்ணை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்க கூடாது...

சிறிது நேரம் பேசி விட்டு பிரிந்து விட்டோம்... ஆனால் , அப்போது ஆரம்பித்த என் பிளாஷ் பாக் சிந்தனைகள் இன்னும் ஓயவில்லை..

நானும் , சாந்தியும் காதலித்த கால கட்டங்கள்..மறக்க நினைத்து எல்லாம், நினைவு கடலில் இருந்து , விழித்து எழ தொடங்கின...

பேச ஆரம்பித்தால், நேரம் போவது தெரியாமல்பேசி கொண்டு இருப்போம்... என் நான்கு வயது பயனின் மழலையில் அதை எல்லாம் மறக்க நினைத்த போது மீண்டும் அவள் நினைவுகள்..

அவளது ரசனை..செல்ல சீண்டல்... காதல் கவிதைகள் .... இலக்கிய விவாதங்கள்....

எனது உயிர் சுவாசமாக இருந்தாள் அவள்...

அவள் இப்போது இல்லை என்ற உண்மையை என்னால் ஏற்க முடியவில்லை... அவளை திருமணம் செய்து கொண்டு இலக்கியம் போல குடும்பம் அமைக்க நாங்கள் எவ்வளவு திட்டம் இட்டு இருப்போம்...

என்னை புரிந்து கொண்டவளாக, அறி தோழியாக இருப்பாள் என்றெல்லாம் நினைத்து , கனவு கோட்டை இருந்தேனே...

அவள் ஒரு போதும் இனி மீண்டும் வர முடியாது....

காதலித்த கால கட்டத்தில் நானும் சாந்தியும் எடுத்து கொண்ட புகைப்படத்தையும், அத கீழ் அவள் எழுதி இருந்த கவிதையையும் ரசிக்க ஆரம்பித்தேன்..

பழைய நினவுலகில் மூழ்கித்தனே , நிகழ்கால வெறுமையை மறக்க முடியும்.!!!!

திடீரென அருகில் யாரோ வருவது போல இருந்தது..

அட.,. என் மனைவி...

திடுகிட்டேன்...

கையில் போட்டோவுடனும், கவித்தையுடனும் இருப்பதை பார்த்து விட்டாள்

" காலங்காத்தால, அதை வச்சுக்கிட்டு என்ன செய்றீங்க... பொய் கத்திரி காய் வாங்கிட்டு வாங்க... மசமச நு உட்கார்ந்து கிட்டு இருக்காதீங்க... எனக்கு வந்து வைச்சீங்க பாருங்க... கடவுளைத்தான் குறம் சொல்லணும் "

என் மனைவி சாந்தி , அர்சசனை செய்து வெட்டு, தன் வேலையை பார்க்க சென்றாள்...
போகும் போது, நானும் அவளும் , காதலித்த களத்தில் எடுத்த புகைப்படத்தை அலட்சியம்க , மேஜையில் தூக்கி போட்டாள்

காதலித்த பெண்ணையே திருமணம் செய்து இருந்தாலும், காதலித்த காலத்தில் இருந்த அந்த சாந்தி இப்போது இல்லை என்ற யதார்த்தத்தை சுமந்த படி கத்திரிக்காய் வாங்க கிளம்பினேன்.,..


*********************

Monday, July 12, 2010

சாமியாரும் , எழுத்தாளரும்- புதிய தகவல்கள்

john grey ... மென் ஆர் பிரம் மார்ஸ்......வுமன் பிரம் வீனஸ் ... என்ற புத்தகம் எழுதிய இவரை அனைவரும் அறிவோம்... இந்த புத்தகம் பிரபலமாக நம் சாமியார் ஒருவர் தான் காரணமாக இருந்தார் என்பது நம்ப முடிகிறதா ?

இவர் நம் இந்திய சாமியார் ஒருவரின் பக்தர் என அறிந்த போது ஆச்சர்யமாக இருந்தது...

ஏர் டெக்கான் விமான சேவையை ஆரம்பித்த கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றில் , கோபிநாத் இதை குறிப்பிட்டு இருக்கிறார்..

ஊருக்கெல்லாம் அறிவுரை வழங்கும் வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கு, இந்திய சாமியாரிடம் என்ன தேவை இருக்க முடியும்?

எழுத்தாளர் , நம் சாமியாரை பார்த்தாராம்.. " என்ன வரம் வேண்டும் " சாமியார் கேட்க, எழுத்தாளர் சொன்னாராம்..

என்ன ஆச்சரியம். அடுத்த நாளே அந்த வரம் பலித்து விட்டதாம்...

ஒரு வேளை, இது தற்செயலானது என நினைக்கலாம்..

இன்னொரு வரமும் கேட்டாராம்... அதுவும் பலித்ததாம்...

இந்தியாவில் இருந்த படியே, அயல்நாட்டு சம்பவங்களை ஆட்டுவிக்கும் சாமியார்... அசந்து போன எழுத்தாளர், பக்தராக மாறினாராம்..

அந்த சாமியாருக்கு , லோக்கல் பக்தர்கள் யாரும் இல்லையாம்... எல்லாம் வெளிநாடினர்தானாம்..

அது என்ன வரம்.. சாமியார் பெயர் என்ன , எங்கு இருக்கிறார் என அறிந்து கொள்ள விரும்புபவர்களும், அவரிடம் ஆசி பெற விரும்பும் எழுத்தாளர்களும் , படிக்க வேண்டிய புத்தகம், simplyfly ... by கேபடன் கோபிநாத் ..

************************************************************************************

பொதுவாக இது போன்ற , வெற்றி வரலாறு எழுதுபவர்கள், தனது உழைப்பு, தன்னம்பிக்கை , விடா முயற்சி - இதைத்தான் வலியுறுத்துவார்கள்...

அனால், இந்த புத்தகம் சற்றே மாறுபட்டு, வாய்ப்புகள்தான் மனிதனின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன என்ற உண்மையை அருமையாக சொல்கிறது...இதை சொல்ல அவர் வெட்கப்பட வில்லை...

அதற்காக , வாய்ப்பு மட்டுமே அவர் வெற்றிக்கு காரணம் என்பதில்லை... அவர் சும்மா உட்கார்ந்து இருக்கவில்லை... வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி கொண்டார்...

ஒரு வேலையில் நிபுணத்துவம் பெற்றால்தான் சாதனை செய்ய முடியும் என்ற மாயையும் உடைக்கயார் இவர்...

விவசாயம், உணவகம், பைக் ஏஜன்சி, ஹெலிகாப்டர், விமானம் என பல துறைகளில் இருந்து பார்த்து இருக்கிறார்...

வாழ்கையை இனிய பயணமாக ஆக்கி கொண்டு இருக்கிறார் கோபிநாத் அவர்கள்...

தண்ணீரை எடுத்து வர கழுதைகளை பயன்படுத்துவது போன்ற புதுமையான ஐடியாக்களுகு சொந்த காரர் இவர்..

சில ஜெயிக்கலாம, சில தோற்கலாம்.. ஆனால் தன்னம்பிக்கை இழக்க கூடாது என்பது இவர் மனநிலை...

ஆனால், தன்னம்பிக்கையால் மட்டும இவர் வெற்றி பெறவில்லை... வாய்ப்புகளும், பலரது உதவிகளும் வெற்றிக்கு காரணம் என்று சொல்லும் நேர்மை, புத்தகத்தின் மதிப்பை உயர்த்துகிறது...

கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்...

Thursday, July 8, 2010

ராமன் வெர்சஸ் ராவணன் - நடந்தது என்ன ?

வரலாறு என்பது வேறு .. வரலாற்று நாவல் என்பது வேறு .. ( புராணம் என்பது தனி பிரிவு )

இந்த வருடத்தில் , இந்த சம்பவம் நடந்தது என துல்லியமாக சொல்வது வரலாறு..

ஏன் நடந்தது என தன கற்பனையால் இட்டு நிரப்புவது வரலாற்று நாவல்..

வரலாற்று ஆதாரங்கள் தெளிவாக இல்லாத நிலையில், சில அடிப்படை பாத்திரங்களை வைத்து , அடிப்படை சம்பவங்களை மாற்றாமல் வைத்து , கதை புனைவதும் வழக்கமாக நடை பெறும் ஒன்றுதான்..

ராமன்- சீதை- ராவணன் என்ற மூன்றை வைத்து பல ராமாயணங்கள் உள்ளன ..

ஏதோ ஒரு நீதியை வலியுறுத்தும் வகையில் அவை இருக்கும்... ஒருவரை நல்லவராக காட்டி, அவரை ரோல் மாடலாக கொள்ளுங்கள் என வலியுறுத்துவது இவற்றின் உத்தேசம்.. இதற்கெல்லாம் ஆதாரம் இல்லை..எனவே எப்படி வேண்டுமாலும் சொல்லலாம்... அனால் சொல்வது மனித சமுகத்துக்கு நல்லதாக இருக்க வேண்டும் )

ஒரு ராமாயணத்தில், சீதை என்பவள், ராவணின் மகள்... ராமனின் போக்கு பிடிக்காமல் , ராவணன் அவளை பிறந்த வீடு அழைத்து செல்கிறான் ..அதன் பின் , ராமன் திருந்தி, தன வீரத்தை நிரூபித்து , அவளை அழைத்து செல்கிறான் என்று வருகிறது...

இன்னொரு ராமாயணத்தில் , ராமனின் போக்கு பிடிக்காமல், தசரதன் , அவனை காதுக்கு நாடு கடத்துகிறார்..

இன்னொரு ராமாயணத்தில் எல்லோருமே நல்லவர்கள்... ராமன் உலக அனுபவம் பெறுவதற்காக, கைகேயி அவனை காட்டுக்கு அனுப்புகிறாள்...

இப்படி எல்லாம் பல இருந்தாலும், அதிகமாக ஏற்று கொள்ள பட்ட ராமயணம, ராமன் ஏக பத்தினி விரதன...சீதை கடத்த படிக்கிறாள்... ராவணன் முழுதும் கெட்டவன் அல்ல... கடை சியில் சீதை மீபு.. தன பின் அக்னி பிரவேசம் என ஒரு கிளைமேக்ஸ் ..அவள் காட்டுக்கு சென்று விடுகிறாள்,,,லவன் குசனை பெறுகிறாள்... என ஒரு க்ளைமேக்ஸ்...

இன்னொரு பார்வையும் உண்டு... ராவணன் மிக நல்லவன்... பல கலைகளில் வல்லவன்... சீதை மேல் காதல் கொண்டு அவளை கடத்துகிறான்... ஆனாலும் அவள் சம்மதம் தான் முக்கியம் என கண்ணியம் காக்கிறான்....

இந்த அ டிப்படையில் , புதிதாக ராமாயணம் சொல்ல நினைத்தது தவறில்லை...

ஆனால், நல்லவன் தோற்றதாக காட்டியது தப்பு... யதார்த்தவாத படங்களில் அப்படி காட்டுவார்கள்... இந்த படத்தில் இப்படி காட்டி இருக்க கூடாது...

இதுதான் தோல்விக்கு காரணம்...

Wednesday, July 7, 2010

விஷ்ணுபுரம் பதிவு பிடிக்கவில்லையா? திட்டுங்கள் சாரு நிவேதிதாவை

என்னை போன்ற பலர் தமிழில் எழுதும் போது , ஒற்று பிழைகள் போன்ற பல பிழைகளை அலட்சியாக செய்வது வழக்கம்... இதை ஒரு எழுத்தாளர் என்ற முறையில் , சாரு நிவேதிதா சுட்டி காட்டி இருந்தது உண்மைதான்..

அதே போல , ஒருவர் எழுத்தை படிப்பவர்கள் அதை பற்றி விவாதிபதில்லை என்று அவர் குறைபட்டு இருப்பதும் உண்மையே.. அனால் யாரும் புத்தகங்கள் வாங்குவதில்லை என்று அவர் சொல்வது தவறு... அவர் ரசிகர்களை விட, என்னை போன்றவர்கள் அவர் நூல்களை வாங்கி படிப்பதுதான்அதிகம்

உண்மையில் ஒரு எழுத்தாளனின் ரசிகரை விட , என்னை போன்ற பார்வையாளர்கள்தான், ஒருவரது எழுத்தை ஊன்றி படிக்க முடியும்...

என்னை பொறுத்தவரை, ராஜேஷ்குமார், பாலகுமாரன், தமிழ்வாணன், பட்டுகோட்டை பிரபாகர், ஜெயகாந்தன், ஜெயமோகன், சாரு நிவேதிதா என எல்லோரையும் படிப்பவன்... ஒருவர் உயர்வு, ஒருவர் தாழ்வு என எண்ணுவதே இல்லை...

அதே சமயம்,. ஒரு எழுத்தாளர், மற்ற எல்லோரையும் மட்டம் தட்டுவதை ஏற்றுகொள்கிறேன்.. புரிந்தும் கொள்கிறேன்... ஒரு குறிப்பிட்ட சிந்தனையில் இருக்கும் ஒருவர், மற்ற வகை சிந்தனையை , மற்றவர் நடையை ரசிக்க முடியாததுதான்..

ஆனால், ஒரு எழுத்தாளரின் ரசிகர்கள், கண்ணை மூடிக்கொண்டு மற்றவரை விமர்சிப்பது சரியல்ல... எல்லோரையும் படிப்பதுதான் நல்லது....

குறைந்த பட்சம், எந்த எழுத்தாளரின் எழுத்தை ரசிகிரார்களோ, அதையாவது படிக்க வேண்டும்...

ஜெயமோகனின் புத்தகமான விஷ்ணுபுரம் நாவலை படித்து முடித்ததும், அதை பற்றி எழுதுவதற்கு சாரு வின் பதிவுதான் காரணம்... எனவே என் அந்த பதிவு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் திட்ட வேண்டியது சாரு நிவேதிதாவைதான்,,..

அதே போல, சாறு நிவேதிதாவின் பல புத்தகங்களை படித்து ரசித்து இருந்தாலும் , அதை பற்றி எழுத என்னை ஊக்கு விக்காததர்காக , யாரை வேண்டுமாலும் திட்டி கொள்ளுங்கள்...

எந்த குறிப்பிட்ட எழுத்தாளரின் ரசிகராக இல்லாமல் , எழுத்தை மட்டும் ரசிப்பதால், பல புத்தகங்களை படிக்க முடிகிறது..

இலக்கிய விமர்சனம் படிக்க சிலருக்கு போரடிக்கலாம்..
ஆனால், என்னை போன்ற பார்வையாளன் , ஒரு புத்தகத்தை பற்றி செய்யும் அறிமுகம் , சாதாரண மனிதனின் பார்வையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு, சாரு நிவேதிதா நூல் உட்பட எல்லோருடைய புத்தகங்கள் பற்றியும் எளிய அறிமுகம் தர உத்தேசித்து இருக்கிறேன்...

matrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்லாத தலைப்பு, வருத்தம் தராத நாவல் )

மேட்ரிக்ஸ் படம் பார்த்து இருப்பீர்கள்... படம் பார்த்து இருப்பவர்களுடன் பேசினால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ரசித்து இருப்பதை பார்க்க முடியும்...

என்னை பொறுத்தவரை, அந்த படம் பார்த்து முடித்தவுடன், நாம் இருப்பது 2010 ல் தானா, உண்மையில் நாம் இருக்கிறோமா அல்லது இதெல்லாம் கற்பனை தோற்றமா , வேறு யாரவது நம்மை ப்ரோகிராம் செய்து வைத்து இருக்கிறார்களா என்றெலாம் தோன்றியது...
யோசித்து பார்த்தால், அப்படி இருக்கும் சாத்தியமும் இருக்கிறது...

அதே போன்ற உணர்வுதான், ஜெயமோகனின் விஷ்ணுபுரம் படித்து முடித்ததும் தோன்றியது...

நாமெல்லாம் உண்மைதானா அல்லது யாரோ ஒருவர் சொல்லி கொண்டு இருக்கும் கதையில் நாமெல்லாம் ஒரு பாத்திரம்தானா .. எல்லாமே ஒரு நாடகம்தானா என்று ஓர் உணர்வு ஏற்பட்டது...

உண்மையில் இந்த உணர்வை ஏற்படுத்துவது அந்த நாவலின் நோக்கம் அல்ல .. ஆனால் எனக்கு ஏற்பட்ட உணர்வு இது... உண்மையல் இதை படிப்பது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்தது.... அறிவுரை கூறுவது, ஒரு சிந்தனையை போதிப்பது , ஒரு நபரின் சாகசங்களை சொல்வது என்று எதுவும் இல்லாமல் ஒரு வித்தியாசமான நாவலாக இருந்தது விஷ்ணு புரம்.

*************************************************************

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நண்பன் இந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்க சொன்னான்... இறந்த புத்தகம் அவனை மாற்றி விட்டதாக சொன்னான்... விஷ்ணுபுரத்துக்கு முன், வி. பின் என அவன் வாழ்வை பிரிக்கும் அளவுக்கு இந்த நாவல் இருப்பதாக சொன்னான்..

நாவலின் பெயர் , அட்டை படம், பின் அட்டை குறிப்பு- இதெல்லாம் நாவல் ஒரு சாமிக்கதை போல என என்னை நினைக்க வைத்தது... எனவே சும்மா புரட்டி பார்த்து விட்டு அவனிடமே கொடுத்து விட்டேன்.

சென்ற வாரம் , புத்தக கடைக்கு சென்ற போது தற்செயலாக இந்த புத்தகத்தை பார்த்தேன்... 847 பக்கங்கள்.. சரி,,இதில் என்னதான் இருக்கிறது.... படித்து பார்க்கலாமா என தோன்றியது... விலையை பார்த்தேன்.. 500 ரூபாய்... இந்த விலைக்கு இதுவரை எந்த தமிழ் புத்தகமும் வாங்கியதில்லை.... ஆங்கில புத்தகங்கள் வாங்கி இருக்கிறேன் .தமிழ் பித்தகத்தில் அந்த அளவுக்கு , நான் எதிர்பார்க்கும் விஷயங்கள் இருக்குமா என்ற சந்தேகம் எனக்குஉண்டு..risk

சரி.. ரிஸ்க் எடுத்து பார்க்கலாம் என வாங்கினேன்..


***************************************************************************************************************
ஒரு புள்ளியில் கதை ஆரம்பித்து , சிறிது சிறிதாக வேகம் எடுத்து, அதிவேகத்தை இறுதியில் அடைவது ஒரு விதம்..

சில ஆங்கில படங்களில் , ஆரம்பத்திலேயே ஒரு பெரிய விஷயம் நிகழ்ந்து நம்மை நாற்காலியில் விளும்புக்கு தள்ளும் அளவுக்கு பரபரப்பு ஏற்படுத்தும. அதன் பின், அதற்கு சம்பந்தமே இல்லாத வகையில் வேறு காட்சிக்கு மாறி, சிறிது சிறிதாக வேகம் எடுக்கும்... முந்தல் காதின் அர்த்தம் பிறகு புரியும்..

இந்த பாணியில் இருக்கிறது இந்த நாவல்..

கடினமாக இருக்கும் என நினைத்து , சில பக்கங்களை புரட்ட ஆரம்பித்த சில நொடிகளிலேயே அது என்னை ஈர்த்து விட்டது... சிதறி கிடப்பது போல காட்சிகள் இருந்தாலும், ஒவ்வொன்றும் சுவையாக இருப்பதால் , எதையும் விட்டு விடாமல் படிக்க முடிந்தது..

பல இடங்களில் வைக்கப்பட்ட புள்ளிகள் , ஒரு அழகிய கோலமாக கடைசியில் மாறுவது மிக நேர்த்தி..

*************************************************************************************************************

ஒரு நபர்... அவருக்கு ஏற்படும் சிக்கல்,,,, அத அவர் எப்படி தீர்க்கிறார்... என்ற நேர்கோட்டில் நாவல் செல்லவில்லை ..அப்படி சென்று இருந்தால், சிறிது நேரத்தில் அலுப்பு தோன்ற கூடும்... முடிவுதான் முக்கியம் என்பதால், பல பக்கங்களை வேகமாக கடந்து சென்றுவிடுவோம்..

விஷ் ணு புரத்தை பொறுத்தவரை, நாவல் எங்கு சென்று முடிகிறது என்ற ஆவலை விட, நாவல் தொட்டு செல்லும் விஷயங்கள் முக்கியம் என்பதால், ஒவ்வொரு வரியும் முக்கியத்துவம் பெறுகிறது ...

பிறத்தல் , வாழ்தல் ,இனப்பெருக்கம் செய்தல், சாதல் - இதைத்தானே மிருகங்களும் செய்கின்றன... இதை தாண்டி மனிதனுக்கு வேறு எதுவும் இருக்கிறதா... என்ற ஞான தேடல்தான் பல நல்லதுக்கும் காரணம் ..பல துன்பங்களுக்கும் காரணம்...

ஒரு வேளை, இப்படி தேடுவதே ஒரு வேண்டாத வேலையா ..இப்படி தேடி நம் வாழக்கை வீணடித்து கொள்கிறோமோ என்றும் தோன்றுகிறது..

இதை எல்லாம, பல்வேறு விதமாக பல மார்க்கங்கள் விளக்குகின்றன... எல்லா வழிகளையும், அதனதன் பார்வையில் விளக்கும் ஞான சபை விவாதங்கள் , நேர்மையாக விவரிக்கப்பட்டுள்ளன..
ஒட்டு மொத்த நாவலையும் படிக்காமல், அந்த பகுதியை மட்டுமே படித்தால் போதும் என தோன்றுகிறது... இன்னொரு விதமாக பார்த்தால், அந்த பகுதி இல்லாமல் கூட நாவல் நன்றாக இருக்கும் என்றும் தோன்றுகிறது...

*********************************************************************************
இவ்வளவு கடினமான நாவலை எழுதும்போது கூட நகைசுவை உணர்ச்சியை தக்க வைத்துள்ள , அவரை பாராட்டாமல் இருக்க முடியாது..அதே போல , ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்ற அனுபத்தை தரும் வகையில், காட்சி அமைப்புகளை அமைத்துள்ளார்..

சைன்ஸ் பிக்க்ஷன் போல , சில காட்சிகள் உள்ளன... ரகசிய கதவுகள், பாஸ் வோர்ட் என்றெல்லாம் ரசிப்பதற்கு பல இடங்கள் உள்ளன,, ( பாஸ் வோர்ட் என்பது நேரடியாக சொல்லப்படவில்லை... கூர்ந்து படித்தால் புரியும் )

******************************************************************************************************
உங்கள் அறையை அப்படியே விட்டு விட்டால், அது ஒழுங்கு நிலையில் இருந்து ஒழுங்கின்மை என்ற நிலைக்கு செல்லும்... ஒழுங்கின்மை என்ற நிலைக்கு செல்வதுதான் இயற்கை.... என்ரோபி என்று அறிவியல் சொல்வது இதைத்தான், ... இதைதான் காலம் என்கிறார்கள்... பரிபூரண ஒழுங்கின்மையை அடைந்த பின், மீண்டும் ஒழுங்கு என்ற நிலைக்கு வந்தாக வேண்டும்...

இந்த இடத்தைத்தான், பிரளயம் என்று நாவல் சொல்கிறதோ என்று தோன்றுகிறது ..

அதே போல chaos theory .. ஒரு வண்ணத்து பூச்சி சிறகடிக்கும் சிறிய செயல், பல்வேறு சிக்கலான வழிகள் மூலம் அதிகரித்து சென்று, பெரும் புயலாக மாறக்கூடும் ...
ஒரு செயல், அதன் மூலம் இன்னொரு செயல் என்று விரிவடைந்ததுதான் இந்த உலகமா.. ? திருவடி தான் விரும்பிய பெண்ணை அப்போதே அடைந்து இருந்தால், ஓர் ஆழ்வார் உருவாக்கி இருக்க மாட்டார் ....

****************************************************************

மனிதன் ஞானத்தை உருவாக்குகிறான்.. அது அவன் மேல் உட்கார்ந்து இருக்கிறது... தள்ளாடிய படி சுமந்து திரிகிறான்..

காமம் மன வாசல் திறந்து நம்முள் நுழையும் போது, அதன் நிழல்தான் முதலில் நுழைகிறது.

மக்கள் சாதாரணமானவர்களைத தான் தலிவர்கள் ஆக்குகிறார்கள்..பிறகு அவனை அசாதரனமானவன் என நினைத்து வணகுகிரார்கள்.

அதிகாரம் இருப்பதை போல காட்டி கொள்ளும்போது மேலும் அதிகாரம் வந்து சேருகிறது..

பொருட்களுக்கு தனி தன்மை என்பது, இன்னொரு பொருளின் மீது அது ஏற்படுத்தும் விளைவு மட்டுமே. இந்த பொருள் இப்படித்தான் இருக்கும் என சொல்ல முடியாது

தீ என்பது எல்லோருக்கும் சுடத்தானே செய்யும். சுடாத தீ உண்ட ?

உண்டு... நீரின் ஆத்மாவுக்கு..

நாம் பார்க்கிறோம், பார்க்கும் கணத்திற்கும் அப்பொருளை பார்வை தொட்ட கணத்திற்கும் இடையே ஒரு கால இடைவெளி உள்ளது. அது மிகமிகச் சிறியதாக இருக்கலாம். ஆயினும் அவ்விடைவெளியில் அப்பொருள் அழிந்து இன்னொன்று பிறந்திருக்கும்…( ஒரே ஆற்றில் இரண்டு முறை குளிக்க முடியாது என்ற ஜென் தத்துவத்தை தொட்டு செல்கிறார் )

பன்னிரண்டாவது லிங்கம் எது ? ( எது என்பதை தனியாக சொன்னால் ஒரு மாதிரி இருக்கும்... படித்து தெரிந்து கொள்ளுங்கள் )

***********************************************************************************************

எல்லோரும் இதை படித்து , ஒரு நல்ல அனுபவத்தை பெற வேண்டும் என விரும்புகிறேன்.. ஆனால் , இது எல்லோருக்குமான நாவல் அல்ல என்றும் தோன்றுகிறது... முதல் நூறு பக்கங்களை படித்து விட்டால், பிறகு நிறுத்த முடியாது...

நூலகத்தில் இருந்தோ, நண்பர்களிடம் இருந்தோ வாங்கி படிப்பதை விட , சொந்தமாக வாங்கி படிப்பது நல்லது... மீண்டும் மீண்டும் படிக்க வேண்டி இருக்கும்...

*****************************************************************************

மொத்தத்தில் ,இதற்காக செலவிட்ட நேரம், பணத்திருக்கு முழுதும் தகுதி உள்ள புத்தகம்..

விஷ்ணுபுரம்- அகம் , புறம் என அனைத்தையும் ஆராயும் விறு விறு புரம்..

****************************************************************************************************

சில குறைகளை சுட்டி காட்ட விரும்புகிறேன் ...


1 விஷ்ணு புரம் என்ற தலைப்பு, இது மத ரீதியான நூல் என்ற அடையாளத்தை தருவதால், என்னை போல பல வாசகர்களை நெருங்க முடியாமல் போகிறது ... ஒரு தத்துவ நூலான இதற்கு, பின் தொடரும் நிழலின் குரல் என்பது போல செகுலர் பெயரை வைத்து இருப்பதுதான் பொருத்தமாக இருந்துஇருக்கும்

2 பின் தொடரும் குரல் நாவலில் இருந்த அளவுக்கு வடிவ அமைப்பு நேர்த்தி இதில் இல்லை என தோன்றுகிறது...

3 மன்னர்கள், ஆழவார்கள், வைதீகர்கள் என அனைவரையுமே எதிர்மறையாக காட்டி இருப்பது நெருடலாக இருக்கிறது..

4 ஞான சபை விவாதத்தில் தமிழ் மரபான சித்தர் மரபு சார்ந்த விவாதம் இல்லாததது ஒரு குறை.

5 அத்வைதம், த்வைதம் , விஷிஷ்டத்வைதம் போன்ற வார்த்தைகளியே காணவில்லை ....

6. தேடுதல் என்பதே கூட ஒரு வகை அகங்காரம்தான்.. அது அறிதலை தடை செய்யும் என்ற ஜிட்டு கிரிஷ்ணமுர்தியின் தத்துவமும் தலை காட்டுகிறது... கடைசியில் என்னதான் சரியான வாழ்வு முறை , என்று திட்டவட்டமாக எதுவும் கூறாமல் நழுவுவது போலதோன்றுகிறது

***************************************
விஷ்ணுபுரம் - ஆசிரியர் : ஜெயமோகன் கவிதா வெளியீடு விலை rs 500

Tuesday, July 6, 2010

யாருக்கெல்லாம் ராவணன் படம் பிடிக்கிறது ?


நேற்று அலுவலகம் சென்ற எனக்கு ஆச்சர்யம்.. லீவே எடுக்காத என் நண்பன் வரவில்லை...

இன்றுதான் காரணம் தெரிந்தது..

" ராவணன் படம் பார்க்கணும் போல இருந்துச்சுடா மச்சான் .. அதான், நம்ம மக்களோட போயிட்டு வந்தேன் " என்றான்.

"அதான் போன வாரமே பார்துட்டியேடா ? "

" ஆமாண்டா,,ஆனாலும் இன்னொரு முறை பார்க்கணும் போல இருந்துச்சு "

ராவணன் படத்தை குப்பை என உலகமே சொல்லும் போது கூட , அதை ரசிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரயமாக இருந்தாலும், இது இயல்புதான் என் புரிந்தது.. ரசனை பல விதமாக இருக்கலாம்.. அது அவரவர் விருப்பம்...

ராவணன் படத்தை ரசிப்பவர்கள் குறைவு என்பதால், அதன் ரசிகர்களை ஆராயும் ஆவல் எனக்குள் எழுந்தது... உங்களுக்கும் ஓர் ஆவல் இருக்கும்..இதை கூட ரசிக்கிறார்களா ?

ஆமா ..அதை உண்மையிலேயே ரசித்து பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்... அவர்கள் குறைவு என்பதால், அவர்களின் பொது தன்மையை வைத்து, யாருகேல்லாம் இந்த படம் பிடிக்கிறது என பட்டியல் இடுவது எளிது... இதோ அந்த பட்டியல்..



யாருக்கெல்லாம் ராவணன் படம் பிடித்து இருக்கிறது ?



* வெளிப்படையான ஆபாசம் இருப்பதை விரும்பாதவர்கள்..
* பார்த்ததும் காதல், கதாநாயகி மலையில் இருந்து குத்திதால் கூட சாகாமல் இருப்பது போன்ற சினிமத்தனங்கள் வேண்டும்.ஆனாலும் அது அறிய் ஜீவி முகமூடி அணிந்து இருக்க வேண்டும் என்ற பாமர மனப்பான்மை கொண்டவர்கள்..
* வினோதமான சப்தங்கள் எழுப்புவதுதான் நடிப்பு என நினைப்பவர்கள்.. அதை கடைசியில் கதாநாயகி செய்து காட்டுவது, நடிப்பின் உன்னதம் என மனம் நெகிழ்பவர்கள்.
* இசை, ஒளிப்பதிவு - இவை மட்டுமே சிறந்த படத்தின் இலக்கணம் என நினைப்பவர்கள்..
* யாரை இழிவு படுத்துகிறது என்ற வராலாற்று காரணங்களையோ, மற்ற நாட்டு நடப்புகலையோ அறியாத சுக வாசிகள்.
* இலக்கணத்துக்குள் இருக்கும் எல்லை மீறாத கதையை விரும்பும் நல்லவர்கள்.
* கதாநாயகன் என்றால் அழகாக , மென்மையாக, சற்றே பெண்மை தனத்துடன் இருக்க வேண்டும்,அவனே வெல்ல வேண்டும் என விரும்பும் மெல்லிய இதயம் படைத்தவர்கள்.
* காட்டுக்குள் மாட்டி கொள்ளும் திருமனான கதாநாயகன் , அங்கு யாரவது ஒரு பெண் அன்பு காட்டினால், அவளுடன் காதல் கொண்டால் ஏற்க முடியும்.. ( இப்படி பல படங்கள் வந்துள்ளன ) .. ஆனால் ஒரு பெண் அப்படி காதல் கொள்ள கூடாது ..அப்படி இருந்தாலும் அது மறை முகமாக ( இந்த படம் போல ) காட்டப்பட வேண்டும் என விரும்பும் சிந்தனைவாதிகள்.
* ஒருவனை உயர்த்தி காட்ட வேண்டுமானால் அவன் தங்கை கற்பழிக்கப்பட்ட வேண்டும் என்ற தமிழ் சினிமா விதியை மீறாத கதை அம்சத்தை விரும்பும் கதா ரசிகர்கள்..
* நல்ல படத்துக்கு இலக்கணம் , அது பிளாப் ஆவதுதான் என நினைப்பவர்கள்.

இவர்களுக்கு எல்லாம் இந்த படம் பிடித்து இருக்கிறது...

அதை தவறு என்று சொல்வது நியாயம் அல்ல... ரசனை என்பது ஆளாளுக்கு மாறக் கூடியது...

பந்த் - யாருக்கு வெற்றி - கிரிடிகல் அனலிசிஸ்

பாரத் பந்த் என்று நடந்தாலும் நடந்தது... நமக்கு பயங்கர குழப்பம்...

பந்த் நடத்துவது சட்ட விரோதம் என ஆளும் கட்சியாக இருந்த போது அறிவுரை சொன்ன , அ தி மு க வினர், கடை அடைத்து ஒத்துழைப்பு தாங்க அன்ன்னச்சி என சில இடங்களில் பவ்யமாகவும் , கடையை அடிடா சோமாறி என சில இடங்களில் கொள்கை பிடிப்புடனும் , அடைப்புக்கு போராடினர்..

பந்த் நடத்துவது ஜனநாயக உரிமை என சொன்னவர்கள், இதனால் இத்தனை கோடி நஷ்டம் என செய்தி தருகின்றனர்... அப்படி என்றால், மற்ற நாட்களில் இவ்வளவு கோடி லாபம் கிடைக்கிறதா... அதெல்லாம் எங்கே போகிறது என நமக்கு குழப்பம்..

பந்த் என்பது சரியா தவறா என்பதே குழப்பமாக இருக்க, இது வெற்றியா தோல்வியா என இன்னொரு குழப்பம்..

பந்த் வெற்றி என தினமணி செய்தி ( தேசிய அளவில் வெற்றியாம் .. தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லையாம்..ஆனாலும் ஓரளவு ஆதரவு இருந்ததாம் )


பந்த் பிசு பிசுப்பு... ஆனால் பத்தாயிரம் கோடி இழப்பு - தினமலர்

பந்த் தோல்வி என , படங்களுடன் தின தந்தி செய்தி... தேசிய அளவில் எப்படி என்ற செய்தி இல்லை...

ஆங்கில இதழ்கள் பந்த் வெற்றி என்கின்றன ..

ஒரு சம்பவத்தை எத்தனை விதமாக ரிபோர்ட் செய்கிறார்கள் என்று பார்த்தல் ஆச்சர்யமாக இருக்கிறது...


இந்த பிரச்சினை போதாது என்று , அண்ணா திமுக சரியாக ஒத்துழைக்க வில்லை என தோழர்கள் ஆதங்கப்பட்டு இருக்கின்றனர்..

காங்கிரஸ் கூட்டணி வாய்ப்பை கெடுக்க விரும்பாமல், அ தி மு க பட்டும் படாமல் நடந்து கொண்டு இருக்கலாம்..

சரி..பந்த் வெற்றியா ..இல்லையா டிராவா ..

யாருக்கு வெற்றி...



வெற்றி பெற்றோர்...

தி மு க... தமிழநாட்டில் பாதிப்பு இல்லாமல் பார்த்து கொண்டது...

அண்ணா திமுக ... காங்கிரசையும் பகைக்காமல், அதே சமயம் ஆளும் கட்சியையும் எதிர்த்த சாமர்த்தியம்

கம்யூனிஸ்ட் ---- தமது ஏரியாவில் , யாரையும் நம்பாமல் வெற்றி பெற்ற தில்..

காங்கிரஸ் --- என்ன நடந்தாலும் தன நிலையில் இறங்கிவராத, " மன உறுதி "

பி ஜே பி - தம் மாநிலங்களில் அடைப்பை வெற்றி பெற செய்தது ..




தோல்வி அடைந்தோர் ...........................


பொதுமக்கள் ----- இந்த அடைப்பால் , விலைவாசி குறையவில்லை.. ஒரு நாள் வருமான இழப்புதான் கிடைத்த பலன்

Monday, July 5, 2010

மணிரத்தினம் ராமனா, ராவணனா ? ஓர் அலசல்..

ராவணன் படம் எடுத்த மணிரத்தினம் சில நேரங்களில் ராமனை போல காட்சி அளிக்கிறார்.. சில நேரங்களில் ராவணன்..

உண்மையில் அவர் ராமனா, ராவணனா ? ஓர் அலசல்..

**********************************************************************

ராவணன் போல தோன்ற காரணங்கள்..

1 மற்றவர் பொருளை , கதையை , அபேஸ் செய்கிறார்.

2 ஒரு தலை நியாயம் பேசுகிறது.. ஒரு தலை பொய் பேசுகிறது ( ஞானி அவர்களுக்கு அநீதி செய்தது ஓர் உதாரணம் ) . ஆக பத்து தலை கொண்டவர்

3 சகோதர்களின் நலனை விட தம் நலனே முக்கியம் என செயல்படுதல்

ஆனால் ராவணன் இல்லை என தோன்ற காரணங்கள்

1 கடத்திய கதையை , கடத்திய பொருளின் கண்ணியத்தை காப்பாற்றவில்லை

2 வீரம் , நேர்மை இல்லை


ராமன் என தோன்ற காரணம்

1 தமிழர் விரோத போக்கு

2 அனுமான்களை பயன்படுத்தி கொண்டு , பின்னர் கழட்டி விடும் போக்கு

3 சரியோ , தவறா - தனக்கென ஒரு அஜெந்தா, கொள்கை வைத்து இருத்தல்..

4 மற்றவர் பேச்சை கேட்டு குழம்புதல் ( தாக்கரேவுக்கு பயந்து கதையை மாற்றியது, இருவர் கதியை மாற்றியது எல்லாம் மறக்க முடியுமா )

ராமர் இல்லை என தோன்ற காரணம்

1 சகோதர பாசம் இல்லாமல் போனது

2 வெற்றி கிடைக்காமல் போனது

3 ஆள்வோராக இல்லாமல், ஆள்வோருக்கு ஆதரவாளராக இருப்பது,( முதலாளித்துவ ஆதரவு )


ஆகவே, கூட்டி கழித்து பார்த்தால், மணிரத்ரம் அவர்கள்,. ராமனும் இல்லை , ராவணனும் இல்லை என்றே தோன்றுகிறது

பொது நன்மை கருதி வெளியிடுவோர் : பிச்சைகாரன். பிளாக்ஸ்பாட் . காம்

மைக்ரோ கதைகள்

இன்று இருக்கும் நிலையில், பெரிய பதிவுகளை , கதைகளை பலர் படிப்பதில்லை... தலைப்பை மட்டும் பார்த்து விட்டு , வாழ்த்தியோ திட்டியோ பின்னூட்டம் இட்டு விடுகின்றனர்...

அவர்கள் வசதிக்காக , சின்னஞ்சிறிய கதைகள்...

*******************************************************************

இனிது, இனிது, வாழ்க்கை இனிது

சிலு சிலு வென காற்று . பறவைகள் சங்கீதம்.. கால் நீட்டி வசதியாக படுத்தான். இளையராஜா பாடலை வாய் முணுமுணுத்தது

இன்னும் கால் மணி நேரத்தில், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், அவன் படுத்து இருந்த தண்டவாளத்தை கடந்து செல்லும்...


************************************************************************************************
உங்கள் விருப்பம்
ஆடை பிடித்து இருக்கிறதா... ? நகை பிடித்து இருக்கிறதா? அவளின் பெற்றோர் அன்பாக கேட்டனர்..

மாப்பிள்ளை பிடித்து இருக்கிறதா என கேட்க மறந்தனர்.

*********************************************************************************************************
நடிப்பு
சினிமாவில் , நடிப்பில் சிகரம் தொட்ட , நடிகர் அரசியலில் குதித்தார். தோல்வி அடைந்தார்,,

நடிக்க தெரியவில்லையாம்

**************************************************************************************************************
முடிவுரை
தொழில் நுட்ப கோளாறு.. அணு ஆயுத பட்டன் , தேவை இல்லாமல் அழுத்தப்பட்டது.

உலகமும், மூன்றாம் உலக யுத்தமும் முடிந்தன ...

*****************************************************************************************************************
பாவையின் , பார்வை !!
உயிர் காக்கும் , மருத்துவம் படித்த இளம் பெண் . என் உயிரை பறித்தாள்...

ஆயுதத்தால் அல்ல... அவள் பார்வையால்.....

************************************************
கி பி 2050
சென்ற ஆண்டு ... பெரிய விபத்து... அவம் ஆண் உறுப்பு முற்றிலும் சேதம்...

இன்று அவன் கர்ப்பம்...

****************************************************************************************
நன்றி மறப்பது நன்றன்று
" அவன் ரத்தம் சிந்தி, என் நாட்டுக்காக உழைத்தான்... என் உயிரை காத்தான் ... " என்றார் நாட்டின் அதிபர்..

" அதனால் தான் , இப்படி மெலிந்து காண படுகிறானா ? " நண்பர் கேட்டார் .

" அதனால் இல்லை.. ஆராய்சிக்கு ரத்தம் தேவைப்பட்டது... அப்போது உறிஞ்சிய ரத்தத்தால் , இப்படி ஆகி விட்டான்... இப்படி பட்ட நல்லவனின் ரத்தத்தை முழுதும் உறிஞ்சுவது , நன்றி உள்ள செயல் அல்லவே " என்றார் அதிபர்


***************************************************************************************************************
இதயம்

" கடவுளே.. எல்லோரையும் நேசிக்க ஆரம்பித்து விட்டேன்... அணைத்து பொருகள் மீதும் அன்பு பொங்குகிறது.. இப்போதுதான் , நீங்கள் என் இதயத்தில் குடி புகுந்து இருப்பது போல தோன்றுகிறது :" என்றான் அவன்

" இல்லை.. இப்போதுதான் நீ என் இதயத்தில் குடி புகுந்து இருக்கிறாய் " என்றார் கடவுள்

************************************************************************************************************************

Friday, July 2, 2010

செம்மொழி மாநாடும் , பிச்சைகாரத்தனமும் - பத்ரி அவர்களுக்கு பணிவான விளக்கம்

திரு . பத்ரி அவர்களின் வலைபதிவுகளை ரசித்து படிப்பவன் நான்.. அறிவியல் கட்டுரைகளை பாடம் படிப்பது போல , கவனமாக படிக்க கூடியவன்..

அவரரது சமிபத்திய பதிவு ஒன்று , என்ற புரிதலும் இல்லாமல் எழுதப் பட்டிருந்தது அவரை மதிப்பவன் என்ற முறையில் வருத்தப்படுத்தியது..

செம்மொழி மாநாட்டில் பொதுமக்கள் சிலர , அங்கிருந்து இலவசாமாக பொருட்களை சுருட்டி செல்ல ஆர்வமாக இருந்தார்களாம். . சாப்பாட்டை நிறைய வாங்கி வீனடித்தார்கலாம்.. எண்ணற்ற சால்வைகள், மேமண்டோக்களை எடுத்து சென்று விட்டார்களாம்.. ( அதிக பட்சம் 100 ரூபாய் மதிப்பு இருக்கும் என வைத்து கொள்ளுங்கள் )

"செம்மொழி அந்தஸ்து தமிழுக்கு வருகிறதோ இல்லையோ, பிச்சைக்காரன் அந்தஸ்து தமிழனுக்கு என்றுமே இருக்கும்." என்று முடித்து இருக்கிறார் அவர்...
தமிழன் பிச்சைகாரனாக இருக்கிறான் என்பது உண்மைதான் என்றாலும், கோபம் நியாயம்தான் என்றாலும், அவர் பிச்சைகாரர்கள் என சும்மா ஜாலிக்காக எடுத்து சென்றவர்களை சொல்வது தவறு... கோடிகணக்கான ரூபாய்களை , ஏழை மக்களின் வரி பணத்தில் இருந்து பிச்சை எடுத்து சாப்பிட்டதுதான்
உண்மையான பிச்சைகாரத்தனம்..

செம்மொழி மாநாட்டு வேண்டும் , வேண்டாம் என மாறு பட்டு கருத்து இருக்கலாம்... ஆனால், வேண்டாம் என கருத்து உள்ள பத்திரிகை கூட, கிடைக்கும் வாய்ப்பு வீணாக கூடாது, விளமபர பணத்தை இழக்க கூடாது என அலைந்ததுதான், சிறப்பு மலர்கள் வெளியிட்டதுதான் பிச்சைகாரத்த்தனம்...

தமிழர்கள் நன்றாக இருந்தால், நல்ல வேலையில் இருந்தால், நல்ல கண்டு பிடுப்புகள் நடந்தால், இயல்பாகவே தமிழ் வளர்ந்து விடும்.. ஆங்கிலத்தை எல்லாம் மாநாடு போட்டா வளர்த்தார்கள்...?

ஆனாலும் தமிழர்கள் கூடும் ஒரு நிகழ்வு நல்லதுதான்... அது தமிழ் அறிஞர்கள் தலைமையில் நடக்க வேண்டும்... அரசு பார்வையாளராக வேண்டுமானால் இருக்கலாம்..தேவையான உதவிகளை செய்து ஒதுங்கி நிற்க வேண்டும்...
இவ்வளவு ஆடம்பரம், செலவு எல்ல்லாம் ஒருவரை பாராட்ட மட்டும்தானே செலவிட பட்டது.... ?

இதை விட பெரிய கூட்டங்களை எல்லாம், சில அமைப்புகள் நடத்தி உள்ளன,, உண்மையில் ஆர்வம் இருப்பவர்கள் மட்டும் கூடுவார்கள்... போலிசார யாரும் இல்லாமலேயே, ஒழுங்குடன் , நேர்த்தியுடன் எல்லாம் நடக்கும்..

இங்கு நடத்தியர்வர்களோ, கலந்து கொண்டவர்களோ, தமிழ் உணர்வுடன் கலந்து கொள்ள வில்லை என்பதால்தான், ஆய்வரங்கை விட , சாப்பாடு இடத்தில் கூட்டம் அலைமோதியது..

வந்த பொது மக்களும், தங்களுக்கு உபகொயம்க எந்த நிகழ்ச்சியும் இல்லாதததால், கையில் கிடைத்தை வாங்கி செல்ல முனைந்தனர்... ( அது கூட இல்லை என்றால், அங்கு வந்து பயன் என்ன ? )

பத்ரி போன்ற நல்லவர்கள் அங்கு சென்று இருக்கவே கூடாது... வந்தவர்களுக்கு , நம் பணம் இப்படி வீணாகிறதே என்ற ஆதங்கத்தில், நடத்துபவர்களுக்கு இழப்பை ஏற்படுத்துவோம், என்ற நினைப்பில், கையில் கிடைத்ததை எடுத்து சென்று இருக்கலாம்.. அவர்கள் மனசாட்சி தை தடுக்காது... ஏனென்றால், அவர்களை பொறுத்துவரை, அங்கு நடப்பது ஒரு நியாயமான நிகழ்ச்சி அல்ல..

ஆனாலும், பத்ரி போன்ற நடுநிலையாளர்கள் பாதிக்கபட்டது, இழப்பை சந்த்தித்து வருந்தத்தக்கதுதான்.. அனால், பொது மக்களை மட்டும் குறை கூறி பயன் இல்லை...

புகை வண்டியில் , பல நேரங்களில், முன் பின் தெரியதர்வகளிடம் , நம் உடமையை பார்த்து கொள்ள சொல்லி விட்டு தண்ணீர் குடிக்க செல்வோம்.. நம்பிக்கை அவர்கள் காப்பாற்று வார்கள்..

அடிப்படையில் தமிழர்கள் நல்லவர்கள்...

அனால் மனோதத்துவ அடிப்படையில், நாம் இருக்கும் இடத்தை பொறுத்து நம் மனநிலை மாறும்...
செம்மொழி மாநாட்டுக்கு வரும் போதே, திருட வேண்டும் என யாரும் வந்து இருக்க மாட்டார்கள்... அங்கு இருந்த ஆடம்பர , போலித்தன நிகழ்ச்சியை பார்த்து, நாமும் தவறு செய்யலாம் என்ற உணர்வு தோன்றி இருக்க கூடும்...


இதை வைத்துக்கொண்டு என்ன சாதனை செய்துவிடப் போகிறார்கள் என்று புரியவில்லை. என பாவமாக கேட்கிறார் பத்ரி... ஒன்றும் செய்ய மாட்டர்கள்..குப்பை தொட்டியில் எறிந்து இருப்பார்கள்...அதை வைத்து அவர்கள் ஒன்றும் மாடி வீடு கட்ட போவதில்லை...

எனவே அவர்களை சொல்லி குற்றம் இல்லை... உண்மையிலேயே , திட்டமிட்டு பிச்சை எடுத்தது யார் என்றால், அது பத்திரிக்கைகள்தான்.

ஒரு சம்பவத்தை பார்வையாளனாக இருந்து பார்த்து , மக்களுக்கு ரிபோர்ட் செய்ய வேண்டியவர்கள், தாமும் அந்த ஜோதியில் கலந்து விட்டது, ஒரு மாபெரும்சோகம்

கம்யூனிசம்,முதலாளித்துவம்,பாசிசம்-ஜாலி அலசல்

செமொழி மாநாட்டுக்கு அடுத்த படியாக ,இன்று பலரும் கம்யூனிசம் , முதலாளித்துவம் என பேசிகிறார்கள்.. இதெல்லாம் என்ன என குழப்பமாக இருப்பதால், இதை பற்றிய எளிய சிந்தனை... விரிவானதோ, முழுமையானதோ அல்ல...
***********************************************************************

உலகில் நடக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் முதலாளித்துவம்தான். அதை ஒழித்தால் எல்லாம் சரியாகி விடும் என்பது ஒரு பார்வை..

கம்யூனிசம் என்றாலே கொடூரம்தான். சர்வாதிகாரம்தான். ஹிட்லரால் கொல்ல பட்டவர்களை விட , கம்யூனிச ஆட்சியில் கொல்ல பட்டவர்கள் அதிகம் என்கின்றனர் சிலர்..

எல்லோரும் வேலை செய்ங்க... உங்க தகுதிக்கான வேலை , கொடுக்கப்படும். .. உங்களுக்கு எவ்வளவு தேவையோ , அது நிர்ணயிக்கப்பட்டு , அரசே உங்களுக்கு வழங்கும்.. வீடு , மருத்துவ வசதி என எல்லாமே அரசு பார்த்து கொள்ளும்... அரசே தொழில் நடத்தும் என்பதால், முதலாளிகள் - தொழிலாளிகள் என்ற பேதம் வராது.
இதனால் , ஏழை பணக்காரன் என்ற வேற்றுமை நீங்கும்.. எல்லோரும் ஒன்றுதான்...

நல்லதுதானே என தோன்றுகிறது...

அம்பானியும் நானும் ஒன்றுதான் என்றால் சந்தோஷம்தானே...

அனால், ரொம்ப சந்தோஷ படதே என்கின்றனர் இன்னொரு தரப்பினர்..

அம்பானியும் நீயும் மட்டும் ஒன்றல்ல... வேலை பார்க்காமல் பொறுப்பில்லாமல் சுற்றி திரியும் உன் நண்பனும் நீயும் கூட , ஒரே இடத்தில் வைக்க படுவீர்கள்.. திறமைகேற்ப ஊதியம், உழைப்புகேற்ப ஊதியம் என்பதெல்லாம் அடிபட்டு போய், தேவைகேற்ப ஊதியம் என வந்து விடுவதால், ஊக்கத்துடன் உழைப்பவர்கள் முட்டாளாகி விடுவார்கள்... உழைப்பு மழுங்கி விடும்... முன்னேற்றம் பாதிக்கப்படும் என்கிறார்கள் இவர்கள்..

தேவைகேற்ப ஊதியம் - யாருக்கு எவ்வளவு தேவை என்பதை நிர்ணயிக்கும் இடத்தில் இருப்பவர்கள், முதலாளிகள் போல மாறி விடுவார்கள் என எச்சரிக்கிறார்கள் இவர்கள்...

சரி... அப்படி என்றால் நீங்கள் என்ன வழி முறையை பரிந்துரைக்கிறீர்கள் என்றால் அவர்கள் குழப்புகிறார்கள்..

நியாமான வழியில் உழை... போட்டியிடு ... முன்னேறு.... அரசு எந்த விதத்திலிம் தலையிடாது...

இப்படி செய்தால், புதிய தொழில்கள் பெருகும்... நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்.... திறமை அடிப்படையில், உழைப்பு அடிப்படையில் அனைவருக்கும் சம்பளம் கிடைக்கும்... எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கிறார்கள்..

சரி.. பன்னாட்டு நிறுவனத்துடன், ஏழை விவசாயி எப்படி போட்டியிட்டு ஜெயிக்க முடியும்?
திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட , அடித்தட்டு மக்கள் சாக வேண்டியதுதான..
பலவீன மாணவர்கள் வாழ வழியில்லையா?
காசு சம்பாதிப்பதுதான் , நோக்கம் என்றால், கிராம பகுதிகளில் , பேருந்து இயக்க யாரும் முன் வர மாட்டார்களே என்றெல்லாம் கேட்டால் இவர்கள் பதில் சொல்வதில்லை..

உண்மையில் , அவரவர் சொல்வது அவரரர் தரப்பில் கொள்கை அளவில் சரியாக இருந்தாலும், நடை முறையில் இரண்டுமே இல்லை என்பதுதான் உண்மை...

உதாரணமாக, ஒரு கிராமத்தில் சிலர் பசு மாடுகள் வைத்து இருக்கிறார்கள் என வைத்து கொள்வோம்..

அவரவர் திறமையை பொறுத்து, மாட்டை பராமரிக்கும் தன்மையை வைத்து, பால் கறந்து சம்பாத்தித்து கொள்ளலாம். என்பது முதலாளித்துவம்.. எல்லோரும், அதிக பால் உற்பத்தி செய்ய ஊக்கத்துடன் உழைப்பார்கள் என்பது ப்ளஸ்.ஆனால், மாடு வாங்கும் வசதி இல்லாதவர்கள், பால் வாங்க காசு இல்லாதவர்கள் பாதிக்கப்படுவார்கள்..

எல்லா பாலையும் , கிராம நிர்வாகத்துக்கு கொடுத்து விடுங்கள்... அவர்கள், யாருக்கு என்ன தேவையோ அதை பிரித்து கொடுப்பார்கள் என்பது , கம்யூனிசம்...

ஏழை , பணக்காரன் என்ற வேறு பாடு இல்லாமல் , அனைவருக்கும் பால் கிடைக்கும் என்பது ப்ளஸ்

இப்படி செய்தால், மாட்டை நல்லபடியாக கவனத்து, அதிக பால் கறக்கும் ஆர்வம் குறையும் எம்பது ஒரு பிரசினை... நிர்வாகம் சுரண்டல் வேலையை ஆரம்பிக்கும் என்பது மாபெரும் பிரசஈனை...

பாலை பரித்தி கொண்டு, மாட்டையும், அதை வளர்ப்பவனை யும் கொன்று விடு என் பது பாசிசம்...

இதில் எந்த அ னுகூலமும் யாருக்கும் இல்லை... ஆனால் , இதுதான் , நடந்து வருகிறது...

தமிழன்னை மன்னிக்க மாட்டாள்.

செம்மொழி மாநாடு முடிந்தாலும், அதை பற்றி நடுநிலையாக கருத்து கூற யாருக்கும் தகுதி இல்லாமல் போய் விட்டதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது..

அனைத்து பத்திரிகைகளுக்கும , அரசு தரும் விளம்பரம் தேவை.. கட்சியினர் தரும் விளம்பரங்கள் தேவை..

எனவே அவர்கள் , அதற்கு எதிராக எதுவும் பேச முடியாத சூழ்நிலை..

சிலர் அதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறார்கள்.. இப்போது நடந்து முடிந்த பின், அதை குறை சொல்வதும், அவ்வளவாக எடுபடாது.. அவர்கள் , கோரிதான் சொல்வார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே...

ஆடம்பரமான நிகழ்ச்சியை பார்த்து , வியப்படையும் பொது ஜனங்கள் கூட , அதில் வியப்பதற்கு எதுவும் இல்லை... அவர்கள் பணம் தான் இப்படி ஆடம்பரமாக செலவிட படுகிறது என்பதை மறந்து விடுகிறார்கள்... அங்கு செல்வதையே பெருமையாக நினைக்கும் அவர்களை போலவே , பதிவுலகமும் நினைத்து விட்டதால், அவர்களிடமும் , நேர்மையான பார்வையை எதிர் பார்க்க முடியாது...

ஆனாலும் ஒரு சில பதிவர்கள் மட்டும் நேர்மையான விமர்சனத்தை வழங்கி வருகின்றனர்.

பத்திரிக்கைகள் எல்லாம் நம்பக தன்மையை இழந்து விட்ட நிலையில், கடைசி நம்பிக்கையாக இருப்பது பதிவுலக்ம்தான்...

இவர்களும், அங்கு கிடைக்கும் சின்ன , சின்ன தற்காலிக சலுகைக்கு மயங்கினால், தமிழன்னை மன்னிக்க மாட்டாள்.

Thursday, July 1, 2010

தமன்னா , நயன்தாரா - ஒரு தேடலின் சிணுங்கல் முடிவுகள்



சிலர் பெயர்களை google மூலம் சர்ச் செய்தால் , எத்தனை ரிசல்ட் கிடைக்கிறது...?

ஆராய்ச்சி முடிவுகள்...

ரஜினிகாந்த் - 2,94,000 கமல்ஹாசன் - 2,40,000

எம் ஜி ஆர் - 10,10,000 சிவாஜிகணேசன் - 1,88,000

குமுதம் - 4,71,000 ஆனந்த விகடன் - 2,51,000

தமன்னா - 3,67,000 நயன்தாரா - 3,06,000

நித்யானந்தா - 7,54,000 ஜக்கி வாசுதேவ் - 19,600

ஜெயமோகன் - 1,57,000 சாரு நிவேதிதா - 1,09,000

இந்தியா - 14,30,00,000 பாகிஸ்தான் - 4,61,00,000

சீனா - 42,50,00,000 இலங்கை - 1,74,00,000

நல்ல பதிவுகள் 13,70,000 மொக்கை பதிவுகள் - 1,61,000

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா