Sunday, June 17, 2018

ரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம்

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் வழங்கியபேட்டி

----

ரஜினி அரசியல்  நுழைவுக்கான படமாக காலாவை கருதலமா 

-காலா மக்கள் பிரனைளைப்பேசும் படம்... இந்த பட விவாதத்தின்பே ாது  ரஜினி அரசயல் நுழைவை அறிவிக்கவில்லை. செ ால்லப்   ே பானால் தேர்தல் அரசியலை  களமாக  கெ ாண்ட  கதை ஒன்று  அவர்க்கு பிடித்திருந்த பே ாதும் அதில் நடிக்க விரும்பவில்லை


அரசியல் அறிவிப்பை  ெ வளியிட்டதும் திரைக்கதையில்  மாற்றங்கள் ஏதும் செய்ய செ ான்னாரா

-இல்லை...இயக்குனர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பவர் ரஜினி சார்.. இது மக்கள் பிரச்சனைகளைப்பேசும் மக்கள் படம்..  குடும்பம் குறித்தான படமும் கூட...இந்த தீம் அனைவர்க்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை  அவருக்கு இருந்தது

நிலம் என்பதை  கதைக்களமாக ஏன்தேர்ந்தெடுத்தீர்கள்

தாராவி என்பது  பல பிரிவினர் வசிக்கும் ஒரு மினி இந்தியா.. இருப்பவர்கள் இல்லாதவர்கள் பிரச் னை எங்கும் உள்ளது..  இதைத்தான் படம்பேசுகிறது..   இதை  இயக்கியவன் நான  என்பதால் சாதிய முத்திரை  குத்துகிறார்கள்

காலாவில் ரஜினி ரஞ்சிதை பயன்படுத்தி கெ ாண்டாரா அல்லது ரஞ்சித் ரஜினியை யா ?

இரண்டும் இல்லை..  எனக்குப்பிடித்த நான் ஈடுபாடு  ெ காண்டுள்ள அரசியலையும்  மக்கள் மீது ரஜினி   ெ காண்டுள்ள அக்கறையையும் கலந்து உருவான படம் காலா

ரஜினியின ஆன்மிக அரசியல் குறித்து ?

சம நீதி மற்றும் மக்கள் நல் வாழ்வு இவை தான் அவர் செ ால்லும் ஆன்மிக அரசியல்.  படப்பிடிப்பு இடைவேளைகளில் சாதாரணமாகபேசும் பே ாதும் மக்கள் குறித்தும்  அவர்களுக்கு  ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும்தான்  விவாதிப்பார்

காலா கதை தங்களுடையது என சிலர்செ ால்கிறார்களே

வெங்கல் கிராமத்தில் பஞ்சாயத்து  தலைவராக இருந்த என் தாத்தாவின் வாழக்கையை அடிப்படையாக வைத்து நான் உருவாக்கிய கதைதான் இது

Friday, June 15, 2018

ஜெயகாந்தன் குறித்து வைரமுத்து - அச்சில் வராத சுவாரஸ்யங்கள்

ஜெயகாந்தன் குறித்து வைரமுத்து கட்டுரை  வாசித்ததை  அறிவீர்கள்..  அதன் சுருக்கப்பட்ட வடிவத்தை தமிழ் இநதுவில் வாசித்திருப்பீர்கள்..   அதில் இடம்பெறாத சில  சுவாரஸ்யங்கள் உங்களுக்காக  நம் வலைத்தளத்தில்...  படியுங்கள்...ரசியுங்கள்

-----
♥ஜெயகாந்தனை ஒரு விருந்துக்கு அழைத்திருந்தேன்..  சாப்பிடுவது இரண்டாம் பட்சம்..  அவருடன் சற்றுபேசுவதே விருந்தின்  நே ாக்கம்..   ரெமி மார்ட்டின் உட்பட எல்லாம் உள்ளன.. என்ன வேண்டும் என்றேன்..  நீங்கள் மது அருந்துவீர்களா என்றார்..  ஒருோதும் இல்லை என பதில் அளித்தேன்..  அப்படியானால் எனக்கும வேண்டாம் என்றார்... டேபிள் நாகரிகம் என்பதை காட்டினார்


♥ அவர் யாரிடமும் எதுவும் வாங்க மாட்டார்..   நான் அணிவித்த தங்க மே ாதிரதை ஏற்றுக்கெ ாண்டார்...  அவர் ஏற்றது எனக்குப் பெருமை

♥ஜெயகாந்தன் எழுத்தில் அவர் குரல் அதிகம் ஒலிப்பதாக சிலர் விமர்சிப்பதுண்டு..  இதை மறுக்கிறார் ஜெயமே ாகன்..  அவர் எழுதுகிறார்  :
ஆசிரியன் குரல் கதாபாத்திரத்தில் ஒருபோதும் வெளிப்படகூடாது என்று கருதும் நம் விமரிசகர்கள்  தஸ்தயேவ்ஸ்கி படைப்புகளைப்பற்றி என்ன சொல்கிறார்கள் ? கதேயின் ஆக்கங்களின்மீது அந்த அளவுகோலை போடுவார்களா ? இப்பேரிலக்கிய ஆசிரியர்கள் தங்கள் குரலை வெளிப்படுத்தும் முகமாகவே கதாபாத்திரங்களைப் படைப்பவர்கள். 

♥ ஜெய காந்தன் என் மீதுபேரன்பு கெ ாண்டவர்..   நிறைய பேசுவே ாம்..   ஒரு  முறை  அவரிடம் கேட்டேன்...  நீங்கள்செய்த ஏதாவது ஒன்றுக்காக பிற்காலத்தில் வருந்தியதுண்டா.. ?  அவர் பதிலளிக்க  மூன்று நிமிடங்கள எடுத்து கெ  ாண்டார்...மேதைகள்  எதையும் யே ாசித்தே பேசுவார்கள்

என்  நூல்   வெ ளியீட்டுக்காக வெ ளிநாடு  பே ாயிருந்தேன்... அந்த  நாட்டு கல்வி அமைச்சர்  கலந்து  கெ ாண்டார்

- தாங்கள்  இந்தியா வந்ததுண்டா என கேட்டேன்..
ஆம்  அல்லது இல்லை  என எளிதாக பதில்செ ால்லவேண்டியகேள்விக்கு  மூன்று நிமிடங்கள்  யே ாசித்து அற்புதமான ஒரு பதில் செ ான்னார்

( அடுத்த பதிவில் அந்த பதிலை  காண்பே ாம்)

Thursday, June 14, 2018

காலாவுககு வரவேற்பு எப்படி - ஓர் அலசல்

 சிங்கப்பூர்/மலேசியா
சிங்கப்பூரில் ஒரு இந்தியத் திரைப்படம் 17 அரங்குகளில் திரையிடப்பட்டது இதுவே முதல் முறை. பிரீமியர் என்று சொல்லப்படும் சிறப்புக் காட்சிகள் அனைத்து சிங்கப்பூர் அரங்குகளிலும் இந்திய ரிலீசுக்கு முதல் நாள், அதாவது (6ம் தேதி, புதன் கிழமை) அன்றே திரையிடப்பட்டது.  வெளியானது வார நாள் என்றாலும், சிங்கப்பூரில் மாபெரும் ஓப்பனிங்கைப் பெற்று சாதனை படைத்தது.
மலேசியா தலைவர் கோட்டை என்பதை கபாலிக்குப் பின் காலா மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. மலேசியா-வில் "Hot Movie Checks"-ல் முதல் இடத்தைப் பிடித்து மக்களிடம் இருக்கும் வரவேற்பை உறுதிப்படுத்தியது காலா.

2. ஆஸ்திரேலியா
முதல் இரெண்டு நாட்களின் வசூல் 1 கோடி. இது, ஆஸ்திரேலியாவில் 2018-ல் வெளியான அனைத்து தமிழ்ப்படங்களை விட மிக மிக அதிகம். ஓப்பனிங் A$105,672, வெள்ளிக்கிழமை அன்று A$100,662, சனிக்கிழமை A$110,616, ஞாயிற்றுக்கிழமை A$85,263 என்று வசூலித்து, ஆஸ்திரேலியாவின் டாப் 5 வரிசையில், பத்மாவதிற்கு அடுத்து, இரண்டாம் இடத்தில் (A$402,213) இருக்கிறது.  

3. USA
- இதுவரை வெளியான தலைவரின் படங்களிலேயே மிக பிரம்மாண்டமாக, நிறைய திரையரங்குகளில் வெளியான படம் காலா மட்டுமே.
- காலா, 1 மில்லியன் டாலர் வசூல் செய்திருக்கும் தலைவரின் 4வது படமாகும். (கபாலி, எந்திரன் மற்றும் லிங்கா மற்ற படங்கள்). இந்த வார இறுதியில் 2 மில்லியன் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2018-ன் தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்து சாதனை. அமெரிக்காவில் இன்னும் படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
- முதல் வார இறுதியில் திரையிடப்பட்ட 324 இடங்களில், வார இறுதியில் மட்டும்  $1,625,614 வசூலித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது. முதல் இடம் எது? நம்ம "கபாலி" தான்! கபாலியின் இமாலய சாதனையான $3,616,002-ஐ வேறு எந்த படங்களும் நெருங்குவதற்கு சில வருடங்கள் ஆகும்.

4. இந்தியா
- சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான ஒரு நாள் வசூல் செய்து சாதனை படைத்தது காலா  - 1.76 கோடி
- காலாவின் 15 கோடி ஓப்பனிங், 2018-ல் வெளிவந்த அனைத்து படங்களை விட அதிகம்.
- தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் 15.4 கோடி.
- காலாவின் இரண்டாம் நாள் வசூல் 10.5 கோடி...இது சாதாரண விஷயமல்ல! பொதுவாக, படத்தைப் பற்றிய விமர்சனங்கள் நன்றாக இருந்தாலும் கூட, இரண்டாம் நாள் வசூல், முதல் நாளை விட, 50% குறைந்துவிடும்.
- சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் 85% அரங்கு நிறைந்த காட்சிகள். விடுமுறை வாரம், பண்டிகை வாரம் என்று எதுவுமே இல்லாமல் இவ்வளவு கூட்டம் வருவது பெரிய விஷயம்.
- சனிக்கிழமை (9ம் தேதி) அன்றும், ஞாயிற்றுக்கிழமை (10ம் தேதி) அன்றும் முறையே  8.4 கோடி மற்றும் 9.3 கோடி வசூல் செய்தது. ஆக மொத்தம், முதல் 4 நாட்களில் 43.6 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.
- சென்னையைப் பொறுத்த வரை, இதுவரை கிட்டதட்ட 6.6 கோடி வசூலித்துள்ளது.
- சென்னை சத்யம் திரையரங்கில், நேற்று (12ம் தேதி) மேட்னி காட்சி house full என்ற செய்தி கிடைத்துள்ளது. வார நாளான நேற்று பகல் காட்சி house-full ஆவது படத்தின் வெற்றியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
- சென்னையை அடுத்து, கோவை, வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு மாவட்டங்களில் சிறப்பான வசூல் செய்கிறது.
- பொதுவாக, எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும், தென் மாவட்டங்களில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இலாபம் கொடுக்கும் அளவிற்கு படம் ஓடுவது அரிதாகி விட்டது. இப்போது, சேலம் சினிப்ளெக்ஸ் ட்விட்டர் பதிவின் படி, அவர்களின் முதலீட்டை மீட்டு விட்டதாகவும், இனிமேல் வரும் வசூல் அனைத்தும் இலாபம் தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர். வார நாட்களிலும் 95% அரங்கு நிறைந்த காட்சிகளாக, வெற்றி நடை போடுவதாக அறிவித்துள்ளனர்.
- இதே போல், புதுக்கோட்டை சினிமாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 34 ஷோக்களில் அனைத்து காட்சிகளும் house-full ஆக மொத்தம் 22.6 லட்சம் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒரு படத்தின் உண்மையான வெற்றியை, அப்படம் தென் மாவட்டங்களில் பெறும் வசூல் தான் முடிவு செய்யும். அவ்வகையில், காலா மாபெரும் வெற்றி கண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று!

5. சவுதி அரேபியா
- சவுதியில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை "காலா" பெற்றுள்ளது. மற்றும், சவுதியில் வெளியான 2வது படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது.  இதற்கு முன், ஹாலிவுட் தயாரிப்பான "Black Panther" வெளியானது.


6. மற்ற நாடுகள்:
- நைஜிரியாவில் காலாவைக் கொண்டாடுகிறார்கள், தென் ஆப்ரிக்காவில் படம் செம ஹிட் என்று கண்டம் தாண்டி தலைவர், தனது ஆளுமையை மீண்டும் நிலைநாட்டியிருக்கிறார்.
- தமிழர்கள் அதிகம் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும்  காலாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய இடங்களில் தினசரி காட்சிகளாக வெற்றி நடை போட்டு வருகிறது.
- வளைகுடா நாடுகளில் இதுவரை 7 கோடி வசூல் என்று தகவல் கிடைத்துள்ளது. ரமலான் நோன்பு முடிந்தவுடன் வரும் வார இறுதியிலிருந்து இன்னும் சிறப்பான வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவிலும் வரும் வார இறுதி ரமலான் விடுமுறையை ஒட்டி வருகிறது  என்பதால், மேலும் ஒரு சில வசூல் சாதனைகளை எதிர்ப்பார்க்கலாம்.
- ரஷ்யாவில், மாஸ்கோ நகரில் படம் வெளியாகி, கடந்த வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
- ஜப்பானைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? வழக்கம் போல், அங்கிருக்கும் தலைவரின் ரசிகர்களின் பேராதரவால் படம் சக்கைப் போடு போடுகிறது



Tuesday, June 12, 2018

நான்தான் காலா - படத்தைகெ ாண்டாடும் அரசியல் தலைவர்கள்

பாட்ஷா அண்ணாலை பே ான்ற படங்களை பே ான்ற படஙகளை   பார்க்கும் சிறுவர்கள்  தம்மை அந்த பட  நாயகன்க ளாக நி னைப்பது வழக்கம்..
காலா படத்தை பெ ாருத்தவரை  தலைவர்களும் இப்படி கெ ாண்டாடி வருகின்றனர்

கலைஞர் தான் காலா என திமுகவினரும்  சீமான் தான் காலாவில் வரும் ராவணன் என்றும் அந்தந்த கட்சியினர் கூறுகின்றனர்...  இன்னும் பல கட்சியினரும் காலா என்பது தாங்கள்தான்  என செ ால்லி படத்தை கெ ாண்டாடி வருகின்றனர்..

இதற்கெல் லாம் உச்சமாக குஜராத் எம் எல் ஏவான ஜினேஷ்மேவானியும் இப்படி கூறியிருக்கிறார்

காலா படம் பார் தேன்  என்னையே பார்ப்பது ோல  இருந்தது...  சமூக நீதியை  கமர்சியல் அம்சத்துடன் தந்த ரஞ்சித்துக்கு பாராட்டுகள்..

இப்படி அவர்ட்வீட்செய்துள

சிறுகதைப் பே ாட்டிகள்


Monday, June 11, 2018

காலா -நாயகன் : ஆறு வித்தியாசங்கள்

காலா  நாயகன் ஒப்பிடுக


1 நாயகன் தனி மனிதபே ாராட்டம்..  காலா சமூக நீதிோராட்டம்


2 காட் ஃபாதர் நாயனை கமல் பிரதி எடுத்திருப்பார்..  ரஜினியின் இயல்பான பாணியை ரஞ்சித் பயன்படுத்தி இருப்பார்

3 மகன் இழந்ததும் அழும் காட்சியில் டை நாடகஙளை கமல் நினைவு படுத்துவார்..  அதே பே ான்ற காட்சியில் ரஜினி உலக சினிமாக்களை நினைவு படுத்துவார்

4 மும்பையிலேயே  வாழ்ந்தாலும் மெ ாழி பெயர்ப்பாளர் மூலம்பேசு வார்  நாயகன்..  இந்தியில் பஞ்ச்பேசுவார் காலா

5 பாலகுமாரன் மணிரத்னம் கமல் என்ற அவாள் கூட்டணியில் உருவானது நாயகன்..  ரஞ்சித் மகிழ்நன் ஆதவன்தீட்சண்யா ரஜினி என கருப்பு மக்களால் உருவானது காலா

6 நாயகிக்கு வாழ்வு கெ ாடுப்பார் நாயகன்..  ந ாயகியால் உருவாக்கப்பட்டுபெண்களால் காக்கப்படுபவர் காலா

Sunday, June 10, 2018

காலா ரஜினி படமா ரஞ்சித் படமா ? -ரஞ்சித்பேட்டி

கீழ்த்தரமான அவதூறுளையும் தடைகளையும் மீறி காலா சாதனை படைக்கும் நிலையில் இயக்குனர் ரஞ்சித் அளித்தபேட்டி

------
ரஜியை வித்தியாசமாக காட்ட எப்படி தே ான்றியது

- கபாலி ஷுட்டிங் இடைவேளைகளில் சாதாரணமாக ரஜினி சாரிடம் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. சினி மா ரஜினியை விட இயல்பான ரஜினி பவர்புல்லாக இருந்ததை கண்டேன்...  அதை காட்சிப்படுத்தினேன்..  அதுதான் காலா

- காலா உயிதெழும் காட்சி எதன் குறியீடு

-சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகழை யாரும் தெ ாடக்கூட முடியாது.. அது ஒன்று...  காலா எனும் தத்துவத்துக்கு என்றும் அழிவில்லை   இவற்றத்தை தான் அந்த காட்சி காட்டுகிறது

-காலா ரஜினி படமா ரஞ்சித் படமா ?

கண்டிப்பாக இது சூப்பர் ஸ்டார் படம்தான்... அவர் அனுமதியின்றி ஒரு காட்சியும் வசனமும் இடம்பெறவில்லை
அவர் வழிகாட்டுதலுடன் என் கருத்துளை படத்தில் வைதேன்..  சமூக நீதி கருத்துகள் இதன் மூலம் உலக அளவில்சென்றுசேர்ந்துள்ளது




கியாரே செட்டிங்கா -காலா வசனகர்த்தாபேட்டி


கா லா  படத்துக்கு வசனம் எழுதியவர்களில் ஒருவரான மகிழநன் விகடனுக்கு வழங்கியபேட்டி


 . 
"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தாராவிதான். ஏழு வருடங்களுக்கு முன்னாடி சென்னைக்கு வரும்போது எங்க மக்களைப் பற்றிப் படம் எடுக்க மாட்டாங்களானு ஏக்கத்தோடதான் வந்தேன். என் அரசியல் கண்ணோட்டம் இங்கே இருந்த பெரும்பாலானவர்களுக்கு செட் ஆகலை. பிறகு, ஒரு தனியார் தொலைக்காட்சியில வேலைக்குச் சேர்ந்துட்டேன்" என்ற மகிழ்நனிடம் சில கேள்விகள்.  


காலா
"இயக்குநர் ரஞ்சித்துடனான பழக்கம்..?"
"தோழர் ரஞ்சித் எனக்கு முகநூல் நண்பர். அவ்வப்போது நான் எழுதுவதைப் படித்திருக்கிறார். அப்பப்போ போன்ல பேசியிருக்கோம், பின்னர் உற்ற நண்பர் ஆனார். 'மெட்ராஸ்' படத்தின் வெற்றி இயக்குநர் என்ற தோரணை எதுவுமே அவரிடம் அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை. 'கபாலி' முடிந்ததும் ஒருநாள் போன் பண்ணி, 'தோழர் வாங்க, தாராவி போயிட்டு வருவோம்'னு சொன்னார். இணை இயக்குநர்கள் பார்த்தி, ஜெனியோடு போய் அங்கே நாங்க சந்திச்ச மனிதர்கள்தான், 'காலா' கதாபாத்திரங்கள் ஆனார்கள். 


நான் அங்கேயே பிறந்து வளர்ந்தவன் என்பதால், எனக்கு ஒவ்வொரு கதாபாத்திரமும் யார்னு சொல்ல முடியும். உதராணத்துக்கு, செல்வி கதாபாத்திரம் பல தாராவி பெண்களோட பிரதிபலிப்பாக இருந்தது. ஆரம்பத்துல என்னை வசனம் எழுதச் சொல்வார்னு தெரியாது. எனக்கு ரஞ்சித் தோழரை ரொம்பப் பிடிக்கும். நான் உதவி இயக்குநராக வேலை செய்யணும்னுதான் அவர்கிட்ட கேட்டேன். 'கொஞ்சம் பொறுங்க, உங்களுக்குனு ஒரு வேலை இருக்கு'னு சொன்னார். பிறகு, கதை விவாதத்துல இணைச்சுக்கிட்டார். வசனம் எழுதுறதுக்கு ரஞ்சித், ஆதவன் தோழர்களோடு நானும் சேர்ந்துக்கிட்டேன்." 
"நீங்க தாராவியைச் சேர்ந்தவர்னுதான் வசனம் எழுத வச்சாங்களா?"
"படம் பார்க்கும்போதுதான் எனக்கு ஏன் வசனம் எழுதுற வேலை கொடுத்தார்னு புரிஞ்சது. ரஞ்சித் தோழர்கிட்ட தாராவியைப் பத்தி நான் பல விஷயங்கள் பேசியிருக்கேன். நான் பேசுற தமிழும் திருநெல்வேலி ஸ்லாங்கும்கூட காரணமா இருக்கலாம். படத்துல இயக்குநர் காட்சிக்குத் தேவைப்படுற வசனங்களைக் கேட்பார். அவருக்குத் தேவையான வசன ஆப்ஷன்ஸ் கொடுக்கிறதுதான் என் வேலை. நல்ல வசனங்களா பார்த்துத் தேர்ந்தெடுத்ததும் திருத்தினதும் இயக்குநர்தான்." 


காலா காட்சியில் மகிழ்நன்
" 'கியாரே... செட்டிங்கா' வசனம் உருவான விதத்தைச் சொல்லுங்க, படத்துல பன்ச் வசனங்கள் கம்மியா இருக்கக் காரணம் என்ன?" 
"பாம்பேல ஷூட்டிங் பண்ணிக்கிட்டு இருந்தோம். திடீர்னு ரஞ்சித் தோழர், 'ஒரு பன்ச் வசனம் எழுதனும்'னு சொன்னார். எனக்கு ரஜினி சாருக்கு பன்ச் எழுதுற டென்ஷனைவிட, தோழருக்குப் பிடிக்கிற மாதிரி எழுதணும்னு டென்ஷன். சில ஆப்ஷன்ஸ் கொடுத்தேன். அதுல, இயக்குநர் ரஞ்சித் தேர்ந்தெடுத்ததுதான், 'கியாரே செட்டிங்கா' வசனம். மக்களோடு மக்களாக இருக்கிற காலா பன்ச் வசனங்களைவிட, மக்களோட உணர்வுகளைப் பேசணும். கதையோட எல்லையும் அதுதானே!"


"தாராவி மக்கள்ல ஒருத்தனா நீங்க சந்திச்ச பிரச்னைகளைப் படத்துல ரஜினி பேசுனதைப் பார்க்கும்போது எப்படி இருந்தது?"
"தாராவில நான் 10x10 ரூம்லதான் பிறந்தேன். பெரும்பாலான இரவுகள்ல வீட்டுக்கு வெளியே உறங்கும் நிலைதான் எனக்கு. காலா கதாபாத்திரம், தாராவி பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கும் பல இளைஞர்களோட பிரதிபலிப்புதான். படத்தில் பேசும் அரசியல், துண்டு பிரசுரம் கொடுப்பது, சமூகம் சார்ந்து பேசுற பசங்க... என எல்லாம் நிஜ தாராவியில் நடக்கும் விஷயம்தான். சமுத்திரக்கனி கதாபாத்திரம்கூட தாராவியில் இருக்கும் பல மனிதர்களோட பிரதிபலிப்புதான்."  
தாராவி


"படத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய வசனங்கள் உள்ளதா?"            
"ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னாடி தாராவியை டாப் ஆங்கிள் ஷாட்டில் எடுத்தார்கள். அதை எனக்குப் போட்டுக் காட்டும்போது என் கண் கலங்கிடுச்சு. படத்துல செல்வி கதாபாத்திரம் பேசுற பல வசனங்கள் எங்க அம்மா என்னை எப்படித் திட்டுனாங்கனு கேட்டு எழுதுனேன். சில இடங்களில் காலா பேசுற 'எரிச்சாலும் புதைச்சாலும் இங்கதான். இது இந்த இடத்தில வளந்த மரம்'னு சொல்லும்போது, எங்க அம்மாவுக்கு எங்க அப்பாவைப் பார்த்த மாதிரியே இருந்தது. பல பசங்களுக்கு அந்த 'விழித்திடு இளைஞர் இயக்கம்' பெயரைப் பார்த்துட்டு, தாராவி பசங்க நடத்துற விழித்தெழு இளைஞர்  இயக்கத்தோட கனெக்ட் பண்ணிக்கிட்டாங்க. என் அக்கா பையன், லெனின் கதாபாத்திரத்தோட கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சதுனு சொன்னான். காலா மக்களை ஒன்றுதிரட்டி, 'உடம்புதான் நம்ம ஆயுதம்'னு  சொல்லும்போது, ரொம்ப உணர்வுபூர்வமாய் இருந்தது." 
'' 'காலா' படத்துல தாராவியின் அரசியல் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கா?"
"தாராவி மிகப்பெரிய ஏரியா. அதுல பல அரசியல் இருக்கு. தாராவி ஒரு ரியல் எஸ்டேட் ஹப் மாதிரிதான். நிறைய பில்டர்ஸ் அணுகுறாங்க. அங்கே இருக்கிற எல்லோருக்கும் ஒரு நல்ல கட்டடம், வீட்டுக்குள்ளேயே டாய்லெட்னு எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கு. ஆனா, அதுக்காக நிலத்துல பாதியைத் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கிற திட்டத்தோடதான் வர்றாங்க. எங்க பாட்டன், முப்பாட்டன் காலத்துல இருந்து மக்கள் உருவாக்கிய நிலம் அது. அது மொத்தமும் தாராவி மக்களுக்குத்தான் சொந்தம். அந்த வகையில, 'காலா' தாராவியைப் பற்றி யாரும் பேசாத அரசியலைப் பேசியிருக்குனுதான் சொல்வேன். இப்படம் தாராவி மக்களுக்கே தாராவியைப் பற்றி எடுத்துச் சொல்ல பெரிதும் உதவியிருக்கிறது!"  என்கிறார் மகிழ்நன்.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா