Thursday, March 2, 2023

கலைஞர் ஜெயகாந்தன் சந்திப்பு −2

 சீர்திருத்த இயக்கத்தில் ஏற்பட்ட ஆர்வத்தால் படிப்பில் கவனம் குறைந்து எஸ்.எஸ்.எல்.சி பபுரீட்சையில்தோல்வியுற்றேன்.


ஜெ.கா: ஆனால் அப்போதே நீங்கள் 'முரசொலி கையெழுத்துப் பத்திரிகை தொடங்கியிருந்தீர்கள் அல்லவா


மு.க. ஆமாம்.


ஜெ.கா: இதற்காக உங்களைத் தனிப்பட நான் பாராட்ட வேண்டும். எவ்வளவோ பேர் கையெழுத்துப் பத்திரிகைகள் ஆரம்பித்திருக்கிறார்கள். வாழ்க்கையில் வேறு பொறுப்புகள்ஏற்பட்டதும் அவற்றைக் கை விட்டு விடுவார்கள். ஆனா நீங்கள் எல்லாக் காலங்களிலும் இதைக் கைவிடாம இருந்தது மட்டுமல்ல; இன்று மிகப் பெரிய அரசிய இயக்கத்தின் ஆயுதமாகவே அதை ஆக்கியிருக்கிறீர்கள் அடிப்படையில் நீங்கள் ஒரு பத்திரிக்கைக்காரர் என்று நான் கணித்தால் சரிதானே?


மு.க. சரியே.


ஜெ.கா: சமூக சீர்திருத்த இயக்கங்களில் மிக இளய வயதிலேயே ஈடுபட்டதாகக் கூறினீர்கள். அப்படி உங்களிள் ஈர்த்தவர்களில் முதலாக திரு அண்ணாத்துரை இல்ல யென்றே நினைக்கிறேன்.


 'மு.க: ஆம், அது உண்மைதான். பெரியார், அழகிரி ஆகியோர்தான் முதலில் என்னை இயக்கப் பணிகளில் ஈர்த்தவர்கள். அதற்கு முன்னாலேயே அண்ணா அவர்கள் இயக்கத்தில் இருந்த போதிலும் பின்னால்தான் என்னை ஈர்த்தவர் என்று அண்ணாை சொல்ல வேண்டும்.



ஜெ.கா: எந்த ஆண்டில் உங்களது மாணவப் பருவமும் சமூக இயக்கப் பணிகளும் சேர்ந்து இருந்தன?


மு.க: 1938 லிருந்து 1942 என்று சொல்லலாம். அப்போதே இலக்கியத்திலும் எழுத்திலும் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. இந்தி - எதிர்ப்பு இக்காலங்களில் தமிழகத்தில் உச்சமாய் இருந்தது. மறைமலையடிகள், கி.ஆ.பெ. விசுவநாதன், பெரியார். அண்ணா ஆகியோரின் எழுத்துக்களால் நான் பெரிதும் கவரப்பட்டேன். 


ஜெ.கா:அக்காலத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருந்த தேசிய இயக்கமல்ல காந்திஜி, நேருஜி, பாரதியார் போன்றவர்களின் எழுத்துக்கள் அல்ல - சுயமரியாதை இயக்கத்திலிருந்த சமூக சீர்திருத்த உணர்ச்சிதான் உங்களைப் பொது வாழ்க்கைக்குக் கொணர்ந்தது என்று சொல்லலாமா?


மு.க: தமிழ்மொழிப்பற்றின் காரணமாக இந்தி எதிர்ப்பும் சமூக சீர்திருத்தப் பணியும் என்னைப் பொது வாழ்வுக்கு இழுத்தன. எனினும் ஒரு விஷயத்தை விளக்க வேண்டும். சுயமரியாதை இயக்கம் தேசிய இயக்கத்துக்கு எதிரானது என்று பலர் நினைக்கிறார்கள். அது அப்படி அல்ல.


ஜெ.கா(குறுக்கிட்டு) ஆரம்பத்தில்

எல்லா இயக்கங்களும் சரியான இடத்தில்தான் தொடங்குகின்றன. சொல்லளவில் கூட சுயமரியாதை என்பதும் சுயராஜ்யம் என்பதும் மிகவும் நெருக்கமுடையவைதான். நாம் இப்படிக் குறித்துக் கொள்வோமே. ஒன்று சமூக சீர்திருத்த இயக்கம், இன்னொன்று, தேசிய அரசியல் இயக்கம். உங்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்தது சமூக சீர்திருத்த இயக்கம் தானே?


மு.க: ஆம், சமூக சீர்திருத்த உணர்ச்சிதான். பெரியார் இயக்கம் அப்போது அரசியல் இயக்கமாக ஆரம்பமாக வில்லை. சாதிக் கொடுமையும் மூட நம்பிக்கைகளும் மண்டிக் கிடக்கும் தமிழ்நாட்டில் சமுதாய விழிப்பு உணர்ச்சி இயக்கமாகப் பெரியாரின் இயக்கம் திகழ்ந்தது.


ஜெ.கா: எனவே இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தோரை சுயமரியாதை இயக்கத்தின் வாரிசுகள் என்று கொள்வது தகும் அல்லவா?


மு.க:ஆம், நிச்சயமாக. பெரும்பாலோர் அப்படித்தான்


ஜெ.கா: பின்னர் ஒரு பெரும் பகுதி இளைஞர் கூட்டம் | தி.க.விலிருந்து பிரிந்ததற்கான சரியான காரணம், சமூக அரசியல் ரீதியான காரணம் எது என்று எண்ணுகிறீர்கள்?


(கலைஞர் சற்று யோசிக்கிறார்)


ஜெ.கா (இடையூறில்லாம் குறுக்கிட்டு): பெரியாரின் இயக்கம் ஒரு தனித் தலைமையின்கீழ் நிரந்தரம் பெற்று விட்டதால் அதில் ஜனநாயக வாதிகள் மிகவும் குறைவாய் இருந்தனர். ஒரு கட்சி என்ற முறையில் அதில் உள்கட்சி ஜனநாயகம் சற்றும் இல்லாதிருந்தது வெளிப்படையாக தெரிந்தது. அப்போது புதிதாக சுதந்திரம் பெற்ற நம் நாடு சமுதாய அளவிலேயே ஜனநாயக அரசியல் நாகரிகத்தை அங்குரார்ப்பணம் செய்யவிருந்தது. நாடெங்கும் எழுந் இந்த ஜனநாயக உணர்ச்சியின் உந்துதல் தமிழர் இனத்தின் தனிப்பெரும் இயக்கமாய் விளங்கிய திராவிட கழகத்தின் உள்ளும் எழுந்தது. அதன் விளைவே தி.மு.க. என்ற சொல்லலாமா?


மு.க: இது மாதிரி இதுவரை யாரும் தி.மு.கழகத்தி தோற்றுவாயை எடுத்துச் சொன்னதில்லை. ஜனநாயகஉணர்வின் உந்துதலும் தி.மு.கழகத்தின் பிறப்புக்கு காரணம் என்று கூறலாம். இரு கழகங்களும் முறையே சமுதாய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றன.


ஜெ.கா: பார்த்தீர்களா? எந்த ஒரு விஷயத்திலும் விருப்பு வெறுப்பற்று, விஞ்ஞான பூர்வமாய் ஆராய்ந்தால் விடைகள் சரியாகவே கிடைக்கின்றன. ஒரு காலத்தில் தி.மு. கழகத்தின் பிறப்பு குறித்து நானே என்னென்னமோ சொல்லியிருக்கிறேன், நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். அப்போது இருந்த சூழ்நிலையில் நீங்களே இதைச் சொல்லி யிருந்தால் நான் ஒப்புக்கொண்டுதான் இருக்கமாட்டேன்.


மு.க: தி.மு.கழகம் எப்போதும் ஜனநாயகத்தில் உறு தியான நம்பிக்கை உடையது... எமர்ஜென்சியின்போது கூட ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்காக தி.மு.கழகம் போராடியதை அறிவீர்கள்.


ஜெ.கா: ஜனநாயக உணர்சியின் உந்துதலினால் பிறந்த தி.மு.கழகம் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை யுடைய தி.மு.க. கட்சிக்குள் அதனைப் பழுதுபடாமல் காப்பாற்றியது என்று சொல்ல முடியுமா?


மு.க: பின்னர்ஒரு சந்தர்ப்பத்தில் எங்கள் மத்தியிலும்கூட ஜனநாயகத்துக்கு எதிரான போக்கு, தனிநபர் மோகம், தலையெடுத்து வளர்ந்து வந்தது. நாங்கள் அதைக் கவனிக்கத் தவறிவிட்டோம். கழகத்துக்குள்ளே சம்பத், கண்ணதாசன் போன்றவர்கள் அப்போதே இந்த "சினிமாமோக' ஆபத்து குறித்து எச்சரித்து எதிர்த்துப் போராடினார்கள். வெளியிலும் உங்களைப் போன்றவர்கள் பலர் அதனைச் சுட்டிக்காட்டினார்கள்.

( தொடரும்)


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா