Friday, May 28, 2021

ஒரு கரும்பின் பயணம் − காமத்தை கையாள்தல்

 காஞ்சிப் பெரியவர் என்றால் அவரை கடவுளாக நினைப்பவர்களும் , இண்டலக்சுவலாக நினைப்போரும் உண்டு.

இன்னொருபுறம் அவரைப்பற்றிய அறிமுகம் இல்லாதவர்களும் கணிசமாக உண்டு.

என்னைப் பொருத்தவரை அவரது எழுத்துகளும் உரையாடல்களும் எனக்குப்பிடிக்கும்.

சமீபத்தில் படித்த திருப்பூர் கிருஷ்ணனின் கட்டுரை என்னைக்கவர்ந்தது.    

ஒருவர் மகாபெரியவரிடம் கேட்டார்.  

மன்மதன் கையில் கரும்பு இருக்கிறது.

அதேகரும்பு காமாட்சி தேவி கையிலும் இருக்கிறது.  இதன் தாத்பர்யம் என்ன?

மகாபெரியவர் சொன்னார்


மன்மதன் கையில் இருக்கும் கரும்பு வில் , பாலியல் ஈர்ப்பை தோற்றுவிக்கக்கூடியது.

அவனது கரும்பு,வில்லில் இருந்து பாயும் மலர்க்கணைகளால்  தாக்கப்பட்டவர்கள் பந்த பாசங்களில் எதிர்பால் கவர்ச்சியில் சிக்குவது உறுதி

ஆனால் அவன் ஒரே ஒருவரிடம் தோற்றான்.   சிவன் மீது பாய்ந்த அவனது கணைகள் அவர்தம் தவத்தை கலைக்கவில்லை.  அவர் மோகவயப்படவில்லை  அவனை எரித்துசாம்பலாக்கி விட்டார்

வென்றவர்க்கு தோற்றவரின் ஆயுதங்கள் சொந்தம் என்ற அடிப்படையில்  , கரும்பு சிவன்வசம் சென்றது. 

இப்படியாக அது காமாட்சியை வந்தடைந்தது

இதன் நுட்பம் என்னவென்றால் ,  காமமே பிரதானம் என்பது மன்மதன் தரப்பு

அந்த காமமானது அன்பு பாசம் மக்கட்செல்வம் என சற்று உயர்நிலை அடைந்தால்தான் மனித குலம் செழிக்கும்

பாலினக்கவர்ச்சியே கூடாது என்ற சிவனது தரப்பு அன்றாட,வாழ்வுக்கு பொருந்தாது

இதனால்தான் மன்மதனின் கரும்பை காமாட்சியும் ஏந்துகிறாள்


இப்படி சொல்கிறார் மகாபெரியவர்


நமது முந்தைய பதிவில் இதை இலக்கியரீதியாக அலசியது நினைவிருக்கலாம்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா