Showing posts with label ருத்ரம். Show all posts
Showing posts with label ருத்ரம். Show all posts

Saturday, April 4, 2020

அழிவும் நீயே அன்பும் நீயே

ஶ்ரீருத்ரம் குறித்து எழுதியிருந்தேன் அல்லவா.

இன்றைய சூழலுக்கு பொருத்தமாக சில மந்திரங்களை படிக்க ஆச்சர்யமாக இருந்தது.

அதன் பொருள் பின்வருமாறு

மக்களும் பசுக்களும் நோய்ப்பட வேண்டாம்

நாங்கள் வாழ்வாங்கு வாழ்வோமாக


எங்கள் ஆயுள் மீது , விலங்குகள் மீது , பணியாட்கள் மீது கோபம் வேண்டாம்

உரிய பூஜைகள் செய்வோம்


ருத்திரரே  எங்கள் பெரியவர்களையும் குழந்தைகளையும் துன்புறுத்தாதீர்கள்

வாலிபர்களை துன்புறுத்த வேண்டாம்

சிசுக்களை துன்புறுத்த வேண்டாம்

தந்தைமார்களை தாய்மார்களை துன்புறுத்த வேண்டாம்

எங்கள் உடல் அவயங்களை துன்புறுத்த வேண்டாம்;

அழிவும் ஆக்கமும் உன்னால் விளைவது

கோப முகம் வேண்டாம். அன்பு முகத்தை எஙகள்பால் காட்ட இறைஞ்சி வேண்டுகிறோம்

கோபத்தால் ஏவப்பட்ட உன் கணைகள் எங்களை விட்டு விலகிச் செல்லட்டும்;

எதிரிகளை அழிக்கவல்ல ஆயுதங்களை வைத்துவிட்டு . அழகுக்காக மட்டும் அதை ஏந்திக் கொள்வீராக


பூமியிலும் பூமிக்கடியிலும் பூமிக்கு மேலும் உலவும் உனது ருத்திர கணங்கள் எங்களை அழிக்கலாகாது என வேண்டுகிறோம்




Monday, March 18, 2019

ருத்ரம் எனும் அரு மருந்து


பொங்கல் முடிந்து விட்டால் , இனி வறட்சியான காலம் , பண்டிகைகள் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து விட்டன என தோன்றும்

ஆனால்  நம் மக்கள் வாழ்க்கையை கொண்டாடுபவர்கள்.. அர்த்தமற்ற கேளிக்கைகள் என இல்லாமல் அனைவருடன் அன்பை பகிர்ந்து கொள்ளும்வண்னம் கொண்ட்டாட்டம் , விழா , பண்டிகை இருக்கும்

சிவராத்திரி அன்று இரவு முழுக்க உணவையும் அறிவையும் ஞானத்தையும் பரிமாறினார்கள்

பிரதோஷம் அன்று ஒவ்வொரு கோயிலும் விழாக்கோலம் பூண்டு இருந்தது

 நான் கூட்டம் குறைவாக இருந்த , ஒரு புராதான ஆலயம் சென்றேன்... அதிர்வு மிக்க ஆலயம்..

ருத்ரம் அந்த அமைதியான சூழலில் அற்புதமாக இருந்தது

வேதங்களின் இதயம் ருத்ரம் என சொல்லப்படுகிறது
வேதம் என்பது இறை சக்தியை ஒலி வடிவாக்கி உணர முயல்தல்...  உச்சரிப்பு முக்கியம் ..   வேதம் இரண்டு காண்டங்களை கொண்டது... கர்ம காண்டம்.. ஞான காண்டம்

உப நிஷத் என்பது ஞான காண்டம்..

வேதத்தில் நான்கு பாகங்கள் இருக்கும்.. சம்ஹிதை , பிரம்மாணம் , ஆரன்யகம் கடைசியாக உபனிஷத்

ருத்ரம் என்பது ஞானத்தை சொல்லும் உப நிஷத்துவில் இல்லை... கர்ம காண்டத்தில் உள்ளது.. ஆனால் ருத்ரோபனிஷத் என அழைக்கப்படுகிறது

அதாவது ஞானத்துக்கும் கர்மத்துக்கும் பாலமாக இருப்பது ருத்ரம் மட்டுமே

பல் வேறு அரிய மந்திரங்களில் தொகுப்புதான் ருத்ரம்.. எதை எதை எப்படி எதற்கு எப்போது எங்கு சொல்ல வேண்டும் என முறை இருக்கிறது.

அதை போக போக பார்ப்போம்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா