Wednesday, November 30, 2011

இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்

இஸ்லாமும் அறிவியலும் என்ற தலைப்பில் இப்போது எழுத வேண்டிய அவசியம் என்னவென நீங்கள் நினைக்கலாம்..

இதைப்பற்றி விவாதிக்க வேண்டியவர்கள் அறிவியல் அறிஞர்களும், இஸ்லாமிய அறிஞர்களும்தான். என் வேலை கவனிப்பது மட்டுமே.

ஆனால் நண்பர் ஒருவர் எனக்கு பின்னூட்டம் இட்டு இருந்தார். இஸ்லாம் என்பது அறிவியலுக்கு புறம்பானது என்பது அவர் வாதம்.

இதை நாகரிகமான வார்த்தைகளால் அவர் சொல்லி இருந்ததால் பின்னூட்டத்தை வெளியிட வேண்டி இருந்தது,  ஒருவருக்கு என்ன கருத்து வேண்டுமானாலும் இருக்கலாம். நாகரிகமாக சொன்னால் , அதை கேட்பது நம் கடமை. ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விஷ்யம்.

இப்படி பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டதால் என் கருத்தையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பின்னூட்டத்தை ஏற்கிறேனா இல்லையா என்பதை சொல்லி ஆக வெளிப்படையாக சொல்லாமல் , கள்ள மவுனம் சாதிக்கும் கபட நாடகத்தை நான் விரும்பவில்லை.

சரியோ தவறோ , யாரும் ஏற்கிறார்களோ இல்லையோ, என் கருத்தை சொல்லியாக வேண்டும்.

சொல்கிறேன்.

  ஒரு கால கட்டத்தில் அறிவியல் என்பது மிகப்பெரிய விஷயம். அறிவியல் பூர்வ உண்மையே முழு உண்மையாக , இறுதி உண்மையாக ஏற்கப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில் இறுதி அறிவியல் உண்மை என்று எதுவும் இல்லை.
ஒரு காலத்தில் பூமி தட்டையானது என்று அனறைய அறிவியல் அறிஞர்கள் சொன்னார்கள். அதற்கு நிரூபணமும் காட்டினார்கள்.

ஆனால் சில ஆண்டுகளில் அது தவறு என கண்டறியப்பட்டு அந்த “ அறிவியல் “ உண்மைகள் தூக்கி எறியப்பட்டன.

சென்ற மாதம் வரை ஐன்ஸ்டீனின் கொள்கைகள் வேத வாக்காக இருந்தன, ஒளியின் வேகத்தை விட எதுவும் செல்ல முடியாது என கருதப்பட்டது.

ஆனால் இன்றைய நவீன கருவிகள் மூலம் அந்த கொள்கைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆக, அறிவியல் சொல்லும் “ உண்மைகளை “ வைத்து எந்த முடிவுக்கும் வர இயலாது.

இன்றைய நிலையில் அது உண்மை என்ற அளவுக்கே அறிவியலுக்கு மரியாதை.

இது என் கருத்து அன்று.

ஸ்டீவன் ஹாக்கிங் தன் நூலில் ( கிராண்ட் டிசைன் ) இப்படி சொல்கிறார்.

இப்போதைய கருவிகளின் திறனுக்கேற்ப, இப்போதைய நம் அறிவுக்கேற்ப சில உண்மைகளை கண்டு பிடிக்கிறோம். ஆக அறிவியல் உண்மை என்பது, சில விசேஷ சூழ்னிலைகளுக்கு உட்பட்ட உண்மை என்பது அவர் கருத்து,
இது உறுதியானதோ, இறுதியானதோ அல்ல.


ஆனால் ஆன்மீக நூல்கள் கூறும் உண்மைகள் இறுதியானவை.

ஆனால் நாம் செய்யும் தவறு என்னவென்றால், அறிவியல் செய்திகளை அவற்றில் நேரடியாக தேடுவதுதான்.

e= mc2 என்ற ஃபார்முலாவை அதில் தேடினால் கிடைக்காது.  அவற்றின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவது அல்ல.. வாழ்க்கையை போதிக்கின்றன அவை, அறிவியல் உண்மைகள் ஆங்காங்கு சொல்லப்படுகின்றன.

அந்த அறிவியல் உண்மைகள் , சைன்ஸ் பாடத்தில் இருப்பது போல நேரடியாக இருக்காது. ஏனென்றால் அவை அறிவியல் பாட புத்தகம் அல்ல.


ஓகே.. இந்த குர் ஆன் வசனத்தை கவனியுங்கள்.

வானமும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் , அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் , ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து  நாமே அமைத்தோம் என்பதையும் , மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? ( 21.30 )

இதை சாதாரண ஒருவர் படித்தால் , கவிதை போல தோன்றும். ஆனால் சற்று அறிவியல் நூல்களை படித்தவர்களுக்கு வேறோரு கோணம் புலப்படும்.

50 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் புத்தகங்கள் படித்தால் ஒன்றும் புலப்படாது. லேட்டஸ்ட் புத்தகங்கள் படித்தால் , ஆச்சர்யமாக இருக்கும்

உன்மையில் ஒரு காலத்தில் எல்லாம் இணைந்துதான் இருந்தன என்கிறார் ஹாக்கிங்.

ஒரு கட்டத்தில் பிரிந்தன. ஏன் பிரிந்தன.. பிரிய வேண்டும் என ஏன் தீர்மானித்தன என்பது புரியவில்லை என்கிறார் அவர்.

இந்த பின்னணியில் மேற்கண்ட வசனத்தை பாருங்கள்..



தண்ணீரில் இருந்து என்பதும் முக்கியமானது. உயிரிகள் தண்ணீரில் இருந்துதான் தோன்றின என்கிறது அறிவியல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வசனத்தை பாருங்கள்

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும் , பூமியையும் இரண்டு நாட்களில் படைத்தான் ( 7.54 )

அது எப்படி இரண்டு நாட்களில் படைக்க முடியும் என மேலோட்டமாக படிப்பவர்களுக்கு தோன்றும்..

ஆனால் அறிவியல் படித்தவர்கள் இதில் இருக்கும் உள் அர்த்தத்தையும் , சொல் அழகையும் பார்த்து ஆச்சர்யப்பட முடியும்.

காலம் என்பது நாம் நினைப்பது போல மாறாத ஒன்று அன்று.

இந்த இடுகையை அரை  மணி நேரம் செலவு செய்து நான் டைப் செய்கிறேன். இதே அரை மணி நேரத்தில் நீங்கள் , உங்கள் மனைவி துணிகளை துவைத்து கொண்டு இருக்கலாம், பெண் தோழியிடம் பேசிக்கொண்டு இருக்கலாம். உங்களுக்கு அரை மணி நேரம் ஆகும்போது எனக்கும் அரை மணி நேரம் ஆகும் . தமன்னாவுக்கும் அரை மணி நேரம் ஆகும். நேரம் மாறாத ஒன்று என நினைக்கிறோம்.

தவறு.

ஒளியின் வேகத்தில் ஒருவர் செல்கிறார் என்றால் , அவரது அரை மணி நேரமும் , உங்கள் அரை மணி நேரமும் ஒன்றாக இருக்காது. உங்களுக்கு ஒரு வருடம் ஆகி இருக்கும், ஆனால் அவருக்கோ ஒரு மணி நேரமும் ஆகி இருக்கும்..

வகுப்பறையில் ஒரு மணி நேரம் , ஒரு யுகமாக தோன்றும். ஆண் தோழனுடன்

அல்லது பெண் தோழியிடம் பேசும் போது ஒரு மணி நேரம் , ஒரு நிமிடன் போல தோன்றும். அது வேறு. இது வெறும் தோற்றம்தான்.

சில சூழ் நிலைகளில் உண்மையாகவே காலம் , ஒவ்வொருவருக்கும் மாறக்க்கூடும்.
அந்த வகையில், மேற்கண்ட வசனத்தில் வரும் இரண்டு நாட்கள், நாம் அன்றாட வாழ்வில் காணும் இரண்டு நாட்கள் அல்ல.


இதை பாருங்கள்

வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்.  நிச்சயம் அவற்றை விரிவாக்கம் செய்பவராவோம். ( 51.57 )

இதையுமே சென்ற நூற்றாண்டு அறிவியல் அறிஞர்கள் கிண்டல் செய்து இருக்க கூடும்.

ஆனால் இன்றைய அறிவியல் , பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது.


பூமி , வானம் எல்லாம் எப்போதுமே இருந்து வருகின்றன என்பது சிலர் வாதம். அப்படி இருக்க வாய்ப்பில்லை என்கிறது இன்றைய அறிவியல்.

சில வசனங்கள் , அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளன என்பது உண்மைதான், ஆனால் வருங்கால அறிவியல் அவற்றையும் உண்மையாக்கும் . அப்படித்தான் இது வரை நடந்துள்ளது.

என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று.








இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்

இஸ்லாமும் அறிவியலும் என்ற தலைப்பில் இப்போது எழுத வேண்டிய அவசியம் என்னவென நீங்கள் நினைக்கலாம்..

இதைப்பற்றி விவாதிக்க வேண்டியவர்கள் அறிவியல் அறிஞர்களும், இஸ்லாமிய அறிஞர்களும்தான். என் வேலை கவனிப்பது மட்டுமே.

ஆனால் நண்பர் ஒருவர் எனக்கு பின்னூட்டம் இட்டு இருந்தார். இஸ்லாம் என்பது அறிவியலுக்கு புறம்பானது என்பது அவர் வாதம்.

இதை நாகரிகமான வார்த்தைகளால் அவர் சொல்லி இருந்ததால் பின்னூட்டத்தை வெளியிட வேண்டி இருந்தது,  ஒருவருக்கு என்ன கருத்து வேண்டுமானாலும் இருக்கலாம். நாகரிகமாக சொன்னால் , அதை கேட்பது நம் கடமை. ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விஷ்யம்.

இப்படி பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டதால் என் கருத்தையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பின்னூட்டத்தை ஏற்கிறேனா இல்லையா என்பதை சொல்லி ஆக வெளிப்படையாக சொல்லாமல் , கள்ள மவுனம் சாதிக்கும் கபட நாடகத்தை நான் விரும்பவில்லை.

சரியோ தவறோ , யாரும் ஏற்கிறார்களோ இல்லையோ, என் கருத்தை சொல்லியாக வேண்டும்.

சொல்கிறேன்.

  ஒரு கால கட்டத்தில் அறிவியல் என்பது மிகப்பெரிய விஷயம். அறிவியல் பூர்வ உண்மையே முழு உண்மையாக , இறுதி உண்மையாக ஏற்கப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில் இறுதி அறிவியல் உண்மை என்று எதுவும் இல்லை.
ஒரு காலத்தில் பூமி தட்டையானது என்று அனறைய அறிவியல் அறிஞர்கள் சொன்னார்கள். அதற்கு நிரூபணமும் காட்டினார்கள்.

ஆனால் சில ஆண்டுகளில் அது தவறு என கண்டறியப்பட்டு அந்த “ அறிவியல் “ உண்மைகள் தூக்கி எறியப்பட்டன.

சென்ற மாதம் வரை ஐன்ஸ்டீனின் கொள்கைகள் வேத வாக்காக இருந்தன, ஒளியின் வேகத்தை விட எதுவும் செல்ல முடியாது என கருதப்பட்டது.

ஆனால் இன்றைய நவீன கருவிகள் மூலம் அந்த கொள்கைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆக, அறிவியல் சொல்லும் “ உண்மைகளை “ வைத்து எந்த முடிவுக்கும் வர இயலாது.

இன்றைய நிலையில் அது உண்மை என்ற அளவுக்கே அறிவியலுக்கு மரியாதை.

இது என் கருத்து அன்று.

ஸ்டீவன் ஹாக்கிங் தன் நூலில் ( கிராண்ட் டிசைன் ) இப்படி சொல்கிறார்.

இப்போதைய கருவிகளின் திறனுக்கேற்ப, இப்போதைய நம் அறிவுக்கேற்ப சில உண்மைகளை கண்டு பிடிக்கிறோம். ஆக அறிவியல் உண்மை என்பது, சில விசேஷ சூழ்னிலைகளுக்கு உட்பட்ட உண்மை என்பது அவர் கருத்து,
இது உறுதியானதோ, இறுதியானதோ அல்ல.


ஆனால் ஆன்மீக நூல்கள் கூறும் உண்மைகள் இறுதியானவை.

ஆனால் நாம் செய்யும் தவறு என்னவென்றால், அறிவியல் செய்திகளை அவற்றில் நேரடியாக தேடுவதுதான்.

e= mc2 என்ற ஃபார்முலாவை அதில் தேடினால் கிடைக்காது.  அவற்றின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவது அல்ல.. வாழ்க்கையை போதிக்கின்றன அவை, அறிவியல் உண்மைகள் ஆங்காங்கு சொல்லப்படுகின்றன.

அந்த அறிவியல் உண்மைகள் , சைன்ஸ் பாடத்தில் இருப்பது போல நேரடியாக இருக்காது. ஏனென்றால் அவை அறிவியல் பாட புத்தகம் அல்ல.


ஓகே.. இந்த குர் ஆன் வசனத்தை கவனியுங்கள்.

வானமும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் , அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் , ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து  நாமே அமைத்தோம் என்பதையும் , மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? ( 21.30 )

இதை சாதாரண ஒருவர் படித்தால் , கவிதை போல தோன்றும். ஆனால் சற்று அறிவியல் நூல்களை படித்தவர்களுக்கு வேறோரு கோணம் புலப்படும்.

50 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் புத்தகங்கள் படித்தால் ஒன்றும் புலப்படாது. லேட்டஸ்ட் புத்தகங்கள் படித்தால் , ஆச்சர்யமாக இருக்கும்

உன்மையில் ஒரு காலத்தில் எல்லாம் இணைந்துதான் இருந்தன என்கிறார் ஹாக்கிங்.

ஒரு கட்டத்தில் பிரிந்தன. ஏன் பிரிந்தன.. பிரிய வேண்டும் என ஏன் தீர்மானித்தன என்பது புரியவில்லை என்கிறார் அவர்.

இந்த பின்னணியில் மேற்கண்ட வசனத்தை பாருங்கள்..



தண்ணீரில் இருந்து என்பதும் முக்கியமானது. உயிரிகள் தண்ணீரில் இருந்துதான் தோன்றின என்கிறது அறிவியல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வசனத்தை பாருங்கள்

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும் , பூமியையும் இரண்டு நாட்களில் படைத்தான் ( 7.54 )

அது எப்படி இரண்டு நாட்களில் படைக்க முடியும் என மேலோட்டமாக படிப்பவர்களுக்கு தோன்றும்..

ஆனால் அறிவியல் படித்தவர்கள் இதில் இருக்கும் உள் அர்த்தத்தையும் , சொல் அழகையும் பார்த்து ஆச்சர்யப்பட முடியும்.

காலம் என்பது நாம் நினைப்பது போல மாறாத ஒன்று அன்று.

இந்த இடுகையை அரை  மணி நேரம் செலவு செய்து நான் டைப் செய்கிறேன். இதே அரை மணி நேரத்தில் நீங்கள் , உங்கள் மனைவி துணிகளை துவைத்து கொண்டு இருக்கலாம், பெண் தோழியிடம் பேசிக்கொண்டு இருக்கலாம். உங்களுக்கு அரை மணி நேரம் ஆகும்போது எனக்கும் அரை மணி நேரம் ஆகும் . தமன்னாவுக்கும் அரை மணி நேரம் ஆகும். நேரம் மாறாத ஒன்று என நினைக்கிறோம்.

தவறு.

ஒளியின் வேகத்தில் ஒருவர் செல்கிறார் என்றால் , அவரது அரை மணி நேரமும் , உங்கள் அரை மணி நேரமும் ஒன்றாக இருக்காது. உங்களுக்கு ஒரு வருடம் ஆகி இருக்கும், ஆனால் அவருக்கோ ஒரு மணி நேரமும் ஆகி இருக்கும்..

வகுப்பறையில் ஒரு மணி நேரம் , ஒரு யுகமாக தோன்றும். ஆண் தோழனுடன்

அல்லது பெண் தோழியிடம் பேசும் போது ஒரு மணி நேரம் , ஒரு நிமிடன் போல தோன்றும். அது வேறு. இது வெறும் தோற்றம்தான்.

சில சூழ் நிலைகளில் உண்மையாகவே காலம் , ஒவ்வொருவருக்கும் மாறக்க்கூடும்.
அந்த வகையில், மேற்கண்ட வசனத்தில் வரும் இரண்டு நாட்கள், நாம் அன்றாட வாழ்வில் காணும் இரண்டு நாட்கள் அல்ல.


இதை பாருங்கள்

வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்.  நிச்சயம் அவற்றை விரிவாக்கம் செய்பவராவோம். ( 51.57 )

இதையுமே சென்ற நூற்றாண்டு அறிவியல் அறிஞர்கள் கிண்டல் செய்து இருக்க கூடும்.

ஆனால் இன்றைய அறிவியல் , பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது.


பூமி , வானம் எல்லாம் எப்போதுமே இருந்து வருகின்றன என்பது சிலர் வாதம். அப்படி இருக்க வாய்ப்பில்லை என்கிறது இன்றைய அறிவியல்.

சில வசனங்கள் , அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளன என்பது உண்மைதான், ஆனால் வருங்கால அறிவியல் அவற்றையும் உண்மையாக்கும் . அப்படித்தான் இது வரை நடந்துள்ளது.

என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று.








இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்

இஸ்லாமும் அறிவியலும் என்ற தலைப்பில் இப்போது எழுத வேண்டிய அவசியம் என்னவென நீங்கள் நினைக்கலாம்..

இதைப்பற்றி விவாதிக்க வேண்டியவர்கள் அறிவியல் அறிஞர்களும், இஸ்லாமிய அறிஞர்களும்தான். என் வேலை கவனிப்பது மட்டுமே.

ஆனால் நண்பர் ஒருவர் எனக்கு பின்னூட்டம் இட்டு இருந்தார். இஸ்லாம் என்பது அறிவியலுக்கு புறம்பானது என்பது அவர் வாதம்.

இதை நாகரிகமான வார்த்தைகளால் அவர் சொல்லி இருந்ததால் பின்னூட்டத்தை வெளியிட வேண்டி இருந்தது,  ஒருவருக்கு என்ன கருத்து வேண்டுமானாலும் இருக்கலாம். நாகரிகமாக சொன்னால் , அதை கேட்பது நம் கடமை. ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விஷ்யம்.

இப்படி பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டதால் என் கருத்தையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பின்னூட்டத்தை ஏற்கிறேனா இல்லையா என்பதை சொல்லி ஆக வெளிப்படையாக சொல்லாமல் , கள்ள மவுனம் சாதிக்கும் கபட நாடகத்தை நான் விரும்பவில்லை.

சரியோ தவறோ , யாரும் ஏற்கிறார்களோ இல்லையோ, என் கருத்தை சொல்லியாக வேண்டும்.

சொல்கிறேன்.

  ஒரு கால கட்டத்தில் அறிவியல் என்பது மிகப்பெரிய விஷயம். அறிவியல் பூர்வ உண்மையே முழு உண்மையாக , இறுதி உண்மையாக ஏற்கப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில் இறுதி அறிவியல் உண்மை என்று எதுவும் இல்லை.
ஒரு காலத்தில் பூமி தட்டையானது என்று அனறைய அறிவியல் அறிஞர்கள் சொன்னார்கள். அதற்கு நிரூபணமும் காட்டினார்கள்.

ஆனால் சில ஆண்டுகளில் அது தவறு என கண்டறியப்பட்டு அந்த “ அறிவியல் “ உண்மைகள் தூக்கி எறியப்பட்டன.

சென்ற மாதம் வரை ஐன்ஸ்டீனின் கொள்கைகள் வேத வாக்காக இருந்தன, ஒளியின் வேகத்தை விட எதுவும் செல்ல முடியாது என கருதப்பட்டது.

ஆனால் இன்றைய நவீன கருவிகள் மூலம் அந்த கொள்கைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆக, அறிவியல் சொல்லும் “ உண்மைகளை “ வைத்து எந்த முடிவுக்கும் வர இயலாது.

இன்றைய நிலையில் அது உண்மை என்ற அளவுக்கே அறிவியலுக்கு மரியாதை.

இது என் கருத்து அன்று.

ஸ்டீவன் ஹாக்கிங் தன் நூலில் ( கிராண்ட் டிசைன் ) இப்படி சொல்கிறார்.

இப்போதைய கருவிகளின் திறனுக்கேற்ப, இப்போதைய நம் அறிவுக்கேற்ப சில உண்மைகளை கண்டு பிடிக்கிறோம். ஆக அறிவியல் உண்மை என்பது, சில விசேஷ சூழ்னிலைகளுக்கு உட்பட்ட உண்மை என்பது அவர் கருத்து,
இது உறுதியானதோ, இறுதியானதோ அல்ல.


ஆனால் ஆன்மீக நூல்கள் கூறும் உண்மைகள் இறுதியானவை.

ஆனால் நாம் செய்யும் தவறு என்னவென்றால், அறிவியல் செய்திகளை அவற்றில் நேரடியாக தேடுவதுதான்.

e= mc2 என்ற ஃபார்முலாவை அதில் தேடினால் கிடைக்காது.  அவற்றின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவது அல்ல.. வாழ்க்கையை போதிக்கின்றன அவை, அறிவியல் உண்மைகள் ஆங்காங்கு சொல்லப்படுகின்றன.

அந்த அறிவியல் உண்மைகள் , சைன்ஸ் பாடத்தில் இருப்பது போல நேரடியாக இருக்காது. ஏனென்றால் அவை அறிவியல் பாட புத்தகம் அல்ல.


ஓகே.. இந்த குர் ஆன் வசனத்தை கவனியுங்கள்.

வானமும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் , அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் , ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து  நாமே அமைத்தோம் என்பதையும் , மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? ( 21.30 )

இதை சாதாரண ஒருவர் படித்தால் , கவிதை போல தோன்றும். ஆனால் சற்று அறிவியல் நூல்களை படித்தவர்களுக்கு வேறோரு கோணம் புலப்படும்.

50 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் புத்தகங்கள் படித்தால் ஒன்றும் புலப்படாது. லேட்டஸ்ட் புத்தகங்கள் படித்தால் , ஆச்சர்யமாக இருக்கும்

உன்மையில் ஒரு காலத்தில் எல்லாம் இணைந்துதான் இருந்தன என்கிறார் ஹாக்கிங்.

ஒரு கட்டத்தில் பிரிந்தன. ஏன் பிரிந்தன.. பிரிய வேண்டும் என ஏன் தீர்மானித்தன என்பது புரியவில்லை என்கிறார் அவர்.

இந்த பின்னணியில் மேற்கண்ட வசனத்தை பாருங்கள்..



தண்ணீரில் இருந்து என்பதும் முக்கியமானது. உயிரிகள் தண்ணீரில் இருந்துதான் தோன்றின என்கிறது அறிவியல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வசனத்தை பாருங்கள்

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும் , பூமியையும் இரண்டு நாட்களில் படைத்தான் ( 7.54 )

அது எப்படி இரண்டு நாட்களில் படைக்க முடியும் என மேலோட்டமாக படிப்பவர்களுக்கு தோன்றும்..

ஆனால் அறிவியல் படித்தவர்கள் இதில் இருக்கும் உள் அர்த்தத்தையும் , சொல் அழகையும் பார்த்து ஆச்சர்யப்பட முடியும்.

காலம் என்பது நாம் நினைப்பது போல மாறாத ஒன்று அன்று.

இந்த இடுகையை அரை  மணி நேரம் செலவு செய்து நான் டைப் செய்கிறேன். இதே அரை மணி நேரத்தில் நீங்கள் , உங்கள் மனைவி துணிகளை துவைத்து கொண்டு இருக்கலாம், பெண் தோழியிடம் பேசிக்கொண்டு இருக்கலாம். உங்களுக்கு அரை மணி நேரம் ஆகும்போது எனக்கும் அரை மணி நேரம் ஆகும் . தமன்னாவுக்கும் அரை மணி நேரம் ஆகும். நேரம் மாறாத ஒன்று என நினைக்கிறோம்.

தவறு.

ஒளியின் வேகத்தில் ஒருவர் செல்கிறார் என்றால் , அவரது அரை மணி நேரமும் , உங்கள் அரை மணி நேரமும் ஒன்றாக இருக்காது. உங்களுக்கு ஒரு வருடம் ஆகி இருக்கும், ஆனால் அவருக்கோ ஒரு மணி நேரமும் ஆகி இருக்கும்..

வகுப்பறையில் ஒரு மணி நேரம் , ஒரு யுகமாக தோன்றும். ஆண் தோழனுடன்

அல்லது பெண் தோழியிடம் பேசும் போது ஒரு மணி நேரம் , ஒரு நிமிடன் போல தோன்றும். அது வேறு. இது வெறும் தோற்றம்தான்.

சில சூழ் நிலைகளில் உண்மையாகவே காலம் , ஒவ்வொருவருக்கும் மாறக்க்கூடும்.
அந்த வகையில், மேற்கண்ட வசனத்தில் வரும் இரண்டு நாட்கள், நாம் அன்றாட வாழ்வில் காணும் இரண்டு நாட்கள் அல்ல.


இதை பாருங்கள்

வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்.  நிச்சயம் அவற்றை விரிவாக்கம் செய்பவராவோம். ( 51.57 )

இதையுமே சென்ற நூற்றாண்டு அறிவியல் அறிஞர்கள் கிண்டல் செய்து இருக்க கூடும்.

ஆனால் இன்றைய அறிவியல் , பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது.


பூமி , வானம் எல்லாம் எப்போதுமே இருந்து வருகின்றன என்பது சிலர் வாதம். அப்படி இருக்க வாய்ப்பில்லை என்கிறது இன்றைய அறிவியல்.

சில வசனங்கள் , அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளன என்பது உண்மைதான், ஆனால் வருங்கால அறிவியல் அவற்றையும் உண்மையாக்கும் . அப்படித்தான் இது வரை நடந்துள்ளது.

என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று.








இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்

இஸ்லாமும் அறிவியலும் என்ற தலைப்பில் இப்போது எழுத வேண்டிய அவசியம் என்னவென நீங்கள் நினைக்கலாம்..

இதைப்பற்றி விவாதிக்க வேண்டியவர்கள் அறிவியல் அறிஞர்களும், இஸ்லாமிய அறிஞர்களும்தான். என் வேலை கவனிப்பது மட்டுமே.

ஆனால் நண்பர் ஒருவர் எனக்கு பின்னூட்டம் இட்டு இருந்தார். இஸ்லாம் என்பது அறிவியலுக்கு புறம்பானது என்பது அவர் வாதம்.

இதை நாகரிகமான வார்த்தைகளால் அவர் சொல்லி இருந்ததால் பின்னூட்டத்தை வெளியிட வேண்டி இருந்தது,  ஒருவருக்கு என்ன கருத்து வேண்டுமானாலும் இருக்கலாம். நாகரிகமாக சொன்னால் , அதை கேட்பது நம் கடமை. ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விஷ்யம்.

இப்படி பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டதால் என் கருத்தையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பின்னூட்டத்தை ஏற்கிறேனா இல்லையா என்பதை சொல்லி ஆக வெளிப்படையாக சொல்லாமல் , கள்ள மவுனம் சாதிக்கும் கபட நாடகத்தை நான் விரும்பவில்லை.

சரியோ தவறோ , யாரும் ஏற்கிறார்களோ இல்லையோ, என் கருத்தை சொல்லியாக வேண்டும்.

சொல்கிறேன்.

  ஒரு கால கட்டத்தில் அறிவியல் என்பது மிகப்பெரிய விஷயம். அறிவியல் பூர்வ உண்மையே முழு உண்மையாக , இறுதி உண்மையாக ஏற்கப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில் இறுதி அறிவியல் உண்மை என்று எதுவும் இல்லை.
ஒரு காலத்தில் பூமி தட்டையானது என்று அனறைய அறிவியல் அறிஞர்கள் சொன்னார்கள். அதற்கு நிரூபணமும் காட்டினார்கள்.

ஆனால் சில ஆண்டுகளில் அது தவறு என கண்டறியப்பட்டு அந்த “ அறிவியல் “ உண்மைகள் தூக்கி எறியப்பட்டன.

சென்ற மாதம் வரை ஐன்ஸ்டீனின் கொள்கைகள் வேத வாக்காக இருந்தன, ஒளியின் வேகத்தை விட எதுவும் செல்ல முடியாது என கருதப்பட்டது.

ஆனால் இன்றைய நவீன கருவிகள் மூலம் அந்த கொள்கைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆக, அறிவியல் சொல்லும் “ உண்மைகளை “ வைத்து எந்த முடிவுக்கும் வர இயலாது.

இன்றைய நிலையில் அது உண்மை என்ற அளவுக்கே அறிவியலுக்கு மரியாதை.

இது என் கருத்து அன்று.

ஸ்டீவன் ஹாக்கிங் தன் நூலில் ( கிராண்ட் டிசைன் ) இப்படி சொல்கிறார்.

இப்போதைய கருவிகளின் திறனுக்கேற்ப, இப்போதைய நம் அறிவுக்கேற்ப சில உண்மைகளை கண்டு பிடிக்கிறோம். ஆக அறிவியல் உண்மை என்பது, சில விசேஷ சூழ்னிலைகளுக்கு உட்பட்ட உண்மை என்பது அவர் கருத்து,
இது உறுதியானதோ, இறுதியானதோ அல்ல.


ஆனால் ஆன்மீக நூல்கள் கூறும் உண்மைகள் இறுதியானவை.

ஆனால் நாம் செய்யும் தவறு என்னவென்றால், அறிவியல் செய்திகளை அவற்றில் நேரடியாக தேடுவதுதான்.

e= mc2 என்ற ஃபார்முலாவை அதில் தேடினால் கிடைக்காது.  அவற்றின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவது அல்ல.. வாழ்க்கையை போதிக்கின்றன அவை, அறிவியல் உண்மைகள் ஆங்காங்கு சொல்லப்படுகின்றன.

அந்த அறிவியல் உண்மைகள் , சைன்ஸ் பாடத்தில் இருப்பது போல நேரடியாக இருக்காது. ஏனென்றால் அவை அறிவியல் பாட புத்தகம் அல்ல.


ஓகே.. இந்த குர் ஆன் வசனத்தை கவனியுங்கள்.

வானமும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் , அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் , ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து  நாமே அமைத்தோம் என்பதையும் , மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? ( 21.30 )

இதை சாதாரண ஒருவர் படித்தால் , கவிதை போல தோன்றும். ஆனால் சற்று அறிவியல் நூல்களை படித்தவர்களுக்கு வேறோரு கோணம் புலப்படும்.

50 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் புத்தகங்கள் படித்தால் ஒன்றும் புலப்படாது. லேட்டஸ்ட் புத்தகங்கள் படித்தால் , ஆச்சர்யமாக இருக்கும்

உன்மையில் ஒரு காலத்தில் எல்லாம் இணைந்துதான் இருந்தன என்கிறார் ஹாக்கிங்.

ஒரு கட்டத்தில் பிரிந்தன. ஏன் பிரிந்தன.. பிரிய வேண்டும் என ஏன் தீர்மானித்தன என்பது புரியவில்லை என்கிறார் அவர்.

இந்த பின்னணியில் மேற்கண்ட வசனத்தை பாருங்கள்..



தண்ணீரில் இருந்து என்பதும் முக்கியமானது. உயிரிகள் தண்ணீரில் இருந்துதான் தோன்றின என்கிறது அறிவியல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வசனத்தை பாருங்கள்

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும் , பூமியையும் இரண்டு நாட்களில் படைத்தான் ( 7.54 )

அது எப்படி இரண்டு நாட்களில் படைக்க முடியும் என மேலோட்டமாக படிப்பவர்களுக்கு தோன்றும்..

ஆனால் அறிவியல் படித்தவர்கள் இதில் இருக்கும் உள் அர்த்தத்தையும் , சொல் அழகையும் பார்த்து ஆச்சர்யப்பட முடியும்.

காலம் என்பது நாம் நினைப்பது போல மாறாத ஒன்று அன்று.

இந்த இடுகையை அரை  மணி நேரம் செலவு செய்து நான் டைப் செய்கிறேன். இதே அரை மணி நேரத்தில் நீங்கள் , உங்கள் மனைவி துணிகளை துவைத்து கொண்டு இருக்கலாம், பெண் தோழியிடம் பேசிக்கொண்டு இருக்கலாம். உங்களுக்கு அரை மணி நேரம் ஆகும்போது எனக்கும் அரை மணி நேரம் ஆகும் . தமன்னாவுக்கும் அரை மணி நேரம் ஆகும். நேரம் மாறாத ஒன்று என நினைக்கிறோம்.

தவறு.

ஒளியின் வேகத்தில் ஒருவர் செல்கிறார் என்றால் , அவரது அரை மணி நேரமும் , உங்கள் அரை மணி நேரமும் ஒன்றாக இருக்காது. உங்களுக்கு ஒரு வருடம் ஆகி இருக்கும், ஆனால் அவருக்கோ ஒரு மணி நேரமும் ஆகி இருக்கும்..

வகுப்பறையில் ஒரு மணி நேரம் , ஒரு யுகமாக தோன்றும். ஆண் தோழனுடன்

அல்லது பெண் தோழியிடம் பேசும் போது ஒரு மணி நேரம் , ஒரு நிமிடன் போல தோன்றும். அது வேறு. இது வெறும் தோற்றம்தான்.

சில சூழ் நிலைகளில் உண்மையாகவே காலம் , ஒவ்வொருவருக்கும் மாறக்க்கூடும்.
அந்த வகையில், மேற்கண்ட வசனத்தில் வரும் இரண்டு நாட்கள், நாம் அன்றாட வாழ்வில் காணும் இரண்டு நாட்கள் அல்ல.


இதை பாருங்கள்

வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்.  நிச்சயம் அவற்றை விரிவாக்கம் செய்பவராவோம். ( 51.57 )

இதையுமே சென்ற நூற்றாண்டு அறிவியல் அறிஞர்கள் கிண்டல் செய்து இருக்க கூடும்.

ஆனால் இன்றைய அறிவியல் , பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது.


பூமி , வானம் எல்லாம் எப்போதுமே இருந்து வருகின்றன என்பது சிலர் வாதம். அப்படி இருக்க வாய்ப்பில்லை என்கிறது இன்றைய அறிவியல்.

சில வசனங்கள் , அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளன என்பது உண்மைதான், ஆனால் வருங்கால அறிவியல் அவற்றையும் உண்மையாக்கும் . அப்படித்தான் இது வரை நடந்துள்ளது.

என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று.








Tuesday, November 29, 2011

வாலிப கவிஞர் வாலி நச் பாடல். இன்று யாருக்கு பொருந்தும்?







ஆயிரம் கோடி அதிசயம்.
அமைந்தது *** ஜாதகம்...


மன்னனா , மவுல்வியா
எங்கிவன் , நாளை எங்கிவன்


கடவுளை மறுத்திவன் நாள் தோறும்
கூறினானே நாத்தீகம்


பகுத்தறிவாளன் நெஞ்சினிலே
பூத்ததென்ன ஆத்தீகம்


திருமகன் வருகிறான் திரு நீறை
 நெற்றி மீது தினம் பூசி


அதிசயம் அதிசயம் பெரியார்தான்
ஆனதென்ன ராஜாஜி


இந்த பாடல் இன்று  யாருக்கு பொருந்தும் ?









Sunday, November 27, 2011

டிசம்பரில் , இலக்கியத்துக்கு குரு பூஜை - பிரேக்கிங் நியூஸ்

மாதா , பிதா , குரு அதன் பின் தெய்வம் என்பது இந்திய மரபு.

ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் ஐரோப்பிய பாதிப்பில் அந்த நிலை இன்று மாறி விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆசிரியர்கள் என்றால் மாணவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கும் நிலை இருந்தது . இன்று ஆசிரியர் என்பது ஒரு பணியாளர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களும் முன்பு போல அளவு கடந்த உரிமை , அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. தன் பணியை முடித்தோமா சென்றோமா என இருக்க பழகிக்கொண்டு விட்டனர்.


இப்படி நாம் மறந்து போனவை ஏராளம்.

ஆங்கிலேயர் வரவால், இப்படி  நாம் மறந்து போன பலவற்றை   நமக்கு அறிமுகப்படுத்தும் நாவலை எழுதி முடித்துள்ளார் இறைவன் நமக்களித்த இதயக்கனியான அல்ட்டிமேட் ரைட்டர் சாரு அவர்கள்.

இது சுய முன்னேற்ற் நூலா, ஆன்மிக் பெட்டகமா , இலக்கிய கருத்துக்களை சுமந்து வரும் ஒட்டகமா,  இலக்கியத்தின் உச்சமா, இறைவன்  நமக்களிக்க மறந்த உன்னதங்களின் மிச்சமா , நவீன எழுத்தை தமிழுக்கு கொண்டு வரும் ஒப்ப்ற்ற முயற்சியா என்பதை எல்லாம் என்னால் மதிப்பிட முடியாது. ஆன்றோர்களும் சான்றோர்களும்தான் மதிப்பிட முடியும்.

     இலக்கிய உலகின் இறைவனான சாருவுக்கு  நம்மால் எந்த கைமாறும் செய்ய இயலாது.  ஆனால் நம் அவர் மேல் வைத்து இருக்கும் மரியாதையை எந்த வகையிலாவது காட்டியாக வேண்டும்.

அவர் மேல் நாம் காட்டும் மரியாதை சாரு என்ற தனி நபர் மேல் காட்டும் மரியாதை அன்று.

அவருக்கு செலுத்தும் மரியாதை , தமிழுக்கு செலுத்தப்படும் மரியாதை, இலக்கியத்துக்கு செலுத்தப்படும் மரியாதை, நம் பண்பாடுகளுக்கு செலுத்தப்படும் மரியாதை

ஏன் அப்படி சொல்கிறேன்? விளக்குகிறேன்

 நம் ஊரில் அறிவு ஜீவி என பெயர் எடுக்க சில டெம்ப்ளேட் ஃபார்முலாக்கள் உள்ளன.


  • தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொள்வது
  • வாசகனை மதிக்காமல் இருப்பது
  • எதையும் படிக்காத அறிவிலியாக இருந்து கொண்டு , தமிழ் கலாச்சாரம் என உதார் விடுவது
  • உலக இலக்கியம் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் , மேம்போக்காக பழம் பெருமை பேசுவது 
  • ஆளும் கட்சி எது செய்தாலும் திட்டுவது

அல்ட்டிமேட் ரைட்டர் இது எதையும் செய்வதில்லை

தன் எழுத்தால், தன் அறிவால், தன் உழைப்பால் மட்டுமே மக்கள் மனதில் நிற்கிறார். அவர் உழைப்பு , தமிழ் ஆளுமை , உலக இலக்கிய ஞானம் எல்லாம் போற்றத்தக்கது. வணங்கத்தக்கது..

 நாம் எதை வணங்குகிறோமோ, அந்த குண்ங்கள் நம்மிடமும் வளரும் என்பது மனோதத்துவ உண்மை

அந்த அடிப்படயில், எழுத்துலக விடி வெள்ளி சாருவின் பிறந்த நாளான டிசம்பர் 18 ல்   குரு பூஜை செய்ய இருக்கிறோம்

ஆன்மிக மரபு சார்ந்த பூஜையாக இது இருக்கும்

இது குறித்த மேலதிக விபரங்கள் , அடுத்த பதிவில்...




Saturday, November 26, 2011

டாப் டென் வாதங்கள்- அறிவு கொழுந்துகளின் அணு உலை, நூலக நிலைப்பாடு


கூடன் குளம் அணு உலை பிரச்சினை, அண்ணா நூலக இட மாற்ற பிரச்சினைகளில் சில அறிவு கொழுந்துகள் செய்யும் அழிச்சாட்டியங்களைப் பார்த்தால் இவர்கள் புரிந்து செய்கிறார்களா இல்லையா என்ற குழப்பமே மிஞ்சுகிறது.
இரண்டு தரப்பினரும் எடுத்து வைக்கும் வாதங்கள்கூட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
அவ்ர்களின் கருத்து வெள்ளங்கள் – உங்கள் பார்வைக்கு,

அணு உலை ஆதரவாளர்கள்
 நூலக இட மாற்ற எதிர்ப்பாளர்கள்


1 அணு உலையை மூடக்கூடாது
1  நூலகத்தை இடம் மாற்ற கூடாது
2 அணு உலை இந்தியாவின் கவுரவ சின்னம்
2 இந்த நூலகம் தமிழகத்தின் கவுரவ சின்னம்


 3 வல்லரசு ஆக வேண்டுமென்றால் சிலர் உயிர் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். தமிழர்கள் சிலர் செத்தால் என்ன ? இந்தியா வல்லரசு ஆகிறதே..அது போதும்
 3 நலிந்த மக்களின் நிதியை இந்த ஆடம்பர நூலகத்துக்கு பயன்படுத்தியதில் தவறு இல்லை. அவர்கள் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்


 4 நவீன கருவிகள். வசதிகள் கொண்ட இந்த உலையை மூட மனம் வரவில்லை. மக்களை விட கட்டடம்தான் முக்கியம்

இதை கட்டும்போதே ஏன் எதிர்க்கவில்லை


6 இதை கட்டி இருக்க கூடாது. கட்டிய பின் இடிக்க கூடாது 


7 வேண்டுமென்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு பணம் கொடுத்து விடலாம் 



8 இந்த அணு உலையை மூடுவோம் என தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. இப்போது மூட முயற்சித்தால் தவறு 


9 சில எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்பட்டு அணு உலையை ஆதரிக்கவில்லை 


10 அணு உலையைப்பற்றி புரிந்து கொண்டுதான் , இதை ஆதரிக்கிறோம். 

 4 மக்களுக்கு பயன்பட்டால் என்ன .இல்லாவிட்டால் என்ன ? வசதியும் , அழகும் கொண்ட இந்த நூலகத்தை மாற்றக்கூடாது

இதை கட்டும்போதே ஏன் எதிர்க்கவில்லை


6 இதை கட்டி இருக்க கூடாது. கட்டிய பின் இடிக்க கூடாது 


7 வேண்டுமென்றால் நலிந்த மக்களிடம் இருந்து திருடப்பட்ட பணத்தை , அந்தந்த நூலகங்களுக்கு திருப்பி கொடுத்து விடலாம்


 இந்த  நூலகத்தை இடம் மாற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. இப்போது மாற்ற  முயற்சித்தால் தவறு 



9 சில எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்பட்டு இந்த ஊழல் கட்டடத்தை ஆதரிக்கவில்லை 


10 நூலக சட்டம், மக்கள் வசதி என எல்லாவற்றையும் புரிந்து கொண்டுதான் , இதை ஆதரிக்கிறோம்

Friday, November 25, 2011

சர்க்கரை பந்தலில் தேன் மழை - எஸ் ராமகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள உயர்திரு எஸ் ரா அவர்களுக்கு..

சிலர் நன்றாக எழுதுவார்கள். ஆனால் சரி வர உரையாற்ற தெரியாது . நல்ல பேச்சாளர்கள் சிலருக்கு எழுத தெரியாது.

எழுத்து , பேச்சு என இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் நீங்கள்..

உங்களது உப பாண்டவம் நாவலை படிக்கும்போதோ அல்லது நடந்து செல்லும் நீரூற்று போன்ற சிறுகதைகளை படிக்கும்போதோ கிடைக்கும் உன்னத உணர்வு உங்கள் சொற்பொழிவை கேட்கும்போதும் கிடைக்கும்.

இந்த ஆண்டு மதுரை புத்தக கண்காட்சியில் சில புத்தகங்கள் வாங்கினேன்

புத்தக வாங்க வந்ததை விட உங்கள் சொற்பொழிவை கேட்கத்தான் வந்தேன். கவிதை நூல் வெளியிட்டு பேசினீர்கள்.

அட்டகாசமான பேச்சு. என்றோ கேட்ட பேச்சு. இன்னும் அந்த நினவுகள், அப்போது பெற்ற உணர்வுகள் நினைவில் இருக்கின்றன

 நீங்கள் வெளி நாட்டில் பிறந்து இருந்தால் , ஒரு மணி நேர சொற்பொழிவுக்கு கணிசமான டாலர் கட்டணம் பெறும் , மிகப்பெரிய பேராசிரியராக போற்றப்பட்டு இருப்பீர்கள்.

தமிழ் நாட்டில் அறிவு சார்ந்த விழிப்புணர்வு இல்லை.. ஒரு நடிகனுக்கு கிடைக்கும் கவனிப்பு எழுத்தாளனுக்கு இல்லை.

அப்படி இருந்தும்  உங்கள் பேச்சுக்கு , எழுத்துக்கு , அறிவுக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருக்கின்றனர் - என்னையும் சேர்த்து.

தமிழ் நாட்டில் மட்டும் அன்று. தமிழ் பேசும் மக்கள் இருக்கும் அனைத்து நாடுகளிலும் உங்களுக்கு வரவேற்பு உண்டு.

அல்ட்டிமேட் ரைட்டர் சாரு பக்தர்களுக்கு உங்கள் மேல மாபெரும் மரியாதை உண்டு. தேகம் நாவல் விழாவில் உங்கள் பேச்சு என்றும் மறக்க முடியாத ஒன்று.

இந்த நிலையில் எக்சைல் நாவல் விழாவில் நீங்கள் பேசவில்லை என்ற செய்தி எங்களை வருத்தமுற செய்தது. இந்த வருத்தத்துக்கு காரணம் உங்கள் மீது கொண்ட பாசம்தான்.

சிலர் வராவிட்டால் சந்தோஷம்.. ஆனால் நீங்கள் வந்து பேசினால் , அது ஓர் உன்னதமான அனுபவம். அதானால்தான் வருத்தமாக இருந்தது.

ஆனால் நீங்கள் விழாவிற்கு வருகிறீர்கள் என்ற செய்தி வந்துள்ளது.

வாவ்..

சாரு சம்பந்தமான நிகழ்ச்சி என்றால் அது சர்க்கரையால் ஒரு பந்தல் அமைத்தமாதிரி இனிமையாக் , இனிப்பாக இருக்கும்.


அதில் உங்கள் வருகை என்பது சர்க்கரை பந்தலில் தேன் மழை பெய்தது மாதிரி இருக்கும்

வருக வருக,, என மலர் தூவி வரவேற்கிறோம்



Wednesday, November 23, 2011

காமம் காதல் கபடி ஆட்டம் : அனல்காற்று - ஜெயமோகன்


ப்ரியா மணி அல்லது மாளவிகா  ஆகியவர்களில் ஒருவர் நடிக்க  , பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்க வேண்டிய திரைப்படம் அனல் காற்று. அதற்காக ஜெயமோகன் கதை எழுதினார். சில காரணங்களால் படம் எடுக்க முடியவில்லை.
படமாக வந்து இருந்தால் ஓடி இருக்குமா? ஜெயமோகன் சிறந்த நாவல்களில் இது ஒன்றா? படித்தே தீர வேண்டிய நாவலா?
பார்க்கலாம்.ப்ரியா மணி , மாளவிகா அல்லது நக்மா ஆகியவர்களில் ஒருவர் நடிக்க  , பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்க வேண்டிய திரைப்படம் அனல் காற்று. அதற்காக ஜெயமோகன் கதை எழுதினார். சில காரணங்களால் படம் எடுக்க முடியவில்லை.
படமாக வந்து இருந்தால் ஓடி இருக்குமா? ஜெயமோகன் சிறந்த நாவல்களில் இது ஒன்றா? படித்தே தீர வேண்டிய நாவலா?
பார்க்கலாம்.
எல்லோருக்கும் தெரிந்த , தெரிந்து கொள்ள விரும்புகின்ற ஆனால் தெரிந்து கொள்ள முடியாத ஒரு விஷ்யத்தைப் பற்றிதான் நாவல் பேசுகிறது.
காதல். காம்ம் 

காமம் இல்லாத காதல் உண்டா?   காதல் இல்லாத காமத்திற்கு பின் ஏதேனும் மனோதத்துவ பிரச்சினைகள் உள்ளனவா? காமம் , காதல் இரண்டுமே இல்லாமல் வாழ முடியாதா?
பல குற்றங்களுக்கு இவைதானே காரணங்களாக இருக்கின்றன. அல்லது இவை பற்றிய புரிதல் இன்மை காரணமாக உள்ளது.

இந்த பிரச்சினைக்ளை அலசும் நாவல்தான் அனல் காற்று.

வழக்கமான ஜெ மோ நாவல்கள் போலல்லாமல் எளிய கதை போக்கு. நேரடியான கதை.  சீரான கதை ஓட்டம் என்ற பாணியில் கதை செல்கிறது. ஜெ மோ நாவல்தானா என்று கூட அவ்வபோது சந்தேகம் வருகிறது.

அருண், சுசீ, சந்திரா, அருணின் அம்மா ஆகியோரை அடிப்படையாக கொண்ட கதை.

அருணின் அப்பாவுக்கு மற்ற பெண்கள் தொடர்பு இருப்பதால், அவரை விட்டு விலகுகிறாள் அம்மா. அருணை தானே வளர்க்கிறாள். அருணை அவன் அப்பா போலல்லாது “ நல்லவனாக” வளர்க்க முயல்கிறாள். அவனோ தன் தந்தை பாணியில்,  வயதில் மூத்த - கணவனை இழந்த - சந்திராவுடன் காதல்/ காம வயப்படுகிறான். தன் கணவனுக்கு  எந்த தவறான தொடர்புகளும் இருக்க கூடாது என்ற கனவுடன் இந்தியா வரும் அருணின் முறைப்பெண் சுசீலா மீதும் இவனுக்கு காதல் ஏற்படுகிறது.
அதே நேரத்தில் சந்திரா மீதான காதலும் போகவில்லை. சுசீலாவோ இவனை காதலிக்கிறாள். சந்திராவும் காதலிக்கிறாள். சந்திராவுக்கு வளர்ந்த வயதில் ஒரு பையன் இருக்கிறான். 

காதல் என்றால் என்ன? எந்த காதல் ஜெயித்தது என்பது கதை.

இந்த நாவலின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் எளிமையான கதையோட்டமும் , மொழி ஆளுமையும்தான். 

காமத்தின் இன்னொரு எல்லை மரணம் என்பதை உணர்ந்து மரணத்தைப்பற்றியும் கூர்மையாக சுட்டிக்காட்டி இருப்பதுதான் , இந்த நாவலை அர்த்தமுள்ள நாவலாக்குகிறது. 

வசதி குறைவான , கீழ்த்தட்டு மக்கள் வீடுகளைப்பற்றிய குறிப்புகள் அபாரம். வீட்டில் நுழைந்தால் பொருட்கள்தான் பெரும்பாலான இடத்தை அடைத்து கொண்டிருக்கும் போன்ற நுட்பமான பார்வைகள் , கதையை நேரடியாக பார்க்க வைக்கிறது.

பெரிய மைனஸ் பாயிண்ட் என்றால் , கதாபாத்திரங்கள் யதார்த்த உலகை விட்டு சற்று விலகி இருக்கிறார்க்ளோ என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றுவதுதான்.

இந்த நாவலின் அனைத்து கதாபாத்திரங்களும் கடைசியில் நல்லவர்கள் ஆகி விடுகிறார்கள். இது சற்றும் நடை முறையில் பார்க்காத ஒன்று.

அதே போல கிளைமேக்ஸ் சினிமாட்டிக்காக இருப்பது போல தோன்றுகிறது. சற்று முன்பே முடிந்து விட்ட  கதை, சுபமான முடிவுக்காக நீட்டப்பட்டு இருப்பது போல தோன்றுகிறது.

சந்திரா , அருணுக்கிடையே இருப்பது காதல் அன்று. வெறும் உடல் இச்சையும் அன்று. அது வேறு என உணர்வதுதான் கதையின் உச்சம். அதற்கு பிறகு பைக் சேசிங் , விமான பயணம் எல்லாம் செய்ற்கையாக உள்ளது.

அனல் காற்று ஓர் உச்சத்துக்கு சென்ற பின் , குளிர்ந்துதான் ஆக வேண்டும் என்பது இயற்கை விதி. அதே போல குளிர்ச்சிக்கு முன்பு, அதீத வெப்பத்தை சந்தித்துதான் ஆக வேண்டும் என்பதும் விதி.

ஒருவன் இயல்பான வாழ்க்கை வாழ்ந்தால், - தான் நினைப்பது போல வாழ்ந்தால் - இந்த இயக்கம் சுமூகமாக நடந்து முடிந்து விடும். ஆனால் அப்படி நடக்க முடியாமல் , சமூக குடும்ப அழுத்தங்கள் செய்து விடுவதால்தான் பல பிரச்சினைகள்.

இங்கே காதல் என்று வேறு ஏதோ ஒன்றைத்தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். பல காதல்களுக்கு எதிர்ப்பே தேவையில்லை. அதை அப்படியே அனுமதித்தால் , தானகவே அது உதிர்ந்து விடும்.

சில தவ்றான காதல்கள் , திருமணத்தில் முடிந்து பிரச்சினையில் முடிவதும் உண்டு. 

அருணை பொறுத்த வரை எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்து விட்டது. சந்திராவுடனான அவன் உறவு , அது கிளைமேக்சை அடைவதற்கு முன்பே சிதைந்து இருந்தால், வாழ் நாள் முழுக்க அவன் அதை ஓர் இழப்பாகவே நினைத்து கொண்டு இருப்பான். அதே போல , அந்த உறவு திருமணத்தில் ( ? ! ) முடிந்திருந்தாலும், வாழ் நாள் முழுக்க வருத்தம்தான்.

அனல் காற்று- மழை என்ற இயல்பான நிகழ்ச்சி அவனுக்கு வாய்த்து விட்டது . 

தனக்கு துரோகம் செய்த கணவன் , அனாதையாக சாக வேண்டும் என்ற மனைவியின் எதிர்பார்ப்பு இயல்பு. அந்த எதிர்பார்ப்பு பொய்யாகும்வண்ணம் , தந்தை குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கும் அருணின் கேரகடரும் இயல்பு. ஆனால் அந்த குடும்பத்துக்கு தானும் ஆதரவாக நின்று , ஆயிரம் அன்னைகளுக்கு சமமாக தோன்றும் சுசீ இயல்பாக சித்திரிக்கப்படவில்லை. சினிமாவை மனதில் வைத்து எழுதி இருப்பார் போல. 

அந்த கேரகடர் உள்ள ஒரு பெண், தன் வருங்கால மாமியாரைத்தான் ஆதரித்து இருப்பாள்.

அதே போல, சந்திரா மனம் மாறுவது இயல்பு. ஆனால் தன் மகனுடன் பைக் சேஸ் செய்வது சினிமாவின் விறுவிறுப்பான கிளைமேக்சுக்காக என்பது தெளிவு. அவள் மகன் மட்டும் போய் இருந்தால் போதுமே.

இவை எல்லாம் நாவலில் முழுமையாக ஒன்றுவதை தடை செய்தாலும், உரையாடல்கள், மன ரீதியான அலசல்கள்,  நுட்பமான காட்சி அமைப்புகள் போன்றவை நாவலை தூக்கி நிறுத்துகின்றன. அப்பா, அவர் இரண்டாவது குடும்பம், நண்பன் ஜோ கேரகடர் போன்றவையும் வலு சேர்க்கின்றன 

********************************************************************

எனக்கு பிடித்த சொல்லாட்சிகள்

1 வெள்ளை உடை அணிந்த பெண் கூட்ட ஆரம்பித்தாள். என்னை அவள் நெருங்கினால், கூட்டி தள்ளி விடுவாள் என அஞ்சினேன்

2 உனக்கு பிடிக்காத எதுவுமே உலகில் இல்லை என அறிந்தேன். ஏனெனில் உனக்கு உன்னைப் பிடித்து இருக்கிறது

3 “ லவர்ஸ்தான் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க”  “ கல்யாண வாழ்க்கைக்கு ரிகர்சலோ ?”

4 பெண்ணின் அழகு என்பது ஆணின் கண்ணால் உருவாக்கப்படுவது. பார்த்ததும் நம்மை கவரும் பெண்ணின் அழகு மெல்ல மெல்ல நம் கண்ணில் குறைய ஆரம்பிக்கும். நாம் விரும்பி, அவ்விருப்பத்தால் ஒரு பெண்ணில் கண்டடையும் அழகு அப்பிரியத்துடன் சேர்ந்து வளரும்.

5 வில்லில் இருந்து அம்பு பாய்றப்ப, அம்பின் நிழலும் சேர்ந்து போகும். அம்பு நேரா போகும், நிழல் குப்ப, கூளம் ,மேடு பள்ளம் புரண்டு போகும் ,ஆனால் இரண்டும் போய் சேரும் இடம் ஒன்றுதான்

6 மரணத்தின் போது , ஒரு மனிதர் தன் முழுமையுடன் தெரிய வருகிறார்

7 அப்பாவின் படத்தை பார்த்தேன். அவர் இருந்த போது அந்த படம் அவர் போல இல்லை என தோன்றியது. இப்போது அது அவராகவே இருந்தது.

8ஸ்ட்ரா போட்டு இளனீரை உறிஞ்சறப்போ , ஒரு புள்ளில இளனீர் தீர்ந்து போச்சுனு தெரியற மாதிரி, உறவு முறிவது சட் என தெரிந்து விடும்
9 உண்மையான காதல்னா , காதலை கொடுப்பது மட்டும்தான்

**********************************************************************************

சிறந்த கேரக்டரைசேஷன்

சந்திராவின் பையன் நவீன்.. விளையாட்டு பையனாக, சாப்பாட்டு பிரியனாக சித்திரிக்கப்படும் அவனுக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது, தெரியாத மாதிரி இருந்திருக்கிறான் என்பது செம ட்விஸ்ட். அவன் அம்மாவின் தவறான உறவை சிலர் சுட்டிக்காட்டும்போது, இதை பற்றி கவலைப்பட வேண்டியது என் அப்பா, அவருக்கு பின் நான் ..உங்களுக்கு என்ன என கேட்பதில் கம்பீரம், கதையின் கிளைமேக்ஸ் இதுதான். எனவே இந்த் கதையில் மனதில் நிற்பது இந்த கேரக்டர்தான்

**************************************************************************

வெர்டிக்ட் 

1 படிக்க வேண்டிய நாவல். படித்தே தீர வேண்டிய நாவல் அன்று 


2 ஜெயமோகனின் உன்னத நாவல்களில் ஒன்றல்ல . 

3 சினிமாவாக எடுத்து இருந்தால், சூப்பர் ஹிட் ஆகி இருக்கும் 

******************************************
அனல் காற்று 

ஜெயமோகன்

தமிழினி வெளியீடு

விலை ; ரூ 90 

ரஜினியையே வீழ்த்திய தூஸ்ரா-



அங்கு போய் பார்த்தால்..

( இதற்கு அடுத்த வரிகளை  நண்பர் / சகோதரர் Dharshan Srikanthakumar   அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் நீக்கி இருக்கிறேன்.  


படத்தையும் மாற்றி இருக்கிறேன் ) 


  நண்பர்கள், சகோதரர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டு விட்டன.


சிரமத்திற்கு வருந்துகிறேன்

Monday, November 21, 2011

பிச்சைக்காரன்: செக்ஸ்பியர்? தமிளை வலர்த்து வாள வைக்கும் அண்ணா நூல...

பிச்சைக்காரன்: செக்ஸ்பியர்? தமிளை வலர்த்து வாள வைக்கும் அண்ணா நூல...: சி சு செல்லப்பாவின் எழுத்தை படித்து நெகிழ்ந்ததை எழுதினேன், அவ்வளவு உன்னத எழுத்தாளரான அவர் தன் புத்தகங்களை விற்க மிகவும் கஷ்டப்பட்டாரம். கேள்...

காலத்தை வென்ற கார்ல் மார்க்ஸும், நூலக விவகாரமும்

ஒரு பிச்சைக்காரன் என்ற முறையில் பல்வேறு வகை சாப்பாடுகளை சாப்பிடுவது என் இயல்பு. இந்த சாப்பாடுதான் பிடிக்கும், இதுதான் ஒத்துக்கொள்ளும் என்பது கிடையாது.

அந்த வகையில் , கார்ல் மார்க்ஸ் குறித்த தகவல்களை புரட்டியபோது ஆச்சர்யமாக இருந்தது..

எப்போதோ வாழ்ந்த அவர் , இப்போதைய பிரச்சினைகளை பற்றி கருத்து சொல்கிறாரே என நினைத்தேன்.

1848ல் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை பொருள் செறிவு கொண்டது, காலம் கடந்து நிற்பது..

அதில் என்ன சொல்கிறார்..

வரலாற்றில் முந்தைய சகாப்தங்களில் அநேகமாக  எங்குமே பல்வேறு வகுப்புகளாகிய சிக்கலான சமூக பாகுபாடு ,சமூக அந்தஸ்தில் பன்மடிப் படிநிலை அமைப்பு இருக்க காண்கிறோம்

எந்த ஒரு சமூகத்தைப் பார்த்தால் அதில் பாகுபாடுகள் , ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும்.
நல்லதொரு அரசாங்க அமைப்பு ஏழைகளுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கி அவர்களை உயர்த்த வேண்டும்.

ஆனால் என்ன நடக்கிறது. வசதியானவர்களுக்கு மேலும் மேலும் வாய்ப்புகள், வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகின்றன. ஏழைகள் மேலும் மேலும் நசுக்கப்படுகின்றனர்.

அவர் கூறுகிறார்..

”சமுதாயம் மேலும் மேலும் இரு பெரும் பகைமுகன்களாக ,எதிரும் புதிருமான இரு வர்க்கங்களாக- முதலாளித்துவ வர்க்கம் , பாட்டாளி வர்கமுமாக -பிளவுண்டு வருகிறது ”

ஏழை பணக்காரன் இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒரு பெரிய நிறுவனம் நஷ்டம் அடைந்தால் , அரசு அதை காக்க பணம் செலவழிக்க தயாராகிறது, ஏழைகள் அழிவதில் கவலை இல்லை..

200 கோடி செலவழித்து நூலகம் அமைப்பது ஒரு புறம் நடக்கிறது. கடன் சுமையால் , ஏழை விவசாயிகள் துன்புறுவது இன்னொரு புறம் நடக்கிறது..

பேருந்தில் செல்ல முடியாத அளவு கட்டண உயர்வு.  கேட்டால் நிதி சுமையாம்.

நிதி சுமை என்றால் எப்படி 200 கோடியில் நூல்கம் அமைக்கிறார்கள்.. எப்படி 30 கோடி செலவழித்து பராமரிக்கிறார்கள்?

ஏற்கனவே படிக்கும் வாய்ப்புகள் கொண்ட , அய் அய் டி அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஆடம்பர நூலகம்...

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை..

படிப்பு , பணம் எல்லாம் ஒரு சிறிய பகுதி மக்களிடமே சிக்கி கொள்ளும். மற்றவர்கள் அனைவரும் அல்லல்படும் பிரிவாக மாறுவார்கள்...

இப்போது ஓரளவு வசதியாக இருக்கிறோமே என இந்த போக்கை ஆதரித்தால், காலப்போக்கில் நாமும் அல்லல் படும் பிரிவில் தள்ளப்பட்டு விடுவோம் என்பதே லாஜிக்..

இந்த புத்தகத்தை படித்தால், ஒவ்வொரு இடத்திலும் பாரபட்சம் நிலவுவது நம் கண்களுக்கு புலப்பட ஆரம்பிக்கும்

விலை மிக மிக குறைவு.... இருபது ரூபாய் மட்டுமே..

புத்தக கண்காட்சியில் வாங்கும் நூலாக இதுவும் இருக்கட்டும்.






செக்ஸ்பியர்? தமிளை வலர்த்து வாள வைக்கும் அண்ணா நூலகம் - எக்ஸ்ளூசிவ் படங்கள்

சி சு செல்லப்பாவின் எழுத்தை படித்து நெகிழ்ந்ததை எழுதினேன், அவ்வளவு உன்னத எழுத்தாளரான அவர் தன் புத்தகங்களை விற்க மிகவும் கஷ்டப்பட்டாரம். கேள்விப்பட்டு வருத்தமாக இருந்தது.

இன்று அவர் இருந்திருந்தால் கண்டிப்பாக இணையம் அவருக்கு பேருதவியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இதை எல்லாம் பார்த்தால், இப்படி கஷ்டப்படுவதை விட , யாராவது அரசியல் தலைவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நன்றாக இருந்தால்கூட பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால் இன்றைய அறிவு ஜீவிகள் , சூட்கேஸ் பெறும் சாமர்த்தியம் இன்றி , வெறும் சிக்கன் பிரியாணிக்கும் லெக் பீசுக்கும் மயங்கி , உளறிக்கொட்டுவது பரிதாபம்.

ஆனால் அவர்களை சொல்லி தவறில்லை அவர்களை பராமரிக்க , டாக்டர்கலைஞரும் , புரட்சி தலைவியும் போட்டி போட்டால் , அவர்களுக்கு டிமாண்ட் இருக்கும். பேரம் பேசலாம்.

ஆனால் ஜெ, இவர்க்ளை சீந்தாத நிலையில் கலைஞர் என்ன கொடுத்தாலும் ஏற்க வேண்டிய நிலை.

சாப்பிட்ட பிரியாணிக்கு வஞ்சகம் இல்லாமல் நன்றாகவே பேசினார்கள்.

அண்ணா நூலகம் ஒரு சொர்க்கலோகம், குறைகளே இல்லாத நூலகம் என்றெலாம் உளறினார்கள்.

இதற்கெல்லாம் ஏழைகளின் காசுதானே செலவாகிறது என்று கேட்டால் பதில் இல்லை.

இதனிடையே வெளியூர் நண்பர்கள் சிலர், நூலகத்தின் உண்மை நிலைதான் என கேட்டார்கள்..

பலரும் நக்கீரனை படித்து விட்டு ,  தாமே கண்டு பிடித்தது போல எழுதுவதால் , உண்மை நிலை தெரிவதில்லை. எனவேதான் கேட்கிறார்கள்

சொல்கிறேன்..



  • அங்கு வேலை செய்பவர்கள் சிறப்பானவர்கள். குறை சொல்ல கூடாது.
  •  நல்ல புத்தகங்கள் இருக்கின்றன
  • ஆனால் அனாவசிய செலவு ஏராளம். 
  • இதே நூலகம், இதே  ஊழியர்களோடு டி பி அய்யில் இருந்தால் , ஆயிரம் மடங்கு பலனுண்டு 
இவ்வளவு செலவு செய்துமேகூட பணப்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பல்வேறு குழப்பங்கள்.

ஆங்கிலத்தில், ஷேக்ஸ்பியரை செக்ஸ்பிரியர் என எழுதுவார்களா? எழுதினால் அறிவுலகம் விட்டு விடுமா? 

ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் பெயரகளை கன்னா பின்னாவென எழுதி வைத்து இருக்கிறார்கள் , இந்த உலகத்தர மிக்க நூலகத்தில்.அதை பிரியாணி மயக்கத்தில் எந்த ஒரு அறிவு ஜீவியும் சுட்டிக்காட்டவில்லை. 

மேலும் பல்வேறு குளறுபடிகள்..

நீங்களே பாருங்கள்


அதென்ன கோத்த மங்கலம்? எதை  கோர்த்தார்? 

மணாளனா? மனளனா? 

பிச்சை மூர்த்தியா? அடப்பாவிகளா !! 

அமுதல்? 

புருஸ்? 

அதற்குள் உடைத்து விட்டீர்களே 

சமுத்திரம் இப்படி ஆகி விட்டார்

திலிபன்?

வல்லினம் வள்ளினம் ஆகி விட்டதே?

நான் இதற்கு ஊழியர்களை குறை சொல்ல மாட்டேன் .  வேலையில் தவறு நிகழ்வது இயல்புதான். 
தமிழ்  பேசும் இந்த அறிவு ஜீவிகள் இதை சுட்டி காட்டி  இருந்தால் , அவர்கள் உடனே சரி செய்து இருப்பார்கள். 
 
ஆனால் இந்த அறிவு ஜீவிகள் பிரியாணி சாப்பிடும் ஆர்வத்தில் 1 % கூட  மக்கள்  மீதோ தமிழ் மீதோ காட்டுவது இல்லை எனபதே நம் ஆதங்கம்


Sunday, November 20, 2011

த்ரில்லர் நடையில் உன்னத புத்தகம் - வாடிவாசல் ( சிசுசெல்லப்பா)

   
       அன்றாட பணிகளின் ஈடுபடுகிறேன். சாப்பிடுகிறேன்,. தூங்குகிறேன். மகிழ்கிறேன். வருந்துகிறேன்.

 சி சு செல்லப்பாவின் வாடிவாசலை படிக்காவிட்டாலும், இந்த அன்றாட செயல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காதுதான். ஆனால் இந்த குறு நாவலை படித்திராவிட்டால் , வாழ்வின் ஓர் உன்னதமான அனுபவம் எனக்கு கிடைக்காமலேயே போய் இருக்கும்.

    கதைப்பஞ்சம் என்று சொல்லி வெளி நாட்டு படங்களை காபி அடிக்கிறார்கள், அல்லது இன்ஸ்பைர் ஆகிறார்கள். அல்லது வெளி நாட்டு கதைகளை தழுவி எடுக்கிறார்கள். நம் மண் சார்ந்த கதைகள் இன்னும் சொல்லப்படவே இல்லை என்பது இந்த குறு நாவலை படித்தால் உணர முடியும்.

 ஜல்லிக்கட்டு என்பது பண்டைய தமிழர்களின் வீர விளையாட்டு.


கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே,ஆயமகள்’ 





என்பது ஒரு தமிழ் பாடல். அதாவது காளையை அடக்க திறன் இல்லாதவனை பெண்கள் மணக்க மாட்டார்களாம்.

இதைப் பற்றி சிலப்பதிகாரத்திலும் குறிப்புகள் இருக்கின்றன.

மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக்
முல்லையம் பூங்குழல் தான்’ 


 மாட்டை அடக்குவது என்பது வெறும் உடல் சார்ந்த விளையாட்டு அன்று,  மாட்டைப் பற்றிய அறிவு, தொழில் நுணுக்கம் , வியூகம் அமைத்தல் என எல்லாம் கலந்த முழுமையாக வளர்ந்த விளையாட்டு அது. தேர்ந்த விமர்சகர்கள், நிபுணர்கள் எல்லாம் அதிலும் உண்டு.


இதுவெல்லாம் தெரியாமல், அதை ஒரு காட்டுமிராண்டி விளையாட்டு போல நினைத்துவிட்டதால்தான், அதற்கு தடை விதிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டின் பின்னணியில் புனையப்பட்ட ஓர் உன்னத குறு நாவல்தான் வாடி வாசல்..

என்ன கதை?

மேலோட்டமாக படித்தால் கதை இதுதான்.

அம்புலி என்பவன் காளை அடக்குதலில் கில்லாடி.புகழ் பெற்ற வீரன்.  யாராலும் அடக்க முடியாத காரிக்காளையை அடக்க முயலும்போது, அந்த காளை அவனை குத்தி வீழ்த்துகிறது. மரணமடையும் நிலையில், தன் மகனிடம் அந்த காளையை அடக்கும் பொறுப்பை கொடுத்து விட்டு கண் மூடுகிறான். மகன் பிச்சி  தகுந்த பயிற்சிகள் மேற்கொண்டு தயார் படுத்திக்கொண்டு வந்து , ( தன் மச்சினன் மருதனுடன் )அந்த காளையை அடக்குகிறான்..

இதுதான் கதை.

இப்படி மேலோட்டமாக படித்தால் கூட விறுவிறுப்பான ஒரு த்ரில்லராக இருப்பதுதான் இந்த நாவலின் சிறப்பு.

ஜமீந்தாருக்கு சொந்தமான அந்த காளையை அவன் அடக்க முடியுமா? ஜமீன் தார் நல்லவரா கெட்டவரா? அவர் என்ன செய்யப்போகிறார் , ஜமீந்தாரின் விசுவாசி என்ன செய்யப்போகிறான். என்றெல்லாம் ஆர்வத்துடன் கதையை ஒன்றிப் படிக்க முடிகிறது.
ஒரு கிழ்வன் இந்த விளையாட்டின் வெகு நாள் ரசிகன். நிபுணன். அம்புலியின் ரசிகன் என்ற முறையில் பிச்சி மீது அன்பு ஏற்படுகிறது. பல சூட்சுமங்களை  சொல்லித்தருகிறான்.
இந்த சம்பவங்கள் எல்லாம் நமக்கும் ஜல்லிக்கட்டின் மீது ஆர்வம் ஏற்படுத்துகிறது. ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்பதும் புரிய வைக்கிறது.

அதுவும் பார்வையாளர்கள் கமெண்டுகள் எல்லாம் மிக மிக சிறப்பாக கையாளப்பட்டுள்ளன. நம்மை எழுத்துக்குள் இழுத்து சென்று விடுகின்றன.

அந்த காளை உடல் வலு மிகுந்தது மட்டும் அல்ல.. சூழ்ச்சியும் கொண்டது. எனவே கிளைமேக்ஸ் எப்படியும் இருக்கலாம் என்பது பரபரப்பை ஏற்படுத்துகிறது.

மொத்த குறு நாவலும் , அந்த ஜல்லிகட்டு நிகழ்ச்சி மட்டுமே.. அந்த ஜல்லிக்கட்டு நடக்கும் சில மணி நேரங்களை முழுமையாக உள்வாங்க இது உதவுகிறது.

ஆக இப்படி மேலோட்டமாக படித்தாலும் கூட ஒரு விறுவிறுப்பான த்ரில்லரை படித்த நிறைவு கிடைக்கும்.
ஆனால் இது , இந்த விளையாட்டை தாண்டி வேறு சில விஷயங்களை பேசுகிறது என்பதை கூர்ந்து படித்தால் உணர முடியும். கிளைமேக்ஸை உன்னிப்பாக கவனித்தால்தான், முற்றிலும் வேறுபட்ட  நுட்பமான சில விஷ்யங்களையும் இந்த குறு நாவல் தொட்டு இருப்பது தெரியும்..


    அந்த காளையை அடக்குவது பிச்சிக்கு ஒரு முக்கிய பிரச்சினை. காரணம் தன் தந்தை மேல் வைத்து இருக்கும் மரியாதை.

ஆனால் காளையின் சொந்தக்காரனான ஜமீந்தாருக்கும் இது ஒரு முக்கிய பிரச்சினை ஆகிறதே? ! அதுதான் இந்த நாவலின் உச்சம். 


தன் காளையை அடக்க வரும் பிச்சியை ஜமீந்தார் விரும்பவில்லை.. ஆனால் அந்த ஜமீந்தார் கெட்டவர் அல்லர் என்பதை அடிக்கோட்டு இட்டு சொல்லி இருப்பது இந்த நாவலின்  நேர்த்திக்கு இன்னொரு உதாரணம்.  பிச்சியின் வெற்றிக்கு பரிசளிப்பதை வேண்டுமானால் , போலியான பெருந்தன்மை என்று சொல்லலாம். ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சியின் உயிருக்கு ஆபத்து வரும் நிலையில் உண்மையாகவே பதறுகிறார் ஜமீந்தார் . சினிமாவில் பார்க்கும் ஜமீந்தார் வேறு .. இதில் காணும் ஜமீந்தார் வேறு.

அதே போல தன் தந்தையின் வீழ்ச்சிக்கு பழி வாங்க வரும் பிச்சிக்கு , அந்த காளையின் ஜமீந்தார் மேல் கோபம் இல்லை ( அப்படியே இருந்தாலும் அதை வெளிக்காட்ட விரும்பவில்லை ) என்பதும் பல இடங்களில் அடிக்கோட்டு இட்டு சொல்லப்பட்டு இருக்கிறது.

கடைசியில் வென்று விட்ட நிலையில், “ இந்த நாய் ஜமீனின் காளையை அடக்க வரவில்லை எஜமான் . என் தந்தை சாகும்போது சொன்ன வார்த்தைக்ககத்தான் வந்தேன் “ என சொல்லும்போது, என் கண்களில் வழிவதை தடுக்க முடியவில்லை..

திடுக்கிடும் கிளேமேக்ஸ் , ட்விஸ்ட் என்றெல்லாமல் இல்லாமல், இந்த வெற்றியை பார்த்து பிச்சியின் மீது யாரும் காதல் வயப்படுகிறார்கள் என்றெல்லாம் இல்லாமல், ஜமீந்தார் அவனுக்கு உரிய மரியாதை செய்கிறார். பிச்சியும் மனமுவந்து ஏற்கிறான் . அவனை ஜமீன் வண்டியிலேயே மருத்துவமனை அனுப்புகிறார்கள்.

அதன் பின் ஜமீந்தார் செய்யும் ஒரு வேலைதான் உண்மையான கிளைமேக்ஸ். நாவலுக்கு வேறு ஓர் அர்த்தம் கிடைப்பதும் இதனால்தான்..


ஜாமீந்தாரை பொறுத்தவரை அந்த காளை வெறும் மாடு அன்று. அது அவரின் கவுரவ சின்னம்.

இது ஆட்சியாளர்களின் பொது குணம்தான். ஆட்சியாளர்கள் மக்கள் பட்டினியைக்கூட பொருட்படுத்தாமல் கட்டடடங்கள் அமைக்க முனைவது இதனால்தான். அதனால் மக்களுக்கு பயன் கிடைப்பதை விட, தம் பெயர் நிலைப்பதே அவர்களுக்கு முக்கியம்.

இதே காரணத்தால்தான் அடுத்து வருபவர்கள் முந்தைய கட்டடத்தை இடிக்க நினைக்கிறார்கள்.

மன்னர் ஆட்சி காலத்தில் இது சகஜம். இப்போதும்கூட அது தொடர்வதை பார்க்கலாம்.

ஆனால் ஒன்று.. இந்த விவகாரத்தில் ராஜாக்கள் பேசுவதை விட , ராஜ விசுவாசிகள் செய்யும் அழிச்சாட்டியம் பெரிதாக இருக்கும். மக்கள் பணத்தில்தான் பதவியில் இருப்பவர்கள் , தமக்கான கவுர சின்னங்களை எழுப்பிக்கொள்வார்கள். இது புரியாத பாமரர்கள், அரசர் தமக்கு பெரிய உதவி செய்து விட்டதாக மயங்குவார்கள்.

விரல் விட்டு எண்ணும் மிக சிலர் மட்டுமே போராடி , அதன் வெற்றி தோல்விகளை சந்திப்பார்கள் . ( நூலக இட மாற்றத்தை ஆதரிக்கும் ஒரே ஒரு தன்னந்தனி இலக்கியவாதி சாரு நிவேதிதா மட்டுமே என்பது ஓர் உதாரணம். பொதுப்புத்தியில் இருந்து விலகி இருப்பது மிக மிக சிலர் மட்டுமே ) ஆனால் என்றாலும் ஒரு நாள் வெற்றி உறுதி.

அதே போல ஒரு போராட்டம் என்றால் தகுந்த  நம்பகமான துணை வேண்டும்.,

பிச்சி என்னதான் திறமையான வீரன் என்றாலும், மருதன் துணை இல்லாமல் வெற்றியை சுவைத்து இருக்க முடியாது..

அதே போல கிழ்வனின் ஆதரவு, வழிகாட்டுதல், பிரார்த்தனை, ஆசி போன்றவையும் முக்கியம்.

சிலர் பிச்சியை வெறுப்பேற்றும்போது,  “ நீ வந்து இருப்பது மாட்டுடன் சண்டையிட.. மனிதர்களுடன் சண்டையிட அன்று “ என வழி நடத்துவது அருமை.

அதேபோல , மற்ற மாடுகளை எல்லாம் விட்டு விட்டு, தன் மாட்டுக்காக காத்து இருக்கும் பிச்சியின் விவேகமும் அருமை.

ஒவ்வொரு வரியையும் ரசித்து படிக்க வேண்டும் என்றாலும், சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

**************************************************

ரசித்த இடங்கள்



  • ” ஒரு மாட்டு இவ்வளவு கபடமா ? “

           ” போன ஜன்மத்துல மனுஷன இருந்து இருக்கும் “


  • “ சபக் என்ற சப்தத்தைதான் கூட்டம் கேட்டதே தவிர , மின் வெட்டு நேரத்தில் மாட்டில் ஏறியதை கிரகிக்க முடியவில்லை “



  • “ மனுஷனுக்கும் மாட்டுக்கும்தான் சண்டை. விவகாரம் கொம்புக்கும் கைக்கும்தான். மறக்காதே “



  • “ ஜமீன் சோறு சாப்பிட்டவன். ஜமீன் காதுல விழணும்தானே இப்படி பேசுறாண் “


“ ஜமீந்தார் வேலை தெரிஞ்சவனை மதிப்பாரு “
“ ஆனா. தன் மாடுனா அந்த நினைவு வேறுதான், பாட்டையா “


  • “ மாட்டை அடக்குபவன் திமிலையும் , கொம்பையும்தான் பார்ப்பான், பிடித்து வருப்வன் கையை பார்க்க மாட்டான் “



  • “ நந்தி தேவனே அவதாரம் எடுத்து வந்தது போல இருக்கிறதே. அதைபோய் அடக்க நினைக்கிறானே . “ பாவிப்பய “ என தன்னை அறியாமல் கூறி விட்டார்


**************************************

பிளஸ்


  • எளிமையான நடை
  • புரியும் படியான வட்டார எழுத்து
  • அழ்கு கொஞ்சும் மொழி
  • நுட்பமான விவரணைகள்
  • ஆழ்ந்த உட்கருத்து
  • மாடுகள் பற்றிய நுட்பமான விபரங்கள்
  • கொஞ்சம் கூட செயற்கைத்தனம் இல்லாத பாத்திரங்கள்
  • சுருக்கமான , நேர்த்தியான எழுத்து ( வெறும் 70 பக்கங்களில் எத்தனை விபரங்கள் !! )
  • மண் சார்ந்த கதைக்கரு

மைனஸ்

  • பெண் பாத்திரங்களே இல்லாதது 

*****************************************************

வெர்டிக்ட் 

                     படித்தே ஆக வேண்டிய முக்கியமான நாவல்


********************************************************
வாடிவாசல்

எழுதியவர் : சி சு செல்லப்பா 

காலச்சுவடு வெளியீடு ,

விலை : இதற்கு எவ்வள்வு விலை கொடுத்தாலும் தகும். ஆனாலும் இதன் விற்பனை விலை ரூ 40 ( நாற்பதே ரூபாய் ) மட்டுமே
         



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா