Thursday, May 27, 2021

ஜெயமோகனின் "அறம்"

 ஜெயமோகனின் அறம் சிறுகதை தொகுப்பில் உள்ள கதைகள் தமிழ் இலக்கிய மேடைகளில் மட்டுமல்ல. இலக்கியத்துச்சம்பந்தமற்ற மேடை சொற்பொழிவுகளிலும் பட்டிமன்ற மேடைகளிலும் கூட மேற்கோள் காட்டப்படுகின்றன

யானை டாக்டர் கதையை எழுதியவர் ஜெயமோகன் என்பதுகூட அறியாதவர்கள்  அதை ஒரு நாட்டுப்புறக்கதையாகவோ காற்றுவாக்கில் காதில் விழுந்த உண்மைச்சம்பவமாகவோ நினைத்து மேடைகளில் பேசுவதுண்டு.  


       நூறு நாற்காலிகள் , வணங்கான் போன்றவை சமூக நீதி அடிப்படையில் முக்கியமானவை

    சோற்றுக்கணக்கு , உலகம் யாவையும் , ,கோட்டி , ஓலைச் சிலுவை போன்றவை வரலாற்று மனிதர்களை அவர்களது அறவிழுமியங்களோடு முன் வைப்பவை

    தனி மனித அற விழுமியங்களுடன் பிரபஞ்ச பேரறம் இணைந்து செயல்படுவதை இக்கதைகளில் காண்கிறோம்

உதாரணமாக....

புனிதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறது. அடிதற்கு நம்பமுடியாத அளவுக்கு ஆற்றல் உண்டு. என்னுடைய இத்தனைநாள் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று அது. மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை அவருக்கு. அந்த சக்தியால்தான் அப்பா அவ்வளவுதூரம் சென்றார்.

       


தலைக்குமேலே ஓரு பிரம்மாண்டமான உறுமல் ஒலியை சாமர்வெல் கேட்டார். அப்போது அவரை அறியாமலேயே ’ஆமென்’ என்று சொன்னாராம். அவரது தலைக்குமேல் இருந்த ஒரு பனிமலை அபப்டியே பெயர்ந்து ராட்சத அருவிபோல கீழே வந்தது. அவருக்கு மேலே இருந்த ஒரு பனிபாறை நீட்டல் அந்த பனிவெள்ளத்தை இரண்டாக பிளந்தது. அந்த பிளவில் சாமர்வெல் நிற்க இருபக்கமும் இருந்தவர்களை அந்த பனிவீழ்ச்சி அள்ளிக்கொண்டு அதலபாதாளத்தில் இறங்கிச் சென்று மறைந்தது.  பதினாறு வருடம் கழித்து ஒருமுறை சேர்ந்து அமர்ந்து பழையது சாப்பிடும்போதுதான் தன் அப்பா அந்த நாள்முதல் கொடும்பட்டினியிலும் பழையசோறை கையால் தொட்டதில்லை என்று தெரிந்து கண்ணீர் விட்டார். ‘பாவப்பெட்டவனுக்கு பழிவாங்கணுமானா அவனுக்க சொந்த தேகமும் வயறும் ஆன்மாவும் மட்டும்தானேலே இருக்கு?’ என்பார் அப்பா.

அதேபோல  கதைகளில் வரும் சிறிய பாத்திரங்களின் தன்னறமும் மலைக்க வைக்கிறது..

உதாரணமாக...

    அடுத்த படுக்கையில் இருகால்களும் சிதைந்த ஒருவன் கிடந்தான். அவனுடைய கண்கள் தன்னையே பார்ப்பதை உணர்ந்து எழுந்தார். அவன் கையை அசைத்து ‘பரவாயில்லை, ஓய்வெடுத்தபின் வாருங்கள்’ என்று சைகை செய்தான்


மேலும் பதினாறு வருடம் கழித்து ஒருமுறை சேர்ந்து அமர்ந்து பழையது சாப்பிடும்போதுதான் தன் அப்பா அந்த நாள்முதல் கொடும்பட்டினியிலும் பழையசோறை கையால் தொட்டதில்லை என்று தெரிந்து கண்ணீர் விட்டார். ‘பாவப்பெட்டவனுக்கு பழிவாங்கணுமானா அவனுக்க சொந்த தேகமும் வயறும் ஆன்மாவும் மட்டும்தானேலே இருக்கு?’ என்பார் அப்பா.



மத்துறு கதையில் பேராசியரின் அற விழுமியங்களுக்கு நிகராக தன்னை உயர்த்திக் கொண்ட − வாழ்க்கையில் தோல்வியுற்றவன் என்று கருதப்பட்ட − ஒரு மாணவனை காண்கிறோம்


இதில் வரும் மனரீதியாக துயரை உடல்ரீதியாக அனுபவிக்கும் ஒரு மாமனிதரை  பெரு வலியில் காண்கிறோம்.  அதில் வரும் சிறிய பாத்திரமான,வடநாட்டு பெண்மணியின் பெருங்கருணையில் நெகிழ்கிறோம்.

அறம் கதையில் மனசாட்சி உலுக்கப்படும் தருணத்தை காண்கிறோம்


தனக்கான அற விழுமியங்களை கண்டுகொண்டு அதன்படி வாழ்ந்த மனிதர்களின் கதையை கோட்டி , வணங்கான் , நூறு நாற்காலிகள் , உலகம் யாவையும் , சோற்றுக்கணக்கு , மத்துறுதயிர், யானை டாக்டர் , ஓலைச்சிலுவை போன்ற கதைகளில் பார்க்கிறோம்

அறம் , பெருவலி , தாயார் பாதம் போன்ற கதைகளில் பிரபஞ்ச பேரறத்தை காண்கிறோம்

  சற்று வித்தியாசமாக மிளிர்வது மயில் கழுத்து சிறுகதை.    தனக்கான சுயதர்மத்தை  கண்டு கொள்ளும் அற்புத தருணத்தை பதிவு செய்யும் கதை இது


ஓலைச்சிலுவை , சோற்றுக்கணக்கு , கோட்டி கதையின் இறுதிப்பகுதிகள் ஆகிவற்றிலும் இந்த தருணங்கள் உண்டு


ஆனால் முழுக்க முழுக்க அந்த தேடலை  தன்னை அறிவதற்கு முன்பான தத்தளிப்பை அவஸ்தையை வேதனையை பதிவு செய்யும் கதை


ராமன் மற்றும் பாலசுப்ரமணியன்,ஆகிய இருவரையும் வாசகனால் நெடுங்காலம் மறக்க முடியாது.


இவர்கள் இடம்பெறும் இரு,கதைகளையும் ( தாயார் பாதம் , மயில் கழுத்து )சேர்த்து வாசிக்கும்போது கிடைக்கும் திறப்பு வெகு அழகானது,

   இசைக்கலையில்  மேதைமை ,  பணம் இல்லாவிட்டால் என்ன சரஸ்வதி கடாட்சம் மிக்க பெண் இருந்தால்போதும் என நினைக்கும் மனம் கொண்ட தந்தை  , சரஸ்வதி தேவிக்கு போன ஜென்மத்தில் மட்டுமல்ல இப்பிறவியிலும்,ஆண்டு தோறும்,தேனாபிஷேகம் ,  தந்தை மீதான குருபக்தி எனமேன்மையே  உருவெடுத்து வாழ்வதுபோன்ற ஒருவர் , சரஸ்வதிதேவி நேரில் வரும்போது மல அபிஷேகம் செய்கிறார்


ஆனால்   பெண் போதையில் பாலியல் ஈர்ப்பில் சிக்கி சீரழிந்து கிடந்த ராமன் , அந்த நஞ்சை அமுதமாக்கி வென்று செல்கிறார்


அந்த  நஞ்சு இல்லாவிட்டால் அவர் எழுத்தாளரே அல்லர்.  கோடிக்கணக்கான சாமான்யர்களில் ஒருவர்

ஆனால் அந்த நஞ்சு ரசவாதம் அடையாவிட்டாலும் அவர் அழிந்திருப்பார்.


  சரியான புள்ளியில் அவர் தனது தர்மத்தை கண்டுகொள்கிறார்

    எதையும் தர்க்கரீதியாக பார்க்கும் நிதானமான மனம் கொண்ட பாலசுப்ரமணயனிடமும் மாற்றம் நிகழ்கிறது


தாயார் பாதத்தில்  குரு பக்தி என்ற பால் திரிந்து விஷமாகாறது


மயில் கழுத்தில்  விஷம் பதப்படுத்தப்பட்டு வைரமாகிறது


மயில் கழுத்தில் சில வரிகள்


      


நாய் மாதிரின்னா வாலச்சுழட்டிண்டு பின்னால அலைஞ்சர். அன்னைக்கு தலையிலே அடிச்சுக்காத ரைட்டர்ஸே இல்ல. கரிச்சான்குஞ்சு என்னைக்கூப்பிட்டு டேய் அவன் பிறவிரைட்டர்டா. அவனுக்கு வெக்கமும் பயமுமா ஆத்தாம கெடக்கு. துணிஞ்சு ஒரு நாலஞ்சு தாசிகளண்ட கூட்டிண்டு போ. தெளிஞ்சுட்டுதுன்னா இடுப்புக்குமேலே யோசிக்க ஆரம்பிப்பான்னார். 


தோத்து கேவலப்பட்டு சீரழிஞ்சுட்டேன்.மண்ணுல கால வைக்கவே முடியாதவனா ஆயிட்டேன். எங்கூரிலெ பங்காளி தோட்டத்து மரத்த கொத்தி நவச்சாரத்த புதைச்சு வைப்பாங்க . வெஷம் குருதியிலே ஏறி எலையும் தளிரும் வேரும் விழுதும் எல்லாம் வெஷமாகி மரம் அப்டியே காய ஆரம்பிக்கும். காஞ்சுகாஞ்சு உலந்து தீப்பட்டதுமாதிரி பொசுங்கி நிக்கும்…அந்தமாதிரி எனக்குள்ள ஏறிட்டுது வெஷம்… மூணு வருஷமா எரிஞ்சு கரிஞ்சுட்டிருக்கேன் பாலு…’


    ஆனா எனக்குள்ள இந்த வெஷமில்லேன்னா நான் யாரு, வெறும் சோத்துப்பிண்டமில்ல? 



இந்த தொகுப்பை படித்தவுடன் நமக்கு தோன்றுவது இதுதான்


எ்ததனை மகத்தானவன் மனிதன்! கடவுளின் படைப்பில் இந்த ஓர் உயிருக்கு மட்டும் எவ்வளவு ஆன்ம வல்லமை சாத்தியமாகிறது! அவன் போக்க்கூடிய தூரம் எவ்வளவு அதிகம். அவனால் கொஞ்சம் கைநீட்டினால் மனிதகுமாரனின் கால்களை தொட்டு விடமுடியுமே

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா