Showing posts with label லாசர. Show all posts
Showing posts with label லாசர. Show all posts

Monday, December 9, 2024

எழுத்தாளர்களும் அவர்களது நடையும் - என் ஆர் தாசன்

எழுத்தாளர்களும் அவர்களது நடையும் - என் ஆர் தாசன் 


எல்லா இலக்கிய இனங்களுக்கும் உருவம் முக்கியமானது தான். ஆனால் கவிதைக்கும். உருவத்திற்கும் உள்ள உறவு மிகவும் நெருக்கமானது. ஏனென்றால் கவிதைக்கும் மொழிக்கும் உள்ள பந்தம் ரொம்பவும் இறுக்கமானது ஒருமொழி பெயர்ப்பில் அழிந்து விடுவது எதுவோ அது தான் கவிதை' என்று விமர்சகர்கள் கூறுகிற அளவிற்கு உருவத்தோடு கவிதை உறவு கொண்டிருக்கிறது.

கவிதைகளுக்கு மட்டுமல்ல, எல்லா இலக்கிய வகை களுக்குமே உருவம் முக்கியமானது. '


ஒரு ஊரில் ஒரு   
ராஜா இருந்தாராம்' என்று கதை துவங்கும் போதே அது அனுபவ முதிர்ச்சியற்ற, குழந்தை நிலைக்கான உணர்ச்சி களோடு சம்பந்தப்பட்டது என்பது வெளிப்பட்டுப் போகிறது. "நித்யத்வத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப் பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந் தது அவன் கதை" என்று துவங்கும் 'பிரம்மராக்ஷஸ், கதையில் அனுபவ முதிர்ச்சியின் கம்பீரத்தை நம்மால் கண்டு கொள்ள முடிகிறது.

மொழி எல்லோருக்குமான பொதுச் சொத்தாயினும் மொழியிலிருந்து உருவாக்கப்படும் நடை ஒவ்வொருவருக் கும் வேறுபட்டு தனித்து நிற்க வேண்டும். பல சமயங் களில் எழுத்தாளனின் இலக்கிய ஆளுமைக்கும், படைப் பாற்றலுக்கும் நடையே அடையாளமாக நிற்கிறது. சிறு சிறு வாக்கியங்களும் சமூகப் பிரக்ஞை நிறைந்த கிண்டலும் ஆழ்ந்த தத்துவங்களும் புதுமைப்பித்தனை அடையாளம் காட்டுகின்றன.

"நான் மட்டும் ஏன் பேய் போல் அலைய வேண்டும்? அது தான் விதி என்று சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டுமாம். மனிதன்,விதி, தெய்வம்; தள்ளு வெறும் குப்பை, புழு, கனவுகள்!" என்றும்,

"மனுஷ அளவைகளுக்குள் எல்லாம் அடைபடாத அதீத சக்தி, ஏதோ உன்மத்த வேகத்தில் காயுருட்டிச் சொக்கட் டான் ஆடிறது போல்......" என்றும்,

'அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா? சிருஷ்டித் தொழில் நடக்கிறது'' என்றும் வருகிற வரிகளை வைத்துக் கொண்டே அவை புதுமைப்பித்தன் எழுத்துக் கள் என்று சொல்லி விட முடியும்.

"சப்தங்கள் இல்லாத இடத்தில் சப்தங்கள் கேட்டன. சப்தங்கள் இருக்கும் இடத்தில் காது செவிடாகி விட்டது"


என்று வார்த்தைகளைப் பின்னிப் பிசைந்து அர்த்தங் களைத் திரட்டித் தருவது லா. ச. ராமாமிருதத்தின் நடையாகும். 

.உயிரிருப்பதால் உடலும், உடல் இருப்பதால் உணவும், உணவுக்காக உத்யோகமும், உத்யோகத்திற்காக சில வெளிப்பூச்சுக்களும் கொண்டு அவள் உயிர் சுமந்து, உணவருந்தி, உத்யோகம் பார்த்து, ஒப்புக்கு அலங்காரம் செய்து கொண்டு உலவி வருகின்ற காரணத்தை மட்டும் வைத்து, 'கௌரிக்கு வாழ்க்கை ரொம்பவும் பிடித்திருக் கிறது' என்று முடிவு கட்டி விட முடியுமா?" என்று சூழ் நிலையின் பல்வேறு கூறுகளையும் துளி சிந்தாமல் ஒரே மூச்சில் உள்ளடக்கி வெளிப்படுத்துகிற நடை ஜெயகாந்த னுடையதாகும்.

படைப்பின் ஒவ்வொரு அணுவிலும் ஆசிரியன் இருக்க வேண்டும். ஆனால் அவனின் சுண்டு விரலின் நுனி நகம் கூட வெளித் தெரியக் கூடாது." "An artist must be in his work like God in creation invisible and all powerful; he should be everywhere felt, but nowhere seen." ஃப்ளேபாரின் கருத்து நூற்றுக்கு நூறு பின்பற்றப் பட வேணடும். இதன் காரணம் அழகுணர்ச்சியோடு சம்பந்தப்பட்டதாகும். ஆசிரியரின் குறுக்கீடு தோன்றி யதும் என்ன விளைவுகள் தோன்றுகின்றன? 'இது கதை; எவனோ ஒருவன் பொழுது போகாமல் கதை சொல்லிக் கொண்டிருக்கிறான்' என்ற நினைப்பு வாசகனுக்குத் தோன்றியதுமே அவன் பாத்திரங்களோடு ஒன்ற முடியாது. அப்படி ஒன்றாமல் போனால் படைப்பின் நோக்கம் முழுமை அடையாது. ஏனென்றால் ஒரு படைப்பின் மறு பாதி பூர்த்தியாவது வாசகனின் மனத்தில் தான். 

தமிழில் ஆரம்ப கால நாவல்களான 'பிரதாப  முதலியார் சரித்திரம்' போன்றவற்றில் ஆசிரியர் குறுக்கீடு கள் அதிகம். தனது வாசகர்களின் தோளில் கை போட்டுக் கொண்டு 'காஞ்சிக்குப் போகலாம்; வாதாபி பார்க்கலாம்' என கல்கி அழைத்துப் போவார். உருவப் பிரக்ஞையும், கலைத்தேர்ச்சியும் மிக்க புதுமைப்பித்தன் கூட உணர்ச்சி மேலீட்டில் வரம்பைக் கடந்திருக்கிறார். 'என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே! இது தான் ஐயா, பொன்னகரம்” என்று 'பொன்னகரம்' கதை யிலும், "பழையன கழியும், புதியன வரும். இது உலக இயற்கையாம்!'' என்று 'தெருவிளக்கு' கதையிலும் கூறி யிருப்பது ஆசிரியரின் தேவையற்ற தலையீடாகும். "பழைய யுகத்தைச் சேர்ந்தவள் புதிய யுகத்தைச் சந்திக்க வருகிறாள் என்றால்... ஓ . அதற்கோர் மனப்பக்குவம் வேண்டும்" என்று 'யுகசந்தி'யில் ஜெயகாந்தன் கூறுவதும் குறைப்பட்டியலோடு சேர்க்கப்பட வேண்டியதே. 'கற்பு என்று கதைக்கிறீர்களே' போன்ற வரிகள் வாசகன் வாயி பிருந்து வர வேண்டும். வருவதற்கான உணர்ச்சியை ட்டும் தான் ஆசிரியன் உருவாக்க வேண்டும். மாறாக ாசகனைத் தள்ளி விட்டு அந்த இடத்தில் ஆசிரியன் போய்   நின்று வாசகன் பாத்திரத்தை ஏற்பது அழகியலாகாது.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா