Thursday, May 12, 2011

உலகை படைத்தது கடவுளா? அறிவியலா?- சூப்பர் புத்தகம்

 In the beginning there was neither existence
nor non-existence,
All this world was un manifest energy . . .
The One breathed, without breath, by Its own
power Nothing else was there . . .
— Hymn of Creation, The Rig Veda
 
எத்தனையோ அறிவியல் புத்தகங்கள் வந்துள்ளன. அதில் சற்றே வித்தியாசமான புத்தகம்தான் , ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியுள்ள த கிராண்ட் டிசைன் என்ற புத்தகம்..
ஏன் அப்படி சொல்கிறேன்… ? காரணம் இருக்கிறது..
உலகம், இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது… நாம் எப்படி உருவானோம் என்பது மனித இனத்தின் நீண்ட நாள் தேடல்… எப்படி தோன்றியது என்பது ஒர் கேள்வி என்றால் ஏன் தோன்றியது என்பது இன்னும் சுவாரஸ்யமான கேள்வி..
இதற்கு ஆன்மீகம் சில விடைகளை தருகிறது… அறிவியல் சில விடைகளை தருகிறது… ஒரு தரப்பு சொல்வதை இன்னொரு தரப்பு ஏற்பதில்லை.
எனவே இது சம்பந்தமாக எழுதப்படும் புத்தகங்கள் பெரும்பாலும் ஒரு தலைப்பட்சமாக இருக்கும்.  தகவல்களை மறைத்தோ, திரித்தோ எழுதுவார்கள்…
இந்த நிலையில் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அறிவியல் மேதை , இந்த டாபிக் குறித்து என்ன எழுதி இருக்கிறார் என தெரிந்து கொள்ளும் ஆவலுடன் புத்தகத்தை புரட்டினேன்..
படிக்க படிக்க சந்தோஷம் , வியப்பு, பரவசம், என பல்வேறு உணர்ச்சிகள் ஏற்பட்டன…
 
அவர் என்னதான் சொல்கிறார்…
பாருங்கள்…
 
  • உலகத்தை படைக்க கடவுள் தேவை இல்லை… இயற்பியல் விதிகளே போதுமானவை…
  • உலகை யாரேனும் ஒருவர் உருவாக்கி இருக்க முடியாது.
  • கடவுள் உலகை உருவாக்கி இருந்தாலும், அவர் இஷ்டத்துக்கு உருவாக்கி இருக்க முடியாது..இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டே அவர் செயலாற்றி இருக்க முடியும்..
சரி…
இதை எல்லாம் சொல்லி விட்டு , வேறு என்ன சொல்கிறார் என்பதே புத்தகத்தை சுவை மிக்கதாக்குகிறது..
  • ஒன்றும் இல்லாத நிலையில் இருந்தே ( சூனியத்தில் இருந்தே ) உலகம் தோன்றி இருக்கிறது… உலகம் அழிந்து சூனியம் ஆகி விட்டாலும், அந்த சூனியத்தில் இருந்து மீண்டும் உலகம் தோன்றும்.
  • அறிவியல் சொலவ்து எல்லாம் முழு உண்மை என சொல்ல முடியாது… ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து உலகை பார்க்கும் மீன், தன் கண்ணுக்கு என்ன தெரிகிறதோ அதைத்தான் உண்மை என நம்பும்.. அதை பொருத்தவரை அதுதான் அதற்கு அறிவியல் உண்மை. அதே போல , நம் புலன்களுக்கு புலப்படும் விஷ்யங்களை வைத்து சில முடிவுகளுக்க்கு வருகிறோம். இது முழு உண்மை என சொல்ல முடியாது… நம் புலன்கள் சார்ந்த உண்மைதான் இது..
  • சில விஷயங்களை தீர்மானமாக கண்டு பிடிக்கவே முடியாது
  • சில பொருட்களை பார்க்க முடியாது.. சில சோதனைகள் மூலம் அவை இருக்கின்றன என நிரூபிக்க முடியும்
  • நாம் செய்யும் சோதனை ,  சோதனையின் முடிவை பாதிக்க கூடும்..
  • காலம் என்பது மாறக்கூடியது… ஒருவருக்கு நூறு வருடங்கள் என்பது இன்னொருவருக்கு ஒரு நாள் ஆக இருக்கலாம் ( சில சினிமாக்களை பார்க்கும் போது வெகு நேரம் படம் ஓடுவதாக தோன்றும். சில படங்கள் சீக்கிரம் முடிவது போல இருக்கும். இது மன ரீதியானது… புத்தகம் பேசுவது இதை அல்ல )
  • க்ரியேஷன் என்பதன் சாத்தியக்கூறுகள் எண்ணற்றவை… ஒவ்வொன்றும் அதனதன் அளவில் உண்மைதான்..
  • அறிவியலின் ஆழத்துக்கு செல்ல செல்ல, நம் அன்றாட வாழ்வின் உண்மைகள் அர்த்தம் இழக்கின்றன….
இதை எல்லாம் படித்தால், அறிவியல் போல தோன்றுகிறதா அல்லது ஆன்மீகம், தத்துவம் போல தோன்றுகிறதா?
அறிவியல் பூர்வமாக உலகம் எப்படி தோன்றியது? கடவுள் இருக்கிறாரா? பிரபஞ்சம் என்பது என்ன? காலம் என்பது என்ன? விரிவாக அடுத்த பதிவில்…
(தொடரும் )

5 comments:

  1. அடுத்த பதிவை வாசிக்க ஆவலைத் தூண்டி விட்டு இருக்கும் பதிவு.

    ReplyDelete
  2. தகவலுக்குப் பதிவுக்கும் நன்றிகள் - கடவுள் என்பது நாத்திகத்துக்கும், ஆத்திகத்துக்கும் இடையில் இருக்கும் ஒன்று. ஆத்திமகும், நாத்திகமும் இரண்டும் மெய்யுமில்லை, பொய்யுமில்லை என்பதாகத் தான் இருக்கின்றது ...............

    ReplyDelete
  3. நன்றி பார்வையாளன். அடுத்த பதிவுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. http://img405.imageshack.us/img405/5721/thegranddesignstephenha.jpg


    ஆச்சரியமா இருக்கு);
    நன்றி

    ReplyDelete
  5. [im]http://img405.imageshack.us/img405/5721/thegranddesignstephenha.jpg[/im]

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா