Showing posts with label தொலைக்காட்சி. Show all posts
Showing posts with label தொலைக்காட்சி. Show all posts

Sunday, November 11, 2018

சூப்பர் ஸ்டாரை பேட்டி கண்ட சூப்பர் ஸ்டார்- ரஜினி அசத்தல்


 அந்த காலத்தில் அரசு தொலைக்காட்சிகளும் , அரசு வானொலிகளும்தான் கோலோச்சி வந்தன...

   அவர்கள் சிறப்பான சேவை செய்து வந்தாலும் , அவர்கள் வரம்புக்குட்பட்ட முறையிதான் பேச முடியும் என்பதால் இயல்புத்தன்மை குறைவாக இருப்பதாக சிலர் கருதினர்

அந்த சூழலில்தான் தனியார் தொலைக்காட்சிகள் பிரபலமாகின.. வாய்ப்புகள் தேடிக்கொண்டிந்த பல திறமைசாலிகள் வெளிச்சத்துக்கு வந்தனர், அவர்களுள் முக்கியமானவர் அர்ச்சனா.. சன் டிவியில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தன..

அதன்  பின்வணிகமயமாகி விட்ட ஊடக சூழலில் தனித்துவம் மிக்கவர்கள் அரிதாகிப்போனார்கள்.. ஆங்கிலம் கலந்து பேசுவது , மேக் அப் , ஈர்ப்பான ஆடைகள் போன்றவற்றையே பலர் நம்ப ஆரம்பித்தனர்

இந்த சூழலில் ரஜினியை அர்ச்சனா பேட்டி காண்கிறார் என்பது மிகுந்த ஆர்வம் ஏற்படுத்தியது,, சினிமாவில் ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால் தொகாவில் அர்ச்சனா சூப்பர் ஸ்டார்தான்.. சூப்பர்ஸ்டாரை , சூப்பர் ஸ்டார் பேட்டி எடுப்பது அரிதான் ஒரு நிகழ்வு என்பதால் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியாக இது இருந்தது

 நிகழ்ச்சி , எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்றே சொல்ல வேண்டும்.. பேட்டி எடுப்பவர் , கொடுப்பவர் என இருவருமே இயல்பாகவும் மனதில் இருந்தும் பேசினர்

   மாறுவேடத்தில் சென்று கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் தலைவா என அழைத்ததை கேட்டு பதறி விட்டேன்... எப்படி கண்டு பிடித்தார் என குழப்பமாக இருந்தது.. கடைசியில் பார்த்தால் அவர் என்னை அழைக்கவில்லை ..யாரோ ஒருவரை தலைவா என அழைத்திருக்கார்.. ஹாஹா.. என வெகு இயல்பாக பேசியது ரஜினிக்கே உரித்தான எளிமை


எம் ஜி ஆர் சிவாஜி காலத்தில் நடிக்க வந்திருந்தால் நான் முன்னுக்கு வந்திருக்க முடியாது,,, கமலுடன் முதன் முறை காரில் பயணித்தபோது அதை நம்ப முடியாமல் கைகளை கிள்ளிப்பார்த்துக் கொண்டேன் என்றெல்லாம் வெகு தன்னடக்கமாக பேசினார்

கனவில் இருக்கும் சந்தோஷம்  நிஜத்தில் இருக்காது.. கல்யாணம் உட்பட.. ஹாஹா ஹா.. என ஒரு சராசரி மனிதர்களில் ஒருவராக தன்னைக்காட்டிக்கொண்டார்
ஆனால் என்னதான் அவர் சராசரி மனிதனாக தன்னைக்காட்டிக்கொண்டாலும் அறிவார்ந்த நூல்களைப் படிக்கும் உணர்வே பேட்டியில் வெளிப்பட்டது

அவுட்லையர்ஸ் என்றொரு புத்தகம்... மனிதனின் வெற்றிக்கு அவன் பிறந்த சூழல் , பிறந்த கால கட்டம் என பல விஷ்யங்கள் காரணிகளாக இருக்கின்றன என்பது புத்தகத்தின் செய்தி

அதை ரஜினி சுட்டிக்காட்டினார்.. வெற்றி பெற ஆரம்பித்த ஆரம்ப கால கட்டத்தில் தான் ஒரு தனி பிறவியோ என்றெல்லாம் நினைத்ததாகவும் , பிறகுதான் எல்லாம் ஒரு காலம் என்ற தெளிவு ஏற்பட்டதாகவும் கூறியது வேறு லெவல்

அதே போல எளிமை குறித்த பார்வையும் அபாரம்...  எளிமை என்பது மனம் சார்ந்தது...  சில நேரங்களில் சில சூழலில் ஏஸி என்பது இன்றியமையாத தேவையாக இருக்கும்.. ஏஸி என்பது ஆடம்பரமாக இருப்பதும் உண்டு.. எனவே ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை மட்டும் வைத்து எளிமையை வரையறுத்து விட முடியாது என்ற பார்வை ஜே கிருஷ்ணமூர்த்தியை ஒத்திருந்தது


ஃபடாபட் ஜெயலட்சுமியை ராதிகாவை குறிப்பிட்டு கூறியது சிறப்பாக இருந்தது

 அர்ச்சனாவின் துணைக்கேள்விகளும் எதிர் வினைகளும் அழகு... 

மொத்தத்தில் வெகு சிறப்பான நிகழ்ச்சி




Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா