Monday, February 23, 2015

ரயில் பயணங்க்களில்


இரவு நேரம்,,கிண்டி ரயில் நிலையத்தின் ரேஸ் கோர்ஸ் சாலை நுழைவு வாயிலில் ஒரு பெரியவர் பரிதாபமாக  நின்று கொண்டு இருந்தார்..
என்ன சார் என் விசாரித்தேன்.

டிக்கட் கவுன்டர் மூடி விட்டார்கள்.. என்ன செய்வது என்றார்..

இது ஒரு பிரச்சனையா... மேம்பாலம் வழியாக எதிர்புறம் போய் விடுங்க்கள்... அந்த கவுன்டரில் டிக்கட் கிடைக்கும்,,, என்றேன்..

மேம்பாலம் வழியாக போகும்போது யாரேனும் டிடி ஆர் டிக்கட் கேட்டால் என்ன செய்வது என்றார்.

கேட்கமாட்டார்கள்.. கேட்டால் இப்படி விபரம் சொல்லுங்கள் என்றேன்..

முடியாது,, ஃபைன் போட்டு விடுவார்கள் என்றார்.

தக்காளி..அப்படி என்றால் பஸ் ஏறி போக வேண்டியதுதான் என்றேன்,,

பஸ் இல்லை என்றார்..

இன்று யார் முகத்தில் விழித்தோமோ என   நினைத்தபடி , சரி..என்னுடன் வாருங்க்கள்.. டிக்கட் வாங்கி தருகிறேன். என அவருக்கு துணையாக போய் டிக்கட் வாங்கி கொடுத்து விட்டு , வரும்போது , டி டி ஆர் என்னிடம் டிக்கட் கேட்டார்..


2 comments:

  1. தர்மம் தலை காக்கும்.... என்ன ஆகுதுனு பார்ப்போம் உண்மையைச்சொன்னா?...

    ReplyDelete
  2. இணைய மொண்ணைகள்னாலே தியாகிகள்தானே :(

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா