Showing posts with label காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ். Show all posts
Showing posts with label காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ். Show all posts

Friday, January 3, 2025

தனிமையின் நூறாண்டுகள் - பாத்திரங்கள் பேசுகின்றன

 காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் -இன் தனிமையின் நூறாண்டுகள் நாவலின் பிரதானப் பாத்திரங்களில் நெட்பிளிக்ஸ் தொடரில் நடித்த பாத்திரங்கள் பேசுகின்றன


மார்கோ கோன்சலஸ்


மார்க்வெஸின் உலகம் கனவுக்கானது , படிப்பதற்கானது அன்று என்கிறார்கள். மாந்திரீக யதார்த்தம், மனித மோதல்கள் மற்றும் ஒரு நாகரிகத்தை உருவாக்கும் இந்த கவிதை உலகில் காலடி எடுத்து வைப்பது எப்படி இருந்தது?


ஜோஸ் ஆர்காடியோவாக நடிப்பது ஒரு சவாலுக்கு சமமானது. எப்பொழுதும் விளையாடுவதையும்  அது தரும் சாகசங்களையும் ரசிக்கும் குழந்தையைப் போல் அந்த  அனுபவம் இருந்தது. அதுதான் நாம் உருவாக்கும் உலகில் நம்மை இழப்பதற்கு வழி வகுத்தது . நடிகர்களான எங்களுக்கு மாயாஜாலம்  முக்கிய வார்த்தையாக இருந்தது;  ஒருவர் செட்டில் திறந்த மனதுடன் இருந்து வருவதை ஏற்க வேண்டும்  ஜோஸ் ஆர்காடியோ ஒரு இயற்கையான சாகசக்காரர், சில சமயங்களில் அவரது முடிவுகள் சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும், அவர் எல்லாவற்றையும் ஆச்சரியத்துடனும் அப்பாவித்தனத்துடனும் அணுக்கக்கூடியவர்

இதயத்தில் எளிமையான ஆனால் அவரது சிந்தனைகளில் அப்படி அல்லாத    மனிதனைப் புரிந்துகொள்வதில் உங்கள் செயல்முறை என்ன?


ஜோஸ் ஆர்காடியோவைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் பேரார்வம். சில சமயங்களில் பகுத்தறிவு என்பது நமக்கும்  நம் திறன்களுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்துவதாக உணர்கிறேன்


இந்த கேரக்டரை எவ்வித முன் தீர்மானங்களும்  இல்லாமல் அணுகினேன். கனவு காண்பது நல்லதுதான், தோல்வியுற்றாலும் பரவாயில்லை என்று ஜோஸ் ஆர்காடியோவை எனக்குக் கற்பிக்க நான் அனுமதித்தேன். நீங்கள் செய்வதை நம்புவதற்கும் அன்பாக இருப்பதற்கும் உங்களை அனுமதிக்க வேண்டும். நான் அவரது பார்வைக்கு முழு மனதுடன் பணிந்து, எந்த எல்லையும் இல்லாமல் அவரை நடித்தேன்.


இன்றைய காலகட்டத்தில் மார்க்வெஸின் பொருத்தப்பாடு என்ன என்று நினைக்கிறீர்கள்?


என்னைப் பொறுத்தவரை, இந்த நிகழ்ச்சியும் புத்தகமும் அடுத்த தலைமுறைக்கு பலன் அளிக்கிறது. தொடர் மட்டுமின்றி புத்தகத்தின் மூலமும் கிடைக்கும் இந்த அறிவை நம் மனதிற்கு உணவாக ஊட்ட வேண்டும். இது பலம் மற்றும் நம்பிக்கையைக் கொண்டுவருவது, உங்களுக்குத் தெரியும், ஏனென்றால் புத்தகத்தின் முடிவில், அவர் உங்களை கொஞ்சம் இருளான  நம்பிக்கை இல்லாத இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம், ஆனால் அது அவ்வாறு உணரப்படக்கூடாது. அவர் நோபல் பரிசைப் பெற்றபோது, ​​​​அவரது ஏற்பு உரைக்கு "லத்தீன் அமெரிக்காவின் தனிமை" என்று பெயரிடப்பட்டது, ஏனெனில் அவர் மூலம் எமது உலகத்தைப் பற்றிய புதிய திறப்புகள் கிடைத்தன



.புத்தகம் என் வாழ்வின் ஒரு பகுதி'


வினா மச்சாடோ


மார்க்வெஸின் உலகம் கனவுக்கானது , படிப்பதற்கானது அன்று என்கிறார்கள். மாந்திரீக யதார்த்தம், மனித மோதல்கள் மற்றும் ஒரு நாகரிகத்தை உருவாக்கும் இந்த கவிதை உலகில் காலடி எடுத்து வைப்பது எப்படி இருந்தது?


நான் கொலம்பியாவின் கரீபியன் பகுதியைச் சேர்ந்தவள் , அங்குதான் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பிறந்தார். இதைத்தான் நான் துல்லியமாக  உணர்ந்தேன்; நீங்கள் அதை விளக்க முடியாது; நீங்கள் அதை வாழ வேண்டும், நீங்கள் அதை விட்டுவிட வேண்டும். ஒருவர் மாந்திரீகமாகவும் , உங்களைச் சுற்றியுள்ள யதார்த்தத்தை அறிந்தவராகவும் இருக்க வேண்டும். நம் இயல்பில் அது இருக்கிறது. ஒரு கரீபியன் பெண்ணாக, நான் சொல்கிறேன், அவர் புத்தகத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு அது உண்மையாக இருந்து, அதை என்னுள் வளர செய்து, கொலம்பியனை அதில் கலப்பதாகும் அதுதான் நான் செய்த வேலை. மேலும், அவர் அவளை எழுதியதைப் போலவே அவளை புரிந்து கொள்ள வேண்டும்


பிலார் டெர்னேராவைப் பற்றி நாம் பேசும்போது, ​​அவள்  சிரமமின்றி தனது பாலுணர்வில் வசதியாக இருக்கும் ஒரு பெண். அவளுடைய ஆளுமையின் ஒரு அம்சம் உங்களை ஈர்த்தது ?


என்னைப் பொருத்தவரை, பிலார் அவளுடைய காலங்கள் மற்றும் சகாப்தத்திற்கு முன்னால் ஒரு பெண். அவள் சுதந்திரமானவள், பியூண்டியா குலத் தலைவரான உர்சுலாவின் சீடரும் கூட


  . உர்சுலாவில் நீங்கள் ஒரு பெண் தன் குடும்பத்திற்காக அர்ப்பணித்திருப்பதையும் வலுவான மற்றும் ஆதரவான பெண்பால் இருப்பையும்.  காண்கிறீர்கள், அவள் இந்த தளைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தன் வாழ்க்கையை அனுபவிக்கிறாள். இந்த வசீகரப் பெண்ணின் மாந்திரீக  மர்மத்திற்கு நான் விருப்பத்துடன் என்னை ஒப்புக்கொடுத்தேன்.


இது மிகவும் விரும்பப்படும் படைப்பு,  அற்புதமான பராட்டுகள் பல பெற்றது ஆனாலும் , சினிமா சுதந்திரத்தை  நூலுடன் ஒப்பிடக்கூடிய சற்று சந்தேகம் கொண்ட ரசிகர்கள் எப்போதும் இருப்பார்கள்.


நானும் ஒரு ரசிகைதான், இந்தப் புத்தகத்தை பலமுறை வாசித்து மீண்டும் வாசித்து, அது என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டது. நான் சொல்வேன், அதை ரசியுங்கள், ரசியுங்கள், ஏனென்றால் எங்களில் பலர் இந்த உலகத்தை திரையில் உயிர்ப்பிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம், எந்த அம்சத்திலும் ஒருபோதும் சமரசம் செய்யவில்லை. இந்த உலகத்தை மீண்டும் உருவாக்க நிறைய கடின உழைப்பு தேவைப்பட்டது.

நமக்கெல்லாம் பாத்திரங்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளன; பிலரை வெளிக்கொணர்தல் கடினமாக இருந்தது. அவளையும் பிற பாத்திரங்களையும் என் பார்வையில்  சற்று அனுபவியுங்கள்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா