Friday, April 27, 2012

ரஜினி சாரும் , சாருவும் - ஓர் அலசல்

அல்ட்டிமேட் ரைட்டர் சாருவின் எழுத்தாற்றல் குறித்து நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை .ஆனால் அவரிடம் இருக்கும் இன்னொரு முக்கிய பண்பு, தவறு இன்றி எழுதுவதில் அவர் காட்டும் அக்கறைதான். வெளி நாட்டு பெயர்களை எழுதும்போதெல்லாம் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். இலக்கணப் பிழைகளும் இருக்காது.’’

ஆனால் பல எழுத்தாளர்கள் தவறின்றி எழுத்து வெளி வருவது ப்ரூஃப் ரீடர் பொறுப்பு என நினைத்து விடுகிறார்கள். இதன் விளைவாக தினத்தாள்கள், சஞ்சிகைகள் என எங்கும் பிழைகள் இருக்கின்றன.. இலக்கண பிழைகள் தவிர , பயன்பாட்டு பிழைகளும் அதிகம்.

அடிக்கடி தவறுகள் நடக்கும் சில வார்த்தைகளை , வாக்கியங்களை பார்க்கலாமா?

**********************************************************

கடந்த 1998ல் அமெரிக்கா சென்று இருந்தேன்.

செய்தி தாள்களில் இது போன்ற வாக்கியங்களை பார்க்கலாம். இது அழகற்ற வாக்கியம்.

வெள்ளிகிழமை தலைவர் படம் ரிலீஸ் என சொல்கிறோம் என வைத்து கொள்ளுங்கள். குழப்பம் ஏற்படும் . அடுத்த வெள்ளி கிழமையா , சென்ற வெள்ளி கிழமையா , போன மாத வெள்ளி கிழ்மையா என புரியாது.

எனவே கடந்த வெள்ளி கிழமையன்று அவனை பார்த்தேன், சென்ற வாரம் போனேன் என்றெல்லாம் எழுதலாம். ஆனால் ”கடந்த 1998ல் ” என்று சொல்வது அவசியமற்றது. 1998 இனி மேல் வரபோவதில்லை. 1998 என்றாலே அது கடந்த 1998தான்..

கோயிலுக்கு போனேன்.


கோயில் என்பது தவறு. கோவில் என்பதே சரியானது ( நாகர்கோவில், கோவில் பட்டி )

கோ என்றால் கடவுள் . கோ இருக்கும் இல். கோ + இல்..

இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும்  என்பது இலக்கணம். 




அதாவது ஒரு சொல் இ , ஈ அல்லது ஐ என்பது முடிந்து , அடுத்து வரும் சொல் உயிர் எழுத்தில் தொடங்கினால் , இரண்டும் இணையும் இடத்தில் “ ய “ வரிசை எழுத்து தோன்றும். ”இ , ஈ அல்லது ஐ ” தவிர மற்ற உயிர் எழுத்துகளில் முடிந்தால் , “ வ “ வரிசை எழுத்து புதிதாக தோன்றும்.


உதாரணம் - பாரியை பார்த்தேன் ( பாரி என்ற சொல்  “ இ “ ஓசையில் முடிகிறது. எனவே “ யை “ வருகிறது  )


                         ராஜாவை பார்த்தேன் ( ராஜா என்பது “ ஆ” ஓசையில் முடிவதால் “ வை “




ராஜாவின் பார்வை, கூஜாவை கவிழ்த்தேன் , கோபியின் பதிவு, டீயில் ஈ ..


அந்த அடிப்படையில் பார்த்தால், கோ + இல் = கோவில் ( கோ என்பது ஓ ஓசையில் முடிவதால் ” வ “ தான் வரும் ) 




பெங்களூரில் அரசியல் குழப்பம் 

பெங்களூரில் என்பது தவறு. 

வேலூர் என்பது ஊர் பெயர். எனவே வேலூரில் என்பது சரி.

பெங்களூரு என்பது ஊர் பெயர் . இங்கு பெங்களூரில்  என்பது தவறு. பெங்களூருவில் என்பதே சரி.

சார்-   ரஜினி சாரை சந்தித்தேன்.

சாரு - அல்ட்டிமேட் ரைட்டர் சாருவை சந்த்தித்தேன். 

 நானும் அவளும் ஒரே இள நீரில் இரண்டு ஸ்ட்ராக்கள் போட்டு இளனீர் பருகினோம் 


இந்த இடத்தில் பருகினோம் என்று வர கூடாது.

பருகுதல் என்றால் நேரடியாக வாய் வைத்து பருகுதல். மேற்கண்ட ரொமாண்டிக் சிச்சுவேஷனை கொஞ்சம் மாற்ரினால், பருகினேன் என்ற சொல்லை பயன்படுத்த முடியும். எப்படி என யோசியுங்கள். அதற்கு முன் பருகுதல் , குடித்தல் ,  அருந்துதல் என்றால் என்ன என பார்க்கலாம்.

குடித்தல் - திரவ பொருட்களை உட்கொள்ளும் எல்லா செயலுமே குடித்தல்தான். மேற்கண்ட வரியில்கூட குடித்தல் என்பதை பயன்படுத்தலாம்.

பருகுதல் - வாய் வைத்து நேரடியாக குடித்தல். ( மான் குளத்தில் நீர் பருகியது )

அருந்துதல் - கொஞ்சம் கொஞ்சமாக குடித்தல் ( உணவு அருந்தினேன், தேனீர் அருந்தினேன் , உணவு அருந்தினேன் )


மெள்ள பேசுங்கள்

மெல்ல பேசுங்கள் என்பதே சரி. மெல்ல , மெள்ள என இரண்டுமே ஒன்று போல தோன்றினாலும் வித்தியாசம் இருக்கிறது.

மெல்ல என்பது மெல்லிய , மெலிந்த என்பது போன்றது. மெல்லிய குரலில் பேசு என்பது மெல்ல பேசு.

மெள்ள என்பது காலம் சார்ந்தது. ஒன்றும் அவசரம் இல்லை. மெள்ள செய்தால் போதும்.





1 comment:

  1. Vijayabhaskar VijayMay 1, 2012 at 2:04 AM

    nice posting pichaikaaran.
    very useful it is.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா