Wednesday, December 11, 2024

பரோவ்ஸ்கி, அனிபால் மோந்தேய்ரோ மச்சாதோ.ஜான் அப்டைக் சிறு குறிப்புகள் ,

 டெடுயூஸ் பரோவ்ஸ்கி


(1922 - 1951)


பொலிஷ் கவிஞர், சிறுகதைப் படைப்பாளி, பத்திரிகையாளர். 1922ஆம் ஆண்டு பிறந்த டெடுயூஸ் பரோவ்ஸ்கி, முப்பது வயதுகூட ஆகியிருக்காத நிலையில், 1951ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை; எனினும் இதில் சோவியத்தும் ஜெர்மனியும் கணிசமான பங்கு வகித்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.


சோவியத் labour campஇல் அவரின் பெற்றோர் பல வருடங்களைக் கழித்தனர். ஜெர்மன் ஆக்கிரமிப்பின்போது மிக மோசமான தலைமறைவு வாழ்க்கையை எதிர்கொண்ட பரோவ்ஸ்கி, பின்னர் கைப்பற்றப்பட்டு வதை முகாமில் (concen- tration camp) இரண்டாண்டுகள் 1943-45 இருக்க நேரிட்டது.


உலுக்கியெடுக்கும் இவரது கதைகள் 'This Way for the Gas, Ladies and Gentlemen' (Penguin) வெளி வந்திருக்கின்றன. பரோவ்ஸ்கியைப் பொறுத்தவரை, வதை முகாம் என்பது ஒரு உருமாதிரி. வெளி உலகமும் மிகப் பெரியதோர் வதை முகாமாகவே இருக்கிறது. வெளி உலகின் சகஜமானதோர் பகுதியாகவே 'வதை முகாம்' இருக்கிறது. உரு மாதிரியான வதை முகாமில் நடைபெறும் உறைய வைக்கிற ஒரு சம்பவமே 'இரவு உணவு.'

......

அனிபால் மோந்தேய்ரோ மச்சாதோ


(1895 1964)


பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். சட்டம் பயின்று அரசு வக்கீலாகப் பணிபுரியத் தொடங்கிய இவர் அத்தொழிலை ஒரு வருடத்தில் கைவிட்டார். பின்னர் ஒரு உயர்நிலைப் பள்ளியில் இலக்கியம் கற்பித்தார். பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி யிருக்கிறார்.


கட்டுரைகள், கதைகள், 2 நாடகங்கள், ஒரு நாவல் எழுதியிருக்கிறார். இரண்டு நாடகங்களில் ஒன்று 'பியானோ' கதையை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய லத்தீன் அமெரிக்க இலக்கிய மறுமலர்ச்சியின் கூறுகளை அதன் ஆரம்ப காலத்திலேயே இவரின் எழுத்துகள் உட்கொண்டிருந்தன.


‘பியானோ’, மரபுரீதியான யதார்த்த வெளிப்பாட்டுத் தன்மையும், இன்று பரவலாக அறியப்படுகிற லத்தீன், அமெரிக்க இலக்கியத்தின் மாந்த்ரீக யதார்த்தத்தின் வெளிப்பாட்டு பாணியும் இசைவாகக் கலந்திருக்கும் கதை.

......

ஜான் அப்டைக்


(1932 - )


அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற எழுத்தாளர். அன்றாட வாழ்வின் அனுபவங்கள் சார்ந்து நெகிழ்வான உரைநடையில் கதை சொல்பவர். அதேசமயம் கதைத் தளத்தில் இழையோடும் நுட்பங்கள் சார்ந்து மேலெழும் தள மாற்றங்கள் மூலம் ஆச்சரியங் களை நிகழ்த்துபவர்.


1932ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி பென்சிலிவேனி யாவின் ஷில்லிங்டனில் பிறந்தார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் நுண்கலைப் படிப்பு மேற்கொண்டார். இவருடைய எழுத்தில் வெளிப்படும் காட்சிரீதியான துல்லியம் ஓவியக் கல்வி யிலிருந்து இவர் பெற்றது.


கவிஞர், ஓவியர், சிறுகதை-நாவல் படைப்பாளி. கட்டுரையாளர், விமர்சகர், பத்திரிகையாளர் எனப் பல்வேறு வெளிப்பாட்டுத் தளங்களில் அயராது செயல்பட்டுக் கொண்டி ருப்பவர். எழுத்துக்காக அமெரிக்க நிறுவனங்கள் அளிக்கும் அனைத்துப் பரிசுகளையும் கௌரவிப்புகளையும் பெற்றிருப்பவர்.


'நகரம்' சிறுகதை 1983ஆம் ஆண்டுக்கான 'ஓ ஹென்ரி விருது' பரிசுக் கதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.


From..

நவீன உலக சிறுகதைகள் -C மோகன் 




Tuesday, December 10, 2024

ஒரு கடலோர கிராமத்தின் கதை - நாவலின் பின்புலம்

ஒரு கடலோர கிராமத்தின்  கதை - நாவலின் பின்புலம் -தோப்பில் முகமது மீரான் 

....


அன்று கிராமத்தில் யார் வீட்டிலும் திருமணம் நடந்தாலும் , அந்த வீடுகளில் கசாப்பு 

செ ய்யப்படு ம்  ஆடு களின் எல்லா ஈரலையும் பள்ளிவாசல் நிர்வாகம் நடத்தும் முதலாளியின் 'மோலாளி வீடு. என்று அழைக்கப்படும் வீட்டிற்கு கொடுத்தனுப்ப வேண்டும். இது கண்டிப்பான ஊர் சட்டம் ஈரல்களை மோலாளி வீட்டிற்கு கொடுத்தனுப்பினால் தான், பள்ளிவாசலிலிருந்து திருமணம் நடத்தி வைக்க மத புரோகிதர்கள் வருவார்கள். திருமணம். பதிவு செய்யப்படும் 'நிக்காஹ் புத்தகமும்' கொண்டு வரப்படும். இப்படி ஒரு அநியாயச் சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, என் பாட்டனாருடைய மூத்த மகளுடைய, அதாவது என் தகப்ப னாருடைய மூத்த சகோதரியின் திருமணம் நடந்தது. ஆடுகள் அறுக்கப்பட்டன. ஆனால் என் பாட்டனார் முதலாளி இல்லத்திற்கு ஈரலைக் கொடுத்தனுப்ப மாட்டேன் என்று மறுத்துவிட்டார். அது வரையிலும் யாரும் மீறா த சட்டத்தை மீறிய செயலைக்கண்டு முத லாளி சினம் கொண்டு வெகுண்டெழுந்தார். திருமணம் நடத்தி வைக்க மத புரோகிதர்களை அனுப்பவில்லை. திருமண பதிவுப் புத்தகமும் கொடுத்தனுப்பவில்லை. இதைக்கண்டு என் பாட்ட னார் கொஞ்சமும் அஞ்சவில்லை. மத அறிஞரான என் பெரிய தகப்பனார் புரோகிதராக இருந்து என் மாமியின் திருமணத்தை நடத்திக் காட்டினார். அந்த திருமணம் பள்ளிபுத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை. பள்ளிவாசல் நிர்வாகத்தை எதிர்த்து முதல் முதலாக நடந்த திருமணம் இதுவாகும். எங்கள் மீது ஏற்படுத் திய முதல் ஊர்விலக்கும் இதுதான். இந்நிகழ்ச்சியை என் முதல் நாவலில் குறிப்பிட்டுள்ளேன். மகமூது தன்னுடைய மகளுடைய திருமணத்தை தானே நடத்தி வைக்கும் நிகழ்வு


ஊரின் மேற்குப்பகுதியிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசலில் மட்டும் அன்று தொழுகை நடந்து வந்தது. முதலாளி வந்தால்தான் பள்ளிவாசலில் தொழுகை நடத்தவேண்டும் என்ற எழுதப்படாத ஒரு சட்டம் அமுலில் இருந்தது. இதை என் பாட்டனார் கடுமை யாக எதிர்த்து வந்தார். ஆனால் பள்ளிவாசலுக்குள் அது ஒரு ஒற்றை எதிர்ப்புக்குரலாகவே உயர்ந்து கேட்டது. பள்ளிவாசல் நிர்வாகத்தின் மீது எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தோப்பு பகு தியில் ஒரு பள்ளிவாசலை, அந்த பகுதியிலுள்ள வேறு சிலருடைய மறைமுக உதவியுடன் கட்டினார்.



தன்னை மீறி, திமிராக ஒரு பள்ளிவாசலை கட்டி விட்டானே என்று என் பாட்டனார் மீது கோபம் கொண்ட முதலாளி, வஞ்சம் தீர்க்க தக்க தருணத்தை எதிர் நோக்கியிருந்தார். என் பாட்டனாரின் மறைவுக்குப் பின்னும் வஞ்சக உள்ளம் அடங்காத முதலாளி, அவர் நினைத்தபடி பாட்டனாரின் பிள்ளைகள் மீது வஞ்சம் தீர்த்துக்கொண்டார். அதில் பலியானது என் சிறிய தகப்பனார். இவருக்குத்தான் 'கூனன் தோப்பை' சமர்ப்பணம் செய்துள்ளேன்.


இந்த நாவலில் குறிப்பிட்டுள்ள குத்துக்கல்லின் அருகாமையில் என் சிறிய தகப்பனாருடைய வீடு இருந்தது. அதன் பின் பகுதியில் பணவசதி படைத்த விதவைப்பெண் ஒருத்தி தன்னத் தனியாக தங்கி வந்தாள். ஏதோ சில அந்தரங்க காரணத்தினால் அந்த விதவையை முதலாளி தன்னுடைய ஏவலாட்களை அனுப்பி கொலை செய்து விட்டார். அன்று ஊருக்குள் எந்த குற்றச் செயலும் நடந்தால், போலீஸ்காரர்கள் முதலாளியிடம் வரு வார்கள். முதலாளி நினைத்தால் ஒருவரை வழக்கில் குற்ற வாளியாகவோ நிரபராதியாகவோ ஆக்கலாம். இந்த அதி காரத்தை பயன்படுத்தி,முதலாளி அந்தக் கொலை வழக்கில் என் சிறிய தகப்பனாரைக் குற்றவாளியாக்கிவிட்டார். இவன் தான் கொலை செய்தான் என்று ஓங்கி பேசி,எங்கள் குடும் பத்தின் மீது அவருக்கிருந்த வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டார். அன்று அந்த சுற்று வட்டாரங்களை உலுக்கிய மாபெரும். கொலை வழக்கு அது. அந்த கொலை வழக்கிற்கெதிராக என் தகப்பனார் தன்னந் தனியாக வாதாடி, என் சிறிய தகப்பனா ருக்கு விடுதலை வாங்கினார். அந்த வழக்கோடு, எங்கள் குடும்பப் பொருளாதார நிலை மிகவும் சரிந்துவிட்டது. நாங்கள் மேலும் ஏழ்மையில் மூழ்கினோம். லக்ஷ்மி என்ற பெண் ஒருத்தியை முதலாளி கறுப்பன் என்ற ஏவலாளை அனுப்பி கொலை செய்யும் ஒரு நிகழ்ச்சி நாவலில் வருவது மேல் சொன்ன அதே கொலை நிகழ்ச்சிதான். நாவலின் விரிவை எண்ணி கொலை வழக்கு விபரத்தை வீட்டுவிட்டேன்


இது நிரபராதிகளான எங்கள் மீது, அன்று ஆதிக்க சக்தி சுமத்திய முதல் கொலைக்குற்றம்


பொருளாதார ரீதியாக குடும்பம் சரிந்துவிட்டதால், என் தகப் பனார் நீண்டகாலமாக மௌனமாகவே வாழ்ந்து வந்தார். வருடங்களின் ஒவ்வொரு இரவிலும், என்னையும்   என் உடன்பிறப்புக்களையும் அழைத்து, அதிகார வர்க்கங்களின் கை நக முனைகளில் அவர் பட்ட அவதிகளையும், அவருடைய தக ப்பனாருக்கு நேர்ந்த இன்னல்களையும், கண்கலங்கக் கூறு வார். கிராமத்தின் முந்தைய நிலைமைகளையும், ஊர் தலைவர் களின் அடாவடித்தனங்களையும் மனக்குமுறலோடு சொல்லும் போது, என் பிஞ்சு மனசில் அவை பதிவாகி கொண்டிருந்தன.


என் தகப்பனாரின் கலங்கிச் சிவந்த கண்ணும்,மனக் குமுறலும் என் சிறு பருவத்திலேயே எனக்குள் ஒரு கலகக்காரனை உரு வாக்கிவிட்டன. ஊருக்குள் பெருந்தனக்காரர்கள் காட்டும் அடா வடித்தனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு தடவை ஊர் தலைவரை அவரது முகத்திற்கு முன் நின்று கடும் வார்த்தைகளால் எதிர்த்தேன். மட்டுமல்ல, ஊர் தலை வரையும் ஊர் அமைப்பு உறுப்பினர்களையும் ''ஒரு நொண்டி கழுதையும் நாற்பது குருட்டுக் கழுதையும்" என்று கிண்டல் செய்து, ஒரு சிறுகதை எழுதி வெளியிட்டேன். பகைமையை கன் னத்தில் ஒதுக்கிக் கொண்டு திரிந்த ஊர் முக்கியஸ்தர்கள், எங் களை பழிவாங்கச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டே நடந்தனர்.


என் மூத்த சகோதரருடைய மைத்துனரின் திருமணம் அந்தச் சந் தர்ப்பத்தில் நடந்தது. திருமணம் முன் நின்று நடத்தி வைத்தது. என் சகோதரர். அன்று வரையிலும் திருமணத்திற்கு பிறகுதான் ஊர் பணம் செலுத்துவது வழக்கமாகயிருந்து வந்தது. ஆனால் எங்கள் மீது வஞ்சம் தீர்க்க வேண்டுமென்று எண்ணியிருந்த ஊர் தலைவர், திருமணத்திற்கு முன் ஊர் பணம் செலுத்தவில்லை என்ற ஊனமான காரணத்தைக்காட்டி, திருமண நாளன்று புரோகிதர்களை அனுப்ப மறுத்துவிட்டார். என் சகோதரர் இந்த சதிச் செயலுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தார். கோப மடைந்த ஊர் தலைவர், குளிர் நடுங்கவைக்கும் நடுநிசியில் தூங்கிக் கொண்டிருந்த முஹல்லா உறுப்பினர்களை உசுப்பிக் கொண்டு வந்து ஊர் கூட்டம் போட்டு, அவர் போட்ட திட்டப் படி ஊர் விலக்கம் செய்து, அந்த திருமணத்தைச் சின்னா பின்னமாக்கிவிட்டார்.


இந்த ஊர் விலக்கம் நடக்கும் போது, நான் சென்னையில் இருந் தேன், இது 1970- களில் நடந்த நிகழ்ச்சி. சென்னையிலிருந்த என்னுடைய மனம் கடலானது. மனம் எழுப்பிய அலை சக்தியில் அப்பவே பேனா எடுத்து எழுதினேன், ஒரு சிறுகதை - பிரசி டன்ட் சுல்தான் பிள்ளை'. அன்று தமிழ் நாடெங்கும் முஸ்லிம் வட் த்தில் ஒரு பரபரப்பை உண்டு பண்ணிய சிறுகதை இது.

இந்த சிறுகதையில்தான் மேல் குறிப்பிட்ட வாசகம் வருகிறது முஹல்ல நிர்வாகம் எனக்கெதிராக கொதித்தெழுந்தது. நீதிமன்றத்தை அணுகியது. கதை மிக சூசகமான முறையில் ஒரு சமுதாய விமர் சனமாக அமைந்திருந்ததால், அவர்களுக்கு வழக்குத் தொடர வாய்ப்புக் கிடைக்காமல் போய்விட்டது.


நான் சென்னையை விட்டு 1973ல் ஊருக்கு வரும்போது கண்ட காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. எங்கள் குடும்பம் ஊரிலி ருந்து தனிமைப்பட்டு காணப்பட்டது. எங்களோடு பேச அனை வரும் அச்சப்பட்டனர். நண்பர்கள் உறவினர்கள் எங்களைக் கண்டு விலகிச்சென்றனர். ஊருக்குள் நாங்கள் தீண்டாதவர்கள் ஆனோம். பள்ளிவாசலுக்குள் நுழையக்கூடாது என்று விலக்கி விடுவார்களோ என்ற அச்சம் எனக்குள் இருந்ததால், பள்ளி வாசல் படியை மிதிக்கும் போதெல்லாம் என் கால்கள் நடுங்கின. அந்த நாட்கள் சிரிப்பை மறந்த நாட்கள். பய உணர்வு மனத்தை அரித்துக் கொண்டேயிருந்தது. ஏனென்றால், ஊர் மக்களெல்லாம் ஊர் நிர்வாகத்தின் காட்டு மிராண்டித்தனத்தைக் கண்டு நடுங்கி ஊரோடு ஒட்டிக் கொண்டார்கள். எங்கள் வீடு மட்டும் தனிமைப் பட்டு நின்றது, எங்களைத் தாக்க வெளி ஊரிலிருந்து குண்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆபத்தான கட்டத்தில், மனி தாபிமான அடிப்படையில், எங்களை காப்பாற்றியவர்கள் அங்கே யுள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள்,


ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் வைத்து ஒரு வயோதிகர் என்னை சந்தித்தார். இந்த ஊர்விலக்கு நடந்த இரவு, ஊர் அல்லோல கல்லோலமாய் காணப்பட்ட நிகழ்ச்சியை என்னிடம் விளக்கினார். பண்டு முதலாளிமார்கள் உட்கார்ந்து தீர்ப்பு வழங்கிய அதே கறுப்புக் கல்லின் மீது, அந்த முதலாளி மார்கள் உட்கார்ந்திருந்த அதே தோரணையில் உட்கார்ந்துதான் தலைவர் ஊர் விலக்கத்திற்கு கட்டளை பிறப்பித்தார் என்று கூறி னார். இந்த கறுப்புக்கல் துறைமுகத்தில் ஒரு முக்கிய கதாபாத் திரம் என் மனசில் என் தகப்பனார் அன்று சொல்லிய அனைத்து நிகழ்ச்சிகளும் சுருள் விரித்தன. என் மனத்தில் பல கதாபாத்தி ரங்கள் அடி தூக்கி வைத்தன. பற்பல சித்திரங்களைக் கொண்டு மனம் நிரம்பியது. பழைய பிரதாபச் செருக்குகளின் சொஞ்சாடிகள் இன்னும் இங்கு எஞ்சியிருக்கின்றன என்று எனக்கு தோன்றியது. இவற்றை பெருக்கிக்கூட்டி வெளியே வீச வேண்டும் என்ற எண் ணம் உருவாகியது. அதற்கு நான் கண்ட ஒரே ஆயுதம் என் பேனா தான். என் மனத்தை அரித்துக் கொண்டிருந்த குமுறலை


எழுத்தாக இறக்கி வைக்கத் துவங்கினேன், அந்த மனக்குமுற களே, என் முதல் நாவலான ஒரு கடலோர கிராமத்தின் கதையி ன் பின்புலம்.


ஜேஜே சில குறிப்புகள் உருவான தருணம் - சுந்தர ராமசாமி

 ஜே. ஜே. சில குறிப்புகள் நாவலுக்குரிய உத்வேகம் சுற்செய லாக என்னிடம் வெளிப்பட்டது. உண்மையில் நான் எழுதிக் கொண்டிருந்தது மற்றொரு நாவல். அந்த நாவலில் ஒரு கதா பாத்திரத்தின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பல நண்பர்களும் தாழ்த்தப்பட்டோர்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் சட்டம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விவாதத்தில் ஒரு தேக்கம் உருவாகிறது. பேசிக்கொண்டிருக்கும் கதாபாத்திரம் ஒன்று மறுநாள் தன் சகோதரனான சம்பத்தை அழைத்து வரு வதாகவும் அவன் சில புதிய விஷயங்களைக் கூறி முடிச்சு விழுந்துவிட்ட சிந்தனையை மேலெடுத்துச் செல்வான் என்றும் சொல்கிறது. மறுநாள் சம்பத் வந்து பேசுகிறான். விவாதம் தொடர்கிறது. தன் நண்பனும், மலையாள இலக்கியத்தின் புகழ் பெற்ற படைப்பாளியும், ஓவியனுமான ஜோசஃப் ஜேம்ஸை தான் மறுநாள் அழைத்து வருவதாகவும், கூரிய சிந்தனை வாதியான தன் நண்பன் விவாத விஷயத்தை முற்றிலும் புதிய கோணத்தில் பேசுவான் என்றும் சம்பத் சொல்கிறான்.


ஜோசஃப் ஜேம்ஸ் என்ற பெயர்ச்சொல்லை எழுதிய நிமிஷத் தில் என் மனம் சிறகு கட்டிப் பறக்கத் தொடங்கிற்று,மலை யாள இலக்கியம் சார்ந்தும், மலையாள வாழ்க்கை சார்ந்தும், நான் பெற்றிருந்த அனுபவங்களின் சாரங்கள் என் மனதில் திரண்டன. மிகுந்த உவகை தரும் ஆவேசத்திற்கு ஆட்பட் டேன். எழுதிக் கொண்டிருந்த பெரிய நாவலைஅப்படியே. விட்டுவிட்டு என் மனதை வெகுவாகக்   கவர்ந்த, சிந்தனைத் தெறிப்புகள் கொண்ட , ஆவேசம் மிகுந்த ஜோசஃப் ஜேம்ஸ் என்ற பாத்திரத்தை பின்தொடர்ந்து செல்லத் தொடங்கினேன்

 நான் மிகவும் விரும்பும் ஒரு மன உலகம் கலைப்பாங்காக  விரியத் தொடங்கிற்று. ஜோசஃப் ஜேம்ஸின் ஆவேசம் தான் என்னை இழுத்துக் கொண்டு போய் முழு நாவலையும் எழுத வைத்தது என்று நினைக்கிறேன்.


ஜே. ஜே. சில குறிப்புகள் மலையாளக் கலாச்சார உலகத்தைப் பின்னணியாகக் கொண்டதுதான். ஆனால் உண்மையில் அது தமிழ் கலாச்சார உலகம் சார்ந்து முன் வைக்கப்பட்ட ஒரு விமர் சனம். தமிழ் வாழ்வின் சாரம் சார்ந்த ஒரு விமர்சனம்.


தமிழ் வாழ்வை விமர்சிக்க மலையாளக் கலாச்சாரப் பின்னணி எதற்கு என்ற கேள்வி எழலாம். என்னிடமிருக்கும் குறையை ஒருவர் தன்னிடமிருக்கும் குறையாகக் கண்டு அக்குறையைச் சார்ந்து என்னிடம் பேசினால் அக்குறைகளுக்கு நான் செவி மடுக்கிறேன். அவற்றை கிரகித்துக் கொள்கிறேன். சிறிது சிந்திக் கவும் செய்கிறேன். அதே குறைகளை என்னுடைய குறை களாக அவர் முன்னிறுத்தினால் என் மனம் விலகி அந்நியப்படு கிறது. எதிர்மறையான பாதிப்பும் அடைகிறது.


தமிழ் வாசகர்களை அந்நியப்படுத்தாமல் தமிழ் வாழ்க்கை சார்ந்த விமர்சனத்தை முன் வைக்கவேண்டும் என்ற ஆசை ஜே.ஜே. சில குறிப்புகள் எழுதும் போது என்னை அறியாமலே என்னிடம் வெளிப்பட்டிருக்க வேண்டும்.

Monday, December 9, 2024

எழுத்தாளர்களும் அவர்களது நடையும் - என் ஆர் தாசன்

எழுத்தாளர்களும் அவர்களது நடையும் - என் ஆர் தாசன் 


எல்லா இலக்கிய இனங்களுக்கும் உருவம் முக்கியமானது தான். ஆனால் கவிதைக்கும். உருவத்திற்கும் உள்ள உறவு மிகவும் நெருக்கமானது. ஏனென்றால் கவிதைக்கும் மொழிக்கும் உள்ள பந்தம் ரொம்பவும் இறுக்கமானது ஒருமொழி பெயர்ப்பில் அழிந்து விடுவது எதுவோ அது தான் கவிதை' என்று விமர்சகர்கள் கூறுகிற அளவிற்கு உருவத்தோடு கவிதை உறவு கொண்டிருக்கிறது.

கவிதைகளுக்கு மட்டுமல்ல, எல்லா இலக்கிய வகை களுக்குமே உருவம் முக்கியமானது. '


ஒரு ஊரில் ஒரு   
ராஜா இருந்தாராம்' என்று கதை துவங்கும் போதே அது அனுபவ முதிர்ச்சியற்ற, குழந்தை நிலைக்கான உணர்ச்சி களோடு சம்பந்தப்பட்டது என்பது வெளிப்பட்டுப் போகிறது. "நித்யத்வத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப் பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந் தது அவன் கதை" என்று துவங்கும் 'பிரம்மராக்ஷஸ், கதையில் அனுபவ முதிர்ச்சியின் கம்பீரத்தை நம்மால் கண்டு கொள்ள முடிகிறது.

மொழி எல்லோருக்குமான பொதுச் சொத்தாயினும் மொழியிலிருந்து உருவாக்கப்படும் நடை ஒவ்வொருவருக் கும் வேறுபட்டு தனித்து நிற்க வேண்டும். பல சமயங் களில் எழுத்தாளனின் இலக்கிய ஆளுமைக்கும், படைப் பாற்றலுக்கும் நடையே அடையாளமாக நிற்கிறது. சிறு சிறு வாக்கியங்களும் சமூகப் பிரக்ஞை நிறைந்த கிண்டலும் ஆழ்ந்த தத்துவங்களும் புதுமைப்பித்தனை அடையாளம் காட்டுகின்றன.

"நான் மட்டும் ஏன் பேய் போல் அலைய வேண்டும்? அது தான் விதி என்று சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டுமாம். மனிதன்,விதி, தெய்வம்; தள்ளு வெறும் குப்பை, புழு, கனவுகள்!" என்றும்,

"மனுஷ அளவைகளுக்குள் எல்லாம் அடைபடாத அதீத சக்தி, ஏதோ உன்மத்த வேகத்தில் காயுருட்டிச் சொக்கட் டான் ஆடிறது போல்......" என்றும்,

'அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா? சிருஷ்டித் தொழில் நடக்கிறது'' என்றும் வருகிற வரிகளை வைத்துக் கொண்டே அவை புதுமைப்பித்தன் எழுத்துக் கள் என்று சொல்லி விட முடியும்.

"சப்தங்கள் இல்லாத இடத்தில் சப்தங்கள் கேட்டன. சப்தங்கள் இருக்கும் இடத்தில் காது செவிடாகி விட்டது"


என்று வார்த்தைகளைப் பின்னிப் பிசைந்து அர்த்தங் களைத் திரட்டித் தருவது லா. ச. ராமாமிருதத்தின் நடையாகும். 

.உயிரிருப்பதால் உடலும், உடல் இருப்பதால் உணவும், உணவுக்காக உத்யோகமும், உத்யோகத்திற்காக சில வெளிப்பூச்சுக்களும் கொண்டு அவள் உயிர் சுமந்து, உணவருந்தி, உத்யோகம் பார்த்து, ஒப்புக்கு அலங்காரம் செய்து கொண்டு உலவி வருகின்ற காரணத்தை மட்டும் வைத்து, 'கௌரிக்கு வாழ்க்கை ரொம்பவும் பிடித்திருக் கிறது' என்று முடிவு கட்டி விட முடியுமா?" என்று சூழ் நிலையின் பல்வேறு கூறுகளையும் துளி சிந்தாமல் ஒரே மூச்சில் உள்ளடக்கி வெளிப்படுத்துகிற நடை ஜெயகாந்த னுடையதாகும்.

படைப்பின் ஒவ்வொரு அணுவிலும் ஆசிரியன் இருக்க வேண்டும். ஆனால் அவனின் சுண்டு விரலின் நுனி நகம் கூட வெளித் தெரியக் கூடாது." "An artist must be in his work like God in creation invisible and all powerful; he should be everywhere felt, but nowhere seen." ஃப்ளேபாரின் கருத்து நூற்றுக்கு நூறு பின்பற்றப் பட வேணடும். இதன் காரணம் அழகுணர்ச்சியோடு சம்பந்தப்பட்டதாகும். ஆசிரியரின் குறுக்கீடு தோன்றி யதும் என்ன விளைவுகள் தோன்றுகின்றன? 'இது கதை; எவனோ ஒருவன் பொழுது போகாமல் கதை சொல்லிக் கொண்டிருக்கிறான்' என்ற நினைப்பு வாசகனுக்குத் தோன்றியதுமே அவன் பாத்திரங்களோடு ஒன்ற முடியாது. அப்படி ஒன்றாமல் போனால் படைப்பின் நோக்கம் முழுமை அடையாது. ஏனென்றால் ஒரு படைப்பின் மறு பாதி பூர்த்தியாவது வாசகனின் மனத்தில் தான். 

தமிழில் ஆரம்ப கால நாவல்களான 'பிரதாப  முதலியார் சரித்திரம்' போன்றவற்றில் ஆசிரியர் குறுக்கீடு கள் அதிகம். தனது வாசகர்களின் தோளில் கை போட்டுக் கொண்டு 'காஞ்சிக்குப் போகலாம்; வாதாபி பார்க்கலாம்' என கல்கி அழைத்துப் போவார். உருவப் பிரக்ஞையும், கலைத்தேர்ச்சியும் மிக்க புதுமைப்பித்தன் கூட உணர்ச்சி மேலீட்டில் வரம்பைக் கடந்திருக்கிறார். 'என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே! இது தான் ஐயா, பொன்னகரம்” என்று 'பொன்னகரம்' கதை யிலும், "பழையன கழியும், புதியன வரும். இது உலக இயற்கையாம்!'' என்று 'தெருவிளக்கு' கதையிலும் கூறி யிருப்பது ஆசிரியரின் தேவையற்ற தலையீடாகும். "பழைய யுகத்தைச் சேர்ந்தவள் புதிய யுகத்தைச் சந்திக்க வருகிறாள் என்றால்... ஓ . அதற்கோர் மனப்பக்குவம் வேண்டும்" என்று 'யுகசந்தி'யில் ஜெயகாந்தன் கூறுவதும் குறைப்பட்டியலோடு சேர்க்கப்பட வேண்டியதே. 'கற்பு என்று கதைக்கிறீர்களே' போன்ற வரிகள் வாசகன் வாயி பிருந்து வர வேண்டும். வருவதற்கான உணர்ச்சியை ட்டும் தான் ஆசிரியன் உருவாக்க வேண்டும். மாறாக ாசகனைத் தள்ளி விட்டு அந்த இடத்தில் ஆசிரியன் போய்   நின்று வாசகன் பாத்திரத்தை ஏற்பது அழகியலாகாது.

Sunday, December 8, 2024

தமிழ் எழுத்தாளனும் வட இந்தியர்களும் -அகிலன் அனுபவம்

 





அகிலனுடன் நான் - அமுதவன்
 

( இலக்கியவெளி இதழ் கட்டுரை )


இ து எழுத்தாளர் அகிலன் அவர்களுக்கு நூற்றாண்டு 


அகிலனுடைய மூத்த மகன் அகிலன் கண்ணன் எனக்கு நல்ல நண்பர். அகிலனுக்கு ஞானபீட விருது அறிவித்தபோது கண்ணனிடமிருந்து போன் வந்தது. "ஐயாவுக்கு (அவர்கள் வீட்டில் அப்பாவை ஐயா என்றுதான் அழைப்பார்கள்) ஞானபீடம் அறிவித்து இருக்கிறார்கள். டில்லிக்கு வருகிறீர்களா? போய் வருவோம்" என்றார்.


கரும்பு தின்னக் கூலியா? உடனே “வருகிறேன்" என்றேன். அப்படித்தான் அந்த வாய்ப்புக் கிடைத்தது.


ஞானபீடம் என்பது ஒரு தனி அறக்கட்டளை, டெல்லியிலுள்ள டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் இந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறது. ஜெயின் வம்சத்தினர் இதன் சொந்தக்காரர்கள். வழக்கமாய் ஞானபீடம் பெறுபவர்களுக்கு ஏதாவது ஒரு நட்சத்திர விடுதியில் அறை போடுவார்கள். அங்கே தங்கவைத்து அழைத்துச் சென்று விருது வழங்குவார்கள். இதுதான் நடைமுறை.


அகிலனுக்கு மட்டும் விசேஷம்.


ஜெயின் அகிலனின் வாசகர் என்பதால் விஷயத்தை அகிலனிடம் சொல்லி "வீட்டிலேயே தங்குகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். அகிலனும் ''சரி" என்று சொல்லிவிட்டதால் ஜெயின் வீட்டிலேயே தங்குவதற்கு ஏற்பாடானது.


ஜெயின் வீடு என்பது மிகப்பெரிய பங்களா. மாளிகை என்றும் சொல்லலாம். ஷெட் மட்டுமே ஒரு பத்து பதினைந்து இருக்கும். அத்தனையிலும் கார்கள்... சீருடை போட்ட டிரைவர்கள் தயாராக இருப்பார்கள். அகிலன்வருகிறார் என்பதற்காக அவருக்கு உணவு தயாரிக்க தஞ்சாவூரிலிருந்து ஒரு சமையற்காரர்... ஏ.சி.செய்யப்ட்ட தனி அறை,


- இத்தனை வசதிகளோடு இன்னொரு வசதியும் சேர்ந்து கொண்டது. காலையிலேயே ஒரு கட்டு கொடுத்து விடுவார்கள். மிகப்பெரிய பேப்பர் கட்டு. டைம்ஸ் ஆப் - இந்தியா என்னென்ன செய்தித் தாள்கள், மாதாந்திர, வார இதழ்கள் நடத்துகிறதோ, அவை அத்தனையும். ஒரு * கட்டாகக் கட்டப்பட்டு கொடுக்கப்பட்டு விடும்.


புது டில்லி என்பதால் நிறைய மத்திய அமைச்சர்களும், எம்.பிக்களும் அகிலனை மதிய விருந்துக்கும், இரவு விருந்துக்கும் அழைத்திருந்தார்கள். இவர்களிடம் விஷயத்தைச் சொல்லிக் கார் கேட்டபோது படு ஸ்ட்ரிக்டாகச் சொல்லி விட்டார்கள்.


“பிரதமர், ஜனாதிபதியைத் தவிர யார் வீட்டிற்கும் நீங்கள் போகக்கூடாது. நாட்டின் உயரிய விருதை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதனால் அவர்கள்தான் உங்களைப் பார்த்துச் செல்ல இங்கே வரவேண்டும்."


அதன்படிதான் நடந்தது. ஓ.வி. அளகேசன் போன்றவர்களும்,

நிறைய எம்பிக்களும் அகிலனை ஜெயின் வீட்டிற்கு வந்துதான் பார்த்துப் போனார்கள். நிகழ்ச்சியைக் 'கவர்’ செய்ய ஆனந்த விகடன் சொல்லியிருந்ததால் நான் விகடனுக்கு ஏற்றாற்போல இரண்டு பக்கங்களுக்கு எழுதினேன். நிகழ்ச்சி விஞ்ஞான்பவனில் நடந்தது. அரசு நிகழ்வுகளெல்லாம் விஞ்ஞான்பவனில்தான் நடக்குமாம்.


விஞ்ஞான் பவன் ரொம்பவும் பெரியது. எதிரில் மிகப்பெரிய பால்கனி. அதில் ஏறினால் நடுவில் இருக்கும் செங்குத்தான சரிவில் இறங்கித்தான் ஹாலுக்கு வரவேண்டும். நாங்கள் மேடைக்குப் பக்கத்திலிருக்கும் அறைக்கு கூட்டிச் செல்லப்பட்டு அங்கே தங்க வைக்கப்பட்டோம். பிரதமர் வந்ததும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு காப்பி, டீயெல்லாம் முடிந்தபிறகு மேடைக்குச் செல்லுவது என்பது ஏற்பாடு. (மொரார்ஜி காப்பி டீயெல்லாம் சாப்பிடமாட்டார்). பிரதமர் வருகைக்காக அந்த அறை ஜோடிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


திடீரென்று ஒரு சின்ன சலனம் அங்கே தோன்றிற்று. நாங்கள் அங்கே காத்திருக்க... வந்த மொரார்ஜி என்ன செய்தாரென்றால் முகப்பிலேயே இறங்கிக் கொண்டு மொத்தப் படிகளிலும் ஏறி செங்குத்தான பாதையில் இறங்கி மேடைக்குப் பக்கத்திலிருக்கும் இன்னொரு அறைக்குச் சென்று அங்கே எங்களுக்காகக் காத்திருந்தார். அப்போது மொரார்ஜிக்கு தொண்ணூற்றாரோ தொண்ணூற்றேழோ  என்பதுதான். ற்கு வயது. விஷயமறிந்து நாங்கள் அடுத்த அறைக்கு ஓடினோம். மொரார்ஜியைச் சந்தித்தவுடன் அவரிடம் அகிலன் கேட்ட முதல் கேள்வி "எப்படி நீங்கள் உங்கள் உடலை மெயின்டெய்ன் பண்ணுகிறீர்கள்?' சிரித்துக்கொண்டே அவர் சொன்னபதில் “சின்ன வயதிலிருந்தே இயற்கையோடு வாழக் கற்றுக்கொண்டு விட்டேன்"


. பிறகு எங்கள் இருவரையும் பிரதமருக்கு  அறிமுகம் செய்து வைத்தார் அகிலன். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்த (நின்றபடியேதான்) பிறகு மேடைக்குச் சென்றார்கள். நானும் அகிலன் கண்ணனும் கீழே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து கொண்டோம்.


விழா தொடங்கியது.


ஒரு பத்து நிமிடம்போல் ஆகியிருக்கும்...


கீழே பக்கவாட்டில் இருந்த கதவு திறக்கப்பட்டது. வேட்டி கட்டி முரட்டுக் கதர் போட்ட யாரோ ஒரு ஆசாமி உள்ளே நுழைந்தார். அவருடைய தோளில் ஒரு ஜோல்னாப் பை தொங்கிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு யாரோ ஒரு வட இந்தியக் காட்டான்போல இருந்தார். நேரே வந்தவர் என்னுடைய பக்கத்தில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். என்னுடைய பக்கம் முகம் சாய்த்து என்னமோ என்னிடம் இந்தியில் கேட்டார். நான் “எனக்கு


இந்தி தெரியாது" என்றும் ஆங்கிலத்தில் கேட்குமாறும் சொன்னேன்.




"இல்லை. ஃபங்ஷன் துவங்கி நேரமாகிவிட்டதா? அகிலன் பேசிவிட்டாரா? என்று கேட்டேன்” என்றார் ஆங்கிலத்தில்.  "பங்ஷன் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. இன்னமும் ஞானபீடம் வழங்கப்படவில்லை. பிரதமர் பேசின  பிற்பாடுதான் அகிலன் பேசுவார் என்று நினைக்கிறேன்" என்றேன்.

இந்த நபர் வந்ததிலிருந்தே மொத்தக் கூட்டத்தில் ஒரு சலசலப்பும் குசுகுசு பேச்சுக்களும் இருந்ததைக் குறிப்பிடவே வேண்டும்...


இந்த சலசலப்பு மேடையிலும் தோன்றியது.


யாரோ மேடையிலிருந்து மேடைக்கு வா என்று   அழைப்பதும், இவர் மேடைக்கு நான் வரவில்லை. இங்கேயே இருந்து கொள்கிறேன் என்று சைகை காட்டுவதும் நடந்தது.


பின்னர் மொரார்ஜியே இவரை மேடைக்கு வரும்படி அழைத்தார். பிரதமரின் சொல்லைத் தட்ட முடியாமல் இவரும் மேடைக்குச் சென்றார். பிறகுதான் தெரிந்தது, வந்தவர் கர்ப்பூரி தாக்கூர். அப்போதைய பீகார் மாநிலத்தின் முதல்வர். சின்ன வயதிலிருந்தே அகிலன்பால் ஈர்க்கப்பட்டதால் விமானம் பிடித்து அவசர அவசரமாக வந்தாராம். "நல்ல வேளை முக்கிய நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பே வந்துவிட்டேன்" என்று பேசினார்.


கர்ப்பூரி தாக்கூர், மொரார்ஜி இருவரும் இந்தியிலும் ஆங்கிலத்திலுமாகப் பேசினார்கள். அகிலன் ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பேசினார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகவே குடும்பத்தின் மூத்தவர் ஜெயின்  இரண்டோ, மூன்று நாட்களோ பரோலில் வந்திருந்தார். எமர்ஜென்சி காலம் என்பதால் இந்திரா காந்தி அவரையும் பிடித்து ஜெயிலில் போட்டிருந்தார்.


அன்றைக்கு இரவு ஜெயினுடன்தான் இரவு உணவு நடைபெற்றது. அகிலன் சார்பாக ஞானபீட விருது கிடைத்த அன்று மாலை புதுடில்லியிலுள்ள விஐபிக்கள் எல்லாரையும் அழைத்து ஒரு தேநீர் விருந்து அளித்தனர் ஜெயின் குடும்பத்தினர். அந்த விழாவுக்கான அழைப்பிதழ், செலவுகள் அனைத்தையும் அவர்களே மேற்கொண்டனர். அந்தத் தேநீர் விருந்தில் ஆரம்பத்திலேயே ஒரு மேஜை நாற்காலிகள் போடப்பட்டது. அது ஜெயின் குடும்பத்தினருக்காக... அங்கே அமர்ந்து கொண்டவர்கள் வருகிற பெரிய மனிதர்களின் கால்களை எல்லாம் தொட்டுக் கும்பிட்டது வித்தியாசமாக இருந்தது.


இந்த விஷயத்தையும் இங்கே சொல்லித்தான் ஆக  வேண்டும்... இந்தியாவில் அதுவரை ஞானபீடம் பெற்ற எல்லாரையும் அழைத்து ஒரு பாராட்டுக் கூட்டத்திற்கு  ஏற்பாடு செய்திருந்தனர் கன்னட சாஹித் பரிக்ஷத்தினர். இதற்காக செயின்ட் ஜோசப் கல்லூரி அருகிலுள்ள ஓட்டலை ஏற்பாடு செய்திருந்தனர். விருந்தினர்  அனைவருக்கும் அங்கு காலை டிபனை ஓட்டல் நிர்வாகமே ஏற்பாடு செய்திருந்தது. அதற்காக எல்லா எழுத்தாளர்களும் அங்கே குழுமியிருந்தனர்  அகிலனும் அங்கே இருந்தார். 


-  திடீரென்று "எந்தடா அகிலன் சௌக்கியமோ?" என்றுவாசலில் குரல் கேட்டது. . கர்ணகொடூரமான குரல்...


  கையில் ஒரு சூட்கேஸையும் அக்குளில் ஒரு துணியையும்  இடுக்கிக் கொண்டு அங்கே தகழி சிவசங்கரம் பிள்ளை  நின்றிருந்தார்.




தகழியை அங்கே பார்த்ததும் அங்கே ஏற்பட்ட சலசலப்பைக் குறிப்பிட வேண்டும்...


தகழி நேராக அகிலனிடம் வந்தார். இருவரும் ஏற்கெனவே நல்ல நண்பர்கள் போலிருக்கிறது... இருவரும் கட்டி  அணைத்துக்கொண்ட பாங்கில் அது தெரிந்தது. அப்படி  அணைத்துக்கொண்ட படியே அவர்கள் நிற்க... தகழி  அகிலனின் காதில் ஏதோ கூறினார். அவர் கூறியதைக்  தொடர்ந்து அகிலனும் தகழியும் சிரித்த சிரிப்பு அந்த விருந்தினர் மண்டபத்தையே தூக்கிக்கொண்டு போவது போல்  இருந்தது.


அப்படி என்ன சொல்லி விட்டார் தகழி?


அவர் சொன்னாராம்... “எனக்கு இன்னமும் ஞானபீடம் வழங்கப்படவில்லை.'


"தகழி என்றதும் எல்லாப் பரிசுகளும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று எல்லாரும் நினைப்பதுபோலவே இவர்களும் நினைத்திருக்கிறார்கள். இவர்களுடைய நம்பிக்கையை வீணடிக்க நான் விரும்பவில்லை. அதற்காகத்தான் வந்தேன். போய் ஒரு தமாஷ் பண்ணிவிட்டு வரலாம் என்று தோன்றிற்று. அதனால்தான் கிளம்பி வந்துட்டேன்" என்றிருக்கிறார், சிரிப்புக்குக் கேட்க வேண்டுமா?


(பிறகு தகழிக்கும் ஞானபீடம் கிடைத்தது என்று வைத்துக் கொள்ளுங்கள்)

......


ஞானபீடம் பெற்ற அகிலன் அரசாங்க அழைப்பின் பேரில் புதுடில்லியிலிருந்து ரஷ்யா சென்றார். அதற்காக அதிகாலையில் கிளம்பி அவரை விமான நிலையம் சென்று வழியனுப்பிவிட்டு வந்ததும் நினைவில் பசுமையாக இருக்கிறது.






Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா