Showing posts with label நகுலன். Show all posts
Showing posts with label நகுலன். Show all posts

Monday, July 6, 2020

நகுலனின் இவர்கள் - சொல்லமுடியாமையை சொல்லுதல்


நல்ல எழுத்து அல்லது  நல்ல ஓவியம் அல்லது நல்ல இசை போன்றவை நம்மிடம் ஒன்றை சொல்லி சொல்ல முடியாமைக்கு எடுத்துச் செல்லும் தன்மை கொண்டவை

   முதலில் அவை நம் வெளி மனதுடன் தர்க்கப்பூர்வமாக உரையாடி சற்று நேரத்தில் ஆழ் மனதுடன் பேசத்தொடங்கும்.. சொல்லில் விளங்காதவதற்றை சொலவ்தற்கு நாவல் , சிறுகதை போன்றவற்றை பயன்படுத்திக் கொண்ட மேதைகள்

இப்படிப்பட்ட பாவனைகள் இன்றி நேரடியாக ஆழ் மனதுடன் உரையாட முயல்பவை நகுலனின் எழுத்துகள்

நாவல் என்றால் அதில் ஒரு கதை இருக்க வேண்டும் , சம்பவங்கள் இருக்க வேண்டும் என்பவை எல்லாம் இல்லாமல் கதை மூலம் சம்பவங்கள் மூலம் கிடைக்கக்கூடிய உச்சட்ட அபோத நிலையை நேரடியாக தரக்கூடிய ஒரு  நாவல்தான் நகுலனின் “ இவர்கள் “ என்ற நாவல்

மனித்ன் என ஒருவன் தான் உண்டு. துரைசாமி , ராம்சாமி , கிருஷ்ணசாமி என்பவை எல்லாம் வெறும் லேபிள்கள் மட்டுமே. எல்லோரும் எல்லோரிடமும் இருக்கிறார்கள் என்  நாவலில் ஒரு இடம் இருக்கிறது


ஒரு கதையை கதாசிரியன் உருவாக்கி அதை வாசிப்பவனாக வாசகனை மாற்றாமல் வாசகனையும் பிரதியில் பங்கேற்கச்செய்கிறார் நகுலன்


எஸ் ராமகிருஷ்ணனின் நாவல் நெடுங்குருதி நாவலில் , வேம்பலை என்ற கிராமத்தின் நிழலாக ஒரு கிராமம் வரும் . வேம்பலையில் அழிந்தவையும் இற்ந்தவையும் அந்த நிழல் கிராமத்தில்  வாழும்

அதுபோல , ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நிழல் உண்டா , இன்றைய நிழல் கடந்த காலத்தில் வீசுகிறதா என் மிஸ்டிக் ஆன கேள்வியுடன் நாவல் ஆரம்பிக்கிறது

நனவோடை யுக்தியில் , தானாக தன்னைத் தானே எழுதிக்கொள்ளும் எழுத்தாக இந்த நாவல் அமைந்திருப்பது ஒரு வகை திடுக்கிடலை உருவாக்குகிறது

மனதின் ஆழத்தை அறிவின் குறுக்கீடுகள் இன்றி தரிசிப்பது அரிதான ஓர் அனுபவம்

உண்மையில் இப்படி திட்டமிட்டு எழுதமுடியாது.. ஓர் அரிய கணத்தில் இப்படி எழுத்து பீறிட்டு வந்தால்தான் உண்டு

அந்த வகையில் நகுலனின் இவர்கள் நாவல் முக்கியத்துவமானது.

அவரது நினைவுப்பாதை மற்றும் நாய்கள் நாவலை விட இவர்கள் நாவல் ஒரு தன்னிகற்ற நாவலாக அமைந்துள்ளது

நாவலில் வரும், நவீனன் தான் ந்குலன் என யாரும் நினைத்து விடக்கூடாது என கவனம் செலுத்தி இருந்தாலும் , நவீனன் நகுலன் அல்லன் என்றாலும் நகுலனின் நிழலாக அவன் இருக்கக்கூடும் என கூர்ந்து வாசிக்கையில் புலப்படுகிறது


உலக உலக்கியமும் இந்திய வேதாந்தமும் கைகுலுக்குவதும் ,  தமிழ் காதலும் சமஸ்கிருத ஞானமும் பரஸ்பரம் புன்னகைத்துக்கொள்வதும் ஒரு வித்தியாசமான ஃபிளாவரை தருகிறது


ராம நாதன்  , நல்ல சிவம் பிள்ளை ,  , தனது அப்பா , அம்மா , ஆகியோர் நவீனனின் மனவோட்டத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள்


ராம நாதன் தான் படித்த நூல்களைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்/

மௌனி கதைகள்  ஜேகே , காசியபன் கவிதைகள் என்றெல்லாம் நல்ல சிவம் பிள்ளை பேசுகிறார்

நான் என்ற குறுகிய பார்வைதான் , விசாலமான பார்வையை மறைக்கிறது. நான் என்பது மறையும்போதுதான் உண்மையாக வாழத்தொடங்குகிற்றோம். என்பார் ஜே கிருஷ்ணமூர்த்தி

இந்த நானற்ற நிலையை வாழ்ந்து காட்டுபவர் அவரது அம்மா.. 

  நானற்ற நிலை வேறு.. நான் என்பதை மதிக்காத கண்மூடித்தனம் வேறு.. இதற்கு உதாரணமாக இருப்பவர் அப்பா

இந்த நால்வர் குணாதிசயங்களையும் இப்படி சுருக்கமாக அனாயசமாக காட்டி இருப்பார் நகுலன


நல்ல சிவன் பிள்ளை சின்ன வயதில் எப்படி இருந்திருப்பார்
ஊமையாக இருந்திருப்பார்

ராம நாதன் ?  ஒரு நாளைக்கு ஒன்பது நூல்கள் வாசித்து இருப்பார்


அப்பா ? பள்ளிக்கூடம் போகிறேன் என்று சொல்லி விட்டு கள்ளுக்கடைக்குப் போய் இருப்பார்

அம்மா ? அனைத்தையும் அதிசயம் போல பார்த்துக் கொண்டு இருந்திருப்பாள்


கலை என்பது என்ன ,, அதன் நோக்கம் ,,  என பல இடங்களில் விவாதிக்கிறார்


உடலின் பிரதிபலிப்பு நிழல்..   மனதின் பிரதிபலிப்பு எழுத்து..


அம்மாவின் சென்ஸ் ஆஹ் ஹ்யூமரை அவள் சொன்ன விதம் என் பார்வையில் படவில்லை ,, ராம நாதன் பார்வையில் பட்டது

எனக்கு நிழல்கள் இருப்பதால்தான் நான் எழுத்தாளனோ


நமக்கு நம் நிழல்களே பேய் ஆகி விடுகின்றன

என பல  விதங்களில் சொல்பவர் , ஒருகட்டத்தில் சொல்ல முடியாமையின் திகைப்பையும் சொல்லின் மூலம் காட்டுகிறார்


தனிமை கண்டதுண்டு அதில் சாரம் இருக்கிறதம்மா என தான் கண்ட கனவை சொல்ல முடியாமல் தவிக்கும் ஊமையின் தவிப்பை சொல்வதன்மூலம் , அவன் கண்டது என்ன என்பதன் நிழலை நம்மை தரிசிக்க செய்து விடுகிறது  நிழல்கள்


முதலில் பரிசுத்த ஆவியாக இருந்து பிறகு நிழல் ஆகி அதன் பின் பேய் ஆக மாறும் நவீனனனும் , முழுக்க முழுக்க அறிவால் கலையை வசப்படுத்த முயனறு தோற்பவனும் கலைக்கு களப்பலி ஆகின்றவனும் எழுத்தின் வசீகரத்துக்கு சான்றாக நிற்கின்றனர்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா