Sunday, April 15, 2012

கொள்கைகள் முட்டாள்தனமானவை - ஜே கிருஷ்ணமூர்த்தி

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சற்றே வித்தியாசமானவர். ஆத்திகம் , நாத்திகம் என எல்லா சித்தாத்தங்களையும் விமர்சிப்பவர். கன்சிஸ்டென்சி புனிதமானதல்ல என அதிரடியாக பேசுபவர். அவர் பொன்மொழிகளில் சில , உங்கள் பார்வைக்கு


************************************************
 ஜே கே பொன்மொழிகள் 

  • ஒருவர் தன் சிந்தனையில் ஒரே மாதிரியாக இருந்தால் , அவருக்கு  சிந்திக்கும் ஆற்றல் இல்லை என்று அர்த்தம். குறிப்ப்பிட்ட சிந்தனை வட்டத்திற்குள் அவர் சிக்கி கொண்டுள்ளார். ஒரே மாதிரியாக வாழ்க்கை முழுதும் பேசுகிறார்.








  • பயம் இல்லாத ஒருவனிடம் வன்முறையோ ஆக்கிரமிப்பு எண்ணமோ இருக்க முடியாது. எந்த வடிவிலும் அச்சம் இல்லாதவன் அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருப்பான் .





  • மதம் சார்ந்த அல்லது அரசியல் சார்ந்த  எந்த வகையாக இருந்தாலும் , கொள்கைகள் கோட்பாடுகள் போன்றவை முட்டாள்தனமானவை. இவை மனிதர்களை பிரிக்கின்றன. 

  • ஒரு பிரச்சினையை புரிந்து கொள்ள வேண்டுமானால், பிரச்சினைக்கான தீர்வை பெற வேண்டும் என்ற பதட்டம் நம்மிடம் இருக்க கூடாது. 

  • அனைவரிடமுமே ஆதிக்க எண்ணமும், அதிகாரத்துக்கான ஆவலும் மறைந்து இருக்கின்றன. ஹிட்லரிடமும் , முசோலினியிடமும் இது வெளிப்படையாக தெரிகிறது. ஒவ்வொருவரிடமும் மறைந்து இருக்கும் இந்த வித்து அகற்றப்படாவிட்டால் , வெறுப்பு , யுத்தம் , பகைமை போன்றவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். 

  • உண்மையை அடைவதற்கு பாதை ஏதும் இல்லை. எந்த மதமோ , எந்த இயக்கமோ உண்மையை அடைய உங்களுக்கு உதவாது. 

  • பிரச்சினையை சரியாக புரிந்து கொண்டு விட்டால் , தீர்வு அதில் இருந்தே கிடைத்து விடும். ஏனென்றால் பிரச்சினையும்  , தீர்வும் வெவ்வேறு அல்ல. 

  • உலகம் ஒவ்வொருவரிடமும் உறைந்துள்ளது. எப்படி கற்பது என தெரிந்து விட்டால், கதவுக்கான சாவி உங்கள் கையில் கிடைத்து விடும். உங்களை தவிர வேறு யாரும் அந்த சாவியை உங்களுக்கு தர முடியாது. கதவை உங்களுக்காக யாரும் திறந்து விட முடியாது. 


  • ஒரு நம்பிக்கை மீண்டும் மீண்டும் உறுதி படுத்தி கொள்வது, உங்கள் மனதில் இருக்கும் அச்சத்தின் அடையாளம். 

  •  நாம் அனைவருமே பிரபலமாக விரும்புகிறோம்.  ஏதோ ஒன்றை அடைய விரும்பும் அந்த கணமே நம் சுதந்திரத்தை இழந்து விடுகிறோம். 




1 comment:

  1. அனைத்து பொன்மொழிகளாக வாசிக்கும்போது நல்லா இருக்கு, இந்த பொன்மொழிகளை ஒரு புதினத்தில் பரிசோதித்து பார்த்தால் அது அனைவராலும் எற்றுக்கொள்ள முடிவதில்லை, அப்புறம் இதை நாம் வாழ்வில் கடைபிடித்தால் அவனுக்கு பெயர் முன்னுக்கு பின் முறனாய் பேசுபவன்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

About Me

 நானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி