Saturday, May 29, 2010

பேசும் பேய்கள்

" பேய் எல்லாம் இல்லைன்னு சொன்ன.. கொலுசு சத்தத்தை நீயே கேளு "

உண்மைதான். மல்லி பூ வாசனையும் லேசாக வந்தது.. இருந்தாலும், என் மனம ஏற்கவில்லை. " டேய். யாரவது இந்த பக்கம் போய் இருப்பாங்க. நம்ம கவனிச்சுருக்க மாட்டோம். "

" ஏண்டா ரெண்டு பெரும் அடிசுக்றீங்க. known is drop.un known is ocean .. பேய் இருந்தாலும் இருக்கலாம்,. இல்லாமலும் இருக்கலாம். நாம இந்த கிராமத்துக்கு வந்தது, பைனல் இயர் ப்ரோஜெக்ட்டுக்காக .. முடிச்சுட்டு ஊருக்கு பொய் சேருவோம்,., பேய் இருந்தா என்ன , இல்லாட்டி என்ன " என குமார் சொன்னாலும், அங்குள்ள அமானுஷ்ய தன்மையை ஆராயும் விபரீத புத்தி எங்களை விட வில்லை.

நான், குமார் , பாலாஜி மூவரும் இங்கு வந்ததில் இருந்து, நாடு நிசியில் அலறல் கேட்பதும் , மல்லி வாசனை வீசுவதும், தொடர்ந்தன.. இது பேயின் வேலை.. என்பது பாலாஜியின் கருத்து.. ஆவி எல்லாம் இல்லை என்பது என் கட்சி.. இதை பற்றி கவலை இல்லாமல் , படிப்பை மட்டும் நேசிக்கும் குமார், ஒரு மூ
ன்றாவது அணி.
இருந்தாலும், ஊர் பெரியவர்கள் அறிவுரைப்படி, வேப்பிலையை எங்கள் அறை வாசலில் கட்டி வைத்தோம். பேய்க்கு வேப்பிலை வாசம் பிடிக்காதாம்.

******************************

" டேய்.. நாளையோடு ப்ராஜெக்ட் முடியுது..ஊருக்கு போகனும்.. அதுக்கு முன்னாடி, கிராமத்துக்கு வெளியில் இருக்ற , பேய் பங்களாவுக்கு ஒரு முறை போய் பார்க்கலாம்டா.. எதோ ஒரு லக்ல , புதையல் ரகசியம் எதாவது பேய் சொன்னாலும் சொல்லலலாம்... அப்படி இல்லேன்னாலும், பேயை பார்த்த ஒரு திரில் கிடைக்கும்... என்ன சொல்றீங்க "

பாலாஜியின் கருத்து எனக்கு ஓகே தான். பேய் இல்லை என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு... தங்கி இருந்த அறை ஓனர் எச்சரித்தார்.. "தம்பிகளா.. அந்த பங்களாவுல, ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டு பேயா சுத்துறா... அங்கே யாரும் போவது இல்லை... "

" இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை சார்.. ஒன்னும் ஆகாது " என்றேன்

" நல்ல பசங்கள இருக்கீங்க.. சரி போங்க... அங்கே இருக்கும் அறை வாசல்ல , வேப்பிலை கட்டிட்டு தூங்குங்க.. எக்காரணம் கொண்டும் இரவு நேரத்துல வெளியே வராதீங்க.. உங்களை வெளியே வர வைக்க பேய் பல தந்திரங்கள் செய்யும் .... ஏமாந்துராதீங்க "

" சார்.. ஒரே ஒரு வாட்டி மட்டும் வெளியே வந்து அந்த பேயை பார்த்துக்குறேனே " பாலாஜி கெஞ்சினான்..

" சரி, ஒரு தாயத்து தர்றேன். கையில் கட்டிக்கோங்க.. அனால், ஒரு முறை பேய் பார்வை பட்டதும், இதன் சக்தி போயிரும்... மறு முறை பார்க்க டிரை செஞ்சா , ஆபத்து "
******************************

பங்களா, பாழடைந்து இருந்தது.. வௌவால்கள் பறந்தன.. இருட்டுவதற்குள், சாப்பிட்டு விட்டு, அறை க்கு சென்றோம்.

நானும் பாலாஜியும்  ஓர் அறை.. குமார் இன்னொரு அறை... படிக்க போகிறானாம். தனி அறை கேட்டான்.

ஓகே டா மச்சான் ..கதவை திறக்காதே... மார்னிங் பார்ப்போம்.. குட் நைட்

இருவரும் அறை கதவை சாத்தி படுத்தோம்..

பேய் அறிகுறி எதுவும் இல்லை... " என்னடா..பேய் தூங்க போயிருச்சா " கிண்டல் அடித்தேன்..

திடீரென வீட்டு ஓனர் கதவை தட்டினார்.. " தம்பி , எங்க அப்பா ஊர்ல இருந்து வந்து இருக்காரு, போன்ல கூப்பிட முயற்சி செஞ்சேன்.உங்க செல் போன்ல சிக்னல் இல்லை..அதன் பேச முடியல..வெளிய வாங்க "

" டேய் ..என்னனு போய் [பாரு " பாலாஜியை அனுப்பினேன்...

அவன் சென்றான்..

அலறலுடன் கதவை அடைத்து உள்ளே வந்தான்..

" என்னடா ஆச்சு ? "

" வெளியே ஓனர் இல்லைடா... ஒரு எலும்பு கூடு சிரிச்சுக்கிட்டு இருந்துச்சு.. தாயத்தை பார்த்து திருப்பி போய்டுச்சு "

நான் சிரித்தேன்.. "நல்ல கற்பனை ... தூங்குடா நாயே " படுத்தேன்..

மீண்டும் தட்டப்பட்டது... குமார் குரல்... " டேய்... சீக்கிரம் கதவை திற"

பாலாஜி நடுங்கினான்.. இது பேய்தான்...

நான் துணிந்து திறந்தேன்.. குமார் நடுக்கத்துடன் நின்றான்..  நடுக்கமாக சொன்னான் “ டேய், நீ கதவை தட்டுன மாதிரி இருந்துச்சு.. வெளியே வந்தா, எலும்பு கூடு... இனிமே , யாரும் வெளியே வர கூடாது... உள்ளே போ” சொல்லி விட்டு தன் அறைக்கு ஓடினான்..

படிக்கிற பையன்... பயத்திலையும் தனி ரூம்... ஹ்ம்ம்..

மீண்டும் குமார் சத்தம்.. டேய்..ஆபத்து... சீக்கிரம்  வெளியே வாங்க... ப்ளிஸ்

எழ நினைத்த என்னை, பாலாஜி தடுத்தான்...”எதுவா இருந்தாலும் காலைல பார்க்கலாம்..இது பேய் வேலை தான்...”

குமார் சத்தம் மெல்ல அடங்கியது.

*************

காலை... குமார் மூளை சிதறி இறந்து கிடந்தான்... யாரோ அவனை அடித்து அவன் பணத்தை திருடிவிட்டனர் என்றனர் சிலர்..

பேயின் வேலை என்றனர் சிலர்..

ஒரு திருடனுடன், போராடும போது நண்பன் உதவிக்கு போராடும்போது, காப்பாற்ற செல்லாமல் , அறையில் தூங்கினேனா.. அல்லது பேயின் வேலையா./..

பேயின் வேலையாக இருந்தால்தான், என் மனசாட்சி என்னை மன்னிக்கும்..

அன்றிலிருந்து பேயை நம்ப ஆரம்பித்தேன் அல்லது நம்புவதாக காட்டிக்கொள்ள ஆரம்பித்தேன்

Thursday, May 27, 2010

பெர்பெக்ட் மர்டர்

"என்னது ? கொலையா ?" திடுக்கிட்டாள், ஸ்மிதா.. மௌனமாக புன்னகைத்தேன் " ஆமா... பட் டோன்ட் ஒர்ரி.. நான் எதையும் பெர்பெக்டா செய்பவனு உனக்கே நல்லா தெரியும்... இது முடிஞ்சதுக்கு அப்புறம், நம்மக்கு நிறைய பணம் கிடைக்கும்... தவிர, உனக்கும் நல்லது நடக்கும்..நான் யாரை கட்டம் கட்ட போறேன்னு தெரிஞ்ச , ஆச்சர்ய படுவ. "

அவள் அழகான உதடுகள் திகிலில் நடுங்கின.. " யாரை? "

" என் மனைவியை "

********************

என் மனைவி சங்கீதா நல்ல பெண்தான். அன்பானவள் தான்.. ஆனால், ஸ்மிதா போல் எனக்கு ஏற்றவள் அல்ல. அவள் வளர்ப்பு வேறு. சிந்தனை வேறு.

நான் எதையும பெர்பெக்டாக செய்ய நினைப்பவன். அவள் எதையும் பிரியமாக செய்ய நினைப்பவள். அன்புதான் அனைத்துக்கும் ஆதாரம் என்பாள் . வெற்றி, பணம் தான் அனைத்துக்கும் ஆதாரம் என்பேன் நான்.

பிரசினைகால் ஆயிரம் இருந்தாலும், அறிவியல் ஆராய்ச்சி, எரிபொருள் ஆராய்ச்சி என்பதில், எங்களுக்குள் இருந்த பொதுவான் ஈர்ப்பு தன்மை எங்களை இணைத்து வந்தது.

" ராஜ .. இங்கே வாங்க... " ஒரு நாள் தன அறையில் இருந்து உற்சாகமாக கத்தினாள் . உள்ளே ஓடினேன். என் ஆராய்சியை, சற்று விரிவு படுத்தி, பெட்ரோலுக்கு மாற்று கண்டு பிடித்து இருந்தாள் .

இது அறிவியல் துறையில் ஒரு புரட்சி. நாட்டில் எளிதாக கிடைக்கும் அரிசியில் இருந்து பெட்ரோல். பாஸ்மதி அரிசி வேண்டாம்.. மட்டரக அரிசி இருந்தாலே போதும்.. " எஸ். பெர்பெக்ட் கண்டுபிடுப்பு. இதை பெர்பெக்டா விற்கணும் " என்றேன் நான்..

" என்ன சொல்றீங்க "

" ஆமா..இதை அப்படியே, வெளிநாட்டுக்கு வித்துடுவோம். நல்ல காசு கிடைக்கும் "

" வேண்டாம்.. இதை மேம்படுத்தணும். இதை வித்தொம்னோ, விவசாய நிலங்கள் எல்லாம், மட்ட ரக அரிசியை இர்பத்தி செய்யும் இடங்களா மாறும். விவசாயிகள் பாதிக்க படுவ்னாங்க. . அரிசியை முக்கிய உணவ கொண்டுள்ள நம்ம மக்களும் பதிக்க படுவாங்க "

" அதை பத்தி நமக்கு என்ன.. நாம பெர்பெக்டா வேலைய முடிச்சுட்டு, வெளிநாடு போய் செட்டில் ஆயிடலாம் "

அவள் ஒப்புக்கொள்ளவில்லை.

அவள் இருக்கும்வரை, அவள் அறையில் இருக்கும் ஆராய்ச்சி குறிப்புகள் எனக்கு கிடைக்காது... நான் பணக்காரன் ஆகவும முடியாது... அவள் இப்போதெல்லாம் அறையை பூட்டி வைத்து கொள்கிறாள்.. அவளை முடிக்க தீர்மானித்தேன். பெர்பெக்ட் திட்டம் தீட்டினேன்.
***********************

கோயம்பத்தூரில், எங்கள புரவிக நிலம் சார்ந்த வசக்கு நடந்து வந்தது.. மேலும் அங்கு சில எதிரிகளும் இருந்தனர். இப்போது அவளுக்கு எதாவது நடந்தால், அவர்களை நோக்கித்தான் சந்தேகம் பாயும். எனவே அங்கிருந்து ஒரு ஆளை, இந்த பணிக்கு தேர்ந்தெடுத்தேன்

*****************************

" சார். எனக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்.. ஆள் போட்டோ கொடுங்க. அட்ரஸ் கொடுங்க. பெர்பெக்டா வேலைய முடிச்றேன் "

அட இவனும் பெர்பெக்ட் ஆளா ? எனக்கு சந்தோசம்...
என்னை பற்றி எதுவும் அவனிடம சொல்லவில்லை. அவள் மனைவி என்றோ, கொலை காரணத்தொயோ சொல்லவில்லை..

அவன் கேட்ட பணம்தான் அதிகமாக இருந்தது..

" சார், நம்ம கிட்ட தொழில் சுத்தமா இருக்கும்.. பெர்பெக்டா இருக்கும்... காசை பத்தி யோசிக்காதீங்க.. "

என் மொத்த கையிருப்பையும் , எல்லா சொத்தையும் விற்றால்தான், அவன் காசை கொடுக்க முடியும்..சரி, கொடுப்போம்.. அந்த பேப்பர்கள் கைக்கு வந்தால், நல்லா சம்பாதித்து கொள்ளலாம் ...

" உன்னை நம்பி அட்வான்ஸ் தர்றேன். பெர்பெக்டா முடிச்சுடு.. என் வாழ்க்கை உன் கையில்தான் இருக்கு " அட்வான்ஸ் கொடுத்தபோது , கை நடுங்கியது..

********************************

ஹோட்டல்... ஸ்மிதா மடியில் படுத்து இருந்தேன்.. இன்றுதான், அவன் வேலையை அவன் முடிக்க வேண்டிய நாள்..முடித்து விட்டு வந்து பார்ப்பதாக சொல்லி இருந்தான்.

" சார்.. உங்களிக்கு விசிட்டர் " ரிசப்சன் .... வர சொல்லுங்க... எழுந்து அமர்ந்தேன்...

" நான் அப்புறம் வர்றேன் " ஸ்மிதா கிளம்பினாள் ... " அவளுக்கு ஆட்டோவுக்கு கொடுத்து விட கூட காசு இல்லை... பிச்சைகாரன் போல் இருந்தேன்..வேலை முடியட்டும்,,நான்தான் ராஜா..

அவன் வந்தான்.. " உட்காருப்பா "

முடிச்சுட்டேன்"

வாவ்.. எனக்கு சந்தோசம்... பெட்டியை கொடுத்தேன்.. " இந்தா உன் பணம்... சரி யாரும் பாக்கலியே. சாட்சி எதுவும் இருக்காதே ? "

" இல்லை சார். பெர்பெக்டா முடுசுட்டேன் .. ஓட பார்த்தா .. கத்திகுத்து வாங்கியும் கூட, ரத்தம் சொட்ட சொட்ட , அப்படியே ஓடி போய், என்னவோ எழுதுனா... அதை பறிச்சு கிழிச்சு போட்டேன் . ரொம்ப அறிவாளி பொண்ணு சார் "

" அட பாவி,., உன் ரேகை பதிஞ்சு இருக்குமே "

" ஆமா சார்.. அது மட்டும இல்ல ... அவ ரூம்ல இருந்த ரகசிய கேமிரா ளையும், என் போட்டோ பதிஞ்சு இருக்கும் .. கேமிரவ கடைசிலதான் பார்த்தேன் "

அதிர்ந்தேன் " அட பாவி "

" பயப்படதீங்க... பெர்பெக்டா முடிச்சுட்டேன்.. ,அவளை கொன்றதும் பெட்ரோல் ஊத்தி, அந்த வீட்டை எரிசுட்டேன். அவ ரூம் , கேமிர, லப் டாப், அங்கு இருந்த பேப்பர் எல்லாம் எரிஞ்சு போச்சு,.,,இனி யாரும், கண்டுபிடிக்க முடியாது..நமக்கு பெர்பெக்ஷன் தானுங்களே முக்கியம் "
அவன் கிளம்பினான்..

அவள் ஆராய்ச்சி பேப்பர் எல்லாம் எரிஞ்சு போச்சா.. ? இனி என்ன செய்வது//

" அம்மா . தாயே ,எதாச்சும் பிச்சை போடுங்க.." வெளியே குரல் கேட்டது

Thursday, May 20, 2010

அயன்ராண்டும் , ஜேம்ஸ் ஆலனும்- பதிவர் Matangi Mawley யின் சுவையான பார்வை



ஜேம்ஸ் ஆலனின் சிறந்த கட்டுரை ஒன்றை சென்ற பதிவில் பகிர்ந்து கொண்டு இருந்தேன். அதில் சொல்லபட்ட கருத்தை சற்று வித்தியாசமாக அணுகி , பதிவர் " Matangi Mawley " பின்னுட்டம் இட்டு இருந்தார். அவரது பார்வை அருமையாக இருந்தாலும், ஆங்கில எழுத்துகளை பயன் படுத்தி பதிவுடு இருந்ததால், வேகமாக படிக்க முடியவில்லை.. சிந்தனையை தூண்டும் அவரது பார்வை அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று நான் நினைப்பதால், அதை தமிழ் எழுத்துக்களில் தனி பதிவாக இடுகிறேன்.
*****************************************************************************************
கீழே அவரது கருத்து.. அதற்கும் கீழே எனது கருத்து

*****************************************************************

James allaen says "அறிவாளி என தன்னை கருதும் ஒருவன், தன அறிவை புரிந்து கொள்ள உலகில் யாரும் இல்லை.. எனவே இதை யாருக்கும் தர மாட்டேன் என சொன்னால், அவனுக்கு உண்மையில் அறிவு இல்லை என பொருள்.. அப்படியே அவன் அறிவாளியாக இருந்தாலும் கூட, அதை அவன்இழப்பான்"

Matangi Mawley says

இது ஒரு நல்ல பதிவு. இதை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. எனக்கு இதை பிடித்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது.

1930 களிலும் 40 களிலும் , அயன் ராண்ட் என்ற மிக சிறந்த எழுத்தாளரின் சிந்தனைகள் , ஒரு பெரும் புரட்சியை தூண்டியது. இன்றும் கூட அந்த தாக்கம் இருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கவனித்தது உண்டு. என் நண்பர்களில் பலர், இவரது புத்தகத்தை படித்து விட்டு, அதே போல வாழ வேண்டும் என மாறி விடுவார்கள்.

இதில் என்ன சிக்கல் என்றால், அயன் ராண்டின் கருத்துக்கள் அப்படியே எடுத்து கொள்ள வேண்டியவை அல்ல. இந்த உலகம் உன் அறிவை புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர்களுக்கு அதை கொடுத்து உன் அறிவின் மேன்மையை குறைத்து கொள்ளாதே, என்ற கருத்து அவரது. - அதாவது உங்கள் பதிவின் ( ஜேம்ஸ் ஆலனின் ) கருத்துக்கு மாறானது.

எனக்கு ராண்ட் என்றால் உயிர். அவரது வரிகளில் மூழ்கி போன காலம் உண்டு. அனால் அதில் எவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் , எதை விட வேண்டும் என்று புரிந்து கொண்டு விட்டேன்.

எனவே உங்கள் பதிவை படிக்கையில், எனது " tranformation " எனக்கு நினைவில் வந்தது.

*******************************************************************************************





"அனால் அதில் எவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் , எதை விட வேண்டும் என்று புரிந்து கொண்டு விட்டேன்."

வெகு அருமை . இந்த பக்குவம் இல்லாததுதான், இன்று நாம் காணும் பல பிரச்சினைகளுக்கும் காரணம். ஒருவரை முழுவதும் எதிர்ப்பது அல்லது முழுது ஆதரிப்பது என்ற எல்லையில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. எதை ஏற்பது என்ற பக்குவம் இருந்தால், ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு புத்தகமும் நமக்கு பயன்மிக்கதாகத்தான் இருக்கும்.

" இந்த உலகம் உன் அறிவை புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர்களுக்கு அதை கொடுத்து உன் அறிவின் மேன்மையை குறைத்து கொள்ளாதே, என்ற கருத்து அவரது. - அதாவது உங்கள் பதிவின் ( ஜேம்ஸ் ஆலனின் ) கருத்துக்கு மாறானது."

அயன் ராண்டின் கருத்து ஓரளவுக்கு உண்மைதான். புரிந்து கொள்ளாதவர்களுக்கு நல்ல விஷயகள் சொல்லியும் பயனில்லையே. கடை விரித்தேன் , கொள்ளவர் இல்லை என வள்ளலார் நொந்து பொய் சொன்னார். பன்றிகளிடம் முத்துக்களை விற்காதே என இயேசுவும் சொன்னார். எனவே, அயன் ராண்ட் சொல்வது சரியானது போலத்தான் தோன்றுகிறது.

"எனவே உங்கள் பதிவை படிக்கையில், எனது " tranformation " எனக்கு நினைவில் வந்தது"

" tranformation " - மிக சரியான வார்த்தையை பயன் படுத்தி இருக்கிறார் பதிவர். consistensy is not a virtue என ஜே கிருஷ்ணமுர்த்தி சொன்னது நினைவு வருகிறது.

நிறைய சிந்திக்க வைத்தது அந்த பின்னூட்டம். ஒரு தனி பதிவை , பின்னூட்டமாக தந்ததற்கு நன்றி Matangi Mawley









"

Wednesday, May 19, 2010

விவசாயியிடம் ஒரு பாடம்


ஜேம்ஸ் ஆலனின் ஒரு நல்ல கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ( அடைப்பு குறியில் இருப்பது அவர் சொன்னதல்ல - ஹி ஹி )

********************************************************************

கிராம்க்களுக்கு சென்றால், விவசாயிகள், தங்கள் வயலில் பணியாற்றுவதை காணலாம். நன்றாக உழுவதையும் , விதை விதைப்பதையும் காணலாம். அவர்களிடம் போய், விதை விதைக்கிரிர்களே, இதில் என்ன விளையும் என எதிர்பார்க்கிறீர்கள் என கேட்டு தொலைக்காதீர்கள். அட முட்டாளே என அவர்கள் நினைப்பார்கள். என்ன விதைக்கிறோமோ , அதை அறுவடை செய்வோம். இது சாதாரண பொதுஅறிவு.

இயற்கையின் ஒவ்வொரு விஷயமும், மனிதனுக்கு ஒரு பாடத்தை வைத்து இருக்கிறது. மனித வாழ்வில் துல்லியமாக செயல்படும் அதே விதிகள்தான் நம்மை சுற்றி உள்ள இயற்கையிலும் செயல்படுகின்றன . மனதில் எதை விதைக்கிறோமோ அதை அறுவடை செய்கிறோம்.
நமது எண்ணங்கள்., சொற்கள் , செயல்கள் ( வலை பதிவுகள் !!!! ) எல்லாம் விதைகள்தான். அவை நல்லவையா , கெட்டவையா என்பதை பொருத்து அதன் பலன் இருக்கும்
வெறுப்பான சிந்தனைகளை கொண்டவன் வெறுக்கபடுவான். அன்பான எண்ணங்களை கொண்டவன் நேசிக்கபடுவான்

எண்ணங்கள்,. சொற்கள் , செயல்கள் தூய்மையானதாக இருந்தால், நம்மை சுற்றி தூய்மையானவர்கள் சேர்வார்கள்.
இவை மோசமானதாக இருந்தால், மோசமானவர்கள் நம்மை சூழ்வார்கள் . அயோக்கித்தனமான சிந்தனைகள் , செயல்கள் கொண்ட ஒருவன், நல்ல வாழ்க்கைக்கு இறைவனை வேண்டுவது என்பது, அவரை விதை விதைத்து விட்டு, சுரைக்காய் கிடைக்கும் என எதிர்பார்க்கும் விவசாயியின் எதிர்பார்ப்பைபோன்றது.

விதைப்பதை அறுப்பாய்.. வியக்க வேண்டாம். வயலை கொஞ்சம் பார்

அவரைவிதை அவரையாகும்.. சுரைவிதை சுரைஆகும்..

அவரவர் செயலே, அவரவர் வாழ்வும் ஆகும்


மகிழ்ச்சி வேண்டுமா. அனைவரையும் சந்தோஷபடுதுங்கள். சந்தோஷத்தை பரப்புங்கள்.

விதையை தூவி விட்ட விவசாயி, அதன் பின் இயற்கையஇடம் பொறுப்பை விட்டு விட வேண்டும் ( செடி வளர்கிறதா என தோண்டி பார்த்து கொண்டிருக்க கூடாது )

விதை காணமல் போவது போல தோன்றினாலும் கூட, பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

அதே போல் தான் வாழ்க்கை.. பகிர்ந்து கொள்ளுங்கள்.. அதிகம் பெறுவீர்கள்.. கொடுங்கள் .. உங்களுக்கு கிடைப்பது கிடைக்கும்.

அறிவாளி என தன்னை கருதும் ஒருவன், தன அறிவை புரிந்து கொள்ள உலகில் யாரும் இல்லை.. எனவே இதை யாருக்கும் தர மாட்டேன் என சொன்னால், அவனுக்கு உண்மையில் அறிவு இல்லை என பொருள்.. அப்படியே அவன் அறிவாளியாக இருந்தாலும் கூட, அதை அவன்இழப்பான்.

அமைதி வேண்டும், ஆனந்தம் வேண்டும் என கடவுளிடம் வேண்டினாலும் கிடைப்பதில்லை . ஏன்? இதை அவர்கள் விதிப்பதில்லை. அதுதான் பிரச்சினை
ஒருவன் கஷ்டப்பட்டால், இதை அவனே அவனிடம் கேட்டு கொள்ள வேண்டும்

என்ன மன விதைகளை நான் விதைத்து வந்தேன்?
என்ன விதைதுகொண்டு இருக்கிறேன்
மற்றவர்களுக்கு என்ன செய்தேன்
மற்றவர்களிடன் எப்படி நடந்து கொள்கிறேன்
தன்னை தானே கேட்டு தெயல்வு பெற்று, அசுத்த விதைகளை நீக்க வேண்டும்

விவசாயிடம் இருந்து இந்த எளிய பாடம் கற்றல் நல்லது

Monday, May 10, 2010

கனவு "பலி" க்குமா ? - Not a "yellow" magazine story


" எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்குப்பா "

நடுங்கி கொண்டே , ரத்த வெள்ளத்தில் கிடந்த நாயை பார்த்தாள் மஞ்சுளா..

லாரியில் நாய் அடிபடுவது சர்வ சாதாரணம்.. ஆனால், இந்த சம்பவத்தை அப்படி எடுத்து கொள்ள அவளால் முடியவில்லை.. என்னாலும்....

"கொஞ்ச நாளா என் கனவுகள் அப்படியே பலிக்குது... எங்கப்பா, கால் அடிபடும் நு சொன்னேன்.. அப்படியே ஆச்சு... பல்லாவரத்துல விபத்து கனவு வந்துச்சு... பலிசுச்சு..அவ்வளவு ஏன்.. சுறா படத்துல விஜய் போட்டு வர்ற டிரஸ் கூட கனவுல வந்தது.. சொன்னா யாரும் நம்பள... அதான், நாய் கனவை நிருபிக்க உங்களை கூட்டி வந்தேன் ..நீங்களே பாருங்க "

அவளது அழகு முகம் வியர்த்து இருந்தது .. " பாருடா செல்லம்... அடுத்த வாரம் நம்ம கல்யாணம் ..கண்டதை நினைத்து குழம்பாதே... ஒரு நிமிடத்துக்கு லட்சம் எண்ணங்கள் நம் மனதில் உதிக்கிறது.. இதுதான் கனவா வருது.. ஒரு லட்சத்துல, ஏதோ ஒன்னு தற்செயலா ஒத்து போகும்/... மிச்சம், 99 ,999 பலிக்காது.. இதுதான் உண்மை என்றேன் "

" எப்படி வேணா இருக்கட்டும்... ஆனா நாளைக்கு நான் கண்ட கனவு பலிக்க கூடாது... தேனாம்பேட்டை ல விபத்து நடந்து ஒரு பொண்ணு சாகர மாதிரி என் கனவு "

" எந்த இடம்... பொண்ணோட அடையாளம ? "

" ஜெமினி மேம்பாலம் எரதக்கு முன்னாடி- அண்ணா சாலை- அந்த பொண்ணு மஞ்சள் ஆடை உடுத்தி இருந்தா... மதியம் ஒண்ணுல இருந்து இறந்து மணிக்குள் ..ப்ளிஸ் ப... அவளை காப்பத்தனும் "

**************************************

அவள் சொன்னது பைத்தியகார தனமாக இருந்தது... ஆனாலும் காதலி.. எதாவது செய்து அவளை அசத்த நினைத்தேன்...

" சார், மதியன் ஒண்ணுல இருந்து ரெண்டு வரை, மஞ்சள் டிரஸ் போட்டுட்டு யாரும் ஜெமினி முதல், அறிவாலயம் வரை போக கூடாது... கதீட்ரல் ரோடு வழியாவோ, தி நகர் வழியவோ போகட்டும்... முக்கியமான ஒரு தகவல் கிடைச்சு இருக்கு..அப்புறமா விளக்றேன்... என்ன பிரச்சினை வந்தாலும் நான் சமாளிக்றேன் "

என் அப்பா செல்வாக்கான ஆள் ( மு க அழகிரிக்கு தெரிந்தவர் ) என்பதால், போக்குவரத்து காவல்துறை ஒப்பு கொண்டது...


நானும் அவளும் அடிக்கும் வெயிலில், சாலையை கவனித்து கொண்டு இருந்தோம்..மஞ்சள் மலர்கள் திட்டி கொண்டே மாற்று பதில் சென்றன... என் மஞ்சு என்று வெள்ளை ஆடையில் பளிச் என இருந்தாள்... ஆனால் ரசிக்க எனக்கு மனம் இல்லை... கொஞ்சம் பைத்திய காரதனமாக இருந்தது...

ஒன்று... ஒன்று ஐந்து... நேரம் நகர்ந்தது..

ஹே அங்கே பாரு... காரில் ஒரு பெண் பின் சீட்டில் மஞ்சள் ஆடை அமர்ந்து சென்றாள்... காவல்துறை கவனிக்க வில்லை...

ஜெமினி பாலத்தில் எரிய பின்தான் , மஞ்சு முகத்தில் உயிர் வந்தது....
" ஹே.. இன்னும் கவனமா இருக்கணும்... என்னதான் கவனமா இருந்தாலும், சிலரை தடுக்க முடியல... அந்த பலகை சும்மா தான் இருக்கு, பெயிண்ட் வாங்கி வந்து, அதுல எழுதி வைப்போம்..மஞ்சள் ஆடையினரே... இன்று மட்டும் இப்பக்கம் வராதீர்" என்றாள் ..

" சரி வா " அவளை அழைத்து கொண்டு அவள் வண்டியில் பறந்தோம்... காவலர்கள் மேல் நம்பிக்கை இருந்தது...



ஒன்று முப்பது... செல் போனில் விசாரித்தோம்..பிரச்சினை இல்லை ...

மஞ்சள் வண்ணம் வாங்கி கொண்டேன் ..உன் எண்ணம் போல மஞ்சள் வண்ணம் " என் பேச்சை ரசிக்கவில்லை... "சீக்கிரம் வாங்க..."

அவளே வண்டியை ஓட்டினாள்.. சாரி .. பறந்தாள்...

: மெதுவா போ... இனிமே எழுதி என்ன ஆக போகுது... விபத்து எதுவும் நடக்கல... நீ சொன்ன நேரம் முடிய போகுது...

அவள் கேட்கவில்லை... அறிவாலயத்தை கடந்து , ஜெமினி பாலம் நோக்கி விரைந்தோம்..

" ஹே ..பார்த்து போ "

தேனாம்பேட்டை அருகே, தேவையில்லாமல் ஒரு சிக்னல் விளக்கு இருக்கிறது... சும்மா சிவப்பு விளக்கு எரியும்.... ஆனால் நிற்க தேவையில்லை... " ஸ்லோ பண்ணாதே .. போய்கிட்டே இரு "

திடீரென சிவப்பு விளக்கு எரிய, முன்னால் சென்ற மஞ்சள் ஆடை பெண் , சட் என ப்ரேக் போட்டாள்..( அந்த இடத்துக்கு முதல் முறை வருகிறாள் போலும் )

எங்கள் வண்டி தடால் என மோத , தூக்கி எறிய பட்டேன்...

காலில் அடி.. சமாளித்து எழுந்து வந்தேன்... அந்த மஞ்சள் ஆடை பெண் எப்படி வந்தாள்? கட்சி நேரத்தில் நாங்களே மோதி விட்டோமே..

ஓடினேன்... அந்த மஞ்சள் ஆடை பெண், சிறிய காயத்துடன் எழுந்து நிற்பதை பார்த்ததும்தான், உயிர் வந்தது... இரண்டு மணி... அப்படா... கண்டம் முடிந்தது..

" மஞ்சு ... உன் கனவு பலிக்கல... மஞ்சள் ஆடை பொண்ணு தப்பிச்சுட்டா " சொல்லி கொண்டே மஞ்சுளாவை தேடினேன்...

எங்கே அவள்?

கூட்டதை விளக்கி பார்த்தேன்.. ரத்த வெள்ளத்தில் என் மஞ்சுளா... தலையில் அடி... உயிரற்ற அவள் உடலில் இருந்த வெள்ளை ஆடை, மஞ்சள் பெயின்ட் கொட்டி, மஞ்சளாக மாறி இருந்தது...

*********************











Saturday, May 8, 2010

என் நாக்கை அடக்கிய நாய் நாக்கு - என் எல் பீ ஓர் அறிமுகம்


சொல்லும் விதத்தில் சொன்னால் , உலகம் உங்கள் பேச்சை கேட்கும் என்கிறார் வள்ளுவர்...

ஒரு உதாரணம் பார்க்கலாம்...

நான் குடிகாரன் அல்ல... அவ்வப்போது சுவை பார்ப்பவன்... அதை பெரிய தவறாக நினைத்து இல்லை... உடல் நலம் கெடும் என சிலர் சொன்னதை அறிவு ஏற்றது.. ஆனாலும் , எப்போதவதுதானே என்று சமாதனம் செய்து கொள்வேன்...

ஆனாலும், சக பதிவரின் பதிவு ஒன்று என்னை கொஞ்சம் மிரட்டி விட்டது... பாவம் , புண்ணியம் என்றெல்லாம் பேசாமலும். உடல் நல கெடுதி என பொதுப்படையாக பேசாமலும், குடித்தால் என உறுப்பு கெடும் என படம் போட்டு விளக்கியது சற்று பயம் ஏற்படுத்தியது....

விளையாட்டுக்கு கூட குடிக்க கூடாது என முடிவு எடுத்தேன்..

இந்நிலையில், சென்ற வாரம் ஒரு திருமண நிகழ்ச்சி... முடிந்ததும் வழக்கம் போல உ பா விருந்து.... மற்றவர் மனதை புண் படுத்த வேண்டாம் - நமக்காக இல்லை,,, அவர்களுக்காக ஜோதியில் கலக்கலாம் என நினைத்தாலும், ஒரு மன சித்திரம் , என்னை தடுத்து... அந்த மனசித்திரம் தான் பதிவின் நோக்கம்,,,

உடல் உறுப்பை குடி பாதிக்கும் என பதிவர் எழுதினர் அல்லவா? அந்த உறுப்பை எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்...

கல்லீரல் சொல்வது போல அமைந்துள்ளது

" அதும் பேரு கணயம் உங்களை எப்போவாவது பெரிய நாய் ஏதாவது தொரத்தி இருக்குதா. இல்லைனா அடுத்த தடவை தொரத்தும் போது பாருங்க. அதோட நாக்கு மாதிரி தான் அழகா இருப்பா என் தங்கச்சி. குட்டியா 85gm எடையில இருந்தாலும் ஒரு நாளைக்கு 900 gm இன்சுலின் உற்பத்தி செய்வா. அவள் வேலை செய்றதில்ல ஏதாவது தடங்கல் வந்தா அவ்வளவு தான் உங்களுக்கு சர்க்கரை வியாதி தான் "

அந்த நாக்கு வர்ணனை என் மனதில் சித்திரமாக பதிந்து விட்டது.... ( மற்ற அறிவியல் விளக்கங்கள் நினைவு இல்லை ...)

இவ்வளவு அழகான உறுப்பை, நாசம் செய்வது தவறல்லவா என்றுதான் முதலில் தோன்றியது... உடல் நலம் கெடும் எனப்தெல்லாம் பிறகுதான் தோன்றியது....

ஆகா, அந்த தினத்தில் குடியை தவிர்த்தேன்,,, ஆகவே நீங்களும் குடிக்காதீர்கள் என்று சொல்வதற்கு அல்ல இந்த பதிவு ( குடிக்காவிட்டால் நல்லது என்பது வேறு விஷயம் )

ஒரு விஷயத்தை எப்படி சொல்கிறோம்.,... யாரிடம் சொல்கிறோம் என்பது முக்கியம்...

மக்களில் சில வகை...

உணர்வு பூர்வமானவர்கள் : எனக்கு ஏனோ தவறா தோணுது... சரி இல்ல்லைன்னு உணரிகிற்றேன் என்பது போல பேசுபவர்கள்...
எதையும் உணர்வு பூர்வமாக அணுகுபவர்கள் இவர்கள்...
இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பேசினால், நம் கருத்தை அவர்களிடம் கொண்டு செல்வது எளிது...

சப்தரீதியானவர்கள் : அதுதான் சரின்னு உள்ளே பட்சி சொல்லுது.... உள்ளே மணி அடிக்குது என்பது போல பேசுபவர்கள்...
இது போன்ற வார்த்தைகளை இவர்களிடம் பயன் படுத்த வேண்டும்...

காட்சி பூர்வமானவர்கள் : மன சித்திரங்களாக சிந்திப்பவர்கள்;... நான் இந்த வகையை சென்ர்த்வன் என்பதால்தான் , அந்த நாய் நாக்கு , என் நாக்கை அடக்க முடிந்தது...

என் எல் பீ என்ற முறைதான்,.இப்படி மனிதர்களை பிரிக்கிறது.. இதை பற்றி விரிவான பதிவு , விரைவில் .....

Friday, May 7, 2010

ஒரு செக்ஸ் கதை - ( வயது வந்தவர்களுக்கு மட்டும் )

" நான் எங்கு இருக்கறேன் ... " என்று மயக்கம் அடைந்து எழும் எல்லோரையும் போல நானும் கேட்டேன்/... அனால் பதில் சொல்ல பக்கத்தில் யாரும் இல்லை... கடற்கரை ஒர்ரம் தனியாக இருந்தேன்.... ஒரு சவாலுக்காக, தனியக கப்பலில் புறப்பட்டது ஞாபகம் இருக்கிறது... பிறகு விபத்து நடந்தது லேசாக நினைவு வந்தது... இது இந்தியாவா ? வெளி நாடா ?

சந்தேகத்துடன் நடக்க தொடங்கினேன்... " ரஜினி அரசியலுக்கு வருவாரா ? " குரல் கேட்டு எனக்கு ஆச்சர்யம்... தமிழர்கள்... அவர்களை நெருங்கினேன்... " ஒன்னும் பயபடதே... இது இந்தியா இல்லை... அனால், நீ இங்கேயே இருக்கலாம்... வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் கூடாது.... முடியாது... "

உண்மையில் அந்த " நாடு " நன்றாக இருந்தது... எல்லா வசதிகளும் உண்டு... எனக்கு தனி வீடு ஒதுக்கினார்கள்... பிடித்த வேலை உடனடியாக கிடைத்தது... இனி மேல் இதுதான் என் ஊர்.. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது..

இரண்டு நாளில் எனக்கு ஒரு வித்தியாசம் தெரிந்தது.... பெண்கள் யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை...

*********

வேலை யில் முதல் நாள்... ஒரு படிவம் நிரப்ப வேண்டும்... பெயர் , வயது எல்லாம் நிரப்பினேன்... செக்ஸ் : என்ற இடம் மட்டும் அடிக்க பட்டு இருந்தது....

என்ன இது என வியப்பாக கேட்டேன்.. இந்த ஊரில் அந்த இடத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை.... என்று புன்னகிதார் பணியாள் ..

ஏன்

" இங்கு இருப்பது ஆண்கள் மட்டும்தான்.. இங்கு இருப்பது ஒரு செக்ஸ் தான் "

அதிர்ந்தேன்.....

****************

ஒரு விஞ்ஞானி காதல் தோல்வி அடைந்ததும், பெண்கள் மேல் வெறுப்படைந்து பெண்கள் இல்லாத உலகை உருவாகியதும், க்ளோனிங் மூலம் வம்ச விருத்தி ஏற்பாடு நடப்பதால், பெண்களின் தேவை உணர படுவது இல்லை என்றும் தெரிந்து கொண்டேன்....

மற்றபடி, வெளி உலகை விட எல்லா வசதிகளும் உண்டு .." அந்த " பசியை தீர்க்க கூட அறிவியல் முறையில் வழி உண்டாம்.. அட பாவிகளா.... அறிவியல் மகத்துவம் என்னை வியக்க வைத்தது,... அந்த ஊரின் வளர்ச்சி என்னை மயக்கியது...

***********************************௮
ஆனாலும் எல்லோர் கண்களிலும் ஏதோ ஒரு ஏக்கத்தை காண முடிந்தது... ... என்ன என்று புரியவில்லை....

எல்லா வளமும் இருப்பதால், எந்த கவலைகளும் இல்லை... யாரவது இறந்தால் கூட யாரும் அழுவது இல்லை... எல்லாம் இயந்திர கதியில் இருந்தது...

இதை எல்லாம் உருவாகிய விஞ்ஞானியை பார்க்க ஆசையாக இருந்தது .. ஆனால் அவர் அங்கு இல்லை... அவரை பதவி நீக்கம் செய்து விட்டு, எதிர் கோஷ்டி ஆட்சிக்கு வந்து விட்டதாம்.. அவர் எங்கு இருக்கிறர் என தெரியவில்லை

*****************************

"சார்... அதிர்ஷ்ட குழுக்களில், உங்களுக்கு உல்லாச பயணம் பரிசு ...உல்லாச கப்பலில் கொஞ்ச தூரம் சென்று வரலாம்.... அனால், இந்த நாடு கண்காணிப்பில் இருப்பீர்கள்... வேறு எங்கும் தப்பி செல்ல முடியாது " அரசு ஊழியன் சொன்னபோது, எனக்கு சிரிப்பு வந்தது... உல்லாச உலகை விட்டு விடு செல்ல நான் என்ன முட்டள ? கண்டிப்பா திருப்பி வர்றேன் "

கப்பலில் ஏறினேன்,,,

கப்பலில் எல்லா வசதிகளும் உண்டு.... வெகு அருமை... திடீரென புயல்.... என் போதாதா நேரம்... மீண்டும் விபத்து..

************

ஏதோ ஒரு இடத்தில் ஒதுங்கினேன்... எங்கும் ஏழ்மை மிகுந்த ஊர் போல தெரிந்தது.... வெறுப்பாக இருந்தது....

ஒரு முதியவரை அணுகினேன் ..." தம்பி..அந்த ஊர்ல இருந்து வர்றவங்க , இப்படி வந்து மாடிக்றது எப்பவும் நடக்குரட்துதான்... பக்கத்துக்கு தீவல போய் விட்டுடுவோம்.. அவங்கலுக்கு சொந்தமான தீவு அது... அவுங்க வந்து கூப்பிடுகுவாங்க... இங்கே அவுங்க வர முடியாது " என்றார்.. பக்கத்தில் அவரது மனைவி... இந்த வயதிலும் அவர்களுக்குள் காதல் இருப்பது புரிந்தது...

ஐயா,, இந்த ஊர்ல கஷ்டபட்ரதுகு , உங்க மனைவியை விட்டுடு , அங்கே வந்துடுங்க... ஜாலிய இருக்கும் " என்றேன்..

" தம்பி ..வாழ்க்கைங்கறது, சும்மா ஜாலிய இருப்பது மட்டும் அல்ல.. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மற்றவர் துன்பங்களை துடைத்தல்... வெறுப்பின் அடிப்படையில், வாழ்வது வாழ்வல்ல...
என்னை ஒரு பொண்ணு எமாதிடானு எனக்கு கோபம் இருந்துச்சு... அனால், அந்த பொண்ணு நிலைல இருந்து பார்த்தல் அவ செஞ்சது சரி நு தோனுச்சு..இப்ப இவளை கட்டிகிட்டு , வாழ்வை நல்லா வாழறேன்..இதன் இன்பங்களும் துன்பங்களையும் ரசிக்றேன் ..

நீ சொல்ற சொர்க்க பூமியல எல்லாம் இருக்கலாம்,... அனால் அங்கு இருப்பது வாழ்வு அல்ல "

சொர்க்க புரி போகும் வழி தெரிந்தும் , போகாமல் இருக்கிறாரே... எனக்கு வியப்பு...

" அய்யா ..நீங்க யாரு "

" நான்தான் அந்த ஊரை உருவாக்கிய விஞ்ஞானி "
************************************************************௮௮

"ஒரு செக்ஸ் " கதை - by pichaikaaran

Thursday, May 6, 2010

பக்தி சிந்தனை சிறந்ததா . பகுத்தறிவு சிந்தனை சிறந்ததா - விடை அளிக்கும் இலவச புத்தகம்


இதற்கு மேல் ஒன்றம் இல்லை என்ற அளவுக்கு , இந்த சொற்பொழிவில் ஜே கிருஷ்ணமூர்த்தி விளக்கம் அளிக்கிறார்...

உங்களையே , புத்தகமாக படியுங்கள் என்ற முந்தய பதிவின் தொடர்ச்சி..இதை பெரும்பாலானோர் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால், இதை விரிவாக பகிர்ந்துகொள்கிறேன் ( அடைப்பு குறிக்குள் இருப்பது சில இடங்களில் சொந்த சரக்கு... சில இடங்களில் , ஜே கிருஷ்ணமுர்த்தி வேறு சந்தரப்பனகளில் சொன்னதை , அதன் பொருத்தம் கருதி அடைப்பு குறியில் கொடுத்து உள்ளேன் ... இரண்டுக்கும் வித்தியாசம் எளிதாக புரியும் என்பதால், வேறு படுத்தி காட்டவில்லை )
***************************************


உங்களையே நீங்கள் ஒரு புத்தகத்தை போல் படித்து கொண்டு இருகிறீர்கள்... உங்கள் சார்பாக நான் படிக்கவில்லை... இருவரும் சேர்ந்து படிக்கிறோம்....

வாழ்வில் ஒழுங்கின்மை, பிளவுண்டு வாழ்தல், இன்னொருவர் கருத்தை ஏற்று ( ஆன்மீக , அரசியல், பகுத்தறிவு , நாத்திகம், வேறு எதாவது சித்தாந்தம் ) வாழ்தல் என்பது பற்றி " புத்தகத்தின் " சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம்..

எதாவது கருத்துடன், அல்லது செயலுடன் அல்லது சக மனிதருடன் நாம் கொள்ளும் தொடர்பைதான் வாழக்கை என அழைக்கிறோம் ( நமது வாழக்கை வரலாறு என்பது என்ன,,,, சக மனிதருடன் நட்பு, சண்டை, ஒரு கருத்தை ஏற்றல் எதிர்த்தல், - எதாவது ஒன்றுடன் இணைந்ததுதான் நம் வாழ்க்கை. தனியாக வாழ்க்கை என்று ஒன்று இல்லை ..தொடர்புதான் வாழ்க்கை .. ) நாம் ஒட்டு மொத்த மனித குலத்துடன் தொடர்பில் இருக்கிறோம்... நாம் செயல்கள், சிந்தனைகள் உலகை பாதிக்கும்...

நீங்கள் தான் உலகம் ... உலகம் என்று தனியாக எதுவும் இல்லை ....உலகம் என்பது நீங்கள்தான்... ஆக, உங்கள் பொறுப்பு மகத்தானது...

பயம் என்பது பற்றி புத்தகம் என்ன சொல்கிறது என பார்க்கிறோம் ..

வேலை பற்றிய பயம், நோயை பற்றிய பயம் என்று பல பயங்களில்தான் மனித இனம் வாழ்ந்து வருகிறது ..இதை தவிர, இனம் தெரியாத, வெளிப்படையாக தெரியாத பயங்களும் உண்டு ( நமக்கு பயமா ? இதை நம்மால் ஏற்க முடியாமல் இருக்கலாம்... அனால், இந்த பயங்களை மறைக்கத்தான், நமது எல்லா நடவடிக்கைகளும் இருக்கின்றன என்பது கூர்ந்து கவனித்தால் தெரியும் )
பயத்தினால் செய்யபடும் வழிபாடு அர்த்தம் அற்றது ..

பயம் என்பதை பற்றி இன்னும் ஆழமாக பார்ப்போம்... பயம் எப்படி ஏற்படுகிறது?

ஒரு பொய் சொல்லிவிட்டோம்... அது கண்டுபிடிக்க பட்டு விடுமோ என பயம்... செய்ய கூடாத ஒன்றை செய்து தொலைத்து விட்டீர்கள்.. அந்த நினைவு ஏற்படுத்தும் பயம்... வேலை பொய் விடுமோ என்ற பயம்... வாழ்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம்.. .. எத்தனை பயங்கள்

சிறு வயதில் ஏறபட்ட கசப்பான அனுபவங்கள் மீண்டும் வந்து விடுமோ என்ற பயம்..இறப்பை நினைத்து பயம்... இதை எல்லாம் கூர்ந்து கவனித்தால், இந்த புத்தகத்தை இன்னும் படித்தால் ஒன்றுதெரிகிறது..

எண்ணங்கள் தான் பயத்தை உருவாக்குகின்றன.. இப்ப நல்லா இருக்கேன்..ஆனா , வயசான பின் என்ன நடக்குமோ என்று ஓர் எண்ணம் உண்டானால் , அதுதான் பயம்.. என் மனைவி என்னை விட்டு பிரிந்து விட்டால்... ? என் பார்வை திறன் பாதிக்கப்பட்டால்... ?எல்லாமே எண்ணங்கள்தான்..

பயத்தின் ஆதாரம் என்ன ? சிந்தனை மற்றும் காலம்... ( நாளை என்ன நடக்கும் என்பதுதான் பயத்தின் ஆதாரம்... நாளை என்ற காலம் தான் பயத்தை உருவாக்குகிறது )
சிந்தனை என்பது காலத்திற்கு உட்பட்டது... ( நேற்றின் அனுபவம், படிப்பு, - நாளை பற்றிய யோசனை.. இதுதான் சிந்தனை... இதில் பக்தி சிந்தனை , பகுத்தறிவு சிந்தனை என்றெல்லாம் சொல்வது அர்த்தம் அற்றது )

நீங்களே , உங்களை கூர்ந்து கவனித்து , இதை எல்லாம் கவனிக்கிரீகள்... வேறு யாரும் சொல்ல தேவை இல்லை...

சரி, பயம் என்பதே இல்லாமல் இருக்க முடியுமா என நீங்கள் , அதாவது புத்தகத்தின் அடுத்த பக்கம் கேட்கிறது... பயத்தை அழிக்க எதாவது வழி முறைகள் , தியானம் இருக்கிறதா என நீங்கள் கேட்க மாட்டீர்கள் ...வழிமுறைகள் என்று வந்து விட்டாலே அது காலத்தின் பிடியில் வந்து விடுகிறது .. ( ஒரு வாகனத்தை இயக்க, ஒரு சிகிச்சை செய்ய , வழிமுறை உதவும்..சிந்தனை, படிப்பு உதவும்... அனால் )ஒன்றை புரிந்து கொள்ள , எந்த வழிமுறைகளும் உதவாது ..

காலமும், சிந்தனையும்தான் பயத்தின் ஆதாரம் என தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது, பயம் உங்களை விட்டு விலகும்...

நீங்கள் கவனிக்க வேண்டியது காலம் என்பதை பற்றிதான்...

காலம் என்பதுக்கும், சிந்தனை என்பதற்கும் என்ன தொடர்பு என்று நீங்களே உங்களை ஒரு புத்தகத்தை பார்ப்பது போல , ஆழமாக கவனியுங்கள்..

சிந்தனை என்பது என்ன? ஏற்கனவே தெரிந்த ஒன்றில் இருந்து, ஏற்கனவே தெரிந்த இன்னொன்றிக்கு மனம் அசைவதைத்தான் , எண்ணம் /சிந்தனை என அழைக்கிறோம் ( இதன் மூலம் புதிதாக ஒன்றும் அறிய முடியாது.. வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் புதிதாக வருகிறது .. அனால் நாம் , பழயவற்றில் வாழ்கிறோம்... இதுவே முரண்பாடுகளுக்கு காரணம் )

நேற்றைய சிந்தனைகளுடன் இன்றைய தினத்தை சந்திக்கிறோம்... இன்றை, ஒரு அனுபவம் ஆக்கி , அதையும் பழைய பொருள ஆக்குகிறோம்... இதுதான் நம் வாழ்வாக இருக்கறது..

நான் குடிக்றேன்... அனால், ஒரு நாள் விட்டு விடுவேன் என நினைகிறேன்.. காலம் என்னை மாற்றி விடும் என நினைக்றேன்... நேற்று ஒரு கஷ்டத்தை அனுபவித்தேன்.. நாளை மீண்டும் அதுவராது என நம்புக்றேன்..

அதாவது, இறந்த காலத்தில் இருந்து , எதிர்காலத்துக்கு செல்ல, நிகழ் காலத்தை பயன்படுத்துவதுதான், மன ரீதியான காலம் என்பதை புரிந்து கொள்கிறோம் ( கடிகாரம் காட்டும் காலம் என்பது வேறு )

அடுத்த கேள்வி கொஞ்சம் கஷ்டமானது... பொறுமையாக பார்ப்போம்..

மன ரீதியான காலம் என்பதை நிறுத்த முடியுமா ? நமது வாழ்வில் காலம் தான் பெரிய விஷயமாக இருக்கிறது.. எனக்கு தெரியாது... வருங்காலத்தில் தெரிந்து கொள்வேன்..

காலம் நம் மன காயங்களை ஆற்றும்,...

சரி, இப்பை இருப்பதால் என்ன பிரச்னை..

காலம் என்பது நமது தொடர்பு கொள்ளலை பாதிக்கிறது... புரிது கொள்ளும் தன்மையை பாதிக்கிறது...

ஒரு விஷயத்தை ( ஒருவர கஷ்டத்தை ) உடனடியாக புரிந்து கொண்டால்தான் உண்டு... கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்வேன் என்பது அபத்தம் ( இப்ப அனுபவிக்காம எப்ப அனுபவிப்பது,,, சின்ன வயசுல ஜாலிய இருந்துட்டு, வயசானபின் மாறி விடுவேன் என சொன்னால், வாழ்வை பிரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம் )

சிந்தனை , காலம் என்பது எந்த பிரச்சினைக்கும் தீர்வை தராது ( ஒரு பம்ப் வேலை செய்யவில்லை என்றால், அதே போல வேறு பிரச்சினையை சமாளித்த அனுபவம் கை கொடுக்கும்... யோசித்து பம்ப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.. காலம் கை கொடுத்தது,,,, அதாவது நேற்றைய அனுபவம் கை கொடுத்தது )

தொழில் நுட்ப பிரச்சினைகளுக்கு, சிந்தனை மற்றும் காலம் தீர்வு சொல்லலாம்... அனால், உங்கள் மனைவியை புரிந்து கொள்ள சிந்தனை உதவாது,..,, உங்கள் மனைவியுடன் ஏற்படும் பிரசினைக்கு காலம் தீர்வு சொல்லாது...

சிந்தனையை எப்படி நிரிதுவது? மன ரீதியான காலம் என்பதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என யாரிடமாவது கேட்டால், அவர்கல், இதை பற்றி நன்றாக உரை ஆற்ற முடியும்... அனால், அது உங்களுக்கு உதவாது...

காலத்திற்கு இடையேயான சிந்தனை ஓட்டம், நிறுத்தப்பட முடியுமா, என்பதை நீங்களே உங்களை கேட்பதுதான், உண்மையான தியானம்..

நான் சொல்கிறேன்... சிந்தனை ஓட்டத்தை நிறுத்த முடியும்... நிருத்தி இருக்கிறேன்... அனால், இதை நான் சொல்கிறேன்- உங்கள் புத்தகம் சொல்லவில்லை...

நான் சொல்வதை நம்பினால், அது உங்க்களுக்கு உதவாது... நீங்களே உணர வேண்டும் ( யாரையும் பின் பற்றாதீர்கள் என சொல்லும் ஜே கிருஷ்ணமூர்த்தி, தன்னை கூட நம்ப வேண்டாம் என்கிறார் )

எனவே நீங்களே உங்களை கவனியுங்கள்... சிந்தனை, கால ஓட்டம், இதெல்லாம் உங்களை , உங்கள் தொடர்பு கொள்ளும் தன்மையை எப்படி பாதிக்கிறது என பாருங்கள்..

காலம் சார்ந்து செயல்பதும் உங்கள் மனம , மூளை, முற்றில் வேறு விதமாக செயல்பட முடியுமா என பாருங்கள்,,,,

இதற்க்கு மிக தீவிரமான கவனம் தேவை,,,

நீங்கள் என்ற புத்தகத்தை மிக உன்னிப்பாக கவனித்து படியுங்கள்....

நான் என்ற விஷயத்தை தீர்க்கமாக கவனியுங்கள்


( வேறு யாரும் உங்களுக்காக படிக்க முடியாது... வேறு யாருடைய புத்தகத்தையும் நீங்கள் படிக்க முடியாது பெரியார் அவர்கள் படித்த புத்தகம் , கடவுள் இல்லை என சொல்லி இருக்க கூடும்... ராமானுஜர் அல்லது ஆழ்வார்கள் , நாயன்மார்கள் படித்த புத்தகம் கடவுள் இருக்கிறர் என சொல்லி இருக்க கூடும்..

ஒரு தரப்பு உண்மை சொல்கிறது..ஒரு தரப்பு உண்மை சொல்கிறது என்பது அல்ல... அவரவர்கள் படித்ததை , அவரரவர் உண்மையாக தெரிந்து கொண்டதைத்தான் அவரவர்கள் சொல்கிறார்கள்,,, இதில் தவறில்லை... ஆனால், அது நம் படிப்பு ஆகாது... அவர்கள் சொன்னதை திருப்பி சொல்வது அவர்களுக்கு பெருமை சேர்க்காது ( கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை ) ..

நம் புத்தகத்தை நாம் படிப்போம்.. அது என்ன சொல்கிறது என்ன பார்ப்போம் ... )

Wednesday, May 5, 2010

ரஜினியை ஏமாற்றிய இயக்குனர்

To kill mockingbird என்ற படத்தை பார்த்தவுடன் ஏற்பட்ட உன்னத உணர்வு , மகிழ்ச்சியை அப்படியே கொஞ்ச நாள் தக்க வைத்து கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் வேறு படம் ஏதும் பார்ப்பதை தவிர்த்து வந்தேன்...

இந்நிலையில், ராணி பேட்டைக்கு பேருந்து பயணம்..அதில் ஒரு படத்தை பார்க்க வேண்டிய நிலை ஏறபட்டது ( பட போடுவார்கள் என தெரிந்து இருந்தால் அதில் ஏறி இருக்க மாட்டேன் )

பழைய படம்... கை கொடுக்கும் கை.... சிறந்த இயக்குனர் மகேந்திரன் இயக்கி , அவரது திரை வாழ்வை முடித்து வைத்த படம் ( என்று அவரே , சுய சரிதையில் எழுதி இருக்கிறார் )..

நமது தமிழ் படிப்பாளிகளின், நோய் மனப்பான்மைக்கு இந்த படம் ஒரு உதாரணம்...

ஒருவன் கஷ்ட படுகிறான் என காட்டுவது எதார்த்தம்தான்... அனால், நல்லது நினைத்தால், கெட்டதுதான் நடக்கும் என வலிந்து காட்டுவது எதார்த்தம் அல்ல... நோய் மனப்பான்மை...

ஜானி, முள்ளும் மலரும் போன்ற படங்களை இயக்கிதால் ஏற்பட்ட ரஜினியின் நம்பிக்கை பயன் படுத்தி அவரை ஏமாற்றி விட்டார் மகேந்திரன்...

அது முடிந்த விஷயம்.. அனால், இந்த நோய் மனப்பான்மை இன்னும் நமது படங்களில் தொடர்வது வேதனை...

ஒன்று நடை முறைக்கு ஒத்து வராத அதீத கற்பனை..அல்லது, செயற்கையான சோகம் என்பதை எதார்த்தம் என நினைத்து எடுப்பது... என்ற இரு துருவங்களில் சிக்கி தவிக்கின்றனர்...

நம் நாட்டில்தான் , குடும்ப உறவுகள் நன்றாக இருக்கின்றன என்கிறோம்..அனால், வெளி நாடு படங்களில் காடயுவதை போல கூட நம் சினிமாவில் குடும்ப உறவுலகளின் உன்னதம் காட்ட படவில்லை என்பதே உண்மை..

உலக பிரச்சினை, உங்கள் பிரச்சினைக்கு தேர்வு சொல்லும் புத்தகம் - முற்றிலும் இலவசமாக


மனித முன்னேற்றத்திருக்கு , பலர் பல புத்தகங்களை சிபாரிசு செய்வதுண்டு.... ஜே கிருஷ்ணமுர்த்தி ஒரு புத்தகத்தை சிபாரிசு செய்கிறர்... இந்த புத்தகத்தை படித்தால் போதும் என்கிறார்..

இந்த புத்தகம் விற்பனைக்கு அல்ல,,இலவசம் ... அந்த புத்தகம் என்ன ?

ஜே கிருஷ்ணா மூர்த்தியின் சொற்பொழிவை கொஞ்சம் கேளுங்கள்.. இதை அவளவாக படித்து இருக்க மாட்டீர்கள்... எனவே தான், இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ...கவனமாக படிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்
( அடைப்பு குறிக்குள் இருப்பது, நம்ம சொந்த சரக்கு..)


*******************************************


மனித இனத்தின் ஒட்டு மொத்த சோகங்கள், பிரச்சினைகள், நம்பிக்கைகள், மகிழ்ச்சி, அனுபவங்கள் , ஆண்டாண்டு காலமாக மனித இனத்தின் வாழ்கை அனித்தும் ஒரே ஒரு புத்தகத்தில் அடங்கி இருக்கிறது.... ( இதை படித்தால், அணைத்து தொல்லைகளையும் புரிந்து கொண்டு அதற்கு தீர்வு கண்டு விடலாம் ..இல்லையா ! ? ) இந்த புத்தகம் விற்பனைக்கு அல்ல... யாரும் அச்சிடவும் இல்லை,,,

"நீங்கள்" தான் நான் குறிப்பிடும் அந்த புத்தகம்...you are that book...

இந்த புத்தகத்தை புரிந்து கொள்ள வேறு நிபுணர் யாரிடமும் செல்லாதீர்கள்... ஏனென்றால், அவர் புத்தகமும் , உங்கள் புத்தகமும் ஒன்றுதான்... ( அவர் அவர் புத்தகத்தை படிக்கட்டும்..நீங்கள் உங்கள் புத்தகத்தை படியுங்கள்)

இந்த புத்தகத்தை நன்கு , பொறுமையாக படித்து புரிந்து கொண்டால் தான், குற்றங்கள், ஏற்ற தாழ்வுகள், யுத்தங்கள் நிறைந்த இந்த உலகை மாற்றி அமைக்க முடியும்..நாம் எல்லோரும் சேர்ந்துதான் இந்த உலகை உருவாக்கி இருக்கிறோம்...
நம்மை புரிந்து கொண்டால்தான், உண்மையான மாற்றம் நிகழும் ( சும்மா மற்றவர்களுக்கு அறிவுரை கொடுப்பதால், எதுவும் மாறாது )
எனவே இந்த "புத்தகத்தை" நன்றாக கவனியுங்கள் ... ஓடும் மேகத்தை, சூரிய உதயத்தை எப்படி கவனிக்கிறோமோ அப்படி கவனியுங்கள்... மேகத்தை உங்களால் எதுவும் செய்ய முடியாது....சும்மா கவனிப்பீர்கள்... அதே போல், சும்மா கவனியுங்கள்..எதையும் மாற்றவோ, அர்த்தம் கண்டு பிடிக்கவோ முயல வேண்டாம்... இந்த புத்தகம் எல்லாவற்றையும் வெளி படுத்தும்... புத்தகம் என்ன சொல்கிறது என்பதை , உங்கள் மொழியில் மாற்றாமல், அப்படியே கேளுங்கள்...

பார்ப்பது என்பது ஒரு கலை... இந்த புத்தகத்தை படிக்கும் போது, நான் படிக்கிறேன் என்ற உணர்வு வேண்டாம்... படிப்பவனும், படிக்கப்படும் புத்தகமும் ஒன்றே ..(சும்மா பாருங்கள்.... நான் பார்கிறேன் என்ற உணர்வு இல்லாமல்... பார்ப்பது மட்டும் இருக்கட்டும் )

சரி, உங்கள் சார்பாக நான் இந்த புத்தகத்தை படிக்க போவதில்லை.. எப்படி படிப்பது என உங்களுக்கு தெரிந்தவுடன், எல்லாம் தெளிவடைந்து விடும் ....

புத்தகத்தின் முதல் அத்தியாயம் என்ன சொல்கிறது ?

உங்களை நீங்களே கவைக்கும்போது, நீங்கள் வேறு யாருடைய வாழ்வையோ வாழ்வதை கவைப்பீர்கள் ... ம்ற்றவருடைய போதனைகலைதான் , உங்கள் அறிவு என நினைத்து கொள்கிறீர்கள் .. புத்தர் சொன்னது, இயேசு சொன்னது, (பெரியார் சொன்னது, கீதை சொன்னது, அரசியல் தலைவர்கள் ஆன்மீக தலைவர்கள் சொன்னது) போன்றவை
.. நம்மிடம் ஒரு ஒழுங்கு இல்லை.... சொல்வது ஒன்று , செய்வது ஒன்று ( அன்பே ஆண்டவன் என்க்றோம்.... அனால் கொலை செய்கிறோம்.... )

இப்படி பிளவு பட்டு நாம் வாழ்வதை உணரும் போது, ஒழுங்கு என்பது இயல்பாக மலரும்...

அடுத்த அத்தியாயம் என்ன சொல்கிறது..

நான் என்ற உணர்வுடன் செயல்படுவதுதான் சிக்கல்களுக்கு காரணம் ... ( நான் என்ற உணரவே போலியானது... பெற்றோர்கள் சொல்வது, சமுகம் சொல்வது , படிப்பது எல்லாம் சேர்ந்ததுதான், நான் என்ற உணர்வாக மாறுகிறது.... அதாவது, சிந்தனைதான் நான் என்ற உணர்வு... சிந்தனை என்பது ஒரூ போதும் சுயமானதாக இருக்க முடியாது )

உடனடியாக நான் என்ற உணரவை அழிக்க, எதாவது வழி இருக்கிறதா என கேட்பது அபத்தம்... என் என்றால், அதவும் கூட நான் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் ( நான் ஒரு தியானம் செஞ்சேன் பாரு..அப்படியே பறந்தது போல இருந்துச்சு என் சொல்வதும் போலி தனம்தான் )

நான் ஞான நிலை அடைந்தவன்.... உனக்கு போதிக்கிறேன் என யாரவது வந்தால், அதை ஏற்க வேண்டாம் என புத்தகம் சொல்கிறது.... புத்தகத்தை நீங்களே படியுங்கள்..(உங்கள் புத்தகம் உங்களை தவிர வேறு யாருக்கு புரிய போகிறது? அந்த புத்தகமே நீங்கள்தானே )

( தொடரும் )

சிந்தனை என்பது தேவையே இல்லையா? மனம் செயல்படவே கூடாதா ? பயம் என்பது என்ன? காலம் என்பது என்ன? அடுத்த பகுதியில்....

Tuesday, May 4, 2010

ஏப்ரலில், என்னை கவர்ந்த டாப் பைவ் புத்தகங்கள்



ஏப்ரல் மாதம் படித்த புத்தகங்களில், என்னை கவர்ந்த புத்தகங்கள்... சிறந்த புத்தகங்கள் சிலவற்றை பட்டியல் இட வில்லை.... அவை தரமற்றவை என்று அர்த்தம் இல்லை... இப்போதைய மன நிலையில், அவ்வளவாக கவரவில்லை.. பின்பு பட்டியல் இட படும் ..

1 தொழிலில் நிச்சயம் வெற்றி பெற - கே கே ராமசாமி
..ஷார்ப் பம்ப் நிறுவனத்தை உருவாக்கியவரின் சுய சரிதை, அனுபவ தொகுப்பு....

எளிய தமிழில், அருமையாக படைத்து இருக்கிறார்கள்... விரிவான பதிவு விரைவில் எதிர்பாருங்கள்...

தொழிலில் நிச்சயம் வெற்றி பெற - நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்


2 simply fly - captain gopinath

ஏர் டெக்கான் விமான சேவையை ஆரம்பித்து , இந்தியாவில் விமான போகக் வரத்து துறையில் புரட்சி ஏற்படுத்தியவரின் , சுய சரிதை...சின்ன சின்ன விஷயங்கள் , எப்படி பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என நன்றி மறக்காமல் சொல்லி இருப்பது, நூலுக்கு நம்பக தன்மை ஏற்படுத்துகிறது.... விரிவான பதிவு , விரைவில்...
simply fly - எண்ணங்களை உயர பறக்க வைக்கும் நூல்

3
விடுதலைப் புலிகள்-மருதன் பிரபாகரன்: வாழ்வும் மரணமும் - பா ராகவன்
ராஜீவ் கொலை வழக்கு - ரகோத்தமன்


இந்த மூன்று புதகங்களுயும் ஒன்றாக படித்தால் நல்லது... தமிழனின் வீரம், திறமை, இலங்கையில் அவர்கள் சந்திக்கும் கொடூரம், விடுதலை போர், சகோதர யுத்தம் என மிகபெரிய விஷயங்கள் ...

ராஜீவ் காந்தி கொலை- பாதுக்காப்பு குளறு படிகள், அதிகார வர்கத்தின் அலட்சியம், என ஒருபுறம்... திறமையான அதிகாரிகள் ஒரு புறம் என கொலை வழக்கின் மர்மங்கள் விறு விறுபாக சொல்ல பட்டுள்ளன , ரகோத்தமன் நூலில்....

4 இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன்..

இந்து மதத்தை பாராட்டுவோரும் , தூற்றுவோரும் படிக்க வேண்டிய புத்தகம்... எல்லோரும் படிக்க முடியாது... இந்த துறையில் ஈடு பாடு உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்... ஆசிரியரின் உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது... சில தமிழ் சொற்களுக்கு அர்த்தம் தெரியவில்லை...

ஆறு தரிசனங்கள் - பொது தரிசனம் அல்ல... சிலருக்கு மட்டும் விசேஷ தரிசனம்


5 கலைவாணி : ஒரு பாலியில் தொழிலாளியின் கதை - எழுது வடிவம் ; ஜோதி நரசிம்மன்

இந்தியா இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதை பளிச் என உணர வைக்கும் புத்தகம்... அடுத்தடுத்து , கஷ்டங்களை மட்டுமே சந்தித்த பெண்ணின் கதை.... இவரை போன்ற பெண்களை தவறாக நினிக்கும் நாம், இவர்கள் உருவாக நாமும் கூட காரமாக இருக்க கூடும் என சிந்திக்க வைத்து, இவர்களை ஆபாசமாக அல்ல - அனுதாபத்துடன் பார்க்க வேண்டும் என புரிய வைகிறது...
கலைவாணி : ஒரு பாலியில் தொழிலாளியின் கதை : களைந்து போன கனவின் கதை


************************
special entry

நம்பர் ஒன் சேல்ஸ் மேன் - சோம வள்ளியப்பன்

இந்த துறையில் இருபவகளுக்கு, நம்பர் ஒன் புத்தகம் இதுதான்.... மிக தெளிவாக, உடனடி பலன் அளிக்கும் வகையில், சர்வ தேச தரத்துடன் எழுதப்பட நூல்...

நம்பர் ஒன் சேல்ஸ் மேன் -நம்பர் ஒன் புத்தகம்

Monday, May 3, 2010

To Kill A Mockingbird - தயவு செய்து இது போல தமிழில் முயற்சிக்காதீர்கள்



சமிபத்தில், ஒரு நண்பரின் அழைத்ததற்காக , ஒரு ஆங்கில படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது... அந்த படத்தை பற்றி நான் கேள்வி பட்டதில்லை.. இருந்தாலும், நண்பருக்காக பார்த்தேன்..

அதிரடி ஆரம்பம் எல்லாம் இல்லாமல், சாதாரமாக அரம்பிதத்து.. ஒரு சிறுமி சொல்வது போல கதை செல்கிறது..சிறுமி, அவள் அண்ணன் , ம,அற்று அவர்கள் தந்தை - நடுத்தர வயது வழக்கறிஞர் .. குழந்தைகளை அன்பாக கவனித்து கொள்கிறார்..

புதிதாக ஒரு சிறுவன் நண்பன்க வந்து சேர்கிறான்.. பக்கத்து வீட்டில் யாரும் பார்த்திராத ஒரு ஆளை பயம் கலந்த ஆரவத்துடன் பார்க்க முயல்கிறார்கள்... அனால் முடியவில்ல்லை...

ஒரு முறை வேட்டயடுவடை பற்றி பேச்சு வரும்போது, mocking bird நமக்கு எந்த தோன்றவும் தருவதில்லை..இனிமையாக பாடி நம்மை மகிழ்விக்கிறது..அதை கொல்வது பெரிய பாவம் என தந்தை சொல்கிறார்..
அவரது மேன்மை பல இடங்களில் சுட்டி காட்ட படுகிறது...
கறுப்பின இனத்தை சேர்ந்த ஒருவன், தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக கைது செய்ய படுகிறான்... அவனுக்காக இவர் வாதடுகிர்ரர்..பலரின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார்...

கடைசியில் வழக்கில் தோற்று விடுகிறார்.. ( ஆனாலும் அவரது மேன்மை, மரியாதை உயர்கிறது - நம் மனத்திலும், அவரது கழந்தைகள் மனத்திலும் .. ) .. அந்த கறுப்பின கைதி இறந்து விடுகிறான்..

இந்த வழக்கில் வெற்றி பெற்ற, ஆனாலும் அவமானம் அடைந்த, வெள்ளைக்காரன், அவரது குழந்தைகளை கொல்ல முயல்கிறான,, அவனை கொன்று , குழந்தைகளை காபர்த்ருவது யார் என்பது ஒரு சின்ன சஸ்பென்ஸ்...

mocking bird நமக்கு எந்த தோன்றவும் தருவதில்லை..இனிமையாக பாடி நம்மை மகிழ்விக்கிறது..அதை கொல்வது பெரிய பாவம் என தந்தை சொன்னார் அல்லவா.. அதில் இருக்கும் ஆழம் , நிறைய அர்த்தங்கள் முடிவில் தெரிகிறது...

படம் கண் கலங்க வைத்தது... அன்பின் மேன்மை, இரக்கம் , ஒதுக்கபட்டவரகளுக்காக குரல் கொடுத்தல் போன்ற மனிதனின் மேன்மைகளை மிக அருமைகாக எடுத்துள்ளனர்.... நகைசுவை மிளிரும் வசனங்கள் அருமை... ( அப்பா : compromise ந என்ன தெரியுமா ? சிறுமி : சட்டத்தை ஏமாற்றுவது. ) ( சிறுவன் : என் வாழ்கையில் என் அப்பாவிடம் அடி வாங்கியது இல்லை..அதை அப்படியே மெயின்டைன் பண்ண விரும்புறேன் )

உலகின் எந்த மூலையில் இருப்பவர் பார்த்தாலும் , படத்தை ரசிக்க முடியும்...


இந்த படம் உலக புகழ் பெற்ற படம் என்பதும், பல விருதுகள் பெற்ற படம் என்பதும் பிறகுதான் தெரித்தது...
இந்த படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்தேன்..

ஆனாலும், இது போல தமிழில் படம் வருமா என எங்க தோன்றவில்லை..நம்ம மக்கள் இப்படியே எடுக்கட்டும்... அதை பார்ப்பவர்கள் பார்க்கட்டும்... நல்ல படம் வேண்டுவோர், இது போல பார்த்து கொள்ள வேண்டியதுதான்...


அன்பு, சிலரை ஒதுக்கி வைத்தல், சிறந்த மனிதர்கள் என எல்லாம் தமிழ் நாட்டில் உண்டு.. அனால், நம் மக்கள் நம் முன்னால் இருக்கும் விஷயத்தை விட்டு விட்டு, எதை எதையோ அதீதமாக கற்பனை செய்து படம் எடுக்கிறார்கள்... எடுக்க தெரியாமல் எடுப்பதை விட , இப்படியே இவர்கள் இருப்பதுதான் நல்லது... இது போன்ற நல்ல படங்களை எடுக்க வேண்டாம் என என் இனிய தமிழ் இயக்குனர்களை கேட்டு கொள்கிறேன்



To Kill A Mockingbird (1962) direction : robert mulligan

சார், என் குரு மத்த சாமியார்கள் மாதிரி இல்லை ...ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஓர் உரையாடல்


அவர் கிட்ட தியானம் கத்துகிட்டேன்... தியானம் செஞ்சா, மேக கூட்டத்துல பறக்ற மாதிரி ஒரு பேரமைதியை உணர்ந்தேன்... நெற்றியில ஒரு துடிப்பு தெரிஞ்சுது.... நீல ஒளி தெரிந்தது... என்றெல்லாம் சொல்பவர்களை பார்த்து இருக்கிறோம்

அந்த புத்தகம் என்னை மாத்திடுச்சு, அவர் பேச்சு என்னை புரட்டி போட்டுடுச்சு... அவர் என் கிட்ட இருந்தா மூட நம்பிக்களை ஒழிச்சிட்டார்... என்று சொல்பவர்களை ஆன்மிக கூட்டம் , பகுத்தறிவு கூட்டம் என எல்லோரிடமும் பார்த்துள்ளோம்....

என்னதான் சாமியார்கள் மாட்டினாலும்,. எங்க சாமியார் மட்டும் நல்லவர் என கடைசி வரை சாதிப்பவர்கள் பலர்... அப்படி பட்ட ஒருவர், ஜே க்ருஷ்ணமுர்த்தியுடன் பேசுகிறார்... ஜே கே சொல்வதை அப்படியே ஏற்க வேண்டாம்... திறந்த மனதோடு, விருப்பு வெறுப்பு இல்லாமல், அவர் சொல்வதை கவனமாக படிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் ( அடைப்பு குறிக்குள் இருப்பவை நம்ம சொந்த சரக்கு )

**********************************************************************************************



"சார்.. என் குரு மத்தவங்க மாதிரி இல்லை... என்னோட பல கேள்விகளுக்கு அவரிடம் தான் பதில் கிடைத்தது... ஓர்அமைதி கிடைத்தது...

மத்த சாமியார் மாதிரி, பாடம் நடத்த மாட்டார்... அன்பா பேசுவாரு... திடீர்னு அவமான படுத்தற மாதிரி பேசுவாரு..சில சமயம் அசிங்கமா கூட பேசுவாரு.... நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும... ஆனா, அதெல்லாம், தூங்கிகிட்டு இருக்ற நம்ம ஆன்மாவை விழிப்பட செய்யும் பயிற்சிகள்தான்... கடவுள் எல்லாம் பொய்யி... புனித நூல்கள் சொன்ன படி நடக்காதே ...அப்படீன்னு புரட்சியா பேசுவாரு... பல தியான முறைகள் சொல்லி தந்து இருக்காரு.... கடவுளை உனக்குள் தேடுனு சொல்லுவாரு...

உங்களக்கு வேனும்னா , குரு என்பவர் தேவை படாமல் இருக்கலாம்... சராசரி மனிதனுக்கு குரு தேவை "

நமக்கு ஆறுதல் அளிக்க, உற்சாக படுத்த யாராவது தலைவர்கள் தேவை படறாங்க... ( அரசியல் தலைவர்களுடன் ஐக்கியம் ஆவதும், ஆன்மிக தலைவர்களிடம் ஐக்கியம் ஆவதும் அடிப்படையில் ஒரே மாதிரி தான் ) ...நமக்கு பிடிச்ச மாதிரி யாரு இருக்கங்களோ  அவுங்களிடம் சேர்ந்து கொள்கிறோம்.. நாம் உண்மையை தேடுவதில்லை... நமக்கு தேவை, நான் அவரின் சீடன், அவரின் தொண்டன், அந்த இயக்கத்தின் தொண்டன் என்று சொல்லி கொள்வதில் ஏறபடும் ஒரு வித பெருமைதான்.. பக்கத்தில் யாரும் இல்லேன்னா, யாரவது ஒருவர் போட்டோவை வச்சுக்கிட்டு, அவர்தான் என் தலைவர்/ குரு அப்படீன்னு சொல்லிக்றோம்... நாம வளர்ந்த சூழல், படிக்கும் புத்தகங்கள், இதன் அடிப்படையில் நம்ம தலைவரை/ குருவை தேர்ந்தேடுக்கிறோம் ( சின்ன வயதில் இருந்து புரட்சி கருத்துக்கள், நாத்திக கருத்துகளை படித்து வளர்ந்தால், நாத்திக , சீர்திருத்த தலைவர்களை தேர்ந்தெடுப்போம்... இல்லேன்னா, ஆன்மிக தலைவர்களை தேர்ந்தேடுப்போம்...இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை )

ஏதோ ஒரு சந்தோசத்தை ( ஆத்ம திருப்தி ) , நிம்மதியை தேடினால் , கண்டிப்பாக இந்த தலைவர்களிடம் கிடைக்கும்.... உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்...ஆனால், தயவு செய்து , இதை உண்மை என அழைக்காதீர்கள்... எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில்தான், உண்மையை நீங்கள் உணர முடியும்

" ம் ஹூம்/.. குரு அல்லது தலைவர் தேவை இல்லை அப்படீன்னு, நீங்க என்னை இன்னும் கன்வின்ஸ் பண்ணல.. "

உண்மை என்பதை வாதம் செஞ்சு உணர்த்த முடியாது... உண்மை என்பது சில கருத்துக்கள் அல்ல ..

" என்ன இருந்தாலும், என் குரு எனக்கு பல நல்லது பண்ணதை மறுக்க முடியாது... பொறாமை, பேராசை இதெல்லாம் என்னை விட்டு போனதுக்கு அவர்தான் காரணம் .ஒரு புது மனுசனா என்னை மாத்தி அமைத்து இருக்கிறார் "

ஒருவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர் இன்னொருவரை மாற்றி அமைக்க முடியுமா...? நீங்கள் உண்மையில் மாறவில்லை... அவரின் பாதிப்பு உங்கள் சிந்தனையை மாற்றி இருக்கு...இந்த பாதிப்பு கொஞ்ச நாள் இருக்க கூடும்... அனால், அடிப்படையில்  நீங்க மாறல... ( ஒரு ஆச்ஷன் படம் பார்த்த, கொஞ்ச நேரத்துக்கு யாரையாவது அடிக்கணும் போல இருக்கும்... அப்புறம் சரியாகி விடும்... சுய முன்னேற்ற புத்தகம் படிச்சு கொஞ்ச நேரம் வரைக்கும், தன்னம்பிக்கை பொங்கி வழியும் )

ஓர்  உயர்ந்த சிந்தனை உங்களை ஆக்கிரமித்து இருப்பதற்கும், பொறாமை உங்களை ஆக்கிரமித்து இருப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை..இரண்டிலுமே, நீங்கள் ஒரு சிந்தனைக்கு அடிமையாக இருக்கிறீர்கள்... இந்த அடிமைத்தனம் உங்களுக்கு பிடிச்சு இருக்கு,... மனதளவில், ஒரு குருவுக்கு, ஒரு தலைவனுக்கு அடிமையா இருப்பதில் ஒரு வித பாதுகாப்பு உணர்வு உங்களுக்கு கிடைக்குது..

" என்ன பேசறீங்க? பேராசை என்பதை நான் வெல்லனும்... அதோடு போராடனும்... அதை வெல்லனும்..அப்பதான் அது என்னை விட்டு போகும்.. குரு அருள் இதற்கு வேண்டும் "

அதாவது, பேராசை இன்னும் உங்களை விட்டு போகல... இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு முயற்சி செஞ்சா, பேராசையில் இருந்து விடுதலை ஆகிடுவேன்னு சொல்லுவீங்கன்னு தெரியும்... இப்படி ஒன்றை வெல்ல முயல்வதால், எதையாவது புரிந்து கொள்ள முடியுமா...?

ஒன்றை வெல்வது வேறு..ஒன்றை புரிந்து கொள்வது வேறு... ஒன்றை வென்று விட்டாலும் கூட, மீண்டும் மீண்டும் அதனோடு போராடி வென்று கொண்டே இருந்தாக வேண்டும்... ஆனால், ஒன்றை நன்றாக புரிந்து கொண்டால், அதில் இருந்து விடுதலை கிடைக்கும்...

அனால், ஒன்றை மறுப்பது, எதிர்ப்பது என்பது சுலபமானது ...

உண்மையில், இப்போது பேசி கொண்டு இருக்கும் எதையும் நீங்கள் கவனிக்கவில்லை... நீங்கள் உங்கள் குருவிடம் கற்று கொண்ட விஷயங்கள் , இப்போது அதற்கு எதிராக சொல்லலப்படுவதை எதிர்கிறது

" ஒரு விதத்தில் பார்த்தல், நீங்கள் சொல்வது சரி... அனால், இன்னொரு விதத்தில் பார்த்தல், நீங்கள் சொல்வதை ஏற்க முடியல "

நீங்கள் இவ்வளவு நேரம் பேசியதை, கவனிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது... இப்போது சொல்ல பட்டதையும், முன்பு நீங்கள் கற்ற விஷயங்களையும் ஒப்பிட்டு பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்

" ஆமா ..அதில் என்ன தப்பு... என் அறிவு, நான் படித்த புத்தகங்கள், என் குரு - இதை எல்லாம் நீங்க சொன்னதுக்காக தூக்கி எறிய முடியாது ..ஆனால், இதெல்லாம் தேவையில்லைன்னு தோணுது..ஆனாலும் என்னால தூக்கி எறிய முடியல "

உண்மை என்னனு தெரிஞ்சதக்கு அப்புறமும், பழையவற்றை ஒரு கடமைக்காக பின் பற்றும் போது, உங்களுக்குள் தீவிரமான போராட்டம் நடந்து கொண்டே இருக்கும்... கண் முன் இருக்கும் உண்மையை உணர்வதுதான், விடுதலை உணரவை தர முடியும்...

ஒரு பெரிய தலைவரை, குருவை பின்பற்றுவதால் கிடைக்கும் பெருமைக்காக ( ஒரு கிளிகிளுப்புக்காக ) அவர்களை உருவாக்குகிறீர்கள் .. இந்த பெருமைக்காக, எவ்வளவு சோதனைகளையும், அவமானங்களையும் தாங்க தயாராகிறீர்கள்... இப்படி தியாகம் செய்வது உங்களுக்கு பெருமை தருகிறது ( தலைவர்களுக்காக தீக்குளிக்கும் தொண்டர்கள், சிறை செல்லும் தொண்டர்களை யோசியுங்கள் )..அதே போல, இப்படி பட்ட சிஷ்யர்களை பெற்ற குருவுக்கும் , இது ஒரு வித பெருமையை தருகிறது..

இருவரும் ஒருவரை ஒருவர் பயன்படுத்தி கொள்கிறீர்கள்... இதன் மூலம் ஒரு போதும் உண்மையை அடைய முடியாது... ஒரு போதும் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியாது...

Saturday, May 1, 2010

குஷ்பூ வுக்கு நீதி கிடைத்தது... தமிழ் பெண்களுக்கு ? - மறந்து போன உண்மைகள்



(இந்த படம் , ஆபாசமாக இருக்கிறது என பெண்கள் அல்லது பெண்மையை மதிக்கும் ஆண்கள் என் மேல் கோப பட்டால், மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்...

தமிழ் பெண்களை பற்றி இவர்க்கு என்ன தெரியும் என்ற கருத்தை வலியுறுத்துவதுதான் என் நோக்கம்... பிடிக்கவில்லை என்றால், படத்தை எடுத்து விடுகிறேன் ).)


கற்பு விஷயத்தில் கருத்து சொன்னதற்காக, குஷ்பூ மேல் தொடரப்பட்ட வழக்கில் குஷ்பூவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து இருக்கிறது....

கடும் போராட்டங்கள், நேர செலவு, பண செலவு இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தன கருத்து உரிமையை , குஷ்பூ நிலை நாட்டி இருக்கிறார்.... அதே போல, திருமணத்துக்கு முன் பாலுறவு கொள்வது தவறில்லை என நீதி மன்றத்தையே சொல்ல வைத்து, இந்த விஷயத்தில் ஒரு சட்ட தெளிவை ஏற்படுத்த உதவி இருக்கிறார்..எந்த வகையில் இது ஒரு திருப்பு முனை தீர்ப்பு.வராலற்று சிறப்பு மிக்கது....

அவர் அப்படி பெட்டி கொடுத்த போது, கோபப்பட்ட சில பெண்கள் தங்கள் எதிர்ப்பி தெரிவித்தது காட்டு மிராண்டி தனம் என இப்போது உறுதி ஆகிவிட்டது..... ஒரு வேலை தமிழ் பெண்களை , குஷ்பூ இழிவி படுத்தி இருந்தாலும், அந்த பெண்கள், வழக்க் போட்டு இருக்கலாம்.அல்லது வலை பதிவு எழுதி இருக்கலாம்.. போராடியது முட்டாள்தனம்....

இப்படியெல்லாம், பலர் கருதிகிரார்கள்...

இவர்கள் அடிப்படை பிரச்சினையை புரிந்து கொள்ள வில்லை...


கல்யாணத்துக்கு முன் பாலுறவு தவறு என்ற எந்த சட்டமும் இந்தியாவில் இல்லை....

பாதுக்கபான உடலுறவு என்பதைத்தான் அரசு விளம்பரங்கள் வலியுரித்துகின்றன.... ஆக, குஷ்பு இந்த கருத்தை பேசியது சட்டப்படி தவறு இல்லை என்பது உண்மைதான்.. தீர்ப்பு இப்படி வந்தது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை... அவர் புரட்சி ஒன்றும் செய்து விடவில்லை...

உண்மையில் அப்போது என்ன நடந்தது என்ன ?

ஒரு பத்திரிகை, சர்வே எடுத்தது... பெண்கள் திருமணத்துக்கு முன் பாலுறவு கொள்கிறார்களா. என்பது கேள்வி...

குஷ்பூவின் கருத்து கேட்க பட்டது.... அவர் " திருமணத்துக்கு முன் பாலுறவு தவறில்லை.... பெர்டோகள் இதை எதிர்க்க கூடாது... பாதுகாப்பாக இருப்பது பற்றி அறிவுரை சொல்ல வேண்டும் " என்றார்... இதை சிலர் ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம்... அனால், அது கருத்து சுதந்திரம்.... ஒன்றும் செய்ய முடியாது...

அனால், இந்த கருத்தை ஏற்காத சிலர் அவருடன் வாதம் செய்தனர்... அப்போது அவர் " தமிழ் பெண்கள் எல்லோரும் திருமணத்துக்கு முன் பலருடன் பாலுறவு கொள்கிறார்கள்... இது இயல்பான ஒன்றாக மாற்றிவிட்டது... இப்போது போய் என்னுடன் வாதம் செய்வது அபத்தமாக இருக்கிறது " என்று சொல்லி விட்டார் ( அல்லது அவர் சொன்னதாக செய்தி பரவியது )

இதுதான், ஒழுக்கமாக வாழும் , சாமான்ய பெண்களை கோப படுத்தியது.... அவர்களுக்கு வழக்கு பற்றியோ, வலை பதிவு பற்றியோ தெரியாது... தங்களை இழிவு படுத்தி விட்டார் என்ற தார்மீக கோபத்துடன் தங்கள் எதிர் வினையை காட்டினர்.... ஒழுக்கமாக வாழும் ஒரு பெண்ணை, நீ பலருடன் திருமத்துக்கு முன் குஜால் செய்தாய் என்று சொன்னால், அவர் செருப்பை திக்குவது நியாயமா என ஒரு பெண்தான் சொல்ல முடியும் ,..அனால், இந்த ஆணாதிக்க சமுகம , அந்த பெண்கள் செய்தது தவறு என முத்திரை குத்தியது/..

பிரச்னை கிளம்புவதை உணர்ந்த அரசியல் கட்சிகள் சில, அந்த பெண்கள் சார்பாக நின்றன,,,, குசு தன தவறை உணர்ந்து அழுதெல்லாம் பேட்டி கொடுத்தார்... குஷ்பூவுடன் லாவணி பாட அந்த பெண்களுக்கு நேரமோ , பணமோ இல்லாததால், அவர்கள் அத்துடன் அந்த பிரச்னையை விட்டு விட்டனர்....

அனால், இதி இறங்கிய கட்சிகள், அப்படி விடுவது மான பிரச்சினை என்ற நிலையில் வழக்கு தொடர்ந்தன... அனால், தமிழ் பெண்களை இழிவு படுத்தி குஷ்பூ பேசியதற்கு ஆதாரம் இல்லாத நிலையில், வழக்கு வெற்றி பெறாது என்பது தெறித்த நிலையில், தீவிர ஆர்வம் யாருக்கும் இல்லை...

எல்லோருக்கும் தெரிந்த, விஷயமான, பாதுகாப்பான உடலுறவு என்பத்தைதான் தான் பேசினேன் ...
.இதில் சட்டப்படி தவறு இல்லை என வழக்கிட்டு குஷ்பூ வெற்றி பெற்று விட்டார்...

இதில் , அவரது வீரமோ, நேர்மையோ எங்கு தெரிகிறது? அவரது புத்தி சாலித்தனம் தான் தெரிகிறது....

அனைவரும், அவர் வெற்றியை கருத்து சுதந்திரத்தின் வெற்றி என கொண்டாடுகின்றனர்....

இப்போது அவர் சொல்லும் கருத்தை யாரும் அப்போது எதிர்க்கவில்லை என்பதை பலர் மறந்து விட்டனர்...

தமிழ் பெண்களை இழிவு படுத்தி அப்போது அவர் பேசியதுதான் ( அல்ல்லது அவர் பேசியதாக வெளியான செய்திதான் ) சாமான்ய பெண்களை கோப படுத்தியது...

குஷ்பூ அந்த கருத்தை காப்பாற்ற போராடி கருத்து சுதந்திரத்தை நிலை நாட்டவும் இல்லை... அல்ல்லது தெளிவான அறிக்கை மூலம் மன்னிப்பு கேட்கவும் இல்லை...

சுற்றி வளைத்து ஏதோ பேசி தப்பித்து விட்டார்...

அவருக்கு நீதி கிடைத்து இருக்கலாம்.... அனால், அவரால் இழிவு படுத்தபட்ட, அனால் அவரளவுக்கு பணமோ , வசதிகளோ , ஆதரவோ இல்லாத சாமான்ய தமிழ் பெண்களுக்கு நீதி கிடைத்து இருக்கிறதா ??

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா