Wednesday, July 31, 2013

எழுத்து தன்னைத்தானே எழுதிக்கொள்ளுமா? - கவிஞர் றியாஸ் குரானாவுடன் கவிதை சார்ந்த உரையாடல்

நானும் நிர்மலும் சும்மாவே பேச்சு பேச்சு என பேசிக்கொண்டு இருப்போம். ஏதாவது புத்தகம் பற்றி என்றால் கேட்கவே வேண்டாம்.


நிர்மல் சென்னை வந்தபோது அவர் தேடிப்பிடித்து வாங்கிய புத்தகங்களில் ஒன்று கவிஞர் றியாஸ் குரானாவின் ”நாவல் ஒன்றின் மூன்றாவது பதிப்பு "
எனும் கவிதை நூல்.

இந்த நூல் குறித்தும் , கவிதைகள் குறித்தும் றியாசிடம் பேசினோம். அதில் இருந்து சில துளிகள்.


******************************************************************

ஆபத்தான ஒரு உலகினுள், பதற்றமின்றி நுழைவதற்கு உதவும் வழிகாட்டிதான் எனது கவிதைகள்.
கவிதை புரிந்துகொள்ளும் ஒரு அம்சமல்ல. புரிந்துகொள்ள முயற்சிப்பதை சிக்கலாக்குவது.
கற்பனையின் விதிகள் எப்போதும் புரிந்துகொள்ளுவதற்கு எதிரானது. ஆனால், ஒருவகை புரிந்துவிட்ட நிலையை உருவாக்குபவை. கடைசியில் எதுவும் துல்லியமாக பிடிபடுவதிலல்லை. இதைச் செய்யும் அனைத்துப் பிரதிகளும் கவிதையின் அனுபவ வெளிக்கு நெருக்கமானதே.


மிகத் துல்லியமாக அர்த்தத்தை ஒரு பிரதி வெளிப்படுத்திவிட்டால் அதன் வேலை அத்தோடு முடிவடைந்துவிடுகிறது. அதற்கு மேல் அதன் சுவரஷ்யம் வற்றிவிடுகிறது.
அது ஒரு திட்டமிட்ட கற்பனைச் செயல்.
கவிதை பிறப்பதில்லை. சிந்திக்கிறோம். அவ்வளவுதான்.



கற்பனைச் செயல் என்பது திட்டமிட்டதுதான். மொழியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதானே. நாம் அதில்தான் சிந்திக்கிறோம். அப்போது, தானாகவே எப்படி வரும்.
நமது ஆன்மீக புரிதல்கள், தங்களுக்கான அறிவு எங்கோ இருந்து வந்ததாக சொல்லிக்கொண்டதன் தொடர்ச்சியே இது.
அதை, இலக்கியத்திற்கும் பொருத்திவிட்டார்கள்.


கவிதை தன்னை தானே எழுதிக்கொண்டது...எழுத்து தன்னை தானே எழுதியது என்கிறார்கள்... நீங்களோ திட்டமிட்டு எழுதுவ்தாக சொல்கிறீர்களே

ஆன்மீக மனநிலையின் பிடிவாதமான தாக்கத்திலிருந்து ஒருவிதமான தளர்ந்த நிலையை இன்னும் நாம் நெருங்கிவிடவில்லை. அதனால்தான், இன்னும் எங்கிருந்தோ உதிப்பதாக கருதுகிறோம்.


திட்டமிட்டு எழுதுவது craftmanship என்றும் spontaneous ஆக பிறப்பதுதான் படைப்பாற்றல் என்றும் சிலர் சொல்கிறார்களே


திட்டமிடல் என்பது ஆரம்பிப்பதற்கான ஒரு விசயம்தான். அதைத் தொடர்ந்து உருவாகும் கற்பனைகள் எழுத்தை தொடர உதவும். ஒன்றிலிருந்து மற்றயதற்கு தாவிச் செல்ல மிக வேகமாக சிந்தனை திட்டமிடுகிறது. அவை அனைத்தையும் இணைத்தே கற்பனைச் செயல் என்கிறோம். இந்தக் கற்பனைச் செயல் என்பதற்கு நிகரான சொல்லாக தன்னைத்தானே எழுதியது என்று பொருள் கொண்டால் அதை ஏற்க முடியும்.
தன்னைத்தானே கடவுள் உருவாக்கிக்கொண்டார் என்பதுபோன்ற, பின்தங்கிய ஒரு கருத்துத்தான் அது.


கவிதைதான் கலைவடிவங்களில் மிக உயர்ந்தது என்ற தேவதேவன் கருத்து குறித்து என்ன சொல்கிறீர்கள்

ஹா..ஹா... மிக முக்கியமான ஒரு அறிவிப்பாக இதை கருத பலர் இருக்கக்கூடும். அவர்களின் நம்பிக்கையை குறைகூறத் தேவையில்லை. ஆயினும், ஒன்றை யோசித்துப்பாருங்கள். ஒன்றைவிட மற்றையது உயர்ந்தது என கருதும் தேவையும், அதைக் கடைப்பிடிக்கும் அவசியமும் வரலாற்றில் யாரிடம் இருந்து வந்திருக்கிறது? வன்முறையை மனதார ஏற்றுக்கொள்பவர்களிடம்தான். கலை மாத்திரமல்ல மனிதச் செயல்கள் வன்முறை நீக்கத்தைப் பற்றி அக்கறைகொள்ள வேண்டும் எனக் கருதுபவன் நான். எனக்கு எதையும் உயர்ந்தது எனச் சொல்லவோ, அதைக் கடைப்பிடிக்கவோ அவசியம் ஏதுமில்லை. கலை மாத்திரமல்ல, சூ போவதும் முக்கியமான ஒன்றுதான். கலைக்கு கொடுக்கும் அனைத்து இடங்களையும் இதற்கும் வழங்க விரும்புகிறேன். ஒரு அழைக்கும் வசதிகருதியே கலை என்ற பெயரிடலையும் பார்க்கிறேன்.
இப்படிச் சொல்லுவதினுாடாக தேவதேவனின் கவிதைகளை மறுப்பதாக ஆகாது. அவரின் சிந்தனையின் பெரும்பகுதி வன்முறையாக இருக்க முடியாது. அதுகுறித்த புரிதல் இல்லாது இப்படியான ஒரு முக்கியத்துவத்தை கவிதைக்கு அவர் வழங்கியிருக்கலாம். அதுதவிர தான் செயலாற்றும் ஒன்று என்பதாலும் இப்படிச் சொல்லியிருக்கலாம்.





மிக இலகுவானதுதான் எனது கவிதைகள். நுழையுங்கள். உள்ளே வழிகாட்டிகளும் அதற்கான கையேடுகளும் இல்லை.
விரும்பியபடி பயணிக்கலாம்.



கவிதை என்பது திட்டமிட்ட கற்பனைச் செயல் என்பதை அறிவிக்கிறது. ஆனால், அதன் உள்ளக செயற்பாடுகள் முற்றிலும் வேறு ஒன்றை பேச முற்படுவதாக அமைந்தும் இருக்கின்றன.



இங்கு காலைத் தேனீர் என்று ஒரு கவிதை இருக்கிறது பாருங்கள்.


காலாவதியாகிப்போன நாளொன்றின்
காலைப் பொழுதிற்காக
காத்திருக்கிறேன்.

கடந்தது மீள வராது

ஆயினும்
நான் சந்தித்தேயாக வேண்டும்

அந்திப் பொழுதிலிருந்து
பின்நோக்கி நடக்கிறேன்

அல்லது சிந்திக்கிறேன்

கொஞ்ச நேரம்
எதுவும் தெரியவேயில்லை

அது எனது பகல் தூக்கம்

பின்னோக்கி வருவதுபோல்
பாவனை செய்தபோதும்
திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்

;காரணம்

கனவில் அவள் தந்த கடிதத்தை
வாங்கிச் செல்கிறாள்

அதுபோல இருந்தது

அதுதான் நிகழ்ந்தது

பின்னோக்கி வரும்போது
தந்தது வாங்கியதாக மாறிவிடும் அல்லவா

மன்னியுங்கள்
மீண்டும் சிந்திக்கலாம்

உச்சி வெயில்

சூட்டை அதிகரிக்கும்
ஆடைகளை உடுத்துகிறேன்

நிலத்தினுள் இறங்கிவிட்ட,
நான் குளித்த நீரையெல்லாம்
கிணற்றுக்குள் ஊற்றுகிறேன்

தலைமயிர்களுக்குள் தங்கிய ஈரமும்
வடித்தெடுக்கப்படுகிறது

சந்தையிலிருந்த மிகவேகமாக
சைக்கிளை பின்நோக்கிச் செலுத்துகிறேன்

எல்லோரும் என்னை அதிசயமாகப் பார்த்தபடி
முன்னோக்கிச் சென்றுகொன்டிருக்கின்றனர்

ஏனெனில், அவர்கள்
கடந்துபோன காலைப்பொழுதை சந்திக்கும்
முயற்ச்சியில் இறங்கவில்லை

முதல்முறை சந்தைக்கு போகும்போது
நானும் அவனும்
அருகருகே பேசிக்கொண்டு போனோம்

இப்போது நாங்கள் தனியே பேசிக்கொண்டு
அவன் முன்னோக்கியும்
நான் பின்நோக்கியும் விரைகிறோம்

சரியாக வீட்டில் வந்து நின்றது

பறவைகளின் ஒலிகள்
வெளியில் பரபரப்பாக இருக்கின்றன

தற்போது காலைப்பொழுது

இனி முன்னோக்கிப் பயணிக்கலாம்

ஆவிபறக்க
தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறேன்

இந்தத் தேனீரைத்
தவறவிட்டதனால்,

ஒரு பகற்பொழுதை
முன்னோக்கியும் பின்னோக்கியும்
கடந்துசெல்ல வேண்டிவந்தது

இரண்டுமுறை.




ஆமாம், வாக்கியங்களை ஒருங்கிணைத்திருக்கிறேன். அதைப் படிக்கும்போது, படிப்பவர் கவிதைக்கான அனுபவத்தை கண்டுகொள்கிறார். அதைக்குறித்து சொல்ல முடிவதில்லை. ஏனெனில், வரிகளைச் சொல்லி எனது கவிதைகளை இன்னொருவருக்கு எடுத்துச் செல்ல முடியாது.
முற்றிலும் ஒரு கவிதைச் சம்பவத்தை கதையாக சொல்லுவதினுாடாகவே மற்றவருக்கு கடத்தலாம்.
அதனால்தான், கவிதை இருப்பதில்லை என்றேன்.

இந்த காலை தேனிர். வாசித்து கொண்டிருக்கிறேன். அருமையாக இருக்கிறது. டைம் ட்ராவல், reversing time.

இந்தக் கவிதையைத் திட்டமிட அதிக நாட்களை செலவிட்டேன்.


தேனீர் ஒரு - Now என எடுத்துகொள்ளலாமா
present moment- அதை தேனீர் என எடுத்துகொள்ளலாமா. அப்படித்தான் எனக்கு தோனுகிறது.



அப்படி எடுத்துக்கொண்டால், அதன் எல்லைகள் விரிவானது.


சாதாரண வாசகர்களும் இக்கவிதையை எதிர் கொள்ளுவர்.
இப்படி.
காலையிலட தேனீரை அருந்து மறந்துவிட்டதை, மலை நேரத்தில் நினைவுக்கு வருகிறது. தவறவிட்டதை அருந்தியே ஆகவேண்டும் என மனம் விரும்புகிறது.அதற்கு தெரியும் வழி என்னவென்றால், மாலையிலிருந்து திரும்பி நடந்துவந்து காலையை சந்திப்பதுதான்.
காலம் என்பது, மூன்று பிரிவுகளாக இல்லை. அது now தான் ஆக, ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு செல்லுவது கற்பனைரீதியான சாகசம் அல்ல. அது எதிர்கொள்ளும் புனைவுகளின் சவால்கள் ஒன்றுமே இல்லை. கடந்துபோன சம்பவங்களை பின்னோக்கி வரும்போது எப்படி எதிர்கொள்வது என்பதை ஓரளவு உணர்த்தக்கூடிய சம்பவங்களை உருவாக்குவதுதான்.




கவிதையிருக்கும் நான் மாத்திரமே திரும்பி வருவதாகவும், மற்றைய சம்பவங்கள் அப்படி நடக்காதமாதிரியும் காட்டுவதுதான் எனது கற்பனை உழைப்பு. அதுவே, ஒரு புதிய வெளியை தந்துவிடுவதுபோன்று தோற்றமளிக்கிறது. இதை கவிதையில் செய்திருப்பதால் கவர்ச்சியாக இருக்கிறது அவ்வளவுதான்.



, சாத்தியமின்மையை உணர வைத்தபடியே கற்பனையில் மிதக்க வைப்பதை ரசித்தேன்

ஆமாம். வாசிக்கும்போது மாத்திரமே கவிதையை காணமுடியும். மற்ற நேரங்களில் அது கவிதையாக பின்தொடராது.


அப்போ the now இந்த ”கவிதை” அல்லது செய்யும் அந்த செயல்.




ஆமாம். the now என்பதை கலைத்துப் பார்க்கவும் முடிகிற தருணங்கள் உண்டு. இப்போது, என்பது பல்லாயிரம் நுண்கணங்களால் ஆனது. மறுதலையாகப் பார்த்தால், பல்லாயிரம் நுண்கணங்களைக் கொண்டே இப்போது என்பது இருக்கிறது.
மிலிந்த அரசனின் ரதம்
அதுபோல,பிளட்டோவின் ரதம் குறித்த உரையாடல்.
கதாஉபநிடதம் கூறும் ரதம்.
இவைகள் இந்த இப்போது என்பதை அதிகம் விவாதித்திருக்கின்றன.

மூன்று ரதம் குறித்த கதைகளையும் வாசித்துப்பாருங்கள். அதுதான் நமது ஆன்மா,மற்றும் அறிவியல் குறித்த அனைத்துக் கதைகளையும் பெருக்கிய கதையாடல்.


கண்டிப்பாக வாசிக்கிறேண், றியாஸ். இப்படியான தேனிர் கவிதை இன்னொன்றும் வாசித்தேன். -
மேசை மீது ஆறிகொண்டிருகிறது தேனிர்



ஜென் தேனீர் எப்போதும் ஆறுவதில்லை என்று சொல்லும்.
நான் ஆறிக்கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறேன்.
ஆறிவிட்டது என அதற்கு பொருளல்ல.


குடித்துவிட்டல் ஆறாதுதானே

ஆறிவிடும் என்பதும் அதன் பொருளல்ல.


இன்ஃபினிட்டி
முடிவுறாக்காலம்



தேனீரைக் குடிப்பதற்கும் நான் இடம் வைத்திருக்கவில்லை அல்லவா?
முடிவுறாக்கால் என்று ஒன்று இல்லை. காலம் முடிவற்றதாகவே இருக்கிறது. அப்படி சிந்தித்துவிடுகிறேன்.


ஆமாம் அதற்க்குள்தான் அவள் எதிர்காலத்தை நோக்கியும் அவன் கடந்த் காலத்தை நோக்கியும் நகர்த்திவிட்டிர்களே.


ஆகவே, தேனீர் ஆறிக்கொண்டிருக்கிறது.


தேனீர் ஆறுவது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்ய என தெரியவில்ல்யே. அதில் வரும் அந்த “ அவள்” நான். எப்போது எதிர்காலத்தை நோக்கியே ஒடுகிறேண்.
இந்த சிந்தனையை தருகிறது அந்த கவிதை.




இரு முனைகளும் ஒரு இடத்திலிருந்து பிரிந்து செல்கிறது என்று ஒன்றை சொல்கிறேன். இப்போது என்பதிலிருந்து இரு புறத்திற்கு செல்லுவதாக. ஆனால், இறந்த காலத்திலிருந்து வளர்ந்து படிப்படியாக எதிர்காலத்தை அடைவதாகவே பொதுவாக நம்பும் இடத்தில் இது விவாதிக்கப்பட வில்லை.



dictionary of khazar நாவலில் இப்படித்தான் சொல்லிருப்பார்.


இதையும் சற்று படித்துப்பாருங்கள்.
துண்டு துண்டாக தென்படும் இடங்களிலிருந்து எல்லாம் காலம் உருப்பெறுவதாக சொல்லியிருப்பாரே.. அல்லது அப்படி அது அமைந்திருக்கும்.


நான் குளிக்கவில்லை


றியாஸ் குரானா

கிட்டத்தட்ட 60 தொடக்கம் 100 வரையான
மழைத்துளிகள்தான் பொழிந்தபடி இருக்கின்றன
ஒவ்வொன்றும்
சுமார் இரண்டடி இடைவெளியில்
பெரும் துளிகளாக விழுந்து
உடைந்து தெறித்தவண்ணமிருக்கின்றன

நிலத்தில் சிதறிவிழும் துளிகள்
கைரேகையளவு நதியாய்
வீதியெங்கும் பெருகியபடி இருக்கையில்,
அதனூடாக பயணிக்க வேண்டிய
நிர்ப்பந்தத்தில் நான் இருக்கிறேன்

நனைந்துவிடாமல் இருக்க
நதியினை எட்டிக் கடந்து நடப்பதும்
துளிகளுக்கிடையிலான இடைவெளியில்
ஒழிந்து
மறுக்கி
மறைந்து பயணிப்பதும்
பெரும் சவாலாகவே இருக்கிறது

தலைக்கு மேலாக
இரைந்துகொண்டு வரும் பெரும் துளிக்கு
இடம்விட்டு
மறுதுளி வருவதற்குள் பாய்ந்து
பா..... அதுவொரு போராட்டம்

இத்தனை சிரமத்திற்கும் மத்தியில்
கொஞ்ச தூரம்போய்
திரும்பிப் பார்க்கையில்தான் அறிந்தேன்
மழை என்னை மட்டுமே குறிவைத்து
பின்தொடரந்து வருவதை

எவ்வளவு வேகமாகச் செல்கிறேனோ
அவ்வளவு வேகமாக
என்னைத் துரத்திக்கொண்டுவருகிறது

இனித் தப்பிக்க வழியில்லை
ஆதலால், நனைந்தேன் என்று
சொல்லலாமா என்று யோசிக்கிறேன்

அருகிலிருக்கும் வீடொன்றில்
நுழைந்தேனென்று சொல்லலாமென பார்த்தால்
அந்த வீட்டுக்குள் நுழைந்ததும்
அங்கும் மழை பொழிந்தது

மழையே கொஞ்சம் நில்..
எனக்கொரு சந்தேகம்
இன்று காலை
நான் குளிக்கவில்லை என்று
யாருனக்குச் சொன்னதெனக் கேட்டேன்

அக்கணமே மறைந்துபோனது

துரத்திக்கொண்டிருந்த மழை



ஆமாம்.
குளிக்கவில்லை கவிதையை நான் வாசித்தவுடன் தோன்றியது மழையை காதலாக, அன்பாக. எப்போது அன்பு காரணப்படுத்தபடுகிறதோ அப்போது அங்கு மழை இல்லை. இது முதல் வாசிப்பில் தோன்றியது.






அது தரும் அர்த்தத்தை யோசிக்கிறீர்கள். நல்லது. ஆனால், அதை உருவாக்க கவிதை எப்படி நகர்கிறது என்பதே ஒரு அலாதியான விசயம்தான்.



மழை என்னை மட்டுமே துரத்துவது காட்சி ரீதியாக ஒரு நிலவியலை உருவாக்குகிறது.
மழைத்துளிகளிடமிருந்து தப்புவது.



இது காதலில் வரும் அயர்சியை முற்றாக நினைவுபடுத்துவதுதான். இப்படி சில காதலுக்குரிய தன்மைகளை இக்கவிதையின் இடையிடையே வைத்திருப்பேன் கவனிக்கப்படுவதில்லை அவை...


ஆனால் முடியவில்லை இருந்தும் துரத்துகிறது. so மழையை நிறுத்தவே அந்த கடைசி கேள்வி. so it is a deliberate act.


அக்கணமே மறைந்தது மழை என்ற கூற்று ஒரு வகை மாயமான புனைவுபோல தோன்றினாலும். காதலும் கணத்தில்தான் மாற்றமடைகிறது. என்பதை கூறுவதுதான்.




எப்படியான மழையாகவிருந்தும் நான் நனையவில்லை என்பதை மீண்டும் வாசகனுக்கு உறுதிப்படுத்தும் இடமும் அதுதான். அதன் பின்னே, கவிதையின் தீவிரமான இரண்டாம்பகுதி நோக்கி கூட்டிச் செல்கிறது கவிதை.
எந்தக் குளுவும் இல்லை.

மழை இயல்பாக பெய்வதுதான். அதிலிருந்து தப்பிக்க நினைக்கிறான் என்பது

ஆனால், சற்று நேரத்தின் பின ஒரு ஆபத்தை சந்திக்கிறான். அதாவது, தன்னை மாத்திரமே மழை துரத்துவதை உணருகிறான். எப்படி அதிலிருந்து தப்பித்தான் (பிரிந்தான்) என்பதாக யோசித்தால் அங்கே காதலுக்கான வாய்ப்பு அதிகமுண்டு. இப்படி யோசித்துப்பாருங்கள்.



ஆயினும், மழையை கவிதைக்குள் கொண்டுவந்திருக்கிறேனெ ஒழிய. இயற்கையான மழையையொ, அதன் தன்மைகளையொ நான் பிரதி பண்ணவில்லை. இந்தக் கவிதைக்கென முற்றிலும் வேறான தன்மைகளையும் பண்புகளையும் கொண்ட மழையை உருவாக்கியிருக்கிறேன்.


யெஸ், இங்கு காதல் என வார்த்தை வந்திருந்தால் இந்த அர்ந்தங்கள் கிடைத்திருக்காது. பன்முகத்தன்மை


மழை என்ற சொல்லைத் தவிர மற்ற அனைத்துமே எனது திட்டமிடலடகள்தான்.
ஆக, புதிய ஒரு மழையை உருவாக்கியிருக்கிறென். இது திட்டமிட்டு கொண்டுவந்த ஒரு மழை.


ஆனால் திட்டமிடாமலேயெ மேலும் சில அர்த்தங்கள் கவிதைக்க்கு அமைந்து விட்டன,,,,author is dead


ஆமா...
ஆசிரியர் இறப்பதில்லை, புதிது புதிதாக பிறக்கிறார் அதனால்தான் முன்பிருந்தவர் இறக்கிறார்.

அவைகளை புரிந்துகொள்வதில் அனைவரும் பங்களிப்புச் செய்வோம்.
தேனீர் ஆறிக்கொண்டிருக்கிறது.
என்பது தலைப்பல்ல. அக்கவிதையின் கிளைமாக்ஸ் வரி.
ஏதாவது ஒரு இடத்தில் வரக்கூடிய ஒரு வரியை தலைப்பாக ஆக்கிக்காட்டியிருப்பேன்.
இது முற்றிலும் புதிய தொழில்நுட்பம்.



அதுபோல, தயவு செய்து இந்தப் பிரதியை வாசிக்க வேண்டாம் என்ற கவிதையும் அப்படித்தான்.



தலைப்பு என்பதும் கவிதையின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும். அதைத்தவிர முக்கியமான வேறு வேலைகள் இருக்கக்கூடாது.

இரவை அணுகுதல்


றியாஸ் குரானா
Non Linear Poem
பனி இறங்கிவர தாமதிக்கின்றன

சட்டென்று
அந்தத் தெருவில் தோன்றுகிறேன்

கிணற்றிலிருந்து எட்டிப் பார்க்க
நிலா முயற்சிக்கிறது

பாடலொன்றை
தெருவெங்கும் துரத்துகிறது காற்று

முன்பின் அறியாத ஒருவனைப்போல்
பரபரப்பாக கவனிக்கப்படுகிறேன்

நாய்க்கூட்டம் நீந்தி வந்து
வேலி இடுக்குகளில் புதைகின்றன

நினைவு தப்பி
கலவரங்கள் மறந்துவிடுகின்றன

என்னைக் கடந்து சென்ற மழை
நான் நின்ற தெருமுனையை அடைந்து
திரும்பி வந்து கொண்டிருக்கிறது

மிக லாவகமாக அடைத்த பின்னும்
கற்பனைக்கு வெளியில் நாயின் வால் அசைகிறது

குறுக்கிடும் சிலரின் கண்கள்
தூக்கிச் சென்ற என்னை
மரத்தில் தொங்கவிடுகின்றன

இழுத்துச் சென்றவர்களின் கைதவறி
கீழே விழுந்து விடுகிறது இரவு

ரகசியமாக பாதுகாத்த பொருட்களைக் கூட
தொலைத்துவிட்டு அவனோடு தேடுவது நல்லது

கற்பனையின் பல தருணங்கள் குழம்பி
திக்கற்ற காட்டில் விடப்படுகிறேன்

படிக்கட்டின் பின்புறம் மறைவாக
கோழைத்தனமான காலடிகள்
ஏறிக்கொண்டிருக்கின்றன

சில நிமிட இரவிலிருந்து
பலவந்தமாக வெளியேற்றப்படுகிறேன்


ஒரேயொரு இரவில் நடந்து விடுவதில்லை




இது முற்றிலும், புதிதான ஒன்று. வழமையாக கவிதைகளை அனுகுவதைப்போன்று இதை அனுக முடியாது. வாசித்துப் பாருங்கள். ஆமமாம் நிர்மல் தோழர்.
எப்படியான பார்வையாளரையும் துரத்திவிடாமல் அனுசரிக்க முடிகிற பிரதியாக இருக்கிறதா எனப்பார்ப்பதையே விரும்புகிறேன். அது கவிதையா இல்லையா என்பதை முதன்மைப்படுத்த தேவையில்லை.


space reversal மாதிரி இருக்கு, வாசிக்கும் போது தரும் உணர்வு இதுவரை ஏற்ப்படாத ஒன்றாக இருக்கிறது.


கற்பனைக்கு வெளியில் நாயின் வால் அசைகிறது


ஆமா, எவ்வளவுதான் அடைத்தாலும் கற்பனைக்கு வெளியே இருக்கிறது என்பது ஒன்று. நாயின் வால் இப்படித்தான் என்பதுபோல் ஒரு தோற்றம் என அது தருகிறது. நாயைத் தவிர வேறு எதன் வாலாக கருதினாலும் இப்படிக் கவர்ச்சி அதற்கு வந்திருக்காது.


புளிய மரத்தில் காகங்கள் வந்து நிற்கின்றன.
மகன் கல்லெறிந்து அவைகளை துரத்த முயற்சிக்கிறான்.
காகங்கள் உசும்பாது அப்படியே நிற்க, மரத்திலிருந்து அனைத்து இலைகளும் பறந்து சென்று சற்றுத் தொலைவிலிருந்து மரத்தில் அமர்ந்தன. ஏமாற்றத்தோடு திரும்பி வந்தான்.


எனக்கு புரியவில்லை. ஆனால் அதன் காட்சி அமைப்பை ஒரளவுக்கு என்னால் கொண்டுவர முடிகிறது.


அவை துண்டுத் துண்டு சம்பவங்கள். எந்தத் தொடர்புமற்றது.



ஒன்றின் பின் ஒன்றாக இருப்பதைத் தவிர வேறு எந்த உறவும் அவைகளுக்கு இல்லை.





ஆனால், இவை ஒரு இரவில் நடந்துவிடுவதில்லை என்ற அறிவிப்பு மாத்திரமே அனைத்தையும் இணைக்கிறது.


அதாவது பல இரவுகளில் நடந்தவற்றை இங்கு தொகுத்து வைத்திருப்பதாக அறிவிக்கிறது.




இதையும் படிச்சுப்பாருங்கள்.


பிம்பங்களோடு ஒரு விடுமுறை நாள்

றியாஸ் குரானா

விடுமுறை நாள் என்பதால்
பிந்தி எழும்பிய நான்
கண்ணாடியின் முன் நின்று பார்க்கிறேன்.
நிலைக் கண்ணாடி
குளமாக மாறியிருந்தது
விரல்களால் தொட்டதும்
கண்ணாடி சுழித்துத் தளம்பியது
விரல்களில் படிந்த ஈரம்
இன்னும் காய்ந்துவிடவில்லை

நிலைக்குத்தாக குளமிருந்தும்
சிறுதுளிகூட வழியவில்லை
மனைவியை அழைத்து
இந்த அதிசயத்தைக் காட்டினேன்

அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போது
நடந்தவற்றில் சில

அவளாடையிலிருந்த புற்கள்
குளக்கரையில் முளைத்து
பூத்துக் குலுங்கின
கொக்குகள் பறந்துபோய்
கண்ணாடியினுள் அமர்ந்து
மீன்களைத் தேடத்தொடங்கின
ஆடையில் அச்சிடப்பட்டிருந்த
மீன்களெல்லாம் ஒரு துள்ளில்
குளத்தில் வீழ்ந்து நீந்தின
வேலைப்பாடுகள் எல்லாம் அழிந்த
கறுப்பு நிற ஆடையுடன் நின்றவள்
என்னை உரத்துக் கூப்பிட்டாள்

திரும்பிப் பார்க்கிறேன்
தனது பிம்பத்தை அனுப்பி
குளத்தில் குளித்துக்கொண்டிருக்கிறான்
எனது அன்பு மகன்






பிம்பம் - இங்கு வெரும் reflection என பொருள் கொள்ளக் கூடாது என நினைக்கிறேன். சரியா றியாஸ்.


ஆமாம்.



. கண்ணாடி பிரதிபலிக்கும் தனது வேலையை செய்யவில்லை. விடுமுறை அதற்கும்தான். அது தான் விரும்பிய வேலைகளைச் செய்கிறது.
இதுதான் இக்கவிதையின் அற்புதம்.
நானே பலமுறை ரசித்திருக்கிறேன். இதை அறிந்த பின் மீண்டும் படித்துப்பாருங்கள். ...

ற்யாஸ் இது ஒரு வித தவ நிலையில் எழுதியது போல இருக்கிறது. மீண்டும் மீண்டும். The Now, இந்த கணம் பற்றீய விழிப்புணர்வை தருவதாக இருக்கிறது. இதுவே ஜென், வேதம் இலக்கியம் இறைவன் ஆன்மிகம் என எல்லாவற்றயும் இனைப்பதாகவும் இருக்கிறது.
இது உங்களின் திட்டமிடலா. அல்லது விளைவா, அல்லது உங்களின் அனுபவமா?


கற்பனைச் செயல். அதாவது சிந்தனை.
கற்பனையை மேலதிகச் சிந்தனை என்றே நான் அழைப்பேன்.



சூப்பர். இந்த முறை சிந்தனை தவம் போலதான். அதே முறையான சிந்தனையை உங்கள் வாசகனும் அடைவான்.


வாசகனைக் கைவிட்டுவிடாது என்றே நம்புகிறேன். கவிதையின் வெளி வடிவமும், அதில் இருக்கும் மாயமான கவர்ச்சியும் யாரையும் இலகுவில் கவரக்கூடியதுதான். ஆழமான வாசகர்களையும் நெருங்கும் ஆற்றல் உண்டு என்றே நம்புகிறேன்.


இலக்கியம் எப்போதும், துல்லியமான உண்மைகளை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அவைகளுடன் புனைவுகளையும் இணைத்து தர விரும்புகிறது. ஆனால், அரசியல் நிலவரம் என்பது உண்மைகளை வெளியே கொண்டுவருவதினுாடாக கடக்கப்பட வேண்டிய ஒன்று. ஆகவே, அதற்கு இலக்கியம் எப்போதும் பிரயோசனப்படாது.


இன்னும் உங்கள் கவிதை தொகுதிகளை வாசித்துவிட்டு அதன் அனுபவத்தை பதிவு செய்ய வேண்டும். உங்கள் புத்தகத்தின் முகவுரையில் அந்த scene setting/ land scaping/ The Now பற்றிய சிலாகித்து எழுதியிருக்கலாம்.


இல்லை, அதிகமான விபரிப்புகள் கவிதையை புரிந்துகொள்ளும் தடையை உருவாக்கிவிடும். நாம் காட்டும் வழிகளையெ பயன்படுத்தி அதற்குள் மாத்திரமே நின்று கவிதையை புரிந்துகொள்ள வேண்டிவரலாம்...


Tuesday, July 30, 2013

தமிழ் மன்னன் பாலியல் விடுதி நடத்தினானா? தேவதாசி முறையும் “ திராவிட “ மாநிலங்கள் செய்த “சேவையும் “


உலகில் ஒவ்வோர் இனத்துக்கும் ஒவ்வோர் தனித்துவம் உண்டு.
இங்கிலாந்துக்காரர்களுக்கு தம்மைப்பற்றி பிறர் பெருமையாக நினைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஜப்பானியர்களுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதுபோல தமிழர்களுக்கே ஒரு தனித்தன்மை என்ன என்று பார்த்தால் , அது தாழ்வு மனப்பான்மைதான்.

தான் ஒரு முட்டாள், மற்றவர்கள் வந்துதான் தமக்கு நாகரிகம் கற்று கொடுத்தார்கள் என பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஓர் இனம் உலகில் உண்டு என்றால் அது தமிழ் இனம்தான்.

வெளி நாட்டு ஆய்வாளர்கள் எவ்வளவோ சொல்லிப்பார்க்கிறார்கள்.டேய்.. உன் முன்னோர்கள் சாதாரணமான ஆட்கள் இல்லை . கலை , அறிவியல், கட்டட ஞானம் , வானியல் , நீர்ப்பாசனம் , அரசாட்சி  என எல்லாவற்றிலும் கில்லாடியாக இருந்து இருக்கிறார்கள் என அவர்கள் சொல்லி சொல்லி மனம் சலித்து போய் விட்டார்கள்.

நம் ஆட்களோ, இல்லை.,.. நாங்கள் முட்டாள்களாக இருந்தோம். அண்டை மானிலதினர்தான் எங்களுக்கு அறிவூட்டீனார்கள் என பிடிவாதம் பிடித்து வருகிறார்கள்.

என்னை பொருத்தவரை அண்டை மானிலத்தினர் பலர் என் நண்பர்கள். ரஜினி, எம்ஜிஆர் போன்றவர்கள் மேல் வெறுப்பு இல்லாதவன். அதாவது என்னை தமிழ் தேசியவாதி என நான் நினைத்து கொண்டதே இல்லை.

ஆனால் நம் மக்களின் அடிமை வெறி எனக்கே தமிழ் தேசியம் மீது ஆர்வம் ஏற்படுத்தி விடுமோ என பயமாக இருக்கிறது.

தேவதாசி முறை குறித்தி சொர்ணமால்யா ஏதோ சொன்னாலும் சொன்னார் , நம் மக்கள் சம்பந்தம் இல்லாமல் தமிழ் மன்னர்களை அசிங்கப்படுத்த முனைந்து விட்டார்கள்.

அவர்கள் காட்டுமிராண்டி ஆட்சி நடத்தினார்கள். மக்கள் உழைப்பை சுரண்டினார்கள்.

ராஜராஜ சோழன் காலத்தில் கூட்டம் கூட்டமாக தேவதாசிகளாக பலரை மாற்றி பாலியல் ரீதியாக அவர்களை பயன்படுத்தினான்.  அதன் பின் பரம்பரை பரம்பரையாக தேவதாசி முறையும் பாலியல் அத்து மீறலும் தொடர்ந்தது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற அண்டை மானிலத்தினர் தமிழர்களை இதில் இருந்து மீட்டு , நாகரிகம் சொல்லித்தந்தார்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இப்படி வரலாற்றை புரிந்து கொண்டு இருக்கிறார்கள் நம் மக்கள்.

இதெல்லாம் உண்மையா ?

இதில் ஒன்று உண்மை. முத்துலட்சுமி ரெட்டி போன்றோர் உண்மையிலேயே இந்த பிரச்சினையில் உழைத்து இருக்கிறார்கள்.  அந்த வகையில் அவர்களை மதித்தே ஆக வேண்டும்.

ஆனால் , அவர்களை தெலுங்கர்கள், திராவிடர்கள் என்று பார்த்தால், அவர்கள் செய்தது சேவை அல்ல, பிராயாச்சித்தம் என்று தெரிய வரும்.

எப்படி?

இதற்கு மிக சுருக்கமாக ஃபிளாஷ் பேக் போக வேண்டும்.

முதன் முதலில் வலுவாக இருந்தது தமிழர்களின் ஆட்சிதான். குமரி முதல் விந்திய மலை வரை தமிழர்கள் ஆட்சி வலுவாக இருந்தது. விந்திய மலைக்கு வடக்கே ஆரியர்கள் வலுவாக இருந்தனர்.

இதிலும்கூட சிலர், சிந்து சமவெளி நாகரிகமே கூட தமிழர்கள் நாகரிகம்தான் , பிற்காலத்தில் ஆரியர்கள் அதை ஆக்ரமித்து தமிழர்களை வெளியேற்றினர் என சொல்கிறார்கள்..ஆனால் இதெல்லாம் ஆய்வு நிலையில்தான் உள்ளன.

குமரி முதல் வேங்கடம் வரை தமிழர்கள் ஆட்சி இருந்தது என்பதற்கு மட்டும் இன்றைய நிலையில் ஆதாரங்கள் உள்ளன.

சில வட நாடுகள் மீது படை எடுத்து வென்றாலும் எல்லைகளை விஸ்தரிக்கும் வேலையில் தமிழர்கள் ஈடுபடவில்லை. மாறாக ஆரியர்கள் தம் எல்லைகளை விரிவு படுத்தியதன் விளைவாக , ஆரியக்கலப்பால் கேரளம் , கர்னாடகம், ஆந்திரம் போன்ற திராவிட  தோன்றின.

தமிழ் மண்ணில் அப்போது ஜாதி இழிவுகளோ , பிராமணர்கள் உயர்வு என்ற நிலையோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் பிராமணர்களை கேலி செய்யும் நிலைதான் இருந்தது என்பதை பரிபாடல் போன்ற பழைய தமிழ் நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சங்க காலம் வரை இந்த நிலை நீடித்தது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக திராவிட அரசுகள் வலுவடைய ஆரம்பித்தன. கிபி 2ஆம் நூற்றாண்டில் இருந்து அவர்கள் படையெடுப்பு அதிகமாகி காலப்போக்கில் பல்லவர்கள் , களப்பிரர்கள் போன்ற அண்டை  மானிலத்தவர்  தமிழர்களை வென்றனர். இந்த கால கட்டத்தில்தான் , ஜாதி இழிவுகள் , மூட நம்பிக்கைகள் போன்ற ஆரிய பண்பாடு இங்கு நுழைந்தது.

அதாவது  , நன்றாக இருந்த தமிழ் நாட்டை சீரழித்தது இந்த அண்டை மானில திராவிடர்கள்.

பிற்காலத்தில் இதே அண்டை மானிலத்தை சேர்ந்த சில நல்லவர்கள் இந்த சீரழ்வில் இருந்து தமிழகத்தை மீட்கவும் செய்தனர் என்பதும் உண்மையே..
அவர்கள் செய்த சேவையை மறுக்கவில்லை.ஆனால் ஒட்டு மொத்த வரலாற்றை பார்த்தால் , அண்டை மானிலத்தவர் செய்தது சேவை என்பதை விட பிராயச்சித்தம் என்பதே பொருந்தும். இதைத்தான் முன்பு குறிப்பிட்டேன்.

சரி. மீண்டும் வரலாற்றை பார்க்கலாம்.

அண்டை மானிலத்தவர் ஆதிக்கம் , ஒன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்தது. அதன் பின்புதான் சோழர்களின் எழுச்சியால் மீண்டும் தமிழக மன்னர்கள் கைக்கு ஆட்சி வந்தது.

இந்த திராவிடர்கள் செய்த பல தீமைகளை சோழர் ஆட்சியில் வெகுவாக குறைத்தனர். நல்லாட்சி நடந்தது. கலைகள் வளர்ந்தன. ஏரிகள் வெட்டப்பட்டன.  நிர்வாக அமைப்புகள் ஒழுங்கு செய்யப்ப்பட்டன.

அப்போதெல்லாம் ஆலயங்கள் என்பவை மதம் என்பதையும் தாண்டி , கலாச்சார அடையாளமாக இருந்தன.

அந்த ஆலயங்களை பார்த்து கொள்ளும் பணிக்காகத்தான் தேவர் அடியார்கள் நியமிக்கப்பட்டார்கள்.

இவர்கள் அரசனுக்கு அடுத்த அந்தஸ்துடன் இருந்தார்கள்.

சோழர்கள் ஆட்சியில் இவர்கள் பாலியல் தொழிலாளிகளாக இருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 

ஆனால் தமிழ் மன்னர்கள் ஆட்சியின் போது அவர்கள் ஆலயம் கட்டி இருக்கிறார்கள், அரசிகளாக இருந்து இருக்கிறார்கள், தான தர்மம் செய்து இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

அதன் பின் சோழர்கள் வீழ்ச்சிக்கு பின் மீண்டும் ஆரிய ஆசி பெற்ற திராவிட ஆட்சி இங்கு செல்வாக்கு அடைந்தது. விஜய நகர பேரரசு போன்ற வந்தேறிகள் ஆட்சியில்தான் பார்ப்பனீயம் இங்கு வலுவடைந்தது.

அந்த கால கட்டத்தில்தான் தேவதாசிகள் எல்லாம் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட்டனர்.
பிறப்பின் அடிப்படையில் , ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமலேயே , இந்த கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள்.

13ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை திராவிடர்கள் ஆட்சியே நிலவியது.

அண்டை மானில மன்னர்கள் காலத்தில் அறிமுகமான தேவதாசி முறை , முத்துலட்சுமி ரெட்டியார் அன்னிய மானில தலைவர்கள் மூலமாகவே ஒழிக்கப்பட்டது poetic justice என்றே சொல்ல வேண்டும்.

அதன் பின் பிரிட்டிஷ் ஆட்சியில் திராவிட தமிழ் உரசல்கள் எப்படி மாறின என்பது இந்த டாபிக்கிற்கு சம்பந்தம் இல்லாதது. ஆனால் அதுவும் முக்கியம்தான்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

இப்போதைக்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியது .இதுதான்.

தமிழ் மன்னர்கள் காலத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்படவில்லை/. பார்ப்பனீயமும் இல்லை.

திராவிட மன்னர்கள் காலத்தில் பல தவறுகள் நிகழ்ந்தன. அதில் சில தவறுகளுக்கு திராவிட மானிலங்களை சேர்ந்தவர்களே தீர்வும் அளித்த்னர்.

ஆக நமக்கு திராவிட மானிலங்கள் செய்தது சேவை அல்ல. பிராயச்சித்தமே.





Sunday, July 28, 2013

சொர்ணமால்யாவும் தேவதாசி முறையும் -- என் பார்வையில்

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை  ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. 

அதில் சொர்ண்மால்யா பேசினார். 

இவர்  தேவதாசிகள் குறித்தான ஆய்வை செய்து அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அவர் பேசுகையில் அது கடவுளுக்கான அர்ப்பணிப்பு  தேவதாசிகள் அதை மனமுவந்து செய்தார்கள். நாட்டியத்தில் ஈடுபாடுள்ள பல சாதி பெண்களும் தாங்களாகவே முன்வந்து தேவதாசிகளானார்கள்  எல்லா சாதியிலிருந்தும் பெண்கள் வந்தனர்


 என்பது போன்று பேசினார்.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சில நண்பர்களுடன் பேசியபோது என் கருத்தையும் கேட்டார்கள். அப்போது சொன்னதை இங்கும் பகிர்கிறேன்.

தேவதாசி முறையை ஏற்கிறோமா இல்லையா என்பதை அந்த சொல்லுக்க்கு என்ன அர்த்தம் கொடுக்கிறோம் என்பதை வைத்தே முடிவு செய்ய முடியும்.

தேவதாசிகள் என்றால் சிறிய வயதில் இருந்தே பாலியல் தொழிலுக்கு தயார் செய்யப்படும் என்று வைத்து கொண்டால் இந்த முறையை யார் ஆதரித்து பேசினாலும் கண்டிக்கத்தக்கதே.

சிலரை இப்படி பாலியர் ரீதியாக கொடுமைப்படுத்தினார்கள் என்பது உண்மை.  பெரியார், முத்துலட்சுமி ரெட்டியார் போன்றோரின் கடும் உழைப்பால் இந்த முறை ஒழிக்கபட்டது என்பது வரலாறு.

ஆனால் பண்டைய தமிழகத்தில் இந்த நிலை இருந்ததா? பண்பாட்டில் சிறந்து விளங்கிய தமிழ் மண்ணில் இப்படி ஒரு நிலை இருந்ததா? உலகுக்கே வழிகாட்டும் ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் இதை அனுமதித்து இருப்பாரா...

ஆராய்ந்து பார்த்தால் பண்டை தமிழகத்தில் தேவதாசி முறை என்பது பிறப்பின் அடிப்படையில் இல்லை 
அது பாலியல் சார்ந்த்தும் இல்லை என சிலர் கூறுகிறார்கள்.

 நான் கடவுள் படத்தில் ஆர்யா இறைத்தேடலில் தன் குடும்ப வாழ்வை துறப்பாரே..அது போல இறைதேடலில் குடும்ப வாழ்வை துறக்கும் பெண்கள் தேவ அடியார்கள் என அழைக்க்பட்டார்களாம். சிலர் முழுக்க முழுக்க துறவு வாழ்க்கையில் இருப்பார்கள்..சிலரோ கலை, ஆடல், பாடலில் தம்மை ஈடுபடுத்தி கொள்வார்கள். இவர்களில் சிலர் யாரையேனும் மணந்து கொள்வதும் உண்டு.

ஆனால் ஒரு போதும் பாலியல் தொழில் செய்ய வேண்டிய நிலை இருந்தது இல்லை. அரசனுக்கே ஆலோசனை சொல்லும் நிலையில் கூட இருந்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் , நாம் வழிபடும் சில கோயில்கள் இவர்கள் கொடுத்த பணத்தினால்தன் உருவானது.



ஆனால் தமிழர்கள் ஆட்சி அழிந்து, வேற்று கலாச்சார ஆட்சிகள் ஆங்கிலேயர் ஆட்சி போன்றவற்றால் அவர்களுக்கு செல்வாக்கு இல்லாமல் போகவே, சில உயர் சாதியினர் அவர்களை பாலியல் தொழிலில் தள்ளினார்கள். இன்னொரு கொடுமையாக , தேவரடியார் என தனியாக ஒரு சாதியை பிறப்பின் அடிப்படையில் உருவாக்கி , பாலியல் சுரண்டலை ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில்தான் பெரியார் போன்றோரின் பணியால் இந்த இழி நிலை மாற்றப்பட்டது.

ஆகவே சொர்ணமால்யா கருத்தை ஏற்பதா இல்லையா என ஒரே வரியில் சொல்ல முடியாது.

பிறப்பின் அடிப்ப்படையிலான , பாலியல் சார்ந்த , பெரியாரால் எதிர்க்கப்பட்ட ஒரு முறையை தேவதாசி முறை என அழைத்த்தால் , அதை ஆதரித்து பேசுவது தவறு.

பண்டையை தமிழ் முறைப்படி அமைந்த , தமிழ் கலாச்சாரத்துக்கு உட்பட்ட, பாலியல் இல்லாத , பெண்ணுரிமையை மீறாத ஒரு முறையை தேவதாசி முறை என அவர் சொல்லி இருந்தால் அதை தவறு என சொல்ல முடியாது.


Saturday, July 27, 2013

ஒரு மரணம் , ஒரு மனோதத்துவம்

இது சிறுகதை அல்ல ..சின்னஞ்சிறு கதை . சிறிய முடிச்சை வைத்து குறைந்த பட்ச வரிகளுடன் எழுதப்படுவது.படிமம் , குறியீடு , அக தரிசனம், அறச்சீற்றம் என எதுவும் இருக்காது. வெறும் பொழுதுபோக்குக்காக எழுதப்படுவது..

**************************

காலிங் பெல் அடித்து கொஞ்ச நேரம் கழித்துதான் கதவு திறந்தது, பொறுமையாக காத்து இருந்தேன். பொறுமை அனைவருக்கும் அவசியம் என்றாலும்  மருத்துவருக்கு , அதுவும் மன நல மருத்துவருக்கு மிக அவசியம்.
எனக்கு முப்பது வயது என்றாலும் ஐம்பது வயதுக்கான பொறுமை இருப்பதற்கு காரணம் என் குரு டாக்டர் ஜோசப். மருத்துவம் ஒரு தொழில் அல்ல..அது ஒரு சேவை..அது ஒரு தவம் என போதித்தவர் அவர்.

கதவை திறந்தவனுக்கு 25 வயது இருக்கலாம்.

“ வாங்க டாக்டர் “ என்றான்.

இவ்வளவு பணிவாக இங்கிதம் தெரிந்தவனாக இருக்கிறானே...இவனுக்கா பிரச்சினை..ம்ம்ம்.. மருத்துவ விந்தைகள் !
அவன் மனைவியும் புன்னகையுடன் கண்களால் வரவேற்றாள்.

அவளுக்கு 22 வயது இருக்க கூடும் என கணித்தேன்.

காஃபீ சாப்பிட்டவுடன் நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்,

” என்னிடம் தயக்கம் இல்லாம பேசலாம்..சொல்லுங்க //என்ன பிரச்சினை? “

அவன் முகம் சற்று மாறியது.

“பிரச்சனையா...எனக்கா...என்ன”  மனைவி இடைமறித்தாள்.

“ நான் பேசிக்கிறேன்..சும்மா இருங்க...”

அவன் அடங்கினான்

“ டாக்டர்///அவர்  நல்லாத்தான் இருந்தார்... ஆனால் கொஞ்ச நாளாத்தான் பிரச்சினை//  இல்லாத விஷ்யங்களை இருப்பதா கற்பனை செஞ்சுக்குறார்”

ம்ம்...இது நான் எதிர்பார்த்ததுதான். வொர்க் ஸ்ட்ரஸ் , சமூக அழுத்தம். உரிய அங்கீகாரம் கிடைக்காமை இதில்தான் முடியும்.

” மேடம் .கவலைப்படாதீங்க... இதுக்கு மருந்து தேவை இல்லை....அவர் நினைப்பு தவறு என்பதை செயலால் காட்டினால் போதும். இப்ப பாருங்க”

அவளிடம் சொல்லி விட்டு அவனிடம் திரும்பினேன்.

சார் இது என்ன ? “

அவனிடம் கண்ணாடி டம்ப்ளரை காட்டினேன்.

கொஞ்ச நேரம் திகைத்து போய் பார்த்தான். மனைவியை பார்த்தான்.

” சொல்லுங்க “ உற்சாகப்படுத்தினேன்.

“ டாக்டர்...கையில் ஏன் ரோஜா பூங்கொத்தை வச்சு இருக்கீங்க? எனக்கு வாழ்த்து சொல்ல வந்தீங்களா? “

நான் சிரித்தேன்.

“இது கண்ணாடி கிளாஸ் “

“ இல்லை டாக்டர்...மலர்களின் வாசம் என் நாசியை தொடுது... இப்படி பொய் சொல்றீங்களே”

மனைவியோ செய்வதறியாமல் நின்றாள்.

இது கண்ணாடிதான் என எவ்வளவுதான் சொன்னாலும் சரிப்படாது.இது கண்ணாடி இது கண்ணாடி என அவனை மீண்டும் மீண்டும் சொல்ல வைக்கும் ஆட்டோ சஜஷன் எல்லாம் வேலைக்கே ஆகாது.

” சார் கடசியா கேட்கிறேன். இது கண்ணாடியா ,மலர் கொத்தா ?”

அவன் பொறுமை இழந்து கத்தினான்

“ இது மலர் கொத்து ,,மலர் கொத்து ..மலர் கொத்து “

 நான் சட் என கோபமாக முகத்தை மாற்றிக்கொண்டேன்.

“ ஷட் அப்...இது கண்ணாடி “

கோயிலில் சிதறி தேங்காய் உடைப்பது போல , ஓங்கி தரையில் அடித்தேன். கண்ணாடி சிதறியது. மனைவி வீல் என அலறினாள். ஒரு துண்டு அவன் உதட்டில் மோதி ரத்தம் கசிந்தது.

“ சாரி மேடம்..இந்த மாதிரி ஷாக் ட்ரீட்மெண்ட்தான் அவர் ஆழ் மனதில் பதிந்து , அவர் கற்பனைகளை அழிக்கும்...மன்னிச்சுடுங்க... இன்னும் ஒரு ட்ரீட்மெண்ட்தான்..சரி ஆகிடும் “

அவன் முகத்தில் கலவரத்தோடு கைக்குட்டையால் உதட்டு ரத்தம் துடைத்தான்.

வெளியே அழைத்து வந்தேன்.

தோட்டத்தை காட்டினேன்..

“ இது என்ன ?”

அவன் முன்பு போல திகைத்தான்..

“ இது ஆழ்ந்த பள்ளத்தாக்கு.. நாம் மலை உச்சியில் நிற்கிறோம் “

சிரித்தேன்,

“இல்லை.. நாம் சமதளத்தில் நிற்கிறோம் “

“ இல்லை டாக்டர்... நாம் இருப்பது மலை உச்சி..விழுந்துடப்போறீங்க..இப்படி வாங்க”

“ ஹாஹா...இது சமதளம்...ம்ம்..சரி நான் முன்னாடி நடந்து காட்டுறேன்..என் பின்னாடி வாங்க”

“ நோ...பள்ளத்தாக்கு டாக்டர்... விழுந்து செத்துடாதீங்க... ’ பதறினான்.

புன்னகையுடன் நடக்க ஆரம்பித்தேன்.

**************************************************************

கீழ்தள கதவை காலிங் பெல் அடித்து திறக்கும் அவரை பொறுமை இல்லாமல் உள்ளே நுழைந்தார்கள்.

” நான் சொன்னபடி அவன் வந்தானா? தன்னை மன நல மருத்துவர் என சொல்லி இருப்பானே”

பெரியவர் சோம்பலாக பார்த்தார்.

“ ஆமாம் சார் ,..வந்தான் .. நீங்க சொன்னபடி.ஏதாச்சும் பேச்சு கொடுத்து உட்கார வைக்க பார்த்தேன்...அவனோ தன் பேஷண்டை பார்க்க போறேனு லிஃப்ட் ஏறி டாப் ஃப்லோர் போயிட்டான்..”

“சார்..என்ன சார்..இப்ப்படி செஞ்சுட்டீங்க... அவருக்கு மன நலம் சரியில்லை.. எப்படியோ தப்பிச்சி வந்துட்டார்.. பத்திரமா பார்த்துக்கோங்க போன் செஞ்சும் உச்சி மாடிக்கு போக விட்டுட்டீங்களே.. அந்த வீட்டு பொண்ணு ஒருத்தி மரணத்துக்கு இவர் தெரிஞ்சோ தெரியாமையோ காரணம் ஆகிட்டார்.. இங்கேதான் வருவார்னு தெரியும்.. பார்த்துக்குவீங்கனு போன் செஞ்சுட்டு நாங்க வரதுக்கு லேட் ஆகிப்ப்போச்சே .. “

பதட்டத்துடன் அவர்கள் எழுவதற்குள் பெரிய சத்தத்துடன் அவன் கீழே விழுந்து சிதறினான்.

********************************************

மேல் தளத்தில் அந்த மனைவியும் , ” மன நோய் “ கணவனும் புன்னகைத்து கொண்டனர். அவன் கைகள் மருத்துவ கவன குறைவால் இறந்து போன த்ன் த்ங்கை போட்டாவை வருடின

**********************************************




Wednesday, July 24, 2013

கவிதை எழுவதில் விஞ்சி நிற்கும் நாத்திகம். உதவுவதில் விஞ்சி நிற்கும் இஸ்லாம் - டைம்ஸ் வெளியிட்ட அதிரடி ஆய்வு

அதீத உணர்ச்சிவசப்படுதலை மட்டுமே தன் ஒரே பலமாக கருதும் ஓர் இனம் உலகில் உண்டு என்றால் அது நம் தமிழ் சமூகம்தான்.

நெட் மூலம் குற்றங்கள் என செய்தி வருகிறதா ? நெட்டை தடை செய் என ரெண்டு நாள் உணர்ச்சி வசப்பட்டு டீக்கடை விவாதங்கள் நடக்கும்.

எங்காவது ஜாதி சண்டை என செய்தியா , ஜாதி ஒழிந்தால்தான்யா நாடு உருப்படும் என தீர்வு சொல்லி விட்டு வழக்கமான வேலையை தொடர்வார்கள்.

இந்த உணர்ச்சிவசப்படுதலால் கிடைக்கும் மனரீதியான அனுகூலம் என்ன ?  நாம் எந்த விதத்திலும் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது . என்றோ ஒரு புதிய உலகம் உருவாகபோகிறது..அப்போது எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் வழக்கம்போல சிங்கம் பட பார்த்து சும்மா இருக்கலாம். இப்படி சும்மா இருக்கும் குற்ற உணர்ச்சியை மறைக்கத்தான் உணர்ச்சிவசப்படல்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் பலருக்கு அன்றாட வாழ்வில் தொடர்பு இல்லை. பக்கத்து வீட்டுக்காரர் பெயர் கூட தெரியாத நகர வாழ்க்கை.

டிவி மூலமும் பேப்பர் மூலமும்தான் உலகம் அறிமுகம் ஆகிறது. இந்த அறிவைக்கொண்டு உலகை அணுகுவதால் , அந்த போலியான பொது அறிவு மேலும் மனதில் வலுப்பெறுகிறது.

 நல்ல வேளையாக எனக்கு இத்தகைய நகர வாழ்க்கையில் இள வயது அமையவில்லை. பக்கத்தில் இருந்த இஸ்லாமியர்கள் வீடுகளுக்கு சென்றுதான் விளையாடிக்கொண்டு இருப்பேன். அவர்கள் இஸ்லாமியர்கள் , நான் ஹிந்து என்பதெல்லாம் இப்போது யோசித்தால்தான் தெரிகிறது. அந்த வீட்டில் இருந்த இஸ்லாமிய தாய்மார்கள் , சகோதரிகள் எந்த வேறுபாடும் இல்லாமல் அன்பாக பழகுவார்கள். குறிப்பிட்ட நேரம் ஆனதும் சிலர் பாய் விரித்து தொழுகை நடத்துவது அந்த வயதில் ஆச்சர்யமாக இருக்கும். என்னவோ சாமி கும்பிடுகிறார்கள் என நினைத்து கொள்வேன்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என விளக்கி அவர்கள் மத மாண்புகளை சொல்லித்தர முயன்றதே இல்லை.

அதே போல நான் படித்த கிறிஸ்தவ பள்ளியிலும் , அங்கிருந்த மதர், சிஸ்டர்கள் அவ்வளவு அன்பாக இருப்பார்கள். அவர்களும் தம் மதம் குறித்து என்னிடம் சொல்லியது இல்லை.

ஆக மதம் குறித்த பிரஞ்ஞையே எனக்கு சிறிய வயதில் இல்லை , மத ஈடுபாடுகொண்டோர் மத்தியில் வாழ்ந்த போதிலும்.

அதே போல நோன்பு கஞ்சி வாங்கி குடித்ததும் இனிய நினைவுகளாக உள்ளது. சிலர் வீட்டுக்கே வந்து தருவார்கள். ஆனால் எனக்கு அதில் கிக் இல்லை. வீட்டில் ஒரு பாத்திரம் எடுத்து கொண்டு , சின்ன பசங்களுடன் சேர்ந்து போய் வரிசையில் நின்று வாங்கி , வீட்டுக்கு கொண்டு வருவது பெருமையாக இருக்கும். செம சூடாக இருக்கும். நீராவி பட்டு பாத்திர மூடி வியர்ப்பது ஆச்சர்யமாக இருக்கும்.

அலுவலகங்களில் சிலர் கொண்டு வந்து தருவார்கள். ஆனால் அன்று பெற்ற உணர்வு  இனி ஒரு போதும் வராது.

இத்தகைய அனுபவங்கள் ஏதும் இல்லாமல் , ஃபேஸ்புக் மூலம் உலகை காணும் சிலர் மொக்கை கவிதைகள் சிலவற்றை வைத்து ம்தம் சார்ந்த தம் பார்வையை அமைத்து கொள்கின்றனர்.

ம்தம்தான் உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்பது போலவும் , மதம் இல்லாவிட்டால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும் என்பது போலவும் ஓர் எண்ணத்தை இணையத்தை மட்டுமே  வாழும் அப்பாவிகள் மனதில் பதிக்கிறார்கள்.

கீழ்காணும் சில கவிதைகளை ( ?? !! ) பாருங்கள்.

 நான் ஓர் ஆத்திகன் தான்.
ஆனால்
ஏழையின் இறுதி யாத்திரைக்கு காசு இல்லாதபோது
மெக்கா யாத்திரை செல்லும் அளவுக்கு கொடூரமானவன் அல்ல

உணவு வேண்டும் என பிரார்த்தித்தான் ஒருவன்.
உன் தேவையை நீ சொல்லி அறிய வேண்டிய
கடவுள் தேவையேயில்லை என்றேன் நான்.

தேவாலய பராபமரிப்புக்கு காசு கொடுக்காமல்
ஏழைக்கிழவியின் வீட்டை கட்டி கொடுத்தேன்
அவள் சிரிப்பை விட கடவுள் ஒன்றும் உயர்ந்தவர் அல்லர்.

அழும் குழந்தையை தவிக்க விட்டு
பாலாபிஷேகத்தால் மகிழும் கடவுள்
கடவுள்தானா?




இந்த பாணி கவிதைகளை ( ?? !! ) படிக்கும் அப்பாவிகள் மனதில் இயல்பாகவே நினைப்பார்கள்.  ” மத நம்பிக்கை கொண்டவர்களைவிட நாத்திகவாதிகள்தான் உதவிகள் செய்வார்கள் , அள்ளி அள்ளி கொடுப்பார்கள் போல ”

ஆனால் உலகளவில் பிரபலமான ஊடகம் டைம்ஸ் மேற்கொண்ட ஆய்வு முற்றிலும் மாறுபட்ட சித்திரத்தை அளிக்கிறது.

பிரிட்டனில்  யார் அதிகம் அறக்கொடை அளிக்கிறார்கள் என்ற ஆய்வுக்கு கிடைத்த பதில் ஆச்சர்யம் அளித்தது.

நன்கொடை கொடுப்பவர்கள் பட்டியல் கீழ்கண்டவாறு அமைந்தது.. ஒவ்வொரு தனி மனிதனும் சராசரியாக அளித்த நன்கொடை 

இஸ்லாமியர் - 371 யூரோக்கள் 
யூதர்கள் - 270 யூரோக்கள் 
ப்ரோடஸ்டன்ஸ் கிருத்துவர்கள் - 202 யூரோக்கள் 
கத்தோலிக்க கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்று அதிகம்
மற்ற கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்று குறைவு 
நாத்திகர்கள் - 116 யூரோக்கள்

வாழ்க்க்கையில் நன்கொடையே கொடுக்காதவர்கள் பட்டியலும் எடுத்தார்கள். அதில் முதலிடம் பெறுவது நாத்திகர்களும் , யூதர்களும்தான். 

நாத்திகர்கள் கவிதை எழுதி ஊருக்கு உபதேசம் செய்வதுடன் நின்று விட, இஸ்லாம் ஏன் விஞ்சி நிற்கிறது என்றால் அதில் இருக்கும் கடுமையான சட்டங்கள் , வழிகாட்டுதல்கள்.

தன் வருமானத்தில் இத்தனை சதவிகிதம் தானம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையே உண்டு.

எல்லா மனிதர்களிடமும் இருக்கும் தனி நபர் ஒழுக்க கேடு இஸ்லாம் மதத்திலும் இருக்க கூடும். ஆனால் ஒட்டு மொத்தமாக பார்த்தால் , அந்த மத கோட்பாடுகளால் நன்மையே ஏற்படுகிறது என்கிறது ஆய்வு.


ஒரு சிலர் மதங்களை தவறாக பயன்படுத்தினாலும் ஒட்டு மொத்தமாக நன்மை செய்கிறது.

( பெரியார் போன்ற ) ஒரு சிலர் நாத்திகத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினாலும் , ஒட்டுமொத்தமாக அது திண்ணைபேச்சுக்கே பயன்படுகிறது என்கிறது ஆய்வு. 





Wednesday, July 17, 2013

சாரு பரிந்துரைத்த மூலிகை சாறு!!


 நான் என நம்மைப் பற்றி நினைத்து கொள்கிறோம் அல்லவா? இந்த நான் என்பது என்ன என்று பார்த்தால் , அது நம் உடல் மற்றும் மனம்தான். ( ஆன்மா என்ற சந்தேக கேசை இதில் சேர்க்க வேண்டாம் )

நாம் படிப்பது , கேட்பது , கற்பது , அனுபவங்கள் போன்றவை மனமாக மாறுகிறது. நாம் உண்பது உடலாக மாறுகிறது.

நல்லவற்றை படிப்பது , கேட்பது கொஞ்சம் சிந்தனை பயிற்சி  என இருந்தால் மனம் செம்மையாக இருக்கும். நல்லவற்றை உண்டு , கொஞ்சம் உடற்பயிற்சி என இருந்தால் உடல் நன்றாக இருக்கும். இந்த இரண்டும் நன்றாக இருந்தால் , வாழ்க்கை சுமுகமாக போகும்.

இவ்வளவு எளிதானது.. ஆனால் நாம் இதை செய்வதில்லை என்பதுதான் வேடிக்கை.

நான் சாருவை விரும்புவதற்கு காரணம் இதுதான்.

அவர் இலக்கியம் , சிந்தனை , புத்தகங்கள் , கவிதை என எந்த அளவுக்கு பேசுகிறாரோ அதே அளவுக்கு உணவு பழக்கங்கள் குறித்தும் பேசுவார் .ஏகப்பட்ட குறிப்புகள் கொடுப்பார்.

அவர் சொல்லும் புத்தகங்களை பெரும்பாலும் படித்து விடுவேன். அதேபோல அவர் சொல்லும் உணவுக் குறிப்புகளையும் முடிந்த அளவு பின்பற்றி வருகிறேன்.

அவர் சொல்லும் இயற்கை உணவு ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும். ஆனால் ரெண்டு நாள் சாப்பிட்டால் போதும். பழகி விடுவது மட்டும் அல்ல. அதற்கு அடிக்ட்டாகவே ஆகி விடுவோம்.

தனிப்பட்ட முறையில் பேசுகையில் ஒரு மூலிகை சாறு பற்றி சொன்னார். அதன் மகத்துவமும் பலனும் கேட்பதற்கு பிரமிப்பாக இருந்தது. அதைப்பற்றி கட்டுரை எழுதுவதாக சொன்னார். இன்னும் ஏன் எழுதவில்லை என தெரியவில்லை.
அவர் சொன்னதை தொகுத்து எழுதி , அவருக்கு மெயில் அனுப்பினேன். ஆனால் இன்னும் அவர் எழுதவில்லை..அதை அவர் வெளியிட்டால் , பெரிய பரபரப்பு ஏற்படும்.  அதைப்பற்றி நான் சொல்வது எதிக்ஸ் அல்ல என்பதால்  நான் அதைப்பற்றி சொல்ல முடியவில்லை.


மூலிகை சாறு , காய்கறி சூப் என சாப்பிட பழகி விட்டால் , டீ சாப்பிடுவது எல்லாம் இயல்பாகவே குறைந்து விடும்.

எஸ் ரா பரிந்துரைந்த தேனீர் கலை என்ற புத்தகம் படித்து , தேனீர் மீது ஒரு மயக்கம் ஏற்பட்டது.  விளைவாக வித விதமான ஒருஜினல் தேயிலை தூள்களை வாங்கி வைக்கலானேன்.

டீ சாப்பிடுவது குறைந்ததால் , எப்போதாவது ஒரு நாள் மட்டும் , தேனீருக்கு என அந்த நாளை ஒதுக்கி ரசித்து சாப்பிடுவேன். மற்றபடி தேனீர் சாப்பிடுவது இயல்பாகவே குறைந்து விட்டது.

ஆனாலும் எனக்கு தேவைப்பட்ட சில இயற்கை உணவு பொருட்கள் எனக்கு கிடைக்கவில்லை, இந்த நிலையில்தான் விதை இயற்கை அங்காடியைப்பற்றி கேள்விப்பட்டு அங்கே சென்றேன்.

உண்மையிலேயே அசந்து விட்டேன். விதவிதமான இயற்கை சார்ந்த உணவு வகைகள், சிறு தானியங்கள் , சப்பாத்தி தோசை செய்வதற்கான மாவுகள் , தேன் , இயற்கை ஸ்னாக்ஸ் என க்ரியேட்டிவாக பல பொருட்கள் இருந்தன.

சிலவற்றை வாங்கி வந்தேன்.

அதில் நான் முதலில் டெஸ்ட் செய்தது சாமை என்ற தானியத்தை,.பலர் சாமையை ஆமையுடன் குழப்பி கொள்கிறார்கள்.. சாமை என்றால் அசைவமா என சந்தேகமாக கேடடார் ஒருவர்.

வரகு, தினை, சாமை போன்றவை எல்லாம் நம் பாரம்பரிய தானியங்கள். நம் ஊர் தட்ப வெப்ப நிலைக்கு இவைதான் சரியாக இருக்கும்.

இவற்றை மறந்து இயற்கைக்கு மாறான உணவுகளை உட்கொள்வதால்தான் , மருத்துவ மனைக்கு என தனியாக செலவு செய்ய வேண்டி வருகிறது.

மெரினா பீச்சில் காலையில் பலர் வாக்கிங் செல்வதை பார்க்கலாம். ஆரோகியத்துக்காகவோ, காலை அமைதியை ரசிப்பதற்காகவோ வாக்கிங் செல்பவர்கள் குறைவு.

கொழுப்பை கரைக்க, உடல் எடையை குறைக்க என எதிர்மறை செயலுக்காக வாக்கிங் வருபவர்களே அதிகம்.

 உணவு விஷ்யத்தில் நான் பல தவறுகள் செய்து இருக்கிறேன். சில கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன்.

ஆனால் இனி தவறு செய்வதாக இல்லை,

இயற்கை உணவு என்பதை ஏன் மறந்தோம் என்பது தெரியவில்லை. சாமையை சமைத்து சாப்பிட்டேன், அவ்வளவு அருமையாக இருந்தது.

நான் சமைத்ததே அவ்வளவு சூப்பராக இருந்தால் , உண்மையிலேயே நன்கு சமைக்க தெரிந்தவர்கள் செய்தால் , எப்படி இருக்கும்..ம்ம்.. வாவ்.

விதை அங்காடி அடையாறு காந்தி நகர் பேருந்து நிலையத்தை தாண்டி ஒரு சிக்னல் வருமே , அங்கே மேம்பாலத்தில் ஏறாமல் சென்றால் ஒரு பிள்ளையார் கோயில் வரும், அதன் அருகில் உள்ளது..பயன்படுத்தி கொள்ளுங்கள்


Monday, July 15, 2013

மாதவிடாய் - என்னை வெட்கப் பட வைத்த திரைப்படம்


ஒரு பெண் சானிட்டரி நாப்கின் வாங்கி வருவதை பார்த்த ஒரு வாலிபன் கிண்டலாக கேட்டான்.
“ மேடம் ..பிரட் வாங்கிட்டு போறீங்களா? எனக்கு இல்லையா? “

அந்த பெண் சொன்னாள் ‘

: பிரட் சும்மா சாப்பிட்டா நல்லா இருக்காது..கொஞ்ச நேரம் கழித்து ஜாம் தடவி தறேன்,, சாப்பிடு :

இது போன்ற பல ஜோக்குளை அந்த காலத்தில் சொல்லி நண்பர்களை சிரிக்க வைத்து இருக்கிறேன். அவர்கள் சொல்ல நான் சிரித்து இருக்கிறேன்.

இது சிரிக்க வேண்டிய விஷயமா... தாய்மை சம்பந்தப்பட்ட , பெண்களின் வலி மிகுந்த உடல்கூறைப் பொருத்த ஒரு விஷ்யம்.

எனக்கு இந்த புரிதல் ஏற்பட்டு பெண்மையை தற்போது மதிக்கிறேன் என்பது எந்த அளவுக்கு உண்மையோ , ஒரு காலத்தில் கேலி செய்து இருக்கிறேன் என்பதும் உண்மை.

மறந்து விட்ட அந்த சம்பவங்களை நினைவு படுத்து என்னை வெட்கி தலைகுனிய வைத்த்து சென்ற் சனியன்று பார்த்த ஆவணப்படம்..

தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் சார்பில் ஆவணப்பட திரையிடல் மற்றும் குறும்பட ரசனை வகுப்பு சென்ற சனிக்கிழமை சென்னையில் நடந்தது.



மாதவிடாய் (படைப்பு :கீதா இளங்கோவன்) மற்றும் விடியாத பொழுதுகள் (படைப்பு : வசந்த் கே. பாண்டியன்) ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.

அதற்கு முன் அயல் நாட்டு குறும்படம் திரையிடப்பட்டது.தொடர்ந்து ரசனை வகுப்பு நடந்தது. சினிமா கோட்பாடு என்ற அருமையான மொழியாக்க புத்தகத்தை தந்த , திரைப்பட அறிஞர் சிவகுமார் வகுப்பு எடுத்தார்.

சினிமா என்ற பெயரில் வேறு எதையோ பார்த்து  நேரத்தை வீணடித்து விட்டோமே என்ற ஆதங்கம் அவர் பேச்சை கேட்டபோது ஏற்பட்டது. சினிமா தர வேண்டிய உன்னத உணர்வை பெறாமல் ஒரு பொழுதுபோக்கு பொம்மைபோல அதை பயன்படுத்துகிறோமே என உண்மையிலேயே வருத்தப்பட்டேன்.

பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தது மட்டும் அன்றி அவரும் சில கேள்விகள் கேட்டார். பதில்களில் இருக்கும் போதாமையை சுட்டி காட்டினார். கேள்விகளைப்பற்றியும் தன் கருத்துகளை சொன்னார்.என்னை எதுவும் கேட்டு விடக்கூடாதே என சற்று தலைமறைவாக அமர்ந்து இருந்தேன் :)

அதன் பின் மாதவிடாய் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் படம் என சரியாக சொல்லி இருந்தார்கள்.

மாதவிடாய் என்றால் என்ன, அது சார்ந்த மூட நம்பிக்கைகள், கடைபிடிக்க வேண்டிய சுகாதார பழக்கங்கள் , பெண்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் என களப்பணி செய்து பிரசண்ட் செய்து இருந்தார்.

நாமெல்லாம் காட்டுமிராண்டி சமுதாயத்தில்தான் இன்னும் இருக்கிறோமோ என தோன்றியது.

இதை எல்லாம் மூடி மறைத்து , மத சடங்குபோல ஆக்கியதால்தான் போதிய விழிப்புணர்வு இல்லாமல் போய் , நான் ஆரம்பத்தில் சொன்னது போல முட்டாள்தனமாக சிலர் நடந்து கொள்வதில் முடிகிறது.

அரசு, தனியார் நிறுவனங்கள் , பள்ளிகள் போன்றவற்றில் இதற்காக எந்த சிறப்பு வசதிகளும் செய்யப்படுவதில்லை..அதற்கு நிதியும் ஒதுக்கப்படுவதில்லை.

ஒரு பெண் உறுப்பினர் சட்டசபையிலோ பாராளுமன்றத்திலோ எழுந்து நின்று இதற்காக நிதி ஒதுக்குங்கள் என கேட்க கூச்சப்படுவது யதார்த்தம். அவர்களே அப்படி என்றால் சாதாரண பெண்கள் என்ன செய்வார்கள்?

மாற்றுத்திறானிகளான பெண்கள் அனுபவிக்கும் கொடுமை சொல்லி மாளாது.

பேசத்தயங்கும் இந்த விஷ்யத்தை கையில் எடுத்து, தெளிவாக படம் எடுத்த கீதா பாராட்டுக்குரியவர்.
அரங்கில் அவரைத்தவிர அனைவரும் ஆண்களே.

அவர் உள்ளத்தில் ஒளியுடன் அத்தனை ஆண்கள் மத்தியில் இந்த பிரச்சினை குறித்து பேசியபோது அனைவருமே மிகவும் பிரமிப்போடும் மரியாதையுடனும் அவர் பேச்சை கேட்டார்கள்.
சிலர் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்கள், இது வரை புரியாமல் நடந்து கொண்டதற்கு சிலர் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்கள்.


இரண்டாவதாக திரையிடப்பட்ட ஆவணப்படம் விடியாத பொழுதுகள். இலங்கை ராணுவத்தால் கஷ்டப்ப்படும் மீனவர்களைப் பற்றிய படம்.

உலகில் வேறு எங்கும் நடக்காத கொடுமை, ஒரு நாட்டு மீனவர்களை இன்னொரு நாட்டு ராணுவம் தாக்குவது.

வேறு எந்த நாடாக இருந்தாலும் , தன் நாட்டு குடிமகன் தாக்கப்படுவதை பார்த்து கொண்டு இருக்காது, ஆனால் இதை ஒரு பொருடடாகவே நினைக்காத இந்திய அரசு. இது தன் இறையாண்மைக்கு இழுக்கு என்பதையே புரிந்து கொள்ளவில்லை என்பதை ஆவணப்படுத்து இருந்தார் வசந்த் பாண்டியன்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் பார்வையில் பிரச்சினையை சொல்லி இருந்தது சிறப்பு.

பேசக்கூச்சப்படும் விஷயம். பேச மறந்து போன விஷ்யம் என இரு முக்கிய பிரச்சினைகளைப்பற்றிய படங்களை திரையிட்டு இருந்தது நிறைவாக இருந்தது.

வாய்ப்பு கிடைக்கையில் இந்த படங்களை பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.




Tuesday, July 2, 2013

சர்வதேச விருதை குறி வைக்கும் சாருவின் நாவல்- வரலாற்று தருணத்தில் தமிழ் படைப்புலகம்


  உலக அளவிலான நாவல்களுடன் போட்டியிட்டு , கடைசி சுற்றுக்கு முன்னேறி, கிட்டத்தட்ட 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுவிஸ் இலக்கிய விருது கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது என்ற நிலையில் சாரு நிவேதிதா இருப்பது தமிழ் இலக்கிய உலகில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் , நடுனிலை  இலக்கியவாதிகள் , ஒரு தமிழ் எழுத்தாளனின் நாவல் உலக அரங்க்குக்கு செல்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



உலக அளவில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து ஸ்விஸ் நாட்டின் Jan Michalski விருது ஒவ்வொரு ஆண்டும் வ்ழங்கப்படுகிறது.


தகுதி வாய்ந்த நடுவர்கள் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுப்பார்கள்.


முதல் மூன்று இடம் பிடிக்கும் எழுத்தாளர்கள் , சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்ப்பட்டு ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள இலக்கிய வீடு Maison de l’Ecriture எனும் பிரமாண்ட நகரத்தில் மூன்று மாதங்கள் தங்க வைக்கப்படுவார்கள்.




இந்த நகரம் எழுத்தாளர்களுக்காக சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்டபகுதியாகும். வசதியான அறைகள் , உணவகம் , நூலகம் , கண்காட்சியகம் என எல்லாமே இதில் இருக்கும்.


நவம்பரில் முடிவு அறிவிக்கபடும், வெல்வோர் முப்பது லடசம் ரூபாய்களை பரிசாக பெறுவார்.


இந்த் ஆண்டுக்கான போட்டியியில் 11 புத்தகங்கள் இறுதி சுற்றில் உள்ளன.


இறுதி சுற்றுக்கு வந்த புத்தகங்களில் சாருவின் ஜீரோ டிகிரியும் ஒன்று.


இதில் மற்றவை அனைத்தும் ஒரே ஃபார்மேட்டில் இருக்கும் நிலையில் ஓர் உன்னதமான பின் நவீனத்துவமான படைப்பான சீரோ டிகிரி மிக மிக வேறுபட்டு இருப்பதால் அதற்கே பரிசு கிடைக்கும் என இப்போதே பேசப்பட்டு வருகிறது.

மற்ற புத்தகங்களை சாதாரணமாக மதிப்பிட்டு விட முடியாது. கறாராக பரீசிலித்துதான் ஷார்ட் லிஸ்ட் செய்து இருக்கிறார்கள். சீரோ டிகிரி களத்தில் இல்லாவிட்டால், ஒவ்வொரு புத்தகமுமே முதல் பரிசுக்கு தகுதியானவைதான். ஆனால் சீரோ டிகிரி களத்தில் இருப்பதால் , இப்போதே பரிசி உறுதி என்கிறார்கள் நடு நிலையாளர்கள்.

எனக்கும் சீரோ டிகிரிக்கும் இடையேயான தொடர்பு இன்று நேற்றல்ல. பல காலமாக நீடித்து வருகிறது. என் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் படித்து இருக்கிறேன் . வாழ்வின் கஷ்ட நஷ்டங்களை அறியாத பருவம்.,வேலையில்லாமல் கஷ்டப்பட்ட காலகட்டம்., மகிழ்ச்சியான கால கட்டம், இலக்கிய பரிச்சயம் ஏற்பட்ட கால கட்டம் என ஒவ்வொரு நிலையிலும் படிக்கும்போது ஒவ்வொரு உணர்வை தந்து கொண்டு இருக்கிறது சீரோ டிகிரி.

அதனால்தான் இன்னும் அதைப்படித்து கொண்டே இருக்கிறேன். என்னால் என்றுமே முடிக்க முடியாத நாவல் இதுதான்.

என்னிடம் சீரோ டிகிரி பிரதிகள் எத்தனை இருக்கின்றன என எனக்கே தெரியாது. வெவ்வேறு இடங்களில் , வெவ்வேறு சூழ்னிலைகளில் சீரோ டிகிரி காப்பிகளை வாங்கிப்படிப்பது என் வழக்கமாக இருந்து இருக்கிறது.

இத்தனைக்கும் சாரு எழுத்தில் எனக்கு பிடித்தது எக்சைல்தான். அதற்கு பிறகு ராசலீலா. ஆனால் அவை எல்லாம் ஒரு காப்பிதான் இருக்கின்றன. சீரோ டிகிரியில் மற்ற புத்தகங்களில் இல்லாத  வேறு ஏதோ ஒன்று , வரையரை செய்ய முடியாத ஒன்று இருக்கிறது.

என்சைக்களோபீடியாகவாக , கவிதை நூலாக, சிறுகதை தொகுப்பாக , நாவலாக என விதம் விதமாக ரசித்து படித்தாலும் இதை இன்னும் படிக்க முடிக்க முடியவில்லை.

எத்தனையோ வரிகளை மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருக்கலாம்.

  • பூனைக்குட்டிகளை யாராவது வெறுக்க முடியுமா என்ன? கறுப்பு பூனைக்குட்டி , வெள்ளை பூனைக்குட்டி, பழுப்பு பூனைக்குட்டி. பூனைக்குட்டிக்ளை நான் ஆராதிக்கிறேன். முத்தமிடுகிறேன். பூனைக்குட்டிகள் மிகவும் ருசியானவை.
  • ஊசிமுனை வழியே யானையை இழுத்து செல்லும் செப்படி வித்தை - எழுத்து
  • எழுத்து வாழ்க்கையை பற்றியதல்ல, எழுத்து எழுத்தைப் பற்றியது
  • தேசிய கீதத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?   “ நான் அதைப் பிரதியாக பார்க்கிறேன். இலக்கியப்பிரதியாக “   -இந்த பதிலுக்காகவே உங்களுக்கு நோபல் பரிசு கொடுக்கணும். என்ன பதிலு சார். எப்படித்தான் உங்க மூளைல இப்படியெல்லாம் உதிக்குதோ. ம்ம். நானும் அந்த காலத்துல இப்படி இருந்தவன் தான்.
  • தமிழ் மொழி என்பது எத்தனை இனக்குழுக்களின் மொழிகளை ஒழித்துக்கட்டி விட்டு உருவானதென்பது உத்தம தமிழ் எழுத்தாளனுக்கு தெரியுமா?
  • கைக்குள் சிக்கவில்லை
           இருந்தும்
          
            தன் முதல் கவிதையை எழுதிக்கொண்டிருக்கிறது

             மொழி

  • சூன்ய மொழி 
          சீழ் பிடிக்க
         ஒற்றைக் கண்ணில் இருந்து
         ஒழுகியது
         கவிதை

  • இப்படித்தான் இது தோன்றியது எனில் இத்தோற்றங்களின் தோற்றம் எப்படி இருந்தது?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

 நான் ரசித்து படித்த நாவல் உலக அளவில் கவனம் பெற்று இருப்பது மட்டுமே என் மகிழ்ச்சிக்கு காரணம் அல்ல/

இதன் மூலம்  உலக அரங்கில் தமிழும் கவனம் பெறுவது ஒட்டு மொத்த தமிழ் இலக்கியத்துக்கே நல்லது என்ற வகையில் , இதை தமிழ் எழுத்துலக வரலாற்றின் திருப்பு முனையாகவே கருதுகிறேன்.

             ***************

 நான் கருதுவதெல்லாம் இருக்கட்டும். கவிஞர் றியாஸ் குரானா இது குறித்து என்ன சொல்கிறார்?


எனது நேர்காணலில் சாருவுக்கு புக்கர் பரிசு கிடைக்கும் என்று சொன்ன ஞாபகம் வருகிறது. சீரோ டிகிரிக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளது. எனது இனிய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

1. காப்பி அடிப்பவர், எழுத்தை வைத்து மிக மோசமான அரசியலை செய்பவர் என பல விமர்சனங்கள் இருந்தாலும் தமிழிலிருக்கும் மிகக் கவர்ச்சிகரமான, உலகத்தரத்திலான கதைசொல்லி சாரு நிNவேதிதாதான். உலகத்தரத்தில் பலருடைய கதைகள் இருந்தாலும் சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் கொண்டிருக்கின்ற கவர்ச்சி தமிழில் வேறு யாரிடமும் இல்லை. இது நிரந்தரமான ஒரு கருத்து அல்ல. வாசிப்பு விரிவுபடும்போது மதிப்பீடுகளும் மாற்றமடைகின்றன.

2.கவரச்சிகரமான எழுத்து - நீண்ட நேரம் ஒரே வகையான சூழலுக்கள் பார்வையாளரை வைத்திருப்பதில்லை. பலவகையான பொருட்கள் உள்ள ஒரு வியாபார நிலையத்தைப்போல, இங்குமங்குமாக பலவகையான பொருட்களை பரப்பி வைத்திருப்பவை. எல்லா வகையான பார்வையாளர் களுக்குமான சாமான்கள் அங்கு கிடைக்கும்.மிக மோசமானது எனக் கருதப்படுபவைகள் தொடங்கி உயர்தரமானவைகள் என கருதப்படுபவைவரை அங்குண்டு. ஒரே இடத்தில் எல்லாம் பார்வைக்குண்டு. பன்மையான பார்வையாளர்களை அங்கு சந்திக்க செய்யும். விதம் விதமான பார்வையாளர்களை ஒரே இடத்தில் கூட்டிவிடக்கூடிய பிரதி என்பதால் அப்படிச்சொன்னேன். சாருவின் பிரதியைக் கையிலெடுக்கும் ஒருவர் அதை தூக்கிவீசிவிட முடியாது.ஏனெனில், அவர் எதிர்பார்ப்பவைகளும் சிறிதளவிலேனும் அங்கு கிடைக்கும். இது தமிழில் வேறு எந்த எழுத்தாளர்களின் பிரதியிலும் இல்லை. அது ராய் இசைபோல ஒரு கலப்பினம்.

3.உலகத்தரம் - எந்த வகையான கோட்பாட்டு வாசிப்புக்களுக்கும் இடந்தருபவை.கோட்பாடுகளுக்கு அப்பாலும் லைற்றீடிங்குக்கும் இடந்தருபவை. சாருவின் பிரதிகளை வாசிக்கும்போது, எப்போதோ வாசித்த பல கோட்பாடுகள், ரசனை மதிப்பீடகள், சாதாரண செய்திபற்றிய கருத்து நிலைகள் என பலவற்றை மீண்டும் நமக்குள் கிளர்த்துகின்றன. இப்படியான காரணங்களால் அது உலகத்தரமானது என்றும் கூறினேன். உலகத்தரமென்று ஒன்று தனிப்படையான வரையறைகளுக்குள் இல்லை என்று புரிந்திருக்கின்ற நிலையிலே - உலகத்தரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன் என்பதையும் தெரிவிக்கிறேன்.

4.சூப்பர் மாக்கெட்டில் சாமான்கள் பரப்புவதைப்போன்ற அம்சம் மற்றவர்களிடம் இல்லை என்றுதான் சொன்னேன்.மற்றவர்களின் கதைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. மிக மலிவான பொருட்களைக் கொண்டும் பெறுமதிமிக்க ஒன்றை உருவாக்க முடியும் என்பதையே சாரு நிவேதிதாவின் எழுத்துக்களில் பார்க்கிறேன்.அதுவே கவர்ச்சிகரமானதாக எனக்கு தோன்றுகிறது.

5.பெறுமதி - பிரதியை உருவாக்கும் பணியில் வாசகனின் பங்களிப்பை ஏற்பவன் என்ற வகையில், பலவகைப்பட்ட வாசகர்களின் இருப்பையும் ஏற்பவன்.அது அவசியமென்றும் கருதுபவன்.ஆக, பிரதியை அர்த்தப்படுத்தும் வழிகளில் அனைத்து வகை பார்வையாளர்களும் பங்காற்றக்கூடிய இடத்தை தன்னகத்தில் கொண்டிருக்கும் கதைகளாகவே சாருவின் நாவல்களைப் பார்க்கிறேன்.அதுவே அதற்கான பெறுமதி என்றும் கருதுகிறேன்.மற்றப்படி, அகவிரிவாக்கதில் சுயவிமர்சனத்தை தவறவிடும் தருணங்கள் போன்ற உங்கள் ஏனைய விமர்சனங்கள் எனக்கு உடன்பாடனவைதான். அதை நான் எனது நேர்காணலில் சொல்லியிருக்கிறேன்.





Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா