Showing posts with label சிறுத்தை சிவா. Show all posts
Showing posts with label சிறுத்தை சிவா. Show all posts

Friday, November 5, 2021

அண்ணாத்தே − திரைப்பார்வை

 ரஜினியுடன் நெருக்கமான  இயக்குனர்கள் ராஜசேகர் , மகேந்திரன் , எஸ்பிஎம் ,  கேஸ்ரவி  ,  பி.வாசு  போன்றோருடன் இணைவதை பல நடிகர்கள் விரும்புவார்கள்.

ரஜினி வரலாற்றில் முதன்முறையாக இன்னோரு நடிகரின் இயக்குனருடன் ஆசைப்பட்டு இணைந்திருக்கிறார். அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிவாவுடனான இணைவு எப்படி இருக்கிறது?

அண்ணன் தங்கை என்ற பிரதான கதைக்குள் சில ஹைக்கூக்கள் , சில சிறுகதைகள் என பல படங்களில் காண முடியாத ( ரஜினி படங்களிலும் இதுவரை இல்லாத )    சில  வித்தியாசமான  அனுபவங்களை படம் தருகிறது.

பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தை மிகவும் அலட்சியமாக அவமரியாதையாக நடத்துகிறான் காளையன். பிற்பாடு பிரகாஷ்ராஜ் பாத்திரம் வெகு உயரத்துக்கு சென்று  காளையனே அவர் பாதம் பணியும் அளவு செல்கிறது.  தன்னளவில் ஒரு தனி சிறுகதை

பிரகாஷ்ராஜிடம் வேண்டுமென்றே அடிவாங்கும் காட்சி அமைப்பு அழகான  கவிதை


அதுபோல இரு வில்லன்களுக்கிடையே ( அகனிநட்சத்திரம்)  போன்ற  வாரிசுரிமைப்போர்.   ஒரு கட்டத்தில் தம்பி வாழ்க்கையில் தோற்று தற்கொலை செய்து கொள்ள ,  தம்பி என்ற அங்கீகாரம் பெற்று திருப்தியுடன் கண் மூடுகிறான்

அதுவரை தம்பி என ஏற்காத அண்ணன் ,  தனது தம்பிக்காக தன் உயிரேயே பணயம் வைக்க தயாராகிறான்.

இப்படி ஒரு உருக்கமான கிளைக்கதையை − அதுவும் வில்லனுக்கு−  படங்களில் பார்ப்பது அரிது


புதிய தலைமுறை நகைச்சுவை நடிகர்களுடனான ரஜினியின் கெமிஸ்ட்ரிரசிக்க  வைக்கிறது

அண்ணாத்த பட படப்பிடிப்பு அனுபவங்களை கவிஞர் பிறைசூடன் பெருமையுடன் சொன்னது நினைவிருக்க்கூடும்.  அவர் நடித்த காட்சிகளைப் பார்க்க அவர் இன்று இல்லை.  மரியாதைக்குரிய − ரஜினிக்கே அறிவுரை சொல்லத்தக்க −  பெரியப்பா பாத்திரம்.   பிறைசூடன் ரசிகனாக மகிழ்ச்சி

பாண்டியராஜன்  , லிவிங்க்ஸ்டன் ,  குஷ்பூ , மீனா ,  சதீஷ் , சத்யன் போன்ற நட்சத்திர பட்டாளங்கள்  ஃபீல் குட் சூழலை உருவாக்குகின்றனர்

இடைவேளைக்குப் பிறகு வேறொரு படமாக மாறி விடுகிறது அண்ணாத்த

டூயட்டுகளுக்காக  கவர்ச்சிக்காக  நாயகிகள்  அல்லது அடக்கி  வைக்கப்படுவதற்காக  நாயகிகள்  என்பது மாறி ,  ரஜினிக்கு இணையான அந்தஸ்துடன் ,அவருக்கு உதவி செய்யக்கூடிய திறனுடன் அவர் பட நாயகிகள் சமீபத்திய படங்களில் வருகின்றனர்.  இதில் நயன்தாரா அப்படிப்பட்ட  ஓர் ஆளுமையாக வருகிறார்

முள்ளும் மலரும் படத்தில்  அண்ணனுக்காக  காதலை மறுக்கத் தயராகும் தங்கை

இந்தப்படத்தில்  தங்கையின் மனமகிழ்ச்சிதான்  முக்கியம் என நினைக்கும்  அண்ணன்

காலம் ஏற்படுத்தியுள்ள இந்த  மாற்றம் குறிப்பிடத்தக்க ஒன்று


ரஜினியின் மேக்அப் , சிகை அலங்காரம் என புதிய தலைமுறை கலைஞர்கள் சிறப்பு.  ரஜினியின் பிரமாண்டமான  நிழல்  தங்கைக்கு எப்படிப் பொருள்படுகிறது  வில்லனுக்கு எப்படி பொருள்படுகிறது என்ற ஒப்பீடு இயக்குனரின் பெயர் சொல்லும்.   ஒளிப்பதிவு தரம்

இசை  பொருத்தமாக இருக்கிறது.  பாடல்களில் தியேட்டர் குலுங்குகிறது

கீர்த்தி சுரேஷ்  கண்களில் நிற்கிறார்

நல்லது செய்ய பொய் சொல்லலாம் என நினைத்து பாட்டி சொல்லும் பொய் தீமையாக முடிகிறது என்பது யதார்த்தமான  ட்விஸ்ட்


அனைத்து  கேரக்டர்களும்  அந்தந்த கேரக்டர்களின்  தன்மைக்கேற்ப  உயர்வுடன்  பேசுவது ரசிக்க வைக்கிறது.  நாயகனுக்கு மட்டுமே  அனைத்தும் தெரியதும் ,  நாயகி உட்பட அனைவரும் கோமாளிகள் என்ற தேய்வழக்கு தவிர்க்கப்பட்டுள்ளது


மொத்தத்தில்  அண்ணாத்தே  ,  அருமை







Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா