Thursday, April 26, 2012

பாப்பாத்தி என சொல்லாதே- வாலியை கண்டித்த அறிஞர் அண்ணா

தமிழக வரலாற்றில் முக்கியமான தலைவர் அண்ணா அவர்கள். அவரைப்போன்ற ஒருவர் இனி வரப்போவது இல்லை. ஆனால் அவர் ஒரு கட்சிக்காரர் என்ற அளவில்தான் அவர் நினைவுகூரப்படுகிறாரே தவிர , அவரது அருங்குணங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டே வருகின்றன.

  கட்சியில் தனக்கு கீழ் இருப்பவர்களை வளர வைத்து அழகு பார்த்த பெருந்தன்மை யாருக்கும் வரவே வராது. எத்தனை எத்தனை தலைவர்களை அவர் உருவாக்கினார் !! ரியல்லி கிரேட்.

அரசியல் தவிர்த்து விட்டு பார்த்தாலும் , அவர் பண்பில் சிறந்து விளங்கியவர். காங்கிரஸ்காரரான சின்ன அண்ணாமலை தன் புத்தகம் ஒன்றில், அண்ணாவை ஒரு முறை பார்த்து பேசியதும் , அண்ணா மீதான மரியாதை வெகுவாக உயர்ந்ததை சொல்லி இருப்பார்.

துக்ளக் இதழில் கவிஞர் வாலி கட்டுரை தொடர் ஒன்று எழுதி வருகிறார். அதில் அண்ணாவை பற்றி  இரு சம்பவங்களை குறிப்பிட்டு இருக்கிறார். சுருக்கமாக தருகிறேன். படித்து பாருங்கள்..

**************************************************

அண்ணா என்னும் பெருமகனார் - வாலி 

 ஒரு முறை தலை மொட்டை அடித்து இருந்தேன். “ இது என்ன மொட்டை “ என வினவினார் அண்ணா.

“ திருப்பதி “ என்றேன்.

“ திருப்பதி போய்ட்டு வந்து ச்மாராதனையை முடிச்சாச்சா ? “ என்றார் அண்ணா

“ சமராதானையா ? :” கேட்டேன் நான்.

“ ஆமாம்யா. இது எப்படி தெரியாம போச்சு . திருப்பதிக்கு போய்ட்டு வந்தால் மட்டும் பிரார்த்தனை முடிஞ்சதுனு அர்த்தம் இல்லை. வந்த கையோடு அஞ்சாறு பேருக்கு சாப்பாடு  போடணும். அதுக்கு பேர்தான் சமாராதனை. உமக்கு , நான் சொல்ல வேண்டி இருக்கு . இதை பண்ணாதான் அந்த சர்க்கிள் பூர்த்தி ஆகும் “

அண்ணா சொன்னதும் அயர்ந்து போனேன். சடங்குகளை , சாக்கியங்களை , சம்பிராதாயங்களை , தன் பேனாவையே பேனா கத்தியாக்கி கிழித்து போடுபவரா இப்படி பேசுகிறார்?

அதுதான் அண்ணா. அடுத்தவர் உணர்வுகளுக்கு அவர் போல மதிப்பளிக்க வல்லாரை மண்மிசை நான் இதுகாறும் கண்டதில்லை.

______________________________


பெற்றால்தான் பிள்ளையா படத்துக்கு நான் தான் பாடல் எழுதினேன். டூயட் பாடல் ஒன்று எழுதி அண்ணாவிடமும் , எம் ஜி ஆரிடமும் பாடி காட்டினேன்.

அந்த பாடல்...

” சக்கரைக்கட்டி பாப்பாத்தி

என் மனசெ வசுக்க காப்பாத்தி “

என்று தொடங்கும்.

இருவரும் வெகுவாக ரசித்தார்கள்.

“பாட்டை கம்போசிங்கிற்கு கொடுத்துடலாமா “ என்றேன்.

“ தாரளமா. வாழ்க “ என்றார் எம் ஜி ஆர்.

அவர் தன் மகிழ்ச்சியை வாழ்க மூலம்தான் தெரிவிப்பார்.

திடீரென அண்ணா மீண்டும் பாடலை பாட சொன்னார். பாடி காட்டினேன்.

“ வாலி , பாப்பாத்தி என்ற வார்த்தையை மாற்றுங்க “ என்றார்.

” அதில் என்ன தப்பு? பாப்பாத்தி- காப்பாத்தி என அழகா இருக்கே “ என வாதிட்டேன்.

ஆனால் அண்ணா ஏற்கவில்லை.

உடனே நான் ,

சக்கரைக்கட்டி ராஜாத்தி, என் மனச வச்சுக்கோ காப்பாத்தி “ என மாற்றினேன்.

அண்ணா முகம் மலர்ந்தார்.

“ தேவை இல்லாமல் நாம் யார் மீதும் கல்லெறிய வேண்டாமே “ என்றார்.

அதுதான் அண்ணா.

*********************************************************




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா