Tuesday, May 25, 2021

பென்னை அணுகுதல்

 

    பேனா விற்பனை என்ற அருங்கலை இன்று அழிந்து விட்டது.  சூப்பர் மார்க்கெட்டுகளில் ஓர் ஓரமாக பேனாவுக்கு இடம் ஒதுக்கியிருப்பர். அவற்றிலும்   ஜெல் , பால்பென் , ரோலர் பென் என்பவைதான் அதிகம்.   

    மை ஊற்றி எழுதக்கூடிய பேனாக்களைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது

        ஆனால் சூப்பர் மார்க்கெட்டுகளில் ,  சாதாரண கடைகளில் பேனா வாங்கினால் after sales suppor கிடைக்காது.

     பேனாவுக்கெல்லாம் எதற்கு after sales support என்பதே அவர்களுக்கு தெரியாது

      விலையுயரந்த நல்ல பேனா என்றால் சிறு பழுதுகள் என்றால் தூக்கி எறிய முடியாது.  உதிரி பாகங்கள் தேவைப்படும்

      அந்த காலத்தில் எல்லாம் பைக் சர்வீஸ்போல பேனா சர்வீஸ் கடைகளும் இருந்தன  இன்று அருகி விட்டன

        டெல்லி மும்பை சென்னை பெங்களூரு என எல்லா ஊர்களிலும் ஆஙககாஙககு இப்படிப்பட்ட  கடைகள் உண்டு..   

      மதுரையில் சில கடைகள் உண்டு  அவற்றில் ஒன்றுதான் ஜான்சன் பென் செண்டர்

   மீனாட்சி அம்மன் ஆலயம் அருகே உள்ள கடை   1974ல் இருந்து செயல்படும் இக்கடை சிறிய கடைதான் என்றாலும் பெரிய கடைகளுக்கு மத்தியில் இன்றும் செயல்படுவது பாராட்டத்தக்கது ,  இது தொடர வேண்டும் என கடைநடத்துபவரிடம் சொல்லி விட்டு வந்தேன்  , சில பேனாக்களும் வாங்கிக் கொண்டு வந்தேன்  .  பேனாவில் எழுதும் கலை குறித்த சில டிப்ஸ்கள் வழங்கினார்;

  பழுது பாரப்பதற்கு தேவையான உதிரிபாகங்களையும் பார்வையிட்டு கிளம்பினேன்





 



  ,




Sunday, May 23, 2021

மறக்க முடியாத பிரார்த்தனை


 கடவுள் என ஒருவர் இருக்கிறாரா என்பது எனக்கு தெரியாத ஒன்று


ஆனால் பிரார்த்தனைகள் நிகழ்த்தும் அதிசயங்களை அவ்வப்போது கேட்கிறேன் ,  நானும் அனுபவிக்கிறேன்


என் சிறுவயதில் , ஒரு முறை உறவினர் வீடு ஒன்றில் மொட்டை மாடியின் மேல் தளத்தில் சிமெண்ட் பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது.  திடீரென மழை மேகங்கள் சூழ்ந்தன.

மழை பெய்து சிமெண்ட் அடித்து செல்லப்பட்டால் அவருக்கு தாங்கவே முடியாத,நஷ்டம் ஏற்படும்

மழை பெய்தால்  இப்படி சேதம் ஏற்படும் சூழல் பிற்காலத்தில் வந்தபோது பெரிய பாலித்தீன் ஷீட்டுகளை உடனே வாங்கி"வந்து போர்த்தி விட்டு சேதத்தை தவிர்த்த அனுபவம் எனக்குண்டு;

ஆனால்  நான் சொல்லும் சம்பவம் நடந்த இடம் ஒரு கிராமம்.  பாலித்தீன் ஷீட்டுகளோ வேறு  ஏற்பாடுகளோ செய்ய முடியாத சூழல்


அப்படி ஒரு கையறு நிலையில், பிராரத்தனையையே"அவர் நம்பினார்

பிரார்த்தனை என்பது இயல்பான ஒன்று. ஆனால் இந்த சம்பவம் ஏன் மனதில் நிற்கிறது என்றால் அவர் யாரிடம் பிரார்த்தனை செய்தார் என்பதால்தான்;

அவர் திருநீறுடன் காட்சி அளிக்கும் ஹிந்து  ஆனால்  அவர்,பிராரத்தனை செய்தது மேரி மாதாவிடம்;

என்ன ஆச்சர்யம் என்றால் மழை மேகங்கள் விரைவிலேயே கலைந்து விட்டன   நிம்மதிப் பெருமூச்சு விட்டார்

இரண்டு நாட்கள் கழித்து மழை அடித்துக்கொட்டி மேலும் நன்மையை செய்தது

அவர் தன் நன்றிக்கடனை செலுத்தியது புளியால் பெரியநாயகி  தேவாலயத்தில்.

அந்த ஊர் மாதாவின் பெயர்தான் பெரியநாயகி..

புளியால்  என்ற ஊர் காரைக்குடியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளது

அந்த சம்பவத்துக்குப்பிறகு நானும் சிலமுறைகள் சென்றுள்ளேன்

அவரவர் இறையவர் குறைவிலர்


Thursday, May 6, 2021

கொரோனா தினங்கள்

 நமக்கெல்லாம் கொரோனா வராது என்ற நம்பிக்கை இனியும் யாருக்கும் வேண்டாம்.    யாரும் தப்பிக்க வாய்ப்பில்லை. 


கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு வளையத்தில் இருந்து வந்தேன்.   ஒரு பத்து நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழல்


அதில் கொரோனா தொற்றி விட்டது


உண்மையில் ஆரம்பத்தில் தெரியவில்லை.   நாள் முழுக்க தூக்கம் ,  தலைவலி  இருமல் என படுத்தி எடுத்து விட்டது


நான் வழக்கமாகவே என்னை தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்பவன்  தற்போது கூடுதலாக தனிமைப்படுத்திக் கொண்டேன்


ஓரளவு குணமானதும் டெஸ்ட் செய்து பாரத்த்போது கொரோனா வந்து விட்டுப் போய்விட்டது தெரிந்தது


கஷாயங்கள் ,   மாத்திரைகள் ,  சக மனிதர்கள் அன்புக்கு  நன்றி


என் உறவினர் ஒருவர் இப்படி பாதிக்கப்பட்டு  மூன்று லட்சம் செலவானது


சிலருக்கு செலவு செய்தும் பயனற்ற சூழலும் உண்டு


சிலர்  வெகு எளிதாக இதைக் கடந்து விடுகிறார்கள்


எனவே  இதை யாராலும் கணிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.   ஜாக்கிரதையாக இருங்கள்    தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்   தடுப்பூசி போடுங்கள்      உரிய  சோதனைகளை செய்து கொள்ளுங்கள்

Monday, February 15, 2021

தினமணியை அசிங்கப்படுத்திய அபிலாஷ்



 மதிப்புக்குரிய தினமணி ஆசிரியர் அவர்களுக்கு

தினமணிக்கு என பாரம்பரியம் உண்டு.  வலுவான ஆசிரியர் வரிசை உண்டு

தினமணியில் எழுதுவது என்பதை கௌரவமாக நினைப்போர்  உண்டு.  தினமணியில் எழுதப்படுபவை சிரத்தையுடன் வாசகர்மீதான மரியாதையுடன் எழுதப்படுகின்றன என்ற எண்ணம் வாசகர்களுக்கு உண்டு

ஆனால் தினமணியின் விழுமியஙககள் மீதோ அதன் வாசகர்கள் மீதோ எள்ளளவும் மரியாதை இல்லாத தனது மரியாதை இன்மையை வெளிப்படையாகவும் கூறவும் செய்கிற அபிலாஷ் சந்திரன் என்பவருக்கு தொடர்ந்து ஏழு
ஆண்டுகள் வாய்ப்பளிப்பது விந்தையாக இருக்கிறது

வாங்க இங்க்லீஷ் பேசலாம் தொடரை வேண்டா வெறுப்பாக எழுதுகிறேன் , அதில் தான்  புகுத்தும் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த தகவல்கள் ஆசிரியர் குழுவினருக்குப்புரியவில்லை , கட்சி இதழ்களாக இருந்திருந்தால் புரிந்திருக்கும் , வெகுஜன இதழ் என்பதால் புரியவில்லை , நான் எழுதியதில்லையே கொஞ்சமும் பிடிக்காமல் எழுதுவது இதைத்தான் ,  ஆங்கிலம் என்பது சாதாரண மொழி என நினைப்பதால்  ஆங்கில அறிவு படைத்த நாய் பாத்திரத்தை உருவாக்கி எழுதுகிறேன் அதுவும்
ஆசிரியர் குழுவுக்குப் புரியவில்லை


என்றெல்லாம் தினமணி ஆசிரியர் குழுவை , ஆங்கில ஆர்வம் கொண்டு அந்த தொடரை படிக்கும் வாசகர்களை இழிவு படுத்துகிறார்


அந்த தொடர் எவ்விதத்திலும் தரமானதோ தினமணிக்கு புகழ் சேர்ப்பதோ அல்ல

ஆயினும் இவ்வளவு இழிவுகளைத் தாங்கிக்கொண்டு அவருக்கு வாய்ப்பளிப்பது விந்தையிலும் விந்தை

எத்தனையோ திறமைசாலிகள் , ஆங்கில மொழி மீதும் மொழியியல் மீதும் ஆர்வம் கொண்டவர்கள் , வாசகர்களை மதிப்பவர்கள் நம்மிடம் உண்டு. 
ஆனாலும் ஒருவருக்கு விருப்பமில்லாத துறை ஒன்று குறித்து எழுத வைத்து தரமற்ற படைப்பை வழங்குவது இதழியல் தர்மமா என வாசகர்கள் குழம்புகிறார்கள்


அன்புடன்

ஒரு தினமணி வாசகன்

Wednesday, January 13, 2021

பணம் தரும் மந்திரம்

 தொழில் நுட்பம் வளர வளர , நன்மையும் தீமையும் பரவும் வேகம் பன்மடங்கு அதிகரிக்கிறது.


அரசியல் , பாலியல் அரட்டைகள் என நேரத்தை வீணடிக்கலாம்  அல்லது நன்மையையும் நாடலாம். இதெல்லாம் அவரவர் விருப்பம்


இணையத்தில் நல்ல விஷயங்கள் கொ ட்டிக்கின்றன.  அறிவியல்  ஆன்மிகம் இலக்கியம் தொழில் நுட்பம் என ஏராளமாய்க்கற்கலாம்

  ஒரு நூலில் செல்வ வள மந்திரம் என ஒரு பதிகத்தை ஒருவர் பரிந்துரைத்து இருந்தார்

இப்படி யாரேனும் சொன்னால் நான் அதை ஏற்பதுமில்லை.  புறம் தள்ளுவதுமில்லை


ஆராய்ச்சி நோக்கில் முயன்று பார்ப்பேன். விளைவுகளை விருப்பு  வெறுப்பின்றி எழுதி வைத்து விடுவேன்


அந்தவகையில் அந்த பதிகத்தை தினமும் சொல்லி வரலானேன்.  

ஓரளவு நல் விளைவுகள் தெரியலாகின


இந்த நிலையில் ஒரு டிராமடிக்கான நிகழ்வு


ஒரு நாள் போஸ்ட் மேன் 

கதவைத்தட்டினார்.  நமக்கு யார் லெட்டர் போடப்போகிறார் என அசட்டையுடன் கதவைத்திறந்தேன்.


சார் உங்களுக்கு மணிஆர்டர் என சொல்லி காசு கொடுத்தார்


ஒரு பத்திரிக்கையில் இருந்து காசு..  நான்என்ன எழுதினேன்  எப்போது எழுதினேன் என்று சுத்தமாக நினைவில்லை

இது குருட்டு அதிர்ஷ்டமா , தற்செயலா , மந்திரத்தின் விளைவா என்றெல்லாம் தெரியவில்லை

சரி  .  பதிவு செய்து வைப்போம் என இங்கு பதிந்து விட்டேன்



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா