Sunday, October 30, 2011

கத்தியின்றி ரத்தமின்றி ( சவால் சிறுகதை 2011 )



                          ன் பெயர் ரா. . .  நான்  ** யில்  இருக்கும் வடக்கு வீதியில் வசித்து வரும் அழகான 17 வயது வாலிபன்.  நான் சாலையில் செல்லும் போது எல்லா பெண்களும் என்னை சைட்  அடிப்பார்கள்.  நானும்  ..  ஆனால் எந்த பெண்ணுடனும் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே சும்மா சைட் அடிப்பதும்  , சில நேரங்களில்..  


    இந்த நேரத்தில் ஒலிக்க தொடங்கிய செல் போனை எரிச்சலுடன்  முறைத்து விட்டு, மீண்டும் கதையை  படிக்க தொடங்கினான் சூர்ய பிரகாஷ்   கோகுல்.. சுருக்கமாக எஸ் பி கோகுல்

     .. அடிப்பதுமாக வாழ்க்கை என்று கொண்டிருந்தது.. அப்போதுதான்  எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது. பக்கத்து வீட்டில் புதிதாக ஒரு ஆண்ட்டி குடியேறினார்கள்.. பார்த்ததுமே முடிவு செய்து விட்டேன்.. இவரை பார்த்தால் மட்டும் போதாது.. ஓ.. 


மீண்டும் அலைபேசி ஒலித்தது..  புதிய எண்ணாக இருந்தது.. யார் தொந்தரவும் இருக்க கூடாது என நினைத்து , இந்த பாழடைந்த கட்டடத்தில் வந்து அமர்ந்தால் , போன் இம்சிக்கிறதே.. ஆஃப் செய்து வைக்கவும் முடியாது .. நண்பர்கள் அழைக்க கூடும்.. மீண்டும் ரிஜக்ட் பட்டனை  அழுத்தி விட்டு  தொடர்ந்தான்.
இந்த இடத்தில் அந்த ஆண்ட்டியை பற்றி வர்ணிக்காவிட்டால், கடவுள் என்னை மன்னிக்க மாட்டார்.. சிவந்த நிறம்.. பெரிய கண்கள்.  எடுப்பான  நாசி.. ரோஜா இதழ்கள்.. சங்கு கழுத்து. மலையா என மலைக்க வைக்கும் ..


மீண்டும் அழைப்பு .. ரிஜக்ட்

முடிவு செய்து விட்டான்.. (மீண்டும் அழைப்பு .. ரிஜக்ட்)
த்தா இவளை (மீண்டும் அழைப்பு .. ரிஜக்ட்)ணும் இல்லைனா. (மீண்டும் அழைப்பு .. ரிஜக்ட்)த்தவன்  ..



மீண்டும் அழைப்பு. எரிச்சலின் உச்சிக்கு சென்றான் கோகுல்..அக்செப்ட் பட்டனை தட்டி பேசினான்.

“  ஹலோ. யாரு ? “

எதிர் முனையில் ஆண் குரல்.

“ மிஸ்டர் கோகுல் .. நான் யார் என்பது முக்கியமன்று..  என்னை நம்பினால் நல்லது நடக்கும்.. உங்களை காப்பாற்ற போறவன் நான்.அதனால என் பெயர் காக்கும் கடவுள் விஷ்ணு என  வேண்டுமனால் வைத்து கொள்ளுங்கள். உடனே அந்த இடத்தை விட்டு ஓடு ங்கள்“

லைன் கட் ஆனது..

வியர்த்து போனான் கோகுல்..

யாரேனும் சும்மா மிரட்டுகிறார்களா?
ஆனால் அந்த குரலின் தீவிரம் யோசிக்க வைத்தது

சட் என முடிவு எடுத்து, அந்த இடத்தில் இருந்து ஓட தொடங்கினான்..
சில அடிகள் ஓடி இருப்பான்..பெரும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான்.
சற்று முன் அவன் அமர்ந்து இருந்த கட்டடம் இடிந்து விழுந்து கொண்டு இருந்தது.

             நாளைக்கு எக்சாமை வச்சுக்கிட்டு படிக்காம படுத்துகிடக்கான் பாரு உன் பையன் “ அப்பா அம்மாவிடம் சீறுவது கேட்டது. படிக்கும் மூடு வரவே இல்லை. அந்த  போன் காலும் , கட்டடம் இடிந்து விழுந்ததும் மனதில் இருந்து அகலவே இல்லை. பாழடைந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் ஆச்சர்யம் இல்லை  . இடிந்து விழும் நிலையில் உள்ள கை விடப்பட்ட கட்டடம்தான்.. ஆனால் அந்த அழைப்பு வந்ததுதான் ஆச்சர்யமாக இருந்தது...

   அலை பேசி சிணுங்கியது. அதே எண் !!

  சற்று தயக்கத்துடன் எடுத்தான்.
“.. உடனே பேப்பர் பேனா எடுத்துகிட்டு, நான் சொல்வதை எழுதுங்கள் “
யோசிக்ககூட நேரம் இல்லாமல் பேப்பர் பேனா எடுத்து , விஷ்ணு சொல்வதை எழுத தொடங்கினான்.. எல்லாம் தேர்வு கேள்விகள்

                          “பொறுப்பில்லாத பையன்னு நினைச்சோம்.. ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடுத்து இருக்கிறானே “ அப்பா வுக்கு பயங்கர பெருமை
அது வரை பொறுப்பின்றி சுற்றிக்கொண்டிருந்த சுற்றிக்கொண்டு இருந்த  கோகுல் பொறுப்புள்ளவனாக மாறிப்போனான்.

இதனால் ஆசிரியர்களிடன் நல்ல பெயர் கிடைத்தது..ஆனால் பழைய 
நண்பர்கள் விலகத் தொடங்கினர்.


            வன் ஊர் சுற்றியபோதும், இப்போது பொறுப்புள்ளவனாக மாறி விட்டபோதும், அவனிடம் அன்பாக இருக்கும் ஒரே ஜீவன் அவன்   ஆங்கில ஆசிரியர் தாமஸ்தான்
“ சார்.. எனக்கு படிப்பை விட ஓவியத்துல ஆர்வம் அதிகம்.. அதை புரிஞ்சுக்காம படி படி னு வீட்ல டார்ச்சர் பண்றாங்க. அவங்க எனக்கு நெருக்குதல் கொடுக்காம இருந்தா , ஓரளவாவது படிப்பேன்.. ஆனால் அவங்க கொடுக்க்ற டார்ச்சர்ல, புத்தகத்தை எடுத்தாலே வெறுப்பா இருக்கு “
அவன் தோள் தட்டி ஆறுதல் சொல்வார் தாமஸ்..
அவரால்தான் கொஞ்சமாவது படித்தான்.. ராபட் ஃப்ராஸ்ட் , ஷேக்ஸ்பியர் என அவர் நடத்தும் பாடங்கள் மட்டும்தான் கொஞ்சமாவது மண்டையில் ஏறும் .

கவிதையை எப்படி அணுக வேண்டும் என அவர்தான் சொல்லிகொடுத்தார்..


If you can keep your head when all about you 
Are losing theirs and blaming it on you,
If you can trust yourself when all men doubt you,
But make allowance for their doubting too;


என்று ஆரம்பிக்கும் கவிதையை வாசித்து காட்டினார்.

  உன்னை , உன் திறமையை மற்றவர்கள் நம்பாவிட்டால் பரவாயில்லை.. நீ உன்னை நம்பு . யாரும் நம்பாத காலத்திலேயே அவனை நம்பினார் அவர்.
அவருக்கே கூட இவனது இனிய மாற்றம் ஆச்சரியம்தான்..
        வரைத்தவிர அவனை நேசித்த இன்னொரு ஜீவன் காயத்ரி..  கூட படிப்பவள்..
அவனை ஏன்  நேசித்தாள் என அவனுக்கு புரிந்ததே இல்லை..
சிலர் காதல் சுகமானது என்பார்கள்.. ஆனால் உண்மையில் இனிமையானது நட்புக்கும் காதலுக்கும் இடைப்பட்ட கால கட்டம்தான்.. அதை நன்கு அனுபவித்தான் அவன்.
“ கோகுல்.. இடிந்த கரைக்கு ஒரு நாள் போகணும்.. கூட்டிக்கிட்டு போவியா ? “   திடீரென ஒரு நாள் கேட்டாள்.

 அவள் சொன்ன அணு சக்தி, போராட்டம் என்பதெல்லாம் அவனுக்கு புரியவில்லை.. ஆனால் அவளுக்காக போக விரும்பினான்.
“ எப்போது போகலாம் “

வீட்டில் அமர்ந்து யோசித்து கொண்டு இருந்த போது செல் சிணுங்கியது.
விஷ்ணு இன்ஃபார்மர் காலிங்.

 “   மிஸ்டர் கோகுல்.. இந்த நேரத்தில் பேசுவதற்கு மன்னிக்கவும்.. நீங்க இடிந்த கரை போவது எனக்கு பிடிக்கல.. போக வேண்டாம்..  “ லைன் கட் ஆனது.
முதல் முறையாக விஷ்ணு மேல் சற்று வருத்தம் ஏற்பட்டது. ஆனாலும் அவர் பேச்சை தட்ட முடியாது.

“” காயு.. இடிந்த கரை இப்போ வேணாம். இன்னொரு நாள் கண்டிப்பா போகலாம்.. ஸ்கூல் சார்பா பிக்னிக் கூப்பிட்டு போறாங்க.. நாம அவங்க கூட போகப்போறது இல்ல.. போறதா  வீட்ல சொல்லிட்டு, நாம ரெண்டு மட்டும் தனியா இன்னொரு இடத்துக்கு போறோம்.. நிறைய பேசணும்”
*****
            லக்கில்லாமல் சுற்றி திரிந்தார்கள்.. அவள் அருகாமையே போதுமானதாக இருந்தது.
பஸ் ஸ்டாண்ட் டாய்லெட்டிற்கு போய் இருந்தாள் அவள் ,அவனிடம் அலைபேசியை கொடுத்து விட்டு.. போன் சிணுங்கியது.. அவள் வீட்டில் இருந்து.. பல மிஸ்டு கால்கள் வந்து இருந்தன.. போனை எடுக்க , பார்க்க அவர்களுக்கு எங்கே நேரம் இருந்தது.
ஏதாவது சீரிய்ஸ் மேட்டரோ. அக்சப்ட் பட்டனை  அழுத்தி விட்டு, பேசாமல்  யார் பேசுவது என கேட்டான்.
“ அய்யோ காயத்ரி.. எங்கே போய்ட்ட. உன்  அம்மா போய்ட்டாங்கடீ.. ரோட் ஆக்சிடண்ட். உன் ஸ்கூல் டூர் நீ  போகலையாமே.. எங்கேடி போய்ட்ட”   இணைப்பு கட் ஆனது.
அதிர்ந்தான் கோகுல்.
இந்த நேரத்திலா இப்படி ஆக வேண்டும்.
உற்சாகமான முகத்துடன் காயத்ரி வந்தாள்..
“ சரிப்பா.. வீட்ல தேடறதுக்கு முன்னாடி வீடு போய் சேரணும் ..போகலாமா? “
வீடு போனதும் இவள் சந்திக்க வேண்டிய துக்கத்தை நினைத்து பார்க்கவே முடியவில்லை.. இவள் அழுது பார்த்ததில்லையே.. இவள் அழவே கூடாது.
இல்லை.. அழுதுதான் தீர வேண்டும்.. ஆனால் முடிந்த அளவு அந்த சோதனையை தள்ளி போடலாம்.
“ காயு.. போகலாம் .அதற்கு முன்  ஒரு படம் பார்த்துட்டு  போய்டலாம்”
போன் அவள் கைக்கு போகாமல் பார்த்து கொண்டான். வடிவேலு நகைச்சுவைக்கு அவள் விழுந்து விழுந்து சிரித்ததை பார்த்து அழுகைதான் வந்தது.
ஸ்கூல் பிக்னிக் முடியும் நேரத்தை கணக்கு செய்து கச்சிதமாக ஊருக்கு வந்து விட்டார்கள்.

“என் போனை எங்கே வச்சேன்..”  நினைவு வந்து பையில் இருந்து எடுத்தாள்.
எத்தனை மிஸ்டு கால்.. லேசாக பதறினாள்..
“  கால் எதுவும் அடெண்ட் செஞ்சியா? “
ஆமா.. அது வந்து..
அதற்குள் இன்னொரு கால் வந்து அட்டெண்ட்ட் செய்தாள்.
அவள் முகம் வெளிறியது. உடல் நடுங்க தொடங்கியது..
கண்ணீருடன் அவன் பக்கம் திரும்பினாள்.
“இது உனக்கு முன்னாடியே தெரியுமா?”
“ தெரியும்..ஆனா...”
“ தெரிஞ்சுதான் படத்துக்கு கூப்பிட்டியா.. ஸ்வீட் சாப்பிட கூப்பிட்டியா.. என் உணர்வுகளை விட உல்லாசம்தான்  பெருசா போச்சா”
“ப்ளீஸ்..அப்படிஇல்லை”
“ இனி என் முகத்துல விழிக்காதே”
 கதறலுடன் வீட்டை நோக்கி ஓடினாள்.

                 ரு நல்ல உறவு அறுந்து விட்டதே. விஷ்ணு மேல் சந்தேகம் வரத் தொடங்கியது. யார் அவன்.  எனக்கு நல்லது செய்கிறான். கை மாறாக எதுவும் கேட்பதில்லை. சின்ன சின்ன உத்தரவுகளை போட்டு அதை செய்யும்படி சொல்கிறான். இன்னிக்கு ஸ்கூல் போகாதே.. நான் சொல்லும் புத்தகம் படி. அவளுடன்  பேசாதே. என்பது போல. இதனால் அவனுக்கு என்ன லாபம்.
அவன் என் வாழ்வில் வந்தது வரமா சாபமா?

இதற்கு முடிவு கட்ட வேண்டும்.

போன் அடித்தது.. விஷ்ணு இன்ஃபார்மர் காலிங்.  முக்கிய தகவல்கள் தருவதால் இப்படி ஸ்டோர் செய்திருந்தான்.

“ மிஸ்டர் கோகுல் “..உங்க அட்மின்  ரூம் கணினில 14ந்தேதி  ஒரு மெயில் வந்து இருக்கு..அதைப் பற்றி விபரம் தேவை.அட்மின் ரூம் கணிணியின் பாஸ் வோர்ட்  எஸ் எம் எஸ் பண்றேன் “

“ மன்னிக்கணும் விஷ்ணு.. உங்களை பார்த்து பேச ஆசைப்படுறேன்.. அதன் பின் தான் இனி உங்களுக்கு கட்டுப்படுவேன் “

“ என்னை கேள்வி கேட்காமல் நம்பினால்தான் பிடிக்கும். சரி..உங்க மனசுல சந்தேகம் வந்துருச்சு..  நாளைக்கு கெ கெ பொறியியல்  கல்லூரி, கெமிக்கல் பிரிவு, ஜெ 19  ஹாலுக்கு வாருங்கள்..உங்கள் சந்தேகம் தீரும் “

              ங்கே சென்றபோது  யாரும் இல்லை.
வெயிட் செய்து விட்டு கிளம்பி இருப்பானோ?
சில துண்டு சீட்டுகள் கிடந்தன..
எல்லாம் விஷ்ணு சிலருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள்.  அவன் இங்குதான் இருந்து இருக்கிறான்.

பிரிண்ட் எடுத்து பார்த்து கொண்டிருக்கிறான்.. நாம் வந்ததும் ஏன் கிளம்பினான்?

புரட்டிப்பார்த்தான். சம்பந்தமில்லாத சீட்டுகளை கிழித்து எறிந்தான். கடைசியில் இரண்டு சீட்டுகள் மிஞ்சின. படித்து அதிர்ந்தான்.

“ விஷ்ணு எனக்கு ஏன் தவறான பாஸ்வோர்ட் அனுப்பவேண்டும். ? “




போன் அடித்தது.


விஷ்ணு காலிங்..
ரிஜக்ட் பட்டனை அழுத்தினான்..
“ இல்லை.. இனி மேலும்  இதை .. “ . . .

“  . . தொடரக்கூடாது என  முடிவு செய்து எனக்கு கால் செய்தான்.. நேரில்  வந்து  பேச சொன்னேன்.. நீங்களும் பக்கத்தில் இருந்தால் நல்ல இருக்கும்னுதான் உங்களையும் வர சொன்னேன் “
 கோகுல் சொன்னதையும் தாமஸின் முடிவுரையையும் கேட்ட மன நல நிபுணர் முஸ்தஃபா கனிவுடன் கோகுலைப் பார்த்தார்.
“ நல்ல வேளை.. எல்லாத்தையும் வெளிப்படையா சொன்னியே.. குட் பாய்..சரி..கொஞ்சம் பக்கத்து ரூம்ல வெயிட் பண்ணு “
கோகுல் போனதும் , தாமஸைப் பார்த்தார்.

“ சார்.. இவன் சொன்னதை வச்சு, நீங்க என்ன நினைக்கிறீங்க ? “

“ டாக்டர்.. தனக்கு ஆதரவா யாரும் இல்லைனு நினைக்கும் சிலர், கற்பனையா ஒரு கேரக்டரை உருவாக்கி , அந்த கேரக்டர் தன்னை வழி நடத்துவதா நம்புவாங்க.. சில சமயம் இது எக்ஸ்ட்ரீமுக்கு போய் டேஞ்சர் ஆகும்.. மத்தபடி இது உபத்திரவம் இல்லாதது... விஷ்ணு ஒரு கற்பனை பாத்திரம்னு நினைக்கிறேன். விஷ்ணு இவனிடம் பேசியதை பார்த்தவர்கள் யாரும் இல்லை “
“ “ சார்.. எல்லாம் விதிப்படி நடக்கும்னு நினைப்பது ஒரு  மூட நம்பிக்கைனா, எல்லாம் அறிவியல்படி நடக்கும்னு நினைப்பது இன்னொரு மூட நம்பிக்கை.. அறிவியலுக்கு  அப்பாற்பட்ட விஷயங்களும் உண்டு.

இந்த கேஸ் நீங்க சொல்ற மாதிரியும் இருக்கலாம்.. இன்னொரு  வாய்ப்பும் இருக்கு.. அதுதான் ஸ்பேஸ் அட்டாக்.. வேற்று கிரக வாசிகள் பூமி மேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கு என்பது விஞ்ஞானிகளின் சந்தேகம்.. ஆனால் இந்த தாக்குதல்  ஹாலிவுட் சினிமாவில் காட்டுவது போல , வினோதமான ஆயுதங்கள் மூலம் நேரிடையாக நடக்காது..கத்தியின்றி ரத்தம் இன்றி இந்த யுத்தம் நடக்கும்.

கனவுகள்  மூலமோ, உள்ளுணர்வுகள்  , காரணம் காட்ட முடியாத புதிய சிந்தனைகள் மூலமோ சிலரை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து , அதன் மூலம் தம் செயல்களை செய்வார்கள். படிப்படியாக நம்மில் சிலர் மூலமே பூமியை அழிப்பார்கள்.  விபரீத கண்டுபிடிப்புகள் நம் மூளையில் உருவாக காரணம் இதுவாக கூட இருக்கலாம்..
இடிந்த கரை மேட்டரை கோகுல் சொன்னதும் விஷ்ணு ஆஃப் ஆனதுதான் என் சந்தேகத்தை கிளப்பியது. பூமியை அழிக்கும் செயலுக்கு எதிரான போராட்டம் அவனுக்கு ஏன் எரிச்சலை கிளப்ப வேண்டும்? கோகுலின்  நம்பிக்கையை சோதிக்கத்தான் , அந்த துண்டு சீட்டுகள் . கோகுல் நம்பவில்லை என்பதால் இனி ”விஷ்ணு ” கோகுலை தொடர்பு கொள்ள மாட்டான் . நம்பி இருந்தால் ஒரு அணு சக்தி விஞ்ஞானியாக கோகுல் உருவாகி இருக்க கூடும்

ஆனால் இதுவெல்லாம் யூகம்தான்.. பையனை   வீட்டுக்கு அனுப்பி வைங்க.. என்ன பிரச்சினைனு பார்க்கலாம் “
கிளம்பினார் முஸ்தஃபா..

அவரை அனுப்பி விட்டு லேப் டாப்பில் மெயில் செக் செய்த தாமஸ் வியப்பில் விழி உயர்த்தினார்.

“ சார்” கோகுல் குரலைக் கேட்டதும்தான் அவனை அதிகம் காக்க வைத்து விட்டதை உணர்ந்தார்.

“  உன் விஷயமா பேசிட்டேன்..     நீ உடனே புறப்பட்டு அவர் வீட்டுக்கு போ.. நல்லது நடக்கும்..சீக்கிரம் போ. என்  பைக்கை எடுத்துக்க. பஸ்ல போனா நேரம் ஆயிடும்.. பை பாஸ்ல போ.சீக்கிரம்.. ஆல த பெஸ்ட் “

அவன் கிளம்பி சென்றதும் , இன்னொரு  முறை மெயிலை படிக்க ஆரம்பித்தார்.
“ டியர் மிஸ்டர் தாமஸ்..நான் யார் என்பது முக்கியம் இல்லை.. நான் உங்கள் நண்பன்..என்னை நம்பினால் நல்லது நடக்கும்.. காக்கும் கடவுள் விஷ்ணு என்பதையே என் பெயராக வைத்து கொள்ளுங்கள்.. அல்லது வேறு பெயர் வைத்து கொள்ளுங்கள்..ஏன் எதற்கு என கேட்காமல் உடனே இரண்டு விஷயங்கள் செய்யுங்கள்..1. அந்த கோகுலை அதி விரைவாக முஸ்தஃபா  இல்லம் போக சொல்லுங்கள்.. பை பாஸ் சாலையில், ஹெல்மெட் இல்லாமல் செல்ல வைப்பது உங்கள் சாமர்த்தியம்2. நான்  எஸ் எம் எஸ்அனுப்பும் நிறுவனத்தின் ஷேர்களை கண்ணை மூடிக்கொண்டு வாங்குங்கள். சொத்து முழுதும் விற்றுக் கூட வாங்குங்கள். என்னை  நம்புவது உங்களுக்கு  எளிதுதான்.. என்னை நம்பியவரை நான் கோகுலுக்கு செய்த நன்மைகளை சொல்லி இருப்பானே..அன்புடன் ,விஷ்ணு
“ அய்யோ.என்னங்க.. நம்ம பைக் ஆக்சிடண்ட் ஆயிடுச்சாம்.. கோகுல் .ஆஆ “ அலறிய மனைவியின் சத்தம்கூட கேட்காமல் , ஷேர் விவகாரத்தில் மூழ்கியிருந்தார் தாமஸ்.
************************************************
சில ஆண்டுகளுக்கு பிறகு.

  திரு.தாமஸ் அவர்களுக்கு நல்லாசியர் விருது வழங்கப்பட்டது. இவர் அணு சக்தி ஆதரவு பிரச்சாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது - செய்தி 

புத்தர் சிரிக்கிறார் ( சவால் சிறுகதை 2011 )



பூட்டை உடைத்து உள்ளே சென்ற அவர்களை , போட்டோவில் இருந்த  புத்தர் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்இறைந்து கிடந்த புத்தகங்கள்பீர் பாட்டில்கழுவப்படாத பாத்திரங்கள் ,  , ம்யூசிக் சிஸ்டம் என ஒரு பேச்சுலர் ரூமுக்கு உரிய அம்சங்களுடன் அந்த அறை இருந்த்து.

            ” சார்.. எங்களை ஏன் அவசரமா வர சொன்னீங்கஇந்த அறையில என்ன செய்ய போறோம் ? “ இளைஞன் ஒருவன் கேட்டான்.

 சாகுல் ஹமீது அவனை கனிவாக பார்த்தார். “ என்ன விஷ்யம்னு தெரியாம , உடனே கிளம்பி வந்தியேஅந்த நம்பிக்கையை நான் பெரிய கவுரமா நினைக்கிறேன்இங்கே வந்து இருக்குற மத்தவங்களுக்கு என்ன விஷ்யம்னு ஓரளவு சொல்லிட்டேன் . உனக்கு மட்டும்தான் இன்னும் சொல்லல.. தம்பி ரவி..என்ன விஷ்யம்னு இவனுக்கு கொஞ்சம் சொல்லு “


 இருக்கையில் அமர்ந்தார் சாகுல்.

ரவி பேச ஆரம்பித்தான்.

  “ இந்த அறையில் வசித்து வந்தவன் விஷ்ணுமர்ம்மான முறையில்  மருத்துவ மனைல இறந்துட்டான்ஏனோ தெரியலஇவன் மரணத்தை  ரகசியமா வச்சு இருப்பதில் அரசு இயந்திரம் தீவிரமா இருக்குமுன்னாள் காவல் துறை அதிகாரி என்ற முறையில் சாகுல் சாருக்கு இது தெரிஞ்சு போச்சுஅவனோட அதிகார பூர்வ இல்லம் போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்குஇது அவன் தனிப்ப்பட்ட நண்பர்கள்இலக்கிய சந்திப்புக்கு  பயன்படுத்திய அறைஇது வேற யாருக்கும் இது வரை தெரியாதுஇதை சோதனையிட்டா ஏதேனும் விஷ்யம் கிடைக்குமா அப்படீனு பார்க்கத்தான்நம்மை மாதிரி சில நம்பிக்கையான இளைஞர்களுடன் சாகுல் சார் இங்கே வந்து இருக்கார் “

சாகுல் ஆமோதிப்புடன் தலை அசைத்தார்.

“  நான் நேத்தே இங்கு வந்து பார்த்துட்டேன்என் ஒருவனால இங்கே இருக்கும் எல்லா பேப்பர்களையும் படிக்க முடியலஅதனாலதான் உங்களை கூப்பிட்டேன்அவன் தன் தகவல் தொடர்புகள் எல்லாத்தையும் பிரிண்ட் எடுத்து வச்சு இருக்கான்,. தனக்கு வந்த கடிதங்கள் மட்டும் இல்லாமல் , தான் அனுப்பிய கடிதங்களையும் பிரிண்ட் எடுத்து வைத்து இருக்கிறான். போன் உரையாடலை ரிக்கார்ட் செஞ்சு வச்சு இருக்கான்.. இதை வச்சு உண்மை அறிவது நம் நோக்கம் ஓகே?”

 ” ஓக்கே சார்டீவியை கொஞ்சம் ஆன் பண்ணுங்ப்பா . அதையும் ஒரு பார்வை பார்த்துக்கலாம்நான் புத்தக செக்ஷன் பார்க்குறேன் . ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்கோங்கப்பா

“ இங்கே ரெண்டு துண்டு சீட்டு கிடக்கு.. என்ன அர்த்தம்னு தெரியலஒரு போன் வேற இருக்கு “
“ எதையும் அலட்சியப்படுத்தக்கூடாதுஅது யார் போனுனு தெரியலஇன்னொரு போன் இங்கே கிடக்குகொஞ்சம் இரு .. இந்த போன் நம்பர் என்ன்னு , இந்த போனில் இருந்து என் போனுக்கு கால் செஞ்சு கண்டு பிடிக்க்றேன். ”

“ கண்டு பிடிச்சுட்டேன்சரிநான் சொல்ற நம்பருக்கு அதில் இருந்து கால் பண்ணு. வடகரை குமார் காலிங்னு வருதுவிஷ்ணுவோட நண்பன் போல.. சரிநான் கால் பண்றேன்என்ன டிஸ்ப்ளே ஆகுதுனு பாரு




” விஷ்ணு இன்ஃபார்மர் காலிங்னு வருது. “
“ ஹேய்.. இன்ஃபார்மர்னா போலீஸ் இன்ஃபார்மர் இல்லை… அவன் நட்த்திய சிற்றிதழ்தான் இன்ஃபார்மர்இதோ என்னிடம் அதன் தொகுப்பு இருக்கு . படிக்றேன் பாருங்க
தொலைக்காட்சியில் பாராளுமன்ற விவாதம் ஓடிக் கொண்டிருக்க , இவர்கள் எல்லாவற்றையும் படிக்க ஆரம்பித்தார்கள்


******************************************************************

ன்பார்ந்த வாசகர்களேஇல்ல , நண்பர்களேவேண்டாம்சகோதர்களே.. இல்ல இல்லநண்பர்களேயே இருக்கட்டும்.
இன்ஃபார்மர் இதழின் முதல் பிரதி உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டு இருக்கிறதுஇதை நல்ல நாள் பார்த்துதான் துவக்கி இருக்கிறேன்ஆம்இந்த நாளில்தான் இந்திய திரு நாட்டின் முதல் அணுகுண்டு சோதனை நிகழ்த்தி ,  நம் திறனை உலகுக்கு காட்டினோம்என்னை வழி நட்த்தும் புத்தரின் பெயர் இதில் பயன்படுத்தப்பட்ட்து எனக்கு கூடுதல் மகிழ்ச்சிபுத்தர் சிரிக்கிறார் என்பதே இதில் பயன்படுத்தப்பட்ட ரகசிய வார்த்தை
நம் இதழில் ஆக்க பூர்வமான தகவல்கள் மட்டுமே இடம் பெறும்படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்.


******************************************************************
அன்புள்ள அம்மா,
நான் இங்கு செட்டில் ஆகி விட்டேன்என் டி டி துறையில் வேலை கிடைத்துள்ளதுஓய்வு நேரத்தில் சிற்றிதழும் நட்த்தி வருகிறேன்.
***********************************************************
அன்புள்ள விஷ்ணு,
ரொம்ப சந்தோஷம்டா.  உன் அப்பா அந்த காலத்துலயே என்னென்னவோ எழுதுவார்அதே ரத்தம்தானே நீநீயும் எழுவதில் ஆச்சர்யம் இல்லைநல்லா இருப்பாஎன்னவோ என் டீ டினு சொன்னியே.. என்ன அதுசாப்பாட்டுக்கு என்ன செய்ற?
***************************************************************
அன்புள்ள அம்மா,
என் டீ டினாதொழிற்சாலைகளில் ஒரு பொருளின் தரத்தை சோதிக்கும் ஒரு முறைவெண்டைக்காய் வாங்குனா , அதை கிள்ளி பார்த்து வாங்குறோம்இதனால வெண்டைக்காய் சேதம் ஆய்டும்தேங்காய் வாங்குனா தட்டிப்பார்த்து வாங்குவோம்இதில் தேங்காய் சேதம் ஆகாதுஇப்படி ஒரு பொருளை சேதப்படுத்தாமல் சோதிக்கும் ஒரு முறைதான் நான் டிஸ்ட்ரக்டிவ் டெஸ்டிங் , என் டி டி.
************

விஷ்ணுவின் டைரி குறிப்பு
லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லைஆனால் நேற்று நடந்த ஒரு கருத்தரங்கில் சந்த்தித்த பெண் என்னை என்னவோ செய்து விட்டாள்அவளிடம் சென்று ஹாய் சொன்னேன்ஆனால் அவள் பிசியாக இருந்தாள் . பேச இயலவில்லைகையில் இருந்த இன்ஃபார்மர் இதழ்களை கொடுத்து விட்டு வந்த்தேன்
************************************************

தோழர் விஷ்ணு அவர்களுக்கு,
என்னை உங்களுக்கு நினைவு இருக்கும் என நினைக்கிறேன்கருத்தரங்கு ஒன்றில் நாம் சந்த்தித்தோம்ஆனால் பேச நேரமில்லைநீங்கள் எனக்களித்த இன்ஃபார்மர் இதழ்களை படித்தேன்உங்கள் எழுத்தில் உங்கள் நல்லெண்ணம் தெரிகிறதுஆனால் அணு சக்தி குறித்து உங்கள் புரிதலில் சில தவறுகள் இருக்கின்றன.


தோழமையுடன் , தமிழ் ராணி
********************************************************************




அன்புடன்தமிழ்ராணி
அன்புள்ள ராணி,
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நிறைய படித்து வருகிறேன். புரிந்து கொள்ள முயல்கிறேன்
*******************************
தோழர் விஷ்ணு,
சிலவற்றை படித்து தெரிந்து கொள்ள முடியாது. அனுபவித்தில்தான் தெரிந்து கொள்ள முடியும். இன்றிலிருந்து சில  நாட்களுக்கு நம்மை சுற்றி நிகழும் சராசரி விஷ்யங்களை மட்டும்  கவனியுங்கள். அதை மட்டுமே இன்ஃபார்மர் இதழில் பிரசுரியுங்கள் நம்மை பற்றிய ஒரு புரிதலை அது அளிக்கும். அணு சக்தியை நம்மால் கையாள முடியுமா என்பதற்கும் அது விடையளிக்கும்- உங்களுக்கும், உங்கள் வாசகர்களுக்கும்.
-       த ரா
******************************************************************

படித்த்தில் பிடித்த்து..
ஒரு பிரபல பதிவரின் சமீபத்திய இடுகை உங்கள் பார்வைக்கு.

ஒரு நாள் அவசரமாக வண்டலூர்  செல்ல வேண்டி இருந்த்து. திருனீர்மலை அருகேயிருந்து கிளம்ப வேண்டிய நிலை. பல்லாவரம் வழியாக சென்றால் நேரமாகும்.. எனவே பைபாஸ் பாலத்தில் ஏறி செல்ல நினைத்தேன். அந்த பாலத்தில் ஏற , ஓர் இட்த்தை உடைத்து விட்டு இருந்தார்கள். அதன் வழியாக ஏறினேன். ஏறிய பின் , நான் வலது புறமாக செல்ல வேண்டும்.  நான் ஏறிய இட்த்தில் இருந்து வலது புறம் செல்ல முடியாது. இட்து புறம் இரண்டு கிலோ மீட்டர் சென்று , யூ டர்ன் எடுத்தால்தான் , வலது புறம் செல்ல முடியும்.  நான் எப்போதுமே அவசரக்காரன். நேரத்தை வீணாக்க மாட்டேன். எனவே ஒன் வேயாக இருந்தாலும் பரவாயில்லை என முடிவெடுத்து, ஏறிய இட்த்தில் இருந்தே வலது புறம் வண்டியை பறக்க விட்டேன். எதிர் திசையில் வந்த சிலர் என்னை முறைத்தவாறு சென்றனர். ஒரு மிடில் கிளாஸ்  பைக் ஆசாமி ஒரு கணம் என்னை எதிர்பார்க்காமல் திணறி விட்டார். என்னவோ திட்டினார். நானும் பதிலுக்கு திட்டினேன். இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் , சாலையின் எதிர்பக்கம் செல்ல , வழி இருப்பது எனக்கு தெரியும். அங்கு சென்று சரியான திசையை அடைவது என் திட்டம்.
அந்த இட்த்தில் கட் செய்கிறேன், டீக்கடையில் இருந்த ஒரு டிராபிக் போலீஸ் என்னை பாய்ந்து வந்து நிறுத்தினார். நோ எண்ட்ய்ரியில் ஏன் வந்தாய்? டாக்குமெண்ட் எடு , லைசன்ஸ் எடு என மிரட்டினான்.ங்கொய்யால, எனக்கு என்ன நோ எண்ட்ரியில் வர வேண்டும் என வேண்டுதலா? அவசர வேலை என சொல்லிப்பார்த்தேன். அவன் கேட்கவில்லை. நான் முன் கோபக்காரன்.ஆனாலும் அவசரமாக போக வேண்டி இருந்த்தால், மேலும் சண்டையை வளர்க்காமல் , நூறு ரூபாயை விட்டெறிந்து விட்டு கிளம்பினேன். ஒரு நூறு ரூபாய்க்காக இப்படி அலையும் காவலர்களை நினைத்தால் வேதனையாக இருந்த்து. இதற்காகவே அவன் டீக்கடையில் காத்து இருப்பானாம். தயவு செய்து அந்த சாலையில் செல்லும்போது , எச்சரிக்கையாக இருங்கள். ஒன் வேயில் செல்ல நேர்ந்தால், அந்த டீக்கடை அருகே கட் செய்யாதீர்கள். அதற்கு முன்பாகவே , ஓர் இட்த்தில் சாலையை பிரிக்கும் தடுப்பை உடைத்து இருப்பார்கள். அதில் ரோட்டை கிராஸ் செய்யுங்கள். முடியாத பட்சத்தில், சாலையின் கடைசி வரை சென்று , இறுதியில் கிராஸ் செய்யுங்கள்.

தமிழ் நாட்டின் பெரும்பாலான  நெடுஞ்சாலை விபத்துகளுக்கு காரணம் , பொறுப்பற்ற முறையில், ஆங்காங்கு நிறுத்தி வைக்கபடும் வாகனங்கள்தான் – ஆய்வு கட்டுரை



செல்போன் பேசியபடி தொடர் வண்டியை இயக்கி, விபத்துக்கு காரணமான ஓட்டுனர் கைது- செய்தி
***********************************************************************************
ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பேர் போன ஜப்பானிலேயே அணு உலை விபத்து நடந்தால், பொறுப்பின்மையை வீர செயலாக கருதும் இந்தியாவில் அணு உலைகள் கதி என்ன ? -  மக்கள் அச்சம்




***********************************************************
மற்றவர்களை குறை சொல்கிறீர்களே. தமிழ் உணர்வு மிக்கவராக காட்டி கொள்ளும் நீங்கள் உங்கள் இதழுக்கு இன்ஃபார்மர் என ஆங்கிலத்தில் எந்த *** ருக்கு பெயர் வைத்தீர்கள் – பிரபல பதிவர் வாசகர் கடிதம்
*********************************************
அன்புள்ள ராணிக்கு,
கடந்த சில வாரங்கள் என்னை முழுதும் மாற்றி விட்டன. அதை எல்லாம் பேச நேரமில்லை. விரைந்து செயல்பட்டு கூட்ங்குளம் திட்ட்த்தை நிறுத்தியாக வேண்டும்.  நான் உட்பட அனைத்து தமிழர்களும் , இந்தியர்களும்  ஒரு குழந்தையை போல நல்லவர்களாகவும், முதிர்ச்சி இன்றியும் இருக்கிறோம். அணு தொழில் நுட்பம் எல்லாம் இருக்கட்டும். சாலையில் செல்வது, போன் பேசுவது போன்ற அடிப்படை விஷயங்கள் கூட நமக்கு தெரியவில்லை . பொறுப்பற்ற மக்கள்,கையாலாகாத நிர்வாகம் .  இங்கு அணு உலை திட்டம் என்பது , குழந்தை கையில் துப்பாக்கி கொடுப்பது போன்றது. இன்றைய முட்டாள் தலைமுறையின்  தவறுகள் வரக்கூடிய புத்திசாலித்தலைமுறையை அழித்து விடக்கூடாது. 


வழக்கமான போராட்டம் வேலைக்கு ஆகாது. அணு உலைக்கு பாதுகாப்பு கொடுக்கும் நிலையில் நம் அரசு இயந்திரம் இல்லை என உணர்த்தும் பொருட்டு ஒரு திட்டம் தயாரித்து இருக்கிறோம்.
நண்பர்கள் சிலர் உதவியுடன் சூட்கேஸ் அணு குண்டு தயாரித்து , அனைவர் கண்களிலும் மண்ணை தூவி விட்டு, பாராளுமன்ற கூட்ட்த்தொடர் நடக்கும் போது , ஒரு பத்திரிக்கையாளராக உள்ளே எடுத்து சென்று , திடீரென எடுத்து காட்டுவோம். லஞ்சம் கொடுத்தால் எதுவும் செய்யலாம் என்ற நிலையில், யார் வேண்டுமானாலும் , அணு உலைக்கு ஆபத்து விளைவித்து தமிழ் நாட்டை அழிக்க முடியும் என்ற செய்தி அப்போதுதான் அவர்கள் மனதில் பதியும்.இதற்கு போலீஸ் அதிகாரி எஸ் பி கோகுல் உதவ இருக்கிறார்.
*******************************************************************
தோழர் விஷ்ணு,
 நான் ராணியின் சகோதரன். உங்கள் முயற்சிகளை ராணி மூலம் அறிந்தேன். ஆனால், சூட்கேஸ் அணுகுண்டை காட்டுவதுடன் நிற்க போவதில்லை. அதை வெடிக்க செய்யவும் போகிறேன் என எஸ் பி கோகுல் சொல்வதாக நெருங்கிய வட்டாரங்கள் மூலம் கேள்வி பட்டேன். அதற்கான குறியீட்டையும் கொடுத்து இருக்கிறீர்களாமே. இதனால் நமக்கு கெட்ட பெயர்தான் மிஞ்சும்.
*******************************************************
Sir,
எஸ் பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்து இருக்கிறேன். கவலை வேண்டாம் . 
*******************************************************
 


கோகுல் பாஸ்வேர்ட் கேட்டதை  மறுக்க முடியவில்லை. கொடுக்கவும் விரும்பவில்லை எனவே தவ்றான குறியீட்டை கொடுத்து அவரை சமாதானம் செய்ய முடிவெடுத்தேன். S W H2 SF இது அவருக்கு நான் கொடுக்க போவது. ஆனால் S W H2 SP என்பதே சரியானது.


********************************************************************88

அன்புள்ள ராணி,
இது நான் எழுதும் கடைசி கடிதமாக இருக்க கூடும். கதிர் வீச்சை பயன்படுத்தி , சோதனை செய்யும் ரேடியோகிராபி டெஸ்டிங்கில் நான் வேலை செய்வது உனக்கு தெரியும். சரியான பாதுகாப்பு இல்லாமல் இதில் ஈடுபட்டு, கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு விட்டேன். நான் இறப்பது உறுதி. சாவதற்கு கவலைப்படவில்லை. என் உடலை சரியான முறையில் பிரேத பரிசோதனை செய்து, அணு சக்தி எப்போதுமே அழிவு சக்திதான் என தமிழ் நாட்டுக்கு எடுத்து சொல்.


**************************************************
” ஹலோ, வடகரை கோபால் ? “
“ ஆமாண்டா விஷ்ணு. உன் ரூம்லதான் இருக்கேன் . சீக்கிரம் வா “
“ நான் வர லேட் ஆகும்டா. ஹாஸ்பிடல் போறேன். என் மேஜை டிராயர்ல , ஒரு கவர் இருக்கும். அதை எஸ் பி கோகுல் சாரிடம் சேர்க்கணும் “
“ டேய் . இதில் ரெண்டு கவர் இருக்கு ..எந்த கவர் ? “
“  சிவப்பு கலர் கவர்.. ஊதா மையில் முக்வரி எழுதி இருக்கும். அதைத்தான் கொடுக்கணும். ஊதா கலர் கவர்ல, சிவப்பு மைல அட்ரஸ் எழுதுன கவர் அங்கேயே இருக்கட்டும்.  கொடுக்க வேண்டியது சிவப்பு கவர், சிவப்பு மை- சாரி- ஊதா அட்ரஸ். ஊதா கவர், சிவப்பு மை அட்ரஸ் அங்கேயே இருக்கட்டும் “


************************************************************************
சாகுல் பெருமூச்சு விட்டார்.

“ அதாவது கதிர் வீச்சால பாதிக்கப்பட்டு, விஷ்ணு இறந்துட்டான், இந்த நேரத்துல இது வெளியானா பிரச்சினைனு எல்லோரும் மறைக்கிறாங்க. தமிழ் ராணி என்ன செய்றாங்கணு தெரியல. சரி, டீவிய கவனியுங்க. பிரதமர் பேச்சு முடிய போகுது. சூட்கேஸ் அணுகுண்டை  நம் ஆட்கள் காட்டபோறாங்க.. “

“ சார்..இங்கே பாருங்க. “ திகிலுடன் அலறினான் ரவி.
அனைவர் பார்வையும் அவன் மேல் பதிந்த்து.

” சார்.  நம் வசம் இருக்கும் சீட்டில் S W H2 SF அப்படீனு இருக்கு. அதாவது தவறான சீட்டு இங்கேயே இருக்கு. சரியான குறியீடு கோகுலிடம் போய்டுச்சு. சிவப்பு கலர் கவர்.. ஊதா மையை கொடுப்பதற்கு பதில், பதட்ட்த்தில் ஊதா கவர், சிவப்பு மையை அந்த குமார் கொடுத்துட்டான். “
சாகுல் அதிர்ந்தார்.
“ இன்னும் சில நொடிகளில் கோகுல் அதை வெடிக்க செய்வார். இதை தடுப்பது நம் கடமை.. நான் நாட்டுப்பற்று மிக்க , அரசு அதிகாரியாக இருந்தவன். ஆனால் இதை எல்லாம் பார்த்த பிறகு, தடுக்க விரும்பல. ஆனால் நீங்க யாராவது ஒருத்தர் இதை தடுக்க சொன்னால், உடனே ஆக்‌ஷன் எடுப்பேன்.. தடுக்க நினைப்பவர்கள் கை தூக்குங்க”

ஒரு கை கூட உயரவில்லை.அடுத்து நடப்பதை பார்க்க விரும்பாமல் டிவியை அணைத்தார்கள் 

போட்டோவில் புத்தர்  சிரித்து கொண்டு இருந்தார்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா