Showing posts with label துரோகி. Show all posts
Showing posts with label துரோகி. Show all posts

Friday, January 11, 2013

ரிஸானா நஃபீக் மரண தண்டனை- உண்மையை மறைக்கும் துரோக புத்திரன்


ரிஸானா  நஃபீக்.... இந்த சகோதரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி மனதை மிகவும் பாதித்தது.

இலங்கையை சேர்ந்த ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் இவர். பிழைப்புக்காக சவுதிக்கு வேலை தேடி சென்று இருக்கிறார். வயதை மாற்றிக்காட்டி இவரை அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.

  வேலை செய்த இடத்தில் குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லி இருக்கிறார்கள்.  பாலூட்டும் போது குழந்தை இறந்து விட்டது. ரிஸானாதான் கொன்று விட்டார் என குழந்தையின் தாயார் குற்றம் சாட்டவே , ரிஸானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

   பணம் செய்து வழக்காட முடியாத ஏழ்மை , ஆசிய நாட்டில் பிறந்த தவறு ,  மொழியறிவு இல்லாத நிலையில் , வாக்கு மூலத்தில் ஏற்பட்ட குளறுபடி என பல விஷ்யங்கள் ரிஸானாவுக்கு எதிராக போய் விட்டன.

மனதை கலங்க வைத்தது இந்த செய்தி. அவர் எந்த அளவுக்கு வேதனைப்பட்டு இருப்பார். யாராவது காப்பாற்றி விட மாட்டார்களா என எப்படியெல்லாம் ஏங்கி இருப்பார்..

இதயம் கனக்கிறது.

ஆனால் இதைக்கூட ஒருவர் சுயனலத்துக்காக பயன்படுத்த முனைந்த செய்தி , மனிதன் எந்த அளவுக்கு கேவலாமாக செல்வான் என்பதை உணர்த்தியது.

       இஸ்லாமிய சட்டங்கள்தான் உலகத்துக்கு சரியான தேர்வான அமையும் என்ற கருத்து உலகெங்கும் வலுத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த கருத்து வலுத்து வருகிறது.

      இந்த நிலையில் , மேற்கண்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி , இஸ்லாமிய சட்டம் வேண்டும் என சொல்லும் மூடர்கள் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என துரோக புத்திரன் கூறியிருக்கிறார்.

         இவர் ஏன் இப்படி சொல்கிறார்?

         இவர் ஓர் இஸ்லாமியர். ஆனால் அதை மறைக்கும் வகையில் , வேறொரு மதத்தை சார்ந்தவர் போல ஒரு புனை பெயரை வைத்து கொண்டுள்ளார்.

           தோப்பில் முகமது மீரான் , ஏ ஆர் ரகுமான் , முகமது பஷீர் , ஷாகூல் ஹமீது , பீர் முகமது என எத்தனையோ பேர் , இஸ்லாமியர்கள் என்பதை பெருமையாக நினைத்து ,  அந்த பெயரிலேயே வெற்றி பெறுகின்றனர்.

     துரோக புத்திரனோ , தனது இஸ்லாமிய அடையாளத்தை மறைத்தால்தான் மக்கள் தம்மை ஏற்பார்கள் என தவறான கண்ணோட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறார்.

 இந்த அடிப்படையில்தான் ரிஸானா தண்டனையை வைத்து , இஸ்லாமிய சட்டங்களையே எள்ளி நகையாடுகிறார்.

  ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிப்பதாலேயே அந்த நாட்டில் இஸ்லாமிய சட்டம் கறாராக பின்பற்றப்படுகிறது என சொல்ல முடியாது. எனவே ஒரு நாட்டின் சட்டங்களை வைத்து , கண்மூடித்தனமாக இஸ்லாமிய சட்டங்களை மதிப்பிட கூடாது.

   சவுதியில் இஸ்லாமிய சட்டம் முழுமையாக இருக்கிறதா என்பது விவாதத்துக்குரியது .ஆனால் சவுதியின் சட்டம் இந்திய சட்டங்களை விட மேலானதுதான்.

 நம் ஊரில் ஒருவனை கொலை செய்து விட்டார்கள் என வைத்து கொள்ளுங்கள்.

அந்த குற்றவாளிக்கு கவுன்சலிங் கொடுக்க வேண்டும் , மிதமான தண்டனை கொடுக்க வேண்டும் என ஊரில் இருக்கும் அனைவரும் அரசுக்கு அட்வைஸ் கொடுப்பார்கள். பாதிக்கப்பட்ட குடும்பம் எங்கோ அழுது கொண்டு இருக்கும்.

 ஆனால் சவுதியில் அப்படி அல்ல.

  பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உணர்ச்சிகளுக்குத்தான் முன்னுரிமை. சவுதி அரசரே கூட அந்த உரிமையில் தலையிட முடியாது.

      நம் ஊரில் ஒரு குழந்தையை கொன்றால் என்ன ஆகும் .?

  சின்ன குழந்தைதானே ..சரி விடுங்கள்... இன்னொன்று பெற்று கொள்ளலாம்.  ஏதோ தெரியாமல் கொன்று விட்டான். இறந்தவனும் சகோதரன் , கொன்றவனும் சகோதரன் என பேசுவோம்.

  சின்ன குழந்தைதான் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தானே அந்த வலி தெரியும்?

         எனவேதான்  தண்டிப்பதா மன்னிப்பதா என்று முடிவு செய்யும் உரிமையை  பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் கொடுத்துள்ளது சவுதி சட்டம்.

     மன்னிக்கும் பெருந்தன்மை உங்களுக்கு இருந்தால் , தாராளாமாக நீங்கள் பாதிக்கப்படும்போது மன்னியுங்கள். ஆனால் மற்றவர் சார்பில் நீங்கள் மன்னிப்பு வழங்காதீர்கள் என்கிறது சவுதி.

 நம் ஊரில் பாதிக்கப்பட்ட குடும்பம் எதுவும் செய்வதற்கில்லை.. அறிவு ஜீவுகளும் , பொழுது போகாதவர்களும்தான் குற்றவாளியை என்ன செய்ய வேண்டும் என அரசுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

    சவுதி சட்டத்தை குறை சொல்லலாம்தான். ஆனால் அதற்கு ஒரு தகுதி வேண்டும். நம்மை போன்ற ஒரு நான்காம் உலக நாடுகள் இதை கண்டித்தால் , உலகம் காறி உமிழும்.


   இதெல்லாம் துரோக புத்திரனுக்கும் தெரியும். ஆனால் யாரிடமோ நல்ல பெயர் வாங்க இஸ்லாம் சட்டங்களை கண்டிக்கிறார்.









Sunday, November 18, 2012

துரோகபுத்திரனின் அடுத்த victim - நீயும் அழகு, உன் கவிதையும் அழகு ; கேவலபுத்திரனாக மாறிய அவலம்.

தன்னை நம்பியவர்களை , நம்ப வைத்து கழுத்தறுப்பது துரோக புத்திரன் ஸ்டைல். காலச்சுவடு கண்ணன் , சாரு நிவேதிதா , ஜெயமோகன் , வசு மித்ர , கனி மொழி என அவர் துரோக லிஸ்ட் மிகப்பெரிது.


     அந்த துரோக லிஸ்ட்டில் லேட்டஸ்டாக சேர்ந்து இருப்பவர் கவிஞரும் , இயக்குனருமான லீனா மணி மேகலை. துரோகபுத்திரனால் சிறந்த கவிஞர் என புகழப்பட்டவர்.  

நீங்களும் அழகு , உங்கள் கவிதையும் அழகு என இங்கிதம் தெரியாமல் பேசியவர்தான் இந்த து.பு . 

  இப்படி இங்கிதம் தெரியாமல் பேசும் இவர் , மற்ற பெண்கள்தான் தன் பின் அலைவதாக செய்திகளை உருவாக்கி விடுவார். 

  காலச்சுவடு பத்திரிககையில் பணியாற்றியபோது , தன் செல் போனை ஆன் செய்து வைத்து, மீட்டிங்கை லைவ் டெலிகாஸ்ட் செய்து காலச்சுவடு கண்ணனுக்கு துரோகம் செய்தார். இது போன்ற காரணங்களால் , அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின் , அரசியல் தலைவர் ஒருவரின் மகள் ஒருவர்தான் பணம் கொடுத்து கை தூக்கி விட்டார். அந்த நன்றி கூட இல்லாமல் , அவரைப்பற்றிய அவதூறான செய்திகளை கவிதைகள் ( ?! ) மூலமும் , அரட்டைகள் மூலம் தன் ரசிகர்களிடையே புழங்கவிட்டார்.

 சாருவின் பெயரை கெடுக்க வேண்டும் என்ற ஆசையில், ஒரு பெண்ணை பலி கடாவாக்கி, சாருவை பாலியல் ஸ்கேண்டலில் சிக்க வைத்தார். 

   இதெல்லாம் ப்ழைய கதை.

   இப்போது தன் ஒரிஜினல் முகத்தை லீனா மணி மேகலையிடம் காட்டி இருக்கிறார். 

     அப்படி என்ன பெரிய தவறு செய்து விட்டார் லீனா மணிமேகலை ? ஒன்றும் இல்லை. தான் எழுதிய புத்தகங்களுக்கு சன்மானம் கேட்டார் . அவ்வளவுதான். 

 உடனே துரோக புத்திரனுக்கு கோபம் வந்து விட்டது. ஆபாச அர்ச்சனைகளை ஆரம்பித்தார் . ஒரு பெண் உரிமை குரல் கொடுத்தால் , கருத்து ரீதியாக பதில் அளிக்கும் கல்ச்சர் தெரியாத , துரோகி உடனடியாக அவதூறுகளை ஆரம்பித்தார்.  அவர் ரசிகர்கள் இன்னும் கேவலமான கமெண்ட் போட ஆரம்பித்தனர்.

             ஒரு சராசரி பெண் இத்தனை எதிர்ப்புகளை பார்த்து முடங்கி போய் இருக்க கூடும். ஆனால் லீனா மணிமேகலை இந்த ஆணாதிக்க சீண்டல்களால் துவண்டு போகாமல் , பதிலடி கொடுத்து துரோக புத்திரனை ஆஃப் செய்துள்ளார் அவர் .




லீனா மணிமேகலை அவர்களின் பதிலடி உங்கள் பார்வைக்கு 

************************************************************

      மானம் கெட்ட பிழைப்பு பிழைக்கும் ** புத்திரன் - லீனா மணிமேகலை 

            
        



அவதாரப்புருஷன் மனுஷ்யபுத்திரனுக்கு,

 சில வருடங்களுக்கு முன் வரை என் ஆவணப்படத் திரையிடல்களுக்கெல்லாம் முன்வரிசையிலமர்ந்து உணர்ச்சிவசப்பட்டு பாராட்டிய நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் இருக்கே அதை என்ன செய்ய? நீங்கள் வியாபாரியான பிறகு நான் எடுத்த படங்கள் இவை. கல்லா கட்டும் பிஸியில் பார்க
்க வரவில்லை. நீங்கள் படங்களைப் பார்க்காமலே அதைப்பற்றி குத்தல் கமெண்ட் எழுதுகிறீர்கள் எனறு உங்கள் லைக் தொண்டர்களுக்குத் தெரியுமா?

என் கவிதைகள் குறித்த ஏளனங்களால், உங்கள் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கிறது. ஒற்றையிலையன முதல் தொகுப்பை வெளியிட்டு, அசலான பெண் குரல் இது என்று கவிஞர் சுகுமாரனின் கருத்தை அமோதிக்கிறேன் என்று நீங்கள் எழுதிவைத்து பேசியதை மறக்கடித்தது, எழுத்தாளர்களிடமிருந்து உறிஞ்சிய சில்லறைக்காசுகள் என்பதையும் சொல்லிடுங்க. வரலாறு முக்கியமில்லையா? மலையாள பத்திரிகை பேட்டிகளிலெல்லாம் சல்மா பின்னும், என் பின்னும் ஏன் ஒளியனும். நாங்கள் தான் அறிவற்றவர்கள் ஆச்சே?

நான் நடித்த செல்லம்மா பார்த்துவிட்டு, ”நீ தான் இனி தமிழகத்தின் ஸ்மிதா பட்டீல்” என்று என் வீட்டுக்கு வந்து கையைப்பிடித்துக்கொண்டு பேசியதை ஜெரால்டு நினைவு கூர்ந்தார். பாவம், காலச்சுவடு விரட்டி விட்டபின், அநாதரவாக நின்ற உங்களை உயிர்மை என்று பெயர் வைத்ததலிருந்து முதலிரண்டு புத்தக கண்காட்சியிலும், முதல் வெளியீட்டு விழாக்களிலும் உங்களுக்கு ஆதரவாக நின்றுவிடவேண்டுமென வாகன ஓட்டியாகக்கூட அலைந்து திரிந்த அப்பாவியாகவே ஜெரால்டு இன்னும் இருக்கிறார்.

”நீங்களும் அழகு, உங்கள் கவிதைகளும் அழகு”, ”என்னை எப்படியாவது வணக்கம் தமிழகத்தில் விருந்தினராக அழைத்து விடுங்கள், ஏதாவது திரைப்படத்தில் பாடல் எழுத வைத்துவிடுங்கள்” என்றெல்லாம் பேசிய மனுஷ்யபுத்திரனாக இருந்து தான் இன்று வளர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் கை நீட்டிப் பேசும் இடத்திலேயே நான் இருந்திருக்கிறேன்.

எழுத்தாளர்களைச்சுரண்டி ஓசியில் வாழும் வாழ்க்கையை வாழும் உங்களுக்கு அடக்கம் வேணுங்க! இல்லை மரியாதை கெட்டுத்தான் போகும். கடந்த காலத்தை மறந்து விட்டால் அது மிக மோசமான கத்தியாக மாறி கழுத்தை நெறித்துவிடும். மேலும் நீங்கள் பேசினால், மேலும் நானும் பேசுவேன். நிறைய இருக்கே, பத்து வருஷமாச்சே!




மனுஷ்யபுத்திரனிடம் எந்த கேள்விக்கும் பதிலில்லை. சும்மா பதினாறு வயதினிலே, கஜினி என்று உளறிக்கொண்டிருக்கிறார். உயிர்மை என்ற பதிப்பகம் வருவதற்கு முன்னரே, கனவுப்பட்டறை மூன்று புத்தகங்களை கொண்டு வந்துவிட்டது. அதில் என் முதல் தொகுப்பும் பதிப்பிக்கப்பட்டது. சந்தில உயிர்மையிடம் கேட்டதாக சிந்து பாடுகிறார். கனவுப்பட்டறை தொடர முடியாத நிலையில் இருப்பதையறிந்து, பரத்தையருள் ராணியைக்கொண்டு வர மனுஷ்யபுத்திரன் வி
ட்ட தூதெல்லாம் இங்கே எழுதினேன் என்றால் எவ்வளவு மானங்கெட்ட பொழப்பு பிழைக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகும். இவனுங்களும் இவனுங்க கோதாவும்! ஓசியில் எழுத்தாளர் எல்லாம் மானங்கெட்டு எழுதற வரைக்கும் இவர் ஜம்முன்னு முகப்புத்தகத்தில் எழுத்தாளர்களையெல்லாம் கிண்டல் பண்ணி எழுதிட்டுத்தான் இருப்பார். அதுக்கு ஒரு கூட்டம் பஜனை பாடிட்டுத்தான் இருக்கும்.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா