பழைய இதழ் வாசிப்பு
மூன்று முகம் - கல்கி விமர்சனம்
மூன்று முகங்கள், மூன்றும் ரஜினியே, அப்பா அலெக்ஸ் பாண்டியன் போலீஸ் அதி காரி. அடேயப்பா என்ன மிடுக்கு! என்ன துடுக்கு! மூன்றில் முதல் மார்க் அலெக்சுக் குத்தான். படத்தில் அவர் கொல்லப்பட்ட பிறகு....
பழைய இதழ் வாசிப்பு
மூன்று முகம் - கல்கி விமர்சனம்
மூன்று முகங்கள், மூன்றும் ரஜினியே, அப்பா அலெக்ஸ் பாண்டியன் போலீஸ் அதி காரி. அடேயப்பா என்ன மிடுக்கு! என்ன துடுக்கு! மூன்றில் முதல் மார்க் அலெக்சுக் குத்தான். படத்தில் அவர் கொல்லப்பட்ட பிறகு....
ஃபிளாஷ்பேக்.
சில படங்களைப் பார்த்து விட்டு அதில் இருக்கும் தர்க்கப்பிழைகளை வாசகர்கள் அதன் இயக்குநர்களிடம் கேட்பது , அதற்கு இயக்குநர்கள் விளக்கம் அளிப்பது அல்லது நியாயப்படுத்துவது சுவாரஸ்யமானது.. 1980 களில் வெளியான கல்கி இதழில் வாசகர்கள் கேள்விகளும் இயக்குநர்கள் பதில்களும் உங்கள் பார்வைக்கு
ரஜினியின் பில்லா, சிவாஜியின் ரிஷி மூலம், மகேந்திரனினின் பூட்டாத பூட்டுகள், லக்ஷ்மியின் மழலைப் பட்டாளம், விசுவின் அவன் அவள் அது. ஆகிய படங்கள் அலசப்படுகின்றன.
ரிஷி மூலம் -- கேள்விகள் வாசகர்கள் ...பதில்கள் இயக்குநர் எஸ் பி முத்துராமன்
கிளைமாக்ஸ் காட்சியில் அவ்வளவு தூரம் கார் ரேஸ் வைத்து வீணாகப் படத்தின் மதிப் பைக் குறைத்துள்ளீர்களே! காரணம் என்னவோ? அதைத் தவிர்த்து நாடகத்தின் முடிவைப் போல அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே!
- தஞ்சாவூர் சரஸ்வதி பிரியன்
ரிஷி மூலம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தம் மக்கள் விரும்பும் அள வுக்குப் பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சேர்க்கப்பட்டவை என்பதை ஒப்புக் கொள்கிறேன். நாடகத்தைப் போலவே முடிவு சொல்லா விட்டால் படத்தில் திருப்தி இருக்காது என்பதால் இப்படிச் செய்தோம்.
பதினெட்டு வருடங்கள் கழித்துத் தன் மகனைக் காணப்போகும் ஒரு தாய் அதுவும் பதவியில் இருக்கும் டி.எஸ்.பி. பின் மனைவி அந்த மகிழ்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்து, கின்றாள்? தன்னை மிக அழகாக அலங்கரித்துக் கொண்டு ஓடுகிறாள்! எங்கே? காடு, மலை வயல், வரப்பின்மீது! ஸ்லோமோஷனில் வித விதமாகப் போஸ் கொடுத்துக் கொண்டு! அப்படியா செல்வது? பிரிந்திருந்த மகனைக் காணப் போகும் தாய்ப் பாசத்தின் மனநிலைகாட்சியில் தென்படவில்லையே? ஆசைமிக்க கணவனின் வருகையைத் தேடும் மனைவி அடையும் மகிழ்ச்சியின் பிரதி பலிப்பாகத் தென்படுகிறதே!
அய்யம்பாளையம்
பி. என். ரவி
மழை வருவது மயிலுக்குத் தெரியும் மகன் வருவது மனத்துக்குத் தெரி யும்' என்பதுதான் பாட்டின் பல்லவி, இதை எப்படி கணவனின் வருகையால் மகிழ்ச்சியைத் தேடும் மனைவியின் பிரதிபலிப்பாக எடுத்துக்கொள்ள முடியும்? பாட்டின் அர்த்தத்தை எடுத்துக் கொண்டு பார்த்தீர்களானால் தாயின் பாசம் விளங்கும். இந்தப் பாடல் காட்சி என் கண்ணான ஒளிப் பதிவாளர் பாபு எடுத்துகுடுத்தது.
தாயின் மேல் (கே. ஆர். விஜயா) பாசம் உண்டாக்கக் கருதித் தந்தை (சிவாஜி) பல முயற்சிகள் செய்து படம் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு பாடல் "ஐம்பதிலும் ஆசை வரும்"... இது அவசியம் தானா? படத்தின் விறுவிறுப் பைத் திடீரென்று தடை செய்யும் முட்டுக் கட்டையாக இது உங்களுக்குத் தெரியவில்லையா? அந்தத் தம்பதிகளின் மேல் நாம் வைத்திருக்கும் உயர்ந்த எண்ணத்தைத் திடீரென்று உருட்டிப் படுபாதாளத்தில் தள்ளுவதாகத்தான் இந்தப் பாடல் காட்சி அமைந்திருந்தது என்கிறேன் நான். உங்கள் பதில் என்ன?
பட்டுக்கோட்டை
பி. எஸ். ராஜகோபாலன்
ஐம்பதிலும் ஆசை வரும். 15 வருடங்கள் கழித்துக் கணவனும் மனைவி யும் இணையும்போது அவர்களுக்கு வயதானாலும் அவர்களது ஆசை களுக்கு வயதாகவில்லை என்பதை வலியுறுத்தவே அந்தப் பாடலை அங்கு இணைத்தோம். அது சரியானதுதான் என்பதை பலர் (வயதானவர்கள் கூட) ரசித்ததைத் தியேட்டரில் ரசித்ததில் பார்த்தோமே.
பில்லா கேள்விகள் வாசகர்கள் ...பதில்கள் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி
நொண்டி தேங்காய் சீனிவாசன் கடைசிக் காட்சியில் கயிற்றின் மேல் நடப்பது எப்படி?
காரமடை ஆர். பார்த்திபன்
நான்கு அடி உயரமுள்ள ஒரு ஸ்டூலின் மேல் நின்று கொண்டுதான் தேங்காய் சீனிவாசன் கயிற்றின் மேல் நடப்பது போல் உள்ள காட்சியை எடுத்தேன். ஒரு இடத்தில் கால் தவறுவது போலவும் காண்பித்தேன். படம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் இந்த இடத்தில் 'ஐயோ' என்றனர். இப்படி ரசித்து பாராட்டு அளித்துக் கொண்டும் இருந்தனர் இதற்காகத்தான் இம்மாதிரியான காட்சிகள்
பில்லா தப்பித்துக்கொள்ளக் கையிலிருக்கும் பெட்டியை வீசுகிறான். அது வெடிக்கிறது. ஏன் சார்! அதே ரஜனி, ப்ரியாவில் அதையேதானே செய்திருக்கிறார். 'டான்'னில்'அப்படி இருந்தால் இருந்து விட்டுப் போகட்டுமே. இங்கே தப்பிக்கக் கொஞ்சம் வித்தியாசமாய்த் தந்திரம் செய்யக் கூடாதா?
சித்தோடு
எஸ். தவமணி
டான் ஹிந்திப் படம் வந்து நாலு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 'ப்ரியா' படத்திலுள்ள இந்தக் காட்சி 'டானை'ப் பார்த்து அப்படியே காப்பி அடித்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாங்கள் 'டான்' என்ற ஹிந்திப் படத்தைத் தமிழில் தயாரிக்க உரிமை பெற்று, பில்லாவை எடுத் திருக்கிறோம். தமிழில் எடுக்கும்பொழுது டான் காட்சிகளை அப்படியேதான் எடுக்க முடியும். பில்லாவுக்கு முன்னால் காப்பி அடித்து எடுக்கப்பட்ட 'ப்ரியா' வெளியானது. இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?
போலீஸ் இலாக்காவில் பில்லாவின் நடை, உடை, பாவனை, ஸ்டைல் எல்லாவற்றையும் சினிமா படம் எடுத்து வைத்துள்ளார்கள். அவளைப் போலவே நடக்க இன்னொருவனுக்கும் பயிற்சி தரப் பயன்படுத்துகிறார்கள்.சினிமா படம் எடுத்தவர்கள் கடத்தல்காரனை ஏன் பிடித்திருக்கக் கூடாது?
சிவகாசி
எஸ். கீரிதரன்
போலீஸ் டிபார்ட்மெண்டில் ஒரு பழக்கம் உண்டு. ஒரு தடவை ஒருவன் சிறு குற்றமிழைத்து அகப்பட்டுக் கொண்டால் அவனைப் பற்றிய சகல விவரங் களையும் படங்கள் உட்பட ஃபைல் பண்ணி வைத்து விடுவார்கள். பீன்னால் அவன் பெரும் குற்றம் ஏதாவது செய்ததாகச் சந்தேகித்தால் அவனைக் கண்டு பிடிக்க முன்பு 'ஃபைல் செய்த புகைப்படங்களை, சீனிமாப் படங்களை எடுத் துப் போட்டுப் பார்ப்பார்கள். படத்தில் பில்லா தவறு செய்கிறான் என்று தெரிந்தாலும் ஆதாரமில்லாததனால் பிடிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆதாரத்துடன் அவனை மாட்டி வைக்கப் போலீஸ் முயற்சி எடுக்கிறது. பில்லாவை ஆட்டிப் படைப்பது யார் என்று அறியவும் வேண்டியிருக்கிறது. அந்தச் காட்சி உணர்த்துகிறது.
அவன் அவள் அது - கேள்விகள் வாசகர்கள் ...பதில்கள் இயக்குநர் விசு
ஒரு காட்சியில் லாவண்மா தனக்குப் பிள்ளை பேறு இல்லை எனத் தெரிந்தவுடன் த கணவனை வேறெகு திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாள். அப்படிச் சொல்லு போதே அவள் தன் கணவனை வேறொருத்திக்கு விட்டுக் கொடுக்கச் சம்மதிக்கிறான் என் தானே அர்த்தம்? பிறகு தன் கணவனின் ஜீவ அணுக்களைச் சுமக்கும் பெண்ணைத் தன் கணவன் சந்திப்பதை விரும்பாத அவள், தனக்குத் தெரியாமலே அவர்களிருவரும் உடலுறவு கொண்டதை அறிந்து மனம் பொறுக்காமல் வீட்டை விட்டு வெளியே வதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் திருமணத்தின் பின்னர் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளை அவளால் ஏன் பொறுக்க முடியவில்லை? இக்காட்சிகள் முரண்பாடாக உள்ளனவே?
நெல்லிகுப்பம் இரா. சீனிவாசன்
தனது கணவன் இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண் அவன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். தன்னை விவாகரத்து செய்துவிடலாம் என்று சொல்வது லாவண்யாவின் பெருந்தன்மை. அந்தக் காட்சியில் பெண் தெய்வமாகக் காட்சி அளிக்கிறாள். ஆனால் தெய்வமும் தன் கணவன் கள்ளத்தனமாக இன்னொருத்தியிடம் போவதை விரும்பமாட்டாள். ஆகவே இந்தக் காட்சி பொருத்தமற்ற காட்சி அல்ல ஹைலைட்காட்சி!
ஹோமத்தின்போது நெய் விடுவது போன்ற அருவருக்கத்தக்க Symbolic shot அவசியமா?
மில்டன் மாரிஸ் ஆரான்
குழந்தைப் பேறு அற்ற மருமகள் செயற்கை முறையில் தனது கணவனின் ஜீவ அணுவை இன்னொரு பெண்ணுக்கு ஊசி மூலம் செலுத்தி அதன் மூலம் தனக்கு ஒரு மகனோ மகளோ கிடைக்கலாம் என்ற ஆசையில் ஆஸ்பத்திரிக்குத் தனது கணவனை அழைத்து வருகிறாள். அதே நேரம் விவரம் ஏதும் அறியாத அவளது மாமனார், அவளுக்காகவும் தன் மகனுக்காகவும் வீட்டில் நிறைய புரோகிதர்களைக் கூட்டி புத்திர காமேஷ்டி யாகம் நடத்துகிறார். அந்த "ஐரனி "யைத் தான் படம் பிடித்துக் காட்ட எண்ணினோம். நாங்கள் உங்களுக்குப் பிள்ளையார் பிடித்துக் காட்டலாம் என்றுதான் நினைத்தோம். அது குரங்காக அமைந்துவிட்டது என நீங்கள் கருதுகிறீர்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! மன்னிப்புக் கோருகிறோம்
என்னதான், பிடிவாதத்திற்கு மறுபெயர் லாவண்யாவாக இருந்தாலும், வெளியேசெல்லப் பட்டுப் புடவை வாங்கி வரவில்லை என்ற காரணத்திற்காக இப்படியா பாவாடை,
ஜாக்கெட் மட்டும் போட்டுக் கொண்டு பட்டுப் புடவை வரும்வரை அசிங்கமாக ஒரு குடும்பப்பெண் படுத்திருப்பாள்?
கோவை
வி.சரஸ்வதி
தான் நினைத்த காரியத்தை எப்படியும் செய்து முடிக்கும் மனப் பக்கு வம் கொண்டவள் லாவண்யா.
நான்கு சுவர்களுக்கு இடையில் கணவன் மனைவிக்கு இடையே ஒரு போராட்டம் நடக்கிறது. அக்காட்சி விரசத்தைத் தொடவில்லை. அவளது இயல்பைத்தான் விளக்குகிறது என்று எந்த மன்றத்திலும் வாதாடத் தயார்
....................................
ஒரு படித்த பெண்ணுயிருந்தும் லக்ஷ்மி ஊசி மூலம் குழந்தை பெறும் விஷயத்தைப் பச்சையாக ஒரு பால்காரரிடமா கேட்டுத் தெரிந்து கொள்வது?'
திருச்சி
சங்கம் அருணகிரி
படிக்காத பாமர மக்களுக்குப் புரிய வைக்கத்தான் செயற்கை முறையில் குழந்தை பெறும் முறையை மாடு குட்டி போடுவதோடு ஒப்பிட்டுக் காட்சி அமைத்தோம். அவனைப் பால்காரனாகக் காட்டாமல் பால்காரியாகக் காட்டியிருக்கலாம் என்பது இப்போதுதான் என் மண்டைக்குப் புரிகிறது. சாஷ்டாங்கமாகக் காலில் விழுகிறேன். வயதிலும் அறிவிலும் சிறியவன். மன்னிக்கக் கூடாதா?
.........................
மருத்துவமனையில் மேனகாவுக்குக் குழந்தை பிறக்கும் போது ராமனாதன் அங்கு வருவதைப் பார்த்து அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த தொடர்யை அறிந்த லாவண்மண நேராகக் கடலலைகளுக்கு நடுவே நடந்து செல்கிறான். பிறகு, அடுத்த காட்சியில் தாயை இழந்த குழந்தையைக் கவனிக்க ஆயாவாக வருகிறாள். எதற்காகக் கடலேக் காட்ட வேண் டும்? தற்கொலை முயற்சி என்றால் அந்த எண்ணத்தை லாவண்யா எப்படி மாற்றி கொள்கிறாள்? தொடர்பில்லாமல் இருக்கிறதே?
.......
ஈரோடு
கே. எஸ். எஸ். நாராயணன்
தற்கொலை செய்துகொள்ளத்தான் அவள் கடலைத் தேடிப் போனான். ஆனால் தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் அத்தனை பேராலும் அது முடிகிறதா? நெஞ்சில் கைவைத்து நாராயணன் சொல்லட்டும், எத்தனை விஷயங்களில் நம்மை நாம் தாலி சுட்டியவர்கள் மன்னிக்கிறார்கள். லாவண் யாவும் ராமநாதனை மன்னித்து விட்டான். இதற்கு மேலும் வியாக்யானம் தேவையா?
....,.......
மழலைப் பட்டாளம் கேள்விகள் வாசகர்கள் ...பதில்கள் இயக்குநர் லக்ஷ்மி
கதாநாயகி கௌரி மனோகரிக்காக ஹோட்டலில் காத்துக்கொண்டு இருக்கிறாள். அப் பொழுது கதாநாகன் கதாநாஜியிடம் L.I. C. பற்றி கூறுகிறார். அந்த நேரத்தில் இடை வெட்டுக் காட்சியாக ரம்பத்தால் மரம் அறுப்பது போல் காட்டுகிறார்கள். L.I.C. நாட் டிற்கு எவ்வளவு சேவை செய்கிறது என்று தெரிந்தும் இந்தக் காட்சி அவசியம்தானா?
சேலம் ஆர். ராம்குமார்.
நாங்கள் ரம்பத்தைக் காட்டி அறுப்பது போல் குறிப்பிடுவது இன்ஷூ ரன்ஸை அல்ல. அந்தப் பாத்திரம் பேசும் முறையையும் பாத்திரத்தின் தன்மையையும் தான் குறிப்பிடுகிறோமே ஒழிய எல். ஐ. யை அல்ல. LIC இல் என் வீட்டில் உள்ளவர்கள் பலர் வேலை செய்கிறார்கள். அவ்வளவு ஏன்? நானே ஒரு LIC ஏஜெண்டுதான்!
.......
கடைசியில் குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து கும்மாளம் அடித்துக்கொண்டு திருமணம் செய்து வைப்பது பொருத்தமற்ற காட்சியாகத் தெரிகிறது. ஏன் அவ்வாறு அமைத்தீர்கள்?
குழந்தைகள் தொந்தரவு இல்லாமல் எழுத்தாளனான கதாநாயகள் லெட்ரினில் உட்கார்ந்து கதை எழுதுவதாகப் படத்தில் காண்பிக்கிறீர்கள். ஆனால் கதாநாயகள் இருக்கும் வீட்டுக்கு அவ்வளவு வசதியான லெட்ரின் பொருத்தமாக இல்லை. ஹோட்டலில் போய் லெட்ரினில் உட்கார்ந்து எழுத அவசியம் என்ன? ரூமில் உட்கார்ந்து எழுதலாமே?
பொள்ளாச்சி வி. எப்பிரமணியன்
ஜோதி கார் விபத்தில் தன் சகோதரியும் அவள் கணவனும் இறந்ததைத் தன் சகோதரி யின் ஐந்து குழந்தை குழந்தைகளுக்குத் " தெரிவிக்காமல் மறைத்து விடுகிறாள். உருவ ஒற்றுமையினால் தாய் எண்ணி விடுகிறார்களாம். என்னதான் உருவ ஒற்றுமை இருந்தாலும் குழந்தைகளுக்குத் தங்கள் தாயை அடையாளம் தெரியாமல் போய் விடுமா? அதுவும் அந்தப் பெரிய பையனுக்கு வயது 10, 12 இருக்கலாம்
எஸ்.குமார்
நான் அறிஞர்களுக்காகப் படம் எடுக்கவில்லை. பொழுது போக்குக்குத்தான் அவர்களை மகிழ்விக்கத்தான் சராசரி மக்களுக்கு படம் எடுத்தேன் எத்தைனையோ பெரிய இயக்குனர்கள் எடுத்த படங்கள் வந்திருக்கின்றன. மகனை அடையாளம் காணாத தாய் மனைவியை அடையாளம் காணாத கணவன் என பல படங்கள் வந்துள்ளன. அவர்களே அடையாளம் காணாதபோது குழந்தைகளா அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும் கேள்வி கேட்க வேண்டும் என்று ஆரம்பித்தால் கேட்கலாம். மூன்று கேள்விகளுக்கும் இதுதான் என் பதில்!
......
நடிகையாக இருந்த தங்கள் மழலைப் பட்டானத்தில் டைரக்க்ஷன் பொறுப்பேற்ற போது ஒருவித அச்சம் தெரிந்ததா?... டைரக்ட் பண்ணும் போது.
உளுந்தூர் பேட்டை
எஸ். காசிமணி
அன்புச் சகோதரரே! நீங்கள் ஏதாவது பத்திரிகைக்காக என்னைப் பேட்டி காண்கிறீர்களா? இல்லை படத்தில் உள்ள குறை நிறைகளைப் பற்றிக் கேள்வி கேட்கிறீர்களா? எனக்குச் சிறிது குழப்பமா யிருக்கிறது.
......
கவாஸ்கர் பந்தை நடுவரிடம் கொடுத்து விடுகிறான். பிறகு அக்காவின் மாமனார் வீட்டில் வந்தபொழுது பந்து கையில் எப்படி வந்தது?
படம் எடுக்கும்போது இவன் விசிலடித்துப் பந்தைக் கேட்பது போல ஒரு காட்சி அமைத்திருந்தோம். படத்தை முழுதும் எடுத்த பின் பார்த்தால் கிட்டத்தட்ட 16000 அடி வளர்த்துவிட்டது. எங்களுக்கோ 13000 அடிக்கு மேலிருந்தால் பல்வேறு பிரச்னைகள் பணம் அதிகமாகக் கட்ட வேண்டியிருக்கும். இந்த நிலையில் குறைக்க வேண்டிய பல காட்சிகளை வரிசைப்படுத்தினோம். கதைக்கு முக்கியமான காட்சிகளை எடுக்க முடியாததால் இது மாதிரியான காட்சிகள் சில வெட்டப்பட்டு விட்டன.
"
,.......
பூட்டாத பூட்டுக்கள் கேள்விகள் வாசகர்கள் ...பதில்கள் இயக்குநர் மகேந்திரன்
கடைசிக் காட்சியில் கதாநாயகன் தனக்கு மனைவி துரோகம் பண்ணிய போதும் அவன் மீது அதிக அளவு அன்பு வைத்து அவளைப் பிரிந்து வாழ முடியாததால் அவளுடன் செல்கிறான். உள்ளத்தை நெகிழ வைக்கும் இக்காட்சிவைக் காட்டிய பின் ''நாய்க்குச் சோறு இடுவது போல்" காட்டியது சற்றும் பொருத்தம் இல்லை என்று நான் எண்ணுகிறேன்.
கணவன் மனைவி புறப்பட்டுப் போவதற்கும் அந்த நாய்க்குச் சோறு போடுவதாகக் காட்டுவதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. காவியாகக் கிடக்கும் டீக்கடையை உப்பிலியின் வண்டி கடந்து செல்லும்போது ஏற்படும் சதங்கைச் சத்தத்தை அந்தக் காட்சியில் கொடுத்திருக்கிறேன். அவ்வளவு தான்.
......
"உப்பிலி தன் மனைவியைத் தேடிப் பணத்துடன் படகில செல்லும்போது சண்டை நடப் பதும், பணம் நீரில் மூழகி மறைந்து விடுவதும்" படத்திற்குத் தேவையானதா?
மதுரை
நா. இராமகிருஷ்ணன்
.....
குழந்தை வேண்டும் என்று கன்னியம்மா ஏங்குவது அவசியம்தானா என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்ல முடியும்? வேலைக்காரியின் கணவனைக் குருடனாகக் காட்டுகிறீர்களே அது அவசியம்தானா என்று கேட் டால் என்ன பதில் தர முடியும்? -
இப்படத்தின் கதாநாயகி கடற்கரையில் தண்ணீர் குடத்துடன் வந்து அமர்வது அவசியம் தானா?
தண்ணீர் குடத்துடன் கடற்கரைக்கு வருவது தண்ணீர் எடுத்துச் செல்லவா? இல்லையே! அவள் எதற்காக அங்கே போகிறான் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே..
,......
'கன்னியம்மா கணவன் இருக்கையில் இன்னொருவளிடம் தன்னை இழந்தது தாம்மை ஏக்கத்தினால்தான் என்று சொல்ல முயன்றிருக்கிறீர்கள். ஆக. அவள் உடன்பட்டான்: அவள் செயல்பட்டாள். பின்னால், அந்த இன்னொருவன் மீது அவள் சாணிமைக் கரைத்துக் கொட்டித், துடைப்பத்தால் அடிக்கிறாள் நேர்ந்து விட்ட தவறுக்கு இருவருமே பொறுப்பு என்னும் போது, குற்றவாளியே கூட்டாளியைத் தண்டிப்பது ஏற்கும்படிவாக இல்லையே?
சென்னை-17
குமரி அமுதன்
நேர்ந்துவிட்ட தவறுக்கு இருவருமே பொறுப்புதான். ஆனால் துடைப் பத்தால் அடிவாங்கும் கூட்டாளி செய்த தவறு நம்பிக்கைத் துரோகம். திட்டமிட்ட ஏமாற்று வேலை.
குழந்தை ஏக்கத்தோடு தன் வீட்டில் தனிமையில் புழுங்கிக்கொண் டிருந்தவளை - கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பக்கம் - சாமர்த்தியமாக- திட்டம் போட்டு இழுத்தவன் தியாகு. அப்பேர்ப்பட்டவன் பிறகு தேடிவந்து புகவிடம் கேட்ட அவளைக் கருணை இல்லாமல் துரத்தி அடிக்கிறான். கடைசி யில் அவனே அவளுக்கு அறிவுரை சொல்ல வருகிருன். அதுவும் எப்பேர்ப் பட்ட அறிவுரை! கன்னியம்மா அவனுக்குத் தரும் தண்டனை கம்மிதான்.
...........
ஆண்டிப்பட்டி மாரியப்பன் "பாடல் காட்சி, படத்துக்குப் பொருத்தமற்று இருகிறது. இது தேவைதானா?
சென்னை-81
கே.எம்.சுப்ரமணி
கடவுள் சத்தியமாகத் தேவையில்லை, பொருத்தமற்றதுதான். சந்தேகமில்லை
,.......
-
நடிகர் சௌந்தர்யா குறித்து ஆர் வி உதயகுமார்
எனது பொன்மணி படத்த்தைப் பார்த்து சௌந்தர்யாவுக்கு சூப்பர்ஸ்டார்சிரஞ்சீவிக்கு ஜோடியா நடிக்கிறவாய்ப்பு வந்துச்சு. அப்போ செளந் தர்யா தெலுங்குல செம பிஸி. 95-97 காலகட்டத் துல தெலுங்கில வருஷத் துக்கு 10 படம் சௌந்தர்யா நடித்து ரிலீஸாகும். அத னால ரஜினி படத்துக்கு கால்ஷீட் இல்லைனு சொல்ல டாங்க
. 'அருணாச்சலம்' ரஜினிசாரோட சொந்தப்பட அதனால் ஒருநாள் அவரே எனக்கு போன்பண்ணி சௌந்தர்யா கால்ஷீட் வேணும் உதய்னு கேட்டார். அடுத்த நிமிஷமே செளந்தர்யாவுக்கு போன் போட்டேன்.
‘நீ ரஜினிசார் படத்துக்கு கால்ஷீட் இல்லைனு சொன்னியாமே... அவர் எவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார் அவங்க போன் பண்றதுக்கு முன்னாடி நீயே போன்பண்ணி கால்ஷீட் கொடுத்துடுனு கொஞ்சம் சீரியஸா சொன்னேன். உடனே சௌந்தர்யாவே போன் பண்ணி அருணாச்சலம் படத்துக்கு கால்ஷீட்டை கன்ஃபர்ம் பண்ணிடுச்சு.
2004, ஏப்ரல் 16--ஆம் தேதி திரும்ப சௌந்தர்யா கிட்ட இருந்து எனக்கு போன். 'சார், உங்க வாழ்க்கைல மறக்க மாட்டேன். சினிமால நீங்க கொடுத்த வாய்ப்பை எப்பவும் நினைச்சுக்கிட்டே இருப்பேன்னு ரொம்ப நேரம் என்னென்னவோ பேசிட்டு இருந்துச்சு. 'உனக்கு என்ன ஆச்சுமா... ஏன் இப்படிலாம் பேசறனு நானும் எப்பவும்போல் பேசிமுடிச்சு பேங வெச்சுட்டேன். மறுநாள் 'கற்க கசடற படத் பூஜை அழைப்பிதழ் கொடுக்க சத்யராஜ் சார் வீட்டுக்கு போனேன். என்னை வாசலில் பார்த்தவுடனே பதறிப் போய் ஓடிவந்து என் கையைப் பிடிச்சுக்கிட்டுக் நின்னார்.
நன்றி.தினமணி தீபாவளி மலர்
பீச் என்ற சிறுகதை குறித்து சாரு அவ்வப்போது பேசுவார். உண்மையில் அதைவிட கவித்துவமான ஒரு பகுதி எக்சைல் நாவலில் வரும். மரங்களைப் பற்றி மட்டுமே ஓர் அத்தியாயம். அழகான விஷுவல் ட்ரீட் அது.
சாருவின் இசை ரசனையின் ஸ்தூல வடிவம் சீரோ டிகிரி என்றால் அவரது சினிமா ரசனையின் ஸ்தூல வடிவம் எக்சைல் எனலாம்.
தான் கற்றதையும் பெற்றதையும் அவ்வப்போது மேடைப் பேச்சுகள், பயிலரங்குகள் சூம் சொற்பொழிவு என பல தளங்களில் பகிர்ந்து வருகிறார். இதற்கு பெரிய ரசிகர் படையே உண்டு,
இந்தப்பின்னணியில் திருவண்ணாமலையில் திரைக்கலை பயிலரங்கம் நடத்துகிறார் என்பது பரவலாக ஆர்வத்தை ஏற்படுத்தியது,
சென்னையில் நடத்தாமல் திருவண்ணாமலையில் நடத்துவது சரியா என்றொரு குழப்பம் எனக்கு இருந்தது.
ஆனால் அரங்கம் நிரம்பும் அளவுக்கு பயிலரங்கம் நடந்து மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இப்படி ஒரு கட்டணப் பயிலரங்கம் இலக்கிய உலகில் இதுவே முதல் முறை.
பலர் முதல் நாள் இரவே திருவண்ணாமலை வந்து விட்டனர். எனக்கு சில பணிகள் இருந்ததால், இரவு 12 மணிக்குதான் சென்னை விட்டு கிளம்பினேன். நான்கு மணியளவில் திருவண்ணாமலை அடைந்து ஒரு ரூம் புக் செய்து சுடச்சுட நாளிதழ்க்கள் படித்து விட்டு, தூங்கி எழுந்து ஃபிரெஷாக கிளம்பினேன்.
நிகழ்ச்சிக்கான தயாரிப்புகளில் சாரு அன்றைய இரவு மட்டுமல்ல.. பல இரவுகள் தூங்கவில்லை. இதற்கான பணிகளில் ஓர் அணியே இரவு பகலாக வேலை செய்தது.
வெகு துல்லியமாக 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது
இப்பயிலரங்கி நோக்கம், இது குறித்து தான் சாருவிடம் சொன்னது என்ன என்பது போன்ற சுவையான தகவல்களை அராத்து பகிர்ந்து கொண்டார்
அதன்பின் பேசிய இயக்குநர் ராஜ் குமார் திரைப்படக்கலையில் சாருவின் பார்வை எந்த அளவு முக்கியம் வாய்ந்தது என்பதையும் சாருவால் தான் உருவானது எப்படி என்பது குறித்தும் இயக்குநர் வெற்றிமாறனுடனான தனது பயணத்தையும் பேசினார்.
அதன் பின் வகுப்பை ஆரம்பித்த சாரு மாலை ஆறு மணி வரை தனி நபராக சரளமாக தங்கு தடையின்றி இடைவிடாத ஞான மழை பொழிந்தார்.
அவரது இசை ரசனை இந்திய தத்துவ மரபின் மீதான பார்வை இலக்கிய ஞானம் போன்றவை திரைப்படக் கலை வகுப்புக்கு வேறொரு புதிய பரிமாணத்தை அளித்தது.
பொருத்தமான சினிமா காட்சிகள், இசைத் துணுக்குகளை பொருத்தமான நேரங்களில் திரையில் ஒளிபரப்பியது அழகாக இருந்தது இதன் முழு அனுபவம் நேரில்தான் முழுமையாக கிடைக்கும்.
அவர் சொல்லும் வெளி நாட்டுப்பெயர்கள் உச்சரிப்பை குறித்துக் கொள்வது பார்வையாளர்களுக்கு சிரமம் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அதற்கொரு ஏற்பாட்டைச் செய்வதற்காக நண்பர் ஸ்ரீராமை முன்வரிசையில் அமர வைத்த திட்டமிடல் வியக்க வைத்தது.
பீச் சிறுகதை கபிலர் ஆதி சங்கரர் நீட்சே மற்றும் உலகத் திரைப்படம் எப்படி ஒரு புள்ளியில் சந்திக்கின்றன என அவர் விளக்கியது ஒரு வாவ் கணம்
நிம் விளையாட்டு, ட்ரூத் வெர்சஸ் ரியாலிட்டி, புத்தர், நிலவின் பிரதிபலிப்பு என ஒவ்வொரு கணமும் கவிப்பூர்வமான நகர்ந்தன. சில கதாபாத்திர வரிகளைச் சொல்லும்போது சாருவே அந்தப் பாத்திரமாக மாறும் ரசவாதமும் நடந்தது.
இயற்கை சூழலில் அமைந்த நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்த ஆடிட்டோரியம் தரமான மதிய உணவு என உலகியல் விஷ்யங்களும் வெகு சிறப்பு
இதைத் தவிர தனிப்பட்ட முறையில் ஒரு காமெடியான அனுபவம். நிகழ்ச்சிக்கான கட்டணம் செலுத்த விரும்புபவர்கள் இப்போது செலுத்தலாம் என அறிவித்தவுடன் சாரு வாசக வட்ட அட்மினை அணுகினேன்.
அதை குறிப்பேட்டில் குறித்துக்க்கொள்ளும் பொருட்டு உங்க பேரு , ஊரு சொல்லுங்க சார் என்றார் அவர்
நம்மை தெரியாத அளவுக்கு புதிது புதிதாக பலர் வந்துள்ளார்களே என்பது மகிழ்ச்சியாக இருந்தது
,மீண்டும் மீண்டும் ஒரே நபர்கள் என்பது தேங்கல் நிலை. நிகழ்ச்சியில் பழைய நபர்கள் வெகு குறைவு. பெங்களூரு ஹைதரபாத் என பல்வேறு இடங்களில் இருந்து வந்து இருந்த புதிய நண்பர்களே மிக அதிகம்.
இதுதான் சாரு நிவேதிதாவின் வெற்றி
25.8.2020. காணொலி, காணொளி - இரண்டில் எது சரி என்றொரு விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாகப் பின்னணி விவரங்களைக் கூறினால் புரிந்து கொள்வீர்கள்.
காணொலி− கவிஞர் தாமரை விளக்கம்
காணொலி என்றே நான் எழுதி வருகிறேன்.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒலி மட்டுமே இருந்து வந்தது, அதாவது வானொலி, கிராமபோன் ரெக்கார்ட் போல....
படம் பார்க்க வேண்டுமானால் திரைப்படமாக, திரையரங்குக்குப் போய்தான் காண வேண்டும். இந்நிலையில், கோவை சிதம்பரம் பூங்கா நேரு விளையாட்டரங்கில் ( Stadium ) நாடகக் காட்சி, இயைந்து போகும் இசை - என ஒரு நிகழ்ச்சி முதன்முதலாக அறிமுகப் படுத்தப் பட்டது. பாரதியார் வாழ்க்கை அல்லது கண்ணகி காதை - சரியாக நினைவில்லை ! நான் பாவாடை சட்டை அணிந்து சிறுமியாக இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தது புகைமூட்டமாக நினைவிலிருக்கிறது 😍...
அதற்கான விளம்பரமாக ' அனைவரும் திரண்டு வாரீர்... ஒலி-ஒளி நிகழ்ச்சி காண' என்று அறிவிப்பார்கள்.
அவ்வகையில் 'ஒலி-ஒளி' எனும் புதிய வகை நிகழ்ச்சி அறிமுகப் படுத்தப் பட்டது.
( இதில் அரை வட்டப் பரப்பில், விட்டு விட்டு நான்கைந்து மேடைகள் இருக்கும். ஒரு காட்சி ஒரு மேடையில் முடிந்ததும், அந்த மேடை இருட்டாக்கப்பட்டு, அடுத்த மேடையில் ஒளி பாய்ச்சப் பட்டு அடுத்த காட்சி அதில் தொடரும்... இப்படியாக ஒளி மாறி மாறித் தோன்றும், பாத்திரங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட வசனங்களுக்கு வாயசைத்து நடிப்பர். மக்களுக்கு ஒலி எங்கிருந்து வருகிறது என்று தெரியாது. ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் கணீரென்று எல்லோருக்கும் கேட்கும் ). இது அந்தக் காலத்தில் மக்களுக்குப் பெரும் வியப்பை அளித்தது. வரவேற்புப் பெற்றது. ஒலி-ஒளி எனும் பெயர் வந்தது இப்படித்தான் !.
பிறகு, பொதிகை ( தூரதர்ஷன் ! ) தொலைக்காட்சியில் பாடலும் காட்சியுமாக நிகழ்ச்சி ஆரம்பித்த போது, அதற்கு 'ஒலியும் ஒளியும்' என்றே பெயர் சூட்டினார்கள். மிகப் பிரபலமான நிகழ்ச்சி அது !. தனியாகக் கேட்ட திரைப்படப் பாடல்கள், காட்சியோடு சேர்ந்து கிடைப்பதைக் குறித்தது !.
அதாவது நாம் ஒலியாகக் (பாடல்) கேட்டு இரசித்தவை, ஒளியாகவும் (காட்சியாகவும்) கிடைக்கப் பெற்றன 💃😀.
பாடலைக் காணுதல் என்பதுதான் 'காணொலி'... 😀
இதுவே பின்னாளில், audiovisual AV என்பதைக் குறிக்கும் காணொலியாக வளர்ந்தது !.
காட்சி+ஒலி... அவ்வளவுதான் !.
'ஒலியொளி' 'ஒளியொலி' போன்ற சொற்கள் புழக்கத்தில் தொடராததற்கு மற்றுமொரு மாபெரும் காரணம் 'லகர' 'ளகர' உச்சரிப்பு பலருக்கும் தகராறாக இருந்ததுதான் 😊.
'காணொளி' என்பது காணும் காட்சி அவ்வளவுதான், இதில் எந்த நுட்பமும் இல்லை, ஒலி என்பதை உள்ளடக்கவும் இல்லை.
ஒலியை எப்படிக் காண முடியும் என்று கேள்வி எழுப்புவது அறிவியல் ரீதியாகச் சரி !. கலாபூர்வமாகத் தவறு !. இப்போதும் அறிவியல் கலைச் சொல்லாக்க அறிஞர்கள் இந்தச் சொற்களை ( காணொலி, காணொளி ) ஏற்பதில்லை. கவித்துவமாக இருப்பதாலும், காரணப் பெயராக இருப்பதாலும்
நான் இப்போதும் காணொலி என்பதையே பயன்படுத்துகிறேன். ஏனென்றால் இது அந்தக் காலத்தில் இருந்து தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் சொல் !. நன்றாகவும் இருக்கிறதே, பயன்படுத்தலாமே !.
'கேளா ஒலி' என்று ஒன்று இருக்கிறது தெரியுமா உங்களுக்கு ? 😊.
ஒலி என்றாலே கேட்பதுதானே, அதெப்படி 'கேளா ஒலி' என்று ஒன்று இருக்க முடியும் எனக் கேள்வி எழும்பும்.
ஒலிகளில் மனிதக் காது கேட்கக் கூடிய அலைவரிசை, அலை அதிர்வெண் வீச்சு ( frequency range ) உள்ளது. அதற்குக் கீழ் அல்லது மேலாக (20 Hz - 20,000 Hz) இருக்கக் கூடியவற்றை மனிதக் காதால் கேட்க முடியாது. அதற்காக அங்கு ஒலியே இல்லை என்று கூறி விட முடியாது. மேலே உள்ள ஒலியை ultrasonic sound என்று அழைக்கிறோம். இந்த அல்ட்ராசானிக் ஒலியைப் பலவிதங்களிலும் தொழில்நுட்பமாகப் பயன்படுத்துகிறோம். தமிழில் இதைக் 'கேளா ஒலி' என்கிறோம். எவ்வளவு கவித்துவமாக இருக்கிறது பாருங்கள். நான் தமிழில், ஒரு திரைப்படப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறேன். 😊. ( படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள். பாடல் : யார் அவள் யாரோ )!. ☺
கேளா ஒலியைக் கேட்கும் தன்மையுடைய ஓர் உயிரினம் வௌவால் ☺.
பி.கு.
Humans can detect sounds in a frequency range from about 20 Hz to 20 kHz. (Human infants can actually hear frequencies slightly higher than 20 kHz, but lose some high-frequency sensitivity as they mature; the upper limit in average adults is often closer to 15–17 kHz.)