Wednesday, October 24, 2012

பிரமணாள் கஃபே , ஜனனி அய்யருக்கு எதிர்ப்பு சரியா ?

பிரமணாள் கஃபே என்ற உணவு விடுதியை எதிர்த்து பேர் மாற்ற சொல்லி போராட்டம் நடந்ததாக செய்தி வந்தது . அதே போல ஜனனி அய்யர் என்ற பெயரில் இருக்கும் ஜாதி அடையாளத்தை நீக்க சொல்லி ஓர் இயக்குனர் அட்வைஸ் கொடுத்ததாகவும் இன்னொரு செய்தி.


ஜாதி வெறி ஒழிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் மேற்கண்ட இரு விஷ்யங்கள் ஜாதி வெறிக்கு எதிரானதா ?

சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் போர் உக்கிரமாக நடந்த கால கட்டம். அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கு இருக்கும் தமிழர்களுக்கு உதவ வேண்டிய நிலையில், சிலர் கோயில் கருவறைக்குள் நுழையும் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்துக்கு அதுவா உரிய நேரம்?

இலங்கையில் மொழி ரீதியாக , இன ரீதியாக தாக்குதல் நடந்தது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு மத ரீதியாகவும் தாக்குதல் நடந்தது , நடந்து வருகிறது. இந்த விஷ்யத்தை சரியானபடி ஃபோக்கஸ் செய்து இருந்தால் , வட இந்தியர்களும் இந்த பிரச்சினையில் ஈடுபாடு காட்டி இருப்பார்கள். இலங்கை வரலாறே மாறி இருக்க கூடும்.,

சமீபத்தில் இந்த விஷ்யத்தை புரிந்து கொண்ட வைக்கோ , பிஜேபி கோட்டையான மத்திய பிரதேசத்தில் , இலங்கையில் நடக்கும் மத ரீதியான அத்துமீறல்களை பேசி அங்குள்ளவர்களின் ஆதரவை அள்ளியதை மறந்து விட முடியாது.

தமிழ் உணர்வு , ஜாதி எதிர்ப்பு போன்றவை உன்னதமானவை என்றாலும் , அதை வெளிப்படுத்துவதில் நிதானம் தேவை.

ஜனனி அய்யர் என்ற நடிகை மட்டுமா ஜாதி அடையாளத்தை வைத்து இருக்கிறார். சினிமா துறையில் பலர் இந்த பாணியில் பெயர் வைத்து இருக்கிறார்கள் , இவருக்கு மட்டும் அட்வைஸ் கொடுத்தால் , ஒட்டு மொத்தமாகவே ஜாதி ஒழிப்பின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுமே?

சைவ உணவு விடுதி என்பதை சொல்ல பிரமணாள் விடுதி என்கிறார்கள் . மற்றபடி அங்கு சாப்பிட வேண்டுமானால் , ஜாதி சான்றிதழ் காட்ட வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. வியாபாரம் ஆனால் போதும் என்றுதான் அவர்கள் நினைப்பார்களே தவிர , ஜாதியைக்காட்டி வாடிக்கையாளர்களை தடுத்து , வியாபாரத்தை பாழாக்க மாட்டார்கள். ஒவ்வொருவரின் ஜாதியை கண்டுபிடித்து அனுமதிப்பது சாத்தியம் அற்றது.


பல்வேறு ஜாதிப்பெயர்களிலும் உணவகங்கள் உள்ளன. அந்தந்த ஜாதியினர்தான் அங்கு சாப்பிட முடியும் என்ற நிலை கிடையாது. இதெல்லாம் பிராண்ட் மட்டும்தான். ஓர் அடையாளம்தான். இதையெல்லாம் எதிர்ப்பது ஜாதி ஆதிக்க எதிர்ப்பு என்ற நோக்கத்தை திசை திருப்பவே செய்யும்.

இது போன்ற தேவையற்ற விஷ்யங்களில் கவனம் செலுத்துவதால் , உண்மையாக ஜாதி வெறி ஆதிக்கம் செலுத்தும் இடங்களை காணாமல் போகிறோம்.

பணியிடங்கள் , சினிமா , பத்திரிக்கைகள் போன்றவற்றில் எல்லாம் ஜாதி வெறி தலை விரித்து ஆடுகிறது. இது எத்தனை பேருக்கு தெரியும்?

புயலிலே ஒரு தோணி என்று ஓர் உலகத்தரமான நாவல் .  இது அந்த காலத்தில் ஆனந்த விகடனுக்கு அனுப்பப்பட்டது , நாவல் போட்டிக்காக. உன்னதமான நாவலாக இருந்தாலும் ,  நடுவர் குழுவினர் இந்த நாவலை விரும்பினாலும் , அந்த நாவலுக்கு பரிசு கிடைக்கவில்லை. காரணம் அதை எழுதிய ப சிங்காரம் , பிரமணர் இல்லை.


எம் ஜி ஆர் , ரஜினி , கமல் என பலருடன் இணைந்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர் ஏ ஜெகனானாதன் , அவ்ரே வாய்ப்பு கேட்டும் கூட விகடனில் அவருக்கு அனுபவ கட்டுரை எழுத வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. காரணம் அவர் பிராமணர் இல்லை.


சந்திரமுகியும் , மும்பை எக்ஸ்பிரசும் ஒரே நேரத்தில் வெளியாகின. இதில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது , ப்லரின் பாராட்டுகளை பெற்றது சந்திர முகி.  கமலே விரும்பாத படம் மும்பை எக்ஸ்பிரஸ் பெரும் தோல்வியை சந்தித்தது. ஆனால் விகடனில் , மும்பை எக்ஸ்பிரசுக்குத்தான் அதிக மதிப்பெண் கொடுத்தார்கள். காரணம் கமல் பிராமணர்.

இது ஓர் உதாரணம்தான் . சக்தி வாய்ந்த ஊடகங்கள் ,  நிறுவனங்கள் ஜாதி வெறியுடன் நடந்து கொள்வதை கவனிக்க தவறி விட்டு,  அபாயம் இல்லாத உண்வகங்களையும் , நடிகைகளையும் எதிர்ப்பது கேலிக்கூத்து.


5 comments:

  1. I don't agree with your post, having caste name behind their name is sick minded. But naming a hotel in caste name is upto them, but if they deny service to non-brahminical that's violation of human rights.

    ReplyDelete

  2. Having caste name is sick minded ? there r many hotels which have caste name :) but this people targetting brahmins only :)

    it is wrong perception that in hotels , they allow people after checking cast certificate :) .. any one can go... caste name is just brand name to identify whethe it is veg hotel or non veg hotel

    ReplyDelete
  3. //pichaikaaran s said...


    Having caste name is sick minded ? there r many hotels which have caste name :) but this people targetting brahmins only :) //

    by saying
    //Having caste name is sick minded// iqbal is referring to janani iyer and not hotels.
    Pls try to understand properly

    ReplyDelete
  4. @puratchimani thre r many actrtess whi have caste name in their name.. may be for sentiment or that me their tradition... but our people targets iyers only :) but they wont oppose powerful iyers like kamal or vikatan... woman like janani iyer is safe target for them

    ReplyDelete
  5. செட்டிநாட்டு சமையல் என்பது சரியா? குசுபு லார்பு பற்றி பேசியதற்கு எதிர்ப்பு தெரிரித்தவர்கள்,-- பிள்ளைகுட்டி பெத்துகிட்டு தாலிகட்டலாமா என்ற பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஜாதிவாரி கணக்கெடுப்பு கேட்கிறார்கள்.அறிவு வளர்ச்சி ஏற்படும் இன் நாட்களில் ஜாதி அரசியல் எடுபடாது. செட்டிநாட்டு மண் பாண்ட சமையலில் உள்ள ஜாதி எடுபடுமா?எதற்கும் ஒரு மனசாட்சி வேண்டும்.எனது ப்ளிக்ச்பாட் ananthako.blogspot.com பார்க்கவும்.
    Regards,

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா