Tuesday, July 30, 2013

தமிழ் மன்னன் பாலியல் விடுதி நடத்தினானா? தேவதாசி முறையும் “ திராவிட “ மாநிலங்கள் செய்த “சேவையும் “


உலகில் ஒவ்வோர் இனத்துக்கும் ஒவ்வோர் தனித்துவம் உண்டு.
இங்கிலாந்துக்காரர்களுக்கு தம்மைப்பற்றி பிறர் பெருமையாக நினைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஜப்பானியர்களுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதுபோல தமிழர்களுக்கே ஒரு தனித்தன்மை என்ன என்று பார்த்தால் , அது தாழ்வு மனப்பான்மைதான்.

தான் ஒரு முட்டாள், மற்றவர்கள் வந்துதான் தமக்கு நாகரிகம் கற்று கொடுத்தார்கள் என பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஓர் இனம் உலகில் உண்டு என்றால் அது தமிழ் இனம்தான்.

வெளி நாட்டு ஆய்வாளர்கள் எவ்வளவோ சொல்லிப்பார்க்கிறார்கள்.டேய்.. உன் முன்னோர்கள் சாதாரணமான ஆட்கள் இல்லை . கலை , அறிவியல், கட்டட ஞானம் , வானியல் , நீர்ப்பாசனம் , அரசாட்சி  என எல்லாவற்றிலும் கில்லாடியாக இருந்து இருக்கிறார்கள் என அவர்கள் சொல்லி சொல்லி மனம் சலித்து போய் விட்டார்கள்.

நம் ஆட்களோ, இல்லை.,.. நாங்கள் முட்டாள்களாக இருந்தோம். அண்டை மானிலதினர்தான் எங்களுக்கு அறிவூட்டீனார்கள் என பிடிவாதம் பிடித்து வருகிறார்கள்.

என்னை பொருத்தவரை அண்டை மானிலத்தினர் பலர் என் நண்பர்கள். ரஜினி, எம்ஜிஆர் போன்றவர்கள் மேல் வெறுப்பு இல்லாதவன். அதாவது என்னை தமிழ் தேசியவாதி என நான் நினைத்து கொண்டதே இல்லை.

ஆனால் நம் மக்களின் அடிமை வெறி எனக்கே தமிழ் தேசியம் மீது ஆர்வம் ஏற்படுத்தி விடுமோ என பயமாக இருக்கிறது.

தேவதாசி முறை குறித்தி சொர்ணமால்யா ஏதோ சொன்னாலும் சொன்னார் , நம் மக்கள் சம்பந்தம் இல்லாமல் தமிழ் மன்னர்களை அசிங்கப்படுத்த முனைந்து விட்டார்கள்.

அவர்கள் காட்டுமிராண்டி ஆட்சி நடத்தினார்கள். மக்கள் உழைப்பை சுரண்டினார்கள்.

ராஜராஜ சோழன் காலத்தில் கூட்டம் கூட்டமாக தேவதாசிகளாக பலரை மாற்றி பாலியல் ரீதியாக அவர்களை பயன்படுத்தினான்.  அதன் பின் பரம்பரை பரம்பரையாக தேவதாசி முறையும் பாலியல் அத்து மீறலும் தொடர்ந்தது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற அண்டை மானிலத்தினர் தமிழர்களை இதில் இருந்து மீட்டு , நாகரிகம் சொல்லித்தந்தார்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இப்படி வரலாற்றை புரிந்து கொண்டு இருக்கிறார்கள் நம் மக்கள்.

இதெல்லாம் உண்மையா ?

இதில் ஒன்று உண்மை. முத்துலட்சுமி ரெட்டி போன்றோர் உண்மையிலேயே இந்த பிரச்சினையில் உழைத்து இருக்கிறார்கள்.  அந்த வகையில் அவர்களை மதித்தே ஆக வேண்டும்.

ஆனால் , அவர்களை தெலுங்கர்கள், திராவிடர்கள் என்று பார்த்தால், அவர்கள் செய்தது சேவை அல்ல, பிராயாச்சித்தம் என்று தெரிய வரும்.

எப்படி?

இதற்கு மிக சுருக்கமாக ஃபிளாஷ் பேக் போக வேண்டும்.

முதன் முதலில் வலுவாக இருந்தது தமிழர்களின் ஆட்சிதான். குமரி முதல் விந்திய மலை வரை தமிழர்கள் ஆட்சி வலுவாக இருந்தது. விந்திய மலைக்கு வடக்கே ஆரியர்கள் வலுவாக இருந்தனர்.

இதிலும்கூட சிலர், சிந்து சமவெளி நாகரிகமே கூட தமிழர்கள் நாகரிகம்தான் , பிற்காலத்தில் ஆரியர்கள் அதை ஆக்ரமித்து தமிழர்களை வெளியேற்றினர் என சொல்கிறார்கள்..ஆனால் இதெல்லாம் ஆய்வு நிலையில்தான் உள்ளன.

குமரி முதல் வேங்கடம் வரை தமிழர்கள் ஆட்சி இருந்தது என்பதற்கு மட்டும் இன்றைய நிலையில் ஆதாரங்கள் உள்ளன.

சில வட நாடுகள் மீது படை எடுத்து வென்றாலும் எல்லைகளை விஸ்தரிக்கும் வேலையில் தமிழர்கள் ஈடுபடவில்லை. மாறாக ஆரியர்கள் தம் எல்லைகளை விரிவு படுத்தியதன் விளைவாக , ஆரியக்கலப்பால் கேரளம் , கர்னாடகம், ஆந்திரம் போன்ற திராவிட  தோன்றின.

தமிழ் மண்ணில் அப்போது ஜாதி இழிவுகளோ , பிராமணர்கள் உயர்வு என்ற நிலையோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் பிராமணர்களை கேலி செய்யும் நிலைதான் இருந்தது என்பதை பரிபாடல் போன்ற பழைய தமிழ் நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சங்க காலம் வரை இந்த நிலை நீடித்தது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக திராவிட அரசுகள் வலுவடைய ஆரம்பித்தன. கிபி 2ஆம் நூற்றாண்டில் இருந்து அவர்கள் படையெடுப்பு அதிகமாகி காலப்போக்கில் பல்லவர்கள் , களப்பிரர்கள் போன்ற அண்டை  மானிலத்தவர்  தமிழர்களை வென்றனர். இந்த கால கட்டத்தில்தான் , ஜாதி இழிவுகள் , மூட நம்பிக்கைகள் போன்ற ஆரிய பண்பாடு இங்கு நுழைந்தது.

அதாவது  , நன்றாக இருந்த தமிழ் நாட்டை சீரழித்தது இந்த அண்டை மானில திராவிடர்கள்.

பிற்காலத்தில் இதே அண்டை மானிலத்தை சேர்ந்த சில நல்லவர்கள் இந்த சீரழ்வில் இருந்து தமிழகத்தை மீட்கவும் செய்தனர் என்பதும் உண்மையே..
அவர்கள் செய்த சேவையை மறுக்கவில்லை.ஆனால் ஒட்டு மொத்த வரலாற்றை பார்த்தால் , அண்டை மானிலத்தவர் செய்தது சேவை என்பதை விட பிராயச்சித்தம் என்பதே பொருந்தும். இதைத்தான் முன்பு குறிப்பிட்டேன்.

சரி. மீண்டும் வரலாற்றை பார்க்கலாம்.

அண்டை மானிலத்தவர் ஆதிக்கம் , ஒன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்தது. அதன் பின்புதான் சோழர்களின் எழுச்சியால் மீண்டும் தமிழக மன்னர்கள் கைக்கு ஆட்சி வந்தது.

இந்த திராவிடர்கள் செய்த பல தீமைகளை சோழர் ஆட்சியில் வெகுவாக குறைத்தனர். நல்லாட்சி நடந்தது. கலைகள் வளர்ந்தன. ஏரிகள் வெட்டப்பட்டன.  நிர்வாக அமைப்புகள் ஒழுங்கு செய்யப்ப்பட்டன.

அப்போதெல்லாம் ஆலயங்கள் என்பவை மதம் என்பதையும் தாண்டி , கலாச்சார அடையாளமாக இருந்தன.

அந்த ஆலயங்களை பார்த்து கொள்ளும் பணிக்காகத்தான் தேவர் அடியார்கள் நியமிக்கப்பட்டார்கள்.

இவர்கள் அரசனுக்கு அடுத்த அந்தஸ்துடன் இருந்தார்கள்.

சோழர்கள் ஆட்சியில் இவர்கள் பாலியல் தொழிலாளிகளாக இருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 

ஆனால் தமிழ் மன்னர்கள் ஆட்சியின் போது அவர்கள் ஆலயம் கட்டி இருக்கிறார்கள், அரசிகளாக இருந்து இருக்கிறார்கள், தான தர்மம் செய்து இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

அதன் பின் சோழர்கள் வீழ்ச்சிக்கு பின் மீண்டும் ஆரிய ஆசி பெற்ற திராவிட ஆட்சி இங்கு செல்வாக்கு அடைந்தது. விஜய நகர பேரரசு போன்ற வந்தேறிகள் ஆட்சியில்தான் பார்ப்பனீயம் இங்கு வலுவடைந்தது.

அந்த கால கட்டத்தில்தான் தேவதாசிகள் எல்லாம் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட்டனர்.
பிறப்பின் அடிப்படையில் , ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமலேயே , இந்த கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள்.

13ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை திராவிடர்கள் ஆட்சியே நிலவியது.

அண்டை மானில மன்னர்கள் காலத்தில் அறிமுகமான தேவதாசி முறை , முத்துலட்சுமி ரெட்டியார் அன்னிய மானில தலைவர்கள் மூலமாகவே ஒழிக்கப்பட்டது poetic justice என்றே சொல்ல வேண்டும்.

அதன் பின் பிரிட்டிஷ் ஆட்சியில் திராவிட தமிழ் உரசல்கள் எப்படி மாறின என்பது இந்த டாபிக்கிற்கு சம்பந்தம் இல்லாதது. ஆனால் அதுவும் முக்கியம்தான்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

இப்போதைக்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியது .இதுதான்.

தமிழ் மன்னர்கள் காலத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்படவில்லை/. பார்ப்பனீயமும் இல்லை.

திராவிட மன்னர்கள் காலத்தில் பல தவறுகள் நிகழ்ந்தன. அதில் சில தவறுகளுக்கு திராவிட மானிலங்களை சேர்ந்தவர்களே தீர்வும் அளித்த்னர்.

ஆக நமக்கு திராவிட மானிலங்கள் செய்தது சேவை அல்ல. பிராயச்சித்தமே.





16 comments:

  1. "டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற அண்டை மானிலத்தினர் தமிழர்களை இதில் இருந்து மீட்டு "
    முத்துலட்சுமி அண்டை மாநிலத்தவர் என்று எந்த முட்டாள் உமக்கு சொன்னான்.
    ரெட்டி என்று பெயர் வந்தால் அண்டை மாநிலத்தவரா? கொஞ்சம் கூட வரலாற்றிவு கிடையாதா ?

    முத்துலட்சுமி அவர்களின் கணவர் பெயர் தான் ரெட்டி. முத்துலட்சுமி அவர்கள் தமிழ்நாட்டில் பிராமண தந்தைக்கும் இசைவேளார் குல தாய்க்கும் பிறந்தார். (புதுக்கோட்டையில் )

    சாதாரண தேடல் மூலம் கிடைக்க கூடிய தகவல் கூட தெரியாத நீர் வரலாற்று பதிவு எழுத தொடக்கி விட்டீர்

    ReplyDelete
    Replies
    1. இடக்கரடக்கல் பாணியில் அவர் பெயரை சில திராவிட தலைவர்கள் பெயர்களுக்கு பதில் பயன்படுத்தி இருக்கிறேன்.. அவர் பெயர் வரும் இடங்களில் திராவிட இயக்க தலைவர்கள் பெயர்களை போட்டு பாருங்கள்..தெளிவாக இருக்கும்.. விவாதம் திசை திரும்ப கூடாது என்பதற்காக தலைவர்கள் பெயரை தவிர்த்துள்ளேன். அவர்கள் சேவை உன்னதமானதே ,, ஆனால் ஒட்டு மொத்த வரலாற்று பின்னணியில் அவரகள் சேவை நகை முரணாக காட்சி அளிப்பதே நான் சொல்ல வந்த கருத்து

      Delete
    2. அந்த பிராமண தந்தை நடிகர் ஜெமினிகணேசனின் உறவினர் ஆவர்.. அதாவது தெரியுமா???
      R Chandrasekaran

      Delete
  2. வணக்கம்

    சங்ககாலம் சங்கமருவியகாலம் இந்த காலங்களில் காதலும் வீரமும் வளர்ந்ததுதான் ஆனால் பாலியல் சம்மந்தப்பட்ட வியங்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்
    பல்லவர்காலம் சோழர்காலம் நாயக்கர்காலம் இந்த கால கட்டத்தில்
    கட்டக் கலை வளர்ச்சி(ஆலயங்கள்) பல்லவர் காலம் என்றுதான் சொல்ல வேண்டும் மதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது ஆனால் பாலியல் சம்மந்தமான விடயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்

    பிச்சைக்காரன்(அண்ணா) நீங்கள் சொல்வது சரிதான்)
    தமிழ் மன்னர்கள் காலத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்படவில்லை/. பார்ப்பனீயமும் இல்லை,


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-
    -

    ReplyDelete
  3. வணக்கம்

    சங்ககாலம் சங்கமருவியகாலம் இந்த காலங்களில் காதலும் வீரமும் வளர்ந்ததுதான் ஆனால் பாலியல் சம்மந்தப்பட்ட வியங்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்
    பல்லவர்காலம் சோழர்காலம் நாயக்கர்காலம் இந்த கால கட்டத்தில்
    கட்டிடக் கலை வளர்ச்சி(ஆலயங்கள்) பல்லவர் காலம் என்றுதான் சொல்ல வேண்டும் மதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது ஆனால் பாலியல் சம்மந்தமான விடயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்

    பிச்சைக்காரன்(அண்ணா) நீங்கள் சொல்வது சரிதான்)
    தமிழ் மன்னர்கள் காலத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்படவில்லை/. பார்ப்பனீயமும் இல்லை,


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-
    --

    ReplyDelete
  4. எந்த ஆதாரத்தை வைத்து இப்படி மன்னர்கள் காலத்தில் சாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லை எனச் சொல்கிறீர்கள் ? முக்கிய சமயச் சடங்குகளுக்கெல்லாம் நரபலி தந்தார்களே அவர்களெல்லாம் யார் ? சரி, இப்போது பிரச்சினை தேவதாசி முறை என்பது பாலியல்வக்கிரமாய் மாற்றப்பட்டது என்ற உண்மை தெரிந்தபின் அதை நீக்க பாடுபட்டவர்களை பிராயச்சித்தம் செய்தார்கள் என்று எள்ளி விட முடியுமா ? வெள்ளையனை வீழ்த்திய காங்கிரஸை தொடங்கியது வெள்ளைக்காரன், அதென்ன அவன் நமக்கு செய்த பிராயச்சித்தம் தானா ? முதலில் மன்னர்கள் என்பவர்களுக்காக வக்காலத்து வாங்கும் உங்களை நோக்கி ஒரு கேள்வி, மன்னர்கள் என்பவர்கள் நம்ம ஏரியா லோக்கல் தாதாக்கள் மாதிரிதான், மக்களுக்கு ஏதும் செய்யாவிடில் அடுத்த தாதா வந்து கொள்ளையடிக்க அவன் மக்களே உதவுவார்கள். நீங்கள் மன்னனுக்கு ஆதராவாக பேசுவது தேவதாசி முறைக்கு ஆதரவாக பேசுகிறீர்கள் என்றேத் திரிக்கப்படும். சென்னை பிரசிடென்ஸியில் தமிழ்நாடு என்ற ஒன்றே கிடையாதென்பதால், இங்கு பிற மாநிலத்தவர் என்ற பாகுபாட்டை நீங்கள் முத்துலட்சுமியிடம் பார்ப்பதே வியப்புக்குரியது, வேதனைக்குமுரியது :(

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் நானும்தான் இந்தியர் , திராவிடர் எனபதில் பெருமை கொள்கிறோம்.. வேறு யாரும் நம்மை அவர்களுடன் சேர்த்து பார்ப்பதில்லை... ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல், சிங்கள் ராணுவம் தமிழ் மீனவர்கள் மேல் தாக்குதல்..இது போதுமே

      Delete
  5. வெள்ளைக்காரன் நம்மளை சொன்னான் என்று நாம் தாம் பெருமை பட்டுக்கொள்ளனும். நம்முடய கண்டு பிடிப்பு என்ன என்று கூறுங்கள்; பொத்தாம் பொதுவாக பட்டியல் இடுங்கள்.

    ராஜ ராஜன் செய்தது வரலாறு; வரி கொடுக்கமுயாத்வர்கள் சிவத் துரோகி என்று பட்டம் கட்டி நாட்டை விட்டு துரத்தினான். ஏட்டில் உள்ளது. இப்போ எல்லோரும் கேள்வி கேட்பதானால் அதை அழிக்க முயலுகிறார்கள் என்பதே உண்மை.

    நம் முன்னோர்கள் செய்த தவறுக்கு நாம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு மேற் கொண்டு செல்லவேண்டும். தவறு செய்வது மனித இனம்; அதை ஒத்துக் கொள்ளவேண்டும்.

    நடிகர் ஜெமினி கணேசனுக்கு முத்துலட்சுமி [ரெட்டி] அத்தை!
    அடையார் கான்சர் மருத்துவமனைய Dr. முத்துலட்சுமி ஆரம்பித்தாலும்...இந்த அளவிற்கு கொண்டு வந்தது டாக்டர் கிருஷ்ணமுர்த்தி. இவர் Dr. முத்துலட்சுமியின் மகன்.

    ReplyDelete
    Replies
    1. "நம் முன்னோர்கள் செய்த தவறுக்கு நாம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு மேற் கொண்டு செல்லவேண்டும். தவறு செய்வது மனித இனம்; அதை ஒத்துக் கொள்ளவேண்டும்."

      நல்ல கருத்து நம்பள்கி.

      Delete
  6. நல்ல பதிவு. சோழர் காலத்தில் தேவர் அடியார்கள் கலையிலும், கவிதையிலும், செலவத்திலும் சிறந்து மரியாதைக்குரியவர்களாக
    த் தான் நடத்தப்பட்டனர். சோழர்களின் அதாவது தமிழர்களின் வீழ்ச்சியின் பின்பு தமிழர்களை ஆண்ட அன்னியர்கள் தான், தமிழர்களின் தேவ அடியார்களைத் தேவடியார்களாக்கினர்கள்.

    இக்காலத்தில் சிலர் சாதியை எதிர்க்கிறோம், முற்போக்கு திராவிடவாதிகள் என்ற போர்வையில் வேண்டுமென்றே தமிழ் அரசர்களை, எமது முன்னோர்களின் மீது திட்டமிட்டு பழிகளைக் கூறி, தமிழர்களின் பெருமை மிகுந்த வரலாற்றையும் திரித்து எமது எதிரிகளுக்கு உதவுகிறார்கள். ராஜ ராஜனாவது வரி கொடுக்க முடியாதவர்களை நாட்டை விட்டுத் துரத்தினான். ஆனால் பல அரசர்கள், குற்றம் செய்தவர்களின் குழந்தைகளையே உரலுக்குள் போட்டு அந்தக் குழந்தைகளின் தாயையே உரலை இடிக்குமாறு செய்திருக்கிறார்கள். இப்படியான தண்டனைகள் இலங்கையில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாள் கண்டி இராசதானியில் நடைமுறையிலிருந்த தண்டனைகள். அந்தக் காலத்தில் இருந்த தண்டனைகளின்ன் படி, அக்கால வழக்கத்தின் படின் தான் அன்றைய மன்னர்கள் தண்டனை விதித்தார்கள். அதை இக்காலத்துடன் ஒப்பிட்டு எமது முன்னோர்களை நாமே வசைபாடுவது வெறும் அபத்தம்.

    ReplyDelete
    Replies
    1. "இக்காலத்துடன் ஒப்பிட்டு எமது முன்னோர்களை நாமே வசைபாடுவது வெறும் அபத்தம்."
      வசை பாடவில்லை அதே போல் தமிழ் மன்னர்கள் செய்த அட்டூழியங்களுக்கு வக்காலத்து பாடாமல் இருந்தா சரி

      " பல அரசர்கள், குற்றம் செய்தவர்களின் குழந்தைகளையே உரலுக்குள் போட்டு அந்தக் குழந்தைகளின் தாயையே உரலை இடிக்குமாறு செய்திருக்கிறார்கள். "
      அதை செய்தது வேறு யாருமல்ல உங்க நாட்டு கண்டி கடைசி மன்னன் தமிழ் மன்னனுமான சிறிவிக்கிரம ராஜ சிங்கன்.

      Delete
    2. " முன்னாள் கண்டி இராசதானியில் நடைமுறையிலிருந்த தண்டனைகள். அந்தக் காலத்தில் இருந்த தண்டனைகளின்ன் படி, அக்கால வழக்கத்தின் படின் தான் அன்றைய மன்னர்கள் தண்டனை விதித்தார்கள். அதை இக்காலத்துடன் ஒப்பிட்டு எமது முன்னோர்களை நாமே வசைபாடுவது வெறும் அபத்தம்."

      அந்த காலத்தில் சகஜமாக இருந்த தண்டனையா ? ஹஹஹஹா ஹஹஹஹாஹ் ஹஹஹஹாஹ் ஹஹஹாஹ்

      என்ன வியாசன் வரலாற்றை வளைக்க பார்க்கின்றீர்கள்.

      ஸ்ரீ விக்கிரம ராஜா சிங்கன் தனக்கு துரோகம் செய்த எகலபொலயின் பிள்ளைகளை கொன்று அவர்களின் தலையை உரலில் இட்டு தாயை கொண்டு இடிக்க செய்தான். இந்த சம்பவம் கண்டி பிரதேசத்தை மட்டுமின்றி முழுநாட்டையுமே அதிர்ச்சியில் உறைய வைத்தது. இது சாதாரணமாக நடக்கும் தண்டனை என்றால் அதிர்ச்சி அடைய தேவையில்லை. இந்த சம்பவம் தான் மக்கள் கண்டி மன்னன் மீது அதிக வெறுப்பு கொள்ள காரணமாக அமைந்தது

      Delete
  7. இதையும் கொஞ்சம் படியுங்கள்
    http://donashok.blogspot.com/2013/07/blog-post_30.html

    ReplyDelete
    Replies
    1. படித்து விட்டேன். அந்த பதிவுக்கு பதிவர் பிச்சைகாரன் என்ன பதில் சொல்ல போகின்றார் பார்ப்போம்

      Delete
  8. உங்கள் தேவதாசி கருத்துகளிடமிருந்து முரண் படுகிறேன். பெண்கள் பாலியல் தொழில் பண்டைய தமிழகத்தில் இல்லை என்பது அன்றைய ஆண்களுக்கு குறி இல்லை என்று சொலபதற்க்கு சமம். எக்காலத்திலும் பாலியல் தொழில் இருந்து கொண்டுதான் இருக்கிறது, இருந்து கொண்டுதான் இருக்கும். எல்லா முறைகள் போல்தான் இந்த முறையும், துவக்கத்தில் வேறாக இருந்திருக்கும் அது காலபோக்கில் மாறியிருக்கும்.
    பெரியார் போராடி அழித்த முறை அழிக்கப்பட வேண்டிய்தே. அப்போது அது சாதிய ரீதியாக்க பட்டுயிருந்தது. அது மிக பெரிய சுரண்டல், அடிமைத்தனம். அந்த அடிமைதன முறையாகதான் காலமுழுதும் இருந்தா? என்பது எல்லா வரலாறு போல கேள்விக்கு உட்ப்பட்டது, என்றும் சரியான பதில் கிடைக்க போவதில்லை.
    என்னை பொறுத்தவரையில் அப்படி கடவுளுக்கு தொண்டு செய்ய வேண்டும் நினைப்பர்கள் இன்றும் இருக்கலாம், அருமையான விசியம் அதுவும் தனி மனித சுதந்திரம் ஆனால் அதை ”முறை” System ஆக்குவதில்தான் பிரச்சனைகள் இருக்கிறது. இன்று யாராவது நான் தேவ்ர் அடியாராக போகிறேன் என்றால் செல்லாம் என்றுதான் நினைக்கிறேன், யாரும் தடுக்கமுடியாது.

    பெரியாரை சரியாக ஆவனப்படுத்துவதில் உள்ள சிக்கல் இது. ”முறை” என்று வந்துவிட்டால் அங்கு சுரண்டல், அதிகாரம். இதைதான் பெரியார் அழித்தார்,

    ReplyDelete
  9. உங்கள் தேவதாசி கருத்துகளிடமிருந்து முரண் படுகிறேன். பெண்கள் பாலியல் தொழில் பண்டைய தமிழகத்தில் இல்லை என்பது அன்றைய ஆண்களுக்கு குறி இல்லை என்று சொலபதற்க்கு சமம். எக்காலத்திலும் பாலியல் தொழில் இருந்து கொண்டுதான் இருக்கிறது, இருந்து கொண்டுதான் இருக்கும். எல்லா முறைகள் போல்தான் இந்த முறையும், துவக்கத்தில் வேறாக இருந்திருக்கும் அது காலபோக்கில் மாறியிருக்கும்.
    பெரியார் போராடி அழித்த முறை அழிக்கப்பட வேண்டிய்தே. அப்போது அது சாதிய ரீதியாக்க பட்டுயிருந்தது. அது மிக பெரிய சுரண்டல், அடிமைத்தனம். அந்த அடிமைதன முறையாகதான் காலமுழுதும் இருந்தா? என்பது எல்லா வரலாறு போல கேள்விக்கு உட்ப்பட்டது, என்றும் சரியான பதில் கிடைக்க போவதில்லை.
    என்னை பொறுத்தவரையில் அப்படி கடவுளுக்கு தொண்டு செய்ய வேண்டும் நினைப்பர்கள் இன்றும் இருக்கலாம், அருமையான விசியம் அதுவும் தனி மனித சுதந்திரம் ஆனால் அதை ”முறை” System ஆக்குவதில்தான் பிரச்சனைகள் இருக்கிறது. இன்று யாராவது நான் தேவ்ர் அடியாராக போகிறேன் என்றால் செல்லாம் என்றுதான் நினைக்கிறேன், யாரும் தடுக்கமுடியாது.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா