Showing posts with label திராவிடம். Show all posts
Showing posts with label திராவிடம். Show all posts

Friday, March 6, 2020

பேராசிரியர் நாவலர் ஓர் ஒப்பீடு

திராவிட இயக்க வரலாற்றில் நாவலருக்கும் , பேராசிரியருக்கும் முக்கியமான இடமுண்டு

இருவருமே தனித்துவமான தலைவர்களாவதற்கான தகுதிகள் இருந்தும் நம்பர் டூ இடத்திலேயே திருப்தி அடைந்தவர்கள் என்பது ஒற்றுமை.  ஆனால் வேற்றுமைகளும் ஏராளம்

பேராசிரியர் அன்பழகன் ஆரம்பத்தில் கலைஞரை கடுமையாக எதிர்த்தார். ஒருகட்டத்தில் கலைஞரை ஏற்றார். அப்போதும் முழுமையாக ஏற்கவில்லை

தலைவராக அல்ல. தளபதியாக ஏற்கிறேன் என்றார்

எப்படியோ.. என்னை ஏற்றதே மகிழ்ச்சி. தளபதியான என்னை தளர் பதியாக மாற்றாமல் இருந்தால் சரி என கலைஞரும் அதை வேடிக்கையாக பேசி ஏற்றார்

அதன் பின் அன்பழகனின் தனித்துவம் மங்கியது.  கலைஞரின் நிழலாகிப் போனார்

நெடுஞ்செழியன் விவகாரம் வேறு விதம்

அண்ணா , கலைஞர், மக்கள் திலகம் , ஜெ என அனைவருடனுமே மோதி இருக்கிறார். அனைவராலுமே கவுரவிக்கப்பட்டும் இருக்கிறார்

உதிர்ந்த ரோமம் என்று இவரை வர்ணித்த ஜெ , தமிழகத்தின் நிரந்தர நிதியமைச்சர் என இவரை உயர்த்தியும் பேசியிருக்கிறார்

தம்பியே வா தலைமையேற்க வா என,அண்ணா இவரை அழைத்துள்ளார்

இவரது தமிழ்த்தொண்டு போதிய விளம்பரம் பெறவில்லை.

அன்பழகன் இப்படி ஏற்ற இறக்கங்களோ தனித்துவ முத்திரையோ பதித்தவர் அல்லர். ஆனாலும் அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்பட்ட ஓர் ஆளுமை,அவர்

ஜெ முதல்வராக இருந்தபோது , கல்விமான்களுக்கு இடமளிக்கும் வகையில் மேல்சபை கொணர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது

ஜெ பதிலளிக்கையில் , மேல்சபை இல்லாமலேயே அன்பழகன் போன்ற கல்விமான்களுக்கு இடம் கிடைக்கிறதே இது போதும் என்றார். ஒரு திமுக உறுப்பினரை அவர் உயர்த்திப் பேசியது அதுதான் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்

கலைஞரின் நெருங்கிய தோழனாக இருந்தார்

வைகோ வின் கூட்டம் ஒன்றில் , நீ கடைசியாகப் பேசு என்றார்

அண்ணாவை உங்கள் உருவில் காண்கிறேன். நிறைவுரை ஆற்றி எங்களை கவுரவியுங்கள். என் உரைக்குப்பின் யாராவது எழுந்து சென்றால் அடுத்த நாள் அந்த நபர் கட்சியில் இருக்க மாட்டார். என வெகு தாழ்மையாக கேட்டுக் கொண்டார்

அன்பழகனைப் பிடிக்காதவர் என யாரும் இருக்க முடியாது. நீண்ட நெடிய"அரசியல் வரலாறு கொண்ட அவர் காலத்தில் நாமும்  இருந்தது ஒரு அதிர்ஷ்டம்தான்

நிறை வாழ்வு வாழ்ந்து மறைந்த அவருக்கு அஞ்சலி

Tuesday, July 30, 2013

தமிழ் மன்னன் பாலியல் விடுதி நடத்தினானா? தேவதாசி முறையும் “ திராவிட “ மாநிலங்கள் செய்த “சேவையும் “


உலகில் ஒவ்வோர் இனத்துக்கும் ஒவ்வோர் தனித்துவம் உண்டு.
இங்கிலாந்துக்காரர்களுக்கு தம்மைப்பற்றி பிறர் பெருமையாக நினைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஜப்பானியர்களுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதுபோல தமிழர்களுக்கே ஒரு தனித்தன்மை என்ன என்று பார்த்தால் , அது தாழ்வு மனப்பான்மைதான்.

தான் ஒரு முட்டாள், மற்றவர்கள் வந்துதான் தமக்கு நாகரிகம் கற்று கொடுத்தார்கள் என பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஓர் இனம் உலகில் உண்டு என்றால் அது தமிழ் இனம்தான்.

வெளி நாட்டு ஆய்வாளர்கள் எவ்வளவோ சொல்லிப்பார்க்கிறார்கள்.டேய்.. உன் முன்னோர்கள் சாதாரணமான ஆட்கள் இல்லை . கலை , அறிவியல், கட்டட ஞானம் , வானியல் , நீர்ப்பாசனம் , அரசாட்சி  என எல்லாவற்றிலும் கில்லாடியாக இருந்து இருக்கிறார்கள் என அவர்கள் சொல்லி சொல்லி மனம் சலித்து போய் விட்டார்கள்.

நம் ஆட்களோ, இல்லை.,.. நாங்கள் முட்டாள்களாக இருந்தோம். அண்டை மானிலதினர்தான் எங்களுக்கு அறிவூட்டீனார்கள் என பிடிவாதம் பிடித்து வருகிறார்கள்.

என்னை பொருத்தவரை அண்டை மானிலத்தினர் பலர் என் நண்பர்கள். ரஜினி, எம்ஜிஆர் போன்றவர்கள் மேல் வெறுப்பு இல்லாதவன். அதாவது என்னை தமிழ் தேசியவாதி என நான் நினைத்து கொண்டதே இல்லை.

ஆனால் நம் மக்களின் அடிமை வெறி எனக்கே தமிழ் தேசியம் மீது ஆர்வம் ஏற்படுத்தி விடுமோ என பயமாக இருக்கிறது.

தேவதாசி முறை குறித்தி சொர்ணமால்யா ஏதோ சொன்னாலும் சொன்னார் , நம் மக்கள் சம்பந்தம் இல்லாமல் தமிழ் மன்னர்களை அசிங்கப்படுத்த முனைந்து விட்டார்கள்.

அவர்கள் காட்டுமிராண்டி ஆட்சி நடத்தினார்கள். மக்கள் உழைப்பை சுரண்டினார்கள்.

ராஜராஜ சோழன் காலத்தில் கூட்டம் கூட்டமாக தேவதாசிகளாக பலரை மாற்றி பாலியல் ரீதியாக அவர்களை பயன்படுத்தினான்.  அதன் பின் பரம்பரை பரம்பரையாக தேவதாசி முறையும் பாலியல் அத்து மீறலும் தொடர்ந்தது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற அண்டை மானிலத்தினர் தமிழர்களை இதில் இருந்து மீட்டு , நாகரிகம் சொல்லித்தந்தார்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இப்படி வரலாற்றை புரிந்து கொண்டு இருக்கிறார்கள் நம் மக்கள்.

இதெல்லாம் உண்மையா ?

இதில் ஒன்று உண்மை. முத்துலட்சுமி ரெட்டி போன்றோர் உண்மையிலேயே இந்த பிரச்சினையில் உழைத்து இருக்கிறார்கள்.  அந்த வகையில் அவர்களை மதித்தே ஆக வேண்டும்.

ஆனால் , அவர்களை தெலுங்கர்கள், திராவிடர்கள் என்று பார்த்தால், அவர்கள் செய்தது சேவை அல்ல, பிராயாச்சித்தம் என்று தெரிய வரும்.

எப்படி?

இதற்கு மிக சுருக்கமாக ஃபிளாஷ் பேக் போக வேண்டும்.

முதன் முதலில் வலுவாக இருந்தது தமிழர்களின் ஆட்சிதான். குமரி முதல் விந்திய மலை வரை தமிழர்கள் ஆட்சி வலுவாக இருந்தது. விந்திய மலைக்கு வடக்கே ஆரியர்கள் வலுவாக இருந்தனர்.

இதிலும்கூட சிலர், சிந்து சமவெளி நாகரிகமே கூட தமிழர்கள் நாகரிகம்தான் , பிற்காலத்தில் ஆரியர்கள் அதை ஆக்ரமித்து தமிழர்களை வெளியேற்றினர் என சொல்கிறார்கள்..ஆனால் இதெல்லாம் ஆய்வு நிலையில்தான் உள்ளன.

குமரி முதல் வேங்கடம் வரை தமிழர்கள் ஆட்சி இருந்தது என்பதற்கு மட்டும் இன்றைய நிலையில் ஆதாரங்கள் உள்ளன.

சில வட நாடுகள் மீது படை எடுத்து வென்றாலும் எல்லைகளை விஸ்தரிக்கும் வேலையில் தமிழர்கள் ஈடுபடவில்லை. மாறாக ஆரியர்கள் தம் எல்லைகளை விரிவு படுத்தியதன் விளைவாக , ஆரியக்கலப்பால் கேரளம் , கர்னாடகம், ஆந்திரம் போன்ற திராவிட  தோன்றின.

தமிழ் மண்ணில் அப்போது ஜாதி இழிவுகளோ , பிராமணர்கள் உயர்வு என்ற நிலையோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் பிராமணர்களை கேலி செய்யும் நிலைதான் இருந்தது என்பதை பரிபாடல் போன்ற பழைய தமிழ் நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சங்க காலம் வரை இந்த நிலை நீடித்தது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக திராவிட அரசுகள் வலுவடைய ஆரம்பித்தன. கிபி 2ஆம் நூற்றாண்டில் இருந்து அவர்கள் படையெடுப்பு அதிகமாகி காலப்போக்கில் பல்லவர்கள் , களப்பிரர்கள் போன்ற அண்டை  மானிலத்தவர்  தமிழர்களை வென்றனர். இந்த கால கட்டத்தில்தான் , ஜாதி இழிவுகள் , மூட நம்பிக்கைகள் போன்ற ஆரிய பண்பாடு இங்கு நுழைந்தது.

அதாவது  , நன்றாக இருந்த தமிழ் நாட்டை சீரழித்தது இந்த அண்டை மானில திராவிடர்கள்.

பிற்காலத்தில் இதே அண்டை மானிலத்தை சேர்ந்த சில நல்லவர்கள் இந்த சீரழ்வில் இருந்து தமிழகத்தை மீட்கவும் செய்தனர் என்பதும் உண்மையே..
அவர்கள் செய்த சேவையை மறுக்கவில்லை.ஆனால் ஒட்டு மொத்த வரலாற்றை பார்த்தால் , அண்டை மானிலத்தவர் செய்தது சேவை என்பதை விட பிராயச்சித்தம் என்பதே பொருந்தும். இதைத்தான் முன்பு குறிப்பிட்டேன்.

சரி. மீண்டும் வரலாற்றை பார்க்கலாம்.

அண்டை மானிலத்தவர் ஆதிக்கம் , ஒன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்தது. அதன் பின்புதான் சோழர்களின் எழுச்சியால் மீண்டும் தமிழக மன்னர்கள் கைக்கு ஆட்சி வந்தது.

இந்த திராவிடர்கள் செய்த பல தீமைகளை சோழர் ஆட்சியில் வெகுவாக குறைத்தனர். நல்லாட்சி நடந்தது. கலைகள் வளர்ந்தன. ஏரிகள் வெட்டப்பட்டன.  நிர்வாக அமைப்புகள் ஒழுங்கு செய்யப்ப்பட்டன.

அப்போதெல்லாம் ஆலயங்கள் என்பவை மதம் என்பதையும் தாண்டி , கலாச்சார அடையாளமாக இருந்தன.

அந்த ஆலயங்களை பார்த்து கொள்ளும் பணிக்காகத்தான் தேவர் அடியார்கள் நியமிக்கப்பட்டார்கள்.

இவர்கள் அரசனுக்கு அடுத்த அந்தஸ்துடன் இருந்தார்கள்.

சோழர்கள் ஆட்சியில் இவர்கள் பாலியல் தொழிலாளிகளாக இருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 

ஆனால் தமிழ் மன்னர்கள் ஆட்சியின் போது அவர்கள் ஆலயம் கட்டி இருக்கிறார்கள், அரசிகளாக இருந்து இருக்கிறார்கள், தான தர்மம் செய்து இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

அதன் பின் சோழர்கள் வீழ்ச்சிக்கு பின் மீண்டும் ஆரிய ஆசி பெற்ற திராவிட ஆட்சி இங்கு செல்வாக்கு அடைந்தது. விஜய நகர பேரரசு போன்ற வந்தேறிகள் ஆட்சியில்தான் பார்ப்பனீயம் இங்கு வலுவடைந்தது.

அந்த கால கட்டத்தில்தான் தேவதாசிகள் எல்லாம் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட்டனர்.
பிறப்பின் அடிப்படையில் , ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமலேயே , இந்த கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள்.

13ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை திராவிடர்கள் ஆட்சியே நிலவியது.

அண்டை மானில மன்னர்கள் காலத்தில் அறிமுகமான தேவதாசி முறை , முத்துலட்சுமி ரெட்டியார் அன்னிய மானில தலைவர்கள் மூலமாகவே ஒழிக்கப்பட்டது poetic justice என்றே சொல்ல வேண்டும்.

அதன் பின் பிரிட்டிஷ் ஆட்சியில் திராவிட தமிழ் உரசல்கள் எப்படி மாறின என்பது இந்த டாபிக்கிற்கு சம்பந்தம் இல்லாதது. ஆனால் அதுவும் முக்கியம்தான்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

இப்போதைக்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியது .இதுதான்.

தமிழ் மன்னர்கள் காலத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்படவில்லை/. பார்ப்பனீயமும் இல்லை.

திராவிட மன்னர்கள் காலத்தில் பல தவறுகள் நிகழ்ந்தன. அதில் சில தவறுகளுக்கு திராவிட மானிலங்களை சேர்ந்தவர்களே தீர்வும் அளித்த்னர்.

ஆக நமக்கு திராவிட மானிலங்கள் செய்தது சேவை அல்ல. பிராயச்சித்தமே.





Monday, June 24, 2013

புதிய ஊர்களில் மொழிப் பிரச்சினை- திராவிட இயக்கம் தவறு செய்து விட்டதா?


  நான் பெங்களூரு சென்ற முதல் சில நாட்களில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. கன்னட மொழியோ , ஹிந்தி மொழியோதான் அனைவரும் பேசுவது போல இருந்தது. சின்ன சின்ன பையன்கள் எல்லாம் பல மொழிகளிலும் பேசுவதை பார்த்து ஆச்சர்யமாக இருக்கும்.

நம் ஊரில் நமக்கு இப்படி பல மொழிகளை கற்றுத்தரவில்லையே... ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லி நம்மை படிக்க விடாமல் செய்து விட்டார்களே என வருந்தினேன்.

அதன் பின் வேலையில் ஆங்கிலம்தான் தொடர்பு மொழி என்பதால் மொழிச்சிக்கல் இல்லை. நண்பர்களும் தமிழ் நண்பர்கள். தமிழ் படம் ஓடும் தியேட்டர்களாக தேடி சென்று பார்ப்போம். எனவே மொழி பிரச்சினை அறவே இல்லை.

அதன் பிறகு ஆங்கிலம் இல்லாத இன்னொரு வேலையில் சேர்ந்தேன். தமிழ் யாரும் இல்லை. முழுக்க முழுக்க மண்ணின் மைந்தர்களான கன்னட சகோதரர்கள்தான்.

அவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்பதால் ஆங்கிலம் எல்லாம் வேலைக்காகாது.. கன்னடம் கலந்த தமிழில் பேசி எப்படியோ சொல்ல வேண்டியதை சொல்லி விடுவேன்,

ஏதோ ஒரு கணத்தில்கன்னட பேச , புரிந்து கொள்ள கை வந்து விட்டது. என் பேட்ச் நண்பன் அங்கிருந்து வட இந்தியா சென்று விட்டான்,

அவனை கொஞ்ச நாள் கழித்து பார்த்த போது, அவனது ஹிந்தியை பார்த்து அசந்து போனேன்,

ஃபேஸ் புக்கில் சிலர் , திராவிட இயக்கங்களால் ஹிந்தி கற்க முடியாமல் போய் விட்டதாகவும், அதனால் வேற்று மா நிலங்களில் வேலைக்கு செல்கையில் கஷ்டப்படுவதாகவும் எழுதுவதை பார்த்ததும் இந்த் நினைவுகள்  மனதில் தோன்றின,.

வேலை நிமித்தம் , ஜெர்மனி, ஃபிரான்ஸ் , ரஷ்யா என்றெல்லாம் செல்ல வேண்டி இருக்கலாம். எல்லா மொழிகளையும் பள்ளியிலேயே கற்பிப்பது சாத்தியமா?

சென்னையில் வட இந்திய தொழிலாளர்கள்  பலர் பணி புரிகிறார்கள். அவர்கள் எல்லாம் அவர்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் தமிழ் படித்து விட்டா வந்தார்கள்?

அதிக பட்சம் இரண்டு மாதங்களில் புதிய மொழிக்கு செட் ஆகி விட முடியும். பள்ளியிலேயே கற்று கொடுத்தால் நல்லதுதான். ஆனால் யார் எந்த ஊருக்கு வேலைக்கு செல்வார்கள் என எப்படி கணிப்பது , எந்த மொழியை கற்று கொடுப்பது?

ஆக இந்த விஷயத்தில் திராவிட இயக்கத்தை பழிப்பது விபரம் இல்லாத செயல் என்றே நினைக்கிறேன்.

அந்த கால நாவல்களை பார்த்தாலே தெரியும். சமஸ்கிருதம் கலந்து எழுதுவார்கள். தமிழ் பேசுவது பெருமை என்ற நிலையை உருவாக்கியது திராவிட இயக்கம்தான்.

திராவிட இயக்கம் தன் பணியில் இருந்து திசை மாறக்கூடாது என சொல்வதுதான் சரியாக இருக்க முடியுமே தவிர , திராவிட இயக்கம் தவறு செய்து விட்டது என சொல்வது , மொழிப் பிரச்சினையை பொருத்தவரை நன்றி இல்லாத செயல் என்றே நினைக்கிறேன்.


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா