Thursday, January 31, 2013

டெத் ஆஃப் ஈ மெயில் - கண்ணீர் காவியம்



     அலுவலக நிமித்தம் நமக்கு எத்தனையோ ஈ மெயில் வருகின்றன. அதை படித்து , சரியாக ரிப்ளை கொடுக்காவிட்டால் பிரச்சினை. இந்த நிலையில் நம் சொந்த மெயிலை படிப்பதற்கோ , யாருக்காவது மெயில் அனுப்பவதற்கோ கொஞ்சம் சோம்பலாக இருக்கிறது.

சமீபத்தில் நான் ஆரம்ப காலத்தில் வைத்திருந்த ஈ மெயில் அக்கவுண்ட் நினைவு வந்தது. அதை இப்போது அவ்வளவாக பயன்படுத்துவதில்லை. யாரேனும் பழைய  நண்பர்கள் அனுப்பிய மெயிலை பார்க்கலாம் என அதில் நுழைய எத்தனித்தேன். அங்கு இருந்த அறிவிப்பு என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது.

 விரைவில் ஈ மெயில் சேவை நிறுத்தப்பட இருக்கிறது. இனி புதிதாக யாரையும் சேர்க்க மாட்டோம். என கூறியது அறிவிப்பு.

அவ்வப்போது வலைத்தள சேவைகள் நிறுத்தப்படுவது , கட்டண சேவைகளாக மாறுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் , நான் முதல் முதலில் பயன்படுத்த ஆரம்பித்த ஒரு ஈ மெயில் மறைவது பழைய நினைவுகளை கிளறியது.

ஈ மெயில் அறிமுகமான கொஞ்ச காலத்திலேயே நானும் அதை பயன்படுத்த ஆரம்பித்தேன்.  பணி ரீதியாக அல்ல, ஓர் ஆர்வத்தின் காரணமாக . அதற்காக சொந்தமாக கம்யூட்டர் வைத்து இருந்தேன் என நினைக்காதீர்கள்.அப்போதும் நான் பிச்சைக்காரன் தான். இண்டர்னெட் செண்டருக்கு சென்று , பிரவுஸ் செய்வது அப்போதெல்லாம் பெருமையாக இருக்கும்.   பிஸினஸ் , வேலை தேடுவது , இலக்கியம் வளர்ப்பது , நாட்டுக்கு கருத்து கூறுவது என்ற எந்த குறிப்பிட்ட இலக்கும் இல்லாமல் சும்மா பிரவுஸ் செய்வதே உற்சாகமாக இருக்கும்.

 நமக்கு மெயில் அனுப்ப ஆள் இருக்காது.  யாருக்கு அனுப்புவது என நமக்கும் தெரியாது. யாராவது ஒரு சில நண்பர்களுக்குத்தான் ஈ மெயில் என்றால் என்னவென்றே தெரியும். அவர்களுக்கு மெயில் அனுப்பிவிட்டு , போனில் சொன்னால் சில நாட்கள் கழித்து பார்ப்பார்கள் !!! சிலரிடம் போன் இருக்காது , அவர்களுக்கு மெயில் அனுப்பிவிட்டு , லெட்டர் மூலம் தகவல் சொன்னால் , ஒரு வாரம் கழித்து மெயிலை பார்ப்பார்கள்.

   க்ரீட்டிங் மெயில் அனுப்பவுவது கொஞ்ச நாள் பிரபலமாக இருந்தது. ஜீ மெயில் எல்லாம் அப்போது கிடையாது.

    ஈ மெயிலில் வேலை தேடுவது , இலக்கியம் பேசுவது , பிசினஸ் செய்வது எல்லாம் எனக்கு கலாச்சார அதிர்ச்சியாகவே இருந்தது , அதை ஏதோ விளையாட்டு கண்டுபிடிப்பாகவே நினைத்து அப்படியே பயன்படுத்தி வந்தேன்.

எனக்கு தெரிந்து , ஒரு மணி நேரத்துக்கு எண்பது  ரூபாய் என்றெல்லாம் இண்டர்னெட் செண்டர்கள் இருந்து இருக்கின்றன.

அதன் பின் புற்றீசல்கள்போல பல செண்டர்கள் புறப்பட்டு , ஒரு மணி நேரத்துக்கு பத்து  ரூபாய்க்கு கூட  இண்டர்னெட் பயன்படுத்த முடிந்தது.

ஆரம்ப கால விளையாட்டுகளுக்கு பின் , இண்டர்னெட்தான் முதன்மையான தகவல் தொடர்பு சாதனம் என இன்று ஏற்கப்பட்டுள்ளது.ஆனால் இண்டர் நெட் செண்டர்கள் , தமது முக்கியத்துவத்தை ஓரளவு இழந்து விட்டன.

ஆயினும் அவற்றுக்கான தேவைகள் இன்றும் உள்ளன.


அர்த்தமற்ற மெயில்கள் , ஃபார்வார்ட் வாழ்த்துகள் , தப்பு தப்பான ஆங்கிலம் , தமிங்லீஷ் நிரம்பிய , அந்த ஆரம்ப கால மெயிலில் மதிப்பு வாய்ந்த எதுவும் இல்லை என்ற போதிலும் , அது தன் இயக்கத்தை நிறுத்துவது கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது.



Sunday, January 27, 2013

மனம் திறக்கிறார் விஸ்வரூபம் தணிக்கை குழு இஸ்லாமிய உறுப்பினர் - பெரும்பான்மை முடிவை நான் மாற்ற முடியாது



விஸ்வ ரூபம் தணிக்கை குழுவின் உறுப்பினரான முகம்மது ஜின்னா , தன் மவுனத்தை கலைத்துள்ளார். 

” எந்தவகையிலும் இஸ்லாத்திற்கு எதிரானதாகவோ, அமைதியையும் அன்பையும் விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களைத் தவறான வகையில் சித்தரிக்கும் விதத்திலோ உள்ள காட்சிகளை மட்டுமல்ல, இந்து மதம் கிறிஸ்தவ மதம் உள்படஎந்தவொரு மதம், அல்லது ஒரு சமுதாயம், மொழி, இனம் பற்றிய தவறான-உள்நோக்கம் கொண்ட சித்தரிப்புகள் இருக்குமானால் என் எதிர்ப்பு பலமாகவே வெளிப்படும். ” என்று கூறியுள்ள அவர் , ஆனால் தணிக்கை குழுவின் இறுதி முடிவு தன் ஒருவனை பொறுத்தது அன்று என்றும் , பெரும்பாலானோர் கருத்தின் அடிப்படையில்தான் இறுதி முடிவு அமையும் என்றும் கூறி இருக்கிறார்..

விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என இஸ்லாமிய தலைவர்கள் கூறி இருந்தனர்.. 
ஆனால் படம் பார்த்த சில ஹிந்து சகோதரர்கள்  , படம் ட்ரூ லைஸ் படத்தின் மொழி பெயர்ப்பு போல இருக்கிறது.. தமிழக இஸ்லாமியர்களை கேலி செய்வது போல காட்சிகள் இல்லையே என்று கருத்து சொல்லி இருந்தனர்.
ஆனால் இஸ்லாமிய பழக்க வழக்கங்களும் , அரபி மொழியும் தெரிந்த இஸ்லாமியர்கள் , இந்த படம் இஸ்லாத்தை கேலி செய்வதை உணர முடியும் என இஸ்லாம் தலைவர்கள் சொல்லி இருந்தனர்..
ஆனால் தணிக்கை குழுவில் ஓர் இஸ்லாமியரும் இருந்தார்... அவதூறு ஏதும் இருந்தால் அவர் தடுத்து இருக்க மாட்டாரா என சிலர் கேட்டனர்.. ஓர் இஸ்லாமியர் இருந்தும் , இந்த படம் எப்படி அனுமதிக்கப்பட்டது என இஸ்லாமியர்க்ள் கோபப்பட்டனர்.

இந்த நிலையில் , விஸ்வ ரூபம் தணிக்கை குழுவின் உறுப்பினரான முகம்மது ஜின்னா , தன் மவுனத்தை கலைத்துள்ளார்.  இப்போதைய நிலையில் அவரால் வெளிப்படையாக பேச முடியவில்லை என்றாலும் , அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.. 
அவர் கருத்துகளில் சிலவற்றை பாருங்கள்....
  • சில இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த நான் பெரிதும் மதிக்கின்ற தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அனைவரின் கருத்துகளையும் நான் மதிக்கிறேன்.
  • படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம்பெற்றிருந்தேன் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேஅளவுக்கு ஒரு படத்திற்கானத் தணிக்கை முறைகளில் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பதும் உண்மை.
  • விஸ்வரூபத்திற்கு இன்று எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைப்புகளைச் சேர்ந்த சகோதரர்களில் யாரேனும் ஒருவர் தணிக்கைத் துறை உறுப்பினராக இருந்து  இந்தப் படத்தைப் பார்த்திருந்தாலும், அவருடைய கருத்தைத்தான் பதிவு செய்ய முடியுமே தவிர, பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படும்.
  • அன்பை போதிக்கும் உயர்ந்த மார்க்கம் இஸ்லாம். அது ஒருபோதும் வன்முறையை வளர்க்கவோ ஆதரிக்கவோ செய்வதில்லை
  • தாலிபான், அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும் ஏற்பதில்லை. அவற்றுடன் இந்திய முஸ்லிம்களை இணைக்காதீர்கள் என்பதே இங்குள்ளவர்களின் நிலைப்பாடும்வேண்டுகோளுமாகும்.  

      ஒவ்வொரு வரியிலும் அவர் வேதனை புரிகிறது,,, தணிக்கை முறையை மாற்ற வேண்டியதன் அவசியம் புரிகிறது...   

அவர் கருத்துகள் , முழுமையாக உங்கள் பார்வைக்கு ...
*******************************************************************************************

எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றாமல் அதை அணைப்பதற்குத் தண்ணீர் குடம் ஏந்தும் கைகள் தேவைப்படுகின்றன. விஸ்வரூபம் படம் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள், விவாதங்கள், கண்டனங்கள் அதன் எதிரொலியாக விதிக்கப்பட்டுள்ள தடை இவற்றின் காரணமாக, அந்தப் படத்தைத் தணிக்கை செய்த உறுப்பினர்களில் நானும் ஒருவன் என்பதால் என்னை பற்றிய விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிப்படுகின்றன.
      தடையை நீக்கக்கோரும் வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாலும், அதுபோலவே, சென்சார் விதிமுறைகளின்படியும், படத் தணிக்கையில் ஈடுபட்டவர்கள் தணிக்கையின் போது நடந்த விவாதத்தையோ அல்லது படம் குறித்த விமர்சனத்தையோ தெரிவிக்கக்க்கூடாது என்பதாலும் நான் சட்டவிதிகளுக்கும் நீதிமன்ற நடைமுறைகளுக்கும் உட்பட்டே கருத்துகளைத் தெரிவிக்க முடியும்.
 என்னைப் பற்றி இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவரும் மூத்த சகோகதரராக நான் மதிப்பவருமான பெருந்தகையாளர், ஊடகங்களின் வாயிலாகக் என்மீது தனிப்பட்ட முறையில் கருத்துகளைத் தெரிவித்திருப்பதால் விதிமுறைகளுக்கு உட்பட்டு நானும் என் தரப்பு விளக்கங்களைத் தர வேண்டியிருக்கிறது. மூத்த சகோதரரராக நான் மதிக்கும் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் நிறைய படித்தவர். சமுதாய நலனில் அக்கறை கொண்டு நலப்பணிகள் பலவற்றை முன்னின்று மேற்கொள்பவர். மார்க்க நெறிகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். எளிய நிலையிலிருந்து தன் அறிவாலும் ஆற்றலாலும் உழைப்பாலும் இன்று தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருப்பவர். அவருடைய அமைப்பின் சார்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நானும் ஒரு காரணமாக உதவியிருக்கிறேன் என்பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சிதான். அந்த அடிப்படையில், அவர் மீது வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் எந்தளவிலும் எனக்குக் குறையவேயில்லை. யாரோ சிலரை திருபதிப்படுதவதற்காகவோ, யாருடைய தூண்டுதலின் பேரிலோ என்னை விமர்சிக்கவில்லை என்றே இன்னும் நம்புகின்றேன்.
இன்னும் சில இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த நான் பெரிதும் மதிக்கின்ற தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அனைவரின் கருத்துகளையும் நான் மதிக்கிறேன்.
      தணிக்கைத் துறையில் பல மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த மதத்தின் உணர்வையும் புண்படுத்தப்படுவதையும் தணிக்கைத் துறை விதிகள் அனுமதிப்பதில்லை. அதேநேரத்தில், படத்தைத் தணிக்கை செய்யும் உறுப்பினர்களும் தங்கள் சொந்த மதத்தின் கண்ணோட்டத்தில் தணிக்கை முறையைக் கையாள்வதில்லை. வழிகாட்டும் முறைகள் (guidelines) ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வகையிலோ, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைந்ததாகவோ காட்சிகள் இருப்பின் அவை நீக்கப்படுகின்றன.
      விஸ்வரூபம் படத்தைப் பொறுத்தவரை, தமிழில் அது தணிக்கை செய்யப்படுவதற்கு முன்பே இந்தி மொழியில் அப்படம் தணிக்கை செய்யப்பட்டது. அதன்பிறகே, தமிழ்ப் பதிப்பு மற்றும் தெலுங்கு  தணிக்கை செய்யப்பட்டது., இந்தியிலும், தெலுங்கிலும் தணிக்கை செய்யப்பட்டபோதும் அந்தந்த மொழியறிந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ஒரு படம், வேறு மொழியில் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது ஒரு நெறிமுறையாகும். அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட மொழியில் உள்ள வசனம் மற்றும் பாடல்வரிகளின் தன்மை, காட்சியமைப்புகளால் அந்த மொழி பேசும் பகுதியில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகியவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பதும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே ஒவ்வொரு படமும் தணிக்கைக்குள்ளாகிறது.
படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம்பெற்றிருந்தேன் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேஅளவுக்கு ஒரு படத்திற்கானத் தணிக்கை முறைகளில் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பதும் உண்மை. அந்த அடிப்படையில்தான் ஒவ்வொரு படமும் தணிக்கை செய்யப்படுகிறது. விஸ்வரூபத்திற்கு இன்று எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைப்புகளைச் சேர்ந்த சகோதரர்களில் யாரேனும் ஒருவர் தணிக்கைத் துறை உறுப்பினராக இருந்து  இந்தப் படத்தைப் பார்த்திருந்தாலும், அவருடைய கருத்தைத்தான் பதிவு செய்ய முடியுமே தவிர, பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படும்.
 அன்பை போதிக்கும் உயர்ந்த மார்க்கம் இஸ்லாம். அது ஒருபோதும் வன்முறையை வளர்க்கவோ ஆதரிக்கவோ செய்வதில்லைதாலிபான், அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும் ஏற்பதில்லை. அவற்றுடன் இந்திய முஸ்லிம்களை இணைக்காதீர்கள் என்பதே இங்குள்ளவர்களின் நிலைப்பாடும்வேண்டுகோளுமாகும்.   இத்தகைய தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றிய காட்சிகளுடன் ஆங்கிலத்தில் ஹாலிவுட் படங்கள் பல வெளிவந்துள்ளன. வந்துகொண்டும் இருக்கின்றன. அவற்றுக்கு இந்தியா உள்பட பல நாடுகளிலும் தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகின்றன.
 விஸ்வரூபம் படம் தற்போது உலகின் பல நாடுகளிலும், தணிக்கை செய்தபிறகே வெளியாகியுள்ளது. இஸ்லாமிய நாடான மலேசியாவிலும் இப்படம் தணிக்கைச் சான்றிதழ் பெற்று வெளியிடப்பட்டுள்ளது.
 நான் என் கடமையிலிருந்து ஒருபோதும் தவறியதில்லை, என் மனதுக்கு சரியென்று படுவதை எதற்கும் அஞ்சாமல் துணிந்து செயல்படுத்துவேன்.எந்தவகையிலும் இஸ்லாத்திற்கு எதிரானதாகவோ, அமைதியையும் அன்பையும் விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களைத் தவறான வகையில் சித்தரிக்கும் விதத்திலோ உள்ள காட்சிகளை மட்டுமல்ல, இந்து மதம் கிறிஸ்தவ மதம் உள்படஎந்தவொரு மதம், அல்லது ஒரு சமுதாயம், மொழி, இனம் பற்றிய தவறான-உள்நோக்கம் கொண்ட சித்தரிப்புகள் இருக்குமானால் என் எதிர்ப்பு பலமாகவே வெளிப்படும். அதை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். தணிக்கைத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையிலேயே என் கருத்தையும் முடிவுகளையும் தெரிவிக்கிறேன். நான் ஏற்கனவே கூறியதுபோல, இறுதி முடிவு என்பது, படத்தைப் பார்க்கும் தணிக்கைத்துறை உறுப்பினர்களின் பெரும்பான்மையான கருத்துகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அதுவரை பொறுத்திருக்கவேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. இருப்பினும், இடைப்பட்ட நேரத்திலான செயல்பாடுகளுக்காக நான் விமர்சனத்திற்குப் பயன்படுகிறேன் என்றால் அதையும்கூட என் தனிப்பட்ட மனவலியாகத்தான் கருதுகிறேனே தவிர, ஏதேனும் ஒரு வகையில் அவருடைய வளர்ச்சிக்குப் பயன்படுகிறேன் என்ற அளவில் மனநிறைவும் கொள்கிறேன்.

Friday, January 25, 2013

விஸ்வரூபம் எடுத்த இஸ்லாமியர்களும் , கருத்து சுதந்திரம் எனும் கேலிக்கூத்தும்


 
     நான் ஒரு முறை  ஓர் இஸ்லாமிய மருந்து கடையில் சில பொருட்கள் வாங்கினேன். வாங்கி விட்டு , வீட்டுக்கு போய் விட்டேன். இதில் முக்கியத்துவம் ஏதும் இல்லை. அந்த கடை எனக்கு தெரிந்த கடை அன்று. தற்செயலாக என் கண்ணில் பட்டதால் , அந்த கடையில் நுழைந்தேன் . அவ்வள்வுதான். அந்த கடை பெயரைக்கூட நினைவில் கொள்ளவில்லை.

  சில நாட்கள் கழித்து அதே மருந்து தேவைப்பட்டது. வேறு கடைகளில் கிடைக்காததால் , அதே இஸ்லாமிய கடைக்கு சென்றேன். அந்த கடையின் லொக்கேஷன் மறந்து விட்டது. கொஞ்சம் கஷ்டப்பட்டு தேடித்தான்  அந்த கடைக்கு சென்றேன்.

 தேவையானதை வாங்கி விட்டு , காசை நீட்டினேன். கவுண்டரில் இருந்தவர் என்னை சில உற்று பார்த்து விட்டு , “ போன வாரம் இதே மருந்தை எங்களிடம் வாங்கினீர்கள் அல்லவா “ என்று கேட்டார்.

 எனக்கு ஆச்சர்யம் .. எனக்கு அவர் முகம் நினைவு இல்லை. ஆனால் அவர் என்னை நினைவு வைத்து இருக்கிறாரே.. சரி, நான் யாராக இருந்தால் என்ன ,,ஏன் என்னை விசாரிக்கிறார்.

   ” அனத் மருந்துடன் சேர்த்து , இன்னொரு பொருளை கேட்டீர்கள்.  நான் அது வருவது இல்லை என சொன்னேன்.. நினைவு வருகிறதா ? “ என்றார்.

“ ஆமா சார்,,  நான் தான் அது ..ஏன் கேட்கிறீர்கள் “ என்றேன்.

” போன முறை ஐனூறு ரூபாய் கொடுத்து விட்டு , மீதியை வாங்காமல் சென்று விட்டீர்கள் .. அந்த மீதி காசை தனியாக எடுத்து வைத்து உங்களுக்காக காத்து இருக்கிறேன். இன்றும் நீங்கள் வரவில்லை என்றால் , அந்த காசை தானம் செய்து விடலாம் என இருந்தேன். நல்ல வேளை வந்து விட்டீர்கள். “ என சொல்லொயபடி , தனியாக எடுத்து வைத்து இருந்த மீதி காசை , பத்து பைசா கூட குறையில்லாமல் கொடுத்தார்.

எனக்கே அப்போதுதான் நினைவு வந்தது.  காசு எப்படி குறைகிறது என குழம்ப்பி , பிறகு கை விட்டு விட்டேன். இவர் நினைவு வைத்து கொடுக்கிறாரே.

“ எங்கள் மார்க்கம் மற்றவர்கள் காசுக்கு ஆசைப்படக்கூடாது என சொல்லித்தந்து இருக்கிறது. எனவேதான் இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறேன் “ என்றார்.

எனக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது.

அன்றில் இருந்து நான் பெரும்பாலும் இஸ்லாமிய கடைகளையே prefer செய்கிறேன். ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கு தேவையான பொருட்களை இஸ்லாமிய கடைகளில்தான் பெரும்பாலும் வாங்குகிறேன்.

நான் சொல்ல வருவது அதுவல்ல.

ஒரு கொள்கை அடிப்படையில் வாழும் ஏராளமான இஸ்லாமியர்கள் வாழும் மண் இது, இங்கு வெளி வரும் படங்களில் இஸ்லாமியர்களை எப்படி சித்திரிக்கின்றனர் என சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும் . அதைப்பற்றியும் நான் சொல்ல வரவில்லை.

    அமைதியாக இருந்த இஸ்லாமியர்கள் முதல் முறையாக விஸ்வரூபம் எடுத்து , ஜன நாயக ரீதியில் கமல் படத்துக்கு எதிர்ப்பை காட்டினார்கள் . இத்தனை நாள் சும்மா இருந்தவர்கள் வீறு கொண்டு எழுவதை பலரால் தாங்கி கொள்ள முடியவில்லை.

 நான் முன்பே சொன்னது போல , நாத்திகவாதம் , ரசவாதம் , இருத்தலியம் , அந்த கட்சி , இந்த கட்சி  , பல்வேறு இயக்கங்கள் , பல்வேறு மதங்கள்  என பல முகமூடிகள் இருந்தாலும் , அதற்கு பின் இருப்பதே இந்துத்துவ ஃபாசிசம்தான்.

 இந்த பிரச்சினையில் எல்லா முகமூடிகளும் கிழிந்து போய் , ஃபாசிசம் வெளிப்பட்டது.


ஆளாளுக்கு இஸ்லாமியர்களுக்கு அட்வைஸ் சொல்ல கிளம்பி விட்டார்கள்.
இஸ்லாமியராக பிறந்து , இஸ்லாமுக்கு எதிராக கருத்து சொன்னால் முற்போக்கு முத்திரையும் , ஊடக வெளிச்சமும் கிடைக்கும் என கணக்கிட்டு , இஸ்லாமியர்கள் சிலரும்கூட இந்த அட்வைஸ் ஜோதியில் கலந்தது தனிக்கதை.


இஸ்லாமியர்களின் நியாயமான உணர்வுகளுக்கு எதிராக இவர்கள் சொல்லும் கருத்துகளில் இருக்கும் அபத்தங்களை பார்க்கலாம்.

**************************************************



  • ஒரு படம் சென்சாரில் அனுமதி பெற்ற பிறகு அதை எதிர்ப்பது தவறு. சென்சார் உறுப்பினர்கள் பலவற்றையும் யோசித்துதான் ஓகே சொல்வார்கள் . அதன் பின் எதிர்ப்பது தவறு. இது கருத்து சுதந்திரக்கு எதிரானது .



சென்சார் என்பதைத்தாண்டி , வெகுஜன  உணர்வுகளின் அடிப்படையில் எதிர்ப்புகள் ஏற்கப்பட்டுள்ளன.                
  1. ரஜினியின் பாபா படத்தில் ஒரு பாடலின் வரிகள் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.
  2. விஜய் நடித்த கீதை என்ற படத்தின் பெயர் எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.
  3. கமல் நடித்த சண்டியர் படத்தின் பெயர் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.
  4. எதிர்ப்பு காரணமாக டேம் 999 படம் தடை செய்யப்பட்டது.                               


சொல்லிக்கொண்டே போகலாம்.  யாராவது ஒரு தரப்பை ஒரு படம் புண்படுத்தினால் , அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பது தமிழ் நாட்டில் ஏற்கனவே இருக்கும் நிலைதான். அந்த எதிர்ப்பின்போதெல்லாம் கருத்து சுதந்திரன் பற்றி பேசாமக் சும்மா இருந்து விட்டு , இஸ்லாமியர்கள் குரல் கொடுக்கும்போது மட்டும் அட்வைஸ் கொடுப்பது கேலிகூத்து.


  • இஸ்லாமியர்களுக்கு சகிப்பு தன்மை குறைவு. அதனால்தான் எதிர்க்கிறார்கள். இந்துக்களை கிண்டல் செய்து படம் எடுத்தால் அவர்கள் இவ்வளவு எதிர்ப்பு காட்ட மாட்டார்கள். 

யாராக இருந்தாலும் எதிர்ப்பு காட்டத்தான் செய்வார்கள் என்பதைத்தான் ஏற்கனவே பார்த்து விட்டோமே.. இன்னொன்றும் பார்க்க வேண்டும் . கமல் தான் சார்ந்த பிராமண இனத்தையோ, இந்து மதத்தையோ விமர்சித்து படம் எடுத்தால் , அவ்வளவு எதிர்ப்பு இருக்காது . சம்பந்தம் இல்லாமல் இன்னொரு இனத்தையோ , மதத்தையோ சீண்டுவதுதான் பிரச்சினை. 

  • எங்கள் மதத்தை சார்ந்தவனை வில்லனாக காட்டகூடாது என எல்லா மதத்தினரும் கேட்க ஆரம்பித்தால் , எப்படி படம் எடுப்பது..... 

ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவனை வில்லனாக காட்டுவது தவறல்ல. ஆனால் குறிப்பிட்ட மதம்தான் வன்முறைக்கு காரணம் என காட்டுவது தவறு.


  • இஸ்லாமியர்கள் இவ்வளவு தீவிரமாக எதிர்ப்பதே தீவிரவாதம்தானே.. 
கட்சிக்கொடி கட்டிய காரில் வந்து பல தவறுகள் செய்கிறார்கள். அந்த கட்சிக்கொடியுடன் படம் எடுக்க முடியுமா? சில ஜாதிக்கட்சியினர் வன் முறையில் ஈடுபடுகிறார்கள். அந்த கட்சி தலைவர்களின் படத்துடன் வன்முறையாளர்கள்  நடமாடுவது போல எடுக்க முடியுமா?  அதை எல்லாம் யாரும் காட்டுவதில்லை. ஆனால் நடப்பதைத்தானே காட்டுகிறேன் என நேரடியாக இஸ்லாமிய அடையாளத்துடன் எதிர்மறை காட்சிகளை காட்டுவதால்தான் அவர்கள் எதிர்க்க வேண்டி இருக்கிறது. இதே போன்ற நிலை , ஓர் அரசியல் கட்சிக்கோ , ஜாதி அமைப்புகளோ ஏற்பட்டு இருந்தால் , அவர்கள் எதிர்ப்பு இதை விட பல மடங்கு அதிகமாக இருந்து இருக்கும். 


  • ஒரு சினிமா வெளி வரும் முன்பே சிறப்பு காட்சி கேட்டு , இப்படி ரகளை செய்வது சரியா?

இப்படிப்பட்ட சிறப்பு காட்சிகளுக்கு ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன. மணி ரத்தினம் எடுத்த பம்பாய் படம் , பால் தாக்கரேவுக்கு காட்டப்பட்ட பின் தான் அங்கு ரிலீஸ் ஆனது , பாபா படம் சர்ச்சையில் சிக்கியபோது , தன் படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை என்றும் , வேண்டுமானாலும் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்து , தவறுகள் இருப்பின் திருத்திக்கொள்வதாகவும் ரஜினி சொன்னார். இப்படி ஆயிரம் முன் உதாரணங்கள் உள்ளன. எனவே இஸ்லாமியர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை. 


Wednesday, January 23, 2013

விஸ்வரூபத்துக்கு தடை- கண்ணியம் தவறாமல் மத நல்லிணக்கத்தை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்


  ஒரு பெரிய பிரச்சினையை , அது உருவாகும் முன்பே இஸ்லாமிய அமைப்புகள் தடுத்துள்ளது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

  விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர் உணர்வுகளை காயப்படுத்தும் காட்சிகள் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இதனால் அச்சம் அடைந்தது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல. நல்லிணக்கம் , அமைதியை விரும்பும் நடு நிலையாளர்களும் அச்சம் அடைந்து இருந்தனர்.

இந்த நிலையில் அந்த படம் இஸ்லாமிய தலைவர்களுக்கு போட்டுக்காட்டப்பட்டது. படம் பார்த்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ப்டம் பார்த்தவர்களில் ஒருவரான  உயர்திரு .ஜவாஹிருல்லா கூறுகையில் இந்த படம் இஸ்லாமியர்களை புண்படுத்துவதாக கூறினார்.


  • இஸ்லாமியர்கள் தம் உயிர் என போற்றும் குர் ஆன் , பயங்கரவாதிகளின் கையேடாக சித்திரிக்கப்பட்டுள்ளது
  • சர்வதேச  பயங்கரவாதி முல்லா உமர் , தமிழ் நாட்டில் ஓர் ஆண்டுகள் தங்கி இருந்ததாக காட்டப்பட்டுள்ளது.
  • 12 வயதேயான இஸ்லாமிய சிறுவன் ஆயுத அறிவு பெற்றுள்ளதாக காட்டப்பட்டு, சின்ன வயதில் இருந்தே இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக வளர்வதாக காட்டப்படுகிறது.
  • மாமன் , மச்சான் என உரிமையுடன் பேசி நல்லிணக்கத்துடன் வாழும் நம் மண்ணில் இது போன்ற படங்கள் , அமைதியை கெடுத்து விடும். 
  • முழுக்க முழுக்க பிரச்சார நோக்கத்துடன் படம் எடுக்கப்பட்டுள்ளது.
  • தமிழ் வரலாற்ற்றில் இப்படி ஒரு பிரச்சாரப்படம் வ்ந்தது இல்லை

இவ்வாறு அவர் பிபிசிக்கு பேட்டி அளித்தார்.


இந்த நிலையில்தான் , நடு நிலையாளர்கள் அச்சம் அடைந்தனர். தேவையில்லாமல் பிரச்சினை பெரிதாகி விடுமோ என்ற பீதி ஏற்பட்டது. போராட்டங்கள் , ஊர்வலங்கள் போன்றவற்றால் , அமைதி கெடுவதுடன் , படத்துக்கு விளம்பரமாகவும் அமைந்து விடுமே என நினைத்தனர்.

ஆனால் இஸ்லாமியர்கள் மிகவும் கட்டுப்பாடுடனும் , கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர். மாற்று மதத்தினரைப்பற்றி தவறாக ஏதும் பேசவில்லை..யாராவது தவறாக பேசினால் , மற்றவர்களுக்கு முன்பு நாங்களே கண்டிப்போம் என கடுமையாக எச்சரித்தனர்.

உயிரைக்கொடுத்தாவது படத்தை தடுப்போம் என அறிவித்த இஸ்லாமிய தலைவர்கள் , வன்முறையை நாடாமல் சட்டத்தை மதித்து செயல்பட்டதில்தான் , தம் முத்திரையை பதித்து விட்டார்கள்.

ஜன நாயக் முறைப்படி எதிர்ப்பை தெரிவித்த கையோடு , கமிஷனரிடம் புகார் அளித்தனர்.

இதன் விளைவாக படத்துக்கு 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பின்பே , அனுமதி கிடைக்கும் என தெரிகிறது.

ஜாதி பலம் , பண பலம் , ஆள் பலம் , சினிமா கவர்ச்சி என அனைத்தையும் மீறி அவர்கள் பெற்றி பெற்றாலும் , அவர்கள் கமலுக்காக பிரார்த்தனை செய்யவே விரும்புகிறார்கள்..

தவறான  எண்ணங்களில் இருந்து கமல் விடுபட்டு ஆக்கப்பூர்வமான வழியில் செயலாற்ற பிரார்த்திக்கின்றோம் என்பதே அவர்களின் செய்தி.




Tuesday, January 22, 2013

விஸ்வரூபம் - இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பும் , நடு நிலையாளர்கள் கோரிக்கையும் ...



 விஸ்வரூபம் படம்  குறித்து இஸ்லாமியர்கள் அச்சம் தேவை அற்றது என கமல் சொல்லி இருந்தார்.   அந்த படத்தை பார்த்ததும் , அவர்கள் அச்சம் நீங்கி விடும் என்றும் ,  கமலை பாராட்டி பிரியாணி விருந்து அளிப்பார்கள் என்றும் கூறி இருந்தார்.

  இந்த நிலையில் இஸ்லாமிய தலைவர்களுக்கு தன் படத்தை கமல் திரையிட்டு காட்டினாராம். பார்த்த தலைவர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.  விஸ்வரூபத்தை தடை செய்ய வேண்டும் தவ்ஹீத் ஜமாத் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது..

விரிவான அறிக்கையை கீழே காணலாம்.

அவர்கள் உணர்வு புரிகிறது...

ஆனால் அவர்களுக்கு  நடு நிலையாளர்கள் ஒரு கோரிக்கை விடுக்க விரும்புகிறார்கள்...

கமல் செய்வதை வைத்து , ஒட்டு மொத்தமாக மாற்று மத சகோதரர்களை சந்தேகிக்க கூடாது.. புத்தக கண்காட்சியில் பார்த்து இருக்கலாம்.. இஸ்லாமிய புத்தக கடைகளில் , இஸ்லாமியர்களைவிட மாற்று மதத்தினர்தான் அதிகம் புத்தகங்கள் வாங்கினார்கள்.. 

எனவே விஸ்வரூபம் பிரச்சினையை நிதானமாக கையாண்டு வெற்றி பெற வேண்டுமே தவிர , மத பிரச்சினையாக மாற்றி விடக்கூடாது..  

**************************************************************************************************************************
  விஸ்வரூபம் வெளியிட அனுமதிக்க மாட்டோம்- தவ்ஹீத் ஜமாத் ஆவேசம்


நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.
அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது
இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 

Monday, January 21, 2013

புத்தக கண்காட்சியின் முழு பயனைப்பெற டாப் ஃபைவ் டிப்ஸ்


ரஜினி படங்களுக்கு  முதல் நாள் முதல் ஷோ போவது  தொன்றுதொட்டு வந்த பழக்கம் , அதே போல புத்தக கண்காட்சிக்கும் முதல் நாளே போய் அட்டண்டன்ஸ் போடுவதும் நெடு நாளைய வழக்கம்.

பிச்சைக்கார வாழ்க்கை வாழ்வதால் , வெவ்வேறு ஊர்களில் இப்படி அடெண்டன்ஸ் போட்ட அனுபவம் இருக்கிறது. ஆனால் இந்த முறை விதி செய்த சதியால் புத்தக கண்காட்ச்சிக்கு செல்ல இயலவில்லை.  ஏன் போகவில்லை என ஃப்ளாஷ் பேக் செல்ல விரும்பவில்லை. எனவே கவலை வேண்டாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும். அது போதும்,.

கண்காட்சி செல்லவில்லையே தவிர நண்பர்கள் மூலம் அப்டேட்ஸ் கிடைத்து வந்தது , மேலும் வலைப்பூக்கள் மூலமும் செய்திகள் அறிந்து வந்தேன்.

தாமதமாக செல்வதும் நன்மையில் முடிந்தது.
 என்ன புத்தகம் புதிதாக வந்துள்ளது ,  எதைப்படிக்க வேண்டும், எதை வாங்க வேண்டும் , எதை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும் என்பதை நண்பர்கள் மூலம் முன் கூட்டியே அறிந்து கொண்டு ப்ரீ பிளானாக செல்ல முடிந்தது.


 இது வரை சென்ற கண்காட்சிகளில் எனக்கு சிறப்பாக அமைந்தது இந்த கண்காட்சிதான் . காரணம் நண்பர்கள் மூலம் கிடைத்த டிப்ஸ்.. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.



  • டிப்ஸ் 1 புத்தகம் வாங்க கண் காட்சிக்கு செல்கிறோம்.  அறிவுப்பசி தீர்ந்த பின் வயிற்று பசியை தீர்க்க முனைவது நல்லதுதான். ஆனால் , வயிற்று பசியை தீர்க்க முனையும்போது , சில சமயங்களில் ஒட்டு மொத்த கண் காட்சி அனுபவத்தையும் அது கெடுத்து விடக்கூடும். விலை, நாம் எதிர்பார்க்கும் சுவை இன்மை, நாம் எதிர்பார்க்கும் உணவு வகை இன்மை என பல காரணங்கள். நாம் வாக்குவது புத்தகம் வாங்குவதற்கு..சாப்பாட்டு பிரச்சினை , இந்த மெயின் மேட்டரை மறக்கடிக்க அனுமதிக்கலாகாது 



கண்காட்சி வளாகத்துக்கு செலவதற்கு முன்பே. புத்தகம் என்பதையெல்லாம் மறந்து விட்டு , வஞ்சிரம் மீன் வறுவல் , மீன் குழம்பு ஆர்டர் செய்து என் விருப்பம் போல ஒரு வெட்டு வெட்டினேன். வயிற்று பசி அடங்கிய பின் , புத்தக வேட்டைக்குள் புகுந்தேன் .  ஜூஸ் வகைகளோ , உணவோ எனக்கு தேவைப்படவும் இல்லை. என் கவனத்தை திசை திருப்பவும் இல்லை. முழுக்க முழுக்க புத்தக வேட்டைதான்.



  • டிப்ஸ்2 நண்பர்களுடன் கெட் டுகதர் நல்லதுதான். அதற்காக புத்தக கண்காட்சியை பயன்படுத்திக்கொள்வதும் நல்லதுதான் . ஆனால் புத்தகத்தை செலக்ட் செய்யும் நேரத்தை வீணடித்து விடக்கூடாது. புத்தக கண்காட்சிக்கு வருவதே நண்பர்களை சந்திப்பதற்குத்தான் என்றால் அது வேறு விஷ்யம் . புத்தக வேட்டைதான் நோக்கம் என்றால் அதிகபட்சம் ஒருவர் போதும். one in company. two is crowd.

இந்த டிப்ஸ் கொஞ்சம் கடுமையானதுதான் . சிலரை புத்தக கண்காட்சிகளில் மட்டுமே சந்திக்க முடியும். எனவே யாரையும் சந்திக்காமல் இருப்பதும் , ஓர் அனுபவத்தை தவற விட்டதாகி விடும் . சந்திப்பு ஒரு விசிட் , புத்தகத்துக்கு ஒரு விசிட் என பிரித்து கொள்ள வேண்டியதுதான், முதல் விசிட் என்பதால் , நான் யாரையும் சந்திக்கவில்லை. எல்லா ஸ்டால்களையும் சுற்றி பார்க்க நன்றாக நேரம் கிடைத்தது.

  • டிப்ஸ் 3 கூட்டத்தை பார்த்து மிரள தேவையில்லை. புத்தகம் வாங்குவதை தடுக்கும் அம்சமாக நெரிசல் இருக்காது.
 நான் சென்ற போது,  நுழைவு சீட்டு வாங்கும் இடத்தில் சினிமா தியேட்டரில் இருப்பது போன்ற கியூ நின்று கொண்டு இருந்தது. அசந்து போய் விட்டேன்.

ஆனால் உள்ளே போனால் அந்த கூட்டத்தில் பெரும்பகுதி ஜூஸ் கடைகளிலும் , சமையல் , ஆன்மீக புத்தக கடைகளிலும்தான் நின்று கொண்டு இருந்தது . அரசியல் ,ஆன்மீகம் , சினிமா - இவைதான் ஈர்த்து கொண்டு இருந்தன. பல அற்புதமாக புத்தகங்கள் இருக்கும் கடைகளில் அந்த அளவுக்கு நெரிசல் இல்லை. ரிலாக்சாக தேவையானவற்றை வாங்க முடிந்தது.

  • டிப்ஸ் 4 புத்தகங்கள் அனியாய விலைக்கு விற்கப்பட்டுகின்றன என்பதில் உண்மை இல்லை. எனவே தைரியமாக வாங்கலாம்.
என் மதிய உணவுக்கு 400 ரூபாய் செல்வானது. இந்த காசுக்கு ஒரு புத்தகம் வாங்கி இருந்தால் , அது ஒரு முதலீடாக இருந்து இருக்கும். ஒரு தலையணை சைஸ் புத்தகத்தை 10 ரூபாய்க்கு தருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. உண்மையில் வெகு குறைவான விலையில் பல புத்தகங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் யாரும் வாங்கி குவித்து விடவில்லை. காஸ்ட்லி என்றெல்லாம் இல்லை... தகுந்த விலைதான் நிர்ணயித்துள்ளார்கள்.. ஆனால் கொஞ்சம் தேட வேண்டும். ஒரே நாவல் வெவ்வேறு பதிப்பகத்தில், வெவ்வேறு விலையில் கிடைக்கும் நிலையும் இருக்கிறது. எனவே கொஞ்சம் தேட வேண்டும். 

  • டிப்ஸ் 5 எல்லோரும்  வாங்குவ்தை நாமும் வாங்க வேண்டும் என்பதில்லை..
புத்தக கண்காட்சிக்கென பிரத்தியேக அனுகூலங்கள் உண்டு. நம் ரசனைக்கு அப்பாற்பட்ட சில புத்தகங்களும் நம் கண்களில் பட்டு ஆர்வம் ஏற்படுத்தக்கூடும். மற்றவர்கள் பரிந்துரைக்கும் பிரபலமான புத்தகங்களை எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் கூட வாங்க முடியும் . ஆனால் நாமே பல தரப்பட்ட புத்தகங்களை பார்வையிடும் வாய்ப்பு புத்தக கண்காட்சியில் மட்டுமே கிடைக்கும் .


 நான் வாங்கிய புத்தகங்களில் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்கள் நூல்கள் வெகு குறைவு. படிக்க வேண்டிய சில புதிய நூல்களை வாங்கி இருக்கிறேன். சில மேலோட்டமான வாசிப்பிலேயே அருமையாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்..



என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு... புத்தக கண்காட்சி முடியப்போகும் நிலையில், இந்த டிப்ஸ் யாருக்கும் பயன்படாது என நன்கு அறிவேன் :) 

Monday, January 14, 2013

அணு உலை பற்றிய சாரு கருத்து - ஒரு நடு நிலை அலசல்

இலக்கியவாதிகள் என்பதற்கு சில தமிழ் நாட்டில் சில அடிப்படை தகுதிகள் உண்டு.


  • பொது அறிவு இருக்க கூடாது'
  • உலக ஞானம் சிறிதும் இன்றி நமக்குதான் இல்லாம் தெரியும் என பொய்யாக எழுத வேண்டும் 
  • கடவுள் நம்பிக்கை இல்லாதவர் போல காட்டிக்கொள்ள வேண்டும் 
  • ஆட்டு மந்தைகள் போல மற்றவர்கள் சொல்வதை தாமும் சொல்ல வேண்டும் 

இப்படிப்பட்ட மோசமான ஒரு சூழலில் துணிச்சலாக தன் கருத்தை பதிவு செய்து இருக்கிறார் சாரு நிவேதிதா .

கூடங் குளம்  விவகாரத்தில் அவர் கருத்து ஏதும் சொல்லாமல் அமைதி காத்து வந்தார். இந்த பிரச்சினையில் விஞ்ஞானிகள்தான் கருத்து சொல்ல வேண்டும். எழுத்தாளர்கள் அல்ல என்பதே அவர் நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் சிலர் உதயகுமாரை , மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டு எழுதி யதுதான் அவரை எரிச்சலடைய வைத்து விட்டது. மரம் சும்மா இருக்க நினைத்தாலும் , காற்று அப்படி சும்மா இருக்க விடாதே ..அது போல 



இந்த வாய் சொல் வீரர்களுக்கு பல விஷயங்கள் புரியாது.  எனவே அதை எல்லாம் சாரு தொடவில்லை.


  • மின்சாரம் இல்லாமல் தொலைகாட்சி பார்க்க முடியவில்லை, மின் விசிறி இயங்கவில்லை என்பதுதான் இந்த அறிவு ஜீவிகளின் கவலை. மின்சாரம் இல்லாமல் திருப்பூர் , கோவை போன்ற தொழில் நகரங்களில் , மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பது இவர்களுக்கு தெரியாது.
  • இந்த மின் தேவையை நீர் மின்சாரம் , சூரிய மின்சாரம் போன்றவற்றால் பூர்த்தி செய்ய முடியாது 
  • இது போன்ற மின்சாரங்கள் சப்போர்ட்டிங் ரோலில் செயல்பட முடியுமே தவிர , முழு தேவையையும் இதனால் பூர்த்தி செய்ய முடியாது.
  • இவர்கள் நினைப்பது போல , நீர் மின்சாரம் போன்றவை முழுமையான க்ளீன் மின்சாரம் அல்ல . அதற்கு தேவையான கருவிகள் செய்யும்போது ஏற்படும் கார்பன் வெளியேற்றத்தை கணக்கில் கொண்டால் , அவற்றை கிளீன் மின்சாரம் என சொல்ல முடியாது.. 
  • இதனால்தான் அணு சக்தியால் பேரழிவை சந்தித்த ஜப்பான் அணு சக்தியை மீண்டும் மீண்டும் காதலிக்கிறது.
  • அணு சக்த்தியில் இந்தியா வல்லமை பெறுவது அமெரிக்காவுக்கு உவப்பானது இல்லை.

இது போன்ற உண்மைகள் நமது கிணற்று தவளைகளுக்கு புரியாது என்பதால் சாரு இதைப் பற்றியெல்லாம் பேசவில்லை.

உதயகுமாரை காந்தியவாதி என அழைப்பது தவறு என்பதே அவரது முக்கிய குற்றசாட்டு.
காந்தி அயல் நாட்டு துணிகளை புறக்கணிக்க சொன்னார் என்றால் , தானும் அதை புறக்கணித்தார்.

அனால் இவர்கள் செய்வது வேறு.

கூடங் குளத்தில் அணு உலைகளை எதிர்க்கிறார்கள் . ஆனால் கல்பாக்கம் உள்ளிட்ட நாட்டின் மற்ற பகுதிகளில் இயங்கும் அணு உலைகளின் பலன்களை வசதியாக அனுபவிக்கிறார்கள். 

இது HYPOCRISY இல்லையா.  காந்தி இப்படியா செய்து இருப்பார்.

  • அணு உலை தவறு என நினைத்து இருந்தால் , இந்தியா முழுதும் இருக்கும் அணு ஆலைகளை மூட சொல்லி போராடி இருக்க மாட்டாரா. 
  • அ ல்லது குறைந்த பட்சம் கல்பாக்கம் உலையை மூட சொல்லி போரடி இருக்க மாட்டாரா. 
  • நாடெங்கும் இருக்கும் தன ஆதரவாளர்கள் , அணு உலைகளால் கிடைக்கும் அனுபவிக்க கூடாது என உத்தரவிட்டு இருக்க மாட்டாரா.

இவர்கள் இதை எல்லாம் செய்யவில்லையே.. அப்பாவி மக்களை தூண்டி விடுவதை யார்  வேண்டுமானாலும் செய்யலாமே ?

 கூட்டம் சேர்ப்பது மட்டுமா காந்தியவாதம் ? 

      அணு உலையை ஆதரிப்பது , எதிர்ப்பது என்பதெல்லாம் அவரவர்கள் உரிமை .. 

     ஆனால் தேவையில்லாமல் அவரை காந்தியுடன் சில இலக்கியவாதிகள் ஒப்பிட்டது அசட்டுத்தனமாது.. 


இதை அப்படியே விட்டு இருந்தால் , இலக்கியவாதிகள் என்றாலே கிணற்று  தவளைகள் என மக்கள் நினைத்து இருப்பார்கள் .

இலக்கியவாதிகளிலும் நேர்மையாளர்கள் , விஷயம் புரிந்தவர்கள் உண்டு என்பதை தன கட்டுரை மூலம் சாரு  உலகத்திற்கு நிரூபித்துள்ளார். 

அவருக்கு இலக்கிய உலகம் நன்றி கடன் பட்டு இருக்கிறது, கடமைப்பட்டு இருக்கிறது..

சாய்கிற பக்கமே சாயும் ஆடு மந்தை கூட்டத்தில் இருந்து விலகி நிற்க ஒரு துணிச்சல் தேவை , அது சாருவிடம் இருக்கிறது.. அவரது வாசகன் / மாணவன்   
என்பதில் நான் பெருமைப்படுகிறேன் 
     

டி டி எச் குளறுபடி- மன்னிப்பு கேட்ட கமல் ஹாசன் - கீழே விழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டாத ஊடகங்கள் !!



     

    அனைவரும் எதிர்பார்த்ததுதான். படத்தின் விளம்பரத்துக்காக ரிலீசுக்கு முன்பே  டி டி எச் ஒளிபரப்பு  என்று படம் காட்டிய கமல் ஹாசன் , இப்போது பிப்ரவரி இரண்டாம் தேதிதான் டி டி எச் ஒளிபரப்பு என அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

   போலி வாக்குறுதி அளித்ததற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.

       ரிலீசுக்கு பின்புதான் டி டி எச் என்பதால் , கட்டணத்தை குறைப்பதாகவும் , படம் பார்க்க விரும்பாதவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.

 தவறுக்கு வருத்தம் தெரிவித்த பின் , அவரை விமர்சிப்பது நாகரிகம் இல்லை.

ஆனால் அவர் என்னவோ புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி விட்டதாக , விபரங்கள் ஒன்றும் தெரியாமல் சில பத்திரிக்கைகள் உருகி உருகி எழுதின.. அவர்கள் அறியாமை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 டி டி எச் என்பதை கமல் கண்டு பிடிக்கவில்லை..   டி டி எச் மூலம் புதுப்படங்களை ஒளிபரப்புவது என்பதும்  கமல் கான்சப்ட் அல்ல...

தேவையில்லாமல் இவர் புகுந்து குழப்பி , ஒரு புதிய தமிழ் சினிமாவில் வருவதை கசப்பான அனுபவமாக ஆக்கியதுதான் இவர் சாதனை  என்கிறார்கள் நடு நிலையாளர்கள்.

       அவருக்கு பொருளாதார நெருக்கடிகள்  இருந்து இருக்கலாம். அதை சமாளிக்க இப்படி ஒரு ஸ்டண்ட் அடித்து இருக்கலாம். அதைக்கூட மன்னித்து விடலாம்.

  ஆனால் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள் போல அவர் ஆதரவு பத்திரிக்கைகள் ஆடிய ஆட்டம் மறக்க கூடியதா?

        கண்டிப்பாக கமல் சொன்னதை செய்து விடுவார் என்றும் , தியேட்டர்கள் பணிந்து விட்டன என்றும் எந்த தரவுகளும் இல்லாமல் , தெரிந்தே பொய் செய்திகள் வெளியிட்டார்களே !!

     சில பத்திரிக்கைகள் அறியாமை காரணமாக , அவற்றை உண்மை என்று நம்பி வெளியிட்டன என்பதும் உண்மைதான்.

  பத்தாம் தேதி டி டி எச் என ந்மபி பணம் கட்டியவர்கள் முறையிட்ட போது ஏளனம் செய்தன சில பத்திரிக்கைகள்.

அதையும் நேரடியாக செய்யாமல் வாசகர் கடிதம் என்ற பெயரில் செய்தன.

 அவர் என்ன கோடி கோடியாகவா ஏமாற்றி விட்டார்... சீட்டுக்கடை மோசடி, ஈமூ மோசடி போல இது என்ன அவ்வளவு பெரிதா,,,  என்பது போல ”கடிதங்கள் “ வெளியிட்டன.


      தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக பொய் செய்திகள் வெளியிடலாமா?  இப்படி செய்யும் இவர்கள் , அரசியல்வாதிகளை குற்றம் சாட்ட என்ன தகுதி இருக்கிறது ?
 
          ஒரே நாளில் ஆயிரம் கோடி வசூல் , கமலுக்கு ஆதரவாக தியேட்டர்கள் அணி வகுப்பு என்றெல்லாம் பொய் செய்திகள் வெளியிட்டு , கமலுக்கு நெருக்கடி ஏற்படுத்திய்து  இந்த ஊடகங்கள்தான்.

                இனியாவது இப்படிப்பட்டவர்களை நம்பி கமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என்பதே  நடு நிலையாளர்கள் விருப்பம் மட்டுமல்ல.. அவர் நலம் விரும்பிகளும் விருப்பமும் கூட.
   
   கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல இது சம்பந்தமான செய்திகள் வெளியிட்டு வரும் ஊடகங்கள் , இனி மேலாவது நடு நிலையுடனும் செய்திகள் வெளியிட வேண்டும் என்பதே நடு நிலையாளர்கள் எதிர்பார்ப்பு.



Sunday, January 13, 2013

சாரு கண்டிப்பாக புக்கர் பரிசு பெறுவார்- கவிஞர் றியாஸ் குரானா திட்டவட்டம்




பட்டியல் கவிதை , வாய்ப்பாடு கவிதை போன்ற உயிர்மை பாணி கவிதைகளால் அலுத்து போன நமக்கு உண்மையான கவிதைகள் மூலம் ஆறுதல் அளிக்க சில நல்ல கவிஞர்களும் இருக்கிறார்கள் .அப்படிப்பட்ட நல்ல கவிஞர்களில் ஒருவர்தான் இலங்கையைச்சேர்ந்த ரியாஸ் றியாஸ் குரானா . இவருடன் உரையாடுவது ஓர் அலாதி அனுபவம்.. நள்ளிரவை தாண்டியும் உரையாடல் நீளும் . இலக்கியம் , கவிதை , சம் கால நிகழ்வுகள் என பல விஷ்யங்கள் அதில் இடம்பெறும்.. சாருவுக்கு கண்டிப்பாக புக்கர் பரிசு கிடைக்கும் என்கிறார் அவர். எப்படி சொல்கிறார் ? இந்த உரையாடலை படித்து பாருங்கள்.. இது தவிர பின் நவீனத்துவம் , சம கால கவிதைகளின் போக்கு என பலவற்றை பற்றி பேசுகிறார் அவர்.. **********************************************************


பிச்சைக்காரன்

  மனுஷ் எழுவது கவிதையாகவே தோன்றவில்லையே.. எனக்கு மட்டும்தான் அப்படியா , அல்லது அதுதான் உண்மையா.. சக கவிஞராக அவரை எப்படி மதிப்பிடுவீர்கள்


றியாஸ் குரானா 

 அவர் எழுதுவதும் கவிதை வகையினத்திற்குள் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆயினும், மிகப் பழசு பட்டுப்போன ஒன்று அது. வானம் பாடிகளின் தொடர்ச்சியும், ஆரம்ப நவீன கவிதையின் சில உத்திகளும் இணைந்த இடம் அவரின் கவிதைகள். கவிதைகள் என்ற விளிப்புக்குள் அடங்கக்கூடியவை. இன்று அதிகம் பிரயோசனமற்றவை. என்னால் ஆர்வப்படக்கூடிய ஒரு பிரதியையும் அவர் எழுதவில்லை. இதுவரை.



 காய்கறி பட்டியல் போல , பட்டியலிட்டு செல்வதெல்லாம் கவிதையா... அவர் கவிதைகளில் ஒரு ஃபீல் இல்லையே



 கவிதைக்கு ஃபீல் அவசியமில்லை. அது அவசியப்பட்டது ஒரு காலகட்டம். கதையை காவியமாக (கவிதையாக) சொன்னது ஆரம்ப காலம். பின் கவிதையை வரிகளும் உணர்வுகளும் கைப்பற்றின. (நவீன கவிதை) தற்போது கவிதையை கதையாகச் சொல்லுதல் அல்லது நிகழ்த்துதல், ம்..ம்.. வரிகளையும் உணர்வுகளையும் கடந்துவிட்டது. கவிதைச் சம்பவங்களும் அவைகளின் தீராத கதைகளுமே இன்று கவிதையாக பாவிக்கப்படுகிறது. உணர்வை பிரதிபலித்தல் என்ற வேலையை கைவிட்டுவிட்டு.. அதை உருவாக்குதல் என்ற இடத்திற்கு நகர்ந்துவிட்டது. சுருக்கமாகச் சொல்லுவதென்றால், சுழலை பிரதிபலித்தல் என்ற இடத்திலிருந்து, புதிய சுழலை உருவாக்கும் நிலையை அடைந்திருக்கிறது கவிதை. குறித்த ஒரு வேலையை செய்வதாக கவிதையை இனி புரிந்து கொள்ள முடியாது.




 ஹைக்கூவின் அலை தமிழில் ஓய்ந்து விட்டதா, அல்லது அந்த அலை உருவாகவே இல்லையா.. அல்லது அதற்கான தேவையே இல்லையா




 மிக மோசமான வரையறைகளை உடையது ஹைக்கூ. இப்போது அவை அவசியமில்லை. சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், இறுக்கங்கள் போன் எதையும் பின்பற்றச் சொல்லும் எந்த இலக்கிய வடிவங்களும் எதிர்க்கப்பட வேண்டியதே... 



மரபுகளுக்கு உட்பட்டு எழுதப்பட்ட சங்க பாடல்களில் , உன்னத உணர்ச்சிகளை தொட்டு இருக்கிறார்களே. 




 எதிர்க்கப்பட வேண்டியது என்றே சொன்னேன். முற்றாக புறக்கணித்து அழித்தொழித்துவிட வேண்டும் என்பது அதன் விரிவான வடிவமல்ல. அங்கிருந்து நமது பயணம் தொடர்கிறது என்பதை புரிந்துகொள்ள அது உதவும். அவைகூட அந்தக் காலத்தின் முக்கிய விசயம்தான். அதிலிருந்து நமது காலப் பயணம் மாறியிருக்கிறது. அதே நேரம், சங்ககால உணர்வென்பது, அகம் எனினும் புறம் எனினும், ஒரு கூட்டு மனப் புரிதலாகவே அறியப்பட்டது. அதனுாடாக சமூகத்தின் செயல்.பண்பாடு, வாழ்க்கை என அனைவருக்கும் பொதுவான ஒரு அமைப்பை உருவாக்கவே அது உதவியது. இப்போது, பொது உணர்வை யாரும் கொண்டாடுவதில்லை. குறிப்பான அதன் பங்களிப்பை வைத்துக்கொண்டு, அதை இப்போதுக்குமான மன நிலவரமாக மாற்றி சிந்திப்பதில் உள்ள பிரச்சினையை நீங்கள் உணருவீர்கள் என நினைக்கிறேன். தேவையானால் இது தொடர்பாக விரிவாகப் பேசலாம்.


ஆமா... இதே விஷ்யத்தை நாவல்களுக்கும் பொருத்தி பார்த்து யோசித்து பார்த்தேன் 


சாரு .. தமிழின் மிக ஆற்றலுள்ள கதைவரைஞர். அவர் ஒருவரைத்தான் இதைப் பொருத்திப் பார்க்க வாய்ப்பிருக்கிறது. மையமற்ற நாவலான சீரோ டிகிரி தொடும் உச்சத்தை, மரபு ரீதியான ஒரு நாவல் தொட முடியாது..ஆகவேதான் கட்டுபாடுகள் , இறுக்கங்கள் போன்றவை படைப்புகளுக்கு கூடாது என்கிறேன். 

   அதே சமயம் புதிய கட்டுப்பாடுகள் , புதிய விதிகளை ஏற்படுத்தி , அதற்குள் விளையாடி பார்க்கும் முயற்சிகளும் வெளி நாடுகளில் நடக்கின்றன இந்தக் கவிதையைப் படிச்சுப் பாருங்கள்


    கலைக்கப்பட்ட கவிதை
றியாஸ் குரானா
கலைக்கப்பட்ட எனது கவிதைக்குள்
இப்போதுதான் மலர்ந்ததுபோல்
எஞ்சியிருந்த பூவொன்றை,
அதன் தாய்நிலமான மரத்தில்
இணைக்கப்போனபோதுதான்
அந்த அதிர்ச்சி நிகழ்ந்தது
எப்போதோ பூத்து
உதிர்ந்திருக்க வேண்டிய அல்லது
யாராவது பறித்திருக்க வேண்டிய இந்த மலரை,
தனது கிளையில்
இனிப் பூத்துக் காட்சிப்படுத்துவதற்கு
சம்மதிக்க முடியாதென்றது அந்த மரம்.
அது ஏன் என்பதை
பின்வருமாறு விளக்கலாம்.
கற்பனையை இரண்டாகப் பிரித்து
பங்குபோட வேண்டி வந்திருக்கிறது.
நேற்றுச் சந்தித்தவள்தான்
எனினும்,சமபாதி அவளுக்கும் வழங்க வேண்டும்
கற்பனையைப் பிரிக்கும் பொதுச் சுவரை
சொற்களை அடுக்கி கட்டமுடிவெடுத்தேன்
ஒரு பகுதிக்குள்ளிருப்பவருக்கு
மறு பகுதிக்குள்ளிருப்பவரின் நடமாட்டம்
அறியாமலிருக்கும்படி
பொதுச் சுவரின் சொற்களுக்குள்
அடர்த்தியான எல்லையற்று நீளும்
மௌனங்களை நிரப்பினேன்
அவர்களைத் தனித்தனியே
சந்திக்கக்கூடிய வகையில்,
ஒன்றிலிருந்து ஒன்று
முற்றிலும் வேறுபட்ட சூழல்களை
கற்பனையின் இரண்டு பகுதிக்குள்ளும்
மாறி மாறி  உற்பத்தி செய்தேன்
ஒரு கற்பனைக்குள்
அறவே பொருந்தாத,வித்தியாசமான
இருவேறு நிலவியலை கட்டமைப்பதும்,
அதற்காகக் கற்பனை செய்வதும்
பெரும் துயராக மாறத்தொடங்கியது
கற்பனையின் இருபகுதிக்குள்ளும்
தனித்தனியே வசிக்கும் அவர்களுக்கிடையில்,
சமநிலையைக் காப்பாற்ற முடியாது போகுமென
அஞ்சியபோதுதான்
நான் கடைசியாக எழுதிய
மஹா கவிதையைக் கலைத்தேன்
ஆக்குவது கடினம் அழிப்பது இலேசு
என்ற தத்துவம்
கவிதைக்குப் பொருந்தி வரவில்லை
எழுதுவதைவிட கவிதையைக் கலைப்பது
மிக மிகச் சிரமம் என்றறிந்தேன்
கவிதையைக் கலைக்கும்போது
ஏற்பட்ட ஒவ்வொரு தோல்வியின் போதும்
கவிஞனாக இருப்பதைவிட
வாசகராக இருப்பதன் துயரையும்
அசௌகரிகங்களையும் படிக்கத்தொடங்கினேன்.
முழுமையாக கற்பனை இருந்தபோது
எழுதப்பட்ட கவிதையை,
இரண்டாகப் பிரிக்கப்பட்ட
கற்பனைச் செயல்முறைகளால்
எப்படிக் கலைப்பதென்று புரியவில்லை
சொற்களை ஓரளவு கலைக்க முடிந்தது
தலைப்பைக் கலைத்துப் போடப்போட
வேறொரு தலைப்பாக மாறி,
முடிவற்ற அச்சுறுத்தலாக மாறியது
பெரும் யுத்தமொன்றில்
சிதைந்துபோன நகரமொன்றின்
இடிபாடுகளைப்போல
கற்பனை காட்சியளிக்கத் தொடங்கியது
அந்த இடிபாடுகளுக்கிடையிலும்,
சில கவிதைச் சம்பவங்கள்
ஆங்காங்கே மீதமாய்க் கிடந்தன
திடீரென ஏற்பட்ட இந்த அனர்த்தத்தை எதிர்பாராத,
கற்பனையின் இரு பகுதிக்குள்ளும்
குடியிருந்த அவர்கள் இருவரும்
மிரண்டுபோய் வெளியேறினர்
அவர்கள் போனால் என்ன
கலைக்கப்பட்ட கவிதைக்குள்ளிருந்த
அழகிய மலரையாவது
காப்பாற்றிவிடலாமென்று விரும்பினேன்.





. ஒரு நாவலுக்கான பல அம்சங்களை நான் இந்தக் கவிதைச் சம்பவங்களுக்குள் கொண்டு வந்திருப்பேன். 



புதிய கட்டுப்பாடு என்பது ஒரு நிபந்தனையல்ல. அது புனைவுத்திகளால் ஆனது. புனைவை கட்டுப்படுத்தும் விதிகளால் ஆனது அல்ல. புனைவுத்திகளின் பெருக்கமே.. அதன் மீள் பயன்படே அது , ஒரு வரைவிலக்கணம் போல் தோன்ற காரணமாகிறதே ஒழிய... அது கட்டுப்பாடு அல்ல. குறித்த பிரதிக்கென உருவாக்கும் ஒருவகை புனைவுத்தி மிக தரப்படுத்தப்பட்ட எல்லைகைளைக் கொண்டு இயங்குபவை. அது கட்டுப்பாடு அல்ல. அந்தப் பிரதிக்கான புனைவு உத்தி அவ்வளவே. எக்ஸைல் பாருங்க. பின் நவீனத்துவம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கே வரையறைகள் இருக்கின்றவே ?< பிறவற்றிலிருந்து எப்படி பி.ந வேறுபடுகிறது என்பதைக் கொண்டே அதன் வரையறையை உருவாக்குகிறார்கள்... அது வரையறையல்ல. இப்படிச் சொல்லலாம்.. பின்நவீன கவிதை,நாவல்,சிறுகதை ஏன் பிரதி என்றுகூட ஏதும் இல்லை. பின் நவீன வாசிப்பு என்றே இருக்கிறது. இதுவும் பலவகையான வாசிப்புமுறைமைகளைக் கொண்டது.



 பின் நவீனத்துவ அலை , நாவல்களில் காண்ப்படுவதை போல , மற்ற துறைகளில் காணக்கிடைக்கவில்லை என்ற பார்வை குறித்து


என்ன சொல்கிறீர்கள் பின் நவீன வாசிப்பறிகு ஏதுவாக சினிமா மற்றும் கவிதைகள் எல்ாம் இன்று இருக்கின்றன. இலக்கிய வடிவங்களில் முதலில் மாற்றத்திற்கு உள்ளானது நாவல் என்பதாலே அப்படிச் சொல்கிறார்கள். 

சினிமாவில் பின் நவீனத்துவமா ? !!!?? 


 . பின் நவீன வாசிப்பிற்கு இடந்தரும் அதிக சினிமாக்கள் (தமிழ் அல்ல) இருக்கின்றன. கருத்து ரீதியாக,திரை செயல் ரீதியாக எனப்பல....

 தமிழில் சொல்கிறீர்களோ என நினைத்து சற்று குழம்பி விட்டேன்


 ஹா...ஹா... அப்படியான நகைச்சுவையை இந்த நேரம் கண்விழித்து பேச வேண்டுமா. 

தமிழ் நாட்டு எழுத்தாளர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தவர் யார் ? 



  சாரு நிவேதிதா.  அவர் பெரிய ஆள். தமிழில் எனக்கு அதிகம் ஆர்வமூட்டுவதும், அதிகம் பிடிக்காததும் அவரைத்தான். அவருடைய பிரதிகள் குறித்து விரிவாக பேசனும் என்று எண்ணமுள்ளது.. அவருக்கு கண்டிப்பாக  புக்கர் பரிசு கிடைக்கும் என நம்புகிறேன்.

எப்படி சொல்கிறீர்கள் ? 


அவருடைய பிரதிகளும், பிரதிச் செயலும் தமிழில் இருப்பதால்தான் கவனிக்கப்படவில்லை. ம்ம்ம் விரிந்த வாசிப்புள்ளதும், மனம் விரிவுள்ள எந்த ஒருவரும் எனது கருத்தையே சொல்லுவர். எனது வாசிப்புத்தான் இந்த முடிவை எடுக்க உதவியது. எனது வாசிப்பின் மீது எனக்கு அதிக நம்பிக்கை உண்டு. விருது கிடைத்தபிறகு நீங்கள் என்னிடம் நினைவு படுத்துவீர்கள்.

கட்டுரை , சிறுகதை , நாவல் , கவிதை என பல தளங்களில் அவர் இயங்ககூடியவர். அதில் உங்களுக்கு பிடித்தது எது ? 



ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் இயங்குவது.... தனியாக ஒரு பிரதியல்ல அவரின் நாவல். பல உள்ளலகுகளை தனக்குள் உட்செரித்து வைத்திருக்கும் ஒன்று... இலக்கியம் என இதுவரை நம்பப்படுகிற மற்றும் அப்படி நம்பாத பல அம்சங்களை தனக்குள் கொண்டு கதையாடுகிற பிரதி. 
நாவலை எப்படி வாசிக்க வேண்டும், எந்த வழிகளால் புரிந்துகொள்ள வேண்டுமென்று இதுவரை வாசிக்கப்பட்டதோ அவைகளை நிராகரிக்கிற பிரதி. அதனால்தான், சாருவின் பிரதியை வாசிப்பதற்கு அதிக தயக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள்.

 அவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்...இன்னொரு புறம் போற்றப்படுகிறார்... இந்த நிலைக்கு காரணம் என்ன என நினைக்கிறீர்கள்?

கண்டுபிடிப்பதினுாடாக நாம் எதையும் சாதித்துவிடவும் முடியாது. அதே நேரம் காரணங்களின் மீது அக்கறை கொள்ளுவது இன்றைய இலக்கிய நிலவரத்திற்கு தேவையான ஒன்றுமல்ல. 



  அவர் எழுத்தில் காமம் அதிகம் இருப்பதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்களே...அது குறித்து என்ன் சொல்கிறீர்கள் 


காரணம் புரியவில்லை. காரணத்தை காமம் என்பது ஒரு பண்டையச் செயல். அது இருக்கிறது. அதை எதிர்பதாகவும் கொண்டாடுவதாகவும் நாமிருக்கிறோம். நம்மிடம் காமத்தை வைத்திருப்பவர்கள் பிரதியில் வரும்போது மட்டும் வெறுப்பதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. பல வழிமுறைகளால் காமத்தை செயலாககவும், சிந்தனையாகவும், கற்பனையாகவும், அறமாகவும், அறத்திற்கு எதிரானதாகவும் பயன்படுத்துகிறார்கள். காமத்தை கையாளும் வழிமுறைகளும் அளவுகளும் வேறாக இருக்கலாம். ஆனால். அது ஒரு செயல். சாரு அதில் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. அவருடைய பிரதியின் மனிதர்களும், அவர்கள் உருவாக்கும் பிரதிச் சம்பவங்களும் காமத்தின் மீது அக்கறைகொள்கிறது. அதனுாடாக பார்வையாளர்களை கலங்கடிக்கிறார் தங்களையே தங்களது செயலையே ஏற்றுக்கொள்ள முடியாத பார்வையாளர்களை நமக்கு அவரின் பிதியினுாடாக கண்டுபிடித்து தருகிறார்




Friday, January 11, 2013

ரிஸானா நஃபீக் மரண தண்டனை- உண்மையை மறைக்கும் துரோக புத்திரன்


ரிஸானா  நஃபீக்.... இந்த சகோதரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி மனதை மிகவும் பாதித்தது.

இலங்கையை சேர்ந்த ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் இவர். பிழைப்புக்காக சவுதிக்கு வேலை தேடி சென்று இருக்கிறார். வயதை மாற்றிக்காட்டி இவரை அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.

  வேலை செய்த இடத்தில் குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லி இருக்கிறார்கள்.  பாலூட்டும் போது குழந்தை இறந்து விட்டது. ரிஸானாதான் கொன்று விட்டார் என குழந்தையின் தாயார் குற்றம் சாட்டவே , ரிஸானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

   பணம் செய்து வழக்காட முடியாத ஏழ்மை , ஆசிய நாட்டில் பிறந்த தவறு ,  மொழியறிவு இல்லாத நிலையில் , வாக்கு மூலத்தில் ஏற்பட்ட குளறுபடி என பல விஷ்யங்கள் ரிஸானாவுக்கு எதிராக போய் விட்டன.

மனதை கலங்க வைத்தது இந்த செய்தி. அவர் எந்த அளவுக்கு வேதனைப்பட்டு இருப்பார். யாராவது காப்பாற்றி விட மாட்டார்களா என எப்படியெல்லாம் ஏங்கி இருப்பார்..

இதயம் கனக்கிறது.

ஆனால் இதைக்கூட ஒருவர் சுயனலத்துக்காக பயன்படுத்த முனைந்த செய்தி , மனிதன் எந்த அளவுக்கு கேவலாமாக செல்வான் என்பதை உணர்த்தியது.

       இஸ்லாமிய சட்டங்கள்தான் உலகத்துக்கு சரியான தேர்வான அமையும் என்ற கருத்து உலகெங்கும் வலுத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த கருத்து வலுத்து வருகிறது.

      இந்த நிலையில் , மேற்கண்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி , இஸ்லாமிய சட்டம் வேண்டும் என சொல்லும் மூடர்கள் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என துரோக புத்திரன் கூறியிருக்கிறார்.

         இவர் ஏன் இப்படி சொல்கிறார்?

         இவர் ஓர் இஸ்லாமியர். ஆனால் அதை மறைக்கும் வகையில் , வேறொரு மதத்தை சார்ந்தவர் போல ஒரு புனை பெயரை வைத்து கொண்டுள்ளார்.

           தோப்பில் முகமது மீரான் , ஏ ஆர் ரகுமான் , முகமது பஷீர் , ஷாகூல் ஹமீது , பீர் முகமது என எத்தனையோ பேர் , இஸ்லாமியர்கள் என்பதை பெருமையாக நினைத்து ,  அந்த பெயரிலேயே வெற்றி பெறுகின்றனர்.

     துரோக புத்திரனோ , தனது இஸ்லாமிய அடையாளத்தை மறைத்தால்தான் மக்கள் தம்மை ஏற்பார்கள் என தவறான கண்ணோட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறார்.

 இந்த அடிப்படையில்தான் ரிஸானா தண்டனையை வைத்து , இஸ்லாமிய சட்டங்களையே எள்ளி நகையாடுகிறார்.

  ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிப்பதாலேயே அந்த நாட்டில் இஸ்லாமிய சட்டம் கறாராக பின்பற்றப்படுகிறது என சொல்ல முடியாது. எனவே ஒரு நாட்டின் சட்டங்களை வைத்து , கண்மூடித்தனமாக இஸ்லாமிய சட்டங்களை மதிப்பிட கூடாது.

   சவுதியில் இஸ்லாமிய சட்டம் முழுமையாக இருக்கிறதா என்பது விவாதத்துக்குரியது .ஆனால் சவுதியின் சட்டம் இந்திய சட்டங்களை விட மேலானதுதான்.

 நம் ஊரில் ஒருவனை கொலை செய்து விட்டார்கள் என வைத்து கொள்ளுங்கள்.

அந்த குற்றவாளிக்கு கவுன்சலிங் கொடுக்க வேண்டும் , மிதமான தண்டனை கொடுக்க வேண்டும் என ஊரில் இருக்கும் அனைவரும் அரசுக்கு அட்வைஸ் கொடுப்பார்கள். பாதிக்கப்பட்ட குடும்பம் எங்கோ அழுது கொண்டு இருக்கும்.

 ஆனால் சவுதியில் அப்படி அல்ல.

  பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உணர்ச்சிகளுக்குத்தான் முன்னுரிமை. சவுதி அரசரே கூட அந்த உரிமையில் தலையிட முடியாது.

      நம் ஊரில் ஒரு குழந்தையை கொன்றால் என்ன ஆகும் .?

  சின்ன குழந்தைதானே ..சரி விடுங்கள்... இன்னொன்று பெற்று கொள்ளலாம்.  ஏதோ தெரியாமல் கொன்று விட்டான். இறந்தவனும் சகோதரன் , கொன்றவனும் சகோதரன் என பேசுவோம்.

  சின்ன குழந்தைதான் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தானே அந்த வலி தெரியும்?

         எனவேதான்  தண்டிப்பதா மன்னிப்பதா என்று முடிவு செய்யும் உரிமையை  பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் கொடுத்துள்ளது சவுதி சட்டம்.

     மன்னிக்கும் பெருந்தன்மை உங்களுக்கு இருந்தால் , தாராளாமாக நீங்கள் பாதிக்கப்படும்போது மன்னியுங்கள். ஆனால் மற்றவர் சார்பில் நீங்கள் மன்னிப்பு வழங்காதீர்கள் என்கிறது சவுதி.

 நம் ஊரில் பாதிக்கப்பட்ட குடும்பம் எதுவும் செய்வதற்கில்லை.. அறிவு ஜீவுகளும் , பொழுது போகாதவர்களும்தான் குற்றவாளியை என்ன செய்ய வேண்டும் என அரசுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

    சவுதி சட்டத்தை குறை சொல்லலாம்தான். ஆனால் அதற்கு ஒரு தகுதி வேண்டும். நம்மை போன்ற ஒரு நான்காம் உலக நாடுகள் இதை கண்டித்தால் , உலகம் காறி உமிழும்.


   இதெல்லாம் துரோக புத்திரனுக்கும் தெரியும். ஆனால் யாரிடமோ நல்ல பெயர் வாங்க இஸ்லாம் சட்டங்களை கண்டிக்கிறார்.









Tuesday, January 8, 2013

விஸ்வரூபம் சிக்கலுக்கு சுமூக தீர்வு- கமல், தியேட்டர் அதிபர்கள் சந்திப்பில் உடன்பாடு



விஸ்வரூபம் பட சர்ச்சை சுமுகமாக முடியும் நிலை உருவாகியுள்ளது.
திரையரங்குகளில் வெளிவரும் முன்பே டி டி எச் மூலம் ஒளிபரப்பும் முயற்சி வட மாநிலங்களில் செய்து பார்க்கப்பட்டு தோல்வியில் முடிந்தது.
கமல் இதை தமிழ் நாட்டில் செய்து பார்க்க முயன்றார். ஆனால் எதிபார்த்த அளவு புக்கிங் ஆகவில்லை என கூறப்படுகிறது. திரையரங்களிலும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே டி டி எச் மூலம் ஒளிபரப்பு என்பதில் சமரசத்துக்கு இடமேயில்லை என்ற கமல் , சற்று இறங்கி வந்து பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொண்டார். 

இதைத்தொடர்ந்து கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய அலுவலகத்தில், தியேட்டர் அதிபர்கள் நேற்று இரவு சந்தித்து பேசினார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் பட அதிபர் கேயார், தமிழ்நாடு திரையரங்க சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இரவு 7 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 10 மணி வரை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவடைந்து வெளியே வந்த கமல்ஹாசன், இரு தரப்பினரும் சந்தித்து பேசினோம். நாளை (இன்று) மீண்டும் சந்தித்துப்பேச இருக்கிறோம் என்றார்.அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கூறும்போது, முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. விஸ்வரூபம் படம் தியேட்டர்களில் முதலில் ரிலீஸ் செய்யப்படும். ரிலீஸ் தேதி பற்றி, நாளை (இன்று) மீண்டும் சந்தித்து பேசியபின் அறிவிக்கப்படும் என்றார்கள்.

Thursday, January 3, 2013

உடை மட்டுமே பெண்ணை காக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.. பிறகு எதுதான் காக்கும் ?


  ராணுவ ஆட்சி வந்து எல்லோரையும் சுட்டு தள்ளினால்தான் இந்தியா உருப்படும் என்ற “ எளிய ‘ தீர்வு டீக்கடை விவாதங்களில் பிரபலமானது. அதை சற்று மெருகேற்றி , சமூக மாற்றம் என்ற தீர்வு தற்போது  தொலைக்காட்சிகளில் முன் வைக்கப்பட்டு வருகிறது.

 இன்னொரு சாரார் சட்டங்கள் இருப்பதால்தான் குற்றங்கள் நடக்கின்றன என்று அதிரடியாக கார்ப்பரேட் சாமியார்களிடம் படித்ததை ஒப்பிக்கிறார்கள்.
இதற்கு இவர்கள் ஒரு வினோதமான விளக்கம் வேறு கொடுக்கிறார்கள். ஓஷோவால் முதலில் சொல்லப்பட்டு , கார்ப்பரேட் சாமியார்களால் பிரபலமான விளக்கம் அது.

 காட்டுவாசிகளிடம் மதங்களோ சட்டங்களோ இல்லை.. அங்கு கற்பழிப்பு கிடையாது. என்கிறார்கள்...

ஒன்றை மறந்து விட்டார்கள். காட்டுவாசிகளிடம்  பெண்களை போக பொருட்களாக சித்திரிக்கும் சினிமா , தொலைக்காட்சி  , பத்திரிகைகள் என எதுவும் இல்லை..

நம் ” நாகரிமடைந்த ” சமூகத்தில் இந்த நிலை இல்லையே....  சமூக மாற்றம் , சமூக மாற்றம் என முனகுவதால் ஒன்றும் மாறி விடாது.

  வீடு தோறும் திண்ணை கட்டி, பேசி பேசி வளர்ந்த சமூகம் நம் சமூகம். நம்மால் ஒரு சிறு செயலைக்கூட செய்ய முடியாது.

  புத்தாண்டை ஒட்டி , மதுக்கடைகளால் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க , அரசியல் விமர்சகர் ஞாநி ஒரு முயற்சி செய்தார்.  அனைவரும் இது சம்பந்தமாக சி எம் செல்லுக்கு மெயில் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அவ்வளவுத்தான்..  நொள்ளை, நொட்டை சொல்ல புற்றீசல் என ஆட்கள் குழுமி விட்டார்கள் . மெயில் அனுப்பினால் மட்டும் மதுக்கடைகளை மூடி விடுவார்களா , மூடி விட்டால் மட்டும் பிரச்சினை நின்று விடுமா , இது மனித உரிமை மீறல் அல்லவா என அவரையே திகைக்க வைத்து விட்டனர். ஒரு சிறிய செயல் . இதில் கூட மக்கள் ஒன்று  கூடுவதில்லை. செயல் என்றால் அவ்வளவு கசப்பு.

இவர்களை வைத்து சமூக மாற்றமா ? ஜோக் அடிக்காதீர்கள்.

 நிறுவனங்களில் செயல் திறனை பெருக்கி , உற்பத்தியை அதிகரிக்க ஜப்பானிய வழி முறைகளை , கருதுகோள்களை  நம் நிறுவனங்கள் பின்பற்றுவதுண்டு.

செய்ரி , செய்டன் , செய்கெட்சு, சிட்ச்சுக்கே மற்றும் கைசன் என்றெல்லாம் பார்த்து இருப்பீர்கள். ஜப்பானிய சிந்தனை முறை என்பதால் இதை யாரும் புத்த மத சிந்தனை என புறக்கணிப்பதில்லை..

அதே போல, இந்தியாவின் இழி நிலைக்கு மருந்தாக இஸ்லாமிய சிந்தனைகளை முன் வைத்தால் மட்டும் மத பிரச்சாரம் என சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள்.


  அமெரிக்கன் சோஷியலாஜ்ஜிக்கல் ரெவியூ ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் இஸ்லாமிய நாடுகளில் பாலியல் தவறுகள் குறைவாகவே இருப்பதாக தெரிய வந்துள்ளது. தவறு இல்லவே இல்லை என்பதில்லை.. ஆனால் மற்ற நாடுகளை விட குறைவு.

வெறும் சட்டம் மட்டும் இதை சாதிக்க முடியாது. மத நம்பிக்கைகளும் , சிறுவயதிலேயே மனதில் உருவாகும் மதிப்பீடுகளுமே இதற்கு காரணம்.

 நம் ஊரில் சிறு வயதில் இருந்தே, ஈவ் டீசிங் என்பதுதான் ஹீரோயிசம் என்பது  பதிய வைக்கப்படுகிறது. பெண்களை போகப்பொருட்களாக காட்டுகிறோம். எந்த விளம்பரமாக இருந்தாலும் , அதில் பெண்ணை கவர்ச்சிக்காக பயன்படுத்துகிறோம்.

இப்படி சாக்கடையாக இருக்கும் சமூகத்தில் ஆடையை கண்ணியமாக அணிந்தால் மட்டும் பாதுகாப்பு உறுதியாகி விடுமா என்ன ? கண்டிப்பாக இல்லை.

கடும் தண்டனை , கண்ணிய ஆடை மட்டும் போதாது. ஒட்டு மொத்தமாக மத மாற வேண்டும் என்பது இல்லை.. ஆனால் மனம் மாற வேண்டும்.

  என்னைப்பொறுத்தவரை எந்த மதம் மீதும் எனக்கு காழுப்புணர்ச்சி கிடையாது.. எல்லாவற்றிலுமே நல்ல விஷ்யங்கள் உள்ளன.

ஆனால் பெரும்பாலான மதங்கள் தனி மனித வள்ர்ச்சியை மட்டுமே யோசிக்கின்றன.. மோட்சம் , நிர்வாண நிலை , ஜீவன் முக்தி நிலை என தனி மனிதன் அடைய வேண்டிய உயர் நிலைகளை சொல்கின்றன..

ஆனால் ஒரு மார்க்கம் மட்டும் சற்று வேறுபட்டு, தனி மனித உயர்வையும் சொல்கிறது. சமுதாய நலனையும் சொல்கிறது.

 ஒரு சாக்கடை சமூகத்தில் வாழும் மனிதன் , என்ன உயர்வு அடைந்து என்ன பயன்?


 கண்ணியமான உடை , நல்ல மதிப்பீடுகள் , ஆண்களுக்கு உரிய கட்டுப்பாடுகள்  , கடும் தண்டனைகள் என ஒவ்வொன்றை பற்றியும்  அது சொல்கிறது... அப்படி எல்லாவற்றிலும் மாற்றம் வேண்டும். கண்ணியமான ஆடை எனப்து ஒரு பகுதி மட்டுமே .. அது மட்டுமே முழு தீர்வு அல்ல .

    கண்ணியமான ஆடை மட்டுமே காக்காது என்றால் ,  வேறு எது காக்கும் என்பதை அசைக்க முடியாத ஆதரங்க்ளுடன் அடுத்தடுத்து பார்க்க இருக்கிறோம்...    தொடர்ந்து பேசுவோம்.... பேசுவதுடன் மட்டும் அன்றி செயல்புரிவோம்..




     








Tuesday, January 1, 2013

கண்ணியமாக உடை அணிய சொல்வது அவ்வளவு பெரிய குற்றமா.


   இது ஒரு முட்டாள் சமுதாயம் என நான் சொன்னதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  பாரத பண்பாடு, கல் தோன்றி மண் தோன்றாத... என்றெல்லாம் சொன்னார்கள்.

         நம் நாட்டை விமர்சிப்பது அதை அசிங்கப்படுத்தவதற்கு அல்ல.. இது தற்போதைய இழிவு நிலையில்  இருந்து  தப்பிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்..

       ஒரு வெளி நாட்டுக்காரர்  நம் நாட்டுக்கு ஒரு முறை வந்து பார்த்தால் போதும் , நம் நாட்டைப்பற்றிய கேவலமான மனச்சித்திரம்  பதீவாகி விடும். டிராபிக்கை மதிக்காத  வாகன ஓட்டிகள், நடு ரோட்டில் மல ஜலம் கழிக்கும் படித்த சமுதாயம், அடித்து பிடித்து பேருந்தில் ஏறும்  காட்டுமிராண்டித்தனம் , ப்ளூ ஃபில்ம் போன்ற டிவி நிகழ்ச்சிகள் , மஞ்சள் பத்திரிக்கைகள் போன்ற வார இதழ்கள் போன்றவற்றை பார்க்கும் புதிய்வர் யாருக்கும் இது ஒரு காட்டு மிராண்டி தேசம் என்ற எண்ணமே தோன்றும்.

    நம் ஆட்களை வெளி நாட்டிற்கு செல்லும்போது இளக்காரமாக பார்ப்பதற்கு காரணம் இதுதான்.  சில நாடுகள் வெளிப்படையாக காறித்துப்புகின்றன. சில நாடுகள் நாகரிகம் காரணமாக அப்படி செய்வதில்லை.

 நம் ஆள் ஒருவன் அவர்களை பார்க்க சென்றால் கூல் ட்ரிங் சாப்பிடுங்கள் , ஏதாவது சாப்பிடுங்கள் என அவன் உபசரிப்பான். அட்டா... நமக்கு என்ன மரியாதை என நம் ஆள் புளகாங்கிதம் அடைவான்.

  உண்மையில் அவன் நோக்கம் உபசரிப்பு இல்லை.. இந்தியன் என்றால் நாற்றம் எடுத்தவன் என அவன் மனதில் பதிந்து இருக்கிறது. அதை மறைக்கவே வாசனையாக எதையாவது நம் ஆளை சாப்பிட வைக்கிறான்.

 நம் ஆள் புத்திசாலிதான் , நாற்றம் இல்லாதவன் தான்.. ஆனால் இந்தியாவின் சமூக நிலை அவனை அப்படி நினைக்க வைக்கிறது..

    இன்றைய தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சியில் , நேரில் வந்து பார்த்துதான் இந்தியாவின் அசிங்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒரு செகண்டில் உலகம் முழுதும் செய்தி போய் விடுகிறது.

   டெல்லியில் ஒரு பெண்ணுக்கு நிக்ழந்த அவலம்தான் , பிபிசி சிஎன் என் போன்ற வலைத்தளங்களில் தலைப்பு செய்தி  ஆக இருந்தது..  இந்தியா என்பது ஒரு காட்டுமிராண்டி  நாடு என்பது உலகம் முழுதும் தெரிந்து விட்டது.

     இதில் தமிழ் நாடு தனி முத்திரையை பதித்தது என்பது நமக்கு பெருமை சேர்க்கும் விஷ்யம்..


  •      இலங்கையில் தமிழர்கள் படு கொலை நடந்த போது இங்கு எந்த வித சலனமும் இல்லை . சில இயக்கங்கள் பதறினவே தவிர , பெரும்பான்மை சமூகம் சலனம் இன்றி இருந்தது.
  • அங்கு பாலியல் கொடுமைகள் நடந்ததாக செய்தி வெளியாகி உலகமே பதைபதைத்து போனது.. ஆனால் தமிழகம் டீவியில் சினிமா டான்ஸ்  பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தது.
  • விக்டன் குழுமத்தில் இருந்து , ஓர் ஆபாச பத்திரிக்கை வெளியாவதை ஞாநி போன்றோர் கண்டித்தனர். அச்சு விபச்சாரம் என்றார்கள்.. ஆனால் பொது மக்களிடையே எந்த சலனமும் இல்லை.
  • மீனவர்கள் இலங்கை கப்பல் படையால் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள் . ஒரு சலனமும் இல்லை.
  • பெண்களை போகப் பொருட்களாக காட்டும் விளம்பரங்கள் , தொலைக்காட்சி விளம்பரங்கள் வெளிவந்த போதும் எந்த சலனமும் காட்டவில்லை.
  • டெல்லியில் ஒரு சகோதரி பாதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. வேதனைக்குரியது.. அதற்காக அந்த ஊரில் பெரிய அளவில் எதிர்ப்பு காட்டியது அவர்களின் சுரணை உணர்வை காட்டியது. ஆனால் அதே கால கட்டத்தில் இங்கு அது போல பல சம்பவங்கள் நடந்தன / நடந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் நம் மக்களுக்கு அதெல்லாம்கூட கோபம் ஏற்படுத்தவில்லை.
இப்படி பொறுமையின் சிகரமாக இருந்த நம் மக்கள் , ஒரு விஷ்யத்தில் சீறி எழுந்தார்கள். பெரும் போராட்டம் , கேலி சித்திரங்கள் , கடும் கண்டனங்கள் ..

மேற்கண்ட விஷ்யங்களை எல்லாம் விட கொடுமையான விஷ்யம் என்ன நடந்து விட்டது.

பெண்கள் , இஸ்லாமிய பெண்கள் போல கண்ணியமாக உடை அணிந்தால் நல்லது என ஒருவர் சொல்லி விட்டாராம். இதற்குத்தான் இவ்வளவு களேபரங்களும்..

பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு இடத்திலும் தினம் தோறும்  விதம் விதமாக அ நீதி நடந்து வருகிறது. அதை எல்லாம் விட்டு விட்டு இதற்கு எதிராக கிளர்ந்து எழும் மக்கள்.. 

     எங்கே போய் முட்டிக்கொள்வது ? 

 இதற்கு மாற்றாக ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று சொன்னால் மதப்பிரச்சாரம் என தவறாக என்னை சித்திரிக்க முயல்கிறார்கள்... 

பேசாமல் நானும் கவர்ச்சிப்படம் , அடல்ட்ஸ் ஜோக், சினிமா கிசு கிசு என எழுதி விட்டு, ஆடை சுதந்திரத்தில்தான் பெண் சுதந்திரம் இருக்கிறது என எழுதி பெண்ணூரிமை காவலான மாறி விடலாமா என யோசிக்கிறேன். 

 


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா