Wednesday, July 24, 2013

கவிதை எழுவதில் விஞ்சி நிற்கும் நாத்திகம். உதவுவதில் விஞ்சி நிற்கும் இஸ்லாம் - டைம்ஸ் வெளியிட்ட அதிரடி ஆய்வு

அதீத உணர்ச்சிவசப்படுதலை மட்டுமே தன் ஒரே பலமாக கருதும் ஓர் இனம் உலகில் உண்டு என்றால் அது நம் தமிழ் சமூகம்தான்.

நெட் மூலம் குற்றங்கள் என செய்தி வருகிறதா ? நெட்டை தடை செய் என ரெண்டு நாள் உணர்ச்சி வசப்பட்டு டீக்கடை விவாதங்கள் நடக்கும்.

எங்காவது ஜாதி சண்டை என செய்தியா , ஜாதி ஒழிந்தால்தான்யா நாடு உருப்படும் என தீர்வு சொல்லி விட்டு வழக்கமான வேலையை தொடர்வார்கள்.

இந்த உணர்ச்சிவசப்படுதலால் கிடைக்கும் மனரீதியான அனுகூலம் என்ன ?  நாம் எந்த விதத்திலும் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது . என்றோ ஒரு புதிய உலகம் உருவாகபோகிறது..அப்போது எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் வழக்கம்போல சிங்கம் பட பார்த்து சும்மா இருக்கலாம். இப்படி சும்மா இருக்கும் குற்ற உணர்ச்சியை மறைக்கத்தான் உணர்ச்சிவசப்படல்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் பலருக்கு அன்றாட வாழ்வில் தொடர்பு இல்லை. பக்கத்து வீட்டுக்காரர் பெயர் கூட தெரியாத நகர வாழ்க்கை.

டிவி மூலமும் பேப்பர் மூலமும்தான் உலகம் அறிமுகம் ஆகிறது. இந்த அறிவைக்கொண்டு உலகை அணுகுவதால் , அந்த போலியான பொது அறிவு மேலும் மனதில் வலுப்பெறுகிறது.

 நல்ல வேளையாக எனக்கு இத்தகைய நகர வாழ்க்கையில் இள வயது அமையவில்லை. பக்கத்தில் இருந்த இஸ்லாமியர்கள் வீடுகளுக்கு சென்றுதான் விளையாடிக்கொண்டு இருப்பேன். அவர்கள் இஸ்லாமியர்கள் , நான் ஹிந்து என்பதெல்லாம் இப்போது யோசித்தால்தான் தெரிகிறது. அந்த வீட்டில் இருந்த இஸ்லாமிய தாய்மார்கள் , சகோதரிகள் எந்த வேறுபாடும் இல்லாமல் அன்பாக பழகுவார்கள். குறிப்பிட்ட நேரம் ஆனதும் சிலர் பாய் விரித்து தொழுகை நடத்துவது அந்த வயதில் ஆச்சர்யமாக இருக்கும். என்னவோ சாமி கும்பிடுகிறார்கள் என நினைத்து கொள்வேன்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என விளக்கி அவர்கள் மத மாண்புகளை சொல்லித்தர முயன்றதே இல்லை.

அதே போல நான் படித்த கிறிஸ்தவ பள்ளியிலும் , அங்கிருந்த மதர், சிஸ்டர்கள் அவ்வளவு அன்பாக இருப்பார்கள். அவர்களும் தம் மதம் குறித்து என்னிடம் சொல்லியது இல்லை.

ஆக மதம் குறித்த பிரஞ்ஞையே எனக்கு சிறிய வயதில் இல்லை , மத ஈடுபாடுகொண்டோர் மத்தியில் வாழ்ந்த போதிலும்.

அதே போல நோன்பு கஞ்சி வாங்கி குடித்ததும் இனிய நினைவுகளாக உள்ளது. சிலர் வீட்டுக்கே வந்து தருவார்கள். ஆனால் எனக்கு அதில் கிக் இல்லை. வீட்டில் ஒரு பாத்திரம் எடுத்து கொண்டு , சின்ன பசங்களுடன் சேர்ந்து போய் வரிசையில் நின்று வாங்கி , வீட்டுக்கு கொண்டு வருவது பெருமையாக இருக்கும். செம சூடாக இருக்கும். நீராவி பட்டு பாத்திர மூடி வியர்ப்பது ஆச்சர்யமாக இருக்கும்.

அலுவலகங்களில் சிலர் கொண்டு வந்து தருவார்கள். ஆனால் அன்று பெற்ற உணர்வு  இனி ஒரு போதும் வராது.

இத்தகைய அனுபவங்கள் ஏதும் இல்லாமல் , ஃபேஸ்புக் மூலம் உலகை காணும் சிலர் மொக்கை கவிதைகள் சிலவற்றை வைத்து ம்தம் சார்ந்த தம் பார்வையை அமைத்து கொள்கின்றனர்.

ம்தம்தான் உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்பது போலவும் , மதம் இல்லாவிட்டால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும் என்பது போலவும் ஓர் எண்ணத்தை இணையத்தை மட்டுமே  வாழும் அப்பாவிகள் மனதில் பதிக்கிறார்கள்.

கீழ்காணும் சில கவிதைகளை ( ?? !! ) பாருங்கள்.

 நான் ஓர் ஆத்திகன் தான்.
ஆனால்
ஏழையின் இறுதி யாத்திரைக்கு காசு இல்லாதபோது
மெக்கா யாத்திரை செல்லும் அளவுக்கு கொடூரமானவன் அல்ல

உணவு வேண்டும் என பிரார்த்தித்தான் ஒருவன்.
உன் தேவையை நீ சொல்லி அறிய வேண்டிய
கடவுள் தேவையேயில்லை என்றேன் நான்.

தேவாலய பராபமரிப்புக்கு காசு கொடுக்காமல்
ஏழைக்கிழவியின் வீட்டை கட்டி கொடுத்தேன்
அவள் சிரிப்பை விட கடவுள் ஒன்றும் உயர்ந்தவர் அல்லர்.

அழும் குழந்தையை தவிக்க விட்டு
பாலாபிஷேகத்தால் மகிழும் கடவுள்
கடவுள்தானா?




இந்த பாணி கவிதைகளை ( ?? !! ) படிக்கும் அப்பாவிகள் மனதில் இயல்பாகவே நினைப்பார்கள்.  ” மத நம்பிக்கை கொண்டவர்களைவிட நாத்திகவாதிகள்தான் உதவிகள் செய்வார்கள் , அள்ளி அள்ளி கொடுப்பார்கள் போல ”

ஆனால் உலகளவில் பிரபலமான ஊடகம் டைம்ஸ் மேற்கொண்ட ஆய்வு முற்றிலும் மாறுபட்ட சித்திரத்தை அளிக்கிறது.

பிரிட்டனில்  யார் அதிகம் அறக்கொடை அளிக்கிறார்கள் என்ற ஆய்வுக்கு கிடைத்த பதில் ஆச்சர்யம் அளித்தது.

நன்கொடை கொடுப்பவர்கள் பட்டியல் கீழ்கண்டவாறு அமைந்தது.. ஒவ்வொரு தனி மனிதனும் சராசரியாக அளித்த நன்கொடை 

இஸ்லாமியர் - 371 யூரோக்கள் 
யூதர்கள் - 270 யூரோக்கள் 
ப்ரோடஸ்டன்ஸ் கிருத்துவர்கள் - 202 யூரோக்கள் 
கத்தோலிக்க கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்று அதிகம்
மற்ற கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்று குறைவு 
நாத்திகர்கள் - 116 யூரோக்கள்

வாழ்க்க்கையில் நன்கொடையே கொடுக்காதவர்கள் பட்டியலும் எடுத்தார்கள். அதில் முதலிடம் பெறுவது நாத்திகர்களும் , யூதர்களும்தான். 

நாத்திகர்கள் கவிதை எழுதி ஊருக்கு உபதேசம் செய்வதுடன் நின்று விட, இஸ்லாம் ஏன் விஞ்சி நிற்கிறது என்றால் அதில் இருக்கும் கடுமையான சட்டங்கள் , வழிகாட்டுதல்கள்.

தன் வருமானத்தில் இத்தனை சதவிகிதம் தானம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையே உண்டு.

எல்லா மனிதர்களிடமும் இருக்கும் தனி நபர் ஒழுக்க கேடு இஸ்லாம் மதத்திலும் இருக்க கூடும். ஆனால் ஒட்டு மொத்தமாக பார்த்தால் , அந்த மத கோட்பாடுகளால் நன்மையே ஏற்படுகிறது என்கிறது ஆய்வு.


ஒரு சிலர் மதங்களை தவறாக பயன்படுத்தினாலும் ஒட்டு மொத்தமாக நன்மை செய்கிறது.

( பெரியார் போன்ற ) ஒரு சிலர் நாத்திகத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினாலும் , ஒட்டுமொத்தமாக அது திண்ணைபேச்சுக்கே பயன்படுகிறது என்கிறது ஆய்வு. 





23 comments:

  1. தங்களின் மீது அமைதி நிலவுவதாக சகோ.!

    மிகவும் அழகான சிந்தனையை பதிந்திருக்கிறீர்கள்...வருடத்திற்கு ஒருமுறை கிடைக்கும் நோன்புக்கஞ்சி நமக்கும் அலாதியானதே..! கஞ்சி அதிகம் வேண்டும் என்பதற்காக மாறுவேசம் போட்டு மீண்டும் ஒருமுறை சென்று வாங்கி வரும் அளவு கஞ்சி மீது பிரியம் உண்டு..மாறு வேஷம் என்றால் பெரிய அளவில் ..கைக்குட்டையை தலையில் கட்டி ஒரு வேஷம் (!) கட்டாமல் ஒரு வேஷம் (!) ...அன்றைய நாட்களை இப்போது நினைத்தாலும் ரம்மியமானது.!

    அப்பறம் நாத்திகர்கள் என்று கூறி கொள்வோர் அடிப்படையிலேயே நன்மைக்கு எதிரானவர்களே ! ..தனக்கு கேள்வி உண்டுன்னு நம்புரவர்கள் கூட இரண்டுக்கு ஒன்று என நல்லது செய்ய வாய்ப்பு உண்டு...ஆனால் இறந்த பின் ஒன்றும் கிடையாது என்று நம்புபவர்கள் நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பது கூட அநாவசியமே ! என மனம் போன போக்கில் வாழ்வதே நாத்திகத்தின் விளைவு..! மீறி கேட்டால் மனசாட்சி படி , மனிதம் படி வாழ்வோம் என்பார்கள் ...அது போலியானது என்று அவர்களுக்கே தெரியும்..தாயும் பிள்ளையும் ஒன்று என்றாலும் வாயும் வயிறும் வேறு என்ற பழமொழி அவர்களுக்கு விதிவிலக்கா என்ன ? கிடைத்த வரை லாபம் என்ற சிந்தனை உடைய அவர்களிடம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..!

    நன்றி !!

    ReplyDelete
  2. /வாழ்க்க்கையில் நன்கொடையே கொடுக்காதவர்கள் பட்டியலும் எடுத்தார்கள். அதில் முதலிடம் பெறுவது நாத்திகர்களும் , யூதர்களும்தான்.//

    இதற்கு முந்தய பாராவில் கிருத்தவர்களை விட யூதர்கள் அதிகமாக கொடுக்கிறார்கள் என எழுதியுள்ளீர்கள். என்ன முசுலிம்மாக மதம் மாறி விட்டீர்களா? இப்படி அல்தக்கியா பண்ணுமளவு யூத வெறுப்பு? அதாவது இனவெறி!

    அமெரிக்காவிலும் கிருத்தவரை விட யூதர்கள் அதிக அளவில் நன்கொடை வழங்குவதாக தெரிகிறது. ஆனால் உமது முசுலிம் இதயம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

    //தனி நபர் ஒழுக்க கேடு இஸ்லாம் மதத்திலும் இருக்க கூடும். ஆனால் ஒட்டு மொத்தமாக பார்த்தால் , அந்த மத கோட்பாடுகளால் நன்மையே ஏற்படுகிறது என்கிறது ஆய்வு.//

    பணம் கொடுப்பது நல்ல விடயம்தான். ஆனால் இசுலாமின் பெண்ணடிமைத்தனம்,கற்கால ஷரியா இவற்றினால் ஏற்படும் கேடுகளை விட பணம் அளிப்பதினால் நல்லது நடக்கிறது என்பதற்கான அத்தாட்சி உண்டா?

    மேலும் கிருத்தவர்களை/யூதர்களை போல பொதுவான மதசார்பற்ற அமைப்புகளுக்கு இசுலாமியர் நன்கொடை தருவதில்லை. இசுலாமிய அமைப்புகளுக்கே தருகிறார்கள். அதாவது அவர்கள் மதத்தினர்க்கு மட்டும்தான் அதிக நன்மை விளையுமாறு தருகிறார்கள்.

    மேலும் உலகிலேய அதிக நன்கொடை அளித்தவர்கள் யார் தெரியுமா? Warren Buffet-ம் பில் கேட்சும்தான். இவர்கள் தங்களின் சொத்து அனைத்து நன்கொடையாக தரவிருக்கிறார்கள்,தந்து கொண்டும் இருக்கிறார்கள். எந்த மதவாதியாவது முழு சொத்தையும் தருவானா? எவனாவது அரபு ஷேக் எழுதி வைத்தால் சொல்லுங்கள்! மேலும் அமெரிக்காவின் இன்னொரு பெரிய நன்கொடையாளர் Facebook's Zuckerberg -ம் ஒரு நாத்திகர்.

    இவர்கள் மதவாதிகளை விட உயர்ந்தவர்கள். ஏனெனில் கைமாறு கருதாமல் தருகிறார்கள். உதாரணமாக முசுலிம்கள் ஜகாத் செய்வது 72 பெருமுலைப் பெண்களுடனான சுவர்க்கத்திற்காக!

    இந்த கருத்துக்கணிப்பை பாருங்கள், யார் அதிகம் கொடுக்கிறார்கள்? http://tinyurl.com/pgygkao

    ReplyDelete
  3. நான் வருடம் 30000 ஆயிரம் ஜகாத் கொடுத்தே ஆக வேண்டும்...

    நான் கொடுக்காவிட்டால் இந்த உலகில் என்னை யாரும் எதுவும் கேட்டு விட முடியாது தான்...

    ஆனால் இறந்த பிறகு அனைவரும் ஒன்றுகூட்டப்பட்டு, யாருடைய சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்படாத இறுதித் தீர்ப்பு நாளில் அனைவர் முன்னாளும் இறைவன் கேள்வி கேட்பானே என்ற பயத்தில் கொடுத்துவிடுவேன்....

    2.5 % இஸ்லாமியர்களுக்கு கட்டாயக் கடமை...

    தர்மம் இவ்வளவு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் ஒரே மதம்/மார்க்கம் இஸ்லாம் தான் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்...

    இஸ்லாத்தில் வள வள , கொழ கொழாவுக்கெல்லாம் வேலை இல்லை.. இதான் சட்டம் , பிடிக்காவிட்டாலும் செய் என்பதுபோல் தான் இருக்கும்....

    அருமையான பதிவுக்கு நன்றி சகோ...

    ReplyDelete
  4. மதங்கள் கடந்த மனிதநேயம்


    சவுதி சிறையிலிருந்த இந்தியரை ரூ 36 லட்சம் செலுத்தி மீட்ட முஸ்லிம் தொழிலதிபர் .

    1011856_434332026664999_1767828732_nகேரளம் இடுக்கியை சேர்ந்த கார் டிரைவர் வினிஷ் பாபச்சன் 2012 இல் சவுதி அரேபியா Khamis Mushayt நகரில் எர்த் மூவிங் டிராக்டர் டிரைவராக பணியில் இருந்த போது எதிரே வந்த காருடன் மோதியதில் காரில் பயணித்த சவுதி பிரஜை சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதால் வினிஷ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார் .

    விசாரணையில் இந்த விபத்திற்கு வினிஷ் தான் காரணம் என அறியப்பட்டதால் இறந்தவர் குடும்பத்திற்கு சவுதி ரியால் 225.000 தியாஹ் [ blood money ] இந்திய மதிப்பில் ரூ.36 லட்சம் வழங்க அபா நகர நீதிமன்றம் உத்தரவிட்டது . மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த வினிஷின் குடும்பத்தினரால் இவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாததால் அவர்கள் கேரளம் முதலமைச்சரின் உதவியை நாடினர் .

    கேரளா முதல்வர் உம்மன்சான்டியின் வேண்டுகோளின்படி சவுதியில் உள்ள சமூக நல அமைப்புகள் விபத்தில் இறந்தவரின் மனைவியை சந்தித்து வினிஷின் ஏழ்மை நிலையை பற்றி விளக்கியபோது அவர் ” 225.000 ரியால்களுக்கு பதிலாக 75.000 ரியால்கள் நஷ்டஈடாக கொடுத்தால் போதும் என ஒப்புகொண்டார் .

    ஆனால் இறந்தவரின் மனைவி செய்த உடன்படிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஷரியத் சட்டப்படி குற்றவாளியை மன்னிப்பதற்கும் தண்டிப்பதற்கும் நஷ்டயீடு தொகையை குறைப்பதற்கும் இறந்தவரின் வாரிசுகளுக்குத்தான் உரிமை உண்டு என்றும் , வாரிசுகள் மைனர்களாக இருந்தால் அவர்கள் மேஜர்களாகும் வரை குற்றவாளிகள் பொறுத்திருக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டது .

    இதனால் பணத்தை திரட்ட முடியாமல் பல இடங்களில் உதவி கோரிய அந்த ஏழை குடும்பத்தாரின் நிலையறிந்து அபீர் பாலிகிளினிக் குழுமத்தின் சேர்மன் முகமது நஷ்டயீட்டு தொகையான ரூ.36.000 லட்சத்தை செலுத்தியதால் நேற்று வினிஷ் பாபச்சன் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார் .

    அபீர் பாலிகிளினிக் சேர்மன் முகமது அவர்களின் இந்த சேவையை கேரளா முதல்வர் உம்மன்சாண்டி பாராட்டியுள்ளார் .

    ReplyDelete
  5. Stunning way of approach.
    Towards a perfect way of truth..!

    Dear brother Anand,
    Thanks for sharing your thoughts.

    ReplyDelete
  6. @ நந்தவனத்தான். கொடுக்கும் யூதர்கள் சிலர் தாராளமாக கொடுக்கிறார்கள். ஆனால் கொடுக்காமல் இருப்பவர்களும் கணிசமாக இருக்கிறார்கள் என்பதை அந்த ஆய்வு நடு நிலையோடு சுட்டுகிறது.. இஸ்லாமியர்கள் கொடுக்கும் நன்கொடை யாருக்கு போகிறது என்பதையும் எழுதினால் பிரச்சாரக்கட்டுரை போல ஆகி விடும் என்பதால் எழுதவில்லை... ஆனால் அந்த நன்கொடை பொதுவாகத்தான் செல்கிறது என்கிறது ஆய்வு.. இந்த ஆய்வை செய்த்தௌ இஸ்லாமிய அமைப்பு இல்லை

    ReplyDelete
  7. "மேலும் கிருத்தவர்களை/யூதர்களை போல பொதுவான மதசார்பற்ற அமைப்புகளுக்கு இசுலாமியர் நன்கொடை தருவதில்லை. இசுலாமிய அமைப்புகளுக்கே தருகிறார்கள். அதாவது அவர்கள் மதத்தினர்க்கு மட்டும்தான் அதிக நன்மை விளையுமாறு தருகிறார்கள்."

    இந்த விடயத்துக்கு பதில் தராமல் மழுப்பியிருக்கிண்றீர்கள் .

    BABU SIVA

    ReplyDelete
  8. @நாகூர் மீரான்,

    "நாத்திகர்கள் என்று கூறி கொள்வோர் அடிப்படையிலேயே நன்மைக்கு எதிரானவர்களே ! ..தனக்கு கேள்வி உண்டுன்னு நம்புரவர்கள் கூட இரண்டுக்கு ஒன்று என நல்லது செய்ய வாய்ப்பு உண்டு.."

    ஒசாமா பின் லேடன் ஆத்திகன். ஜவர்கலால் நேரு நாத்திகர். இப்போ முடிவு செய்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  9. உண்மையாய் வெளி வராமல் தடுப்பதுதானே இந்த உலகத்தின் நியதி ? அது தான் கொதித்து எழுகிறார் நொந்தவனதான்! ஐயோ பாவம் .

    ReplyDelete
  10. சகோ பாபு சிவா,

    //இந்த விடயத்துக்கு பதில் தராமல் மழுப்பியிருக்கிண்றீர்கள் .//

    சலாம், அவர் மழுப்பவில்லை. சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார். முஸ்லிம்களின் நன்கொடைகள், இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களான Muslim Aid மற்றும் Islamic Relief போன்றவற்றிற்கு அதிகப்படியாக சென்றுள்ளது. அதே போல, பின்வரும் மருத்துவ நிறுவனங்களுக்கும் முஸ்லிம்கள் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளனர்.

    1. புற்றுநோய் ஆய்வுக்கழகம் (Cancer Research)
    2. மேக்மில்லன் & பிரிட்டிஷ் இருதய கழகம் (MacMillan & British Heart Foundation)

    என் பதிலில் சந்தேகம் என்றால் டைம்ஸ் இதழின் தளத்திற்கே நேரடியாக சென்று அறிந்துக்கொள்ளலாம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இதுக்குறித்த என்னுடைய பதிவை காணவும்
    http://www.ethirkkural.com/2013/07/blog-post.html

    நன்றி..

    ReplyDelete
  11. @babu siva.. இஸ்லாமியர்கள் இஸ்லாமிய ஏழைகளுக்கும், கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ ஏழைகளுக்கும் மட்டும்தான் உதவுகிறார்கள் என ஒரு வாதத்துக்காக வைத்து கொள்வோம். ஆனால் நாத்திகர்கள் நாத்திக ஏழைகளுக்கு மட்டும் அல்ல,... எந்த ஏழைகளுக்குமே உதவுவது இல்லை என்பதுதானே ஆய்வின் முடிவு... மக்களுக்கு அட்வைஸ் செய்வது மட்டுமே தம் வேலை என்று இருந்து விடுகிறார்கள் என்கிறது ஆய்வு... அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விதி விலக்குகள் இருக்கலாம்.. இந்த ஆய்வு ஒட்டு மொத்தமான ஆராய்ந்து தன் முடிவை சொல்லி இருக்கிறது

    ReplyDelete
  12. சுயநினைவுடன் தான் பேசுகின்றீர்களா ? உங்கள் பாணியை விட்டு உங்கள் ஞான குருவின் பாணியில் சொல்லியிருக்கின்றீர்கள்.
    (முக்கிய குறிப்பு நான் நாத்திகன் அல்ல )

    பிரிட்டிஷ் முஸ்லீம்கள் மற்றவர்களை விட அறக்கொடையளிப்பதில் முன்னிலை வகிக்கின்றனர் என்ற விடயம் கருத்து கணிப்பு மூலமே பெறப்பட்டது. (கருத்து கணிப்பு என்றால் sample இலும் மட்டும் தங்கியிராது கேட்கப்படும் கேள்விகளிலும் தங்கியிருக்கின்றது )

    poll இல் கேட்கப்படும் போது சொல்லப்படும் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. (என்னை கூட சிங்கப்பூரில் ஒரு பெண் இதே போல் கேட்டார் நான் எனது ஒரு பெருமைக்காக கொஞ்சம் அதிகமாக அடித்து விட்டேன் )

    உண்மையாகவே பிரிட்டிஸ் முஸ்லீம்கள் அறக்கொடையளிப்பதில் முன்னிலையில் கூட இருக்கலாம் . அதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் வெறும் Poll ஐ அதாவது கருத்துக் கணிப்பை வைத்துக் கொண்டு அவை உண்மையான தீர்க்கமான முடிவுகள் என்ற மாதிரி கதை விட்டுக் கும்மியடிப்பதை பார்க்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை. :)

    babu siva

    ReplyDelete
  13. தரவு தகவல்களை விடுவோம்

    இது நீங்க தந்த தரவு

    இஸ்லாமியர் - 371 யூரோக்கள்
    யூதர்கள் - 270 யூரோக்கள்
    ப்ரோடஸ்டன்ஸ் கிருத்துவர்கள் - 202 யூரோக்கள்
    கத்தோலிக்க கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்று அதிகம்
    மற்ற கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்று குறைவு
    நாத்திகர்கள் - 116 யூரோக்கள்

    இதில் நாத்திகர்கள் 116 யூரோக்கள் கொடுக்கின்றார்கள் என்று வைத்துகொள்வோம்.

    அப்புறம் எதுக்கு "ஆனால் நாத்திகர்கள் நாத்திக ஏழைகளுக்கு மட்டும் அல்ல,... எந்த ஏழைகளுக்குமே உதவுவது இல்லை என்பதுதானே ஆய்வின் முடிவு... மக்களுக்கு அட்வைஸ் செய்வது மட்டுமே தம் வேலை என்று இருந்து விடுகிறார்கள் என்கிறது ஆய்வு... "
    இந்த வசனத்தை போட்டீர்கள்.

    116 யூரோக்கள் கொடுப்பவன் ஒன்றும் கொடுக்காதாவனா ? பதிவு போடும்போது கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேர்களா ?

    ReplyDelete
  14. Thanks for sharing the info, Brother.

    ReplyDelete
  15. @babu siva..

    //மதசார்பற்ற அமைப்புகளுக்கு இசுலாமியர் நன்கொடை தருவதில்லை. இசுலாமிய அமைப்புகளுக்கே தருகிறார்கள். அதாவது அவர்கள் மதத்தினர்க்கு மட்டும்தான் அதிக நன்மை விளையுமாறு தருகிறார்கள்//

    இஸ்லாமியர்கள் பிற மதத்தினருக்கு நன்கொடை கொடுப்பதில்லையா ?

    இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் வாழும் உங்களை போன்ற நபர்களுக்கே ஒரு சமுதாய மக்கள் மற்றொரு சமுதாய மக்களுக்கு உதவுவார்களா ? என்ற எண்ணம் இருக்கையில் நபிகள் நாயகம் காலத்தில் நடந்த ஒரு சம்பவம் ! இஸ்லாமல்லாத ஒரு நபர் யாசகம் கேட்டு நபிகலாரிடத்தில் வருகையில் அவர் நினைத்ததை விட பன்மடங்கு கிடைத்ததை கொண்டு அவருடைய உள்ளம் ஏற்பட்ட மாற்றத்தை கவனியுங்கள்..! இங்கு யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை..ஆனால் விளைவு..,

    " இஸ்லாத்தின் பெயரால் எங்களுக்கு உதவுங்கள்' என்று இஸ்லாத்தின் பெயரைச் சொல் யார் கேட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குக் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள். ஒரு மனிதர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தின் பெயரால் உதவி கேட்டார். இரு மலைகளுக்கிடையே அடங்கும் அளவுக்கு அவருக்கு ஆடுகளை வழங்கினார்கள். அவர் தனது சமுதாயத்திடம் சென்று 'என் சமுதாயமே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில் நிதி நெருக்கடியைப் பற்றி அஞ்சாமல் முஹம்மத் வாரி வழங்குகிறார்' எனக் கூறினார்.

    நூல் : முஸ்லிம் 4627

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத மக்களுக்கு அளவுக்கதிகமாக வாரி வழங்குவது எந்த அளவுக்கு இருந்தது என்றால் இதற்காகவே பலரும் இஸ்லாத்தை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்பும் அளவுக்கு இருந்தது.

    அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) என்ற நபித்தோழரின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்தவுடன் 'நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா? நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா?' என்று கேட்டார்கள். 'அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் எனும் வானவர் எனக்கு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அப்போது தெரிவித்தார்.

    நூல் : திர்மிதி 1866

    இனி தான தர்ம விசயத்தில் இஸ்லாமை பற்றி தவறாக எண்ணம் கொள்ள வேண்டாமே !



    ReplyDelete
  16. சகோ பாபு சிவா என்னுடைய தளத்திலும் இந்த கருத்தை பதிந்துள்ளதால், அவருக்கு அங்கே கொடுத்த பதிலை இங்கேயும் பேஸ்ட் செய்கின்றேன்.

    ---
    சகோ அனானி,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.

    இந்த ஆய்வானது, வெறுமனே வாய் வார்த்தைகள் மூலமாக அமைந்ததாக தெரியவில்லை. மாறாக மக்கள் கொடுக்கும் தர்மத்தின் அளவு, அது இன்டர்நெட் மூலமாக செலுத்தப்பட்டிருந்தால், யார் மூலமாக செலுத்தினார்களோ அந்த நிறுவனம் கொடுக்கும் தகவல்கள் அடிப்படையிலான கணக்கெடுப்பாகும். ஆக, ஒரு சமூகம் கொடுக்கும் தர்மத்தின் அளவு வாய் வார்த்தைகள் மூலமாக அன்றி, real valueக்கள் அடிப்படையிலானது.

    மேலும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு ஒருவர் தர்மம் செய்கின்றார் என்றால், வெறுமனே "நான் அதற்கு கொடுத்தேன்" என்ற வாக்குமூலம் அடிப்படையில் அல்ல. மாறாக, அந்த ஆராய்ச்சி மையத்திற்கு transfer செய்யப்பட்ட தொகை அடிப்படையிலானது.

    ஆக, தாங்கள் இந்த ஆய்வு குறித்து மேலே பதிவில் கொடுக்கப்பட்டுள்ள லின்க்கில் சென்று மேலும் அறிந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    மற்றப்படி, நான் பதிவில் கூறியுள்ளது போல இதில் அலட்டிக்கொள்ளவோ, ஆச்சர்யமடையவோ ஒன்றுமில்லை. இஸ்லாம் தர்மத்தை கடுமையாக வலியுறுத்துகின்றது. பொருளாதார வசதி இருந்தும் செய்யவில்லை என்றால் தண்டனை என்கின்றது. இந்த பதிவை பொருத்தமட்டில், டைம்ஸ் போன்ற ஊடகத்திடம் இருந்து வந்துள்ளதால், இதனை பகிர்ந்த உலகளாவிய ஊடகங்கள் போல இங்கேயும் பகிரப்பட்டுள்ளது. அவ்வளவே..

    தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..

    ReplyDelete
  17. @நாகூர் மீரான்,

    "இனி தான தர்ம விசயத்தில் இஸ்லாமை பற்றி தவறாக எண்ணம் கொள்ள வேண்டாமே !"

    பழைய வரலாறு கதைகளை இப்போது பேசுவது பொருத்தமற்றது.
    ஏனைய மதத்தவருக்கு கொடுக்க கூடாது என்று இஸ்லாம் கூறியதாக நான் கூறவில்லை.
    ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர் அவ்வாறே செயல்படுகின்றனர். (இதற்க்கு இஸ்லாம் தான் காரணம் என்று நான் கூறவில்லை )
    விதிவிலக்குகள் விதிகள் ஆகாது.

    சாதாரணமாக பிச்சைகாரர்களுக்கு பணம் கொடுக்கும் போது யாரும் ஜாதி மதம் பார்ப்பதில்லை

    BABU SIVA

    ReplyDelete
    Replies
    1. whatever you are saying is correct only brother...but a common person wants to help others is differs from religionist, because people always looking at him with suspected view...that is y they r first giving to their own people and next 2 others..if you go deeply u ll find the same theory in your mother's affection also which means own child got more affection than others..this is nature..

      Delete
  18. இந்த தளத்தில் பல கேள்விகள் கேட்டிருக்கின்றார்கள்.
    உங்கள் பதில்களை அளிக்கலாம்
    http://viyaasan.blogspot.com/2013/07/blog-post_26.html

    BABU SIVA

    ReplyDelete
  19. World Giving Index இன் 2010 ஆண்டறிக்கை, அறக்கொடையளிக்கும் நாடுகளில் இலங்கை 8வது இடத்திலும், ஜப்பான் 119 வது இடத்திலும் நோர்வே 25 வது இடத்திலும், சுவீடன் 45வது இடத்திலும் உள்ளது என்கிறது. இதிலிருந்து ஒவ்வொரு கருத்துக் கணிப்பினதும் முடிவு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும், அளிக்கப்படும் பதில்களுக்கும் தரவுகளுக்கும் ஏற்றவாறு மாறும் என்பது தெளிவாகிறது. நோர்வேயையும், ஜப்பானையும், சுவீடனையும் விட இலங்கை அறக்கொடையில் முன்னிலையில் நிற்பதற்குக் காரணம் அந்தக் கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகளின் விதம் தான். அந்தக் கருத்துக் கணிப்பில், தொலைபேசியில் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளினதும், உண்மையோ பொய்யோ அந்தக் கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களின் அடிப்படையிலும் 2010 ம் ஆண்டு World Giving Index இல் இலங்கைக்கு எட்டாவது இடமும், நோர்வேக்கு 25 வது இடமும் கிடைத்துள்ளது. World Giving Index (Please click the link). இதன் அடிப்படையில் நோர்வே, சுவீடன் அல்லது ஜப்பான் போன்ற பல நாடுகளை விட நாங்கள் தான் கொடையில் சிறந்தவர்கள் என்று எந்த இலங்கையரும் அற்பமாக வாதம் புரிவதில்லை. ஏனென்றால் அது வெறும் கருத்துக்கணிப்பு (Poll) தான் என்று எங்களுக்குத் தெரியும். :)

    courtesy - viyaasan

    ReplyDelete
  20. நாத்திகர்கள் சதவீதம் இஸ்லாமியரோடு ஒப்பிடும் போது குறைவுதான் எனவே 116 யூரோக்கள்.

    -NSK

    ReplyDelete
  21. ஒரு தகவலுக்காக

    2010-ஆம் ஆண்டில் உலகில் பட்டினியை ஒழித்த நாடுகள் பட்டியலில் முதல் 9 இடம் பெற்ற நாடுகள் நாடுகள்:

    குவைத், மலேசியா, துருக்கி, மெக்ஸிகோ, டுனீஷியா, நிகாரகுவா, கானா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் சீனா.

    ReplyDelete
  22. உலகில் நாத்திகா் எண்ணிக்கையில் 2 சதவீதம்தான் முஸ்லிம்கள் 210 கோடி கிருஸ்துவர்கள் இதை விட அதிகம் இப்ப தகவல் உண்மை என்றால் கெடுப்பததில் யார் அதிகம்? மற்றும் உதவி என்பது தன்னம்பிக்கை ஊட்டகூடிதாய் இருக்கவேண்டும் ஊ

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா