Tuesday, July 2, 2013

சர்வதேச விருதை குறி வைக்கும் சாருவின் நாவல்- வரலாற்று தருணத்தில் தமிழ் படைப்புலகம்


  உலக அளவிலான நாவல்களுடன் போட்டியிட்டு , கடைசி சுற்றுக்கு முன்னேறி, கிட்டத்தட்ட 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுவிஸ் இலக்கிய விருது கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது என்ற நிலையில் சாரு நிவேதிதா இருப்பது தமிழ் இலக்கிய உலகில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் , நடுனிலை  இலக்கியவாதிகள் , ஒரு தமிழ் எழுத்தாளனின் நாவல் உலக அரங்க்குக்கு செல்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



உலக அளவில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து ஸ்விஸ் நாட்டின் Jan Michalski விருது ஒவ்வொரு ஆண்டும் வ்ழங்கப்படுகிறது.


தகுதி வாய்ந்த நடுவர்கள் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுப்பார்கள்.


முதல் மூன்று இடம் பிடிக்கும் எழுத்தாளர்கள் , சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்ப்பட்டு ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள இலக்கிய வீடு Maison de l’Ecriture எனும் பிரமாண்ட நகரத்தில் மூன்று மாதங்கள் தங்க வைக்கப்படுவார்கள்.




இந்த நகரம் எழுத்தாளர்களுக்காக சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்டபகுதியாகும். வசதியான அறைகள் , உணவகம் , நூலகம் , கண்காட்சியகம் என எல்லாமே இதில் இருக்கும்.


நவம்பரில் முடிவு அறிவிக்கபடும், வெல்வோர் முப்பது லடசம் ரூபாய்களை பரிசாக பெறுவார்.


இந்த் ஆண்டுக்கான போட்டியியில் 11 புத்தகங்கள் இறுதி சுற்றில் உள்ளன.


இறுதி சுற்றுக்கு வந்த புத்தகங்களில் சாருவின் ஜீரோ டிகிரியும் ஒன்று.


இதில் மற்றவை அனைத்தும் ஒரே ஃபார்மேட்டில் இருக்கும் நிலையில் ஓர் உன்னதமான பின் நவீனத்துவமான படைப்பான சீரோ டிகிரி மிக மிக வேறுபட்டு இருப்பதால் அதற்கே பரிசு கிடைக்கும் என இப்போதே பேசப்பட்டு வருகிறது.

மற்ற புத்தகங்களை சாதாரணமாக மதிப்பிட்டு விட முடியாது. கறாராக பரீசிலித்துதான் ஷார்ட் லிஸ்ட் செய்து இருக்கிறார்கள். சீரோ டிகிரி களத்தில் இல்லாவிட்டால், ஒவ்வொரு புத்தகமுமே முதல் பரிசுக்கு தகுதியானவைதான். ஆனால் சீரோ டிகிரி களத்தில் இருப்பதால் , இப்போதே பரிசி உறுதி என்கிறார்கள் நடு நிலையாளர்கள்.

எனக்கும் சீரோ டிகிரிக்கும் இடையேயான தொடர்பு இன்று நேற்றல்ல. பல காலமாக நீடித்து வருகிறது. என் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் படித்து இருக்கிறேன் . வாழ்வின் கஷ்ட நஷ்டங்களை அறியாத பருவம்.,வேலையில்லாமல் கஷ்டப்பட்ட காலகட்டம்., மகிழ்ச்சியான கால கட்டம், இலக்கிய பரிச்சயம் ஏற்பட்ட கால கட்டம் என ஒவ்வொரு நிலையிலும் படிக்கும்போது ஒவ்வொரு உணர்வை தந்து கொண்டு இருக்கிறது சீரோ டிகிரி.

அதனால்தான் இன்னும் அதைப்படித்து கொண்டே இருக்கிறேன். என்னால் என்றுமே முடிக்க முடியாத நாவல் இதுதான்.

என்னிடம் சீரோ டிகிரி பிரதிகள் எத்தனை இருக்கின்றன என எனக்கே தெரியாது. வெவ்வேறு இடங்களில் , வெவ்வேறு சூழ்னிலைகளில் சீரோ டிகிரி காப்பிகளை வாங்கிப்படிப்பது என் வழக்கமாக இருந்து இருக்கிறது.

இத்தனைக்கும் சாரு எழுத்தில் எனக்கு பிடித்தது எக்சைல்தான். அதற்கு பிறகு ராசலீலா. ஆனால் அவை எல்லாம் ஒரு காப்பிதான் இருக்கின்றன. சீரோ டிகிரியில் மற்ற புத்தகங்களில் இல்லாத  வேறு ஏதோ ஒன்று , வரையரை செய்ய முடியாத ஒன்று இருக்கிறது.

என்சைக்களோபீடியாகவாக , கவிதை நூலாக, சிறுகதை தொகுப்பாக , நாவலாக என விதம் விதமாக ரசித்து படித்தாலும் இதை இன்னும் படிக்க முடிக்க முடியவில்லை.

எத்தனையோ வரிகளை மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருக்கலாம்.

  • பூனைக்குட்டிகளை யாராவது வெறுக்க முடியுமா என்ன? கறுப்பு பூனைக்குட்டி , வெள்ளை பூனைக்குட்டி, பழுப்பு பூனைக்குட்டி. பூனைக்குட்டிக்ளை நான் ஆராதிக்கிறேன். முத்தமிடுகிறேன். பூனைக்குட்டிகள் மிகவும் ருசியானவை.
  • ஊசிமுனை வழியே யானையை இழுத்து செல்லும் செப்படி வித்தை - எழுத்து
  • எழுத்து வாழ்க்கையை பற்றியதல்ல, எழுத்து எழுத்தைப் பற்றியது
  • தேசிய கீதத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?   “ நான் அதைப் பிரதியாக பார்க்கிறேன். இலக்கியப்பிரதியாக “   -இந்த பதிலுக்காகவே உங்களுக்கு நோபல் பரிசு கொடுக்கணும். என்ன பதிலு சார். எப்படித்தான் உங்க மூளைல இப்படியெல்லாம் உதிக்குதோ. ம்ம். நானும் அந்த காலத்துல இப்படி இருந்தவன் தான்.
  • தமிழ் மொழி என்பது எத்தனை இனக்குழுக்களின் மொழிகளை ஒழித்துக்கட்டி விட்டு உருவானதென்பது உத்தம தமிழ் எழுத்தாளனுக்கு தெரியுமா?
  • கைக்குள் சிக்கவில்லை
           இருந்தும்
          
            தன் முதல் கவிதையை எழுதிக்கொண்டிருக்கிறது

             மொழி

  • சூன்ய மொழி 
          சீழ் பிடிக்க
         ஒற்றைக் கண்ணில் இருந்து
         ஒழுகியது
         கவிதை

  • இப்படித்தான் இது தோன்றியது எனில் இத்தோற்றங்களின் தோற்றம் எப்படி இருந்தது?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

 நான் ரசித்து படித்த நாவல் உலக அளவில் கவனம் பெற்று இருப்பது மட்டுமே என் மகிழ்ச்சிக்கு காரணம் அல்ல/

இதன் மூலம்  உலக அரங்கில் தமிழும் கவனம் பெறுவது ஒட்டு மொத்த தமிழ் இலக்கியத்துக்கே நல்லது என்ற வகையில் , இதை தமிழ் எழுத்துலக வரலாற்றின் திருப்பு முனையாகவே கருதுகிறேன்.

             ***************

 நான் கருதுவதெல்லாம் இருக்கட்டும். கவிஞர் றியாஸ் குரானா இது குறித்து என்ன சொல்கிறார்?


எனது நேர்காணலில் சாருவுக்கு புக்கர் பரிசு கிடைக்கும் என்று சொன்ன ஞாபகம் வருகிறது. சீரோ டிகிரிக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளது. எனது இனிய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

1. காப்பி அடிப்பவர், எழுத்தை வைத்து மிக மோசமான அரசியலை செய்பவர் என பல விமர்சனங்கள் இருந்தாலும் தமிழிலிருக்கும் மிகக் கவர்ச்சிகரமான, உலகத்தரத்திலான கதைசொல்லி சாரு நிNவேதிதாதான். உலகத்தரத்தில் பலருடைய கதைகள் இருந்தாலும் சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் கொண்டிருக்கின்ற கவர்ச்சி தமிழில் வேறு யாரிடமும் இல்லை. இது நிரந்தரமான ஒரு கருத்து அல்ல. வாசிப்பு விரிவுபடும்போது மதிப்பீடுகளும் மாற்றமடைகின்றன.

2.கவரச்சிகரமான எழுத்து - நீண்ட நேரம் ஒரே வகையான சூழலுக்கள் பார்வையாளரை வைத்திருப்பதில்லை. பலவகையான பொருட்கள் உள்ள ஒரு வியாபார நிலையத்தைப்போல, இங்குமங்குமாக பலவகையான பொருட்களை பரப்பி வைத்திருப்பவை. எல்லா வகையான பார்வையாளர் களுக்குமான சாமான்கள் அங்கு கிடைக்கும்.மிக மோசமானது எனக் கருதப்படுபவைகள் தொடங்கி உயர்தரமானவைகள் என கருதப்படுபவைவரை அங்குண்டு. ஒரே இடத்தில் எல்லாம் பார்வைக்குண்டு. பன்மையான பார்வையாளர்களை அங்கு சந்திக்க செய்யும். விதம் விதமான பார்வையாளர்களை ஒரே இடத்தில் கூட்டிவிடக்கூடிய பிரதி என்பதால் அப்படிச்சொன்னேன். சாருவின் பிரதியைக் கையிலெடுக்கும் ஒருவர் அதை தூக்கிவீசிவிட முடியாது.ஏனெனில், அவர் எதிர்பார்ப்பவைகளும் சிறிதளவிலேனும் அங்கு கிடைக்கும். இது தமிழில் வேறு எந்த எழுத்தாளர்களின் பிரதியிலும் இல்லை. அது ராய் இசைபோல ஒரு கலப்பினம்.

3.உலகத்தரம் - எந்த வகையான கோட்பாட்டு வாசிப்புக்களுக்கும் இடந்தருபவை.கோட்பாடுகளுக்கு அப்பாலும் லைற்றீடிங்குக்கும் இடந்தருபவை. சாருவின் பிரதிகளை வாசிக்கும்போது, எப்போதோ வாசித்த பல கோட்பாடுகள், ரசனை மதிப்பீடகள், சாதாரண செய்திபற்றிய கருத்து நிலைகள் என பலவற்றை மீண்டும் நமக்குள் கிளர்த்துகின்றன. இப்படியான காரணங்களால் அது உலகத்தரமானது என்றும் கூறினேன். உலகத்தரமென்று ஒன்று தனிப்படையான வரையறைகளுக்குள் இல்லை என்று புரிந்திருக்கின்ற நிலையிலே - உலகத்தரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன் என்பதையும் தெரிவிக்கிறேன்.

4.சூப்பர் மாக்கெட்டில் சாமான்கள் பரப்புவதைப்போன்ற அம்சம் மற்றவர்களிடம் இல்லை என்றுதான் சொன்னேன்.மற்றவர்களின் கதைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. மிக மலிவான பொருட்களைக் கொண்டும் பெறுமதிமிக்க ஒன்றை உருவாக்க முடியும் என்பதையே சாரு நிவேதிதாவின் எழுத்துக்களில் பார்க்கிறேன்.அதுவே கவர்ச்சிகரமானதாக எனக்கு தோன்றுகிறது.

5.பெறுமதி - பிரதியை உருவாக்கும் பணியில் வாசகனின் பங்களிப்பை ஏற்பவன் என்ற வகையில், பலவகைப்பட்ட வாசகர்களின் இருப்பையும் ஏற்பவன்.அது அவசியமென்றும் கருதுபவன்.ஆக, பிரதியை அர்த்தப்படுத்தும் வழிகளில் அனைத்து வகை பார்வையாளர்களும் பங்காற்றக்கூடிய இடத்தை தன்னகத்தில் கொண்டிருக்கும் கதைகளாகவே சாருவின் நாவல்களைப் பார்க்கிறேன்.அதுவே அதற்கான பெறுமதி என்றும் கருதுகிறேன்.மற்றப்படி, அகவிரிவாக்கதில் சுயவிமர்சனத்தை தவறவிடும் தருணங்கள் போன்ற உங்கள் ஏனைய விமர்சனங்கள் எனக்கு உடன்பாடனவைதான். அதை நான் எனது நேர்காணலில் சொல்லியிருக்கிறேன்.





3 comments:

  1. ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது சாரு. சரி, விருது பேரென்ன? அவங்க இணையதள முகவரி தர முடியுமா?

    ReplyDelete
  2. ஸிரோ டிகிரியை மூன்றாவது முறையும் வாசிக்கவேண்டும் போலிருக்கு..
    மனதாரச் சொல்கிறேன் - சுவிஸ் இலக்கிய விருது நிச்சயம் கிடைக்கவேண்டும் என் இலக்கிய குருவிற்கு.

    ReplyDelete
  3. என்ன இரண்டாவது சுற்றில் கூட வரலையாமே.
    பாவம்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா