Thursday, July 16, 2015

மணி ரத்தினம் ஒரு ஃபேக் இயக்குனர் - எழுத்தாளர் ஷோபா சக்தி பரபரப்பு பேச்சு


12. 07.2015ல் , ஞாநி அவர்களால் நடத்தப்படும் கேணிக்கூட்டம் வழக்கம் போல சிறப்பாக நடந்தது... எழுத்தாளர் ஷோபா சக்தி கலந்து கொண்டார்.. தனது அழகான ஈழ தமிழில் அவர் பேசியது வெகு அருமையாக இருந்தது....

இலக்கியம் , அரசியல் , சினிமா என விர்வாக பேசினார்..
-________________________________________


முதலில் ஞாநி பேசினார்...

அவர் பேசுகையில் , ஈழ எழுத்தாளர்களை கவனித்த வரை , பெரிய அளவில் கவரும் வகையில் யாரும் உருவாகவில்லை.. சில விமர்சகர்கள் உருவாகி இருக்கிறார்கள்.. ஆனால் மற்றவற்றில் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை..

ஈழ எழுத்தாளர்களில் என்னை கவர்ந்தவர்கள் இருவர்.. ஒருவர் ஷோபா சக்தி... இன்னொருவர் அவரை விமர்சித்து வரும் அ முத்துலிங்கம் ( கூட்டத்தில் பலத்த சிரிப்பு ) .... இருவர் எழுத்தும் மிக இனிமையான வாசிப்பு அனுபவம் தரக்கூடியவை..ஆனாலும் இருவருக்கும் இடையே ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு... முத்துலிங்கம் மரபு சார்ந்த எழுத்துக்கு சொந்தக்காரர்.. ஷோபா சக்தியோ கலகக்காரர்.. அவர் எழுத்து எப்போதுமே எனக்கு மிக நெருக்கமானது...

இப்போது அவர் பேசுவார்...பிறகு நாம் கேள்வி கேட்கலாம்..


___________________________________


ஷோபா சக்தி

எனக்கு உரையாடலில் எப்போதுமே விருப்பம் அதிகம்.. எது பற்றி வேண்டுமானாலும் உரையாடுவேன்.. ஆனால் சொற்பொழிவு என்பது சற்று வித்தியாசமானது.. உங்களில் பலரை நான் அறியேன்..உங்கள் சிந்தனை என்ன ,,உங்க எதிர்பார்ப்பு என்ன என எனக்கு தெரியாது.. எனவே நான் எனக்கு தோன்றிய விதத்தில் பேசி , என் கருத்தை உங்கள் மேல் திணிப்பதை ஒரு வன்முறை என்றே நினைக்கிறேன்,,,,,

 நான் எஸ் ரா போல இலக்கியத்தரமாகவோ , வண்ணதாசன் போல மென்மையாகவோ பேசக்கூடியவன் அல்ல.. என் பாணி வேறு விதம்.. வேற வேற ( பலத்தை கைதட்டல் )

ஆனாலும் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. கருத்து சுதந்திரம் படும் பாடு என்பது இன்றைய தேதியில் பாடாய் படும் ஒன்று , கருத்து சுதந்திரம் என்பது என்ன,..அதன் வரம்புகள் என்ன என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவை.. இன்றைய சூழலில் கருத்து சுதந்திரம் என்பது தமிழகத்தில் மட்டும் அல்ல  இந்தியாவில் மட்டும் அல்ல...உலக அளவிலேயேகூட மோசமாகத்தான் உள்ளது...இலங்கையில் கேட்கவே வேண்டாம்...எப்போதுமே மோசமாகத்தான் உள்ளது..அந்த காலத்தில் நான் ஒரு இடது சாரி இயக்கத்தில் இருந்தேன்.. அது நான்கு பேர் மட்டுமே உறுப்பினராக கொண்ட இயக்கமாகும் ( பலத்த சிரிப்பு , கைதட்டல் ) .  ஏதாவது பிரச்சனை என்றால் எங்களைத்தான் தூக்கி போட்டு மிதிப்பார்கள்>. அப்படி அடியும் உதையும் வாங்கியபடியேதான் கருத்துரிமை குறித்து யோசித்தேன்,..

ஈழப்போராட்டம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ஜன நாயகமும் கருத்து சுதந்திரமும் இல்லாமைதான்..  எதிர் கருத்து சொல்வோரை துரோகிகள் என முத்திரை குத்தும் போக்கு எல்லா இயக்கங்களிடமும் இருந்தது...

அவர்கள் யூதனை அடித்தபோது நான் உதவவில்லை..காரணம் நான் யூதன் இல்லை

அவர்கள் கம்யூனிஸ்ட்டை அடித்தபோது நான் உதவவில்லை..காரணம் நான் கம்யூனிஸ்ட் இல்லை..
கடைசியில் அவர்கள் என்னை அடித்தபோது எனக்கு உதவ யாரும் இல்லை..

எனவே உலகில் எங்கோ நடக்கும் பிரச்சனை என நினைக்காமல் கருத்துரிமைக்காக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.

இத்துடன் முடிக்கிறேன்..கேள்விகள் கேட்கலாம்

-________________________________________________


 ஞாநி  - முதல் கேள்வியை நானே கேட்கிறேன்... எழுத்தாளர் , இயக்கவாதி,  திரை கலைஞர் என பன்முக ஆளுமை கொண்டவர் ஷோபா.. ஆனால் அவர் அரசியல் பேசியதால் ,  நானும் அரசியல் கேள்வி ஒன்றே கேட்கிறேன்...

உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு அடிக்கடி சொல்லப்படுவது உண்டு... ஷோபா ராஜபக்சேவின் கைக்கூலி , , வலதுசாரி இயக்கங்களின் பிரதி நிதி...அதனால்தான் அவர் உலகம் சுற்றும் வாலிபனாக இருக்க முடிகிறது என சொல்கிறார்கள்>.இதற்கு பல முறை நீங்கள் பதில் அளித்து விட்டாலும் இங்கும் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்


ஷோபா

இந்த கேள்விகள் பத்திரிக்கைகள் வந்தவை அல்ல... அறிக்கையாக வந்தவைகளும் அல்ல... பொழுது போகாத சிலர் சமூக வலைத்தளங்களில் கேட்கும் கேள்வி இவை... எனக்கு பரம்பரை ஆண்டிகளிடம் பிரச்சனை இல்லை... பஞ்சத்து ஆண்டிகளிடம்தான் பிரச்சனை ( பலத்த கைதட்டல் )

இவற்றுக்கு பல முறை பதில் அளித்து விட்டேன்..மீண்டும் சொல்வதில் எனக்கு பிரச்சனை இல்லை.. உங்க நேரம்தான் வீணாகிறது...

11 மாதம் வேலை . ஒரு மாதம் லீவு என்ற குறுகிய வட்டத்தில் அடைந்து விடக்கூடாது என முன்பே முடிவு செய்திருந்தேன்..உங்களில் பலருக்கும் அப்படி ஒரு அடிமை வாழ்வு பிடிக்காது..ஆனாலும் குடும்பத்துக்காக அப்படி இருக்க வேண்டி இருக்கும்.. எனவேதான் நான் குடும்பமே வேண்டாம் என முடிவு செய்து வாழந்து வருகிறேன்...  நான் சம்பாதிப்பது எனக்கு மட்டுமே.. வேறு செலவுகள் இல்லை... இன்னொன்று , பயணம் என்பது ஒரு கலை... பயணத்துக்கு காசு தேவை இல்லை..கால்கள் போதும்... கிடைத்ததை சாப்பிட்டு , கிடைத்தை இடத்தில் தூங்கி என் பயணம் அமைகிறது..

 வலது சாரி என்ற குற்றச்சாட்டு கேலிக்குரியது..இலங்கையில் கிட்டத்தட்ட எல்லா இயக்கங்களுமே வலதுசாரிதான்... பிரபாகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது ஒவ்வொரு பதிலையும் நன்கு யோசித்து சொன்னார்..கலந்து ஆலோசித்தார்.. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் உடனடியாக பதில் சொன்னார்..
அந்த கேள்வி...  நீங்கள் விரும்பும் ஈழம் அமைத்தால் அதன் பொருளாதார கொள்கை என்னவாக இருக்கும்... அவர் பதில் - தாரளமயமான பொருளாதாரம்..


இப்படி எல்லோருமே அங்கு வலதுசாரி சிந்தனை உள்ளவர்கள்தான்,.. என்னை இப்படி குற்றம் சாட்டுவது தவறு


 ஞா நி ...அடுத்த கேள்வி...

ஷோபா - இங்கு நீங்க மட்டும்தான் கேள்வி கேட்பீர்களா

( பலத்த சிரிப்பு )

 ஞா நி ( சிரித்தபடி )  என்னை விட அவர்கள் நன்றாக கேட்பார்கள் .. அதற்கு ஆயத்தம்தான் இது


  ஞாநி

    நீங்கள் நடிக்கும் ஃபிரென்சு படத்தில் ஆசிய நாட்டில் இருந்து குடியேறுபவர்கள் குறித்த பிழையான செய்திகள் இருப்பதாக உங்களை குற்றம் சாட்டுகிறார்களே..

ஷோபா

அந்த படம் இன்னும் வெளி வரவே இல்லை.. இதெல்லாம் கற்பனையான குற்றச்சாட்டு.. என் செல்வாக்கை அந்த படத்தில் செலுத்தும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை.. அவர் ஏற்கனவே பல படங்கள் எடுத்தவர்.. என்னை கேட்டு அவர் படம் எடுக்க மாட்டார்.. ஆனாலும் அதில் பிழையான செய்திகள் இருந்தால் எனக்கு தார்மீக பொறுப்பு இருப்பதை மறுக்கவில்லை.. ஆனால் அப்படி எதுவும் படத்தில் இல்லை.. வந்ததும் பாருங்கள்..

என்னைப்பற்றி கிண்டலாக நண்பர்கள் சொல்வார்கள்;. நீ ஒரு ரகசிய இயக்க ஆளாக இருந்து போலிசிடம் மாட்டினால் , உண்மையை கறக்க ஒரு க்வார்ட்டர் போதும் என்பார்கள் ( பார்வையாளர்கள் பலத்த சிரிப்பு ) .. எனவே ரகசிய வேலைகளில் ஈடுபடும் அளவுக்கெல்லாம் என்னிடம் திறமை இல்லை..

இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதே ஒரு காமெடி...இலங்கை தமிழ் உச்சரிப்பு சொல்லித்தர என்னை நியமித்து இருந்தார்கள்>.. அவ்வப்போது போய் சொல்லித்தருவேன்... ஆனால் நேரமின்மையால் அடிக்கடி போக முடிவதில்லை,,, ஏதேனும் பொய்யான காரணம் சொல்வேன்.. நான் இப்படி நடிப்பதை பார்த்து ,  நன்றாக நடிக்கிறானே என முடிவு செய்து  என்னை நடிக்க செய்து விட்டனர்  ( கூட்டத்தில் பலத்த சிரிப்பு  )..

( தொடர்ந்து பார்வையாளர்கள் கேள்வி கேட்டனர் )

இலங்கை பிரச்சனைக்கு என்னதான் தீர்வு/?

கூட்டத்தில் யாரையாவது பார்த்தால் அவருக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ , அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்பது நம் ஆட்களுக்கே உரிய தனி பண்பு ( பலத்த சிரிப்பு ) ..இப்படித்தான் ஒரு முறை குஷ்புவிடம் அரசியல் தீர்வு கேட்டார்கள்

ஞா நி - இப்ப குஷ்பு அரசியலுக்கு வந்து விட்டார்... அரசியல் கேட்பது தப்பல்ல ( பலத்த சிரிப்பு )

இந்திரா  , ராஜிவ் , அமிர்தலிங்கம் , ஜெயவர்த்தனே என பலராலும் தீர்க்க முடியாத பிரச்சனைக்கு என்னிடம் தீர்வு கேட்டால் எப்படி ( பலத்த கைதட்டல் )

 நான் ஒன்று மட்டும் சொல்கிறேன்.. மீண்டும் ஓர் ஆயுத போராட்டத்துக்கு  நாங்கள் தயாராக இல்லை.. ஆயுதபோர் யாருக்கும் எந்த ஒரு சின்ன நன்மைகூட செய்யவில்லை...

அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்..ஆனால் ஆயுத போர் என்பது நிலத்தை மட்டும் உழவில்லை..விதைகளையும் சேர்த்து உழுதது... விதையில் இருந்து முளைக்கும் செடிகளையும் சேர்த்து உழுது நாசமாக்கியது>.

போராட்டத்துகான காரணங்களையோ அவர்கள் நோக்கங்களையோ நான் எப்போதும் குறை கூறியது இல்லை..ஆனால் வழிகள் தவறானவை


உங்கள் தமிழ் வெகு அழகாக இருக்கிறது..இப்படி பேச எங்களும் ஆசை..ஆனால் முடியாது.. தமிழகத்தில் நாங்கள் பேசும் தமிழை கேட்டால் உங்களுக்கு கோபம் வருமா


இக்கரைக்கு அக்கரை பச்சை ... இலங்கையில் காலனி ஆதிக்கத்தின் பாதிப்பு குறைவு... ஆங்கிலேயர்கள் காலடி படாத இடங்கள் இலங்கையில் பல உண்டு... அந்த இட அமைப்பு சிக்கலானது என்பதால் ஆங்கிலேயர்கள் அங்கு வர விரும்பாமல் இருந்து இருக்கலாம்.. எனவே தமிழகத்தை விட அங்கு ஆங்கில மோகம் குறைவு...சரி...இருட்டாகி விட்டது... ஸ்விட்ச் என்பதை தமிழில் எப்படி சொல்வீர்கள்>.

(பொத்தான் ?  தெரியவில்லையே...ஸ்விட்ச்தான் தமிழ்- கூட்டத்தினர் குரல்)

இதற்கு எங்கள் தமிழில் பொருத்தமான பெயர் உண்டு... அதைத்தான் அன்றாடம் பயன்படுத்துகிறோம்..

ஆனால் எங்கள் கலாச்சாரமும் மாறி வருகிறது..முன்பெல்லாம் வளைகாப்பு எங்களிடம் இல்லை..இப்போது கொண்டாடுகிறார்கள்>. காரணம் டீவி சீரியல்கள் ( பலத்த சிரிப்பு )..சீனிவாசன் போன்ற வைஷ்ணவ பெயர்கள் முன்பெல்லாம் இல்லை.. இப்போது உங்கள் புண்ணியத்தால் அவை பிரபலமாகி வருகின்றன..

ஃபிரான்சில் வசிக்கும் என் உறவினர் வீட்டு பையன் அப்படியே தமிழக தமிழ் பேசுவதை பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.... பிறகுதான் தெரிந்தது...அந்த தமிழுக்கு காரணம் தமிழக திரைப்படங்கள்... இலங்கை தமிழர்கள் எடுக்கும் பல படங்களில் நல்ல தமிழ் இருப்பதில்லை

 ஞா நி - இதில் இன்னொரு விஷ்யம்.. நம் ஊரில் நடந்த ஹிந்தி எதிர்ப்பின் காரணமாக சமஸ்கிருதம் ஒழிக்கப்பட்டது.. காரியதரிசி போன்ற சொற்கள் அழிந்து விட்டன..ஆனால் இலங்கை தமிழில் சமஸ்கிருத ஆதிக்கம் அதிகம்.. நம் ஊரில் சமஸ்கிரித இடத்தை ஆங்கிலம் பிடித்துக்கொண்டது


ஈழ எழுத்தாளர்கள் படைப்புகள் பெரும்பாலும் போர் சார்ந்தே இருப்பது ஏன்

நான் எல்லா வகையிலுமே எழுதுகிறேன்..அவை போதிய கவனம் பெறவில்லை.. ஆண் பெண் உறவு , நட்பு , காதல் என எல்லாம் என் எழுத்தில் இருக்கும்..


மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் , கமலின் தெனாலி ஆகியவை இலங்கையின் அரசியலை சரியாக பிரதிபலித்ததாக நினைக்கிறீர்களா..

தெனாலி அரசியலைப்பற்றி எதுவும் பேசவில்லை... அந்த படத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. மணி ரத்னத்தை பொருத்தவரை ஒரு படைப்பாளியாக அவர் மேல் எனக்கு எந்த மரியாதையும் இல்லை.. காட் ஃபாதர் படத்தை காப்பி அடித்து மூன்று படங்கள் எடுத்தவர் அவர்..

ஒரு மனிதன் முட்டாளாக இருக்கலாம்.. ஆனால் போலியாக இருக்கக்கூடாது. மணி ரத்னம் ஒரு ஃபேக் படைப்பாளி... ஜே ஜே சில குறிப்புகள் படித்தபோது என்ன எரிச்சல் ஏற்பட்டதோ அதே எரிச்சல் இருவர் படம் பார்த்தபோதும் ஏற்பட்டது.. முட்டாளாக இருப்பதில் ஒரு அழகு இருக்கிறது..ஆனால் ஃபேக் என்பது அருவருப்பானது


அதிஷா - சம கால இலக்கிய சூழல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்

கேள்வி புரியவில்லையே

இப்போது எழுதுபவர்கள் குறித்த பார்வை

ஓ.. அதிஷா , லக்கி யுவா , வினாயக முருகன் போன்ற படைப்பாளிகளைப்பற்றி கேட்கிறீர்களா...  ( சிரிப்பு )

இப்போது நிறைய புத்தகங்கள் எழுதப்படுவதும் , பலரும் எழுதுவதும்  நல்லதுதான்.. ஆரோக்கியமான சூழல் நிலவுவதாகவே நினைக்கிறேன்

அம்பேத்கர் , பெரியார் போன்ற இந்திய தலைவர்கள் தாக்கம் இலங்கையில் எப்படி இருக்கிறது,..

பெரியார் தாக்கம் இங்கு மட்டும் இருக்கிறதா என்ன .. அவர் உழைப்பு , பணி என எல்லாவற்றையும் மறந்து விட்டு , சாதி மத இயக்கங்கள் தமிழகத்தில் வளர்வதை பார்க்க முடிகிறது...இது வருந்தத்தக்கது..

சாதி வெறி அதிகம் கொண்ட யாழ்ப்பாணத்தில் அம்பேத்கர் தாக்கம் குறைவாகவே இருந்தது.. எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு பெரியார் அறிமுகம் ஆகி இருந்தார்.. சிவாஜி ரசிகர்களுக்கு அதுவும் தெரியாது ( சிரிப்பு )>.

இட ஒதுக்கீடு போன்றவற்றுக்கான அங்கு இருக்கிறது... ஆனால் பெரியார் , அம்பேத்கார் போன்றோர் இல்லாததால் அங்கு அது வரவில்லை..
ஜாதி ஆதிக்கம்தான் அங்கு இருந்தது..

இலங்கையில் அறப்போராட்டம் ஏன் வெற்றி பெறவில்லை/?

அறப்போராட்டம் தோல்வி அடைந்ததால் , ஆயுதபோராட்டம் தொடங்கியதாக பலர் நினைக்கிறார்கள்>. அங்கு அறப்போராட்டம் நடக்கவே இல்லை என்பதே உண்மை... காந்தி , நேரு போன்றோர் அறப்போராட்டத்தில் பல ஆண்டுகள் சிறைகளில் கழித்தனர்,,, அங்கு யாரும் அத்தனை ஆண்டுகள் சிறை சென்றதில்லை... தம் செல்வாக்கை அரசியல் ஆதாயத்துக்கு மட்டுமே பயன்படுத்தினர்...






Tuesday, July 14, 2015

பிரபாகரன் வலதுசாரியா - ஷோபா சக்தி பரபரப்பு பேச்சு

பிரபாகரன் வலதுசாரி சிந்தனை கொண்டவர்  என எழுத்தாளர் ஷோபா சக்தி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது...

12. 07.2014ல் , ஞாநி அவர்களால் நடத்தப்படும் கேணிக்கூட்டம் வழக்கம் போல சிறப்பாக நடந்தது... எழுத்தாளர் ஷோபா சக்தி கலந்து கொண்டார்.. தனது அழகான ஈழ தமிழில் அவர் பேசியது வெகு அருமையாக இருந்தது....

ஞாநி பேசுகையில் , ஈழ எழுத்தாளர்களை கவனித்த வரை , பெரிய அளவில் கவரும் வகையில் யாரும் உருவாகவில்லை.. சில விமர்சகர்கள் உருவாகி இருக்கிறார்கள்.. ஆனால் மற்றவற்றில் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை..

ஈழ எழுத்தாளர்களில் என்னை கவர்ந்தவர்கள் இருவர்.. ஒருவர் ஷோபா சக்தி... இன்னொருவர் அவரை விமர்சித்து வரும் அ முத்துலிங்கம் ( கூட்டத்தில் பலத்த சிரிப்பு ) .... இருவர் எழுத்தும் மிக இனிமையான வாசிப்பு அனுபவம் தரக்கூடியவை..ஆனாலும் இருவருக்கும் இடையே ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு... முத்துலிங்கம் மரபு சார்ந்த எழுத்துக்கு சொந்தக்காரர்.. ஷோபா சக்தியோ கலகக்காரர்.. அவர் எழுத்து எப்போதுமே எனக்கு மிக நெருக்கமானது...

இப்போது அவர் பேசுவார்...பிறகு நாம் கேள்வி கேட்கலாம்..


___________________________________


ஷோபா சக்தி

எனக்கு உரையாடலில் எப்போதுமே விருப்பம் அதிகம்.. எது பற்றி வேண்டுமானாலும் உரையாடுவேன்.. ஆனால் சொற்பொழிவு என்பது சற்று வித்தியாசமானது.. உங்களில் பலரை நான் அறியேன்..உங்கள் சிந்தனை என்ன ,,உங்க எதிர்பார்ப்பு என்ன என எனக்கு தெரியாது.. எனவே நான் எனக்கு தோன்றிய விதத்தில் பேசி , என் கருத்தை உங்கள் மேல் திணிப்பதை ஒரு வன்முறை என்றே நினைக்கிறேன்,,,,,

 நான் எஸ் ரா போல இலக்கியத்தரமாகவோ , வண்ணதாசன் போல மென்மையாகவோ பேசக்கூடியவன் அல்ல.. என் பாணி வேறு விதம்.. வேற வேற ( பலத்தை கைதட்டல் )

ஆனாலும் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. கருத்து சுதந்திரம் படும் பாடு என்பது இன்றைய தேதியில் பாடாய் படும் ஒன்று , கருத்து சுதந்திரம் என்பது என்ன,..அதன் வரம்புகள் என்ன என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவை.. இன்றைய சூழலில் கருத்து சுதந்திரம் என்பது தமிழகத்தில் மட்டும் அல்ல  இந்தியாவில் மட்டும் அல்ல...உலக அளவிலேயேகூட மோசமாகத்தான் உள்ளது...இலங்கையில் கேட்கவே வேண்டாம்...எப்போதுமே மோசமாகத்தான் உள்ளது..அந்த காலத்தில் நான் ஒரு இடது சாரி இயக்கத்தில் இருந்தேன்.. அது நான்கு பேர் மட்டுமே உறுப்பினராக கொண்ட இயக்கமாகும் ( பலத்த சிரிப்பு , கைதட்டல் ) .  ஏதாவது பிரச்சனை என்றால் எங்களைத்தான் தூக்கி போட்டு மிதிப்பார்கள்>. அப்படி அடியும் உதையும் வாங்கியபடியேதான் கருத்துரிமை குறித்து யோசித்தேன்,..

ஈழப்போராட்டம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ஜன நாயகமும் கருத்து சுதந்திரமும் இல்லாமைதான்..  எதிர் கருத்து சொல்வோரை துரோகிகள் என முத்திரை குத்தும் போக்கு எல்லா இயக்கங்களிடமும் இருந்தது...

அவர்கள் யூதனை அடித்தபோது நான் உதவவில்லை..காரணம் நான் யூதன் இல்லை

அவர்கள் கம்யூனிஸ்ட்டை அடித்தபோது நான் உதவவில்லை..காரணம் நான் கம்யூனிஸ்ட் இல்லை..
கடைசியில் அவர்கள் என்னை அடித்தபோது எனக்கு உதவ யாரும் இல்லை..

எனவே உலகில் எங்கோ நடக்கும் பிரச்சனை என நினைக்காமல் கருத்துரிமைக்காக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.

இத்துடன் முடிக்கிறேன்..கேள்விகள் கேட்கலாம்

-________________________________________________


 ஞாநி  - முதல் கேள்வியை நானே கேட்கிறேன்... எழுத்தாளர் , இயக்கவாதி,  திரை கலைஞர் என பன்முக ஆளுமை கொண்டவர் ஷோபா.. ஆனால் அவர் அரசியல் பேசியதால் ,  நானும் அரசியல் கேள்வி ஒன்றே கேட்கிறேன்...

உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு அடிக்கடி சொல்லப்படுவது உண்டு... ஷோபா ராஜபக்சேவின் கைக்கூலி , , வலதுசாரி இயக்கங்களின் பிரதி நிதி...அதனால்தான் அவர் உலகம் சுற்றும் வாலிபனாக இருக்க முடிகிறது என சொல்கிறார்கள்>.இதற்கு பல முறை நீங்கள் பதில் அளித்து விட்டாலும் இங்கும் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்


ஷோபா

இந்த கேள்விகள் பத்திரிக்கைகள் வந்தவை அல்ல... அறிக்கையாக வந்தவைகளும் அல்ல... பொழுது போகாத சிலர் சமூக வலைத்தளங்களில் கேட்கும் கேள்வி இவை... எனக்கு பரம்பரை ஆண்டிகளிடம் பிரச்சனை இல்லை... பஞ்சத்து ஆண்டிகளிடம்தான் பிரச்சனை ( பலத்த கைதட்டல் )

இவற்றுக்கு பல முறை பதில் அளித்து விட்டேன்..மீண்டும் சொல்வதில் எனக்கு பிரச்சனை இல்லை.. உங்க நேரம்தான் வீணாகிறது...

11 மாதம் வேலை . ஒரு மாதம் லீவு என்ற குறுகிய வட்டத்தில் அடைந்து விடக்கூடாது என முன்பே முடிவு செய்திருந்தேன்..உங்களில் பலருக்கும் அப்படி ஒரு அடிமை வாழ்வு பிடிக்காது..ஆனாலும் குடும்பத்துக்காக அப்படி இருக்க வேண்டி இருக்கும்.. எனவேதான் நான் குடும்பமே வேண்டாம் என முடிவு செய்து வாழந்து வருகிறேன்...  நான் சம்பாதிப்பது எனக்கு மட்டுமே.. வேறு செலவுகள் இல்லை... இன்னொன்று , பயணம் என்பது ஒரு கலை... பயணத்துக்கு காசு தேவை இல்லை..கால்கள் போதும்... கிடைத்ததை சாப்பிட்டு , கிடைத்தை இடத்தில் தூங்கி என் பயணம் அமைகிறது..

 வலது சாரி என்ற குற்றச்சாட்டு கேலிக்குரியது..இலங்கையில் கிட்டத்தட்ட எல்லா இயக்கங்களுமே வலதுசாரிதான்... பிரபாகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது ஒவ்வொரு பதிலையும் நன்கு யோசித்து சொன்னார்..கலந்து ஆலோசித்தார்.. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் உடனடியாக பதில் சொன்னார்..
அந்த கேள்வி...  நீங்கள் விரும்பும் ஈழம் அமைத்தால் அதன் பொருளாதார கொள்கை என்னவாக இருக்கும்... அவர் பதில் - தாரளமயமான பொருளாதாரம்..


இப்படி எல்லோருமே அங்கு வலதுசாரி சிந்தனை உள்ளவர்கள்தான்,.. என்னை இப்படி குற்றம் சாட்டுவது தவறு


 ஞா நி ...அடுத்த கேள்வி...

ஷோபா - இங்கு நீங்க மட்டும்தான் கேள்வி கேட்பீர்களா

( பலத்த சிரிப்பு )

 ஞா நி ( சிரித்தபடி )  என்னை விட அவர்கள் நன்றாக கேட்பார்கள் .. அதற்கு ஆயத்தம்தான் இது


( சர்ச்சைக்குரிய பிரெஞ்சு திரைப்படம் , மணிரத்னம் குறித்த பார்வை , தமிழக தமிழ் இலங்கை தமிழ் ஒப்பீடு , ஃபேக் படைப்புகள் , ஜேஜே சில குறிப்புகள் - இருவர் இன்னும் பல சுவையான விவாதம் அடுத்த பகுதியில் )


- தொடரும்


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா