Sunday, February 16, 2014

முன்னாள் கணவனை எப்படி மறப்பது - ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் உரையாடல்

ஜே கிருஷ்ணமூர்த்தி நூல் ஒன்றில் படித்ததை பகிர்கிறேன்..  அதிகாரபூர்வ மொழி பெயர்ப்பு அன்று... நினைவில் இருந்து பகிர்கிறேன்...வரிக்கு வரியெல்லாம் மொழி பெயர்க்கவில்லை...
முழுமையாக படிக்க , அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ள நூல்களை படியுங்கள்..இது சும்மா அறிமுகம் மட்டுமே
****************************************************************


அவள் தன் மூன்று நண்பர்களுடன் வந்து இருந்தாள். அனைவரும் சிரத்தையுடனும் அறிவுக்களையுடனும் இருந்தனர். ஒருவர் சொல்வதை சுலபமாக கிரகிக்கும் தன்மையுடன் இருந்தார். ஒருவர் வேகமாக தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆவலில் பொறுமை இன்றி காணப்பட்டார். ஒருவர் ஆர்வத்துடன் காணப்பட்டார். ஆனால் ஆர்வம் நீடிக்கவில்லை. நல்லதொரு குழுவாக இருந்தனர். தன் தோழிக்கு உதவ வேண்டும் என நினைத்தனர். அவளது பிரச்சனையை பகிர்ந்து கொண்டனர். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக அல்லாமல் அவளுக்கு எது நல்லதோ அதை அவள் செய்ய வேண்டும் என விரும்பினர். என்ன சிக்கல் என்றால் எது நல்லது என அவளுக்கு தெரியவில்லை. குழப்பமுற்று இருந்தாள். ஒத்திப்போடாமல் உடனே முடிவெடுக்க வேண்டிய சூழல்.  ஒரு குறிப்பிட்ட உறவில் இருந்து விலக வேண்டும். இதுதான் அவள் பிரச்சனை.. வந்ததில் இருந்து பல முறை சொல்லி விட்டாள்.

  அறிவுரையையோ ஒரு முடிவையோ எதிர்பார்க்காமல் , பிரச்சனைக்குள் போக அவர்கள் விரும்பினார்கள். பிரச்சனை என்னவென்று புரிந்து விட்டால் , சரியான செயல் என்பது இயல்பாக முழுமையாக நடந்து விடும்.  பிரச்சனையின் உள்ளடக்கத்தை சரியாக புரிந்து கொள்வதே முக்கியம். தீர்வு முக்கியம் அன்று. பிரச்சனையை புரிந்து கொண்டால் போதும். என்ன செய்வது என்பது பிரச்சனைக்குள்ளேயே இருக்கும் விஷயமாகும்.

”  அவருடனான தொடர்பில்  இருந்து விடுபட விரும்புகிறேன் “ என்றாள் அவள்.

விடுபடல் என்பதை எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள்.. எந்த விதத்தில் உங்கள் விடுதலை கட்டுண்டு போய் இருப்பதாக நினைக்கிறீர்கள்? விடுபட விரும்புகிறேன் என சொல்வதில் இருந்து , இப்போது ஏதோ ஒன்றில் கட்டுண்டு போய் இருப்பதாக சொல்ல வருகிறீர்கள். எது உங்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளது?

” உடல் அளவில் நான் சுதந்திரமானவள்தான்.. நான் இப்போது அவர் மனைவி அல்லள்..எங்கு வேண்டுமானாலும் போகலாம் , வரலாம்.. ஆனால் முழுமையாக அவரை விட்டு விலக விரும்புகிறேன் “

உடல் அளவில் சுதந்திரமானவள் என்றால்  வேறு எந்த விதத்தில் இன்னும் அவருடன் பிணைக்கப்பட்டு இருக்கிறீர்கள்?

“ தெரியவில்லை.. அவரை நினைத்தாலே கடும் கோபம் ஏற்படுகிறது.முழுமையாக அவரை மறக்க வேண்டும்”

அவரை மறக்க வேண்டும் என்கிறீர்கள். ஆனால் அவரை நினைத்தால் கோபம் வருகிறது என்கிறீர்கள்.அப்படி என்றால் அவரிடம் இருந்து நீங்கள் விடுபடவில்லை என்று பொருள். ஏன் அவர் மேல் கோபம்

“ அவர் எவ்வளவு கேவலமான மனிதர் என்பது சமீபத்தில்தான் தெரிந்தது..அன்பற்ற தன்மை , சுய நலம் , கேவலமான மன நிலை.ச்சே..இதை கண்டுபிடித்தபோது எனக்கு ஏற்பட்ட வேதனை சொல்லி புரிய வைக்க முடியாது. அவரை எப்படி எல்லாம் நேசித்தேன். என்னையே அர்ப்பணித்தேன்.இப்படி ஒரு கேவலமான மனிதரையா லட்சிய கணவன் என நினைத்தோம் என யோசித்தால் மனம் கொதிக்கிறது . அவரை முழுக்க மறக்க விரும்புகிறேன் “

உடல் அளவில் நீங்கள் அவரை விட்டு விலகி இருக்கலாம். ஆனால் உங்கள் மனதில் இந்த கோபம் இருக்கும் வரை அவரைவிட்டு விலகியதாக கருத முடியாது. அவர் மேல் கோபம் என்பதும் ஒரு வகை பிணைப்புதான்.

உண்மையில் கோபம் அவர் மீதா , உங்கள் மீதா.. அவர் எப்படியோ , அப்படித்தான் இருக்கிறார். அவர் இயல்புப்படி அவர் இருக்கிறார். இதில் கோபப்பட என்ன இருக்கிறது?  அவரது மோசமான மனம் தெரிந்ததும் , இவரைபோய் நேசித்தோமே என உங்கள் மேல்தான் நீங்கள் கோபப்படுகிறீர்கள். உங்களை நினைத்து அவமானப்படுகிறீர்கள்..ஆனால் இதை ஒப்புக்கொள்ள மனம் இன்றி அவர் மேல் கோபப்படுவதாக காட்டிக்கொள்கிறீர்கள்.. அவர் தன் இயல்புப்படி இருந்து விட்டு போகிறார். அதற்காக அவர் மீது கோபப்பட முடியுமா?

“ ஆமா..உண்மைதான் “

இதை நீங்கள் முழுமையாக உணர்ந்தால் உங்கள் கோபம் மறையும்..அவரை வெறுக்க மாட்டீர்கள். வெறுப்பும் காதலைப்போன்ற ஒரு பிணைப்புதான்.

“ உண்மைதான்.. சரி...  இந்த வெறுப்பை நான் எப்படி நீக்குவது? “

ஏன் இந்த வெறுப்பை  நீக்க விரும்புகிறீர்கள் என்பதை கவனியுங்கள்..அதுதான் முக்கியம்..  எப்படி என்பது  இரண்டாம்படசம்தான்..

” அவரை நினைத்தாலே எரிச்சலாக இருக்கிறது.. இது போதுமான காரணமாகாதா ? “

” இல்லை..அவரை நினைத்தால் எரிச்சலாக இருக்கிறது என்பது மட்டும்போதுமான காரணம் அன்று.பழசை மறப்பது மட்டும் தீர்வாகாது “

” என்ன இப்படி சொல்கிறீர்கள்..பிரச்சனை ஏற்கனவே சிக்கலாக இருக்கிறது.. மேலும் சிக்கல் ஆக்காதீர்கள்”

பொறுமையாக கவனியுங்கள்.. பழசை மறந்தால் நிம்மதியாக இருக்க முடியும் என கருதுகிறீர்கள்.துன்பகரமான நினைவுகளாக இருக்கலாம்.. ஆனால் ஏன் மறக்க வேண்டும். ந்ம்மைப்பற்றி உய்ரவாக நினைத்து இருப்போம். அந்த எண்ணத்திற்கு அடி விழும்போது கலங்கி போகிறோம். இந்த அடியோ வீழ்ச்சியோ முக்கியம் இல்ல.. நம்மைப்பற்றி உயர்வாக நினைத்தோமே .இதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நம்மை உயரத்தில் வைத்துக்கொள்ளாத பட்சத்தில் வீழ்வது என்ற பேச்சே இல்லையே..சுய பெருமிதம் , லட்சியவாதம் என்பதெல்லாம் எதற்கு.. நாமும் சாதாரண ஆள்தான் என்பது புரிந்து விட்டால், வீழ்ச்சியை எல்லாம் பெரிதாக நினைக்க மாட்டோம். உங்களைப்பற்றிய எந்த எண்ணமும் இல்லாவிட்டால் , வாழ்க்கையை என்ன நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வீர்கள்.என்ன நடக்கிறதோ அதை தவிர்த்துவிட்டு , அப்படி செய்து இருக்கலாமே ,இப்படி செய்து இருக்கலாமே என கற்பனையில் வாழ ஆரம்பிப்பதுதான் கோபம் , வெறுப்பு போன்றவற்றுக்கு காரணமாகிறது.

நீங்கள் யாரோ அதை அப்படியே புரிந்து கொண்டு வாழுங்கள். இல்லாத ஒன்றை நினைக்காதீர்கள்..இருப்பதை நிராகரிக்கவும் செய்யாதீர்கள். பயம்  , கவலை இருந்தால் தனிமைப்பட்டு போய் விடுவீர்கள்..இவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு நிகழ் காலத்தில் வாழுங்கள்.. நிகழ்காலத்தை  நேசியுங்கள்.அப்போது காலம் அழிந்து விடும். இறந்த காலம் அப்போது உங்களை கஷ்டப்படுத்தாது..






Friday, February 14, 2014

தியானம் போன்ற மன விளையாட்டுகள் மூலம் உண்மையை உணர முடியாது- ஜே கிருஷ்ணமூர்த்தி

ஜே கிருஷ்ணமூர்த்தி உரை ஒன்றில் இருந்து...ஆழ் மனம் , பிரஞ்ஞை , கனவு , தியானம் போன்றவற்றைப்பற்றி எல்லாம் நமக்கு இருக்கும் கருத்துகளை அடித்து நொறுக்குகிறார்...

இதை உடனே ஏற்கவோ மறுக்கவோ செய்யாமல் , சும்மா கவனியுங்கள்

*************************************************************

இறந்த காலம் எந்த அளவுக்கு நம்மை ஆக்ரமித்து உள்ளது என்பதை கவனித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது... ஆனால் உண்மையில் இறந்த காலம் நம்மை ஆக்ரமித்து இருக்கவில்லை.. நாமே இறந்த காலமாக இருக்கிறோம். இறந்த காலம் என்பது மிகவும் சிக்கலானது.. நல்லது கெட்டது என பல்வேறு நினைவு அடுக்குகளால் ஆனது இது. இரவும் பகலுமாக இது நம்மை சூழ்ந்துள்ளன இந்த நினைவுகள்.. வெகு அபூர்வமாக கொஞ்ச நேரம் இதன் பிடியில் இருந்து தப்பித்து ஒளியை தரிசிக்கிறோம்.

இறந்த காலம் என்பது நிழல் போன்றது. எல்லாவற்றையும் களை இழந்தும் , வண்ணங்களை இழந்தும் நமக்கு காட்டுகிறது  இந்த நிழலின் பிடியில் சிக்கி நிகழ் காலம் தன் புத்துணர்வை , தெளிவை இழக்கிறது. இதன் விளைவாக எதிர்காலமும் இதன் தொடர்ச்சியாகவே அமைந்து விடுகிறது.

இறந்த காலம் , நிகழ் காலம் , எதிர் காலம் - இந்த மூன்றும் நினைவு எனும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கின்றன.. ஒரு கம்பத்தில் கட்டிப்போடப்பட்ட விலங்கு போல , எண்ணம் இறந்த காலம் ,  எதிர்காலம் என அலைந்து கொண்டே இருக்கிறது. இப்படி எண்ணம் என்னதான் அலைந்தாலும் , அது குறிப்பிட்ட எல்லையை விட்டு தாண்டி போக முடியாது.. இப்படி முன்னும் பின்னும் அலைவதே மனதின் வேலை.. இப்படி அலைவதுதான் மனம் என்றும் சொல்லலாம். இப்படி அலைதல் இல்லாத பட்சத்தில் மனமே இல்லை.. மனம் என்பது அதன் உள்ளடக்கம்தான்.  புகழ், தேசம் , கடவுள் , குரு , மது , ஆத்திகம் , நாத்திகம் என உள்ளடக்கம் எதுவாகிலும் இருக்கலாம்.. ஆனால் எல்லாம் ஒன்றே.. கடவுள் இருக்கிறார் என நினைப்பதற்கும் கடவுள் இல்லை என நினைப்பதற்கும் வித்தியாசம் இல்லை. இரண்டுமே வெறுமையானவைதான்.

ஏதாவது ஒன்றை நினைக்கும்போதுதான் மனம் தான் ஏதோ வேலை செய்வதாக நினைக்கிறது.. தன் இருப்பை உணர்கிறது. எதாவது ஒன்றை அடைய நினைக்கிறது,.அல்லது எதையாவது விட்டுக்கொடுத்து தியாகி என்ற பெருமையை அடைய முயல்கிறது.

ஏதாவது ஒன்றுடன் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே மனதின் ஆவல்..எதில் ஈடுபடுகிறது என்பது முக்கியம் அல்ல... எதிலாவது ஈடுபட வேண்டும்..அதுவே முக்கியம்.எந்த அளவுக்கு சமூக முக்கியத்துவம் இருக்கிறதோ அந்த அளவுக்கு முனைப்புடன் மனம் அதில் ஈடுபடும்.  அறிவு , சமுதாய சீர்திருத்தம் , கடவுள் என எதிலாவது ஈடுபட்டுக்கொண்டே இருப்பது மனதின் இயல்பு.

இப்படி ஈடுபட எதுவும் இல்லையென்றால் மனமே இல்லை..எனவே மனம் இந்த நிலையை விரும்பாது.

கனவு என்பது மனதின் இன்னொரு விளையாட்டு ஆகும்.  நாம் அன்றாட வேலைகளை கவனிக்கும்போது , விழிப்பு நிலையில் இராத மனதின் இன்னொரு பகுதியின் வேலைதான் இது...இதுவும் மனதின் நீட்சிதான். மனதுக்கு அப்பாற்பட்ட ஒன்று அன்று. மேல் மனம் , ஆழ் மனம் எல்லாம் அடிபடையில் ஒன்றுதான்.

ஒரு முடிவை தேடி பயணித்தல் என்பது ஏற்கனவே இருப்பதன் தொடர்ச்சியே ஆகும். இப்படிப்பட்ட மனம் ஒரு போதும் இறக்காது. இறப்பு இல்லாவிடில் புதிதாக பிறப்பது என்பது இல்லை.

மனதின் வேலைகள் முடிவுக்கு வருவதுதான் , அமைதியின் ஆரம்பம், மனம் ஒருபோதும் அமைதியை உணர் முடியாது.. தியானம் போன்ற மன விளையாட்டுகள் மூலம் ஒரு போதும் அமைதியை அடைய முடியாது.  அமைதி என்றால் என்ன என மனம் ஏற்கனவே கற்பனை செய்து வைத்து இருப்பதை அடையலாம்..உண்மையான அமைதியை உணர முடியாது.

ஆழ்மனம் , கனவு மனம் போன்றவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் இந்த பூரண அமைதி. ஆழ்மனம் என்பதற்கு புனிதம் ஏதும் இல்லை... இதுவும் கடந்த காலத்தின் எச்சம்தான். இந்த எச்சம் ஒரு போதும் உண்மையை உணர்த்தாது. ஆனால் உண்மையைப்பற்றி கனவு காணும் ஆற்றல் இதற்கு உண்டு.. இந்த கனவு ஒரு போதும் உண்மை ஆகாது.

பல நேரங்களில் கனவையே உண்மையாக கொள்கிறோம்..உண்மையில் கனவும் , அந்த கனவை காண்போனும் மனதின் உருவாக்கங்கள் மட்டுமே.


Monday, February 10, 2014

சாரு அதிரடி - மகாபாரதம் ராமாயணம் எழுத நான் எதற்கு, நான் எழுதப்போவது வேறு


  சாருவை அவ்வப்போது சந்திப்பது வழக்கம் என்றாலும் சில சந்திப்புகள் மறக்க முடியாத சந்திப்புகளாகி விடுவதுண்டு. அப்படி ஒரு முக்கியமான சந்திப்பு சென்ற சனிக்கிழமை நடந்தது..

ஒரு விஷயத்தை நாம் பார்ப்பதற்கும் ஓர் இலக்கியவாதி பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு.. நாளை மற்றும் நாளே , ஜேஜே சில குறிப்புகள் போன்றவற்றையெல்லாம் படித்து அசந்து போன நாட்கள் எல்லாம் உண்டு.. அவை ஏன் மோசமான படைப்புகள் என சாரு சொன்னபின் படித்து பார்த்தபோதுதான் உணர முடிந்தது..

ஓநாய் குலச்சின்னம் நன்றாக எழுதப்பட்ட நாவல்தான்.ஆனால் அதன் நோக்கம் ஆபத்தனாது என்பதை தன் பார்வையில் விளக்கினார்..வீரபாண்டியன் மனைவி ஏன் படிக்க வேண்டிய முக்கியமான நாவல் என்பது பற்றி பேசினார்.

மொழி பெயர்ப்பு , சில மொழி பெயர்ப்பாளர்களின் தவறுகள் , ஷோபா சக்தியின் தங்கரேகை சிறுகதை என இலக்கிய விவாதங்கள் ஓடின என்றால் மற்ற ஜாலியான பேச்சுகளும் ஓடிக்கொண்டு இருந்தன.. நான் ஸ்டாப் சிரிப்பு ,கும்மாளம் என ஒவ்வொரு கணமும் கொண்டாட்டமாக கழிந்தது.. சமீப நாட்களில் நான் இது போல சிரித்ததே இல்லை..

இப்படி இலக்கியத்தரமாக பேசும் அவர் திடீரென குழந்தையாக மாறி என்னுடன் ஹாண்ட் ரெஸ்ட்லிங் மோதிப்பார்க்க தயாரா என சவால் விட்டார்..

குழந்தை , அடல்ட் , பொறுப்புள்ள எழுத்தாளர் என அடுத்தடுத்து காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன..

 நான் , கணேசன் அன்பு , நிர்மல் போன்றோர் ஐந்து மணிக்கெல்லாம் போய் விட்டோம். சாருவும் கரக்ட்டாக வந்து விட்டார்.

எதிர்பாராத இனிய வரவாக அமைந்தது லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அவர்களின் வருகை..
இவரெல்லாம் இணைய உலகில் ஆதி காலத்தில் இருந்தே இருப்பவர். சினிமா , எழுத்து என பல்துறை விற்பன்னர். அந்த காலத்தில் இருந்தே அவரை ரசித்து வருபவன் நான். சாருவும் இவரும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து இந்த சந்திப்பு நிகழ்ந்தது.. இவரது அனுபவங்கள் ,  பார்வைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன.

 நள்ளிரவுவாக்கில் செல்வகுமார் கணேசன் வந்தார். வந்ததும் உடனே சூழலில் தன்னை பொருத்திகொண்டு ஆரோக்கியமான வாதங்களை எடுத்து வைத்தார்.
ஷோபா சக்தியின் தங்க ரேகை குறித்தான இவர் பார்வை சிறப்பாக இருந்தது.

கணேசன் அன்பு ஓநாய் குலச்சின்னம் நாவலின் ஒவ்வொரு வரியையும் நினைவு வைத்து பேசினார்.. சாரு சொல்வதை எதிர்த்து தைரியமாக தன் கருத்துகளை எடுத்து வைத்தார். அவர் சொல்வதை சாருவே கவனித்து கேட்டார். யாரேனும் குறுக்கிட முயன்றால் கூட , அவர் பேசட்டும் என்றார் சாரு..


அவரது அடுத்த படைப்பு குறித்து கேட்டோம்.. எல்லோருக்கும் தெரிந்த மகாபாரத்தை சிலர் அப்படியே மீண்டும் எழுதி எரிச்சல் படுத்துகிறார்களே... நீங்கள் ராமாயணம் எழுதுவீர்களா என்றோம்.

எல்லோருக்கும் தெரிந்தவற்றை எழுத நான் எதற்கு.. யூதாசின் பார்வையில் யூதாஸ் பற்றி எழுதப்போகிறேன். தமிழுக்கு அது புதிதாக இருக்கும்.. யூதாசின் மன ஓட்டம் , வாதைகள் , கனவுகள் , துரோகம் , அன்பு , பக்தி என வேறொரு பார்வை உங்களுக்கு கிடைக்கும் என்றார் சாரு..

யூதாஸ் குறித்து சாரு

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா