Sunday, May 12, 2019

சோற்றால் அடித்த பிண்டங்கள்- ரசிகர்களுக்கு தோனி கடிதம்

ஐபிஎல் ஃபைனலில் சென்னை அணி தோல்வி அடைந்தது தெரிந்ததே...

ஆனால் இது குறித்து தோனி எழுதிய கடிதம் பலருக்கு தெரியாது ..

அவர் கடிதம் பின்வருமாறு

---------------------------

உடன் பிறப்பே

இன்றைய தினம்
ஆரிய அணியான மும்பை அவர்க்ளாக ஒரு போட்டி நடத்தி அவர்களாகவே அம்பயரிங் செய்து அவர்களாகவே முடிவை அறிவித்த கேலிக்கூத்தை பார்த்திருப்பாய்.
148 ரன்கள் எடுத்த அந்த அணிக்கு 20 கோடி பரிசாம்.. ஒரு ரன் குறைவாக எடுத்த நம் அணிக்கு ஒரு ரூபாய் -அல்லது ஒரு லட்ச ரூபாய்- குறைத்து கொடுப்பதுதானே சரியாக இருக்க முடியும்... ஆனால் நமக்கு அதில் பாதி ரூபாய்தான் கொடுத்துள்ளனர்..

ஒட்டு மொத்த போட்டிகளை கணக்கில் கொண்டால் , நம் அணிதான் அதிக ரன்களை பெற்றுள்ளது

சென்ற ஆண்டு போட்டிகளை விட , சற்றொப்ப 3% அதிக ரன்களை பெற்றுள்ளது

அஃதன்னியில் அதிக விக்கெட்டுகளும் கைப்பற்றியது நம் அணிதான்..

ஸ்கோர் போர்டுகளை முன்பு போல கைகளால் எழுதும் முறையும் , எடுக்கும் ரன்களுக்கேற்ப விகிதாச்சார பரிசு பகிர்வும் நடை முறைக்கு வந்தால் சென்னை அணிதான் வெல்லும் என நாம் சொல்லாவிட்டாலும் நடு நிலையாளர்கள் சொல்ல மாட்டார்களா

இது போன்ற அபத்தமான விதிகள் இருக்கும் வரை இனியும் போட்டிகளில் கலந்து கொளவ்தா என்பதை பொதுக்குழு விவாதிக்கும்

இதை தட்டிக்கேட்காத ஹைதரபாத் டெல்லி அணிகள் இப்படி சோற்றால் அடித்த பிண்டங்கள் ஆகி விட்டார்களே அன வருந்தத்தான் முடியும்

அன்புடன்

தோனி

3 comments:

  1. -- முரசொலி , என்ற பெயர் மட்டும் இல்லை. மற்றபடி அதே!

    ReplyDelete
  2. aanalum iyer entral MI supportergalthan illaya?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா