Wednesday, December 30, 2015

இசையும் இறைவனும் - இளையராஜா பேச்சு

கவிஞர் மேத்தாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் இளையராஜாவின் பேச்சு ஆழமாக அமைந்திருந்தது.. ஆனால் ஊடகங்கள் உரிய கவனம் கொடுக்கவில்லை..

அவர் பேசியதாவது

 நான் தனிமையில் வாழ விரும்புவவன்.. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இந்த நிகழ்ச்சிக்குகூட வர வேண்டாம் என நினைத்தேன்.. ஆனால் நான் வராவிட்டால் , விருதே வேண்டாம் என மேத்தா உறுதியாக இருந்ததால் , வந்துள்ளேன்..

படங்கள் பார்ப்பதும் இல்லை.புத்தகங்கள் படிப்பதும் இல்லை.  என் கண்ணில் குறைகள் மட்டுமே படும்.. அதை சொன்னால் வருத்தங்கள் ஏற்படும். எனவேதான் இந்த முடிவு.

கற்றதினால் ஆய பயன் என இறைவனை வணங்குவதையே குறள் சொல்கிறது... ஏன் கற்றவனுக்கு சொல்கிறது... கொஞ்சம் படித்து பெரிய ஆள் ஆகி விட்டால் பழசை மறந்து விடுவார்கள்.. கடவுளையும் மறந்து விடுவார்கள்... ஆனால் படிக்காதவன் அவன்பாட்டுக்கு தன் வேலையை செய்தபடி இறைவனை வணங்கிக்கொண்டு இருப்பார்.. படிக்காதவனே மேல் என்பதே இந்த குறள்

அகர முதல எழுத்தெல்லாம் என்பதில் சத்தம் வடிவில் அரூபமாக இருக்கும் இறைவனை குறிக்கிறது.. ஒலிதான் அனைத்துக்கும் ஆதாரம். அதுதான் இசையாக வெளிப்படுகிறது..

சிந்தனை ஒருபோதும் தெளிவுக்கு அழைத்து செல்லாது. குழப்பம் என்பது சிந்தனையின் ஒரு வடிவம். சிந்தனையற்ற நிலைதான் தெளிவு,

இசையிலும் இறைவன் சன்னிதானத்திலும் சிந்தனை நின்று விடுகிறது...

'இசையின் பயனே இறைவன்தான்' என திருநாவுக்கரசர் கூறுகிறார். இறைவன் இசையாகவே இருக்கிறான்

Tuesday, December 29, 2015

பொறுப்பற்ற ஜர்னலிசம்- ஜெயகாந்தனின் சிறு நூல்- ஒரு பார்வை

ஜெயகாந்தனின் சற்று பெரிய சிறுகதையான கரிக்கோடுகள் தனி நூலாக வந்துள்ளது..இபப்டி சிறு நூல்கள் வருவது ஆரோக்கியமானது...

மூன்று பிரதான பாத்திரங்கள்.. இரு வேலைக்காரர்கள்.. இவர்களை வைத்து பின்னப்பட்ட ஒரு ஃபீல் குட் சிறுகதை இது. படித்து முடித்ததும் மனதில் ஒரு நிறைவு ஏற்படும்.

இந்த கதையில் ஒரு காட்சி... இலக்கியவாதியின் கணவனுக்கு , குடும்ப நண்பர் ஒரு கடிதம் எழுதுகிறார்.. ”அவள் எழுத்து தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்துகிறது..அவளை நிறுத்தினால் நல்லது என்பது என் கருத்து... என் கருத்தையும் நீங்களும் அறியும்பொருட்டு உங்களுக்கு எழுதுகிறேன் ”
இதை படித்த கணவன் , அவள் எழுதவேண்டாம் என தான் நினைப்பதாக சொல்கிறார்.. அவள் கோபித்துக்கொண்டு கடிதம் எழுதி வைத்து விட்டு போய் விடுகிறாள்
அவள் தன்னை தப்பாக நினைத்தாலும் பரவாயில்லை.. நண்பன் சொன்னதாக சொல்லி அவன் பெயரை கெடுக்க கூடாது என நினைக்கிறான் கணவன்.. தான் சொன்னதாகவே சொல்லி இருக்கலாமே என நினைக்கிறார் நண்பர்...
நல்லவருக்கும் கெட்டவருக்கும் இடையேயான பிரச்சனை ஒரு சுவை என்றால் , நல்லவர்களுக்கு இடையேயான பிரச்சனை இன்னும் சிக்கலானது..
இதை கையாள்வதில் வல்லுனர் ஜெயகாந்தன்

இதில் வரும் பாத்திரங்கள் அனைத்துக்கும் வயது ஐம்பது பிளஸ்.. ஆனாலும் கதை முழுதும் இளமை கொண்ட்டாட்டம்...

ஓய் மாதவராவ்.. நீர் காதலித்திருக்கிறீரா என கேட்டேன்
இல்லை .. நீங்கள் கேட்கிற அர்த்த்ததில் காதலித்தது இல்லை என்றான்
அவன் சொன்ன தோரணை நான் என்ன பொருளில் கேட்கிறேன் என்பதை பிசிறில்லாமல் புரிந்து கொண்ட தெளிவுடன் ஒலித்தது

சில வெள்ளைக்கோடுகளும் கறுப்புக்கோடுகளும் மனிதனை இளமையாகவும் காட்டும் , முதுமையாகவும் காட்டும். கோடுகளை எங்கே வரைகிறோம் என்பதை பொருத்தது அது

காலம் வரைகிற கரிக்கோடுகளை மாற்ற முடியாது. மனிதன் வரைகிற கோடுகளை மாற்றலாம்

ஓர் போட்டோகிராஃபர். அவரது மனைவி இலக்கியவாதி. அவளது இலக்கிய தீவிரத்தை ஏற்கும் அளவுக்கு ஆரோக்கியமான சூழல் இல்லை என்பதால் அவள் எழுதுவதை சற்று நிறுத்த வேண்டும் என அவரது நண்பர் ஆலோசனை சொல்கிறார்..இதன் விளைவாக மனைவி பிரிந்து போய் விடுகிறாள்.. கடைசியில் மனம் மாறி தான் கோபமாக எழுதிய கடிதத்தின் கோபமான வரிகளை கரிக்கோடுகளால் அழித்து விடுகிறாள்..

கரிக்கோடு கதையின் ஒவ்வொருஇடத்திலும் ஒவ்வொரு பாத்திரம் எடுப்பது இந்த கதையின் சிறப்பம்சம்,

ஆழமான கரு , அதிர்ச்சியூட்டும் கிளைமேக்ஸ் என்றில்லாமல் ஒருவர் கோணத்தில் எழுதப்பட்ட சுகமான நடையில் எளிமையான கதை.

ஆரம்பத்தில் நல்ல நோக்கத்துடன் எழுத வந்தவர்கள் , ஜர்னலிசம் எனும் கிருமியால் அழிந்து விடுகின்றனர் என முன்னுரையில் சொல்லும் ஜெகே , அந்த கோபத்தை கதை முழுதும் பரவ விட்டுள்ளார்.. நிருபர்கள் அடிக்கடி வாங்கி கட்டிக்கொள்ளும் சம கால சூழலில் இந்த கதை பொருத்தமாக இருக்கிறது..

கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்..

வெளியீடு - மீனாட்சி புத்தக நிலையம்

விலை  ரூ 30

Wednesday, December 23, 2015

24-12-2015 இசை - சென்னையில் இன்று

24-12-2015 இசை நிகழ்ச்சிகள் பின்வருமாறு’’


பிரம்ம ஞான சபா

1 மதியம்  - வம்ஷி கிருஷ்ணன் பாடல்

2-15             - கோகுலகிருஷ்ணன்  பாடல்

4 மாலை   - அக்கரை சகோதரிகள்  பாடல்

7                    -  கௌரி ராம நாராயணன்  நடனம்


லக்‌ஷ்மண் ஸ்ருதி

காலை  9    - ரித்விக் ராஜா   பாடல்

10.30             - ப்ரசன்னா - கிட்டார்

மதியம் 1   - மீனாக்‌ஷி  ராகவன் - பரதம்

2.45             - ரேவதி க்ருஷ்ணா   - வீணை

4.45             - சௌம்யா  - பாடல்

7.30             - விஜய் பிரகாஷ் பாடல்



முத்ரா

மாலை 6.15     கத்ரி கோபால் நாத் சாக்சபோன்

 நாத இன்பம்

மாலை 4 - ஜயந்த் - புல்லாங்குழல்

 நாரத கான சபா

காலை 8.15     திருவாரூர் சாமி நாதன் - புல்லாங்குழல்

10                     சிக்கில் சந்திர சேகர் - புல்லாங்குழல்

12.15                 சாரதா கணேஷ்        - பாடல்

1.45                ராகவேந்திரா  - பாடல்

1,45      ஸ்ரீஷா    சஷாங் க்     - பரதம்

4           சஞ்சய் சுப்ரமணியன்  - பாடல்



Sunday, December 20, 2015

கேள்வி கேட்கும் கலை - உளறல் நிருபர்களும் கமல்ஹாசனும் - ஒப்பீடு

இடம் பொருள் தெரியாமல் கத்துக்குட்டித்தனமாக கேள்வி கேட்பவர்கள் பரபரப்பை மட்டுமே நம்பி இருக்கிறார்கள்... ஆனால் ஒரு நல்ல ஊடகம் பரபரப்பை மட்டும் நம்பி செயல்படாது.. பரபரப்பு என்பது ரொம்ப நாள் நிற்காது என்பது அவர்களுக்கு தெரியும்..
கொஞ்ச நாட்களாக தொலைக்காட்சி , இணையத்தில் இருந்து விலகி அதிகம் வானொலிதான் கேட்கிறேன்..அதில் ஹலோ எஃப் எம்மில் கேட்ட ஒரு நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் தங்கி இருக்கிறது...
இதில் கலந்து கொண்டவர் கமல்ஹாசன்..
பரபரப்பு ஏற்படுத்தி இருக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தும் அதை எப்படி அவர் தவிர்க்கிறார் என்பதை கவனியுங்கள்
எச் ஐ வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் பெற்றால்தான் பிள்ளையா என்றொரு அமைப்பு செயல்பட்டு வருகிறது... கமல்ஹாசனும் , ஹலோ எஃப் எம்மும் இணைந்து இதை வழி நடத்துகிறார்கள்...
சிறுவர்களுக்கு எப்படி எய்ட்ஸ் வருகிறது என்றால் , அவர்களது பெற்றோர்கள் மூலம் பிறக்கும்போதே வந்து விடுகிறது...
அப்படி பாதிக்கப்பட்டோருடன் கமல் பேசுவதை கவனியுங்கள்.. அந்த பண்பை பாருங்கள்
--------------
வணக்கம்மா... என் பேரு கமல்ஹாசன்... உங்களைப்பத்தி சொல்லுங்க

அவரைப்பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றாலும் தன்னை அறிமுகம் செய்தபின்பே பேசும் நாகரிகம்...அது மட்டும் அல்லாமல் , ஒரு செலிப்ரிட்டியாக பேசாமல் , ஒரு நண்பன் போல அவர்கள் பிரச்சனையை , அவர் சொல்லாமல் விட்டதைக்கூட நினைவு படுத்தி பேசுகிறார்..

எப்ப கல்யாணம் ஆச்சு

எனக்கு பதினாறு வயசுலயே , முப்பது வயசு ஆளு ஒருவருடன் கல்யாணம்

ரொம்ப வயசு வித்தியாசமா இருக்கே..எப்படி ஒத்துக்கிட்டீங்க

என்னை யாரும் கேட்கல... கடமையை முடிச்சா போதும்னு ரெண்டாம் தாரமா பண்ணி வச்சுட்டாங்க..அவர் மூலமா எனக்கு இந்த நோய் வந்திருச்சு

ஓ..ரெண்டாம் தாரமா...அப்ப இன்னொரு பொண்ணும் பாதிக்கப்பட்டு இருப்பாரே...
-------------
அடுத்து சிறுவனுடன் பேசுகிறார்
வணக்கம்,... நான் யாருனு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்... உங்க பேரு என்னனு சொல்ல வேண்டாம்... அது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கலாம்...
அவர்கள் அடையாளத்தை சொல்லி பரபரப்பு ஏற்படுத்த விரும்பாத தன்மையை கவனிக்கவும்.. பரபரப்பு வேண்டாம் ..ஒரு எமோஷனல் டச் கொடுப்பதற்காகக்கூட பெயரை பயனபடுத்தலாகாது என நினைக்கிறாரே... அது பெரிய மனம்
------- 

பெற்றால்தான் பிள்ளையா எனும் இந்த அமைப்பு குறித்தி அறிந்து கொள்ள ஹலோ எஃப் எம்மை கேட்கவும்

ஊடக அறமும் இளையராஜா கோபமும்- முழு உண்மை



இளையராஜா இப்படி பேசுகிறார்.

இளைஞர்கள் இவ்வளவு தூரம் அர்ப்பணிப்பு உணர்வோடு இருப்பது பெருமை அளிக்கிறது.  நம்மிடம் இருக்கும் மனித நேயத்தை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் இறைவன் இப்படி ஒரு பிரச்ச்னையை நம் மீது ஏவி விட்டானோ என தோன்றுகிறது

( இப்படி சொல்லி விட்டு நிவாரண பணிகள் பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார் )

ஒரு நிருபர் சம்பந்தமே இல்லாமல் வேறொரு பிரச்சனை ( சிம்பு பாடல் ) குறித்து கேட்கிறார்...டென்ஷனான ராஜா , உனக்கு அறிவு இருக்கா,, நாம் எதற்காக இங்கு வந்திருக்கிறோம்.. இந்த நேரத்தில் இதையா கேட்பது என்கிறார்..


வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ போகும் இடத்தில் இப்படி கேட்டால் வேறு யாராவதாக இருந்தால் இன்னும் கடுமையாக நடந்து இருப்பார்கள்... ராஜா ஓரளவு பொறுமையாகத்தான் பேசுகிறார்..

அறிவு இருக்கா என கேட்டவுடன் , அந்த நிருபர் சாரி சொல்லி இருக்கலாம்.. ஆனால் அறிவு இல்லாததால்தான் சார் கேட்கிறேன் என தொடர்ந்து இடக்காக பேசுகிறார்...

அந்த நிருபரிடம் இதற்கு மேல் பேசி பயனில்லை என சற்று கூலாக அறிவு இல்லை என எந்த அறிவை வைத்து கண்டு பிடித்தாய் என கிண்டலாக கேட்கிறார் ராஜா...

இதை கட் எடிட் செய்து , அறிவு இருக்கா என ராஜா கேட்பதை மட்டும் ஒளிபரப்பு செய்து அவர் தேவையில்லாமல் கோபப்பட்டதுபோல பிரச்சாரம் செய்கின்றன ஊடகங்கள்..இதுதான் ஊடக அறம்போலும்...

வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற செல்லும்போது இப்படி ஒரு கேள்வி கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்??

மானுடவியல் நிபுணர் ஆகுங்கள் - மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு டிப்ஸ்- ரிச்சர்ட் கார்ல்சன்


மானுடவியல் என்பது மனிதனையும் அவன் ஆதிகால தோற்றத்தையும் ஆராயும் அறிவியலாகும்.  நாம் இப்போது பார்க்கப்போகும் டிப்சில் ஒரு வசதிக்காக இப்படி வரையறுத்துக்கொள்ளலாம்.  மானுடவியல் என்பது , எப்படி வாழ்வது எப்படி நடந்து கொள்வது என்பதை  மக்கள் எப்படி தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள் என்பதை விருப்பு வெறுப்பின்றி ஆர்வமாக கவனித்தலாகும்.

இப்படி செய்தால் நம் இரக்கமும் புரிந்துகொள்ளலும் மேலோங்கி அமைதி ஏற்படும். விருப்பு வெறுப்பின்றி ஒருவர் செயலை கவனிக்கும்போது அவர் செயல்கள் நம்மை கோபப்படுத்த வாய்ப்பில்லை.

 நமக்கு அன்னியமான காரியங்களை சிலர் செய்கையில், இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள் என அலுத்துக்கொள்ளாமல் , அட சுவையாக இருக்கிறதே. அவருக்கு இப்படி வாழ்வதுதான் பிடித்திருக்கிறதுபோல என சொல்லிக்கொள்ளுங்கள். கவனம் தேவை,,, ஆர்வமாக கவனிப்பது வேறு. உன்னிப்பாக கவனித்து விமர்சிப்பது வேறு.

ஒரு முறை நானும் என் ஆறு வயது மகளும் வணிக வளாகம்  போய் இருந்தோம். அப்போது சில இளைஞர்கள் தம் முடியை பல  ஆரஞ்சு நிறமாக மாற்றிக்கொண்டு , உடல் முழுதும் பச்சை குத்திக்கொண்டு எங்களை கடந்து சென்றனர், “ அப்பா ,, யார் இவர்கள் ..ஏன் இப்படி இருக்கிறார்கள்..ஏதேனும் மாறு வேடப்போட்டியா என கேட்டாள் மகள்..   இவர்கள் செய்வது அநாகரிகம்.. ஆடை ஒழுக்கம் முக்கியம் என சொல்லி இருப்பேன். ஆனால் இப்போது மானுடவியல் நிபுணன் ஆயிற்றே, எனவே இப்படி சொன்னேன்.. ஏன் இப்படி இருக்கிறார்கள் என தெரியவில்லை.. ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பது சுவராஸ்யமாக இருக்கிறது அல்லவா என்றேன்

ஆமா.. ஆனா எனக்கு என் இயற்கையான முடிதான் பிடித்து இருக்கிறது என்றாள் அவள். மற்றவர்களை பற்றி விவாதித்து எங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்காமல் அத்துடன் அதை விட்டு விட்டு எங்கள் நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிட்டோம்.

மற்றவர் செயலை ஆர்வமாக கவனிப்பது என்பது அவர்கள் செயலை ஏற்கிறோம் என்பது அல்ல,  முடியை விரித்துபோட்டுக்கொண்டு , கலர் அடித்துக்கொண்டு செல்வதை நான் செய்ய மாட்டேன். மற்றவர்களுக்கு சிபாரிசு செய்யவும் மாட்டேன். ஆனால் அதை விமர்சிக்கவும் மாட்டேன்.

மற்றவர்கள் தவறுகளை விமர்சிப்பது என்பது நம் சக்தியை வீணடிக்கும். நம் இலக்கை அடைவதை தடை செய்யும் என்பதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்

Saturday, December 19, 2015

ஆகமம் - அர்ச்சகர் - அரசியல்வாதிகள் . உண்மையும் தீர்வும்


ஆகம விதிகளை பைபாஸ் செய்து விட்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் கொண்டு வந்தபோதே இது கோர்ட்டில் நிற்காது என்பது பலருக்கும் - குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு -  புரிந்துதான் இருந்தது.. காரணம் ஆகம விதிகளில் கை வைக்க நீதிமன்றம் விரும்பாது.. அது மத நம்பிக்கையில் குறுக்கிடுவதாகி விடும். ஆக , இது கோர்ட்டில் நிற்காது என தெரிந்து கொண்டு சும்மா புரட்சியாளர் அடையாளம் பெறும் பொருட்டு கொண்டு வரப்பட்ட சட்டம் இது..

உண்மையிலேயே ஒடுக்கப்ப்ட்டோர் மீது அக்கறை இருந்தால் , இன்னும் எத்தனையோ கிராமங்களில் கஷ்டப்பட்டு வரும் அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற ஏதேனும் செய்திருக்கலாமே...

சில ஆண்டுகள் முன்பு ,  அரசு பேருந்துக்கு ஒருக்கப்ப்ட்ட மக்களுக்கு போராடிய ஒரு தலைவர் பெயர் வைக்கப்பட்டது.. அந்த பேருந்தில் பயணம் செய்ய மாட்டோம் என அழிச்சாட்டியம் செய்த ஆதிக்கசாதியினருக்கு பயந்து , இனிமேல் தலைவர்கள் பெயரே வைக்கப்படாது என பம்மியது அரசு..

அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் கொண்டு வந்த இந்த சட்டம் ஆழமான சிந்தனை ஏதும் இல்லாத ஒன்று என்பது தெளிவு...  நலிந்த மக்களுக்கு ஆதரவாக செய்வதுபோல பம்மாத்து காட்டும் வேலைதான் இது..

இது ஒரு புறம்,

பிராமணர்கள் மட்டும்தான் அர்ச்ச்கர் ஆகலாம்போல என சிலர் நம்ப வைக்கப்பட்டு இருக்கிறார்கள்..

இது தவறு..

பிராமணர்கள் யாரும் அர்ச்சகர் ஆக முடியாது .. அது ஆகம விதிப்படி தவறு..

சிவாச்சாரியர் என்ற பிரிவினர்தான் சிவன் ஆலயங்களில் அர்ச்சகர் ஆக முடியும்.. ஆனால் இவர்களுமேகூட விஷ்ணு கோயில்களில் அர்ச்சகர் ஆக முடியாது..  அங்கு பட்டாச்சார்களுக்கு அந்த உரிமை உண்டு,..சிதம்பரம் நடராஜன் கோயிலிலில்  தீட்சிதர்களுக்கு அந்த உரிமையும் மேல்மலையனூர் ஆலயத்தில் பர்வத ராஜ குலத்தினர் அர்ச்சகர் ஆகலாம். வேறு யாரும் ஆக முடியாது.. பிராமணர்களுக்கு என சிறப்பு சலுகை ஏதும் இல்லை.

அப்படி என்றால் சிவாச்சார்யர்கள்தான் பிராமணர்களை விட உயர்ந்தவர்களா என்றால் இல்லை... பிராமணர்கள் யாரும் இவர்களுக்கு பெண் கொடுப்பதும் இல்லை. பெண் எடுப்பதும் இல்லை.. எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை...


ஆகம விதிகளில் கை வைக்க முடியாது. சரி.. வேறு என்ன செய்யலாம்...

அந்த ஆலயங்களை விட பிரமாண்டமாக அரசு பெரிய ஆலய்ங்கள் கட்டலாம்... அதில் அர்ச்சகர்கள் நுழைவுத்தேர்வு மூலம் , மதிப்பெண் அடிப்படையில்  நியமிக்க்கப்படுவார்கள் என அறிவிக்கலாம்... சாதி என்பது இதில் கணக்கில் கொள்ளப்படாது .


Friday, December 18, 2015

சில உன்னத கவிதைகள் - சீன, ஜப்பான் , இந்திய தத்துவ பார்வைகள்

1 சீனா

மனம் இல்லை   புத்தர் இல்லை

இருத்தல் இல்லை

சிதறிக்கிடப்பவை சூனியத்தி எலும்புகள்

இந்த பொன் சிங்கம்

ஏன் தேடி செல்ல வேண்டும்

அந்த நரிக் குகைக்கு



நீர் பறவை

வருகிறது செல்கிறது

ஆனால் விட்டுச்செல்வதில்லை

ஒரு காலடி சுவடி

அதற்கு தேவையும் இல்லை

ஒரு வழி காட்டி


72 ஆண்டுகள் அடக்கி வைத்திருந்தேன்

அந்த எருதை மிக கடுமையாக

இன்று

மீண்டும் பிளம் மலர் பூத்திருக்க

பனிப்பொழிவில் அலையவிட்டேன்

அதை

ஜப்பான்
----------------------------------------------------------------------------------------------

 இரவில் திருடசெல்பவன்

நிலவொளியில் சற்று நிற்கிறான்

ஹைக்கூ பாட

--------------------------------------------------------------------------
இந்தியா

எனக்கு ஞாபகமுள்ள பௌர்ணமிகள் நான்கு
ஒன்று
எதிர்விட்டு அம்மாளின்
துஷ்டிக்கு
சுடுகாடு சென்று
திரும்புகையில் பார்த்தது.
நள்ளிரவில்
பஸ் கிடைக்காமல்
லாரி டாப்பில்
பிரயாணம் செய்கையில்
பிரகாசித்தது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் வாசலில்
அரசு அதிகாரி ஒருவரைக் காண
காத்திருக்கையில் கண்டது.
இண்டு இடுக்கு
மாடிக் குடித்தனத்தில்
மின்வெட்டு இருள்வேளையில்
ஜன்னல் வழியே
வந்து விழுந்தது.
*- தேவதச்சன்

Thursday, December 17, 2015

கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் - என் பார்வையில்


கிளாசிக்  நாவல்கள் படிப்பதில் எப்பவுமே ஒரு மனத்தடை இருக்கும்.  பாதி படிக்கும்போது போரடித்தால் , நிறுத்தினால் அதுவரை படித்த நேரம் வீணாகி விடுமே என முழுதையும் படித்து , இன்னும் நேரம் வீணாகும்.

அதனால்தான் கரிச்சான் குஞ்சு படிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் என சாருவே சொன்னபோதிலும்  நான் படிக்கவில்லை...

ஒரு மழை நாள் இரவில் தற்செயலாக பசித்த மானிடம் நாவலை எடுத்தேன்.. சில வரிகளிலேயே நாவல் என்னை உள்ளே இழுத்துக்கொண்டு விட்டது. அந்த எழுத்தின் வசீகர தன்மை என்னை வென்று விட்டது..

உடல் பசி , ஆன்மிக பசி , அறிவு பசி என பசிகள் பல வகை , இதில் ஏதோ ஒரு பசி எல்லோருக்கும் இருக்கும். ஒரு பசி தீர்ந்தவுடன் அடுத்த பசி ஆரம்பிக்கும் என்றுதான் இன்றைய மனோதத்துவம் சொல்கிறது. நம் தத்துவ மரபும் இதைத்தான் சொல்கிறது..

பசிக்கு சாப்பிடுவது பசியை தீர்க்கிறதா அல்லது பசியை அதிகரிக்கிறதா அல்லது சாப்பிடுவது என்ற செயல் , பசி எனும் உணர்வை மழுங்கடிக்கும் ஒரு தீமையாக செயல்படுகிறதா என்பது நம் பலருக்கும் இருக்கும் குழப்பம்.


இதை கணேசன் , கிட்டா என்ற இரு பாத்திரங்கள் மூலம் அழகாக அலசுகிறது நாவல்.

கொஞ்சம்கூட போரடிக்காத நடை என்பது இந்த நாவலின் சிறப்பு. பின்னால் வரபோகும் முக்கிய காட்சிகளுக்கான குறிப்புகளை , ஆரம்பத்திலேயே ஆங்காங்கு தூவிச்செல்லும்  நடை திறமையான திரைக்கதை போல இருக்கிறது..

உதாரணமாக கணேசன் தன் கைப்பையை கட்டி அணைத்தவாறு உறங்குகிறான். அப்போது அவனுக்கு அந்த கைப்பை என்னவாக தோன்றுகிறது என்பதன் முக்கியத்துவம் அப்போது நமக்கு புரிவதில்லை. பிற்பாடு அது புரியும்போது அட என ரசிக்க வைக்கிறது..

கணேசன் என்பவன் அழகானவன் , சின்ன வயதில் இருந்தே பலராலும் விரும்பப்படுபவன். எல்லா சுகங்களையும் அனுபவித்து விட்டு பிற்காலத்தில் நோயால் பாதிக்கப்பட்டு அனைவராலும் அவமானத்தப்படும் அவல நிலைக்கு வீழ்கிறான். ஆனால் அவன் மனதில்  நிறைவு இருக்கிறது..


கிட்டா என்பவன் சின்ன வயதில் தோல்விகளை மட்டுமே சந்தித்த்தவன். பிற்காலத்தில் செல்வந்தன் ஆகிறான். ஆனால் அவன் மனதில் தான் ஒரு தோல்வியாளன் என்றே தோன்றுகிறது. இப்படி சுவையான இரு துருவங்கள்

இந்த துருவங்களும் நாவலின் ஒரு கட்டத்தில் இணைவது ஒரு சுவாரஸ்யம்.

இது மட்டும் அல்ல . நாவலில் இப்படிப்பட்ட சுவையான நிகழ்ச்சிகள் ஏராளம்.

கிட்டாவின் அண்ணனை ஒரு பைத்தியக்காரன் என நினைக்கும்படி காட்சி அமைப்புகள் இருக்கும். ஆனால் அந்த அண்ணனால் கிட்டாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை நிகழ்வது வாழ்வியல் அபத்தங்களில் ஒன்று.


வீடு தேடி அலையும் கணேசனுக்கு ஒரு வீடு கிடைக்கிறது. அந்த வீட்டில் இருப்பவர்கள் இவனால் பெரும் பலன் அடைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையே மாறி விடுகிறது. அந்த நன்றியை அவர்களால் மறக்க முடியவில்லை. ஆனால் அவனை வீட்டில் வைத்திருப்பதிலும் சிக்கல். ஆனால் வீட்டை விட்டு துரத்தும் அளவுக்கு அவர்கள் தீயவர்கள் அல்லர். இப்படி ஒரு முடிச்சு..

காமமே வாழ்க்கை என வாழ்ந்த கணேசனை அனைவரும் துரத்தும் நிலையில் சில இளம்பெண்கள் சகோதர வாஞ்சையுடன் பாதுகாக்கிறார்கள்.. அன்பு எனும் உன்னதத்துடன் வாழ்பவர்களும் உண்டு என அறிவதுதான் கணேசன் வாழ்வில் உச்சம் என நாம் நினைக்கும்போது அவன் அவர்களிடம் இருந்து பிரிகிறான். இப்படி ஒரு சுவையான முரண்.

ஏதோ ஒரு இலக்குடன் கிளம்புவன் ஒரு கட்டத்தில் எந்த இலக்குமே தேவை இல்லை என முடிவெடுக்கும்போது அவன் அடுத்து செல்ல வேண்டிய இடத்துக்கு எந்த சாலையிலும் செல்ல முடியும் என்ற நிலை ஏற்படும் மாற்றம்  ஜென் நிலை அளிக்கிறது..

கிட்டாவை எப்படியாவது ஓர் ஆளாக உருவாக்கி விட வேண்டும் என்ற தாயின் பரிதவிப்பு , ஊர் பெரிய மனிதரின் சின்னத்தனம் என எந்த ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கப்பட்டுள்ளது



அனாதரவாக ஊருக்கு வரும் கணேசனை ஒரு குருவாக நினைத்து உதவி செய்கிறார் பசிபதி எனும் காவலர். ஆனால் ஒரு வகையில் பசுபதியும் கணேசனுக்கு குருவாகி விடுகிறார்.

கணேசனை பயன்படுத்தி விட்டு பிறகு தூக்கி எறியும் பெண் டாக்டர் , அவனை மணந்து கொள்ளும் பெண் , பிச்சை எடுக்கும் பெண் வாழ்வில் கணேசன் இணைவது என ரசித்துக்கொண்டே இருக்கலாம்..

அந்த பிச்சைக்காரியிடன் கணேசன் சினேகமாக பேசுவதை உணர்ந்த அவள் சின்னஞ்சிறு மகன் , கணேசன் முன் ஒரு துணியை விரித்து சில காசுகளை போட்டு வைக்கிறான். இதை பார்த்து அவன் பிச்சை எடுக்கிறான் என உணர்ந்து மக்கள் காசு போடட்டுமே என்ற அந்த தொழில் அறிவு கணேசனை கவர்கிறது..

இந்த இடம் நம்மை கவர்கிறது.. பிற்காலத்தில் அந்த சிறுவனை படிக்க வைத்து பெரிய ஆளாக்கி விடுகிறான் கணேசன். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் இந்த வித்தியாசமான காட்சியை மறக்க முடியாது..

அதேபோல உதாவக்கரையாக இருந்த கிட்டாவின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக டிராக் மாறுவதும் அழகு, அவன் சந்திக்கும் முதிய்வர் - மனைவி - சீடன் சம்பவம் ஒரு ஹைக்கூ கதை..

அழகான உடல் இருந்தது. அதை அனுபவித்தோம். இப்போது அது இல்லை.. இதையும் அனுபவிக்கிறோம்.. ஆனால் அதை அனுபவித்த மனம் மட்டும் அழியவில்லை, ஒருவேளை இதுவும் அழியுமோ... அழிந்தால் அதையும் அனுபவித்துப்பார்ப்போமே என்ற கணேசனின் பார்வை நமக்கும் ஏற்படுவதே நாவலின் வெற்றி என்பேன்..


கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல்


Tuesday, December 15, 2015

ராமராஜனும் ஜெய்சங்கரும் - வெள்ளம் - இருட்டு அனுபவம்



இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதாக பலர் நினைக்கிறார்கள்... மின்சாரம் , நெட் , டிவி என சிலருக்கு கிடைப்பதால் அதை மட்டும் வைத்துக்கொண்டு எல்லோரும் சுகம் என நினைக்கிறார்கள்.. ஆனால் இதை பதிவிடும் 15.12.2015  நிலவரப்படி இன்னமும்கூட நீரில் மூழ்கி இருக்கும் இல்லங்கள் ஏராளம் , தண்ணீர் தொடர்ந்து இறைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது...சாலைகள் சீரடையாத சூழலும் பல இடங்களில் உள்ளது

-----------------------------------------------------

என்னதான் கடைகளில் காய்கறி வாங்கி சாப்பிட்டாலும் நாமே நம் வீட்டில் காய்கறிகளை பயிரிட்டு உண்டால் அதன் சுவையே தனிதான்.. அதேபோல நம் வாகனங்களை சர்வீஸ் செய்ய விடுவதை விட , நாமே அதை கழுவி , பாகங்களை பிரித்து , உயவுப்பொருட்கள் தேவைப்படும் இடங்களில் அதை சேர்த்து மீண்டும் சரியாக பொருத்தி சரியாக வேலை செய்ய வைத்தால் அப்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான்.. வாகனம் என்பது சைக்கிளாக இருக்கலாம். அல்லது காராக இருக்கலாம்.  எதுவாக இருப்பினும் அனுபவம் ஒன்றுதான்

----------------------------

மின்சாரம் இல்லாத சென்னை ஒரு வித்தியாசமான அனுபவம் தந்தது. எங்கும் வெளிச்சமே இல்லை. கும்மிருட்டு , மையிருட்டு என்றெல்லாம் சொல்வார்களே...அதை அனுபவிக்க முடிந்தது, கண் மூடினால் எப்படி இருக்குமோ அதேபோலவே கண்ணை மூடினாலும் இருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம்.  நெட் , டிவி , மின்விளக்கு வெளிச்சம் இல்லாத சுகத்தை அனுபவித்தபின் மீண்டும் இவற்றை பயன்படுத்த மனம் வரவில்லை... தேவைப்படும் குறைந்த பட்ச மின்சாரம் , குறைந்தபட்ச நெட் , குறைந்தபட்ச டிவி என்பது எனக்கு பழக்கமாகி விட்டது

---------------------------------------------


அதுவரை அக்கம்பக்கத்தினர் யாரென்றே தெரியாமல் இருந்தவர்கள் , மின்சாரம் இல்லாமல் டிவி பார்க்க முடியாமல் , மொட்டை மாடி மீட்டிங் நடத்தி டொனால்ட் டிரம்ப் முதல் செம்பரம்பாக்கம் ஏரி வரை சகல விஷ்யங்களையும் அலசினர். என்னவோ ரொம்ப நாள் பழகிய மாதிரி கொஞ்சி குலவினர். மீண்டும் மின்சாரம் வந்ததும் மீண்டும் வீட்டிலேயே பம்ம ஆரம்பித்து விட்டனர்..

------------------------------------------------------


சில படங்களை ரசித்து பார்த்திருப்போம். நாயகர்களை போற்றி இருப்போம். அதே நாயகர்கள் மார்க்கெட் போன பின்பு சாதாரண படங்களில் நடிக்கையில் சற்று வருத்தமாக இருக்கும். உதாரணமாக ஜேம்ஸ் பாண்ட் பாணி படங்களில் நடித்த ஜெய்சங்கர் பிற்காலத்தில் வில்லனாக நடித்து சின்ன சின்ன நடிகர்களிடம் அடி வாங்கியதுபோல நடித்தது அவரது ரசிகர்களுக்கு வருத்தமாகவே இருந்தது...

ஒரு காலத்தில் ரஜினி , கமலுக்கே டஃப் ஃபைட் கொடுத்த  ராமராஜன் , இப்படி சாதாரண வேடங்களில் நடிக்க மாட்டேன் என சொல்லி இருப்பது மகிழ்ச்சி அளித்தது . ராமராஜன் என்றால் கரகாட்டக்காரன் நினைவு வந்தால்போதும்.


----------------------------------------------

சில எளிய மருத்துவ குறிப்புகள்

படித்தது...பகிர்கிறேன்... பிடித்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்..

தீப்புண்

வெங்காய சாறு + கால்பங்கு உப்பு கலவையை புண் மீது தடவிவர வேண்டும்

குளிர்காய்ச்சல்

1 வெங்காயம் + 9மிளகாய்கள் ..வாயில் போட்டு மென்று தின்ன வேண்டும்

பல்வலி 

வெங்காயம் + கிராம்பு சாறு...

காதில் எறும்பு அல்லது பூச்சி போய் விட்டால்

உப்பு கரைசலை காதில் ஊற்ற வேண்டும்


நகச்சுற்று

உப்பு , வெங்காயம் , சுடுசோறு .. நன்கு அரைத்து விரலில் கட்ட வேண்டும்



Saturday, December 12, 2015

சென்னை இயற்கை பேரிடர் - சில ஹீரோக்கள் , சில ஜீரோக்கள்


ஒரு பிரச்சனையின்போதுதான் மனிதனின் இயல்புத்தன்மையை தெரிந்து கொள்ள முடியும். சென்னையில் பெய்த பெருமழை , வெள்ளத்தின் போது பலர்  ஹீரோக்களாக உருவெடுத்தனர். சிலர் ஜீரோவானார்கள்..
------------------------------------------------------------
ஹீரோக்கள்

1 பெரு மழையன்று மின்சாரம் இல்லை, செல்போன்கள் இயங்கவில்லை. ஆனாலும் நெட் வேலை செய்தது.  முக நூல் , ட்விட்டர் , வாட்சப் போன்றவற்றை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி சேதங்களை வெளி உலகுக்கு தெரியப்படுத்தி , உதவிகளை ஒருங்கிணைத்தவவர்களின் பணி என்றென்றும் நி னைவுகூரப்படும்

2 இலவச ஆட்டோக்கள் ஓட்டினர் சிலர். சிலர் அந்த வெள்ளத்திலும் ஷேர் ஆட்டோ சேவை வழங்கினர்.. ஹேட்ஸ் ஆஃப்

3 பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் இணைய வசதி இல்லாதோர். இவர்கள் வெளிஉலகை தொடர்பு கொண்டு உதவி பெற வானொலி நிலையங்கள் உதவின. சில வானொலிகள் நிவாரணப்பணிகளில் நேரடியாக பங்கேற்றன..

4  இணையம் ,  வானொலி என எதையும் பயன்படுத்தாமல் , வெளியே தெரியாமல் பெரும் உதவிகளை வழங்கினர் பலர்

5அவ்வளவு மழையிலும் மார்க்கெட் சென்று காய்கறி  வாங்கி வந்து , நியாயமான விலைக்கு விற்ற கடைக்காரர்கள் மக்கள் மனதில் இடம்பிடித்தனர்

6 அயராது பணியாற்றிய பேருந்து ஓட்டுனர்கள் ,  நடத்துனர்களை மறக்க முடியாது

7 பால் , காய்கறிகள் வாங்க செல்பவர்கள் தமக்கு மட்டும் வாங்காமல் அண்டை வீட்டினருக்கும் வாங்கி வந்தனர்

8 வந்து சேரும் நிவாரண பொருட்களை வினியோகிக்க உதவிய தன்னார்வலர்கள் சேவை குறிப்பிடத்தக்கது

9 சாலைகளில் பள்ளங்கள் இருப்பதை எச்சரித்து வாகனங்களை வழி நடத்துவதை அந்தந்த பகுதி இளைஞர்கள் முனைப்புடன் செய்தனர்

10  சாஅலைகளில் எச்சரிக்கை அறிவிப்புகளை அந்த பகுது மக்களே செய்தனர்....   அதிகாரபூர்வமற்ற இந்த எச்சரிக்கை பலகைகள் பேருதவியாக இருந்தன

-----------------------------------------

ஜீரோக்கள் 

1 . சின்னசின்ன உதவிகள் கூட பெரும் பலனை விளைவிக்கும் சூழலிலும் ஒரு சிலர் ஃபேஸ்புக்கில் எழுதுவதில் மட்டுமே ஆர்வமாக இருந்தனர்.. எரிச்சலூட்டிய போக்கு

2 ஏரி உடைவதை செல்ஃபீ எடுக்க திரண்ட கூட்டம் மிகப்பெரிய இடைஞ்சலாக இருந்தது

3 இந்த அவலத்தையும் அரசியலாக்க முயன்ற சில ஊடகங்கள்




Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா