Tuesday, March 18, 2014

தண்ணீர் தேவதை 2 ( இணைய மேதைகளின் இணையற்ற படைப்பு )


முந்தைய அத்தியாயங்களை இதில் படிக்கலாம்

அத்தியாயம் 8

எழுதியவர் தேசாந்திரி வழிப்போக்கி
நாகராஜ் என்னப்பா ஊரே கலவராமிருக்கு?தோழர் வந்திட்டீங்களா?நம்ம கணேசனுக்கு துர்மரணம் சம்பவிச்ச நேத்து ராத்தியில இருந்து அவன் கூட்டாளிகளை சுத்தி சுத்தி வரான்.நிர்மல் யாரிடமும் பேசறதில்லை.சிரசாசனம் செய்தப்ப பிச்சைக்கு தெரிந்த காயத்ரி, முடிஞ்சதும் நம்ம கந்தசாமி வீட்டு கிழவியாத் தெரிஞ்சதாம்.ஊரே பயந்துபோய் கிடக்கு தோழரே.அட ஏன் எல்லோரும் இப்படி இல்லாத ஒன்னுக்காக பயந்து சாவறீங்க?மூனு பயங்களும் ஒன்னா சுத்திக்கிட்டிருந்த கூட்டு களவாணிங்க.ஒருத்தன் செத்ததும் மிச்சமுள்ளவனுங்க பயந்து போய் கிடக்காங்க.இல்லைங்க தோழரே கணேசன் வீட்டுக்குள்ள வித்தியாசமா சத்தம் கேக்குதாம்.அடப் போங்கய்யா நீங்க நம்பற ஈஸ்வரன் சுடலையா சாம்பல் பூசி ராத்திரி பூரா ஆடறாராம்,அவர்கூடவே பேய் பிசாசெல்லாம் சேர்ந்து ஆடி களைச்சு விழுந்து சுடுகாட்டிலேயே தங்குதுங்களாம்.ஈஸ்வரனை நம்புற நீங்க இதை ஏன்யா நம்ப மாட்றீங்க?.கடவுளை நம்பாத நாங்க இதைத்தானயா வெங்காயம்னு சொல்றோம்.தோழரே கணேசன் உடம்பு அடக்கமாகலயே.அதான் வீட்டையும், அவன் கூட்டாளிகளையும் ஆத்மா சுத்தி வருது போல.அவனை பெத்தவங்களே உள்ள போக பயந்து எதிர்வீட்ல உட்காந்திருக்காங்க பாருங்க தோழர்.அட வெங்காயங்களா எத்தனை பெரியார் வந்தாலும் திருத்தமுடியாதுய்யா உங்கள.இன்னைக்கு ராத்திரி நான் தங்கறேன் கணேசன் வீட்ல.ஊரில் இருக்க மொத்த ஜனம் தடுத்தும் தோழர் கணேசன் வீட்டுக்குள் போய் கதவை தாளிட்ட அதே சமயம் பூரணமா தெரிஞ்ச நிலவை கரும்மேகம் சூழத் தொடங்கியது.நிலவும் மர்மமா சிரிக்கற மாதிரியே இருந்தது!.....




*******************************************************************

அத்தியாயம்9

எழுதியவர் சரஸ்வதி ஸ்வாமினாதன்
Judgement day பற்றிய பயம் பிச்சைக்கும் நிர்மலுக்கும் கணேசன் அகால மரணம் தந்நது. அவன் செத்துப் போகல பேயா இருக்கான் என்ற நினைக்கல ஆனா அவன் அகப்பேய் என்ன என்ற கேள்வி விதைச்சுட்டு போயிட்டான் என்று இருவரும் அவர்கள் மனம் யோசிப்பதை தனித்தனியே உணர்ந்தனர். அவர்களின் சிந்தனையின் வெளிப்பாடு வித்தியாசமாய் இருக்க இன்னும் கலவரமானார்கள் அவர்களை சுற்றியிருப்போர்.

கணேசன் பற்றி அதிகம் தெரிந்தவர்களைவிட இந்த நண்பர்களின் மூலம் அறிமுக மானவர்களே அதிகம்.

கணேசன் பிச்சை நிர்மல் புத்தக கண்காட்சிக்காக சென்னை வந்து அப்படியே சாரு சாரை பார்த்துவிட்டு திரும்பி போனார்கள்.

பாலு சாரோட மரணம் பற்றிய சர்ச்சை பிச்சை எழுதியது பார்த்து கணேசன் எனக்கும் இப்படி ஒரு போஸ்ட் போடுவியா என்றான்.

உனக்கு போஸ்ட் இல்ல தொடர் நாவல் நம்ம வாசகர் வட்டம் எல்லாம் உனக்காக எழுதுவாங்க நம்ம சாரு சாரும் எழுதுவாரு...

விளையாட்டு பேச்சு நிஜமான அதிர்ச்சியில் நிர்மல் நீந்த துவங்கி உடல் களைப்பாக மனம் தூங்கும் என கணக்கிட்டு நீந்தி கொண்டிருக்க...தோழர் பைசாசம் பற்றிய விவாதத்தில் இருந்தார்.

நம் கணேசன் விட்டுவிட்டு சென்ற பணிகள் என்னவென்று பிச்சை மனதில் சிந்திக்க துவங்கினான்.
அவன் நாவல் கருப்பொருள் கணேசன் ஆனான். அவன் கலைந்து போன குடும்பம் பற்றிய அக்கறை அதன் பொருளாதார மீட்சி என்று மனம் திரும்பியது. பிச்சை down to earth வந்தான்.

பின் நவீனத்துவத்தின் பின்கோடே என்று பிச்சை பிறந்த நாளில் முன்மொழிய கணேசன் வழிமொழிய ஏரல் பற்றிய அருமையான பதிவு மட்டுமே கணேசனுக்கு அஞ்சலி என நினைத்தான்.

எழவு வீட்டுல காப்பித் தண்ணி கொடுங்க ஆறுதலாய் இருக்கும் என்று எவரோ இட்ட குரலுக்கு ஒரு அரை நிஜார் பையன் வந்தான்.

கணேசன் மிச்சமாய் பிச்சையும் நிர்மலும் கிளம்பினார்கள்.

அவர்கள் தீர்மானம் அந்த கண்களில் தெரிந்தது விடிந்த நேரம் கருமேகம் கலைந்து அகப்பேய் அகன்றது....

விடியல் இனியது என மனம் கூவியது.





******************************************************************




அத்தியாயம்10

எழுதியவர் Arel Arj
நிர்மல் பாட்டி சொன்னதை எல்லாம் மனதில் ஒருமுறை படம் போல ஓட்டி பார்த்தான். சட்டென்று அவன் கவனத்துக்கு ஒன்று தோன்றியது. 120 வருடங்களுக்கு முன் இருந்த ஒரு நோயை பற்றிய அபூர்வ சம்பவங்கள். அப்படி என்ன அபூர்வம், மர்மம்..? எல்லாருக்கும் அது மர்மமா தோன்றாது. சிலர் அதை 'இவ்ளோ தானா' என்று கூறி ஒரு மொன்னையான விஷயம் போல் ஆக்கி விடிவார்கள். ஆனால் நிர்மலால் அப்படி எடுத்து கொள்ள முடியவில்லை. அந்த நோய் வந்தால் நாம் அதை உணர மாட்டோம். நம்மை பார்ப்பவருக்கு நம் முகம் வாடி போனது போல் தெரியும், அவ்வளவாக பசிக்காது, மிக சாந்தமாக மாறிவிடுவோம், எந்த சலனமும் பதைபதைப்பும் நம்மில் எழாது, பிறரிடம் மிக பாசத்துடன் பழகுவோம். 'இதெல்லாம் என்னடா நோய் அறிகுறி' என்று அந்த பாட்டி சொல்லும் போது நிர்மல் நினைத்தான். இந்த நோய் வந்தவர்கள் ஆறு மாதங்கள் வரை இவ்வாறு இருந்து இறந்து போனார்கள். இதில் ஆச்சர்யமான விஷயம் இறப்பவருக்கு நெருக்கமானவருக்கு, உண்மையாக அன்பு செய்பவருக்கு இந்த நோய் தொற்றிக்கொள்ளும். அவர்களும் நோய் அறிகுறிகளோடு இருந்து பின்னர் இறந்து போவார்கள். இறந்தவர்களின் ஆன்மா பிறரை எந்த விதத்திலும் தொல்லை செய்யாமல் தனக்கு பிடித்தவரை போய் சந்திக்கும், தன் சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும். யாரையும் அந்த நோயினால் இறந்த ஆன்மா தொல்லை செய்தததாக இதுவரை சான்று இல்லை. இந்த நோய் தாக்கிய பிறகு எவ்வாறு அதில் இருந்து விடுபடுவது என்பதையும் அந்த பாட்டி சொல்லி இருந்தார். நோய் அறிகுறிக்கு நேர்மாறான காரியங்களை செய்ய வேண்டும். வெறிகொண்டு சாப்பிட வேண்டும், கோவத்துடன் இருக்க வேண்டும், பரபரப்பாக இருக்க வேண்டும், கடுகளவு பாசம் கூட யாரிடமும் காட்டக்கூடாது. மனித தன்மையற்ற கொடூரனாக மாற வேண்டிய கட்டாயம் நிர்மலுக்கு இப்போது. அவனுக்கு தன்னை மட்டும் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. இந்த நோயுக்கு முற்றிலுமாக தீர்வு கண்டுபிடிக்கவே விரும்பினான். என்ன செய்ய என்று யோசித்த அவனுக்கு, பாட்டியை போய் சந்திப்பதே சரியான வழியாக தோன்றியது.




***************************************************************

அத்தியாயம்11

எழுதியவர் இலக்கியச்செம்மல் வெளங்காதவன்
இந்த வாழ்க்கைதான் எத்தனையெத்தனை திருப்பங்களை அடக்கியது என்று வியந்தவாறே ஒருக்களித்துப் படுத்திருந்தான் பிச்சை. கைகள் குறுக்கி, கால்கள் ஒன்றொன்று பின்னி, ஆதிசேஷனை படுக்கையாய்க் கொண்ட அந்தக் கடவுள் தன் பெண்ணாளுடனான புனைவின் ஆரம்ப நிலை தேட்டங்களை நினைவுறுத்தியது, பிச்சை படுத்திருந்த விதம்.

விதவிதமான ஆசைகளும் விசித்திரங்களும் சொல்லொண்ணாச் சித்திரங்களும் அடைபட்டிருக்கும் மனம் ஒரு குரங்குதான் என்று நினைத்தபோதே, அச்சிந்தினையிலிருந்து அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளி முலாம் பூசியதைப்போன்ற, கீழே அரைவட்டமும் முக்கோணமும் கலந்த வடிவிலான பாட்டில்மீது தாவியது அம்மனக்குரங்கு.

அதைக் கைப்பற்றும் எண்ணமிருந்தாலும் பற்றற்ற நிலையில் பட்டுப்போன பட்டாம்பூச்சியாய், கால்கள் அகற்றிய அணிலாய், நுரைமேல் நீந்தும் தவளையாய், துளசியின் வாடை கண்ட கொசுவாய், வீற்றிருக்கும் கட்டிலாய், திறந்திருக்கும் சன்னலாய், அரைவட்ட முக்கோண பாட்டிலாய், எல்லாமே அவனாகி, அதுவும் அவனும் கலந்து, அதுவும் அவனும் எதுவுமற்ற நிலையாகும், ஒப்பில்லா முறையாகும் சடமாகித்தான் போய்விட்டது அவன் மனம்.

சடமாகிப்போன சடகோபனை நினைக்கவேண்டிய மனதில், திடீரென நிர்மலும், நூற்றைம்பது வருடமாகியும் சடமாகிவிடாத அந்தப்பாட்டியும் நிழலோடினார்கள். மின்னால் கீற்று வெட்டும் வேகத்தின் ஒன்பதின் ஒரு பங்கு வேகமாக, ஓடையின் இறுதித் துளியின் தரையடையும் லாவகமாகவும் நிர்மலும் அந்தப் பாட்டியும்;

கட்டிலிலிருந்து எழுத்துவிட்டான் பிச்சை.

பாட்டி சொன்ன தண்ணீர் தேவதை உண்மைதானா? என மனம் கேள்வி எழுப்பியது. மின்னலுக்குப்பின் வரும் இடியென, புயலென, மழையென அவன் மனம் குழம்பியது.

குழப்பம் நீக்க அவன், அந்தப் பாட்டிலை அணுகினான்.





************************************************************************




அத்தியாயம்12

எழுதியவர் சரவணன்
பிச்சையிடம் இது உண்மைதான என்று தெரிந்துகொள்கிற ஆர்வம் இல்லையில்லை வெறியே சூழ்கொண்டது. புட்டியை கையில் எடுத்தபோது அந்த கிழவி சொன்ன நிழல் உலகம் மற்றும் தண்ணீர் தேவதைகளின் விளக்கங்கள் நிழலாடியது.... அதை சொல்லியபோது கிழவியின் கண்கள் ஒரு அற்புதத்தை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் கண்களை போல் எப்பிடி விரிந்தது....

நிர்மல் கொன்சமும் நம்பமுடியாதவனாக கிழவியின் முன் அமர்திருந்தான். அன்று அந்த கிழவி சொன்ன கதை கேட்கும்பொழுது இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால்...ஹும்ம் இப்பொழுது என்ன புண்ணியம்...பிச்சையும் இதில் வந்து மாட்டிக்கொண்டு....விடை தேடி இப்பொழுது இருவரும் கிழவியின் முன் அமர்திருக்கின்றனர்...

கிழவி, "அவரு ஒரு அற்புதமான மனிதர்! நாங்கள் எல்லாம் அழிந்துபோன இசைவாணர் வம்சாவளியை சேர்ந்தவர்கள். ஊர் ஊராய் திரிவது எங்கள் சமூக வழக்கம். நிரந்தரமாக எங்கும் தாங்குவதில்லை. அந்த சம்பவம் அவருக்கு நேர்ந்த பிறகு நான் இங்கேயே தங்கிவிட்டேன்."

நிர்மல் "அழிந்துபோன கலையா? என்னது அது?"
"அவர் மிக அருமையாக கதை சொல்லுவார். கைகளில் உள்ள அந்த வாத்தியத்தை வைத்துக்கொண்டு வாசித்துக்கொண்டே பாட்டு போல் சொல்லுவார். திங்கடி என்று சொல்லுவார்கள் அந்த வாத்தியத்தை. மூன்று பூசணிக்காய்கள் ஒன்று சேர்த்து கட்டியது போல் இருக்கும் மேல வீணை போன்று..அந்த வாத்தியத்தின் ஓலீ ஒரு முறை கேட்டால் சில மணி நேரங்கள் காதுகளில் கற்பனையாக ஒளித்துகொண்டிருக்கும்"
பிச்சை "அந்த வாத்தியத்தில் அப்பிடி என்ன வித்தியாசம்?"
"இருக்கு தம்பி! இந்த காலத்தில் இதை நம்புவீர்களா என்று தெரியவில்லை ஆனால் உலகம் முழுவதும் இந்த கலை அன்று இருந்தாக அவர் சொல்லுவார். எங்களுடைய சனம்தாம் ஊரு ஊராக சென்று நாங்கள் போகும் வழியில் கேட்ட சம்பவங்களையும் கதைகளையும் சேர்த்து கட்டி ஒரு சுவாரசியமான கதையை போல் உரு போட்டு பாட்டாக பாடுவார்கள். இதில் அந்த சொல்லப்படப்போகும் கதையை இவர்கள் மிக கவனமாக மனத்தில் முதலில் உருவாக்குவார்கள், அதில் ஓசை, உணர்ச்சிகள், படங்களுடன் அந்த கதையை மனத்தில் உருவாக்குவார்கள். இனிக்கு வருதே சினிமா படம் போல மனத்தில் உருவாக்குவார்கள். அதை திரும்ப திரும்ப அந்த வாத்தியத்தை பயன்படுத்தி அதற்கான ராகத்தில் பாடியபடியே அதை மீண்டும் மீண்டும் நினைவில் இருத்துவர்கள்"

பிச்சை "அது சரி பாட்டி, இது என்ன பிரமாதம் பெரிசா ஒன்னும் இல்லையே?"

"தம்பி நிழல் உலகம் என்று ஒன்று இருக்கிறது தெரியுமா?

பிச்சை "தெரியாது"

நிர்மல் முகத்தில் அதிர்ச்சி கலவரம் இரண்டும் சேர்ந்த கலவை, ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்தால் நம்ப முடியாது என்று சொல்லவும் முடியவில்லை.

"இன்னிக்கு விஞஙானம் என்று ஏதோ சொல்லுகிறீர்கள்! அந்த உலகம் இங்கேதான் இருக்கிறது நமது உலகத்தொடு ஒன்றோடு ஒன்றாக கலந்து கரைந்து இருக்கிறது. துணியில் உள்ள ஊடு பாவு போல...அதை நாங்கள் தண்ணீர் தேசம் என்று சொல்லுவோம்!"

நிர்மல் "தண்ணீர் தேசமா? நீங்கள் சொன்ன அந்த தண்ணீர் தேவதைகள் அந்த உலகத்தைத்தான் சேர்ந்தவர்களா?"

"ஆமாம்! அன்னிக்கு நீ கேட்டதால் நிறைய சொல்லவில்லை. அந்த உலகம் நம்மோடு தொடர்பில் உள்ளது

இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பிரிசினை என்றால் இங்கே உங்களுக்கு மனத்தில் அடித்துகொள்ளுமே அதற்கு காரணம் இந்த தண்ணீர் தேவதைகள்தான்!"

நிர்மல் "அப்போ நாம் பேசுவதையும், நினைப்பதையும் அவர்களால் பார்க்க முடியுமா?"

"பார்க்க மட்டும் இல்லை உங்கள் மனத்தில் ஒரு விசயத்தை அவர்களால் உருவாக்கவும் முடியும்! இந்த திங்கடி என்ற அந்த வாத்தியம் தண்ணீர் தேவதைகளுக்கு மிகவும் பிடித்தமான இசை! அந்த வாத்தியத்தை வாசிக்கும்போது கூட அமர்ந்து கேட்குமாம்..இவர்கள் உருவாக்கும் இந்த கதைகளை அந்த இசையோடு சொல்லும்போது அவை கூட அமர்ந்து கேட்குமாம்! இதை அவர்கள் நாங்கள் செல்லும் ஊர்களில் மாலை நேரங்களில் ராஜாசபையில் எல்லோரும் அமர்திருக்க படுவார்கள். அப்பொழுதும் அந்த தண்ணீர் தேவதைகள் அங்கே வருமாம் உட்கார்ந்து கேட்ட்க்கும்பொழுது இவர்கள் உருவாக்கிய அந்த காட்சிகளை, உணர்வுகளை இசை கேட்கும் மனிதர்களிடம் அப்பிடியே உருவாக்குமாம். எல்லா மனிதர்களும் ஒரே கட்சி ஒரே உணர்வு! ஆனால் யாருக்கும் புரியாது இது எப்படி என்று"

"சரி இந்த தண்ணீர் தேவதைகள் மனத்தில் காட்சிகள், உணர்ச்சிகளை உருவாக்கமுடியும் என்று சொல்லுகிரீர்களே! இசை சம்பந்தப்பட்டது மட்டும் தான் முடியுமா?

"இல்லை! எதுவேண்டுமானாலும் முடியும்! ஆனால் அதை முதலில் நீங்கள் பிசிறில்லாமல் கற்பனை பண்ண தெரியவேண்டும்! நீங்கள் இப்பொழுது அனுபவித்துகொண்டிருக்கும் பிரிசினை எல்லாத்துக்கும் காரணம் இந்த தண்ணீர் தேவதைகள்தான்!!!"




******************************************************************

அத்தியாயம் 13

எழுதியவர் இலக்கியச்செம்மல் விளங்காதவன்
விஜீநாதன் எனும் தந்துகிக்காரனும் கின்னாரன் எனும் திங்கடிக்காரனும் எமது சபையில் மேலான இசைக்கலைஞர்கள். கீர்த்தனைகளை விஜீநாதன் இசைக்க, பின்புல உயிரூட்டல் கின்னாரனால் நடைபெறும், அனுதினமும்.”

“குயிலின் ஓசையையும், மயிலின் அகவலையும் கேட்டறிந்து, பின்னொலி ரிதங்களையும்(வடமொழிச் சொல்) ஒலியோடை வேகத்தையும் அனுசாரித்து, உள்ளக்கிடக்கையின் சொல்வண்ணம் பூசி, மருகும் மாலையின் வெம்மையை எடுத்து, உருகும் பனியில் நீந்தவைத்து, கொக்கின் வெள்ளையில் நீலச்சாயம் பூசி காதில் வெல்லப்பாகைக் கலந்து ராகமாக்கி, நரம்பிலிருந்தும், விடும் மூச்சிலிருந்தும் தேவராகங்களை இசைப்பவர்கள் அவர்கள்.” அந்தப்பாட்டியின் கண்களின் பிரகாசம் கொப்பளிக்கப் பேசினாள்.

தந்துகிக்கும் தந்துபிக்கும் வித்தியாசமறியா இசைஞானி பிச்சையின் கண்கள், அந்தப்பாட்டியின் காதோரக் கமழங்களில் பதிந்திருந்தது. நிர்மல், தன் முகவாயைச் சொறிந்துகொண்டே, அவளிடமிருந்து வரும் வார்த்தைக் கோர்வைகளை உள்ளீடாக்கப் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தான்.

“ஒரு பெண்புறா சிறகுகளை விரித்து மேலெழும்பும் ஓசைக்கென்று தனி ராகங்கள் வைத்திருந்தார்கள் எம் இசைக்கலைஞர்கள். விஜீநாதனும் கின்னாரனும் ‘இசைச்சொரூபிகள்’ என்றே அழைத்தனர் எம்முலகில்.”

“இசையின் சிருஷ்டிக் கோர்வைக்கும், உமது வயிற்றில் எழும் பசிக்கும் உண்டான நுண்கட்டமைப்பு வியாக்கியானங்களை எம்மனோர் ஆராய்ந்துகொண்டிருந்தனர்”

“இந்தக் கின்னாரனின் மூத்த மாணவன்தான், என் கணவன் ‘பாரிசீலன்’!”

எந்தப் பதற்றமுமின்றி அவள் பேசியது, இருவரின் காதிலும் சப்தித்து அடங்கியது.

தென்றல் தன் ஒப்பில்லா நறுமலர் மணத்துடன் வீசியது.





( தொடரும் )



Monday, March 17, 2014

மேதைகள் சேர்ந்து எழுதும் அதிரடி கதை - தண்ணீர் தேவதை

ரிலே ரேஸ் கதை... பலர் தொடர்ந்து எழுதப்போகும் கதை... ஒருவருக்கு மூன்று வாய்ப்புகள்.. எழுத விருப்பம் இருக்கும் யார் எழுத வேண்டுமானாலும் எழுதலாம்.. தான் எழுதுவதை , யார் தொடர வேண்டும் என்பதை ( விருப்பம் தெரித்தவர்களிலிருந்து ஒருவரை ) , குறிப்பிட்ட பகுதியை எழுதியவர் சொல்வார்..
***********************************************
தண்ணீர் தேவதை

அத்தியாயம் 1 
எழுதியவர் Nirmal Mrinzo
இந்த கதையை நான் எனது நாவலுக்கான கருவாக வைத்திருந்ததிலிருந்து எழுதுகிறேன், இந்த கதையை எனக்கு சொன்னது ஒரு 150 வயது பாட்டி, ஆத்தங்கரையிலேதான் எப்பொழதும் இருக்கும், அது எப்ப பொறந்திச்சி, இங்கு வந்திச்சின்னு யாருக்குமே தெரியாது, அதுகிட்ட விஷேசமான மருத்துவ சக்தி இருதிச்சி, எங்க ஊருக்கு பக்கம் யாருக்கு மஞ்சள் காமாலை வந்தாலும் இந்த பாட்டிக்கிட்டதான் தூக்கிட்டு வருவாக. சின்ன புள்ள, புள்ளதாச்சி, கிழம், என எல்லோரும் பாட்டிகிட்ட மருந்து வாங்கி சாப்பிட வருவாங்க. எனக்கு மஞ்சள் காமாலையில் இருக்கும் பொழுது நானும் அந்த பாட்டிகிட்ட மருந்து வாங்கி சாப்பிட போனேன், மருந்து வாங்கி சாப்பிட்டேன், சரியான மழை, மழை விடுமென அந்த பாட்டி வீட்டிலேயே காத்துகிட்டிருந்ததில் நேரம் அதிகமாகி, அங்கே தங்கிவிட்டேன். அன்னிக்குதான் அந்த கதையை சொல்லிச்சி பாட்டி. அது அந்த பாட்டியை பற்றி யாருக்கும் தெரியாத கதை. சந்தோஷ வாழ்வை பற்றீய கதை........

அத்தியாயம் 2 
எழுதியவர் பிச்சை
" என்னடே கதை விடறே.. பாட்டியா.. 150 வயசா.. கதை சொன்னுச்சா ..ஹா ஹா.. ஏதாச்சும் கனவா ..ஹா ஹா.. “ வாய் விட்டு சிரித்த கணேசனை சற்று அலுப்புடன் பார்த்தான் நிர்மல்.
” இங்கே பாருடா.. A is A அப்படீங்கற கான்சப்ட் எல்லாம் வழக்கொழிஞ்சு போச்சு.. ஏ என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அப்படீங்கற யுகத்தில இருக்கோம்..truth can be stranger than fiction " என்றான் நிர்மல்..
” சரிடா.. அப்ப நான் ஒரு பேயை பார்த்தேன் அப்படீனு சொன்னா நம்புவியா “ குறும்பாக கேட்டான் கணேசன்.
இப்படி வேறு யாரேனும் கேட்டு இருந்தால் சூடாக பதில் கொடுத்து இருப்பான்.. ஆனால் ஏரலில் இருந்து சென்னைக்கு தன்னை பார்க்க வந்து இருந்து வந்து இருக்கும் பள்ளி நண்பன்..இதமாவெ சொல்வோம்
“ பேய் அப்படீங்கறது பொய்.. நான் சொல்வது வித்தியாசமான உண்மைகள்..ரெண்டும் வேற “ என்றான் நிர்மல்.
“ அப்ப அந்த பாட்டி பொய்னு நான் ஏன் சொல்லக்கூடாது “ விடவில்லை கணேசன்..
“ இருடா பேசலாம்... டீ எடுத்துட்டு வறேன் “ .. சமையல் அறை நுழைந்த போது போன் அடித்தது.. அப்பா.
“ நிர்மல்.. என்னடா போன் கிடைக்கவே இல்லை.. ஒரு பேட் நியூஸ்டா...”
” என்னப்பா “
“ ஃபாரின்ல வந்து இருக்கேனு கேள்விப்பட்டு உன்னை பார்க்க கிளம்பிய உன் நண்பன் கணேசன்... “
“கணேசன் ?”
“கார் ஆக்ச்சிடெண்ட் ஆகி ஸ்பாட்லயே..”
“ என்னப்பா உளறுரீங்க” பதட்டத்துடன் வெளியே ஓடி வந்தான் நிர்மல்
அங்கே கணேசன் இல்லை...
இது ஆல்டேர்னேட் ட்ரூத்தா அல்லது ட்ரூத்தா அல்லது இல்யூஷனா... திகைத்துப்போய் நின்றான் நிர்மல்.. அந்த பாட்டி சொன்ன விஷ்யங்களின் அழுத்தம் , அர்த்தம் புரிய் ஆரம்பித்தது

அத்தியாயம் 3 
எழுதியவர் நிஜந்தன் தோழன்
"கணசே" என வாய் கொழறியது நடப்பது என்ன என விளங்கிக்கொள்ளாமல் நிர்மல் திடுக்கிட்டான்..தான் இதுவரை படித்த நாவலில் கூட இப்படி திடுமென விளங்கிக்கொள்ள முடியாத கதைபோக்கை உணர முடியாததை கண்டு ஆசூயாய் உணர்ந்தான்.வைத்தியம் பார்க்க கிளம்பியதில் இருந்து பாட்டி சொன்ன கதை வரை மீண்டும் நடந்தவற்றை ஒரு முறை மனதில் ஓட்டி க்கொண்டிருந்தான் எல்லாம் தெளிவாக மறுமுறை ஊத்து பறிக்கும் போது வரும் நீரை போல மனதில் ஓடியது. பாட்டி சொன்ன கதை சொல்ல தொடங்கிய முன் ஏழு மோகினிகள் எக்ஸிமோக்கள் பற்றி பேசிய விஷயம் நினைவுக்கு வந்தது.. என்ன யோசித்தானோ தெரியவில்லை திடீரென நீச்சல் குளத்தில் இறங்கி நீந்த ஆரம்பித்தான் எதுமே நடக்காத மாதிரி நீரில் வசிப்பவனை போல நீந்தி கொண்டிருந்தான். குன்றக்கடி கோவிலில் இருந்து வந்துறங்கிய பிச்சை எல்லாவற்றை கண்டு திடுக்கிட்டான் தீடிர் விபத்து,நீந்திக்கொண்டே இருக்கும் நிர்மல் என எல்லாவற்றிர்க்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என சிக்கலை தீர்க்க நிஜந்தனைக் கூப்பிட்டான் பிச்சை...
அத்தியாயம் 4 
எழுதியவர் நறுமுகை தேவி

வாசல் கதவை யாரோ பலம் கொண்ட மட்டும் தட்டும் சத்தம் கேட்டு தடால் என்று எழுந்தான் பிச்சை.. ச்சே! இது என்ன குழப்பமான கனவு..கணேசன் செத்து விட்டதாக போன் வந்ததே..ஐய்யோ..! அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?நெஞ்சுக்குள் கொஞ்சமாய் கலவரம் சூல் கொண்டது.வெளியே காலிங்பெல் அடிப்பதும்,கதவு பலமாய்த் தட்டப்படுவதுமாய் இருந்தது.ஆனாலும்,நேற்று முன் தினம் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த காரணத்தினால் கால்களில் இரத்தம் கட்டிக் கொண்டு உடனே பதறி எழமுடியவில்லை.மட்டுமில்லாமல்,கனவின் தாக்கத்தில் இருந்து மூளை உடனடியாக விடுபட மறுத்தது.சாவு பற்றிய கனவு கண்டால் திருமணச் செய்தி வருமாமே?உண்மையாய் இருக்குமோ? என்று எண்ணிக்கொண்டே நழுவ இருக்கும் லுங்கியைக் கைபற்றியபடி கதவு திறந்தான் பிச்சை.அங்கே..
வாச..லி…ல்..
பிரிந்து போன காதலி காயத்திரி கைப்பெட்டியுடன்..
என்ன..? அதிர்ச்சியில் நா குழறியது பிச்சைக்கு..

உள்ளே வரலாமா?என்றவள் பதிலுக்குக் காத்திராமல் சர்வ சுதந்திரத்துடன் உள் நுழைந்து இயல்பாகச் சொன்னாள்

பிச்சை..உன்னை விட்டு என்னால் இருக்க முடியலை..வீட்டில் இருந்து மொத்தமாகக் கிளம்பி வந்து விட்டேன்..
அத்தியாயம் 5 
சரஸ்வதி ஸ்வாமி நாதன்

என்ன நீ ஏதோ ஒரு முடிவோடதான் இருக்க போல பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் கோரை பாய் பின்னி நானும் பாட்டியும் பல கதை பேசியிருக்கோம் இப்ப நீ கதைக்கிறதெல்லாம் அவங்க நான் பேசுனதோட மிச்சம்.

ஏரல் நிர்மல் நீயும் இரட்டைகுழல் துப்பாக்கியா இலக்கியம் சுட கிளம்புங்க நான் வேணாங்கள ஆனா பாட்டி கிடந்து தவிக்குது பய புள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்டு நாக்கு செத்து கிடக்கு நீ போய் கீரை வச்சு கொடு ன்னு சொல்லுக்கு..கட்டுப்பட்டு வந்தேன்.

உலக அறிவையெல்லாம் உன் மூளை உள் வாங்குதே அந்த மலைக்கோட்டை காவிரியில் பாலத்தில் விழுந்து போன தாத்தாவோட சாவு என்ன மாதிரி இந்த கிழவியோட வாழ்க்கையை திருப்பி போட்டுச்சு தெரியுமா ...

150 வருஷமா அதே கரையில் எங்க தலைமுறை அந்த தண்ணீர் கிழவனுக்கு படையல் வைப்போம் எல்லா மஹாளய அமாவாசைக்கு...

போன வருஷம் பாட்டி நம்ம கல்யாணத்துக்கு வேண்டிக்குச்சு நீ பிச்சை எடுத்துக்கிட்டு இங்க கிடக்க....


அத்தியாயம்6
ராம்ஜி யாஹூ


இப்பந்தான் டேய் நிர்மலு ஏறலு, சிருவைகுண்டம் னு தனித் தனியா பேரு வச்சு இருக்கீவ .
உங்க தாத்தா காலத்துல கரும்குளத்துல இருந்து முக்காணி வரை ஒரே ஊரு தான் .
அவுக கருப்பா இருந்தாலும் களையா இருப்பாவ. எனக்கு எட்டு வயசு அப்போ, உங்க தாத்தனுக்கு பன்னெண்டு வயசு . என்கிட்டே எதைப் பாத்து மயங்கினாவா தெரியலை . பெருமாள் சித்ரா பவுர்ணமி அன்னிக்கு ராத்திரி உன்னைய எனக்குப் பிடிச்சிருக்கு புள்ளை , கலியாணம் கட்டிக்கிடுவோம்னு சொன்னவா . அதைக் கேட்ட
எங்க அண்ணன் , உங்க தாத்தாவைப் பாத்து நீரு தேவமாரு நாங்க ஜெபகூட்ட ஆளு, எப்படியா பொருந்தும் சொன்னான் . அதெல்லாம் தெரியாதுவே ன்னு சொல்லி சைக்கிள் கேரியர்ல இருந்து அருவாளை எடுத்து அந்த பெருமா கோவிலு வாழை மட்டை நாரைக் கிழிச்சு அதையே எனக்குத் தாலியாக் கட்டினாவ. சைக்கிள்ள என்ன அப்போமே முன்னால வச்சுக் கூட்டிட்டு போனாவா . கல்யாணம் ஆன முதத் திருப்பு எங்களை வீட்டுக்குக் கூட்டிப் போய் பால், கலர், பர்பி வாங்கிக் கொடுத்தது நம்ம பேட்மா நகரத்து மைதீன் பாய் . என் வயசு 150 சொன்னதுக்கே முளிக்கயேடே , மைதீன் பாய் வயசு இப்போம் 180 தாண்டிருச்சு டேய் .

அத்தியாயம்7

ஸ்ரீநிவாச கோபாலன் வேதாந்த தேசிகன்

பிச்சை மீன் தொட்டியை வெறித்துக்கொண்டு இருந்தான். காயத்ரி குளியலறைக்குள் போனாள். பெண்டுல கடிகாரம் அரைமணி அடித்து ஓயவும் பிச்சையின் செல்போன் ஒலித்தது. மேசை மீது இருந்த செல்போனை எடுப்பதற்குள் வாசற்கதவைத் தட்டும் ஓசை கேட்டு கதைத்திறந்தான். இரண்டு போலிஸ் நுழைந்தனர். அதே கணத்தில் பாத்ரூமில் இருந்து 'டமால்' என்ற சப்தம். ஒரு போலிஸ் காயத்ரி வைத்த பையைத் திறந்தார். அதில் குருதி சொட்டும் தலை. பிச்சைக்குப் பித்து பிடித்துவிடும் போல

( தொடரும் )


Monday, March 3, 2014

தமிழ் கவிதைகளின் எதிர்காலம்? - கவிஞர் றியாஸ் குரானாவுடன் ஓர் உரையாடல்

  நவீன கவிதை காலாவதியாகி விட்டது என்ற கவிஞர் றியாஸ் குரானாவின்
கட்டுரை சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடன் ஓர் உரையாடல்.. உரையாடலுக்கு முன் அவர் கட்டுரையில் இருந்து ஒரு சிறிய பகுதி..
********************
பின்நவீன கவிதை சாத்தியங்களை மாத்மாத்திரமே கருத்திற்கொள்கிறது. அதனூடாக எதையும் காப்பாற்றிவிட்டு ஒரு செயலை முடிக்கிறது. அதாவது, தீப்பிடித்திருக்கும் மாடியில் சிக்கிய குழந்தையை மிக இலகுவாக காப்பாற்றிவிட பின்நவீனக் கவிதையால் முடிகிறது. இது எப்படி என்றால் குறித்த சம்பவத்தை பிரதிபலிக்காமல், அதற்கு நிகரான ஒரு சம்பவத்தை உருவாக்கிவிடுகிறது. இந்த உருவாக்கத்தில், எதார்த்தம் என நம்புவதற்கும் கற்பனைக்குமிடையிலான எல்லைக்கோட்டை அழித்துவிடுகிறது. அப்படி அழிக்கப்படும்போது ஒரே பிரதியில் எதார்த்தமும் கற்பனையும் சமமான அர்த்தத்தில் வசிப்பதாக மாற்றியமைக்கிறது. இப்படி மாற்றியமைப்பதினூடாக, அங்கே காப்பாற்றமுடியாது என்ற ஏக்கம் சிறிதும் இருப்பதில்லை. எதை எந்த வழிகளில் நிகழ்த்திக் காட்ட முடியுமோ அந்த வழிகளையெல்லாம் கையாள்கிறது. நெடிய வரலாற்றில் சரிசெய்ய முடியாமல் போராடிய வாழ்வை, வேறொரு தளத்தில் பிரதியில் நிகழ்த்திக்காட்டுகிறது. பின்நவீனத்துவத்தின் கவித்துவம் என்பது நிகழ்த்திக்காட்டுவதுதான். நவீனத் துவத்தின் கவித்துவம் பிரதிபலித்தல் என்பதை நிங்கள் அறிந்திருப்பீர்கள்.
நவீன கவிதையை காலாவதியாகச் செய்த கவிதையை 2004ம் ஆண்டு ரமேஸ் : பிரேம் இருவரும் இணைந்திருக்கும்போது அவர்களிடமிருந்தே வெளிப்பட்டது. அதுபோல சில கவிதைகளை அப்போது, அவர்கள் முயற்சித்திரந்தாலும் அந்த ஒரேயொரு கவிதையே நவீனத்திலிருந்து பின்நவீனத்திற்கு கவிதையை நகர்த்தும் முதலாவது கவிதையாக இருந்தது. எனினும். அதன் பிறகு அவர்களால்கூட நிகழ்திக்காட்டும் கவிதைகளைத் தொடரமுடியாமல் போய்விட்டது என்பது துரதிஸ்டவசமானதுதான்.
அந்தக் கவிதை இதுதான். தமிழின் முதலாவது பின்நவீன கவிதையாக (நிகழ்த்து கவிதை) நான் அடையாளம் கண்டது.
புத்துயிர்ப்பு
நெடிதுயர்ந்த கட்டிடம் எரிந்து கொண்டிருந்தது.
உள்ளே இருந்து அபயக்குரல்கள்
தலைக்குமேல் பறந்த காகம் ஒன்று
தீச்சுடரில் சிக்கிக்
கட்டிடத்தின் திறந்த வாய்க்குள் விழுகிறது.

பத்தாவது மாடியின் கண்ணாடிச்
சன்னலை உடைத்து
எரிந்து கொண்டிருக்கும்தாய்
குழந்தையை வெளியே வீசுகிறாள்
பறாச் சிறகுகளைச் சூடியஅ து
படபடக்கிறது அந்தரத்தில்.

சிறகுகளை குழந்தைக்கு முளைக்கச் செய்து காப்பாற்றிவிடுகிறது கவிதை. காப்பாற்ற முடியாத ஏக்கமாக மாறாமல், காப்பாற்றுதல் என்பதை நிகழ்த்திக் காட்டுகிறது.ஆயினும், 2010ம் ஆண்டிற்குப் பிறகே இந்த பின்நவீன நிகழ்த்து கவிதைகள் அதிகரிக்கத் தொடங்கின
****************************************

இனி உரையாடல்....

********************************

 ஒரு பார்வையில் பார்த்தால் , கவிதை எளிமை படுத்துவது தவறு என நீங்கள் வாதிடுவதாக தோன்றுகிறது


நவீன கவிதையை எப்படி கடக்கிறோம் என்பதை சொல்கிறேன். அதுபோல, கவிதை எப்படி நகர்ந்து வந்திருக்கிறது என்பதையும் சொல்கிறேன். எளிமை என்பது வாசிப்பு பயிர்ச்சியை பொறுத்து உருவாகுவது. ஒரு தமிழ் பாட மாணவனுக்கு திருக்குறள் புதுக்கவிதையைவிட எளிமையானதுதான்.



நினைவு வைத்து கொள்ள எளிதான வடிவில் , சந்தத்தில் இலக்க்ண நூலான தொல்காப்பியத்தை எழுதினார்கள்...அது ஓர் அழகுதானே

அந்தத்தேவை இப்போது இருப்பவர்களுக்கு அதை பரிந்துரைப்போம். ஆனால், கவிதை ஒரு கற்பனையான சிந்தனை முறை என யோசிப்பவர்களுக்கு வேறு தேர்வு அவசியம்தானே


நவீன கவிதை காலாவதி ஆவது ஓகே..ஆனால் நவீன கவிதையின் எல்லா சாத்தியங்களையும் தமிழ் முயன்று பார்த்து விட்டு , பின் நவீனத்துவத்துக்கு தயாராகி விட்டதா? நாவலை பொறுத்தவரை , பின் நவீனத்துவத்துக்கு இன்னும் தயாராகவில்லை என்பது பலர் கருத்து

நாவல் சிறுகதை எல்லாம் மிக முந்தியே அதைச் செய்துவிட்டன. எதுவும் அதன் அனைத்துச் சாத்தியங்களையும் நிகழ்த்திவிட்ட பிறகுதான் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பது ஒருவகை எதிர்பார்ப்பு . ஆனால், அது அப்படியல்ல. எந்தக் கருத்துநிலையும் முழுமையாக செயற்படுத்தப்படுவதோ, முழுமையாக நிராகரிக்கப்படுவதோ இல்லை. அதன் முக்கியமாக சரடு கேள்விக்குள்ளாகும் புலத்திலிருந்து அது உடைத்துக்கொண்டு போய்விடுகிறது

பின்நவீன கவிதை சாத்தியங்களை மாத்மாத்திரமே கருத்திற்கொள்கிறது- இதுதான் பின் நவீனத்துவத்தின் வரையறையா


நவீன கவிதை அதை எப்படிக் கடக்கிறது என்பதும், கடந்த நிலையில் அதற்கு என்ன பெயரிடுவது என்பதும் முக்கியமான ஒன்று. அதை பின்நவீன அம்சங்களோடு பொருத்தி பேசுவது என்பது ஒரு ஆரம்ப நிலை. இது பின்நவீனத்துவத்தின் கருததநிலையை முற்றாக எடுத்துக்கொள்வதல்ல. நவீனத்துவத்தின் தொடரச்சியுடன் கடந்து நிற்பது. நான் தௌவிவான ஒரு சொல்லை பயன்படுத்தியிருப்பேன். தமிழின் பின்நவீன கவிதை என்று. ஆகவே, பின்நவீனம் என்ற கருத்தாக்கத்தை முற்றாக இங்கு கையேற்காமல், தமிழ் கவிதையின் தொடர்ச்சியை வாசிப்பதினுாடாக, நவீன கவிதையை எப்படிக் கடக்கிறது என்றுதான் முன்வைத்திருப்பேன்.

பின்நவீனத்துவம் வாழ்வை முழுமையாகச் சரிசெய்ய முடியாது என அறிவித்தது. - அப்படி என்றால் ஈழம் சார்ந்த லட்சியவாத கவிதைகள் எல்லாம்?



அவை குறித்து கட்டுரையில் பேசியிருக்கிறேன். இதற்கு முன்பும், கற்பனை என்பது மேலதிகச் சிந்தனை என்ற கட்டுரையிலும் பேசியிருக்கிறேன். அரசியலை தனித்துறையாகவே கவிதை பார்க்கிறது. அதற்கு கவிதை கடமைப்பட்டது என்ற எந்த பிடிவாதத்தையும் அது நிராகரித்துவிடும்.

ஈழ அரசியல் போன்றவற்றுக்கு இடம் இல்லையா?
அரசியல் ரீதியான பார்வைக்கு இங்கு பின்நவீனத்துவம் முக்கிய இடந்தருகிறது. சிறுபான்மைக் கதையாடலாக ஈழத்து அரசியல் நிலவரத்தை அனுகுகிறது. அதற்கான வாய்ப்பு அதற்குள் உண்டு.


விளிம்பு நிலை மக்களின் எழுத்துகள் , பெண்ணீய பார்வைகள் போன்றவை குறித்து ?


அவை குறித்து பேசியிருக்கிறேன். பின்நவீனம் தமிழைச் சந்தித்ததும் ஏற்பட்ட மாற்றங்கள். அரசியல் ரீதியிலான அதன் பயன்பாடே தமிழில் மேலெழுந்தது. விளிம்பு நிலையில் வைக்கப்பட்டவர்கள், சிறுகதையாடல்கள் என்பன மேல்நிலைக்கு வந்தன. அதன் வரவுதான், தலித் இலக்கியம், பெண் எழுத்துக்கள் என்பது முன்னிலைக்கு வரவேண்டிவந்தது. இது முற்றிலும் அரசியல் சார்ந்த பார்வையினுாடாக இலக்கியம் அனுகப்பட்டதற்கு உதாரணம். ஆனால், நான் சொல்வது, புனைவுசாரந்த செயல்களால் கவிதை நவீன வெளியிலிருந்து கடந்துவிடுவதைத்தான்.

மனிதனை மகத்தானவனா மாற்றுவதே கலை என்பதை பின் நவீனத்துவம் மறுக்கிறது என்கிறீர்களா


மனிதனை எந்த தத்துவங்களும், அறங்களும், கலைகளும் மகத்தானவனவர்களாக மாற்றவில்லை என்கிறது என உடனடியாகச் சொல்லலாம். இப்படிச் சொல்லுவதுதான் அனைவருக்கும் புரியவும்கூடும்.

அப்படி என்றால் கலைகளின் நோக்கம் அல்லது பணி என்ன
அனைத்திற்கும் நோக்கமும், பணியும் தேவை என்பது ஒரு மதம் சார்ந்த பார்வை. ஆனால், இந்தக் கேள்வியை தொடர்ச்சியாக கேட்டால் அமற்கு ஏதோவொரு வகையில் பதிலொன்றை உருவாக்கிவிட முடியும். கலை என்பது ஒருவகை மனிதச் செயல். அது நிகழ்த்தப்பட்ட பிறகு அதன் பயன் மற்றும் நோக்கம் குறித்து பல விசயங்களை உருவாக்கிவிட முடியும். ஏலவே நொக்கதையும் பயனையும் விளைவாக வைத்து செயற்பட்டால் அது கலையில்லை என்று மட்டும் தெளிவாக சொல்லலாம்.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா