Tuesday, July 22, 2014

வேலை இல்லா பட்டதாரி - சதுரங்க வேட்டை . ஓர் ஒப்பீடு


தமிழ் சினிமாவை அழித்து வருவது மசாலா படங்கள் அல்ல.. மாற்று சினிமா என்ற போர்வையில் வெளிவரும் ஏமாற்று சினிமாக்கள்தான் தமிழ் சினிமாவை உருப்பட விடாமல் செய்கின்றன.

சமீபத்தில் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் இரண்டு படங்களில் ஒன்று விமர்சகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது ..அது சதுரங்க வேட்டை..  இன்னொரு படம் வேலை இல்லா பட்டதாரி.. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது..

கிராமத்தில் இருந்து வந்த ஒருவன் முதன்முறையாக ஜூவில் யானையை பார்த்தான்.. இப்படி ஒரு விலங்கு இருக்க வாய்ப்பில்லையே என குழம்பினான். அதுபோல சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற டெம்ப்ளேட் சிந்தனையில் இருப்பவர்கள் , வேலை இல்லா பட்டதாரியின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் , புரிந்து கொள்ள முடியாமல் திகைக்கின்றனர்.. சுவாரஸ்யமான படம் என்றால் சில இலக்கணங்கள் வேண்டும் என எங்கேயாவது படித்து விட்டு , அதன்படி இந்த படம் இல்லையே..பிறகு எப்படி ஓடுகிறது என குழம்புகிறார்கள்..  அந்த இலக்கணங்கள்படி எடுக்கும் படங்கள் ஓடுவதில்லையே என்பதும் அவர்களுக்கு குழப்பமாக இருக்கிறது..

சராசரி ரசிகனின் பார்வையில் இரண்டு படங்களின் வெற்றியையும் அலசுவது முக்கியம்..

சதுரங்க வேட்டை படம் அதிரடியாக ஆரம்பிக்கிறது...ஆரம்பமே சுவாரஸ்யம்.. செட்டியாரை ஃபிராடு செய்து ஏமாற்றுவது அட என சொல்ல வைக்கிறது... ஆனால் அதை தொடர்ந்து சுவையான திருப்பங்கள் எதுவும் ஏற்படுவதில்லை..   அந்த எதிர்ப்பும் இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோ செய்யும் ஃபிராடு வேலையின் தொகுப்பாக படம் செல்கிறது...

சோகமான அம்மா  ஃபிளாஷ்பேக் , ஹீரோயினின் அன்பால் ஹீரோ திருந்துவது என்பது போன்ற வழக்கமான காட்சிகளை வைத்து படத்தை ஒரு ஷேப்புக்கு கொண்டு வந்து விட்டார்கள்..  ஒரே பாடலில் பணக்காரன் ஆவது போல , ஒரே ஃபிளாஷ்புக்கில் சர்வ வல்லமை பொருந்திய அறிவாளியாகி விடுகிறார் ஹீரோ..

ஆனால் இந்த ஃபார்முலா படத்தை வித்தியாசமான படம் போன்ற தோற்றத்தை கொடுத்ததில் இயக்குனரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.. வசனங்கள் அபாரம்..

நான் யாரையும் ஏமாற்றவில்லை.. ஏமாற விரும்புபவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன்..

தமிழ் நாட்டை சிங்கப்பூர் ஆக்குவேன் என சொல்லி ஓட்டு வாங்குகிறார்கள்..ஆனால் செய்வதில்லை..அவர்கள் மேல் வழக்கு போட முடியுமா போன்ற வசனங்கள் கைதட்டல் வாங்குகின்றன..
ஆனால் இதெல்லாம் விஜயகாந்த் ஃபார்முலாதான்..

வேலை இல்லா பட்டதாரி எப்படி இருக்கிறது..

வேலை இல்லாத இளைஞர் , கண்டிப்பான அப்பா , பாசமான அம்மா, பக்கத்து வீட்டு இளம்பெண் என பல முறை பார்த்த கதை.. வித்தியாசமான படம் என பம்மாத்து செய்யாமல் எடுத்தது முதல் வெற்றி...  இன்னும் சொல்லப்போனால் அந்த ஃபார்முலாவை ஒவ்வொரு கட்டத்திலும் கிண்டல்தான் செய்திருக்கிறார்கள்...  சண்டை காட்சியில் சண்டையை கிண்டல் செய்வது , பாடலை கிண்டல் செய்வது செம ரகளையாக படம் இருக்கிறது.. அம்மா செண்டிமெண்டை வைத்து அழ வைக்க முயலவில்லை.. காதல் காட்சிகளும் வெகு இயல்பு,,,,  உன்னத காதல் என்ற பம்மாத்தெல்லாம் இல்லை... பாடல்கள் பட்டாசு,,,

இப்படிப்பட்ட படங்களும் தேவை... சதுரங்க வேட்டை போன்ற புத்திசாலித்தனமான படங்களும் தேவை...

புத்திசாலித்தனமும் இல்லாமல் , மக்களை கவரும் அம்சங்களும் இல்லாமல் வெளிவரும் ஃபேக் படங்கள்தான் ஒழிய வேண்டும்..




Tuesday, July 8, 2014

பெண்ணின் மூன்று நிலைகள் - ஒரு கட்டுடைப்பு


 நல்ல பேச்சாற்றல் கொண்ட யாரையாவது பாராட்டும்போது , உன் நாவில் சரஸ்வதி இருக்காடா என சிலர் பேச்சு வழக்கில் சொல்வார்கள்.. உண்மையில் சரஸ்வதி என ஓர்  ஆள்  நாக்கில் இருக்க முடியாது.. கல்வியை அல்லது ஞானத்தை உருவகித்து அப்படி சொல்கிறார்கள்..

 புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்,,,அப்படியே நித்ராதேவி எனை தழுவ , தூக்கத்தில் ஆழ்ந்தேன் என பேச்சு வாக்கில் சொல்கிறீர்கள் என்றால் , கண்ட பெண்கள் உங்களை தழுவ அனுமதித்தீர்களா என உங்கள் மனைவி சண்டை போட்டு உங்களை டைவர்ஸ் செய்ய மாட்டார்.. நித்ராதேவி என தூக்கத்தை உருவகப்படுத்தி சொல்கிறார்கள்..

அதுபோல , மத நூல்களில் இருக்கும் கவித்துவமான கருத்துகளை ரசிக்க பழக வேண்டும். ஒளி உண்டாகக்கடவது என கடவுள் சொன்னதும் ஒளி உண்டாயிற்று என சொல்கிறார்கள் என்றால் அதை வரிக்கு வரி பொருள் கொள்ளாமல் , ஆழ்ந்து யோசித்து உள்ளே போக வேண்டும்..

உபனிஷத்துகள் , சூக்தங்கள் என பல இருக்கின்றன.. அதை எல்லாம் படிக்க நேரம் இருக்காது.. பரவாயில்லை.

ஆனால் திருமண மந்திரங்கள் அவ்வப்போது கேட்கிறோம். அவ்வபோது திருமணம் செய்து கொள்கிறோம் என சொல்லவில்லை.. திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும்போது கேட்கிறோம் அல்லவா. அவ்ற்றின் அர்த்தங்களை ரசனையோடு ரசித்து இருக்கிறோமோ..மெய்ப்பொருள் காண முயன்று இருக்கிறோமா என்றால் இல்லை ..

மாங்கல்யம் தந்துனானே என லேசாக தெரியும்.. அதன் பின் வரும் வரிகளை கவனியுங்கள்.. இதை கட்டுடைத்து பார்ப்போம்..

சோமஹ ப்ரதமோ விவிதே 
கந்தர்வோ விவித
 உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதி
 துரியஸ்தே மனுஷ்ய ஜாஹ

மணப்பெண்ணே.. சந்திரனுக்கு உரியவளாக இருந்தாய்,,,, பிறகு கந்தர்வனுக்கு உரியவனாக இருந்தாய்,,, பிறகு அக்னி உன்னை அடைந்தது... கடைசியாக மனிதனை அடைகிறாய்,..

இதற்கு என்ன அர்த்தம்? இதை எப்படி ரசிப்பது.?

பெண்ணே... முதலில் சந்திரனுக்கு உரிய குளிர்ச்சியுடன் சிறுமி என்ற நிலையில் இருந்தாய்,..விளையாட்டுத்தனம் குறும்பு போன்ற இயல்புகளுடன் இருந்தாய்,, அதன் பின் அழகு தெய்வம் உன்னை ஆட்கொண்டது.. அழகுடன் பொலிவு பெற்றாய்... அதன் பின் பெண்மைக்கே உரிய உக்கிரமான  நெருப்பு உனக்குள் குடியேறியது...  பிடித்தவரை நேசித்தல் , பிடிக்காதவனை தூக்கி எறிதல் போன்றவற்றுக்கான தைரியம் குடியேறியது.. அப்படி முழுமையான பெண்ணாக மாறியுள்ள நீ இந்த மணமகனை கைப்பிடிக்கிறாய்..

இப்படி கவிப்பூர்வமாக சொல்கிறார்கள்... அக்னி அவளுக்குள் குடியேறி விட்டதா என பயப்படாதீர்கள்...அதெல்லாம் உருவகங்கள்தான்...    

சந்திரன் , கந்தர்வன் , அக்னிதேவன் என்பதெல்லாம் பாய் ஃபிரண்டுகள் பெயர் அன்று..  சந்திரனின் குளிர்ச்சி , தேவதைகளுக்குரிய அழகு , அக்னி பிழம்பை போன்ற துணிச்சல் என அவள் இருக்கிறாள் என்பதே அதன் அர்த்தம்... வாழ்க்கையை ரசித்து வாழுங்கள்..


இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க

நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா