Showing posts with label புத்தக பார்வை. Show all posts
Showing posts with label புத்தக பார்வை. Show all posts

Wednesday, January 23, 2019

சென்சிப்லிட்டியுடன் பொண்டாட்டி


புத்தக கண்காட்சியில் ஒரு அரசியல் பிரமுகரின் ஸ்டால் இருந்தது,,  ஆரம்ப காலத்தில் எழுதிய சில கவிதைகள் காரணமாக இன்னும் அவர் தன்னை இலக்கியவாதி என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்,, புத்தக கண்காட்சியின் போது அவ்வப்போது தன் கட்சி மற்றும் தோழமை கட்சி பிரமுகர்களை தன் ஸ்டாலுக்கு அழைப்பார்... அந்த பிரமுகர்களுடன் கட்சியினரும் வருவதால் அந்த இடமே கும்பலால் சூழப்பட்டு விடும்... அருகில் இருக்கும் ஸ்டால்காரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பபாசியிடம் புகார் அளித்தனர்... அந்த புகாரை ஒரு எள்ளலுடன் கடந்து சென்றார் அந்த உரிமையாளர்

சென்சிப்லிட்டி  , பிறர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் இனமைதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகும்

அராத்து எழுதியுள்ள பொண்டாட்டி நாவல் இந்த சென்சிப்லிட்டி  குறித்து ( அது இனமை குறித்து )பேசுகிறது

ஜெயமோகன் என்று ஒரு கேரக்டர்.... காக்டெய்ல் கலக்குவதில் அவன் காட்டும் அக்கறை ஒரு கவிதை....அவன் நல்லவனா இல்லையா என்பது வேறு,,, ஆனால் ஒவ்வொரு விஷ்யத்திலும் அவன் காட்டும் அக்கறை , விருந்தோம்பல் , பிறர் மீதான அக்கறை போன்றவை நாம் நல்லவன் என கருதும் என பலருக்கு இருப்பதில்லை.... நல்லவன் என்பதையே ஒரு தகுதியாக நினைக்கிறோம்,.,, அதில்தான் பல பிரச்சனகள் எழுகின்றன


சென்சிப்லிட்டி குறித்து பேசும் இந்த நாவல் அதே சென்சிப்ல்டியுடன் உருவாக்கப்பட்டுள்ளது ...    எழுத்துப்பிழைகள்  , வாக்கியப்பிழைகள் , ஒற்றுப்பிழைகள் இல்லாமல் இப்படி இரு புத்தகம் படித்து பல யுகங்கள் ஆகின்றன.... நாளிதழ்கள் , வார இதழ்கள் என யாருமே இதில் அக்கறை காட்டாத நிலையில் , பிழைகளே இருக்கலாகாது என்ற கவனத்துடன் செதுக்கப்ப்பட்டுள்ளதற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம்

சில இடங்களில் வேண்டுமென்றே சில பிழைகள் , சில வெற்றிடங்கள் , சில தட்டையான சித்தரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது அழகு... அதற்கான காரணங்கள் கதையின் போக்கிலேயே தெரிந்து விடுகின்றன


பேட்ட பட விமர்சனத்தில் , சிம்ரன்  கேரக்டர் என பாதியிலேயே காணாமல் போகிறது என கேட்டிருந்தார் ....  சின்னி ஜெயந்த்  உட்பட ஒவ்வொரு கேரக்டர் குறித்தும் விளக்கமாக படம் எடுக்கவா முடியும் என எண்ணிக்கொண்டேன்

ஆனால் இந்த கதையில் , அனாவசியமாக எந்த கேரக்டரும் இல்லை என்பதைக் காணும்போது  , ஒரு படைப்பாளியாக அந்த விமர்சனத்தை வைக்கும் உரிமை அராத்துவுக்கு உண்டு என நினைத்துக்கொண்டேன்

உதாரணமாக கதையின் நாயகி ஒரு ரயிலில் பயணிக்கிறார்... அந்த ரயிலின் இயக்குனர் பெயர் கேஷுவலாக சொல்லப்படுகிறது...  ஆனால் அது அனாவசிய அறிமுகம் இல்லை என பிறகு தெரிகிறது


தேவையற்ற ஒரு வார்த்தை , ஒரு கேரக்டர்கூட இல்லாத நாவல் ..



அராத்து கோஷ்டியினரின் இமயமலைப்பய்ணம் வெகு இயல்பாக கதையுடன் கலப்பது வெகு அழகு.,,,

 நதி உறைந்து விட்டால் மீன் என்னாகும் , மரணம் என்பது என்ன ,... மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்றால் அந்த இடைப்பட்ட காலம் என்ன என்பது போன்ற வரிகள்


தனிமை என்றால் என்ன..,,   தனிமை நம்மை எப்படி மாற்றும் என்பது போன்ற வரிகளில் ஆழமான பார்வை தெரிந்தாலும் அடுத்த நொடியே அதை எழுத்தாளரே பகடி செய்து காலியாக்குவதேல்லாம் வேறு லெவல்

ஃபேக் நாவல்கள் பல படித்திருக்கிறோம்... ஜேஜே சில குறிப்புகள் , நாளை மற்றுமொரு நாளே போன்ற சிலவற்றை ஃபேக் எழுத்துக்கு உதாரணமாக சொல்லலாம்..,,

ஃபேக் என சொன்னாலும் அவை கண்டிப்பாக படிக்க வேண்டியவை,,,, படிக்கவேகூடாத குப்பைகளும் ஏராளம் உண்டு

ஆனால் தன்னைத்தானே ஃபேக் நாவல் என அதிரடியாக அறிவிக்கும் முதல் நாவல் என்ற பெருமை இந்த நாவலுக்கு உண்டு

பகல் கனவுகள் , எழுத்துப்பிழைகள்  , வாக்கியப் பிழைகள் , அமெச்சூர்த்தனமான சிந்தனைகள் , பெண்களை இழிவு செய்யும் கருத்துகள் நிரம்பிய எழுத்துகள் பல இன்றைய சூழலில் நாவல் என்ற பெயரில் வருகின்றன


அவைகளை நாவல் என அழைத்தால் கண்டிப்பாக பொண்டாட்டி நாவலை ஃபேக் நாவல் என்றுதான் சொல்ல வேண்டும்


57 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு  , நம் ஆட்கள் 2000 ரூபாயை கொடுப்பார்கள்... சில்லறை எண்ணி கொடுக்கும் வரை பின்னால் நிற்பவர்கள் காத்திருக்க வேண்டும்... - சுரணையின்மை


நிகழ்ச்சிக்கு வருவதாக சொல்லிவிட்டு , வர தவறுவது சுரணையின்மை


நாம் செய்வது பிறருக்கு பிடிக்கவில்லை என அவர் முகபாவத்தின் மூலம் அறிந்து கொள்ள தவறுவது சுரணையின்மை



காதல் என்பது மதித்தல் என்று ஜே கிருஷ்ணமூர்த்தி சொன்னதை சற்று வேறு விதத்தில் சொல்கிறது நாவல்

   மொத்தமாக இல்லாமல் தனி தனி சிறுகதையாக படித்தாலும் நன்றாக இருக்கிறது.. தனி தனி வரிகளுமே கூட அவ்வளவு அழகு

இது எல்லோருக்குமான நாவல் என சொல்ல மாட்டேன்... ஓரளவு பக்குவம் தேவை...சிறுவர்களுக்கு ஏற்றதல்ல....

உள்ளடக்கம் , உருவாக்கம் , சந்தைப்படுத்தும் விதம் , சிரத்தை என அனைத்திலும் சென்சிபிலிட்டியை காட்டும் நாவலைப்படிதத்தில் மகிழ்கிறேன்




Tuesday, December 29, 2015

பொறுப்பற்ற ஜர்னலிசம்- ஜெயகாந்தனின் சிறு நூல்- ஒரு பார்வை

ஜெயகாந்தனின் சற்று பெரிய சிறுகதையான கரிக்கோடுகள் தனி நூலாக வந்துள்ளது..இபப்டி சிறு நூல்கள் வருவது ஆரோக்கியமானது...

மூன்று பிரதான பாத்திரங்கள்.. இரு வேலைக்காரர்கள்.. இவர்களை வைத்து பின்னப்பட்ட ஒரு ஃபீல் குட் சிறுகதை இது. படித்து முடித்ததும் மனதில் ஒரு நிறைவு ஏற்படும்.

இந்த கதையில் ஒரு காட்சி... இலக்கியவாதியின் கணவனுக்கு , குடும்ப நண்பர் ஒரு கடிதம் எழுதுகிறார்.. ”அவள் எழுத்து தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்துகிறது..அவளை நிறுத்தினால் நல்லது என்பது என் கருத்து... என் கருத்தையும் நீங்களும் அறியும்பொருட்டு உங்களுக்கு எழுதுகிறேன் ”
இதை படித்த கணவன் , அவள் எழுதவேண்டாம் என தான் நினைப்பதாக சொல்கிறார்.. அவள் கோபித்துக்கொண்டு கடிதம் எழுதி வைத்து விட்டு போய் விடுகிறாள்
அவள் தன்னை தப்பாக நினைத்தாலும் பரவாயில்லை.. நண்பன் சொன்னதாக சொல்லி அவன் பெயரை கெடுக்க கூடாது என நினைக்கிறான் கணவன்.. தான் சொன்னதாகவே சொல்லி இருக்கலாமே என நினைக்கிறார் நண்பர்...
நல்லவருக்கும் கெட்டவருக்கும் இடையேயான பிரச்சனை ஒரு சுவை என்றால் , நல்லவர்களுக்கு இடையேயான பிரச்சனை இன்னும் சிக்கலானது..
இதை கையாள்வதில் வல்லுனர் ஜெயகாந்தன்

இதில் வரும் பாத்திரங்கள் அனைத்துக்கும் வயது ஐம்பது பிளஸ்.. ஆனாலும் கதை முழுதும் இளமை கொண்ட்டாட்டம்...

ஓய் மாதவராவ்.. நீர் காதலித்திருக்கிறீரா என கேட்டேன்
இல்லை .. நீங்கள் கேட்கிற அர்த்த்ததில் காதலித்தது இல்லை என்றான்
அவன் சொன்ன தோரணை நான் என்ன பொருளில் கேட்கிறேன் என்பதை பிசிறில்லாமல் புரிந்து கொண்ட தெளிவுடன் ஒலித்தது

சில வெள்ளைக்கோடுகளும் கறுப்புக்கோடுகளும் மனிதனை இளமையாகவும் காட்டும் , முதுமையாகவும் காட்டும். கோடுகளை எங்கே வரைகிறோம் என்பதை பொருத்தது அது

காலம் வரைகிற கரிக்கோடுகளை மாற்ற முடியாது. மனிதன் வரைகிற கோடுகளை மாற்றலாம்

ஓர் போட்டோகிராஃபர். அவரது மனைவி இலக்கியவாதி. அவளது இலக்கிய தீவிரத்தை ஏற்கும் அளவுக்கு ஆரோக்கியமான சூழல் இல்லை என்பதால் அவள் எழுதுவதை சற்று நிறுத்த வேண்டும் என அவரது நண்பர் ஆலோசனை சொல்கிறார்..இதன் விளைவாக மனைவி பிரிந்து போய் விடுகிறாள்.. கடைசியில் மனம் மாறி தான் கோபமாக எழுதிய கடிதத்தின் கோபமான வரிகளை கரிக்கோடுகளால் அழித்து விடுகிறாள்..

கரிக்கோடு கதையின் ஒவ்வொருஇடத்திலும் ஒவ்வொரு பாத்திரம் எடுப்பது இந்த கதையின் சிறப்பம்சம்,

ஆழமான கரு , அதிர்ச்சியூட்டும் கிளைமேக்ஸ் என்றில்லாமல் ஒருவர் கோணத்தில் எழுதப்பட்ட சுகமான நடையில் எளிமையான கதை.

ஆரம்பத்தில் நல்ல நோக்கத்துடன் எழுத வந்தவர்கள் , ஜர்னலிசம் எனும் கிருமியால் அழிந்து விடுகின்றனர் என முன்னுரையில் சொல்லும் ஜெகே , அந்த கோபத்தை கதை முழுதும் பரவ விட்டுள்ளார்.. நிருபர்கள் அடிக்கடி வாங்கி கட்டிக்கொள்ளும் சம கால சூழலில் இந்த கதை பொருத்தமாக இருக்கிறது..

கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்..

வெளியீடு - மீனாட்சி புத்தக நிலையம்

விலை  ரூ 30

Wednesday, November 23, 2011

காமம் காதல் கபடி ஆட்டம் : அனல்காற்று - ஜெயமோகன்


ப்ரியா மணி அல்லது மாளவிகா  ஆகியவர்களில் ஒருவர் நடிக்க  , பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்க வேண்டிய திரைப்படம் அனல் காற்று. அதற்காக ஜெயமோகன் கதை எழுதினார். சில காரணங்களால் படம் எடுக்க முடியவில்லை.
படமாக வந்து இருந்தால் ஓடி இருக்குமா? ஜெயமோகன் சிறந்த நாவல்களில் இது ஒன்றா? படித்தே தீர வேண்டிய நாவலா?
பார்க்கலாம்.ப்ரியா மணி , மாளவிகா அல்லது நக்மா ஆகியவர்களில் ஒருவர் நடிக்க  , பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்க வேண்டிய திரைப்படம் அனல் காற்று. அதற்காக ஜெயமோகன் கதை எழுதினார். சில காரணங்களால் படம் எடுக்க முடியவில்லை.
படமாக வந்து இருந்தால் ஓடி இருக்குமா? ஜெயமோகன் சிறந்த நாவல்களில் இது ஒன்றா? படித்தே தீர வேண்டிய நாவலா?
பார்க்கலாம்.
எல்லோருக்கும் தெரிந்த , தெரிந்து கொள்ள விரும்புகின்ற ஆனால் தெரிந்து கொள்ள முடியாத ஒரு விஷ்யத்தைப் பற்றிதான் நாவல் பேசுகிறது.
காதல். காம்ம் 

காமம் இல்லாத காதல் உண்டா?   காதல் இல்லாத காமத்திற்கு பின் ஏதேனும் மனோதத்துவ பிரச்சினைகள் உள்ளனவா? காமம் , காதல் இரண்டுமே இல்லாமல் வாழ முடியாதா?
பல குற்றங்களுக்கு இவைதானே காரணங்களாக இருக்கின்றன. அல்லது இவை பற்றிய புரிதல் இன்மை காரணமாக உள்ளது.

இந்த பிரச்சினைக்ளை அலசும் நாவல்தான் அனல் காற்று.

வழக்கமான ஜெ மோ நாவல்கள் போலல்லாமல் எளிய கதை போக்கு. நேரடியான கதை.  சீரான கதை ஓட்டம் என்ற பாணியில் கதை செல்கிறது. ஜெ மோ நாவல்தானா என்று கூட அவ்வபோது சந்தேகம் வருகிறது.

அருண், சுசீ, சந்திரா, அருணின் அம்மா ஆகியோரை அடிப்படையாக கொண்ட கதை.

அருணின் அப்பாவுக்கு மற்ற பெண்கள் தொடர்பு இருப்பதால், அவரை விட்டு விலகுகிறாள் அம்மா. அருணை தானே வளர்க்கிறாள். அருணை அவன் அப்பா போலல்லாது “ நல்லவனாக” வளர்க்க முயல்கிறாள். அவனோ தன் தந்தை பாணியில்,  வயதில் மூத்த - கணவனை இழந்த - சந்திராவுடன் காதல்/ காம வயப்படுகிறான். தன் கணவனுக்கு  எந்த தவறான தொடர்புகளும் இருக்க கூடாது என்ற கனவுடன் இந்தியா வரும் அருணின் முறைப்பெண் சுசீலா மீதும் இவனுக்கு காதல் ஏற்படுகிறது.
அதே நேரத்தில் சந்திரா மீதான காதலும் போகவில்லை. சுசீலாவோ இவனை காதலிக்கிறாள். சந்திராவும் காதலிக்கிறாள். சந்திராவுக்கு வளர்ந்த வயதில் ஒரு பையன் இருக்கிறான். 

காதல் என்றால் என்ன? எந்த காதல் ஜெயித்தது என்பது கதை.

இந்த நாவலின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் எளிமையான கதையோட்டமும் , மொழி ஆளுமையும்தான். 

காமத்தின் இன்னொரு எல்லை மரணம் என்பதை உணர்ந்து மரணத்தைப்பற்றியும் கூர்மையாக சுட்டிக்காட்டி இருப்பதுதான் , இந்த நாவலை அர்த்தமுள்ள நாவலாக்குகிறது. 

வசதி குறைவான , கீழ்த்தட்டு மக்கள் வீடுகளைப்பற்றிய குறிப்புகள் அபாரம். வீட்டில் நுழைந்தால் பொருட்கள்தான் பெரும்பாலான இடத்தை அடைத்து கொண்டிருக்கும் போன்ற நுட்பமான பார்வைகள் , கதையை நேரடியாக பார்க்க வைக்கிறது.

பெரிய மைனஸ் பாயிண்ட் என்றால் , கதாபாத்திரங்கள் யதார்த்த உலகை விட்டு சற்று விலகி இருக்கிறார்க்ளோ என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றுவதுதான்.

இந்த நாவலின் அனைத்து கதாபாத்திரங்களும் கடைசியில் நல்லவர்கள் ஆகி விடுகிறார்கள். இது சற்றும் நடை முறையில் பார்க்காத ஒன்று.

அதே போல கிளைமேக்ஸ் சினிமாட்டிக்காக இருப்பது போல தோன்றுகிறது. சற்று முன்பே முடிந்து விட்ட  கதை, சுபமான முடிவுக்காக நீட்டப்பட்டு இருப்பது போல தோன்றுகிறது.

சந்திரா , அருணுக்கிடையே இருப்பது காதல் அன்று. வெறும் உடல் இச்சையும் அன்று. அது வேறு என உணர்வதுதான் கதையின் உச்சம். அதற்கு பிறகு பைக் சேசிங் , விமான பயணம் எல்லாம் செய்ற்கையாக உள்ளது.

அனல் காற்று ஓர் உச்சத்துக்கு சென்ற பின் , குளிர்ந்துதான் ஆக வேண்டும் என்பது இயற்கை விதி. அதே போல குளிர்ச்சிக்கு முன்பு, அதீத வெப்பத்தை சந்தித்துதான் ஆக வேண்டும் என்பதும் விதி.

ஒருவன் இயல்பான வாழ்க்கை வாழ்ந்தால், - தான் நினைப்பது போல வாழ்ந்தால் - இந்த இயக்கம் சுமூகமாக நடந்து முடிந்து விடும். ஆனால் அப்படி நடக்க முடியாமல் , சமூக குடும்ப அழுத்தங்கள் செய்து விடுவதால்தான் பல பிரச்சினைகள்.

இங்கே காதல் என்று வேறு ஏதோ ஒன்றைத்தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். பல காதல்களுக்கு எதிர்ப்பே தேவையில்லை. அதை அப்படியே அனுமதித்தால் , தானகவே அது உதிர்ந்து விடும்.

சில தவ்றான காதல்கள் , திருமணத்தில் முடிந்து பிரச்சினையில் முடிவதும் உண்டு. 

அருணை பொறுத்த வரை எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்து விட்டது. சந்திராவுடனான அவன் உறவு , அது கிளைமேக்சை அடைவதற்கு முன்பே சிதைந்து இருந்தால், வாழ் நாள் முழுக்க அவன் அதை ஓர் இழப்பாகவே நினைத்து கொண்டு இருப்பான். அதே போல , அந்த உறவு திருமணத்தில் ( ? ! ) முடிந்திருந்தாலும், வாழ் நாள் முழுக்க வருத்தம்தான்.

அனல் காற்று- மழை என்ற இயல்பான நிகழ்ச்சி அவனுக்கு வாய்த்து விட்டது . 

தனக்கு துரோகம் செய்த கணவன் , அனாதையாக சாக வேண்டும் என்ற மனைவியின் எதிர்பார்ப்பு இயல்பு. அந்த எதிர்பார்ப்பு பொய்யாகும்வண்ணம் , தந்தை குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கும் அருணின் கேரகடரும் இயல்பு. ஆனால் அந்த குடும்பத்துக்கு தானும் ஆதரவாக நின்று , ஆயிரம் அன்னைகளுக்கு சமமாக தோன்றும் சுசீ இயல்பாக சித்திரிக்கப்படவில்லை. சினிமாவை மனதில் வைத்து எழுதி இருப்பார் போல. 

அந்த கேரகடர் உள்ள ஒரு பெண், தன் வருங்கால மாமியாரைத்தான் ஆதரித்து இருப்பாள்.

அதே போல, சந்திரா மனம் மாறுவது இயல்பு. ஆனால் தன் மகனுடன் பைக் சேஸ் செய்வது சினிமாவின் விறுவிறுப்பான கிளைமேக்சுக்காக என்பது தெளிவு. அவள் மகன் மட்டும் போய் இருந்தால் போதுமே.

இவை எல்லாம் நாவலில் முழுமையாக ஒன்றுவதை தடை செய்தாலும், உரையாடல்கள், மன ரீதியான அலசல்கள்,  நுட்பமான காட்சி அமைப்புகள் போன்றவை நாவலை தூக்கி நிறுத்துகின்றன. அப்பா, அவர் இரண்டாவது குடும்பம், நண்பன் ஜோ கேரகடர் போன்றவையும் வலு சேர்க்கின்றன 

********************************************************************

எனக்கு பிடித்த சொல்லாட்சிகள்

1 வெள்ளை உடை அணிந்த பெண் கூட்ட ஆரம்பித்தாள். என்னை அவள் நெருங்கினால், கூட்டி தள்ளி விடுவாள் என அஞ்சினேன்

2 உனக்கு பிடிக்காத எதுவுமே உலகில் இல்லை என அறிந்தேன். ஏனெனில் உனக்கு உன்னைப் பிடித்து இருக்கிறது

3 “ லவர்ஸ்தான் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க”  “ கல்யாண வாழ்க்கைக்கு ரிகர்சலோ ?”

4 பெண்ணின் அழகு என்பது ஆணின் கண்ணால் உருவாக்கப்படுவது. பார்த்ததும் நம்மை கவரும் பெண்ணின் அழகு மெல்ல மெல்ல நம் கண்ணில் குறைய ஆரம்பிக்கும். நாம் விரும்பி, அவ்விருப்பத்தால் ஒரு பெண்ணில் கண்டடையும் அழகு அப்பிரியத்துடன் சேர்ந்து வளரும்.

5 வில்லில் இருந்து அம்பு பாய்றப்ப, அம்பின் நிழலும் சேர்ந்து போகும். அம்பு நேரா போகும், நிழல் குப்ப, கூளம் ,மேடு பள்ளம் புரண்டு போகும் ,ஆனால் இரண்டும் போய் சேரும் இடம் ஒன்றுதான்

6 மரணத்தின் போது , ஒரு மனிதர் தன் முழுமையுடன் தெரிய வருகிறார்

7 அப்பாவின் படத்தை பார்த்தேன். அவர் இருந்த போது அந்த படம் அவர் போல இல்லை என தோன்றியது. இப்போது அது அவராகவே இருந்தது.

8ஸ்ட்ரா போட்டு இளனீரை உறிஞ்சறப்போ , ஒரு புள்ளில இளனீர் தீர்ந்து போச்சுனு தெரியற மாதிரி, உறவு முறிவது சட் என தெரிந்து விடும்
9 உண்மையான காதல்னா , காதலை கொடுப்பது மட்டும்தான்

**********************************************************************************

சிறந்த கேரக்டரைசேஷன்

சந்திராவின் பையன் நவீன்.. விளையாட்டு பையனாக, சாப்பாட்டு பிரியனாக சித்திரிக்கப்படும் அவனுக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது, தெரியாத மாதிரி இருந்திருக்கிறான் என்பது செம ட்விஸ்ட். அவன் அம்மாவின் தவறான உறவை சிலர் சுட்டிக்காட்டும்போது, இதை பற்றி கவலைப்பட வேண்டியது என் அப்பா, அவருக்கு பின் நான் ..உங்களுக்கு என்ன என கேட்பதில் கம்பீரம், கதையின் கிளைமேக்ஸ் இதுதான். எனவே இந்த் கதையில் மனதில் நிற்பது இந்த கேரக்டர்தான்

**************************************************************************

வெர்டிக்ட் 

1 படிக்க வேண்டிய நாவல். படித்தே தீர வேண்டிய நாவல் அன்று 


2 ஜெயமோகனின் உன்னத நாவல்களில் ஒன்றல்ல . 

3 சினிமாவாக எடுத்து இருந்தால், சூப்பர் ஹிட் ஆகி இருக்கும் 

******************************************
அனல் காற்று 

ஜெயமோகன்

தமிழினி வெளியீடு

விலை ; ரூ 90 

Friday, July 30, 2010

நாமெல்லாம் கிரிமினல்களா ? கன்னியாகுமரி பார்வை


சினிமாவில், எப்போதும் பணக்கார பெண் திமிர் பிடித்தவலாகவும் , அவளை ஏழை கதாநாயகன் அடக்குவதாகவும் காட்டுவது ஏன்?இதை மக்கள் ரசிப்பதன் உளவியல் பார்வை என்ன ?

இரு ஆண்க ளுக்கிடையே சண்டை நடந்தாலும், பெண்களை இழிவு படுத்தும் வசவுகளை பயன்படுத்துவது ஏன் ?

காதலிக்கும்போது இனியவளாக தோன்றும் பெண் , திருமணத்துக்கு பின் சுவை இழந்தவளாக தெரிவது ஏன் ?

காதலித்த பெண்ணையே கொலை செய்தல், போட்டோ எடுத்து மிரட்டுதல் என தினமும் பேப்பரில் படிக்கிறோம்.. காதல் எப்படி கொடுமை செய்ய முடியும் ?

அலெக்சா வெப் சைட்டில் சென்று பார்த்தால் தெரியும்... பாலுணர்வு வெப்சைட்டுகள் உலகத்திலேயே அதிகம் பார்க்கப்படுவது இந்தியாவில்தான்... ஆனால் இதைப்பற்றி இலக்கியவாதிகள் எழுதினால் , இந்தியா புனிதமாக இருப்பது போலவும், அவர்கள் ஆபாச இலக்கியம் படைத்து சமூகத்தை கெடுப்பது போலவும் சிலர் போலியாக விமர்சிப்பது ஏன் ? ( கன்னியாகுமரி நாவலை ஆபாச களஞ்சியம் என ஒருவர் திண்ணையில் எழுதி இருந்தார் )

************************************************************************************************************

ஒழுக்கம் என்பது சமூகத்துடன் ஒத்து போதல் .. பெரும்பாலானோர் என்ன செய்கிறார்களோ அதை செயவதுதான் ஒழுக்கமான வாழ்க்கை...

ஒருவனுக்கு ஒருத்தி என எல்லோரும் இருந்தால் நாமும் அப்படி இருப்பது நல்லது... காலம் மாறும்போது, இது மாறலாம்... துணையை மாற்றுவது என்பது இயல்பாகலாம்... ஆனால் அதில் ஏமாற்றுதல் என்பது ஒழுக்கமின்மை என்றாகி விடும்... நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ..உலகம் இதை நோக்கித்தான் நகர்கிறது...

கற்பு , காதல் என்பதெல்லாம் கூட கர்பிதம்தானோ என தோன்றுகிறது...

ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவல் படிக்கும் வாய்ப்பு அமைந்தது..சிறிய நாவல் எளிதான கதை அமைப்பு என்பதால் படிக்க தூண்டியது.... அவரது மற்ற நாவல்களுடன் ஒப்பிடும் பொது இது மசாலா நாவல் என சொல்லலாம்...

மேலேட்டாமாக வாசிப்பவர்கள், இதில் பாலுணர்வு அதிகம் இருப்பதாக கருதலாம்...

ஒரு காலத்தில் கற்பு என கருதப்பட்ட விஷயத்திருக்கு இன்று அர்த்தம் மாறிவிட்டது..ஒழுக்கம் சார்ந்த மதிப்பிடுகள் மாறிவிட்டன... ஒழுக்கம் என்பது இன்றும் இருக்கிறது அனால், முன்பு நாம் ஒழுக்கம் என்று சொன்னதற்கு இப்போது அர்த்தம் இல்லை..இன்று ஒருவரை துன்புறுத்தாமல், நமக்கு பிடித்தபடி வாழ்வதுதான் ஒழுக்கம் என நாவல் சொல்கிறது என சிலர் நினைக்கலாம்..
அதுவும் சொல்லப்பட்டாலும், அதை தவிர நுணுக்கமாக பிரச்சினையை தொட்டுள்ளது கன்னியாகுமரி..

ஓர் ஆண் பெண்ணை பார்த்து பயப்படுதல், ஒரு வித தாழ்வுணர்ச்சி, அவளை வெல்ல முயலுதல், காமம் குறித்த தவறான புரிதல்கள் - இவைதான் பல பிரச்சினைகளுக்கு காரணம்..பெண்ணின் துன்பங்களுக்கு, வலிகளுக்கு , அவலங்களுக்கு இதுவே காரணம்..

இந்த முக்கியமான விஷயத்தை தொட்டு இருக்கிறார் ஜெயமோகன்..

ஓர் ஆணின் பார்வையில் பெண் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறாள்.. ஆனால் அது எவ்வளவு தவறான புரிதல்... என்பதை கேஸ் ஸ்டடி போல , ஒரு கதபாத்திரத்த்கை வைத்து அருமையாக அலசி இருக்கிறார்...

" உங்களுக்கும் அந்த கிரிமினளக்கும் எந்த வித்தியாசமும் இல்லை... குற்றம் செய்ய உங்களுக்கு தைரியம் இல்லை ..அவ்வளவுதான்" என ஒரு பெண் சீறும்போது, ஒட்டு மொத்த சமுதாயத்தை நோக்கியே அவள் சீறுகிறாள் என தோன்றுகிறது..

நாம் யாரையும் வான் பு ணர்ச்சி செய்யாமல் இருக்கலாம்.. அதற்கு காரணம் நாம் நல்லவர்கள் என்பதா..அதற்கான தைரியமோ , வாய்ப்போ இல்லாததாலா... நல்லவர்கள் என்றால், ஏன் கற்பழிப்பு காட்சிகள் விரும்பப்படுகின்றன.. ? பார்வையால், வார்த்தையால் எத்ததனை பேரை வன்புணர்ச்சி செய்து இருப்போம்...

ஒரு திரைப்பட இயக்குநர்தான் கதை நாயகன்... ஒரு பெண்ணை காதலிக்றான்.. கோழைத்தனமாக கைவிடுகிறான்... ( அந்த காதல் என்பதே கூட , பெண்ணை வீழ்த்தும் ஆயுதாமாகத்தன் அவன் நினைத்தான் என தோன்றுகிறது ) ..

பெரிய இயக்குமார் ஆகிறான்.. மாபெரும் வெற்றி படம் எடுக்கிறான்... அதந பின் பல படங்கள் தோல்வி அடைகின்றன.. வெற்றி படம் எடுக்க முயல்கிறான் என்ற பின்னணியில் கதை நகர்கிறது...

வேறு ஒரு நடிகையுடன் சுற்றுகிறான்.. அவளை பார்த்தும் பொறாமை... கொடுரமாக வெளிப்படிதியவாறு இருக்கிறான்.. தாழ்வு மனப்பான்மை தான், பெண்ணை வெல்ல வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்துக்கிறது. , பெண் அறிவாளியாக இருந்தாலும் , அவளை உடல் என்பதற்குள் அடக்கிவிட ஆண் முயல்கிறான் என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார்...

இந்தய நிலையில், முன்னாள் காதலியை எதிர்பாராமல் பார்க்கிறான்...

அவனை பார்த்த்கும் அவள் கதறுவாள்... உருகுவாள்... என்னை ஏன் கை விட்டீர்கள் என இறைஞ்சுவாள்.. திருமணம் ஆகி இருந்தால், கணவனுக்கு தெரியாமல் ரகசிய பார்வை பார்ப்பாள் என்றெல்லாம் நினைக்கும் அவனுக்கு அதிர்ச்சி...

அவள் அவனை விட பெரிய நிலையில் இருக்கிறாள்.. இவன் திரைப்பட இயக்குனர் என்பதெல்லாம் அவளுக்கு பொருட்டே அல்ல.. தன் ஆண் நண்பனை, ஒரு வெளிநாட்டவனை அறிமுகம் செய்து வைத்து, அவனை தொரகடித்தவாறே இருக்கிறாள் ..அவள் இயல்பாக இருந்தாலும் இது எல்லாம் அவனுக்கு தோல்வி என அவனே நினைத்து கொள்கிறான்... பழைய பாணியிலான ஆண் பார்வை இப்போது வேலைக்காகது என்பதை புரிந்து கொள்ளவில்லை..

கடைசி ஆயுயதமாக கீழ்த்தரமான ஓர் ஆயுதத்தை பயன் படுத்தி பார்த்து , அதிலும் தோற்கடிக்கப்படுகிறான்.....

அந்த நடிகையும் அவனை கைவிடுகிறாள்... கலையும் அவனை கைவிடுகிறது...

ஆணாதிக்க பார்வைக்கு எதிரான நல்ல நாவல்.. நமக்குள் இருக்கும் ஆணாதிக்கத்தை அடையாளம் காட்டுகிறது...

இது பலருக்கு பிடிக்காமல் போகலாம்... சங்கடபடுத்தலாம்.. ஆனால் உண்மையை சந்தித்துதான் ஆக வேண்டும்..

மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது... வலிகள் தவிர்க்க முடியாததது..

இதை தவிர ஜெயமோகனின் தத்துவ விளக்க்கங்க்ள, வாழ்வில் அடைய வேண்டிய யுன்னத நிலை பற்றய விளக்கம், கன்னியாகுமரியின் ஐதீகம் சார்ந்த பார்வை, கதைக்குள் வரும் சினிமா கதை, கதாநயகன் பயன்படுத்தும் கீழ்த்தரமான ஆயுதம் என்ன போன்றவைகளை புத்தகம் படித்து தெரிந்து கொள்ளுங்கள...

ஆண்கள் தங்களை சுய பரிசோதனை செய்யவும், பெண்கள் ஆணின் சிந்தனையை அறிந்து கொள்ளவும் படிக்க வேண்டிய புத்தகம் இது... மென் ஆர் பிரம் மார்ஸ் , விமன் பிரம் வீனஸ் போன்ற புத்தகம் இது...

சிறுவர்களுக்கும்.,சிறுவர்களின் மனநிலை கொண்ட பெரியவர்களுக்கும் ஏற்றதில்லை... தவிர்த்து விடுவது நலம்...

குறை என்று சொன்னால், ஜெயமோ கனுக்கு உரிய நகைச்சுவை , இதில் சற்றும் இல்லை..

பல கோணங்களில் கதை சொல்லும் இவர், இந்த நாவல் முழுதும் ஒரே ஆள் பார்வையில் கதையை நகர்த்தி செல்வது வியப்பான ஒன்று...

பெண்களை மிகவும் அறிவாளியாக காட்டி இருப்பது சற்று செயற்கையாக இருக்கிறது...

கன்னியாகுமரி- கருத்தை கவரும் குமரி...

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா